Digital Time and Date

Welcome Note

Tuesday, February 14, 2012

ஆவியும் பேயும் நன்மைகள் செய்யாமல் தீமை செய்வது! ஏன்?


எனது நன்பர் ஒருவர் எதோ ஒரு சக்தி தன்னிடம் இருப்பதாக கூறி செய்வினை சூணியம் பேய் பிடித்து இருந்தால் அந்த பேயை விறட்டுவது என பல்வேறு தகிடு தத்தோம் வேலைகளை செய்து வந்தார்.

எங்கள் ஊர் அருகமையில் ஒரு பெண்ணுக்கு உண்மையில் !? பேய் பிடித்துள்ளது அதனால் அதை ஓட்ட எவ்வளவோ முயற்ச்சி செய்து விட்டேன் என்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. நீன் தான் பேய் நம்பிக்கை இல்லாதவன் ஆயிற்றே என்னோடு வா அவர்களிடம் வாங்கும் பணத்தில் பாதிய உணக்கு தந்து விடுகிறேன் என்றார். ஒரு நாளை தேர்வு செய்து பேய் பிடித்த அந்த பெண்ணை சந்தித்த போது தனது கணவணின் தம்பியோடு அந்தப் பெண் உல்லாசம் அனுபவிக்கவே அவள் பேய் வேசம் போட்டுள்ளார் என்று தெரிந்து கொண்டு. உன் வேசம் உன் வாழ்வை சீறலித்து விடும் என்று கூறி அவரின் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன் என்னால் பேய் ஓட்டிக்கு பணம் கிடைக்காமல் போய் விட்டது!?.

எனக்கு தெரிந்த பையன் ஒருவனுக்கு பேய் பிடித்து விட்டது பகல் பனிரெண்டு மனியாகி விட்டால் போது உடம் எல்லாம் எனக்கு எரிகிறதே யாரவது என்னை காப்பாற்றுங்களேன் என்று கதருவான். என்ன விசயம் என்று விசாரித்தேன். அவன் சென்னையில் சொந்தமாக ஒரு மளிகை கடை வைத்துள்ளான் கடையில் சிலவு வாங்க வரும் ஒரு பெண்ணோடு இவனுக்கும் அவளுக்கும் காதல் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவனுக்கு என்ன ஒரு இளம் பெண்ணுடன் காதல் என்று தெரிய வில்லை.

இந்த காதல் விவகாரம் முற்றி இரண்டு வீட்டாருக்கும் தெரிந்து விட்டது. இவன் காதலித்த அந்த இளம் பெண்ணும் இவனைதான் திருமணம் செய்வேன் என்று உறுதியுடன் கூறி இருக்கிறாள். இந்த  நேரத்தில் மளிகை கடை நஷ்டமாகி வேறு ஊரில் மளிகை கடை வைத்து கொடுத்துள்ளார் அவனின் தந்தை. புதிய கடையில் உள்ள தொலை பேசியில் இவனும் அவளும் தொடர்ந்து காதலை வளர்த்து இருக்கிறார்கள்.

ஒரு நாள் அவனின் கடைக்கு ஒரு போன் அவன் நேசிக்கும் பெண்ணின் அண்ணியிடம் இருந்து. “சாகுல் இருக்கார நான் ஷகிலாவின் அண்ணி ஷகிலாவிற்க்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தோம் ஷகிலா சாகுலைதான் திருமணம் செய்வேன் என்று கூறியது அதனால் கோபப்பட்டு அவள் அண்ணன் திட்டிட்டாரு. அவள் அதை பொறுக்க முடியாமல் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டால் அவளை நாங்கள் கீழ்பாக்கம் மருத்துவமணையில் சேர்த்துள்ளோம் உடனே சாகுலை அங்கு வர சொல்லுங்கள் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.( சாகுல் மற்றும் ஷகிலா பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது)

உடனே சாகுலிடம் செய்தி கொண்டு செல்லப்பட்ட உடன் அவன் ஆஸ்பத்திரி செல்கிறேன் என்று கிளம்பி இருக்கிறான். உடனே அவனுக்கு தெரிந்தவர்கள் அவனிடம் நீ ஆஸ்பத்திரி சென்றால் ஷகிலாவின் குடும்பத்தினர் நிச்சயம் உண்ணை அடித்து துவைத்து விடுவார்கள் என்று எச்சரித்துள்ளனர். அதன் பின் இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஷகிலாவின் அண்ணியிடம் இருந்து போன் இந்த போனை சாகுல் அட்டன் செய்து இருக்கிறான். சாகுல் உண்ணை திருமணம் செய்வதில் ஷகிலா உறுதியாக இருந்தாள் உணக்கு அவளை திருமணம் செய்து கொடுக்க முடியாதுன்னு அவ அண்ணண் சொன்னதும் அவ தீக்குளிச்சிட்ட அவள ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து பாத்தோம் அவ பொழைக்க மாட்டானு டாக்கர் சொல்லிட்டாங்க அதுக்குள்ள அவ செத்துட்ட கடைசி வரைக்கும் உண் பெயரைதான் சாகுல் சாகுல் சாகுல்ன்னு சொல்லிக்கிட்டு இருந்த நீன் வந்து அவள பாத்த அவ ஆத்மா சாந்தி அடையும் ப்ளீஸ் உடனே வாங்களேன்.


இப்ப ஷகிலா இறந்துட்ட செய்தி கேட்டு சாகுல் ஆடிப் போய் விட்டான். அவனோட இருந்தவங்க இப்ப நீ அங்க போனேன்ன மவனே உணக்கு சாவுதான்னு சொல்லிருக்கங்க. உண்மையில் சாகுல் பயந்து கொண்டு சாகுல் போகாம இருந்துட்டான். மறு நாள் காலை ஷகிலாவின் அண்ணியிடம் இருந்து போன் நாங்க ஷகிலா பாடிய வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போறோம் நீங்க வீட்டுக்கு வந்துடுங்க. பயந்து போன சாகுல் அப்பவும் போகல. மீண்டும் ஷகிலா அண்ணியிடமிருந்து பேன் ஷகிலாவின் பாடிய அடக்கம் பன்ன கொண்டு போரங்க நீங்க அங்கவாவது போங்க என்று சொல்லி தொடர்ப்பு துண்டிக்கப் பட்டு விட்டது.

சரியா ஷகிலா இறந்து போன மூனாவது நாளில் இருந்து சாகுலுக்கு ஷகிலா பேயாக வந்து பிடித்து விட்டாள். அன்றில் இருந்து சாகுல் சுமார் முன்று வருடம். அவன் குடும்பத்தாரை உண்டு இல்லை என்று பன்னி விட்டான் பார்க்காத பேய் ஓட்டி இல்லை போகாத தர்ஹா இல்லை.

எனது மாமியார் வீட்டுக்கு அருகாமையில் சாகுல் வீடு என்பதால் இவனை பற்றி என் மணைவிடம் அதிகமான விவரங்களை சேகரித்தேன் (இது ஒரு வேலையாக இல்லை) தினமும் ஊரில் உள்ள ஒரு ஆலிமிடமிருந்து சாகுலுக்கு தட்டில் குர் ஆன்  வசனங்களை எழுதி ஒரு வெள்ளைத்துணியில் முடப்பட்டு பாதுகாப்போடு தினமு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார் சாகுல் தினமும் அதை தண்ணீரில் கரைத்துக் குடித்து? வந்தான் அவனை பிடித்து இருந்த ஷகிலாவின் பேய் ஒன்றும் போவதாக தெரியவில்லை.

எனது நன்பர் ஒருவருக்காக சாகுல் முன்னால் ஷகிலாவின் ஏரியாவில் கடை வைத்து இருந்தானே அந்த கடையை எடுப்பதர்க்காக பேச சென்றிருந்தேன். அந்தக் கடையை தற்சமயம் நடத்திக் கொண்டிருக்கும் தொண்டியை சேர்ந்த சகோவிடன் அந்தக் கடையைப் பற்றியும் வியாபாரம் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது கடையில் சிலவு வாங்க கைக்குழந்தையுடன் வந்த பெண்மணியை சுட்டிக்காட்டி இவள்தான் சாகுலை திருமணம் செய்ய ஆசைப்பட்ட பெண் என்று அறிமுகப் படுத்தினார். தூக்கி வாரிப் போட்டது எனக்கு அதிர்ச்சியை முகத்தில் காட்டமல் சாகுலின் நன்பன் என்று அறிமுகம் செய்து கொண்டு ஷகிலாவிடம் பேச ஆரம்பித்தன். அதற்க்குள் ஷகிலாவின் அண்ணியும் கடைக்கு வந்து விட்டார்.

ஷகிலாவின் அண்ணியிடம் எப்படி சாகுலின் தொல்லையில் இருந்து ஷகிலாவை மீட்டீர்கள் என்று கேட்டேன். ஷகிலாவிற்க்கு ஒரு நல்ல இடத்தில் இருந்து மாப்பிள்ளை வந்தது தாயில்லாத பெண் என்பதால் நான் தான் அவளை செல்லம் கொடுத்து வளர்த்து வந்தேன். அப்போதுதான் ஷகிலா சாகுலை காதலிக்கும் விசயத்தை கூறினாள். நானும் சரி சொந்தமாக கடை வைத்து தொழில் செய்யும் ஒருவனுக்கு பெண்ணை கொடுக்கலாம் என்று ஷகிலாவிடம் சம்மதம் தெரிவித்தேன்.

அதன் பின் கடையில் வேலை செய்யும் அவன் சொந்தக்கார பையன் மூலம் சாகுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்து கொண்டேன். இது பற்றி ஷகிலாவிடம் பேசினேன் ஷகிலாவோ சாகுலைதான் திருமணம் செய்வேன் அவருக்கு ஏற்கனவே திருமணம் எல்லாம் ஆக வில்லை என்று என்னிடம் வாதடினாள்.

ஷகிலா அண்ணன் ஒரு வக்கிலீடம் டிரைவராக ரொம்பா நாள் வேலை செய்கிறார் அவரிடம் இது பற்றி கூறினோம் உங்கள் மத சட்டப்படி இரண்டு திருமணம் செய்வது எல்லாம் குற்றம் இல்லை ஷகிலாவின் மீது உண்மையான பாசமும் நேசமும் வைத்து இரண்டு மணைவிக்கும் சரி சமமாக நடந்தால் அது போதும் என்றார். சரி சாகுல் ஷகிலாவின் மீது உண்மையான அன்பு வைத்து இருக்கிறான் என்று எப்படி கண்டு பிடிப்பது என்று அவரிடம் ஷகிலாவை வைத்துக் கொண்டே ஆலோசனை செய்தோம்.அதற்க்கு ஷகிலா சம்மதித்தாள். சாகுல் தொடர்ப்பாக நான் எழுதியதை அவர் அண்ணியின் மூலம் வக்கீல் நிறைவேற்றியதை கூறினார்.

அதன் பின் சாகுல் இந்த ஏரியா பக்கமே வரவில்லை அதன் பிறகு ஆறு மாதம் கழித்து ஷகிலாவுக்கு வேறு பையனிடம் நடந்தவைகளை கூறி திருமணம் செய்து வைத்தோம். என்றார். சாகுல் நடவடிக்கை எதையும் கூறாமல் அவர்களுக்காக படைத்தவனிடம் பிராரத்தித்து விட்டு விடை பெற்றேன்.

இவ்வளவு காலம் சாகுல் தன் மணைவியையும் குழந்தைகளையும் குடும்பத்தாரையும் பேய் என்னும் போர்வையில் அவன் துண்புறுத்தி வேட்டையாடி வந்ததை என்னி மிகுந்த மணவேதனை அடைந்தேன். ஒரு நாள் சாகுலுக்கு ஷகிலா மாமியின் பேய் வந்து விட்டது வாப்பா என்று என் மகள் அதிசமாக எதையோ சொல்வது போல் வந்து கூறினாள்.

இனியும் இந்த அநியாயத்தை இப்படியே விடக்கூடாது என்று ஷகிலா பேயோடு இருக்கும் அவனை ஒரு அறைக்குள் தள்ளி நான் ஷகிலாவையும் அவள் அண்ணியையும் சந்தித்தது பற்றி அவனிடம் கூறினேன் முதலில் முரண்டு பிடித்தான் பின்பு ஆதரங்களை என்னிடம் இருக்கிறது என்று கூறியவுடம் மடங்கினான். தயவு செய்து ஷகிலா உயிரோடு இருப்பதை யாரிடம் சொல்லாதீர்கள் எதவது தர்ஹாவில் இருந்து பேய்போய் விட்டதாக நானே என் குடும்பத்தாரிடம் கூறிவிடுகிறேன் என்றான்.

இங்கு நாம் இஸ்லாத்தில் இப்படி பேய் ஒன்று உண்டா என்று பார்ப்போம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாக்கா வில் ஏகத்துவ பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் சொல்லிக் கொண்டிருந்த போது. இது முன்னோர்களின் கட்டுக்கதை அதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும் மாலையிலும் இது இவருக்கு வாசித்து காட்டப் படுகிறது என்று கூறினார்கள்.

குர் ஆன் 25:5. இந்த வாதத்தை மக்கள் கூறியதும். இதற்க்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தது இல்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர் அவ்வாறு எழுதி இருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். குர் ஆன் 29:48 என்று பதில் அளிக்கப்பட்டது.
மேலும் அவர்கள். ஒரு மனிதர்தான் இவருக்கு கற்றுக் கொடுக்கிறார் என்று அவர்கள் கூறுவதை அறிவோம் யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது (ஜிப்ரீல்) மொழி வேற்று மொழியாகும் இது தெளிவான அரபு மொழி. குர் ஆன். 16:103. வேதம் கொடுக்கப்பட்ட மக்களையும் அரபு பண்டிதர்களையும் தனது நடையின் மூலமும் அறிவார்ந்த விசய ஞான மூலமும்  பிரம்மிக்க வைத்த குர் ஆனை கேட்டு விட்டு. குர் ஆன் 25:5 வசனத்தில் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் அவர்களின் கேள்விகளுக்கு குர் ஆனில் 16:103. வசனத்தில் விளக்கம் அளிக்கப் படுகிறது.

மேலும். சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே! பின் பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகா கூறினார்கள். குர் ஆன் 17:47. உடனே அவர்களுக்கு. ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர் அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள். குர் ஆன் 26:221. என்று பதிளலிக்கப் படுகிறது.

சூனியம் ஒருவனுக்கு வேலை செய்ய வேண்டுமானால் அவனை சூனியம் செய்பன் ஏவிய எதோ ஒரு சக்தி ஒருவனை பற்றி பிடிக்க வேண்டும் அல்லது பாதிப்புக்கு உள்ளானவனை சைத்தான் தீண்ட வேண்டு அப்படி தீண்டினால்தான் அவனுக்கு பாதிப்பு ஏற்படும்!? ஒப்பு நோக்க ஒரு மனிதன் இறந்து விடுகிறான். இறந்து போன அந்த மனிதன் பேயாக வந்து ஒருவனை பிடித்து விடுகிறான். இறந்து போய் பேயாக வந்தவனுக்கு ஒரு இதயம் இருக்கும். யாருக்கு அந்தப் பேய் வந்து பிடிக்கிறதோ அவனுக்கும் ஒரு இதயம் இருக்கும். ஆக பேய் பிடித்த ஒரு மனிதனுக்கு இரண்டு இதயம் வந்து விடும். முற்றிலும் அறிவுக்கு பொருந்தாத வாதமே பேய் நம்பிக்கை என்பது பேய்களை நம்பும் ஒவ்வொருவனுக்கும் திருக்குர் ஆன் கட்டமைக்கும் விசயம்தான் என்ன!?

அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொருப்பேற்கப் போது மானவன். எந்த மனிதருக்குள்ளும் இரண்டு இதயங்களை (உள்ளங்களை) அல்லாஹ் ஏற்படுத்த வில்லை. குர் ஆன் 33:4.

 

            நேற்றுதான் இஸ்லாத்தை விமர்சிப்பதற்க்காக இஸ்லாமியர்கள் போலவே பதிவுகளை உருவாக்கி அதை வெளியிட்டும் அதை ஏற்றுக் கொண்டதாக சில முஸ்லிம்களையும் முன்னிலை படுத்தி எழுதி வருகிறார்கள் அவர்களுடைய எல்லா வலைப்பூக்களுக்கும் ஒரு பின்னூட்டம்.


                                             < அசத்திய கொள்கை வாதிகளின் பதிவுகளை காண இந்த லட்டரையே கிளிக் செய்யுங்கள்>
 

பிசாசு என்றும் ஆவி பிடித்து இருக்கிறது அதை நாங்கள் ஓட்டுகிறோம் என்றும் கூறுகிறீர்களே உண்மையை சொல்லுங்கள். தேவ ஆவியானவரை முஸ்லிம்களா கொண்றார்கள் நீங்கள் தானே கொண்டீர்கள். சரி மறுபடியும் தேவ ஆவியானவர் இந்த உலகத்திற்க்கு வரும் போது அவரை மீண்டும் அது போல் கொண்றால் எப்படி காப்பீர்கள் சரி அப்படியே அவர் வந்தால் எந்தத் திருச்சபையில் சேர்ப்பீர்கள். தேவ ஆவியானவர் வரும் போது அவர் மக்களை வழி நடத்த எந்த பைபிலை கொடுப்பீர்கள்.
நீங்கள் உண்மையில் வேதம் கொடுக்கப் பட்ட மக்களாக இருந்தாள் பின் வரும் குர் ஆன் வசனத்திற்க்கு பதில் தாருங்கள்.

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை (முஹம்மதை) அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். குர் ஆன் 2:146.

இதையும் நீங்கள் அறியவில்லை என்றால் இந்த மார்கத்தை தோற்றுவிக்க அல்லாஹ் யாரைத் தேர்வு செய்தானோ அவரே உங்களுக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு சவாலை ஏந்துகிறார் எந்தத் திருச்சபையாவது நாங்கள் முஹமது நபி வைத்த சாப அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம் முஹமது நபி வாழும் காலத்தில் இருந்த எங்கள் முன்னோற்கள் இந்த சாப அழைப்பை ஏற்றுக் கொள்ள வில்லை நாங்கள் ஏற்கிறோம் என்று முன் வாருங்கள். அதுவரை உங்கள் வாதம் பொய்யானதே!?

(முஹம்மதே) உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டா வாதம் செய்தால் வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும் எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும் அழைப்போம் நாங்களும் வருகிறோம் நீங்களும் வாருங்கள்! பின்னர் அல்லாஹ்விடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்.எனக்கூறுவீரா. குர் ஆன் 13:61

No comments:

Post a Comment