Digital Time and Date

Welcome Note

Saturday, November 3, 2012

டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி...

டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Step1

ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

Step2

கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.

Step3

அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)

Step4

வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.

Step5

இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.

Step6

இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.

இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.

(அடையனும்..ஹூம்....நமக்கு இவ்வளவு அறிவு இருப்பதை தெரிந்து இதிலிருந்தும் தப்பிக்க ஒருவேளை பாழாய்ப் போன கொசுக்கள் புதிய யுக்தி எதையாவது கடைப் பிடிக்க ஆரம்பித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வளவு தான் இப்போதே சொல்லிப்புட்டேன்.)

நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.

எப்படியோ இந்த வழியிலாவது கொசுக்கள் ஒழிந்தால் சரி தான்.

கேவலமான உண்மைகள்



                  
1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!

வரலாற்றில் இன்று

நவம்பர்
03


644 - இரண்டாவது முஸ்லிம் காலிப் உமர் இபின் அல்-காட்டாப் மதினாவில் பாரசீக அடிமையினால் கொல்லப்பட்டார்.

1493 - கரிபியன் கடலில் டொமினிக்காத் தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார்.

1838 - பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.

1903 - ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலை அடுத்து பனாமா கொலம்பியாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

1905 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டான்.

1913 - ஐக்கிய அமெரிக்கா வருமான வரியை அறிமுகப்படுத்தியது.

1917 - பார்ப்பனர் அல்லாதார் 3 ஆவது மாநாடு இராயலு சீமா புலிவேங்களாவில் பாரிஸ்டர் கே. சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற நாள்

1918 - போலந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1957 - உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை) சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது.

1963 - தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.

1963 - ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1964 - வாஷிங்டன் டீசி மக்கள் முதன் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

1970 - சல்வடோர் அலெண்டே சிலியின் அதிபரானார்.

1973 - நாசா மரைனர் 10 என்ற விண்கப்பலை புதன் நோக்கி அனுப்பியது.

1974, மார்ச் 29 இல் அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1978 - டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 - கம்யூனிச பாட்டாளிகள் கட்சியில் 5 உறுப்பினர்கள் வெள்ளையின மேலாதிக்கவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1986 - மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1988 - இலங்கையின் தமிழ்க் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் மாலை தீவுகள் அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

1992 - அமெரிக்க அதிபர் தேர்தலில் பில் கிளிண்ட்டன் ஜனநாயகக் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றார்.

2007: பாகிஸ்தானில் ஜனாதிபதி பர்வேஸ் முஸாரவ் அரசியலமைப்பை இரத்துச்செய்து பிரதம நீதியரசரை நீக்கி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார்.

Friday, November 2, 2012

வரலாற்றில் இன்று

1570: வடகடலில் ஏற்பட்ட பாரிய அலைகளினால் ஹொலண்ட் மற்றும் ஜுட்லன்ட் தீவுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.

1895: அமெரிக்காவில் பெற்றோலிய எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கிடையிலான முதலாவது பந்தயம் நடைபெற்றது. (முதல் பரிசு : 2000 டொலர்கள்).

1898: விளையாட்டுப் போட்டிகளின்போது அணிகளை உற்சாகமூட்டும் சியர்லீடிங் கலை அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

1914: ஒட்டோமான் இராஜ்ஜியம் மீது ரஷ்யா யுத்தப் பிரகடனம் செய்தது.

1953: பாகிஸ்தானை இஸ்லாமிய குடியரசாக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்தது.

1963: தெற்கு வியட்னாம் ஜனாதிபதி என்கோ டின் டியெம், இராணுவப் புரட்சியொன்றின் பின் கொல்லப்பட்டார்.

1964: சவூதி அரேபிய மன்னர் சௌத் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத், குடும்பப் புரட்சியொன்றின் மூலம் நீக்கப்பட்டு, அவரின் சகோதரர் பைஸால் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.

1964: தென்கொரிய சியோல் நகரில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 78 பேர் பலி.

1995: தென்னாபிரிக்காவில் நிறவெற கால ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜெனரல் மக்னஸ் மலன் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் 10 பேர் 1987 ஆம் ஆண்டு 13 பேரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

2007: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.


1973 - மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது.

Thursday, November 1, 2012

Dangerous Malware in India (Skype Users)

                         
SHARE this to save everyone who uses SKYPE.....URGENT NATURE

இந்தியாவில் உள்ள 5ல் ஒரு கம்ப்யூட்டரில் புது மால்வேர்(வைரஸ்) ஒன்று புகுந்துள்ளது. இதன் பெயர் - "டார்க்ப்பொட் - டிஎன்" என்ற வைரஸ். இது உங்களை எப்ப்டி தாக்கும். முதலில் இந்த மாதிரி ஒரு மெசேஜ் வரும் - “lol, is this your new profile pic? <link>”
அது வந்தால் நீங்கள் திறந்து பார்த்தால் அவ்வளவுதான்,அது உடனே மாஸ்டர் சர்வரை தொடர்புகொண்டு உங்கள் கம்ப்யூட்டரின் அத்தனை பாஸ்வோர்ட் அக்கவுன்ட் டீட்டெயில், கான்டெக்ட்ஸ் எல்லாம் காலி அப்புறம் உங்க பேங் அக்கவுன்டிருந்து ஃபேஸ்புக் அக்கவுன்ட் வரை எல்லா எக்ஸ்போஸ்ட். அது மட்டுமல்ல இது உங்கள் கான்டெக்ட்லிருந்து நீங்கள் அனுப்பியது போல் ஈமெயிலை அனுப்பும் ஸ்கைப் இல்லாதவர்களுக்கு. இதற்க்கு இன்னும் ஆன்டி வைரஸ் கம்பெனிகள் தீர்வை கண்டுபிடிக்காத நேரத்தில் இந்த மாதிரி அலெர்ட் வந்தால் அமைதி காக்கவும் அல்லது ஸ்கைப்பை தற்காலிகமாக உபயோகிப்பதை நிறுத்தவும். முடிந்தால் ஸ்கை சைட்டுக்கு போய் லேட்டஸ்ட் வெர்ஷனை டவுன்லோட் செய்யவும்....கவனம்............

Skype’s Indian users are getting targeted by a malware. The malware sends message to your contact list. “lol, is this your new profile pic? <link>” is the typical format of the message. Upon clicking the link, the malware makes a backdoor entry to your computer and then establishes HTTP connection with its master server. It then captures your user credentials, engages in click fraud activities and even sends itself to contacts in your friends list.

Indian Government’s Computer Emergency Response Team (CERT-In) says that the malware opens a backdoor to user’s system and takes control of it. We believe this is one of the DORKBOT variants which was earlier detected as DORKBOT.DN. The malware is even capable of launching a targeted DDOS attack. Leading Antivirus software maker TrendMicro reported that they blocked over 2.8k associated files in a short span of 24 hours.Users of Skype are advised to upgrade to the latest version of Skype as soon as possible.

Please SHARE this valuable INFO

-- Courtesy Ravi Nag

மியாவ்… மியாவ்…! (பொது அறிவு தகவல்கள்)

பைபிளில் இடம் பெறாத ஒரு பிராணி பூனை

பூனைகள் இனிப்பைத் தொடாது.

பூனையால் புவியின் காந்தப் புலனை உணர முடியும்.

——————————–

ஆமைக்குப் பற்கள் கிடையாது

முதலையின் மேல் தாடையில் 40 பற்களும், கீழ்தாடையில்
30 பற்களும் உண்டு

பெண் குதிரைக்கு 40 பற்களும், ஆண் குதிரைக்கு 36 பற்களும் உண்டு.

பச்சையம் இல்லாத தாவரம் காளான்

நீரில் நீந்திக்கொண்டே உறங்கும் உயிரினம் – வாத்து

50 அடிக்கு மேல் வளரும் புல் இன தாவரம் – மூங்கில்

யானையைப்போன்ற தந்தம் உள்ள உயினம் – வாலரஸ்

நின்று கொண்டே உறங்கும் விலங்கு – குதிரை

சிலந்தி வகைகிளில் அதிக விஷமுள்ளது – தி பிளாக் விடோ

வரலாற்றில் இன்று

நவம்பர் 01

1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.

1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.



1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.


1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

1894:ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.


1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.


1945: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.


1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.


1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.

1981:அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.

1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் முறைப்படி உருவாக்கப்பட்டது.


2000: ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.

Wednesday, October 31, 2012

ஹைதராபாத்தை சேர்ந்த ஒர் கிறிஸ்தவ குடும்பமே துபையில் இஸ்லாத்தை தழுவியது...!

                                    
 துபையில் உள்ள இஸ்லாமிய வழிகாட்டி மையத்தில் ஹைதராபாத்தை சார்ந்த கிருஸ்தவ (புரட்டஸ்டன்ட்) பிரிவில் இருந்து, ஐந்து உறுபினர்களை கொண்ட ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. இந்த மையத்தில் தினமும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம் என்றாலும் இது போன்று முழு குடும்பமுமே இஸ்லாத்தை தழுவியது மகிழ்ச்சி அடைய செய்கின்றது.

ஹைதராபாத்தை

சேர்ந்த ஜேம்ஸ் என்கின்றவர் தன் குடும்பத்துடன் துபையில் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவியும், மகளும், மகனும் உள்ளனர். மகன் திருமணமாகி இவரும் மனைவியுடன் வசித்து வருகின்றார். இந்த குடும்பம்தான் தற்போது இஸ்லாத்தை தழுவி முறையே தந்தை முஹம்மது என்றும், இவரின் மனைவி மரியம் என்றும், மகள் ஆயிஷா என்றும் மகன் ஈஸா என்றும் இவரின் மனைவிக்கு சாரா என்றும் அழகான இஸ்லாமிய பெயர்களை சூட்டி தங்களை இஸ்லாமிய குடும்பத்துடன் இணைத்து கொண்டுள்ளனர்.

இஸ்லாத்தை ஏற்ற இவர்களைப்பற்றி துபாய் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் தலைமை வழிகாட்டி ஹுதா அல் காபி கூறுகையில், இவர்களாகவே இங்கு வந்து கலிமாவை முன்மொழிந்து தாங்களாகவே இஸ்லாமிய பெயர்களை சூட்டி கொண்டதாகவும், இவர்களுக்கு இங்கு யாரும் இஸ்லாத்தை போதிக்கவில்லை என்றும் இவர்களின் ஆர்வம் தம்மை பிரமிக்க வைத்ததாகவும் கூறி, ஒரு கைப்பெட்டி நிறைய இஸ்லாமிய வாழ்க்கை புத்தகங்கள் மற்றும் சி.டிக்களை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை தழுவியதும் இவர் இங்குள்ள கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், கடவுள் இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ இருக்க முடியாது என்றும், ஒரே கடவுள் கொள்கைதான் சரியான தேர்வு என்றும் கூறியுள்ளார். மேலும் இவர் கூறுகையில் கடந்த இரண்டு வருடமாக தான் இஸ்லாமிய புத்தகங்களை படித்து இஸ்லாத்தை அறிந்து கொண்டதாகவும் குரானின் ஆங்கில பதிப்பை படித்து இஸ்லாத்தை உணர்த்து கொண்டதாகவும், தன்னுடைய சுயவிருப்பத்தின் பெயரிலேயே இஸ்லாத்தை ஏற்றதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு அஹமது தீதாத், ஜாகீர் நாயக் மற்றும் யூசுப் எஸ்டேட் போன்ற மத வழிகாட்டிகளின் பேச்சுக்கள் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதை இந்தியாவில் உள்ள தங்களின் மற்ற உறவினர்களுக்கு தெரியும் என்றும், இதைபற்றி அவர்கள் ஒன்றும் கூறவில்லை என்றும், ஊரில் உள்ள அவர்களுக்கும் இஸ்லாத்தை எத்தி வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். நாமும் இவர்களுக்காக துவா செய்து இவரின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இஸ்லாத்தை ஏற்று அதன் தூய வடிவில் வாழ துவா செய்வோம்.

அதிரை முஜீப்.