Digital Time and Date

Welcome Note

Friday, May 25, 2012

இறுதி நபியின் இறுதி பேருரை வரலாற்றுச் சிறப்புமிகக நிகழ்வு

இறுதி நபியின் இறுதி பேருரை வரலாற்றுச் சிறப்புமிகக நிகழ்வு

'இக்ரஃ - நீர் ஓதுவீராக'' என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ரமளானில் தொடங்கி வைத்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் அந்தக் குர்ஆனைமுழுமையாக ஓதிக் காட்டி மறு பதிவு செய்து கொள்வார்கள். (புகாரி 3554)

ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரமளானில் திருக்குர்ஆனை இரு முறை மறு பதிவு செய்கின்றார்கள். (புகாரி 4998)

அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாட்கள் எண்ணப்படத் துவங்கி விட்டது என்பதற்கு இது ஓர் அறிகுறியானது.

இது வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வல்ல இறைவனால் கடமையாக்கப்பட்ட அனைத்து வணக்கங்களிலும் வழிகாட்டி விட்டிருந்தார்கள். எஞ்சியிருந்தது ஹஜ் என்ற இறுதிக் கடமை மட்டுமே!
அந்த ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய பயணத்தின் ஊடே தான் அரபா நாளில் இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்'' என்ற (5:3) வசனம் அருளப்பட்டது.

ஓதுவீராக' என்று துவங்கிய திருக்குர்ஆன் ஓதி முடிக்கப்பட வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தியது.

அதற்கு ஏற்றது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறி விட்டார்கள்.

இதனால் பிரியப் போகும் தந்தையிடம் பிள்ளைகள் எப்படி நடப்பார்களோ அது போல் நபித்தோழர்களும் பிள்ளைகளிடம் விடை பெறப் போகும் தந்தை எப்படி நடந்து கொள்வாரோ அது போன்று நபி (ஸல்) அவர்களும் நடந்து கொண்டார்கள்.

அதனால் நபி (ஸல்) அவர்களின் இந்த ஹஜ் பயணம் நபித்தோழர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தோழர்கள் தங்கள் பார்வையில் இருந்து நபி (ஸல்) அவர்களின் எந்தச் செயலும் தவறி விடாதவாறும் காதுகளில் விழாமல் எதுவும் தப்பி விடாதவாறும் பார்வைகளைக் கூர்மையாக்கி காதுகளை நன்கு தீட்டிக் கொண்டு பதிவு செய்து கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருபத்து மூன்று ஆண்டு காலத்தில் ஆற்றிய தூதுப் பணியின் மொத்தத் தொகுப்பை தனது ஹஜ்ஜின் இறுதிக் கட்ட ஐந்து நாட்கள் பயணத்தில் சத்தாக சாறாகப் பிழிந்து தந்தார்கள். அதனால் அது வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

இறுதி நபியின் இறுதிப் பேருரை என்ற பெயரிலும் அரபா பேருரை என்ற பெயரிலும் நூல் வடிவில் வெளியாகியுள்ளன அட்டைகளாக வெளியிடப்பட்டு வீடுகளில் தொங்க விடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பல வெளியீடுகளில் ஆதாரக் குறிப்புகள் இன்றி மொட்டையாகக் காட்சியளிக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணிமொழிகள் என்றால் அவற்றுக்கு அணி சேர்ப்பது அவற்றின் அடியின் ஆதாரமாக இடம் பெறும் நூல்கள் தான். இந்தக் குறையை நீக்கும் வகையில் ஏகத்துவ வாதிகளின் வெளியீடுகளில் இவை இன்றியமையாதவை என்பதைக் கருத்தில் கொண்டு இறுதி நபியின் இறுதி (ஹஜ்) பேருரை என்ற தலைப்பில் வெளியிடுகின்றோம்.



விடைபெறும் ஹஜ் ;

உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2286


நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது

இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள் இது புனிதமிக்க தினமாகும்!

இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்க மக்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். அவர்கள் (இது) புனிதமிக்க நகரமாகும்!'' என்றனர்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?'' என்றதும் மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது புனிதமிக்க மாதமாகும்'' எனக் கூறிவிட்டு

உங்களுடைய இந்தப் புனித நகரத்தில் உங்களுடைய இந்தப் புனித மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் தாம் ஹஜ் செய்த போது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கு மத்தியில் நின்று கொண்டு இது மிகப் பெரிய ஹஜ்ஜின் தினமாகும்'' என்று கூறினார்கள். மேலும் இறைவா! நீயே சாட்சி!'' என்று கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள்.

எனவே மக்களும் இது (நபியவர்கள் உலகை விட்டு) விடை பெற்றுச் செல்கின்ற ஹஜ்ஜாகும்'' என்று பேசிக் கொண்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ர)
நூல்: புகாரி 1742



தூதுச் செய்தி நிறைவுறுதல்

என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! இது அவர்கள் தமது சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்'' என்று இப்னு அப்பாஸ் (ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்: புகாரி1739

நீங்கள் (மறுமையில்) என்னைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அப்போது நீங்கள் என்ன (பதில்) சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். உங்கள் தூதுச் செய்தியை எடுத்து வைத்து விட்டீர்கள். அதை நிறைவேற்றி விட்டீர்கள். உங்கள் சமுதாயத்திற்கு நன்மையை நாடினீர்கள்.

உங்கள் மீதுள்ள பொறுப்பை ஆற்றி விட்டீர்கள் என்று நாங்கள் சான்று பகர்வோம்'' என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.

அப்போது அவர்கள் தமது ஆட்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தியும் பின்னர் அதை மக்களை நோக்கித் தாழ்த்தியும் யா அல்லாஹ்! நீயே சாட்சி! யா அல்லாஹ்! நீயே சாட்சி!'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ர)
நூல்: முஸ்லிம் 2137



சகோதரத்துவம்

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரனாவான்.
நூல்: ஹாகிம் 318 பாகம்: 1 பக்: 171

நீங்கள் மறுமையில் உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள்''
அறிவிப்பவர்: அபூபக்ரா நுஃபைஃ பின் ஹாரிஸ் (ரலி)
நூல்: புகாரி 4406

மனித உரிமைகள் பற்றி நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்'' என்று பல தடவை
கூறினார்கள்.
நூல்: புகாரி 1739

அறிந்து கொள்ளுங்கள்! உங்களது இந்த நகரத்தில் உங்கள் இந்த மாதத்தில் உங்களது இந்த நாள் எப்படிப் புனிதமானதாக விளங்குகின்றதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும் உங்கள் செல்வங்களையும் புனிதமான வையாக ஆக்கியுள்ளான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு நான் (இறைச் செய்தியை உங்க ளிடம்) சேர்த்து விட்டேனா?'' என்று கேட்டார்கள். மக்கள் ஆம் என்று பதிலளித்தனர். இறைவா! நீ சாட்சியாக
இரு!'' என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் உங்களுக்கு என்ன நேரப் போகின்றதோ!'' அல்லது அந்தோ பரிதாபமே! கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறை மறுப்பாளர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 4403

மனமுவந்து தராத தன் சகோதர முஸ்லிமின் பொருள் எதுவும் அடுத்த முஸ்லிமுக்கு ஆகுமானது அல்ல.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல் அஹ்வல் (ரலி)
நூல்: திர்மிதீ 3012 ஹாகிம் 318

அண்டை வீட்டுக்காரனுக்குச் சொத்தில் பங்களித்து விடுவார்களோ என்று கூறுமளவுக்கு அண்டை வீட்டுக்காரனைப் பற்றி அறிவுரை செய்கிறேன் என அதிகமாக வயுறுத்தினார்கள்.
நூல்: தப்ரானீ 7523
பாகம்: 8. பக்: 111



வேண்டாம் இன வெறி!

மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும் ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும் ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும் ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை இறையச்சத்தைத் தவிர!
நூல்: அஹ்மத் 22391

அறியாமை அகலட்டும்!

அறியாமைக் காலத்து அனைத்துக் காரியங்களும் என் இரு பாதங்களுக்கடியில் போட்டுப் புதைக்கப்படுகின்றன.
நூல்: முஸ்லிம் 2137

சீர்திருத்தத்தைத் தன்னிருந்து துவங்குதல்
குழிக்குள் போகட்டும் பழியுணர்ச்ச்சி
அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதல் ரத்து செய்யப் படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ அப்துல் முத்தபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 2137 திர்மிதீ 3012 அபூ தாவூத் 1628 2896 இப்னுமாஜா 3046 3065 இப்னுகுஸைமா



வட்டி ஒரு வன்கொடுமை

அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதல் நான் ரத்து செய்யும் வட்டி (எனது பெரிய தந்தை) அப்பாசுக்கு வர வேண்டிய எங்களுடைய வட்டியாகும். (இன்று) அந்த வட்டி அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றது.
நூல்கள்: முஸ்ம் 2137 திர்மிதீ 3012 அபூதாவூத் 1628 2896
இப்னுமாஜா 3046 3065 இப்னு குஸைமா



கடன் பற்றி...

இரவல் (திருப்பிச்) செலுத்தப்பட வேண்டியதாகும். (பிறரது) கடனுக்குப் பொறுப்பேற்றவனும் கடனாளியோ கடன் நிறைவேற்றப்பட வேண்டியது ஆகும்.
நூல்கள்: திர்மிதீ 1186 அபூதாவூத் 2046 இப்னுமாஜா 2396 அஹ்மத் 21263



வாரிசுரிமைச் சட்டங்க்கள ;

(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும் போது குழந்தை பிறக்கின்றதோ அவருக்கே அக்குழந்தை உரியது. விபச்சாரம் செய்தவருக்கு இழப்பு தான். அவர்களின் விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது. தன் தந்தை அல்லாதவரை தந்தை என்று குறிப்பிடுபவர் தன் எஜமான் அல்லாதவருடன் தன்னை இணைத்துக் கொள்பவர் ஆகியோர் மீது இறுதி நாள் வரை தொடரும்
அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: திர்மிதீ 2046

சொத்துரிமை உடைய ஒவ்வொருவருக்கும் அவரது சொத்துரிமையை (பாகப்பிரிவினை சட்டத்தின் மூலம்) அல்லாஹ் வழங்கி விட்டான். எனவே சொத்துரிமை பெறுபவருக்கு இனி மரண சாசனம் இல்லை.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி)
நூல்: இப்னுமாஜா 2705

ஒருவரது பாவத்தை மற்ற்றவர் சுமகக மாட்டார்
தீங்கிழைப்பவன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான். தந்தை செய்யும் குற்றத்திற்கு மகன் பொறுப்பாளியாக மாட்டான். மகன் செய்யும் குற்றத்திற்குத் தந்தை பொறுப்பாளியாக மாட்டார்.
நூல்கள்: திர்மிதீ 2085 3012 இப்னுமாஜா 3659

ஆட்ச்சியாளருக்குக் கட்டுப்ப்படுதல்
காது மூக்கறுந்த கன்னங்கருத்த அடிமை உங்களுக்கு ஆட்சியாளராக நியமிக்கப்பட்டு அவர் உங்களை அல்லாஹ்வுடைய வேதத்தின்படி வழிநடத்தினால் அவருக்குச் செவிசாய்த்துக் கட்டுப்படுங்கள்.
நூல்கள்: முஸ்ம் 3422 திர்மிதீ 1628

கணவன் மனைவியின் கடமைகளும் உரிமைகளும்
பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். (திருமணம் முடியுங்கள் என்ற) அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களது கற்புகளை அனுபவிக்கின்றீர்கள்.

நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. இது உங்கள் மனைவியர் உங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். இதற்கு மாற்றமாக அவர்கள் நடந்தால் காயம் ஏற்படுத்தாத வகையில் அவர்களை அடியுங்கள். நீங்கள் நல்ல முறையில் உணவும் உடையும் உங்கள் மனைவியருக்கு வழங்க வேண்டும். இது நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும்.
நூல்: முஸ்ம் 2137



பெண்களிடம் நன்மைகளைப் போதியுங்கள்.

அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக (இருக்கிறார்கள்). இ(ல்லறத்)தைத் தவிர வேறு எதையும் நீங்கள் உரிமையாகப் பெறவில்லை. அவர்கள் தெளிவான மானக் கேட்டைச் செய்தாலே தவிர! அவர்கள் அவ்வாறு செய்தால் படுக்கையிருந்து ஒதுக்குங்கள் காயமின்றி அடியுங்கள் அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் வேறு எந்த வழியிலும் அவர்களிடம் வரம்பு மீறாதீர்கள். நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமை உங்கள் மீது இருக்கின்றது. உங்கள் மனைவியர் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உண்டு. உங்கள் மனைவியர் உங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நீங்கள் வெறுக்கும் வகையில் அடுத்தவர்களுடன் உங்கள் படுக்கைகளைப்
பகிர்ந்து விடக் கூடாது உங்களுக்குப் பிடிக்காதவர்களை உங்கள் வீடுகளில் அனுமதிக்கக்கூடாது. அறிந்து கொள்ளுங்கள்! அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உடைகளிலும் உணவிலும் தாராளமான முறையில் நடந்து கொள்வதே நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்யும் கடமையாகும்.
நூல்கள்: திர்மிதீ 1083 3012.
இப்னுமாஜா 1841

கணவனின் அனுமதியின்றி தன் கணவன் வீட்டில் எதையும் ஒரு பெண் செலவு செய்யக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.உணவும் அப்படித் தானா?'' என்று கேட்கப்பட்ட போது அது தான் பொருட்களில் மிகச்சிறந்தது'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)
நூல்: திர்மிதீ 606



நிறைவான முஃமின்

எவரது நாவு கையின் தொல்லைகளிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகின்றார்களோ அவரே முஸ்லிம் ஆவார்.
நூல்கள்: பஸ்ஸார் 2435
தப்ரானீ 3444 பாகம்: 3 பக்: 293

மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் அபயம் அளிப்பவரே முஃமின்.
நூல்கள்: பஸ்ஸார் 2435
இப்னு ஹிப்பான் 4862 பாகம்:11 பக்:203

குற்றங்களையும் தவறுகளையும் விட்டு ஒதுங்கிக் கொள்பவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.
நூல்: இப்னு ஹிப்பான் 4862
பாகம்:11 பக்:203

அல்லாஹ்வுக்குக் கட்டுப் படுவதில் தனது உள்ளத்துடன் போராடியவரே தியாகி (ஷஹீத்)
ஆவார்.
நூல்கள்: நூல்: இப்னு ஹிப்பான் 4862
பாகம்:11 பக்:203

உங்களுடைய இறைவனை அஞ்சுங்கள். உங்கள் ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுங்கள். உங்கள் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள். உங்களின் பொருட்களில் ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்களில் அதிகாரம் உடையவருக்குக் கட்டுப்படுங்கள். உங்களது இறைவனின் சுவனத்தில் நீங்கள் நுழைந்து விடுவீர்கள்.
நூல்கள்: திர்மிதீ 559 அஹ்மத் 21140 ஹாகிம் 19 பைஹகீ

அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காதீர்கள் அல்லாஹ் கண்ணியப்படுத்திய உயிரை நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள் திருடாதீர்கள் விபச்சாரம் செய்யாதீர்கள்.
நூல்கள்: அஹ்மத் 18219
ஹாகிம் 8033 பைஹகீ 15620

சிறுசிறு வணக்கங்க்களில் அலட்ச்சியம்
உங்களுடைய பூமியில் தான் வணங்கப்படுவதை விட்டும் ஷைத்தான் நிராசையாகி விட்டான். ஆயினும் அதைத் தவிர நீங்கள் சாதாரணமாகக் கருதி (விட்டு) விடும் உங்கள் வணக்கங்களில் தான் வழிபடப்படுவதை அவன் பொருந்திக் கொண்டான். (எனவே சிறிய அமல்களை விட்டு விடாமல் கவனமாக இருங்கள்)
நூல்: ஹாகிம் 318 பாகம்: 1 பக்: 171

அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய இந்த ஊர்களில் ஒரு போதும் தான் வணங்கப்பட மாட்டோம் என்று ஷைத்தான் நிராசையடைந்து விட்டான். எனினும் நீங்கள் கேவலமாகக் கருதும் அமல்கள் மூலம் அவனுக்கு ஒரு வழிபாடு உருவாகும். அதன் மூலம் அவன் திருப்தியடைவான்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் நூல்: திர்மிதீ 2085



தஜ்ஜ்ஜால் பற்றிய எச்ச்சரிகை

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி அல் மஸீஹுத் தஜ்ஜாலைப் பற்றிக் கூறத் தொடங்கினார்கள். நீண்ட நேரம் அவனைப் பற்றியே கூறினார்கள். அப்போது அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றி) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் அவனைப் பற்றி எச்சரித்தார்கள்.

அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர்களும் எச்சரித்தனர். மேலும் (என் சமுதாயமாகிய) உங்களிடையே தான் அவன் (இறுதிக் காலத்தில்) தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும் நிச்சயமாக உங்கள் இறைவன் உங்களுக்குத் தெரியாதவன் அல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் - இதை மூன்று முறை கூறினார்கள் - உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். (தஜ்ஜால் எனும்) அவனோ வலது கண் குருடானவன். அவனது கண் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 4402



குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்ப்பற்றுதல்

உங்க ளிடம் ஒன்றை விட்டுச் செல்கின்றேன். அதை நீங்கள் கடைப்பிடிக்கும் போதெல்லாம் வழி கெடவே மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்.
நூல்: முஸ்ம் 2137

ஒன்றை நான் உங்களிடம் விடுகின்றேன். அதைப் பற்றிப் பிடிக்கின்ற வரை ஒருபோதும் நீங்கள் வழிகெட மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமும் அவனது நபியின் வழிமுறையுமாகும்.
நூல்: ஹாகிம் 318 பாகம்: 1 பக்கம்: 171



அழைப்புப் பணியின் அவசியம் ;


இங்கு வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியை எடுத்துக் கூறி விட வேண்டும். ஏனெனில் வருகை தந்திருப்பவர் தன்னை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அந்தச் செய்தியை எடுத்துச் சொல் விடக் கூடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ர) நூல்: புகாரி 67

அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!



அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இருவருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆண்களின் தலைமுறையையே அஸ்தமிக்கச் செய்யும் தன்மை கொண்டுள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

பக்க விளைவு மருந்துகள்

தலைமுடி குறித்த கவலை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அதிகம் இருக்கிறது. கவலை, மன அழுத்தம், ரசாயன கலவைகொண்ட ஷாம்பு, சோப்பு பயன்படுத்துவது, மாசடைந்த சுற்றுச் சூழல் போன்றவைகளினால் இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்களின் தலைமுடி உதிர்ந்து வழுக்கைத் தலையாக மாறிவருகிறது. வழுக்கையாக இருந்தால் திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்படுமோ? பெண்ணுக்கு பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே அநேகம்பேர் தவிக்கின்றனர். முடி உதிராமல் தடுக்கவும், தலைமுடி நன்றாக வளரவும் ரசாயனக் கலவைகள் அடங்கிய எண்ணெய்களையோ, கிரீம்களையே வாங்கி உபயோகிக்கின்றனர். ஒரு சிலர் மாத்திரைகளையும் உட்கொள்கின்றனர். அழகை அதிகரிக்க அவர்கள் உபயோகிக்கும் அந்த மருந்துகளில் தான் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பது அநேகம் பேருக்கு தெரிவதில்லை.

அமெரிக்காவிலும், பிரான்ஸ் நாட்டிலும் தலைமுடி வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்பட்ட புரோபேஷியா என்ற மருந்து ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.

ஹார்மோன் பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் மட்டும் 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி பல மாதங்களுக்குப்பின்னர் அவர்களை சோதனை செய்தபோது அந்த ஆண்களுக்கு ஆண்மைகுறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.

இதற்கு காரணம் புரோபேஷியாவில் உள்ள பினஸ்டிரைடு (Finasteride) என்ற பொருள் டெஸ்ட்ரோஜன் என்ற ஆண்மைச் சுரப்பினைத் தடுப்பதுதான் என்று புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் கூறியுள்ளார்.

ஆண்களுக்கு ஆபத்து

புரோபேஷியா மருந்தினை உபயோகிப்பதன் மூலம் எழுச்சி நிலை குறைதல், தாம்பத்ய உறவின் போது உற்சாகம் இழத்தல், இயலாமை உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மருந்தினை உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் அமெரிக்கா, ப்ரான்ஸ் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டின் சுகாதார உற்பத்தி பாதுகாப்பு அமைப்பின் தலைவரான டொமினிக் மாரஞ்சி கூறியதாவது, புரோபேஷியா மருந்தின் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாம், அவ்வாறு நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் 3 சதவீதம் தான் இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

நம் ஊரிலும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிராமல் தடுக்கவும் இந்த எண்ணெயை பூசுங்கள், இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என தினசரி விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே எந்த மருந்தில் என்ன பக்கவிளைவு உள்ளது என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையெனில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்


பாம்பு கடித்துச் சிகிச்சை செய்ய தாமதமாகி கடிப்பட்டவன் மயங்கி விழுவதுண்டு. உயிரும் போய்விட நேரிடும். இந்நிலையில் கண்கள் மேல் நோக்கி இருக்குமானால் உயிர் போக கூடிய நிலையில் இருக்கிறார்கள் என அறியவும். கண்களானவை பக்கங்கள் நோக்கி இறங்குமானால் உயிரானது பக்கங்களில் ஒடுங்கி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் கண்கள் கீழ் நோக்கி இருக்குமானால் உயிருக்கு கொஞ்ச நேரத்திற்கு ஆபத்து இல்லை என அறியலாம்.

விஷப்பரீச்சை

விசத்தினால் பாதிக்கப்பட்டு பேச்சு - மூச்சில்லாமல் இருப்பவனை உயிர்ப்பரீட்சை செய்து பார்ப்பது எப்படி.

கடிப்பட்டவர்களின் உடலில் பிரம்பு கொண்டு அடிக்கும் போது உடல் தடித்துவிட்டால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம். மேலும் சுத்தமான குளிர்ந்த நீரை பாம்பு கடித்தவர்களின் மேல் கொட்டும் போது உடம்பு குளிர்ச்சியடைந்து ரோமம் சிலிர்த்தால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சையை தொடரலாம்.

தலைமயிரைப் பற்றி இழுத்தால் வலியுடன் அசைவு ஏற்பட்டாலும் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம். தும்பை இலை - 10 கிராம். அகத்தி இலை - 10 கிராம். முருங்கை இலை - 10 கிராம். பெருங்காயம் - 10 கிராம். வசம்பு - 10 கிராம். உள்ளி - 10 கிராம். மிளகு -10 கிராம். இவைகளைத் தட்டி மூக்கிலும் காதிலும் விட உணர்வு வருவதுடன் விஷம் இறங்கும்.

வெற்றிலை - 10 கிராம். தும்பை இலை - 10 கிராம். அகத்தி இலை - 10 கிராம். பெருங்காயம் - 10 கிராம். வசம்பு - 10 கிராம். மிளகு - 10 கிராம். இவற்றுடன் சிறு குழந்தை சிறுநீர் விட்டு தட்டிப்பிழிந்து சாறு எடுத்து காதிலும் மூக்கிலும் நசியம் செய்ய விஷம் நீங்கும்.

தலை ரோமத்தைக் கருக்கி பசு வெண்ணெயில் குழப்பி கடித்த இடத்தில் நன்றாகத் தடவவேண்டும்.

மேலும் அம்மாம் பச்சரிசி - 10 கிராம்
தக்காளி வேர் - 10 கிராம்
நாயுருவி வேர் - 10 கிராம்
இவைகளைச் சிறுநீர் விட்டரைத்துக் கடிவாயில் பூசி வர விஷம் அறவே நீங்கும். அவதி அகலும்.


ஆடு தீண்டாப்பாளை வேர் - 30 கிராம்
கவுதும்பை வேர் - 30 கிராம்
வெள்ளெருக்கு வேர் - 30 கிராம்
மருக்காரை வேர் - 30 கிராம்
இவற்றைச் சிறுநீரில் ஊறவைத்து அரைத்து கடிவாயில் பூசி வர விஷம் நீங்கும்.

வசம்பு, வெள்ளைப்பூண்டு, நல்லதாளி, நிலப்பனங்கிழங்கு,திப்பிலி, வெள்ளைக் காக்கண வேர்ப்பட்டை இவை சம அளவு எடுத்து, குப்பைமேனி சாற்றில் அரைத்துக் கொள்ளவும். கழற்சிக்காயளவு உள்ளுக்குக் கொடுக்கவும். அதனையே மேலே தடவவும்.

நாள்பட்ட விஷத்திற்கு மருந்து
வெள்ளெருக்கன் வேர் - 20 கிராம்
சிறியா நங்கை வேர் - 20 கிராம்
வெள்ளைக் காக்கணம் வேர் - 20 கிராம்
நன்றாக அரைத்து 50 கிராம் நல்ல வெல்லத்துடன் சேர்த்து அரைத்து, 3 பாகமாக்கி 3 வேளை தினசரி சாப்பிடவேண்டும். குருவை அரிசிச் சாதம், புளியற்ற ரசம் (மிளகு ரசம்) சாப்பிடலாம். 3 நாள் 9 வேளை மருந்தில் நாள்பட்ட விஷம் அறவே நீங்கும்.

வயிறு' முன்னே சென்றால், ஆரோக்கியம், பின்னே செல்லும்


உடல் உறுப்புகளில் இதயத்தின் பங்கு முக்கியமானது இந்த இதயத்தை பாதுகாக்க ஆரோக்கியமான வழிமுறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுபவர்களுக்கு இதயநோய் எளிதாக வரும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். மாதத்திற்கு 100 கிலோ மீட்டர் தூரம் நடப்பவர்களுக்கு இதயநோய் வராது என்கின்றனர் மருத்துவர்கள்.

இதய நோய் என்பது மட்டுமல்ல, இதய வால்வுகள் தசை நார்கள் கூட பாதிக்கலாம். நாமெல்லாம் நினைப்பது போல மாரடைப்பு ஒன்றும் புதிய யுகத்தின் புதிய வரவல்ல, கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டு முன்னாலேயே திருமூலர் மாரடைப்பை பற்றி பாடியுள்ளார்.

`வயிறு' முன்னே சென்றால், ஆரோக்கியம், பின்னே செல்லும் என்று ஒரு பழமொழி உண்டு. எனவே வாயைக்கட்டினால், நோயைக் கட்டலாம்' என்பது சித்தர்வாக்கு. எனவே `உண்டியை சுருக்கி', ஆயுள் ரேகையை நீட்டலாம்.

வயிரின் சுற்றளவு ஆண்களுக்கு 90CM பெண்களுக்கு 80cm க்கு மிகாமல் இருக்க வேண்டும்

சாத்வீகமான குணங்கள்

நாம் என்ன உண்ணுகிறோமோ அது நமது உடல் நலம், மனநலம் இரண்டையும் தீர்மானிக்கிறது. பழங்கால காய்கறிகள் போன்றவை நமது உடலைப் பேணுவதுடன் அமைதியான சாத்வீகமான குணங்களை வளர்க்கும்.

இதய நோய்க்கான அஸ்திவாரம் சிறு வயதிலேயே உணரப்படுகிறது. எப்போது குழந்தை தாய் பால் குடிக்க ஆரம்பிக்கிறதோ அன்றே இதயத்தின் ரத்த நாளங்களில் கொழுப்பு படர ஆரம்பித்துவிடுகிறது. ஆரம்பித்து விடுகிறது. எனவே கண்டதையெல்லாம் சாப்பிட்டு எடையை ஏற்றிக் கொண்டால் சிறு வயதிலேயே ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் எல்லாம் `கியூ' வரிசையில் வந்து, மாரடைப்புக்கு அஸ்திவாரம் போட்டுவிடும்.

இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தை முதலே பெற்றோர்களும், பிட்ஸா, மசாலா பண்டங்களை உண்ணக்கொடுத்து குழந்தைகளின் மனம் மற்றும் உடல் நலத்தை கெடுத்துவிடுகின்றனர். அதிக கொழுப்பு உண்ண உணவுகள் ரத்தக் குழாய்களில் படியும் படி செய்து இளம் வயதிலேயே இதய நோய் ஏற்பட வழி வகுக்கிறது.

தொலைகாட்சியும் காரணம்

டி.வியும், கம்ப்யூட்டரும் இன்றைக்கு பெரும்பாலானவர்களின் பொழுது போக்காக உள்ளது. மணிக்கணக்கில் உட்கார்ந்து இருப்பதுதான் உடலுக்கு சரியாக உழைப்பில்லாமல் போய்விடுகிறது. இவற்றிலிருந்து வரும் கதிர் வீச்சு மற்றும் எலக்ட்ரோ ரேடியேஷன் ரத்தக் கொதிப்பை ஏற்படுத்துகிறது.

நூத்துக்கு நூறு

நூறு கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில் ஒரு 100 பேர் கூட 100 வருடம் வாழ்வதில்லை. நூறு வருடம் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக் கூடாது எனத் தெரிந்து கொள்ள வேண்டும். 100 வயது வாழ முதல்படி, உழைப்பு, உணவுக் கட்டுப்பாடு, குறைந்த பட்சம் 8 மணி நேர உறக்கம் ஆகும். இது தவிர `100' மிகி கீழே சர்க்கரை 100 மி.கிக்கு குறைவாக எல்.டி.எல். கொலஸ்டிரால் என்ற செறிவு கொழுப்பு, 100 மி.மீட்டருக்கு குறைவாக ரத்தக் கொதிப்பு இருக்க வேண்டும். வாரத்திற்கு 100 நிமிடம் நடக்க வேண்டும், மாதத்திற்கு 100 கி.மீ. நடக்க வேண்டும். வாரத்திற்கு 100 நிமிடம் தியானம் செய்து மன அமைதி பெறலாம்.

20 – 20 பார்முலா

அசையாமல் பல மணி நேரம் உட்கார்வது காலில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தம் உறைய வாய்ப்பு தருகிறது. அவர்கள் பிறகு நடக்கும் போது இந்த ரத்தக் கட்டிகள் இதயத்திற்கு பம்ப் செய்யப்பட்டு மாரடைப்பினை விட கொடிய நோயான `பல்மனோ கொலஸ்ட்ரால்' என்ற நோயை ஏற்படுத்தி, நொடியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் இதனைத் தவிர்க்க அவர்கள் 20 -20-20 என்ற பார்முலாவை கடை பிடிக்க வேண்டும். 20 நிமிடத்திற்கு ஒருமுறை எழுந்து 20 அடி நடக்க வேண்டும் கண்களில் கண்ணீர் வற்றாமல் இருக்க, விழித்திரையை பாதுகாக்க 20 முறை தூரத்தில் கிட்டத்தில் பார்வையை செலுத்த வேண்டும். 20 முறை வேண்டும் எண்ணம் நல்லதாக இருக்க வேண்டும். அப்போது இதயம் பாதுகாக்கப்படும்.

இன்று மது, போதை என இளைஞர்கள் சுற்றுவதால் 30 வயதிற்குள் மாறிவரும் கலாச்சாரத்தால் பெற்றோர்கள் இறக்கும் முன்பே 20-30 வயது இளைஞர்கள் இறந்து போவது இனியொன்றும் பெரிய அதிசயமாக இருக்காது. வருமுன் காப்பதே சிறப்பு என்பதை நாம் உணர்த்த வேண்டும். இல்லையெனில் லப்டப் என்ற இதய சங்கீதம் `ரம்' `தம்' என மாறி மனிதனின் வாழ்க்கை அபஸ்வரமாக மாறி விடும்.

வாழ்வில் மிகவும் மனதை மயக்கும் விஷயங்கள் அறிவை மயக்கி அழிவிற்கு அச்சாரம் போட்டு விடும். உண்மையான நன்மையான `வானவில்' வண்ணமயமான பழங்கள் காய்கறிகள், ஆகியவையாகும், கண்ட கண்ட உணவுகளை ஒதுக்கி கனிகள் உண்டால் அதிலுள்ள புரோட்டின் உடலில் வயோதிகத்தை தடுத்து இருதய நோய் மற்றும் புற்று நோயிலிருந்து காப்பாற்றும்.

Thursday, May 24, 2012

▂ ▃ ▅ ▆ █ பேரிக்காயும் அதன் நன்மைகளும்.... █ ▆ ▅ ▃ ▂


▂ ▃ ▅ ▆ █ பேரிக்காயும் அதன் நன்மைகளும்.... █ ▆ ▅ ▃ ▂ (¯`•¸•´¯) Nutrition Facts of Pear Fruit(¯`•¸•´¯) இது உங்களுக்கு பிடித்திருந்தால் முடிந்தவரை மற்றவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் பிறருக்கும் உதுவுங்கள் If u Agree With this Post Share to known others Also பேரிக்காயும் அதன் நன்மைகளும்.........! விளையக்கூடியது. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு: வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள். இதயப் படபடப்பு நீங்க: இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு: கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து. தாய்ப்பால் சுரக்க: பிறந்த இளம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்போது தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வருகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். வாய்ப்புண் குணமாக: வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும். வயிற்றுப் போக்கு: உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும். சிறுநீரக கல்லடைப்பு நீங்க: இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது. * உடல் சூட்டைத் தணிக்கும். * கண்கள் ஒளிபெறும். * நரம்புகள் புத்துணர்வடையும். * தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும். * குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும். பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் உண்டு அதன் மருத்துவப் பயன்களை முழுமையாகப் பெறுவோம். Nutrition Facts of Pear Fruit : Pear is a very delicious fruit that is quite closely related to apples and quinces. The skin of the fruit can be yellow, green, brown or red in color, or even a combination of two or more of these colors. The inside flesh, on the other hand, is white to cream-colored and is very juicy and sweet. The flesh surrounds a core that comprises of seeds. Pears have a large, round bottom, which narrows down as we move towards its topmost portion. The fruit comes in large number of varieties, differing in terms of size, shape, color, taste and storage qualities. In the following lines, we have provided health and nutrition benefits of pears. Nutritional Value of Pears Given below is the amount of nutrients in 100 gm of pears: Carbohydrates - 15.46 g Sugars - 9.80 g Dietary fiber - 3.1 g Protein - 0.38 g Thiamin (Vitamin B1) - 0.012 mg Riboflavin (Vitamin B2) - 0.025 mg Niacin (Vitamin B3) - 0.157 mg Pantothenic acid (Vitamin B5) - 0.048 mg Vitamin B6 - 0.028 mg Folate (Vitamin B9) - 7 μg Vitamin C - 4.2 mg Calcium - 9 mg Iron - 0.17 mg Magnesium - 7 mg Phosphorus - 11 mg Potassium - 119 mg Zinc - 0.10 mg Health & Nutrition Benefits of Eating Pears Being rich in vitamin C, pears have antioxidant properties and are said to protect body cells from oxygen-related damage caused by free radicals. The presence of fiber in pears helps prevent constipation and also ensures regularity of bowel movement. Studies have revealed that eating pears help protect women against postmenopausal breast cancer. Pear is described as a hypoallergenic fruit that is less likely to produce an adverse response than other fruits. Regular consumption of pears might lower the risk of age-related macular degeneration, the main cause of vision loss in older adults. It has been seen that pears help lower blood pressure and also reduce the chances of a stroke. The high content of pectin in pears makes them useful in lowering of cholesterol levels. Pears have been found to be good for colon health. Pear juice, being rich in fructose and glucose, serves as a very quick source of energy. Drinking a glass of pear juice is believed to be helpful in bringing down fever. The antioxidant properties of pears make them good for strengthening of the immune system. Consumption of pear juice helps relieve pain in various inflammatory conditions. The presence of boron in pears helps the body retain calcium and thus, reduces the risk of osteoporosis. The foliate in pear prevents neural tube defects in infants. Health benefits of pears Pear fruit is packed with health benefiting nutrients such as dietary fiber, anti-oxidants, minerals and vitamins which are necessary for optimum health. Pears provide about 3.1 g of dietary fiber per 100g. Regular eating of pears may offer protection against colon cancer. Most of the fiber is non soluble polysaccharide (NSP), making them a good bulk laxative. Also, the gritty fiber content binds to cancer causing toxins and chemicals in the colon, protecting its mucous membrane from contact with these compounds. In addition, pear fruit is one of the very low calorie fruits, just provides 58 cal per 100g. Just a few sections a day in the diet can bring significant reduction in weight and blood LDL cholesterol levels. It contains good quantities of vitamin C. Fresh fruits provide about 7% of RDA per 100 g. They are rich in antioxidant flavonoids phyto-nutrients such as beta carotene, lutein and zea-xanthins. These compounds along with vitamin C and A help body protect from harmful free radicals. The fruit is a good source of minerals such as copper, iron, potassium, manganese and magnesium as well as B-complex vitamins such as folates, riboflavin and pyridoxine (vitamin B-6). Although not well documented, pears are among the least allergenic of all fruits and are therefore recommended by health practitioners as safe alternative in the preparation of food products for allergy sufferers. Pears have suggested being useful in treating colitis, chronic gallbladder disorders, arthritis and gout. ★ ✩ ✮ ✯ பேரிக்காயும் அதன் நன்மைகளும்.... ✯ ✮ ✩ ★ (¯`•¸•´¯) Nutrition Facts of Pear Fruit(¯`•¸•´¯) இது உங்களுக்கு பிடித்திருந்தால் முடிந்தவரை மற்றவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் பிறருக்கும் உதுவுங்கள் If u Agree With this Post Share to known others Also

Facebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

 Facebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

How to Automatic Shutdown Your Computer.


கணினி பயன்பாட்டில் உள்ளபோது நீங்கள் வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.அப்பொழுது நீங்கள் கணினியை நிறுத்த முடியாத வகையில் பயன்பாட்டில் இருக்கலாம் அல்லது பதிவிறக்கம் மற்றும் வைரஸ் ஸ்கேன் நிகழ்வு நடைப்பெற்று கொண்டிருக்கலாம்.இப்பொழுது உங்கள் தேவையானது அந்த செயல்பாடு முடிந்தவுடன் கணினி தானாகவே நிறுத்தப்பட வேண்டும் என்பதுதானே..இது மாதிரியான் இக்கட்டான சூழ்நிலையில் இத்தகவல் உங்களுக்கு பயன்படும் என நம்புகிறேன்.
Go to Start and type  Task Schedule in run dialog box and press Enter
 Click on Action and then Create Basic Task.








இங்கே உள்ள name என்ற இடத்தில் எதாவது ஒரு தகவலை கொடுத்துவிட்டு next buttonஐ கிளிக் செய்யவும்.




உங்களுக்கு தேவையான கால அளவை (delay time) இங்கே பதிவு செய்தவுடன் அடுத்த தகவலுக்கு செல்லவும்.




Now select Start a Program and click on Next button.
Browse the program which you want to execute and click on next button. ForShutdown Copy/Paste this location.
After this click on Finish button.



HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

தெரிந்த சவூதி அரேபியா.. தெரியாத பல விடயங்கள்.. சவூதி பற்றி நல்ல விடயங்களை நீங்களும் தெரிந்து கொள்ள..




ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி ஒரு அபிப்ராயம் இருக்கிறது.
அது அவர்கள் நாளிதழ்கள் வாயிலாகவோ, நண்பர்கள் வாயிலாகவோ, இன்ன பிற ஊடக வாயிலாகவோ அறிந்தவை. பொதுவாக அமெரிக்கா என்றால் மனதிற்குள் அது ஒரு சொர்க்க பூமியாகத் தோன்றும்.

சவுதி அரேபியா என்றால், அது குறித்த எண்ண ஓட்டங்கள் உலக பார்வையில் தரக் குறைவாகவே இருக்கிறது. அது பல இடங்களில் தன்னுடைய சட்ட திட்டங்களிலும், மனிதாபிமானத்திலும் கடுமையான உலக விமரிசனத்துக்கு உள்ளாகியிருப்பது உண்மைதான் என்றாலும், சவுதி அரேபியா, தன் நாட்டின் பெருமையாக கொண்டுள்ள விடயங்களை, அதுகுறித்து நான் அறிந்த விடயங்களை மட்டுமே சில இங்கு பகிரப்பட்டுள்ளன.


பெரும்பாலான சவுதி அராபிய சட்டதிட்டங்களிலும் மற்ற நாட்டினனுக்கான நீதி முறைகளிலும் பல கருத்துகள் ஒவ்வாது என்பதை சொல்லிக்கொண்டு, சவுதி அரேபியாவின் வியக்கத்தக்க செய்திகளை நீங்கள் அறிய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே படியுங்கள்.


*முஸ்லிம் ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டிய புனிதத்தளமான மெக்காவும், மெதினாவும் இங்குதான் உள்ளது.


*உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் கிடங்குகளை( world’s Second largest oil reserves) கொண்ட நாடாக இது உள்ளது. வெனிசுலா முதலிடத்தில் உள்ளது.


*கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான கச்சா எண்ணெய்( Worlds second largest oil export) ஏற்றுமதி செய்யும் நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.


*worlds sixth largest natural gas reserves என்ற இயற்கைவாயு சேமிப்பில் உலகின் ஆறாவது இடத்தில் சவுதி உள்ளது.


*வளைகுடா நாடுகளில் அதிக பரப்பளவையும், அரபு நாடுகளில் அல்ஜிர்யாவிற்கு அடுத்த இடத்திலும் சவுதி உள்ளது.


*Abraj al bait towers இந்த ஹோட்டல்mekkah royal hotel tower என்றும் அழைக்கப் படுகிறது. இது பல உலக சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஹோட்டல் இவ்வாண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இவ்வாண்டு திறக்கப்படும் பட்சத்தில், tallest hotel என்ற பெருமையை அடையும்.


*Abraj al bait towers ல் உள்ள clock தான் உலகின் tallest clock tower என்ற பெருமையையும், largest clock face என்ற பெருமையையும் பெறுகிறது.இதன் சிறப்பு என்னவென்றால், 25 KM தொலைவில் இருந்து கடிகாரத்தைப் பார்க்கமுடியுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!.


*உலகின் இரண்டாவது மிகப் பெரிய கட்டிடம் (World largest building) என்ற பெருமையை Abraj al bait towers அடைகிறது. இது குறித்து நீங்கள் அறிய விரும்பினால் இதை கிளிக் செய்யவும்.
http://en.wikipedia.org/wiki/Abraj_Al_Bait_Towers

*Worlds largest military funds spends என்பதில் சவுதி உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது. மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.


*மன்னர் அப்துல்லா உலகின் மூன்றாவது வலிமை வாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார். சீனா, அமெரிக்கா நாட்டின் presidents முதல் இரு இடங்களை முறையே பெற்றுள்ளதாக இவ்வாண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


*அமெரிக்காவை ஆட்டிப் படைத்த ஒசாமா பின்லேடனின் சொந்த நாடு சவுதி. SBG (Saudi Binladan Group) என்ற கம்பெனி தான் சவுதியில் மிகப் பெரிய contracting company என்பது குறிப்பிடத்தக்கது.


*princess noura bin abdul Rahman university(PNU) , இதுதான் உலகின் மிகப் பெரிய பெண்களுக்கு மட்டுமான university.


*The world’s largest Automated People Mover (APM) train வசதி பெற்றுள்ள university ஆக PNU விளங்குகிறது. APM Railway யின் நீளம் 14 KM & In rush hour, 70000/HR பயணிகளை ஏற்றி செல்லுமளவுக்கு ரயில் வசதி செய்யப் பட்டுள்ளது என்றால் PNU University யைப் பற்றி நாம் வேறு என்ன சொல்ல வேண்டும்! சவுதி அரேபியா உலகின் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஐந்தாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


*13000 மில்லியன்/வருடம் (ஒரு கோடியே முப்பது லட்சம்), வெளிநாட்டிலிருந்து முஸ்லிம் மக்கள் மெக்காவிற்கு வந்து வழிபட்டு செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற மதத்தினர் மெக்கா மற்றும் மெதினா நகர எல்கைக்குள் செல்ல முடியாது. கடந்த ஆண்டு 2011 அரசு அறிக்கைப் படி, ஹஜ் பயணிகளாக மெக்கா வந்தவர்கள் எண்ணிக்கை 1828195.


*முகம்மத் பிறந்த புண்ணியத் தளம்தான் முஸ்லிம்கள் வழிபடும் இந்த மெக்கா.


*உலகின் மிகப் பெரிய மசூதிக்குரிய பெருமை, மெக்கா மசூதியையே சாரும்.


*ஆசியாவின் மிகச் சிறந்த university ஆக KSU(King Saud Univesity, Riyadh) 19 ஆவது இடத்திலும், உலகில் சிறந்த university வரிசையில் 200 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. அரபு நாடுகளின் மிகச் சிறந்த university ஆக KSU விளங்குகிறது.


*சவுதி அரேபியாவின் தேசிய விலங்காக ஒட்டகம் உள்ளது. ஒட்டகத்தை வளர்ப்பவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாகப் பார்க்கப் படுகிறார்கள்.


*கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஓரினச் சேர்க்கை, தீவிர வாதம், விபச்சாரம், போதைப் பொருள் தயாரித்தல் அல்லது கடத்தல், தேசப் பாதுகாப்பு, கடவுளுக்கு எதிராக விமர்சித்தல், இன்னும் சில விரோத செயல்களுக்கு மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகிறது. குற்றங்களுக்கு கடும் தண்டனை என்பதை உபயோகிக்கும் உலக நாடுகளில் முதன்மையானது சவுதி.


*திரை அரங்குகள் இல்லாத ஒரே நாடாக சவுதி அரேபியா உள்ளது.


*பூங்காக்களைப் பொறுத்தவரை Familiy park and Bachelor park என்று தனித் தனியாகவே உள்ளது.

*உணவகங்களில் Familiy Restaurant இருக்கின்ற இடங்களில், இருக்கைகள் family க்குத் தனியாகவும், bachelor க்குத் தனியாகவும் உள்ளன.

*மேற்கூறிய கடைசி மூன்று விடயங்கள் பெரும்பாலோர் விரும்புவதில்லை என்றாலும் சவுதி அரசின் கட்டளைப் படி அவ்வாறே இயங்குகின்றன.


*தொழுகை நேரங்களில் அரசின் உத்தரவுப்படி அனைத்து கடைகளும் அடைத்து வைக்கப்படும்.

ஒரு சில மிகப் பெரிய ஷாப்பிங் மாலில் மட்டும் உள்ளே செல்ல அனுமதி உண்டு. விலை போடுவது என்பது கிடையாது. இறைவனுக்குப் பிறகு தான் வியாபாரம் என்பதைக் கடைபிடிக்கும் ஒரே இஸ்லாம் நாடாக சவுதி உள்ளது.

*King Fahd International Airport (KFIA) தான் உலகின் largest airport in the world ஆக உள்ளது.


*Saudi ARAMCO தான் உலகின் second largest public company ஆக உள்ளது. இது dammam ல் உள்ளது.


*Saudi ARAMCO உலகில் அதிக அளவு crude oil reserves ஐயும், உலகில் அதிக அளவு ஒரே நாளில் ஆயில் உற்பத்தி செய்யும் நிறுவனமும் சவூதியில்தான் உள்ளது. ஆயில் சம்பந்தமான 1oo pattern rights வைத்துள்ள saudi aramco, இங்குதான் உள்ளது.


*ஒரேநாளில் 12 millions/day அளவுக்கு SAUDI ARAMCO நிறுவனம் உற்பத்தி செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


*கெமிக்கல் உற்பத்தியில் SABIC SAUDI ARABIYA தான் பல பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக Ethlene glycol உற்பத்தியில் உலகில் இரண்டாமிடத்தையும், Poly ethlene தயாரிப்பில் மூன்றாமிடத்தையும், Poly propline, Poliyofins உற்பத்தியில் உலகில் நான்காம் இடத்தையும் தன்னகத்தே வைத்துள்ள, SABIC சவுதியில் தான் உள்ளது.


*Mono Ethlene Glycol உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ள SABIC தான் வளைகுடா நாடுகளின் மிகப் பெரிய கம்பெனியாக உள்ளது.

Wednesday, May 23, 2012

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!





இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தேசிய அளவில் 2 சதவீதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் கேரளாவில் 5.86 சதவீதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கேரளாவில் 3 அரசு மனநல மருத்துவமனைகளும், 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் உளவியல் துறைகளும், அவற்றில் 1,800 உளவியல் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளும் இருக்கின்றன. இது தவிர 143 தனியார் மனநல மருத்துவமனைகளும் செயல்படுகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மனநல மருத்துவமனைகள் போதிய அளவில் இருந்தும் பிரச்சினைகளும் ஏராளமாகவே இருக்கின்றன.

மாநில மனநல ஆணையத்தின் புள்ளி விவரத்தின் படி கேரள மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு உளவியல் பிரச்சினைகள் இருக்கிறது. இதில் 2 சதவீதம் பேருக்கு மனச்சிதைவு மற்றும் மனச்சோர்வு பிரச்சினைகள் உள்ளன. 2-3 சதவீதம் பேருக்கு உடல் பிரச்சினையால் ஏற்படும் கடும் உளவியல் குறைபாடுகள் உள்ளன. 6 வயதுக்குட்பட்டவர்களில் நூற்றில் ஒரு குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டதாக உள்ளது.

மனநல பாதிப்புகள் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் சுகாதார நிதி முழுமையாக பயன்படுத்தப்படாதது.
மாநில அரசு மனநல பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தாதது, கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை தீர்க்கப்படாதது போன்றவை முக்கிய காரணங்களாகும். தனியார் மனநல மருத்துவமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதும் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படாததற்கு காரணமாக இருக்கின்றன.

இந்திய அளவில் தனிநபர் மது அருந்தும் அளவு 0.75 லிட்டர் ஆகும். ஆனால் கேரளாவில் தனிநபர் ஒருவர் சராசரியாக 8.3 லிட்டர் மது அருந்துகிறாராம். அதேபோல கேரளாவில் லட்சம் பேருக்கு 25.3 பேர் தற்கொலை செய்கிறார்கள். இது இந்திய அளவில் 10.5 பேராக உள்ளது.

இந்திய அளவில் விவாகரத்து அளவு 1.1 சதவீதமாக இருக்கும்போது கேரளாவில் இந்த அளவு 3.3. சதவீதமாக உள்ளது. கேரளாவில் மொத்தம் பதிவாகும் குற்றங்களில் 11.8 சதவீதம் குடும்ப வன்முறை வழக்குகளாக உள்ளன. ஆனால் இந்திய அளவில் 5.3 சதவீதம் வழக்குகள்தான் குடும்ப வன்முறை வழக்காகும்.

மேற்கண்ட புள்ளி விவரங்கள் மனநல பிரச்சினைகளோடு நேரடியாக சம்பந்தப்பட்டவை என்பது நிபுணர்களின் கருத்து. ‘மது, தற்கொலை, விவாகரத்துகள், குடும்ப வன்முறை போன்றவற்றில் மாநிலம் முன்னிலை வகிப்பது நிலைமை மோசமடைவதற்கான காரணங்கள். இது முன்னேறிய சமூகத்தை பாதிக்கும் பிரச்சினை’ என்கிறார்கள் நிபுணர்கள்.

கேரளாவில் ஆண்களைவிட 1.5 முதல் 2 சதவீத பெண்கள் கூடுதலாக மனநல பாதிப்புக்கு உள்ளாகிறார்களாம். அங்கு பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் அவர்கள் தங்களின் பாதிப்பை வெளியில் காட்டிக் கொள்ளாததும் அதிகமாக மனநலம் பாதிக்க காரணமாகிறது.

வளைகுடா நாடுகளில் இருக்கும் 25 லட்சம் கேரளவாசிகளில் 90 சதவீதம் பேர் ஆண்கள். அவர்களின் பணி குடும்பத்திற்கு அதிக வருவாயைத் தந்திருந்தாலும் வேறுவகையில் பிரச்சினைகளையும் தருகிறது. வளைகுடா நாடுகளில் இருப்பவர்களின் மனைவிகளை வளைகுடா விதவை என்று அழைக்கிறார்கள். இவர்கள் உணர்வு ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கேரளாவில் நடக்கும் தற்கொலைகளில் 19 சதவீதத்திற்கு மனநல பாதிப்புதான் காரணம் என்ற மாநில குற்ற ஆவணங்கள் பிரிவு அறிக்கைகள் சொல்கிறது.



நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

உங்கள் IP எண்ணை வைத்து உங்கள் விவரங்களை அறிய.


ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். 
IP INFORMATION
1.முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம். உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
3. இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

4. இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
5. அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.



6. இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
7. ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம். இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணனி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.

8. அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
9. இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.





Password.     ipnetinfohack


Please Write your comment.

சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...



அக்னி வெயில் சுட்டெரிக்கும் இந்த டைம்ல `ஜலதோஷ' பிரச்சினை அதிகமாக வருகிறது. இதற்கு காற்றின் வழியாக பரவும் வைரஸ் தான் காரணம். மேலும் தவறான உணவு பழக்கம் காரணமாகவும் வைரஸ்கள் தொற்றி ஜலதோஷத்தை உண்டாக்குகிறது. இந்த ஜலதோஷம் முற்றி வரும் விளைவு தான் சைனஸ்.

பொதுவாக ஜலதோஷம் 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடும். அப்படி குணமாகவில்லை என்றால் அவர்களுக்கு சைனஸ் என்று தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்

மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். அப்போது ஜலதோஷத்தால் உருவாகும் சளி அந்த சைனஸ் அறைகளில் தங்கி கிருமிகலந்த சீழாகி மாறி விடுகிறது. அதனால் நன்றாக சுவாசிக்க முடியாது. தலை பாரமாக இருக்கும். சரியாக பேசவும் இயலாது. குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்' என்று தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது.

மூக்கு எதற்கு அடைக்கிறது?

மூக்கில் உள்ள சைனஸ் அறைகள் அடைக்க பல காரணங்கள் உள்ளன. மூக்கின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர் சிலருக்கு சற்று வளைந்து இருக்கும். அந்த தடுப்புச் சுவர் நடுவில் இருந்தால் சைனஸ் அறைகளின் உள்ளே காற்று சென்று வருவதில் எந்த தடையும் இருக்காது.

மாறாக அது வளைந்து இருந்தால் அதன் அருகில் இருக்கும் சைனஸ் அறையின் வாசலை அது எப்போது வேண்டுமானாலும் அடைத்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சைனஸ் அறை வாசலில் உள்ள சதை வளர்ச்சி ஏற்பட்டாலும் அடைத்துக் கொள்ளும். மேலும் தூசுகள் நிரம்பிய இடங்களில் வேலை பார்த்தால் மூக்குக்குள் தூசுகள் சென்று ஜவ்வுகளைத் தாக்கி சளி தொந்தரவை ஏற்படுத்தி விடும்.

தடுக்கும் முறைகள்

கோடையில் 2 வகையாக சைனஸ் பிரச்சினையை உண்டாகும். ஒன்று திடீரென்று வந்து, அதிக வலியை தரும் சைனஸ். இதை நாசில்ஸ் ஸ்பிரே என்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம். மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும்.

மற்றொன்று நிரந்தரமானது ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். இதற்கு முதலில் என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாத நிலையில் வலியை மட்டுமே முடிந்தது. ஆனால் தற்போது `என்டோஸ்கோப்பிக்' சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சையில் மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படுகிறது.

மேலும் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவதோடு அவற்றில் இருப்பது சளியா அல்லது சீழா என்பதையும் மிகத்துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சை எளிதாகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்

Sunday, May 20, 2012

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!


கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.

கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.

உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.

ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை.

வெப்பமண்டல பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர் ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம்.

அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில் மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையிலும் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும்.

அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக அதிகம்.

நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும் பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு அடர்த்தி அதிகம்.

நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில் எளிதாய் மிதக்கலாம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே எட்டுவதில்லை.

மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.

இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல் போக்குவரத்து.

ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில் வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம்.

இந்தியாவின் 7600 கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000 மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன.

ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில் ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன.

இதன் பொருளாதார மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி ஈட்டுகிறது.

வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு ஏற்றுமதியாகின்றன.

சுறாத் துடுப்புகள்(shark fins)வளைகுடா நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

புரட்சி தலைவியின் போறம்(பிற்)போக்குதனம்!!


சென்னை: ரோம் நகரம் பற்றி எரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையைப் போலத்தான் தமிழகத்தில் ஜெயா அரசின் நிலையும் அமைந்துள்ளது.

தனது அரசின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி ஒரே நாளில் 25 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து சாதனைப் படைத்துள்ளார் புரட்சி தலைவி.
ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டு நிறைவு விளம்பரத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ஆகும். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் தேசிய பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முதல் பக்க முழு நீள விளம்பரம் வெளியானது.
ஒருவருட சாதனைகள் தாம் (சாதனையா? வேதனையா? என்பது வேறு விஷயம்) பல மொழி விளம்பரங்களின் உள்ளடக்கம். விளம்பரத்திற்கு இந்தியாவில் செலவழிக்கப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவே. பெரும் நிறுவனங்களோ, கார்ப்பரேட்டுகளோ இதுவரை இவ்வளவு தொகையை விளம்பரத்திற்காக செலவிட்டதில்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பெரும்பாலான இந்திய பதிப்புகள், ஹிந்துஸ்தான் டைம்ஸ், த ஹிந்து, எக்கணாமிக் டைம்ஸ், ஏசியன் ஏஜ், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ், பிசினஸ் லைன், மிண்ட், பிசினஸ் ஸ்டாண்டர்ட்ஸ் ஆகிய பத்திரிகைகளில் நாட்டின் பெரும் நகரங்களின் அனைத்து பதிப்புகளிலும் விளம்பரம் வெளியிடப்பட்டது.
முதல் பக்கம் மட்டுமல்ல மூன்று உள்பக்கங்கள் முழுவதும் பல வர்ணங்களில் விளம்பரத்திற்காக பத்திரிகைகள் இடத்தை ஒதுக்கின. சென்னையிலும், மும்பையிலும் வெளிவராத கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மன், டெலிக்ராஃப் போன்ற பத்திரிகைகளிலும் கூட விளம்பரம் வெளியானது. வழக்கமாக பெரும் நிறுவனங்கள் தேச முழுவதும் மேற்கொள்ளும் விளம்பரங்களை முறியடிக்கும் விதமாக ஜெயாவின் விளம்பர சாதனை அமைந்துள்ளது.
தமிழகத்தில் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பல மணிநேரங்கள் மின் தடையால் மக்கள் பெரும் அவதியுறும் வேளையிலும் மின்கட்டண உயர்வு, கூடங்குள போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, ரவுடிகள் ராஜ்ஜியம், சட்ட ஒழுங்கு சீரழிவு என அரசு நிர்வாகம் சீரழிந்துள்ள சூழலில் அவற்றை மூடி மறைக்க அரசு கஜானாவில் இருந்து இவ்வளவு பெரிய ஆடம்பர விளம்பரங்களை மேற்கொண்டுள்ள ஜெயாவின் அரசு கடந்த ஓர் ஆண்டில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை!!


புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அவசர உதவி விநியோகத்தில் மத்திய அரசு வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது.
ஆஸ்திரேலியா, பிரான்சு, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு கூடுதல் தொகை அளிக்கப்படும் வேளையில் வளைகுடாவின் பணிபுரியும் இந்தியர்களுக்கு துச்சமான உதவித் தொகையே அளிக்கப்படுகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சர் வயலார் ரவி, நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்த உதவி தொகை விநியோக(இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபெயர் ஃபண்ட்) புள்ளிவிபரம் மூலம் இந்த உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது.
21.7 கோடி ரூபாய் அவசர உதவி தொகையாக பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் செலவழித்துள்ளன. செலவின் சராசரியை கணக்கிட்டால் இதர நாடுகளுக்கு அளித்து வரும் உதவித்தொகையை விட மிக குறைவான உதவித்தொகையே வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சராசரியாக ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு 6,09,930 ரூபாயும், பிரான்சில் ஒருவருக்கு 1,85,162 ரூபாயும், சீனாவில் ஒருவருக்கு 1,37, 411 ரூபாயும் கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் விநியோகம் செய்த உதவித்தொகையும் சராசரியாக ஒருவருக்கு ஒருலட்சம் ரூபாய்க்கு அதிகமாகும். பிரிட்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஒருவருக்கு ரூ.60 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.
அதேவேளையில் வளைகுடா நாடுகளில் விநியோகம் செய்த தொகை மேற்கண்ட நாடுகளில் விநியோகிக்கப்பட்ட தொகைக்கு பத்தில் ஒரு மடங்கை விட குறைவாகும். சராசரியாக ஒருவருக்கு கிடைத்த உதவித்தொகை பஹ்ரைனில் 4880 ரூபாயும், ஒமானில் 4463 ரூபாயும், குவைத்தில் 7916 ரூபாயும், சவூதி அரேபியாவில் 14,736 ரூபாயும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 19862 ரூபாயும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபெயர் ஃபண்ட் என்பது வேலைப் பிரச்சனைகளில் சிக்கியவர்களுக்கு சட்ட உதவி,  தாயகம் திரும்புவதற்கான செலவு, மரணித்தவர்களின் உடலை தாயகம் கொண்டுவருவதற்கான செலவு உள்ளிட்ட காரியங்களுக்காக செலவழிக்கப்படும் நிதியாகும்.

உமர் பின் கத்தாப் (ரலி): "உத்தம அரசியலின் அரிச்சுவடி"

 
உமர் பின் கத்தாப் (ரலி): "உத்தம அரசியலின் அரிச்சுவடி"

{கட்டுரை சற்றே பெரிது, அவசியம் பொறுமையாக படித்து பார்க்கவும்.}


... வரலாற்றின் தவறுகள் ஒரே மாதிரியானவை ஆட்களும் இடங்களுமே மாறுபடுகின்றன என "வார்த்தை சித்தர்" வலம்புரி ஜான் கூறுவார். இது, மற்றெவரையும் விட ஆட்சியாளர்களுக்கு சரியாகப்பொருந்தும்.


ஆதிக்கம் செய்வதற்காகவும், அளவு கடந்த பணம் சம்பாதிப்பதற்காகவும் ஆட்சிக்கு வருகிறவர்கள் அல்லது ஆட்சிக்கு வந்த பிறகு இந்த தவறுகளை செய்பவர்கள், எகிப்தின் அன்றைய பேரரசன் பிர்அவ்னிலிருந்து நேற்றைய அதிபர் ஹோஸ்னி முபாரக் வரை கேவலமாக வீழ்ந்துபடுகிறார்கள். பெற்ற பெருமையை இழந்து மாய்கிறார்கள். வரலாற்றில் அவர்களுக்குரிய இடம் அழிக்கப்படுகிறது.


மக்களது அபிமானத்தோடு ஆட்சிக்கு வருகிற பலரும் கூட வாழையடி வாழையாக வரலாறு சொல்லித் தருகிற இந்தப் பாடத்தை காலப்போக்கில் மறந்து விடுகிறார்கள். வரலாற்றின் பெரிய சோகமே வரலாற்றிலிருந்து யாரும் பாடம் பெறவில்லை....என்பது தான்...!


இந்த உலகிலிருந்து எதைத் நிரந்தரமாக தம்மோடு வைத்துக் கொள்ள முடியும்..? என்ற கேள்வி குறித்து ஆட்சியிலிருப்பவர்கள் சிறிதளவாவது சிந்திக்கிறார்களா..? என்ற கேள்வி பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கிறது. மாபெரிய சாம்ராஜ்யங்களை கட்டியாள்பவர்கள், வாழ்க்கையை பற்றிய சாதாரணமான தத்துவத்தை கூட ஏன் மறந்து விடுகிறார்கள் என்பது புதிராகவே எஞ்சி நிற்கிறது.


அரபுப் பாலவனத்தில் தந்தையுடையவும், சின்னம்மாக்களுடையவும் ஓட்டகைகளை மேய்க்கிற சாதாரண இடையராக இருந்து, 22 ½லட்சம் சதுர மைல்களை 10 ஆண்டுகள் சர்வ வல்லமையுடன் அரசோட்சிய மாமன்னராக உயர்ந்த, இஸ்லாமின் இரண்டாவது ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் பரிசாக வழங்கப்படவேண்டும். அதிகார வாழ்வின் சரியான அடையாளம் எது என்பதையும், நீடூழி வாழ்தலுக்கான இரகசியம் என்னவென்பதையும் அந்த வரலாறு குன்றிலிட்ட விளக்காக உலகிற்கு வெளிச்சமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது.


வரலாறு பல வீரர்களை பார்த்திருக்கிறது. உமரைப் போன்ற ஒரு வெற்றியாளரைப் பார்த்ததில்லை.


பல வெற்றியாளர்களை சந்தித்திருக்கிறது. உமரைப் போல ஒரு வாழ்நாள் சாதனையாளரை அது கண்டதில்லை.


பல அரசியல் மேதைகளை பார்த்திருக்கிறது. உமரைப் போல ஒரு தொலை நோக்கு கொண்டவரை அது சந்தித்ததில்லை.


பல ஆட்சித்தலைவர்களை பார்த்திருக்கிறது. உமரை போன்று, ஏழையாக எவரும் அரசாட்சி செய்ததில்லை.


உமரைப் போல தொண்டர்,

உமரைப் போல சாமாண்யர்,

உமரைப் போல கண்டிப்பானவர்,

உமரைப் போல நிர்வாகம் செய்தவர்,

உமரைப் போல அமைதியை பராமரித்தவர்,

உமரைப் போல நீதியாக நடந்து கொண்டவர்,

உமரைப் போல சட்டத்திற்குட்பட்டு வாழ்ந்தவர்,

உமரைப் போல குடும்பம் நடத்திய ஆட்சியாளர்,

உமரைப் போல தன் குடிமக்களை பாதுகாத்தவர்,

உமரைப் போல பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டவர்,

உமரைப் போல ஒட்டுப் போட்ட ஆடையணிந்தவர்,

உமரைப் போல வளர்ச்சிப் பணிகளை கவனித்தவர்,

உமரைப் போல தன் அதிகாரிகளை கண்காணித்தவர்,

உமரைப் போல எதிரிகளை அஞ்சி நடுங்கச் செய்தவர்,

உமரைப் போல தன் சமூகத்திற்கு பாக்கியமான மனிதர்,

உமரைப் போல முன்னேற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்தவர்,

உமரைப் போல திறமையாளர்களைப் பயன்படுத்திக் கொண்டவர்,

உமரைப் போல சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்டவர்,

உமரைப் போல இரண்டாம் கட்டத்தலைவர்களுக்கு வாய்ப்பளித்தவர்

என்று இந்த உலகில் எவரையும் சுட்டிக்காட்டுவது அரிது.


நிகர் சொல்ல முடியாத மனிதர் என்ற வார்த்தை ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களுக்கு பொருந்துவது போல மற்ற எவருக்கும் பொருந்தாது.


மிகச் சாதாரண நிலையிலிருந்து அதிஉன்னதமான நிலைக்கு தான் உயர்ந்து, தன்னுடை சமூகத்தையும் உயர்த்திய ஒரு தலைவராக மட்டுமல்ல, உத்தமராகவும் ஒரு மனிதரின் வாழ்கையை படிக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டீர்கள் என்றால்.. உமர் பின் கத்தாபின் வரலாற்றை ஒரே ஒரு முறை படித்து பாருங்கள். அந்த ஈர்ப்பிலிருந்து நீங்கள் விடுபட மாட்டீர்கள். இவர் போல இன்னொருவரா..??? என்று நீங்கள் மறுக்கவே செய்வீர்கள்..!


அவர் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியவர் அல்ல..

வெற்றியாளராக வாழ நினைக்கும் அனைவருக்குமே உரியவர்.



சாமான்ய வாழ்விலிருந்து சாதனை வாழ்விற்க்கும்,

சாதனை வாழ்விலிருந்து சரித்திர வாழ்விற்கும்,

சரித்திர வாழ்விலிருந்து நிரந்தர வாழ்விற்கும்

அவரது வாழ்வு ஒரு இலக்கணம்.


இஸ்லாம் என்ற ஒற்றைச் சொல் இந்த உலகில் செய்த மந்திர மாற்றம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு உமர்(ரலி) ஒரு உதாரணம் போதும்.


முஹம்மது (ஸல்) மனித சமூகத்திற்கு எதை விட்டுச் சென்றார் என்பதை கணக்கிடுவதற்கு உமர்(ரலி) ஒரு உதாரணம் போதும்.


இறைவன் இந்த உலகில் மனிதர்களை உருவாக்கியதற்கு என்ன காரணம் என்பதை உண்ர்ந்து கொள்வதற்கும் உமர்(ரலி) ஒரு உதாரணம் போதும்......




கிபி 586 ல் மக்காவின் பிரபலமான குறைஷிக் குடும்பத்தின் பனூ அதீ கிளைப் பிரிவில் கத்தாப் பின் நுபைல் என்பவரின் மத்திய தரக்குடும்பத்தில் உமர் (ரலி) பிறந்தார்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட 13 வயது இளையவரான, சிவப்பேறிய வெண்மை நிறம் கொண்ட அவர் வலிமையான திடகாத்திரமான உடல்வாகும் கொண்டிருந்தார். குதிரையில் அவர் ஏறி உட்கார்ந்தால் நிற்பது போல தெரியும் எனும் அளவு உயரமானவர். அன்றைய அரபகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த 17பேரில் ஒருவராக இருந்த அவர் மல்யுத்தம் குதிரையேற்றம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளையும் கற்றிருந்தார். கவிதைகளோடும் இலக்கியத்தோடும் கூட அவருக்கு அழுத்தமான தொடர்பு இருந்தது. அலாதியான பேச்சுத்திறன் அவரிடமிருந்தது.


ஆனாலும் தந்தையின் அன்பான அரவணைப்பு அவருக்கு கிட்டியதில்லை. தந்தை கத்தாப், உமர் விசயத்தில் எப்போதும் கடுமையாகவே நடந்து கொள்வார் என வரலாற்றாசிரியர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள்.


உமர் (ரலி) பிறக்கிற போதே அரசியல்வாதியாகப் பிறந்தார் என்றும் சொல்லலாம். அரபுக்கு குடும்பங்களுக்கிடையே சண்டைகள் மூள்கிறபோது பேச்சு வார்த்தைக்கு செல்கிற சஃபாரத் எனும் தூதுப் பொறுப்பு அவருடைய பனூஅதீ குடும்பத்திற்குரியதாக இருந்தது. உமர் (ரலி)யிடம் அதற்குரிய பேச்சுத்திறன் இயற்கையாகவே இருந்தது. அரசியல் அவரது இரத்தத்தில் கலந்திருந்ததற்கு இது கூட காரணமாக இருக்கலாம்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு தொடர்பு கொண்டு இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அந்த வீரத்திருமகனுக்கு வாழ்க்கைகான இலக்கு தெளிவில்லாமல் இருந்தது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த சத்தியத்தை உயர்த்திப் பிடிப்பதே அவரது குறிக்கோளாக மாறியது. மிகத் தீரமாகவும், தீவிரமாகவும் ஈடுபாட்டோடும் தியாகத்தோடும் அந்தப் பாதையில் அவர் வீர நடை போட்டார். அதனால் "அல்பாரூக்" சத்தியத்தை திட்டவட்டமாக தெரிந்தவர், அதன் வழி நடப்பவர் என்ற சிறப்பு அடைமொழி அவருக்கு வழங்கப்படலாயிற்று.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் அரபுப்பாலைவனம், ஆதிக்க எண்ணம் கொண்டோர் திரும்பியும் பார்க்காத பூமியாக இருந்தது. ஒரு திட்டமிட்ட அரசியலமைப்போ ஆட்சி முறையோ அங்கே இருக்கவில்லை. ஏன் அரசு என்ற ஒன்று அங்கு செயல்பட்டதில்லை. குடும்ப பஞ்சாயத்து தான் ஒரே அரசியல் முறையாக அங்கு நடைமுறையில் இருந்தது.


முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபுலகின் முதல் அரசியல் தலைவராக உருவெடுத்தார். சிறிய நகரான மதீனாவின் தலைவர் என்ற நிலையிலிருந்து ஏமன், பஹ்ரைன் உள்ளிட்ட அரபு தீப கற்பத்தின் ஆட்சியாளரக உயர்ந்த பிறகே முஹம்மது (ஸல்)அவர்கள் மறைந்தார்கள். அவர் வரலாற்றிற்கு இஸ்லாமிய சமயத்தை மட்டுமல்ல புதிய அரபு அரசாங்கத்தையும் சேர்த்தே விட்டுச் சென்றார்.


அந்த சமயத்தையும் அரசாங்கத்தையும் முழு உலகிற்கும் முன்னெடுத்துச் செல்கிற சிறந்த தொண்டர் படையை உருவாக்கியது முஹம்மது நபிகள் நாயகத்தின் மகத்தான சாதனையாகும். இந்த ஒரு அம்சமே முஹம்மது நபியை முழுமையடைந்த சாதனையாளராக உலகிற்கு காட்டுகிறது. வரலாற்றின் பல தலைவர்களுக்கும் வாய்க்காத பேறு இது.


முஹம்மது நபியின் முழுமையடைந்த, சாதனையின் முதன்மையான வெளிப்பாடாக, இஸ்லாத்தின் முதல் ஜனாதிபதி "அபூபக்கர் சித்தீக்" திகழ்ந்தார். அன்னாருடைய இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு இஸ்லாமிய சிற்றரசுக்கு பொறுப்பேற்ற உமர், அந்த சாதனையின் சிகரமான வெளிப்பாடாக மிளிர்ந்தார். முஹம்மது நபியின் சமயத்தையும், அரசியலையும் அகில உலகிற்கும் அவர் முன்னெடுத்து நடந்தார்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு 80 நாட்களுக்கு முன் அவரது இறுதி ஹஜ்ஜின் போது அரபா பெருவெளியில் “உங்களது மார்க்கம் நிறைவு பெற்று விட்டது’ என்று பிரகடணப்படுத்தினார். அந்தப் பிரகடணத்தின் முழு கணபரிமாணத்தையும் பிற்கால வரலாறு உமரின் வடிவத்தில் கண்டது.


மதீனாவில் தோன்றிய சிற்றரசு சில ஆண்டுகளில் மாபெரிய பேரரசானது. அன்றைய வல்லரசுகள் உம்ரின் காலடியில் வீழ்ந்தன். படோபடமிக்க அன்றைய சாஸானிய பாரசீகப் பேரரசு முற்றிலுமாக அவரிடம் வீழ்ந்தது. கம்பீரம் மிக்க அன்றைய பைஜாந்திய ரோமப் பேரரசின் மூன்றில் இரண்டு பங்கை அவர் வாகை சூடினார். பாரசீகம், இராக், சிரியா, பாலஸ்தீனம், லிபியா, எகிப்து, ஆர்மீனியா, இன்றைய ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் வரை அவரது சாம்ராஜ்ய எல்லை விரிந்தது.


வெற்றி கொள்ளப்பட்ட பகுதிகள் அனைத்திலும் திட்டமிட்ட நீதி மிக்க நிர்வாகத்தை உமர்(ரலி) வழங்கியதால் உமர் என்ற ஒற்றைப் பெயர் மக்களுக்கு ஆறுதலை அளிக்கிற சொல்லாகவும், எதிர்களை கிலிபிடிக்கச் செய்கிற சொல்லாகவும் எங்கும் எதிரொலித்தது. இத்தனையும் ஒரு பத்தாண்டுகளுக்குள் நடந்தது. அதிலும் ஆச்சரியம் என்னெவென்றால் தன்னுடைய படை வென்றெடுத்த பல பகுதிகளை அவர் நேரில் சென்று பார்க்க கூட வாய்ப்புக் கிட்டவில்லை. மதீனா நகரின் பள்ளிவாசல் முற்றத்தில் ஒரு பஞ்சாயத்து தலைவர் போல உட்கார்ந்து கொண்டு பல லட்சம் சதுர மைல்களை அவர் ஆட்சி செய்தார்.



தனது நிர்வாக நிலப்பரப்பின் எந்த மூளையிலும் என்ன நடக்கிறது என்பதை அவர் அறிந்து கொண்டார். நாட்டை பல பகுதிகளாக பிரித்து தகுதி வாய்ந்த நம்பிக்கைகுரிய ஆளுநர்களை நியமித்து அவர்களை தன் கைப்பிடியில் வைத்துக் கொண்டார். ஆளுநர்களின் ஒரு சிறிய தவறும் கூட, அது தொழுகை நடத்துவதில் செய்யப்படும் சிறு குறையாக இருந்தாலும் கூட மதீனாவில் விசாரிக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதிகாரிகள் மீது புகார் அளிப்பவர்கள் தங்களது புகாருக்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டனர்.



அதே நேரத்தில் புகார் கொடுத்தவர்கள் அச்சமற்று வாழ்வதற்கான அடிப்படையான உத்தரவாதமும் உமர் (ரலி) ஆட்சியில் மக்களுக்கு கிடைத்தது. அன்றைய பூமிப்பந்தின் சரி பாதியை சூழ்ந்திருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மொத்த நிலப்பரப்பும் உமர் என்ற ஒற்றைக் குடையின் கீழ் நீதி தவழும் நிம்மதியில் தழைத்திருந்தது.


19 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்க இலக்கியவாதியும், அரசியல் பிரமுகரும் வரலாற்று ஆய்வாளருமான வாசிங்டன் இர்விங்க், உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கை முறையையும் ஆட்சி முறையையும் பற்றி சில வரிகளில் ஒரு சித்திரம் தருகிறார். உலகிற்கு உமர் அவர்கள் விட்டுச் சென்ற தடங்களில் ஒரு சிறு பதிவு அது. இர்விங் எழுதுகிறார்.


“உமரின் முழு வரலாறு அவரை தீட்சணயம் மிக்க அறிவாளியாகவும், எதற்கும் வளையாத நேர்மையாளராகவும், நீதியின் மீது அதிக பிடிமானம் கொண்டவராகவும் காட்டுகிறது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவதிலும், முஹம்மது நபியின் நடைமுறைகளை எடுத்துச் செல்வதிலும், அபூபக்கருக்கு உதவுவதிலும் அவர் அனைவரைக் காட்டிலும் முன்னணியில் இருந்தார். முஸ்லிம்களால் விரைவாக கைகொள்ளப்பட்ட பகுதிகள் அனைத்திலும் சட்டத்தின் கட்டுப்பாடான ஆட்சியை வழங்குவதற்காக தீட்சண்யம் மிக்க நடைமுறைகளை அவர் நிறுவினார்.



படைத்தலைவர்கள் மீது அவரது பிடி இரும்புப்பிடியாக இருந்தது. படைத்தலைவர்களை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருந்தது அவரது ஆட்சித்திறனுக்கு ஒரு அடையாளமாகும். படைத்தலைவர்கள் பிரபலமானவராகவும், வெகு தூரத்தில் அவர்கள் வென்றெடுத்த பகுதிகளில் இருந்த போதும் உமருக்கு கட்டுப்படுவதிலிருந்து அவர்கள் துளியும் விலகவில்லை.


எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வதிலும், ஆடம்பரத்தை உதறுவதிலும் தனக்கு முந்திச் சென்ற இறைத்தூதருடையவும், அபூபக்கருடையவும் முன்னுதாரணத்தை அவற்றை அப்படியே பின்பற்றினார். தான் கடைபிடித்த அதே வழிமுறைகளை தன்னுடை படைத்தலைவர்களுக்கும் அவர் கடிதம் மூலம் அறிவுறுத்தினார்.



“ஆடம்பரமாக உண்ணுவதிலும், ஆடை அணிவதிலும் பாரசீகர்களின் பகட்டை உங்களுக்கு நான் எச்சரிக்கிறேன். உங்களது தேசத்தின் எளிமையையே நீங்கள் தொடர்ந்து கடைபிடியுங்கள்..! அல்லாஹ் உங்களுக்கு தொடர்ந்து வெற்றியை தருவான் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். இத்தகை குற்றச்சாட்டு எந்த அதிகாரி மீதாவது சொல்லப்பட்டால், அவருக்கு கடுமையாக தண்டனை வழங்கினார்.



அரசாங்கத்திடம் மிஞ்சியிருக்கிற பணத்தை, வாரந்தோறும் பங்கு வைத்து, அவர் கேட்டு வருகிறவர்கள் அனைவருக்கும் கொடுக்காமல், தேவையுடையவர்களை கண்டறிந்து பங்கு வைத்தார். “ இந்த உலகின் அருள் வளங்களை அல்லாஹ் நம்மீது பொழிவது, நாம் நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே அன்றி நாம் செய்த நனமைகளுக்கான கூலியாக அல்ல. அவைகளுக்கான கூலி மறுமையில் கிடைக்கும் என்று அவர் கூறுவார்.


இர்விங்க்கின் இந்த வார்த்தைகள் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி முறையையும், வாழ்க்கை போக்கையும் ஒரு சேர விவரிக்கின்றன என்றாலும் உமர் (ரலி) அவர்களின் தனிப்பட்ட வாழ்வியல் நடைமுறைகளும், ஒழுங்கமைப்பும், நீதியுணர்வும், பக்தியும், சமூக அக்கறையும், மதிநுட்பம் மிகுந்த நடவடிக்கைகளும் அவ்வளவு எளிதில் வார்த்தைகளுக்கு சிக்கி விடக்கூடியதல்ல.


அவரது வரலாற்றை வாசிக்கிற யாரும் ஆச்சரியப்படாமலும், அழாமலும் வாசித்து விட முடியாது. 18 ம் நூற்றாண்டின் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான வரலாற்றாசிரியர் கிப்பன் அந்தஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்.


"Yet the abstinence and humility of Umar were not inferior to the virtues of Abu Bakr: his food consisted of barley bread or dates; his drink was water; he preached in a gown that was torn or tattered in twelve places; and a Persian satrap, who paid his homage as to the conqueror, found him asleep among the beggars on the steps of the mosque of Muslims- Gibbon - In The Decline and Fall of the Roman Empire.



“தொளிக்கோதுமையினால் செய்யப்பட்ட ரொட்டி அல்லது பேரீத்தம் பழங்களே அவரது உணவாகவும், சாதரண தண்ணீரே அவரது பானமாகவும் இருந்தது. அவரது சட்டை பணிரெண்டு இடங்களில் தையல் போடப்பட்டிருந்தது. பாரசீக இராஜதந்திரி ஒருவர் மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்க மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசலின் படிக்கட்டுகளில் ஏழைகளோடு ஏழையாக உமர் உறங்கிக் கொண்டிருக்க கண்டார்.”


மகுடம் இல்லை. அரச மாளிகை இல்லை. காவலர்களோ ஏவலர்களோ இல்லை, குதிரைப் பூட்டிய சாரட் வண்டிகள் இல்லை. வெண்சாமரம் இல்லை. துதிபாடிகள் இல்லை. முரசு இல்லை. ஒற்றைச் சவுக்கை மட்டும் வைத்துக் கொண்டு அந்த ஏழை அரசாண்ட அழகை சொல்லி முடிக்க வார்த்தைகளே இல்லை.


அந்தப் பேரரசர் பாலஸ்தீனத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஜெரூஸலம் நோக்கிப் புறப்பட்ட போது அது ராஜபவனியாக இருக்கவில்லை. அவர் பாலஸ்தீனுக்குள் நுழைந்த அழகுக் காட்சியை சொல்லிச் சொல்லி நெகிழாத வரலாற்றாசிரியர்களே இல்லை.


ஒரே ஒரு பணியாளரை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்ட உமர் பாலஸ்தீனத்திற்கு நுழைந்த போது அவரது பணியாளர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க உமர் ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு வந்தார்.


இது தேர்தல் நேரத்தில் கிழவியை கட்டிப் பிடிக்கிற நடிப்பல்ல. நபிகள் பெருமானாரிடமிருந்து உமர் வாழ்க்கையை கற்றுக்கொண்ட இயல்பு.


உமரின் வாழ்வு முறைகள் நடிப்பாக இருந்திருக்குமானால் அவர் பெற்ற வெற்றிகள் அவர் காலத்திலேயே காணாமல் போயிருக்கும். அரிதாரம் அதிக நேரத்திற்கு நிலைக்காது அல்லவா..?


வலுவுள்ளதே வெல்லும் (survival of fittest) என்பது உயிரியல் தத்துவம். ஆனால் தரமுள்ளதே நிலைக்கும் என்பது உலக அனுபத்தின் சாரம். உமரின் தரமே அவரது வெற்றிகளின் நிலைத்தன்மைக்கு காரணம்.


ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சியின் சுகத்தை அனுபவிப்பதை அவர் இலக்காக கொள்ளவில்லை என்பது உமர் (ரலி) தரத்தை உயர்த்திய பிரதான செய்தியாகும்.


பகட்டோடு நடந்து கொண்டால் தான் அரசியலில் பிழைக்க முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். எளிமை தான் நிலைக்கும் என்பதை ஹஜ்ரத் உமர் (ரல்) அவர்களின் வாழ்வு நிஜப்படுத்தியிருக்கிறது.


முஸ்லிம்கள் ஏழைகளாக இருந்த போது எப்படி வாழ்ந்தார்களோ அதே வாழ்வு முறை உமர் ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்தார் என்று வரலாறு கூறுகிறது. (he continued to live much as he had when Muslims were poor and persecuted.)


துறவிகள் கூட இன்று கோடீஸ்வரர்களாக வாழ்கிறார்கள். ஆசிரமம் நடத்த குட்டித்தீவுகளும், ஆகாயப் பயணத்திற்கு குட்டி விமானங்களும். தரை வழிப்பயணத்திற்கு ரோல்ஸ்ராய்ஸ் கார்களும், தியானம் செய்ய பஞ்சு மெத்தைகளும், "ஏசி" மிஷின்களுமாக வலம் வருகிறார்கள். சந்நியாசிகளே இப்படி இருந்தால், சர்க்கார் நடத்துபவர்கள் எப்படி இருப்பார்கள்....?


உலகின் மிகப்பெரிய ஏழை நாடான இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை எண்ணிப்பாருங்கள் 549 உறுப்பினர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கணக்கு காட்டிய கோடீஸ்வரர்கள். இன்னும் முக்கால்வாசிப்பேர் கணக்கு காட்டாத கோடீஸ்வரர்கள். சாமானிய மனிதர்கள் பத்து பேர் இருந்தால் அது ஆச்சரியமே..!


நூற்றுப் பத்து கோடிக்கும் மேற்பட்ட ஏழைகளை கொண்ட நாட்டில் வறுமையின் வலி அறியாதவர்கள் நாட்டுக்கு என்ன செய்வார்கள்..? நாட்டு மக்களுக்குத்தான் என்ன செய்வார்கள்..?


நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ஒரு பெரும் சர்வதேச தொழிலதிபருக்குண்டான ஸ்டைல் மிளிர்வதை கவனியுங்கள். மக்களின் பிரச்சினகள் குறித்து யோசிக்கிற யோக்கிய அம்சம் துளியும் அதில் இல்லாத்தை காண்பீர்கள்..!


மக்களிடம் காலில் விழாத குறையாக சில இடங்களில் காலில் விழுந்தும் கையை பிடித்தும் கெஞ்சி ஓட்டுப் பொறுக்கிறவர்கள் தேர்தலில் வெற்றியடைந்த பிறகு, அந்த மக்களின் எஜமானார்களாக தங்களை கருதிக் கொள்கிறார்கள்.


அரசியல் என்பது மக்களுக்கு சேவையாற்றும் தளமாக இல்லாமல், அதிகாரத்தின் ருசியை அனுபவிக்கும் சாப்பாட்டு மேஜையாகவும், முறையற்ற வகையில் பணத்தை பெருக்கிக் கொள்ளும் சூது வியாபாரமாகவும் மாறி விட்டது என்பது கண்கூடு.


இந்தியாவில் புதிய மக்கள் அரசு அமைந்த போது அதை வாழ்த்திய காந்தியடிகள்” ஏழ்மையை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்காகவே இந்தப் பதவிகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை மறவாமல் செயற்படுங்கள்‘ என்று கேட்டுக் கொண்டார்.


இன்றைக்கு அரசியலுக்கு வருகிறவர்கள் இரண்டே இரண்டு இலக்குகளோடு களத்தில் இறங்குகிறார்கள்.

ஒன்று பணம் சம்பாதிப்பது. இரண்டாவது சம்பாதித்த பணத்தை அரசியல் தொடர்பை வைத்து மேலும் அதிகமாக பெறுக்கிக் கொண்டு அதை காப்பாற்றிக் கொள்வது.


இதில் பெரிய வேதனை என்னவென்றால் முந்தைய காலங்களில் அரசியல் தலைவர்கள் எம் எல் ஏக்கள் எம்பிக்களுடைய சொத்துக்கள் பெருகி வருவது குறித்து கவலையாக பேசிக் கொண்டிருந்த மக்கள் கூட இப்போதெல்லாம் அதை சகஜம் என்று ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டது தான்.


ஹஜ்ரத் உமரைப் பற்றிய ஒரு பழைய வரலாற்றை உங்களுக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன். இன்றைய சூழநிலைக்கு அது கற்பனையாக கனவாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இது கதையல்ல நிஜம்.


மக்களதிபர் உமர் "ஜும் ஆ" பிரசங்கத்திற்காக பள்ளிவாசலுக்கு வருகிறர். அவரை "சல்மான் அல் பார்ஸி" என்ற தோழர் தடுத்து நிறுத்திக் கேட்கீறார். உமரே..! நீங்கள் இப்போது அணிந்திருக்கிற ஆடை ஒரு சந்தர்ப்பத்தில் வெகுமதியாக உங்களுக்கு கிடைத்தது. இதே போல ஒன்று எனக்கும் கிடைத்தது. இப்போது நீங்கள் இரண்டு ஆடைகளை கீழுக்கு ஒன்றாக மெலே ஒன்றாக அணிந்திருக்கிறீர்களே அது எப்படி..?? என்று கேட்டார். உமர், தனது மகன் அப்துல்லாஹ்வை நோக்கினார். அப்துல்லாஹ் சொன்னார். சகோதரரே..!! என் தந்தையுடையது ஒரு ஆடை தான். உங்களுக்கு வெகுமதியாக ஆடை கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் எனக்கும் ஒரு ஆடை கிடைத்தது. அதை நான் என் தந்தைக்கு கொடுத்தேன் என்றார்.


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுக்கு ஒற்றை ஆடை கூட கேள்விக்குரியதாக இருந்தது. அவரது ஆடைகளில் ஒட்டுக்களும் அதிகம். உமரின் ஆடையில் தோள் புஜங்களுக்கு இடையே நான்கு ஒட்டுக்களை நான் பார்த்தேன் என நபித்தோழர் அனஸ் கூறுகிறார்..


இன்றையை அரசியல் தலைவர்களுக்கு ஆடை வடிவமைப்பதற்கு என்று ஒரு பெரும் நிறுவனமே நடக்கிறது. சில தலைவர்களுக்கு ஆடை உடுத்தி விடுவதற்கு பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அணிந்து வருகிற ஆடைகள் பத்திரிகைகளின் எட்டுக்கால செய்தியாக உலாவருகிறது, ஆனால் ஆட்சிக் கட்டிலிருந்து அவர்கள் இறங்கிய பிறகு அவர்களது ஆடைகள் மட்டுமல்ல, அவர்களே கூட வரலாற்றின் குப்பைத்தொட்டிகளுக்குள் வீசப்பட்டு விடுகிறார்கள்.


அதே வரலாறு, ஒட்டுப் போட்ட ஆடை அணிந்தவர்களையும், ஓலைக் கூரையில் வசித்தவர்களையும் புகழ் மகுடம் சூட்டி அழகு பார்க்கிறது.


எளிமை வரலாற்றில் புகழைப் பெற்றுத்தரும். ஆனால் அது மட்டுமே அரசு நடத்துபவர்களுக்கு போதாது.


நீதி வழுவாமை, நீண்ட கால நோக்கில் மக்களுக்கு நன்மை செய்தல், அரசின் பொதுச் சொத்துக்களை தன் சொத்தாக கருதி அபகரித்துக் கொள்ளாமல் அதை பாதுகாப்பதுமே ஒரு ஆட்சியாளருக்குரிய பொறுப்புணர்வாகும். உமர் (ரலி) அவர்களிடம் இந்த அம்சங்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் குடி கொண்டிருந்தன.


ஆட்சி நடைமுறைகளுக்கு பழக்கமில்லாத பாலைவனத்தில் பிறந்த அந்தப் பெருந்தகை, மக்கள் வசிக்கும் பகுதிக்குள் இராணுவத்தினர் தங்குவது பொருந்தாது என்று கருதி இராணுவத்தினருக்காக புதிய நகரங்களை அமைத்தார். இன்றைய பிரபலமான இராக்கிய நகரங்களான பஸரா, கூபா ஆகிய இரு நகரங்களும் இந்த வகையில் உமர் (ரல்) அவர்கள் கட்டமைத்த நகரங்களாகும்.


உமர் (ரலி) மக்கள் வாழ்வுக்கு பொறுப்பேற்றிருக்கிற ஒரு சிறந்த நிர்வாகி என்பதை எப்போதும் நிரூபித்து வந்தார். மக்கள் பஞ்சத்தில் வாட அவர் மஞ்சத்தில் உல்லாசமாக படுத்திருந்தவர் அல்ல. குளுகுளு அறையில் ஆலோசனைகள் என்ற பெயரில் காலம் கடத்தியவர் அல்ல. மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையில் அதற்குத் தேவையான அக்கறையோடும், திறனோடும் செயல்பட்டார்.


கி.பி 630 ல் அரபுலகத்தை கடுமையான பஞ்சம் வாட்டியது. கிராமவாசிகள் பலர் பசி பட்டினியால் இறந்து போனார்கள். பன்னூற்றுக் கணக்கானோர் தலைநகர் மதீனாவை முற்றுகையிட்டனர். அங்கு தான் உணவு பங்கிடப்பட்டு வந்தது. உடனே உமர் (ரலி) சிரியா, இராக், பாலஸ்தீனில் உள்ள கவர்னர்களுக்கு கடிதம் எழுதினார். சரியான நேரத்தில் ஆளுநர்களுடைய உதவி வரவே, பல்லாயிரக்க்கணக்கானோர் உயிர் பிழைத்தனர். சிரியாவின் ஆளுநராக இருந்த அபூ உபைதார் (ரலி) பெருமளவிலான உதவிப் பொருட்களை அனுப்பியதோடு ஒருகடிதமும் எழுதினார். அதில புகழ் பூத்த அந்த வாசகம் எழுதப்பட்டிருந்தது.


நான் உங்களுக்கு உணவுப் பொதிகளைச் சுமந்த ஒட்டக அணிகளை அனுப்பி வைக்கிறேன். அதன் ஒரு முனை சிரியாவில் இருக்கும். மறு முனை மதீனாவில் இருக்கும் என அபூஉபைதா எழுதியிருந்தார். மதீனாவை தேடி வந்த மக்களின் துயரை ஆற்றிய பிறகு பாலைவனத்தில் உள்ளோடிய மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு உதவ உமர் (ரலி) ஆட்களை அனுப்பினார். அக்காலங்களில் இரவு தோறும் மக்களை உமர் பொது விருந்துக்கு அழைத்தார். நூற்றுக்கணக்கானோர் அந்த விருந்தில் கலந்து தங்களது பசியை ஆற்றிக் கொண்டனர். (ஹயகல்)


நிலமை ஓரளவு சீரடைந்ததும் மதீனாவில் தங்கியிருந்தவர்கள் தங்களது ஊர்களுக்குச் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை உமர் செய்து கொடுத்தார்.


மக்களுக்கான அத்தியாவசியக் கடமைகளை நிறைவேற்றுவதை அவர்களுக்கு தான் செய்கிற கிருபையாக கொடையாக அவர் அர்த்தப்படுத்த முயலவில்லை. கடமையாக கருதினார். இந்தக் கடமைகளை செய்வதற்கு தானே அதிக பொருத்தமான ஊழியன் என்று அவர் கூறி வந்தார்.


ஒரு முறை அரசாங்க ஒட்டகத்தை ஒரு நீர் குட்டையில் அவர் கழுவிக் கொண்டிருந்தார். உள்ளூர்காரர்களுக்கு இந்தக் காட்சி சகஜம். வெளியூரிலிருந்து வந்த ஒரு அரசப்பணியாளருக்கு இது ஆச்சரியத்தை தந்தது. ஏன் ஒரு ஊழியரிடம் இந்த வேலை நீங்கள் உத்தரவிடக் கூடாது என்று அவர் கேட்டார். உமர் திருப்பக் கேட்டார். சொன்னார் (அய்யுன் அஃபது மின்னீ) என்னை விட சிறந்த ஊழியன் யார்..? வந்தவர் வாயடைத்துப் போனார். அவர் மட்டுமல்ல வரலாறும் கூடத்தான்.


காற்றலைகளை காற்றுக்கே கூடத் தெரியாமல் விற்று விடுகிற அரசியல்வாதிகளை பெருகி விட்ட காலத்தில் உமர் (ரலி)அவர்களைப் பற்றி நினைப்பே பிரமிப்பூட்டுகிறது.


மற்றொரு முறை அரசாங்க ஒட்டகை ஒன்று காணாமல் போய்விட்டதாக காவலாளி கூறினார். உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து வேகமாக எழுந்து கொண்ட உமர் அதை தேடிப்புறப்பட்டார். உடனிருந்தவர்கள் ஒரு வேலைக்காரரை விட்டு அதை தேடச் சொல்லலாமே என்றார்கள்.


வரலாறு ஒருவரை ஏன் நினைவில் வைத்திருக்கிறது என்பதற்கான காரணத்தை கவனியுங்கள்..!


உமர் கூறினார்: ஒட்டகை குறித்து என்னிடம் தான் விசாரிக்கப்படும். என வேலைகாரனிடம் அல்ல.


ஆதிக்கம் அல்ல உழியம் என்பதே உமரின் அரசியல் வாழ்வின் தத்துவம். இந்த ஊழியம் நன்மையானதாக அமைய வேண்டும் என்பதே அவரது ஆதங்கம்.


இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னாள் தோழர்களோடு பேசுகிற போது
“அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால் இராக் வாசிகளின் விதவைப் பெண்களை எனக்குப் பிறகு வேறெவரிடமும் கையேந்த தேவையில்லாத நிலையில் தான் விட்டுச் செல்வேன்.” என்று அவர் சொன்னார்.


உமரது வாழ்வின் கடைசி நிமிடங்கள் அவரைப் போலவே கம்பீரமானவை. நெஞ்சத்தை கொஞ்சம் திடமாக வைத்துக் கொண்டால் மாத்திரமே அந்த இறுதி நிமிடங்களை நீங்கள் கலங்காமலும் குமுறாமலும் வாசிக்க முடியும்.


நபி மொழித் திரட்டுக்களில் பிரபலமான ஸ்ஹீஹுல் புகாரியின் ரஹ்மத் அறக்கட்டளையின் மொழி பெயர்ப்பு உங்களிடம் இருக்கும் என்றால் 2700 ஹதீஸை படித்துப் பாருங்கள்.


அதிகாரத்தின் சிகரத்திலும், அனுதாபத்தின் விளிம்பிலும் ஒரு அடிமையைப் போல உமர் (ரலி) எதற்குப் புலம்கிறார் என்பதை படியுங்கள். உமரின் வரலாறு அரசியலின் அரிச்சுவடியாக மாறியதற்கான இரகசியத்தை அதில் நீங்கள் கண்டு கொள்ளலாம்.



இந்த அரிச்சுவடியின் தொடரில் வரலாற்று வாய்பாடு இலேசானது.


எம் ஜி ஆரை விட அண்ணா வாழ்வார். அண்ணாவை விட காமராஜர் வாழ்வார் என உங்களுக்குத் தெரிந்த பலரையும் இந்த வகையில் நீங்கள் வரிசைப்படுத்திப் பார்க்கலாம்..


ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் இஸ்லாமின் இரண்டாவது மக்கள் அதிபர் ஹஜ்ரத் உமர் (ரலி) நினைவு கூறப்படுவது வாடிக்கை. யாரைப் பார்த்து அல்லது யாரிடம் மாற்றத்தை எதிர் பார்த்து அந்த முன்னுதாரணம் சொல்லிக் காட்டப்படுகிறது என்பதை யோசித்துப் பார்த்தால் அயற்சியும் விரக்தியுமே மேலோங்கும் என்றாலும் நம்பிக்கையை விட்டு விட முடியாதே..! நம்பிக்கை தானே வாழ்க்கை....