Digital Time and Date

Welcome Note

Saturday, September 1, 2012

தவிடுபொடியான டார்வின் கொள்கை

 
தவிடுபொடியான டார்வின் கொள்கை பாதாளக்குழியில் பரிணாம வளர்ச்சி:
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.

கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் கொள்கையைச் சிலர் ஏற்றிப் போற்றுகிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.

சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை!

எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.

குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.

அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும்.

உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு, மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம்.

ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர்.

குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை.

பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போகிறது.

அநேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும் அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாகவுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட அறிவியல் பூர்வமான இந்தக் காரணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.

இன்றைக்கும் கூட தகப்பனின் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் "இவன் தான் தந்தை' என்று முடிவு செய்கிறோம். வடிவத்தைக் கணக்கில் கொள்வதில்லை.

டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?

இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.

வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர்.

ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் எந்தப் பிராணியிலிருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும்.

டார்வின் கூறுவது போல் உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும்.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.

குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.

இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.

குறிப்பிட்ட கால கட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.

முழு மனிதனுக்கும் ஒரே தாய் தான் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் கொள்கையைச் சவக்குழிக்கு அனுப்பி விட்டது.

மனிதன் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம், இனம், நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும்.

ஆனால் டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.

""என்னுடைய முதல் தந்தையும் உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு'' எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.

எனவே உலகுக்குக் கேடு விளைவிக்கும் உளறலே டார்வின் தத்துவம்.

இதையெல்லாம் விட உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையை மனிதன் பெறவில்லை. பகுத்தறிவால் தான் அந்தப் பெருமையைப் பெறுகிறான்.

உடல் வளர்ச்சிக்கும், உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் # நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.

ஆடு, மாடுகளுக்கு இருப்பது போன்ற கழுத்தைத் தான் ஒட்டகச்சிவிங்கி பெற்று இருந்ததாம்! அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி, நீட்டி வந்ததாம்! இதனால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டதாம்! டார்வினிஸ்டுகள் உளறுகின்றனர்.

உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்.

இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது.

ஆனால், பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் எப்போதும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை.

எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறிவு என்பது வரவே முடியாது. இந்தச் சாதாரண அறிவு கூட டார்வினுக்கு இருக்கவில்லை.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது.

யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?

கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?

யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?

கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா? பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?

தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை?

இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.

மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கின்றது.
மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும். எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.

சூனியம் என்பது ஓர் தந்திரமே !


மூஸா நபி காலத்தில், அவர்கள் அற்புதம் நிகழ்த்திக் காட்டும் போது சூனியக்காரர்களும் அற்புதம் நிகழ்த்திக் காட்டினார்கள்.

அது பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது "கயிறுகளைப் பாம்புகளாக மாற்றினார்கள்' என்று கூறாமல் "அவ்வாறு தோற்றமளித்தது' என்றும் "கண்களை வயப்படுத்தினார்கள்' என்றும் கூறுகிறான்.
(திருக்குர்ஆன் 7:116, 20:66)

"பாம்பு போல் தோற்றமளித்தது''
----------------------------------------------

"கண்களை வயப்படுத்தினார்கள்''
-----------------------------------------------

என்று மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டதிலிருந்து, சூனியக்காரர்கள் ஏதோ தந்திரம் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இப்படித் தந்திரம் செய்பவர்கள் தான் சூனியக்காரர்கள் என்றும் இங்கு குறிப்பிடப்படுகிறார்கள்.

சூனியம் என்பது ஒரு தந்திரக் கலை தானே தவிர அதன் மூலம் எதார்த்தமாக எதுவும் செய்ய இயலாது என்பதற்கு இங்கே இறைவன் பயன்படுத்தியிருக்கின்ற வார்த்தை போதுமான சான்றாக இருக்கிறது.

Al Quran - 116. "நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைக ளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

சூனியம் என்ற வித்தை மூலம் பாரதூரமான காரியங்களைச் செய்ய முடியும் என்று பலரும் எண்ணுகின்றனர்.

இருப்பதை இல்லாமல் ஆக்கவோ, இல்லாததை உருவாக்கவோ, ஒன்றை வேறொன்றாக மாற்றவோ எந்த வித்தையும் கிடையாது.

தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்துப் பின்னர் எடுத்துக் காட்ட முடியும்.
திருக்குர்ஆனின் 7:116 வசனத்தில் "சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.

20:66 வசனத்தில் "பாம்பைப்போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான். "கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள்'' என்று அல்லாஹ் கூறவில்லை.

20:69 வசனத்தில் "சூனியம் என்பது ஒரு சூழ்ச்சி, தந்திரம்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேஜிக் எனப்படும் கலை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லா ததை உண்டாக்குவேன் என்றும் புளுகக் கூடியவர்கள், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை.

மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும்.

இதிலிருந்தே சூனியம் என்பது வெறும் பித்தலாட்டம் என அறிய முடியும்.

சூனியக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்றது ஏன்?
-----------------------------------------------------------

மூசா (அலை) அவர்கள் செய்து காட்டிய அற்புதத்தைப் பார்த்தவுடன் போட்டியிட வந்த சூனியக்காரர்கள் மூசா (அலை) அவர்களை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். சஜ்தாவில் விழுந்து விடுகிறார்கள்.

சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை எதிரிகளிடம் இருந்திருந்தால் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்க மாட்டார்கள். மூசா நம்மை விட பெரிய சூனியக்காரர் என்று கூறி மறுத்திருப்பார்கள்.

மூசா நம்மைப் போன்று ஒரு சூனியக்காரர் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் மூசா நபியை போட்டிக்கு அழைத்தார்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழிக்கு ஏற்ப சூனியக்காரன் யார்? என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

மூசா நபி செய்தது தாங்கள் செய்தது போன்று வித்தை அல்லாமல் தெளிவான அற்புதமாக இருந்ததாலும் இதை இறைத்தூதரைத் தவிர சூனியக்காரர்களாலும் செய்ய முடியாது என்று நம்பியதாலும் இஸ்லாத்திற்கு வந்தார்கள்.

ஃபேஸ்புக் இணையத்தளம் மீதான 7 கசப்பான உண்மைகள்


இணைய உலகில் மிகவும் பிரசித்தமான தளங்களில் ஒன்றாகவும் இணையவழி ஊடகத்துறையில்
(Online Media) முக்கிய பங்கு வகிப்பதும் உலகம்முழுவதும் கிட்டத்தட்ட பில்லியன் பாவனையாளர்களையும் கொண்டிருப்பதுமான முக்கிய இணையத்தளம் ஃபேஸ்புக் ஆகும்.

எனினும் ஒரு முறையான கம்பனி என்று கருதுவதற்கு முடியாத வகையில் ஃபேஸ்புக் சில முக்கிய குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது. இவற்றில் ஃபேஸ்புக் இணையத்தளம் மீதான கசப்பான உண்மைகளாக விளங்கும் 7 விடயங்கள் கீழே -

1.போலியான கணக்குகள் ஃபேஸ்புக்கின் முக்கிய பிரச்சனை -

கிட்டத்தட்ட 955 மில்லியன் கணக்குகளைக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக்கில் இதில் 8.7% வீதம் அதாவது 83 மில்லியன் கணக்குகள் போலியானவை. இதில் 46 மில்லியன் கணக்குகள் duplicate எனப்படுகின்றது. இதில் 23 மில்லியன் வகைப் படுத்தாத கணக்குகள் மற்றும் 14 மில்லியன் கணக்குகள் ஸ்பேம் எனப்படுகின்றது.

2.தானியங்கி கட்டளைகள் தனது விளம்பரங்களை முறையாகப் பயன்படுத்துவதில்லை
3.ஃபேஸ்புக் தளம் மூலம் அக் கம்பனி பெறும் வருவாய் அவ்வளவு சிறப்பானதாகவில்லை.
4.பங்குச் சந்தையில் இதன் பங்குகளின் விலை வீழ்ச்சியடைவதில்லை.
5.ஃபேஸ்புக்கில் ஆரம்பத்திலிருந்து பணியாற்றிய நிர்வாகிகள் பலர் விலகி வருகின்றனர்.
6.ஆரமபத்தில் இருந்த நல்ல பெயர் படிப்படியாகக் குறைந்து வருதல்
7.உள்ளே வேலை செய்பவர்கள் ரகசியமாக தமது பங்குகளை விற்று வருதல்

Friday, August 31, 2012

'சாத்தம் மர அறுவை ஆலை’

அந்தமான்-நிகோபர் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள சாத்தம் தீவில் அமைந்துள்ள 'சாத்தம் மர அறுவை ஆலை’... ஆசியாவிலேயே மிகவும் பெரியதும், பழமையானதுமாகும். தீவின் 40% பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, அந்தமான் வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
நாடுகளை பிடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள்... அந்தமான் தீவுகளில் காலடி வைத்ததும், அங்கே குடியேறுவதற்காக காடுகளை அழிக்கத்தொடங்கினார்கள். அப்போது அவர்களால் வெட்டுப்பட்ட மரங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பிரமித்துப் போனவர்கள்... அவற்றை தங்கள் நாட்டுக் கொண்டு சென்று பலவிதமான கட்டடப் பணிகளுக்கு பயன்படுத்தினர். மரங்களை மொத்தமாக இங்கிலாந்து கொண்டு செல்வது சிரமமாக இருக்கவே... அவற்றை அறுத்து, பலகைகளாகக் கொண்டு செல்ல நினைத்தனர். அதற்காக 1888|ம் ஆண்டில் உருவாக்கியதுதான் 'சாத்தம் மர அறுவை ஆலை'! அப்போது... இங்கிலாந்தில் இருந்து தருவிக்கப்பட்ட பழைய இயந்திரங்களுடன் துவங்கப்பட்ட ஆலை... இன்றைக்கு அதிநவீன இயந்திரங்களுடன் சுமார் 750 தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது! ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்த மர அறுவை ஆலையில் மரங்கள் அறுக்கப்பட்டு... மேற்கத்திய நாடுகளுக்கு வணிக நோக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையின் மரச்சுவர்கள் யாவும் அந்தமான் படாக் எனும் உயர்ரக மரத்தினால் அமைக்கப்பட்டவையே!
சிறப்பு வாய்ந்த இந்த மர அறுவை ஆலையைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அதன் பொறுப்பாளர், துணைநிலை வனப்பாதுகாவலர் ராஜ்குமாரைச் சந்தித்தேன். நூற்றாண்டு பெருமைவாய்ந்த அந்த ஆலை பற்றி பேசியவர், ''ஒரு காலத்தில் ஆண்டுக்கு 20 ஆயிரம் கனமீட்டர் மர அறுவை செய்து வந்த இந்த ஆலை, தற்போது 5,000 கனமீட்டர்தான் அறுவை செய்கிறது. இப்போது இந்த ஆலையை மேலும் நவீனமாக்க, 'இந்திய பிளைவுட் தொழில் ஆய்வு மையம்’ எனும் நிறுவனத்திடம் இதை கையளிக்க இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளில் இதை நவீனப்படுத்திக் கொடுப்பார்கள். அதன் பிறகு, பழைய திறனுக்கு இந்த ஆலை இயங்கக் கூடும்.
'இப்படி மரங்களாக வெட்டிக் கொண்டிருக்கிறார்களே' என்று நினைக்க வேண்டாம். நாங்கள் தாறுமாறாக மரங்களை வெட்டுவதில்லை. ஆங்கிலேயர்கள் வணிக நோக்கில் படாக் மரங்களை வெட்டிவிட்டு, அவற்றின் இடங்களில் வேகமாக வளரும் மென்மரங்களை நட்டு வைத்தனர். அதனால், 'படாக்’ மரங்கள் குறைந்த அளவிலேயே தற்போது உள்ளன. ஆனால், நாங்கள் வனச்சூழல் சரியாக பரமாரிக்கப்பட வேண்டும் என்கிற கொள்கையுடன் மரங்களை வெட்டுகிறோம். வெட்டப்படும் மரங்களைப் போல, இரண்டு மடங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். சில இடங்களில் ஆறு மடங்கு கன்றுகளைக்கூட நடுகிறோம். வருங்காலத்தில் பயன்படக்கூடிய வகையில் உற்பத்தியும் வளர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். குறிப்பாக, படாக் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கிலும் கன்றுகளை நடவு செய்கிறோம். மக்களின் தேவைகளுக்காக இஷ்டம்போல வெட்டிக் குவிப்பதில்லை. வெட்டப்பட்ட மரங்களை, மக்களின் தேவைகளுக்குப் பகிர்ந்தளிக்கிறோம்.
வனத்துறையின் மேற்பார்வையில்தான் மரங்கள் வெட்டப்படுகின்றன. அப்படி வெட்டப்படும் மரங்களை ஒன்று சேர்த்துக் கட்டி, நீர்ப்பரப்பில் இழுத்து வந்து, கரை சேர்த்து, கனரக வாகனங்களில் அடுக்கி ஆலைக்கு கொண்டு வருகிறோம். இங்கு அறுக்கப்படும் 23 வகை மரங்களில் 'அந்தமான் படாக்’ ரகத்தைதான் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். வீட்டுப் பயன்பாட்டுக்காக கதவு, ஜன்னல், மேசை, நாற்காலி, கட்டில் போன்றவற்றுக்கு இது, பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆலையில் ஒரு கன மீட்டர் 'படாக்’ சுமார் 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மெயின் லாண்டில் (இந்தியாவை அப்படித்தான் இங்கு குறிப்பிடுகின்றனர்) இங்கு விற்பதைப் போல மூன்று மடங்கு விலை அதிகம்'' என்று அழகாக விவரங்களை அடுக்கினார்.
நாம் ஆலைக்குள் நுழைந்தபோது... அறுக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, வகைவகையாக பிரிக்கப்பட்டு... என ஆங்கங்கே மலைக்குன்றுகள் போல குவிந்திருந்த மரங்களைப் பார்த்தபோது... 'என்ன இது, இப்படி மரங்களை வெட்டிக் குவிக்கிறார்களே...' என்பது உட்பட பலகேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால், ராஜ்குமாரிடம் பேசியபிறகு அத்தனை¬யும் விடைபெற்றன!

அந்தமான் யானைகள்!
அந்தமானில் யானைகள் கிடையாது. மரங்களை காடுகளில் இருந்து கொண்டு வருவதற்காக, 1906-ம் ஆண்டு, இந்தியாவிலிருந்து யானைகள் கொண்டுவரப்பட்டன. தற்போது, உச்ச நீதிமன்றம் ஆணை காரணமாக மரங்களை வெட்டுவதில் சில சிக்கல்கள் ஏற்படவே.... 'இன்டர்வியூ’ எனும் தீவில் யானைகள் சரணாலயம் அமைக்கப்பட்டு, அவை பராமரிக்கப்படுகின்றன. தற்போது 110 யானைகள் வரை அந்தக் காட்டில் வசிக்கின்றன.
முடக்கிய ஜப்பான் குண்டு!
இரண்டாம் உலகப் போரின்போது, அதாவது, 1942-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்த மர அறுவை ஆலையின் மீது ஜப்பானியர்கள் சரமாரி குண்டு மழை பொழிந்தனர். ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் கருகி இறந்ததோடு... கடல் கொந்தளித்து வெளிக்கிளம்பி, பாறைகளும் வெடித்துச் சிதறியிருக்கின்றன. இதனால் முற்றிலும் முடங்கிப்போன ஆலை, ஜப்பானியர்களிடம் இருந்து அந்தமான் மீட்கப்பட்ட 1946-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு... இன்று வரை தன் பணியைத் தொடர்கிறது.
அந்தமான் படாக்!
'டெரோகார்பஸ் டல்பர்ஜியோட்ஸ்' (pterocarpus dalbergiodes) எனும் தாவரவியல் பெயர் கொண்ட அந்தமான் படாக் மரத்துக்கு... அந்தமான் செம்மரம், கிழக்கிந்திய மகோகனி, செஞ்சிவப்பு மரம் என பல பெயர்கள் உண்டு. மென்மையான பிரௌன், பொன்னிறம், அடர் சிவப்பு பிரௌன், செறிவான சிவப்பு மற்றும் தீக்கொழுந்து சிவப்பு போன்ற நிறங்களில் இம்மரங்கள் உள்ளன. நாளடைவில் தண்ணீர்பட்டு பொலிவிழந்து போனாலும், லேசாக மெருகேற்றம் செய்தாலே பழைய பொலிவுக்கு வந்துவிடும் என்பதுதான் இம்மரத்தை மக்கள் பெரிதும் விரும்பக் காரணம்.

Earth Layers

 
It is a Miracle of the Quran and the Prophetic Tradition. We're going to see the compatibility between science and our religion….

Probing the depths of the Earth and taking pains to uncover the secrets of its internal structure and composition, scientists came to realize that the old myths about the Earth are scientifically baseless. Scientists in the twentieth century decided that the Earth consists of only three layers. Having discovered the sphericity of the Earth, they suggested that this sphere comprises three parts; the core, the crust which is very thin compared to the total volume of the Earth and a third layer in between the two called The Mantle.

Evolution of the scientific facts

However, the three-layer theory didn’t hold true for long, owing to recent discoveries in Geology. Measurements and recent tests showed that the pressure of the material of the Earth’s core is immense and reaches three million times the pressure at the surface.

Under such pressure the material transforms into the solid state, which means that the core of the Earth is solid and is enclosed by a liquid layer of extremely high temperature. This also means that the core of the Earth consists of 2 layers not just one; a solid inner core and a liquid upper core.

Measurement devices developed and scientists were able to observe a clear distinction between the different parts of the Earth’s interior. A layer of hot rocks underneath the crust was discovered, that is the Lithosphere. Underneath the Lithosphere are three layers distinct in density, pressure and temperature.

Having discovered these layers, scientists found themselves dividing the Earth into seven layers and no more. The Cut-away view below shows these layers drawn to scale according to the recent findings of scientists. The fact that the Earth comprises seven layers is established. It is taught at universities and observed through seismographs and through studying the magnetic field of the Earth.

Scientists also found out that the atom consists of seven layers which confirms the uniformity of the creation because the system that governs the creation of the whole universe is one, the earth consists of seven layers and each atom on it consists of seven layers too.

The figure demonstrates the seven layers of the Earth. We note the thin crust then the four layers of the Mantle increasing gradually in thickness. Next is the liquid outer core then the solid inner core. They all add up to seven layers.

The layers of the Earth are radically different in composition, density, temperature and material. Hence, the Earth can not be considered as one layer as was previously believed. The notion of the seven layers is relatively new and didn’t exist at the time the Quran was revealed. Scientists in the twenty-first century concluded that the Earth consists of seven layers, but what does the Quran have to say about that?

What the Quran says:

Telling of the seven layers of the Heavens and the Earth, God says in the Holy Quran:

1- "He (Allah) Who created the seven heavens one above the other" [Al Mulk: 3]

2- "Allah is He Who created seven heavens and the earth the like of them" [ Al Talaaq: 12]

The first verse is talking about two characteristics of the heavens; their number, that is seven, and the arrangement of them (one above the other) or ‘in layers’. The second verse asserts the similarity between the Earth and the heavens (And the Earth the like of them), so as the heavens consist of seven layers, the earth identically consists of seven layers.

Let’s ponder on (one above the other). It denotes the layering of the Earth, and this is what today’s scientists discovered. Now we can see that the Quran had determined the structure of the Earth, which is in layers, and had also determined the number of these layers, that is seven. In other words, the Quran had given a precise description of the earth’s interior, thus it preceded the scientists of the twenty-first century by fourteen centuries in proving this fact. Isn’t this a splendid miracle of the Quran?

What the Hadith says:

Pondering on the Hadith (sayings) of Prophet Muhammad (Peace and blessings of Allah be upon him), we’ll find one that asserts the existence of the seven layers of the earth concentric and one above the other. The prophet (PBUH) said: (Whoever usurps even one span of the land, his neck will be encircled because of it with seven earths) [narrated by Al Bukhari]. Here the prophet gave another characteristic of the layers, encirclement, by saying (will be encircled with it) and this is how the layers truly look like, they are concentric and each one encircles the one underneath it.

The question here is: Isn’t this a great miracle of the prophet? Not just that the Hadith determines the number of the earth’s layers, seven, and determines the arrangement of these layers, but it also bears an indication to the sphericity of the earth.

From this article we find that the Holy Quran and the Hadith reached these facts about the earth long before modern science did. The Quran had given us the precise description of the earth’s internal structure (layers one above the other) and also had given us the exact number of these layers, seven, while it took scientists long years of theorizing and re-theorizing to come up with the same conclusions. So exalted be Allah who said in His Holy Book : (And in the earth are portents for those whose faith is sure- and also in yourselves, can ye then not see) [Al Thariaat: 21-22].

உங்களுக்கு தொப்பையிருக்கா? அப்ப இதை படிங்க!



தொப்பை உள்ளவர்களுக்கு திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. சராசரி எடை இருப்பவர்களுக்கும் கூட தொப்பை ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்ணும் உணவானது உடல்முழுவதும் சீராக பரவினால் தப்பில்லை. ஆனால் ஒரே இடத்தில் வயிற்றுப் பகுதியில் மொத்தமாக தேங்கிவிடுவதால் சிக்கல் ஏற்படுகிறது.

வயிறும், இடுப்பும் சுற்றளவு அதிகமாக, அதிகமாக மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். எனவேதான் உடல் எடையை குறைக்க காட்டும் அக்கறையை தொப்பையை குறைக்கவும் காட்டுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

வயிறு கொழுப்பு அதிகமாவதால் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படுகிறது. இதனால் நீரிழிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு புரோஜெஸ்ட்ரோன் சுரப்பின் அளவு குறைகிறது. பெண்மைத் தன்மைக்கான ஹார்மோன் சுரப்பு குறைவதால் முகத்தில் முடி முளைக்கிறது. மலட்டுத்தன்மை, பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்சினை ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தொப்பை அதிகம் உள்ளவர்களுக்கு திடீர் மரணங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்குக் காரணம் கெட்ட கொழுப்புகள் அதிகமாக படிவதே காரணம் என்பது நிபுணர்களின் கருத்து. இது குறித்து National Health and Nutrition Examination Survey (NHANES III) ஆய்வாளர்கள் 12 ஆயிரத்து 785 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின் படி ஆண்,பெண்களில் பி.எம்.ஐ ரிப்போர்ட்படி தொப்பை இருந்த 2,562 பேருக்கு திடீர் மரணங்கள் ஏற்பட்டது தெரியவந்தது. அதேபோல் 1,138 பேருக்கு இதயம் தொடர்பான நோய் ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. சராசரி எடையோடு இருப்பவர்களைக் காட்டிலும் வயிற்றில் கொழுப்பு அதிகம் சேர்ந்தால் 2.75 சதவிகிதம் அளவிற்கு ஆபத்து அதிகம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எனவே உடல்பருமனை குறைக்கும் அதே நேரத்தில் வயிற்றில் தொப்பையை குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்

இன்று உலகில் மிகவும் பிரசத்தி பெற்ற குளிர் பானங்களில் கோகோ கோலாவும் ,பெப்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதுஎவ்வாறு ?.


இன்று உலகில் மிகவும் பிரசத்தி பெற்ற குளிர் பானங்களில் கோகோ கோலாவும் ,பெப்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் விற்பனையில் இதன் சிகரம் வானுயர எட்டிருக்கும் சாதனை எந்த குளிர்பானத்தினாலும் எட்டமுடியாத நிலையும், நெருங்கிட முடியாத நிலையும் அதிக வருமானமும் பெற்று பெரும் அந்தஸ்துடன் நிலைத்து நின்றுக்கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ் நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் (National Institute of Consumption) ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 19 விதம் விதமான கோக் பாட்டில்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் 10 பாட்டில்களில் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஒரு லிட்டர் பாட்டிலிலும் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலந்திருப்பதாக தெரிய வந்தது. இதேபோல பெப்சியிலும் ஆல்கஹால் இருக்கிறதாம். கோகோ கோலா, பெப்சி கோலா, கோகோ கோலா கிளசிக்ஸ், லைட் மற்றும் கொக் ஸீரோ உள்ளிட்ட பானங்களிலேயே ஆல்கஹால் சேர்ந்திருப்தாக தெரிவிக்கப்படுகிறது. கோரா மற்றும் மேன் யூ சோலர் உள்ளிட்ட சில பானங்களில் ஆல்கஹால் சேர்ந்திருக்கவில்லையெனவும் குறித்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த சோதனை முடிவுகளை '60 Million Consumer' என்ற பிரெஞ்சு Magazine, தனது சமீபத்திய பதிப்பில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கோகோ கோலாவின் பிரான்ஸ் பிரிவு அறிவியல் இயக்குநர் மைக்கேல் பெபின், கோக்கில் ஆல்கஹால் கலந்திருக்கிறது என்பதில் ஓரளவு உண்மைதான். இருப்பினும் இது மிக மிக மென்மையான அளவில்தான் இருக்கும் என்கிறார்.

இந்திய நாட்டில் இதன் குளிர்பான குடிப்பழக்கம் சற்றுக்குறைந்தாலும் அரபு நாடுகளிலே தினசரி வாழ்க்கையில் அங்கம் வகித்து நிலைப்பெற்று வருகிறது. ஆய்வின் முடிவுகளையடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் பெரும்பாலான முஸ்லிம்கள் கோலா பானங்களை அருந்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கோலாவில் சேர்க்கும் நச்சு கலந்த அமிலம் கேன்சரை உண்டு செய்யும், சிறுக சிறுக உள் எலும்புகளை அரித்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு பெப்சி, கோலா கூடிய கண்ணாடி அல்லது சில்வர் தம்ப்ளரில் சிறுத் துண்டு இரும்பை அதில் போட்டு இரண்டு நாட்கள் கழித்துப்பார்த்தால் நாம் பருகும் இந்த குளிர்பானம் அந்த இரும்பு துண்டை எந்த அளவுக்கு அரிப்பு செய்திருக்கிறது,அறிப்புத்தன்மையுடைய சக்தி எந்த அளவுக்கு உள்ளது என்பது நமக்கு தெளிவாகும் .

இந்தக் குளிர்பானகள் மனிதனை நோயை உருவாக்கி உயிரை மாய்க்க வந்த பேராயுதமாக காட்சியளித்தாலும், இதனை அறிந்தும் பருகாதவர்களே இல்லை என கூறும் அளவிற்கு பெரும்பாலும் இதனின் தாக்கம் அதிகரித்திருப்பது வேதனை அளிக்கிறது .

இனி கோகோ கோலா, பெப்சி போன்ற பானங்களை அருந்துவதில்லை என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு மோகத்தில் இதை அருந்துவதை தவிர்த்து உடல் நலம் பேணுவோமாக.


அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;
இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (2:195)

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்;
ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)


இன்னும் அவர்கள் தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள். (25:73).


மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

”நிச்சயமாக ஹலால் (அனுமதிக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டு விட்டது” ஹராம் (விலக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டுவிட்டது. இவை இரண்டிற்குமிடையில் சந்தேகத்திற்கிடமான பல உள்ளன. மக்களில் பெரும்பாலோர் இதைப் பற்றி அறியாமாட்டார்கள்.
எவர் சந்தேகத்திற்கிடமானதை விட்டுவிட்டாரோ அவர் தான் மார்க்கத்தையும், தன் மானத்தையும் காத்துக் கொண்டார். எவர் சந்தேகத்திற்கிடமானதில் விழுந்து விடுகிறாரோ அவர் ஹராமில் விழுந்து விடுகிறார்.
எப்படியென்றால் மேய்ப்பாளன் (தனது ஆடுகளை) வேலி வேயப்பட்ட வயல்களை சுற்றி மேய்க்கின்றான். அப்போது (அந்த ஆடுகள் வேலியைத் தாண்டி வயலில்) இறங்கி விடக் கூடும். அறிந்து கொள்ளுங்கள்! ஒவ்வோர் அரசனுக்கும் ஒரு வேலியுண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வினால் வேலி வேயப்பட்ட வயல்கள் அவனால் தடை செய்யப்பட்ட ஹராமான காரியங்களாகும். அறிந்து கொள்ளுங்கள்!
நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சரியாகிவிட்டால், உடல் முழுவதும் சரியாகி விடும். அது கெட்டுவிட்டால், உடல் முழுவதும் கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அது இதயமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவிக்கிறார். நுஃமான் இதைக் கூறும்போது தமது இரண்டு காதுகளின்பால் தமது இரண்டு விரல்களைக் கொண்டு சென்றார். (புகாரீ, முஸ்லிம்)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்...!

http://www.ndtv.com/article/world/coke-and-pepsi-contain-alcohol-claims-french-study-237145

http://www.dailymail.co.uk/news/article-2165422/Coke-Pepsi-contain-tiny-traces-alcohol-reveals-French-research.html

Wednesday, August 29, 2012

17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை



 
1. இருமல்-சளி நீங்க

இருமல், சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மருந்து. 2 வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10 மிளகு, ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டு ம். அதனுடன் 300 மில்லி நீர்விட்டு மூடிய பாத்திரத் தில் நன்றாக கொதிக்க வைத்து 75 மில்லி ஆனவுட ன் வடிகட்டி குடிக்க வேண்டும். இதேபோல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி, இருமல
் இருக்கும் வரை குடிக்கலாம். இப்படி செய்தால் உடனடி நிவார ணம் கிடைக்கும்.

2. ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி

சித்த மருந்துகடைகளில் கிடைக்கும் சுவாசகுடோரி மாத்திரை இர ண்டுடன் 2 மிளகும் சேர்த்து, அதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயில்போட்டு நன்கு மெல்லவேண்டும். தினம் 2 வேளை இவ்வாறு மென் றால் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி படிப்படியாக குணமாகும்.

3. காணாக்கடிக்கு

எந்த பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக் கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து, 200 மில்லி நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வர காணாக்கடி விரைவில் குணமாகும்.

4. உற்சாக உணர்விற்கு

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு தூண்டப்படுகிறது. அத்துடன், ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கி றது.

5. வாத நோய் நீங்க

வாத நோய்களை குணமாக்கும் “வாத நாராயணா” எண் ணெய் தயாரிப்பில் வெற்றிலை சாறும் ஒரு முக்கிய மூலப் பொருளாகும்.

6. தீப்புண் குணமாக

தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின்மீது பற்றாக போடவேண்டும். விரை வில் அந்த புண் குண மாகும்.

7. நுரையீரல் பலப்பட

வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற் றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந் து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

8. வயிற்றுவலி நீங்க

2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரை த்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக் கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மந்தம் குறையும்.

9. சர்க்கரையின் அளவு கட்டுப்பட

வெற்றிலை–4, வேப்பிலை – ஒரு கைப்பிடி , அருகம் புல் – ஒரு கை ப்பிடி. சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்றவை த்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.
10. விஷக்கடி குணமாக
உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமா ன வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றி லையில் நல்ல மிளகு வைத்துமென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

11. இருமல் குறைய

வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பி ட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.

12. அஜீரணக் கோளாறு அகல

வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகுசேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந் தால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியா மை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழு ங்கி வந்தால் அஜீரணக் கோளாறு கள் நீங்கும்.

13. தோல் வியாதிக்கு

100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றி லையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்த வுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.

14. தலைவலி நீங்க

வெற்றிலைக்கு மயக்கத்தைப்போக்கும் குண முண்டு. மூன்று வெற்றிலைகளை எடு த்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன் றாக குழைத்து, நெற்றிப்பகுதியில் பற்று போ ட்டால் தலைவலி பறந்துபோகும்.

15. தீப்புண் ஆற

தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

16. அல்சர்

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலை யுடன் அத்தி இலை 1 கைப் பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையை ச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

17. தேள் விஷம்

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென் று விழுங்கி தேங்காய்துண்டுகள் சிலவற்றினை யும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

குஜராத் கலவர வழக்கு: விஎச்பி தலைவர் பஜ்ரங்கி, மோடி அமைச்சர் மாயா கோட்னானி உள்பட 32 பேர் குற்றவாளிகள்


 
குஜராத் மாநிலத்தில் 2008ம் ஆண்டு, நரோடா பாடியாவில் நடந்த கொடும் இனவெறி கலவரம் தொடர்பான வழக்கில் முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என அகமதாபாத் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ஏளது. 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கோத்ராவில் நடந்த ரயில் எரிப்புக்குப் பின்னர் குஜராத் மாநிலத்தில் இந்து அமைப்புகள் பெரும் வன்முறையில் இறங்கின. ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவத்தில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடந்தது. அதற்கு முதல் நாளில்தான் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டது.

28ம் தேதி பந்த் நடத்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அன்றைய தினம், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் நரோடா பாடியா என்ற இடத்தில் பெரும் திரளான விஎச்பி தொண்டர்கள் கூடினர். அவர்கள் பயங்கர வன்முறை வெறியாட்டத்தில் குதித்னர். கண்ணில் பட்ட முஸ்லீம்களையெல்லாம் வேட்டையாடினர். இதில் 97 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் 33 பேர் படுகாயமடைந்தனர்.

இதுதொடர்பான வழக்கு அகமதாபாத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதை விசாரித்த கூடுதல் முதன்மை மாவட்ட நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தீர்ப்பை ஜூன் 30ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் விஎச்பி தலைவர் பாபு பஜ்ரங்கி, நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். அதேசமயம், 29 பேரை விடுவித்து அவர் உத்தரவிட்டார்.

மாயா கோத்னானி தற்போதும் பாஜக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை தொடங்கியது. மொத்தம் 70 பேர் மீது குற்றம சாட்டப்பட்டது. அதில் விஜய் ஷெட்டி உள்ளிட்ட 7 பேர் விசாரணைக் காலத்திலேயே இறந்து விட்டனர்.

மொத்தம் 327 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அதில் முக்கியமானவர் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கெய்தான். முதலில் 46 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் 24 பேரை எஸ்ஐடி சிறப்புப் படையினர் கைது செய்தனர்.

இவர்களில் ஜாமீனில் வெளிவந்த மோகன் நேபாளி மற்றும் தேஜாஸ் பதக் ஆகிய இருவரும் தப்பி விட்டனர். இன்னும் இவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் வன்முறையிலேயே ஒரே இடத்தில் அதிக அளவிலான பேர் கொல்லப்பட்டது இந்த நரோடா பாடியாவில்தான் என்பது வேதனைக்குரியது.

face bookஇல் அதிக லைக்குகள் வாங்கிய புகைப்படங்கள்

face bookஇல் அதிக லைக்குகள் வாங்கிய புகைப்படங்கள்

விமானம் எப்படி பறக்கிறது? – அறிவியல் விளக்கம்!

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்.
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு:
  • ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் – Lift
  • முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
  • கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
  • பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்
விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும் விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்
சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின், அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று.
இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான்.
அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது) விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும் பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான்.
இது சற்று சுவாரஸ்யமானது ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேலிகிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்.
உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது.
அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக?
இங்குதான் விஷயம் உள்ளது. காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்) விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்.
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும் இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது.
(எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

நீயா நானா கோபிநாத்தும் அவர்மீதான குற்றச்சாட்டுக்களும்

நீயா நானா கோபிநாத்தும் அவர்மீதான குற்றச்சாட்டுக்களும்

பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, இரண்டுமுறை கர்ப்பம், கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு (முழுவிவரங்களுடன்)

பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, இரண்டுமுறை கர்ப்பம், கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு (முழுவிவரங்களுடன்)

மனிதக் கரங்களால் மாசுபட்ட பைபிள் - ஒரு சரித்திர ஆய்வு

மனிதக் கரங்களால் மாசுபட்ட பைபிள் - ஒரு சரித்திர ஆய்வு
.
மூலம்: M.M. அக்பர் .....................................தமிழில்: தேங்கை முனீப், பஹ்ரைன்

இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தை வழிநடத்திய இறைதூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட இறைவசனங்களின் தாக்கத்தை உட்கொண்ட ஒரு நூலே பைபிள் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. இறைவசனங்களும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களும் வரலாற்றாசிரிய
ர்களின் அபிப்பிராயங்களும் புரோகிதக் கருத்துக்களும் சேர்ந்த ஒரு கலவையே பைபிள். தீர்க்கதரிசிகளின் வாழ்க்கைப் புராணங்கள் பைபிளின் முதுகெலும்பு எனலாம். இந்த வாழ்க்கைப் புராணங்களின் மேல் புரோகிதக் கருத்துக்களைப் பொதிந்து உருவாக்கப்பட்டதே இன்று நடைமுறையில் உள்ள பைபிள் என்று கூறினால் வியப்படையத் தேவையில்லை.

பைபிளில் காணப்படும் பல வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் திருக்குர்ஆனில் உள்ள தகவல்களை ஒப்ப அமைந்திருப்பதைக் காணலாம். பைபிளில் காணப்படும் அத்தகைய தகவல்கள் இறைவசனங்கள், கண்ணால் கண்ட காட்சிகள் மற்றும் பிறர் கூறக் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிற்கால எழுத்தாளர்களால் பதிவுசெய்யப்பட்டவை ஆகும். புரோகிதர்களின் மனித அபிப்பிராயங்கள் பைபிளில் மலிந்து காணப்படுவதால் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களும், அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களும் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள் இதிலிருந்து முற்றிலும் வேறபட்டுள்ளது. அது அருளப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை எந்த மனிதக் கரங்களாலும் மாசுபடாமல் அதன் பரிசுத்தத் தன்மையிலேயே நிலைத்திருக்கின்றது. எனவே அது கூறும் வரலாற்றுத் தகவல்கள் முற்றிலும் உண்மையானவையகவும் முரண்பாடுகளற்றவையாகவும் பரிபூரணத் தன்மை வாய்ந்ததாகவும் நிலைத்து நிற்கின்றன. எனவே திருக்குர்ஆனில் எந்த முரண்பாடுகளையும் விமர்சகர்களால் கூறமுடியாது. அவ்வாறு விமர்சித்தாலும் சான்றுகளின் துணையோடு அவற்றை நிரூபிக்க இயலாது என்பதே உண்மை.

இறைவசனங்களின் தாக்கம் உள்ள பைபிளிலும் இறைவசனங்களை மட்டுமே கொண்ட திருக்குர்ஆனிலும் வரலாற்றுத் தகவல்கள் அடிப்படையில் ஒன்றாகத் தோன்றினாலும் அவற்றை விளக்கும் தொனியில் இரண்டிற்கு மத்தியிலும் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தகைய வேறுபாடுகள் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதை உண்மைப் படுத்துவதோடு பைபிள் மனிதக் கற்பனைகளின் கலவை என்பதையும் நிரூபிக்கின்றன. சில உதாரணங்களைக் கொண்டு இதனை நிரூபிப்போம்.

1. இறைக் கொள்கை மற்றும் இறைவனைப் பற்றிய தகவல்கள்.

திருக்குர்ஆனில் இறைவனைக் குறித்துக் கூறப்படும் தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. ஆனால் பைபிளில் பல இடங்களிலும் இறைவனின் மகத்துவத்திற்குக் களங்கம் ஏற்படும் வகையில் கருத்துக்கள் அமைந்துள்ளன. யஹோவாவின் பகத்துவம் பற்றிக் கூறினாலும் இஸ்ரவேலிய இனஉணர்வின் தாக்கங்கள் வரும் இடங்களில் இறைவனின் மகத்துவத்தைச் சிறுமைப் படுத்தும் விதத்தில் கருத்துக்கள் காணப்படுகின்றன.

உதாரணமாக ஆதியாகமம் 1:26 மனிதனை தனது சாயலில் இறைவன் உருவாக்கினான் என்று கூறி மனிதனுக்கு இறைவனை ஒப்பாக்கி தரம் தாழ்த்துகின்றது.

ஆதியாகமம் 2:23 கடவுள் ஓய்வு எடுத்தார் என்ற தகவலைக் கூறி களைப்பும் ஓய்வும் உடைய இறைவனை பைபிள் அறிமுகப்படுத்துகின்றது.

ஆதியாகமம் 3:8 முதல் 13 வரை ஏதேன் தோட்டத்தில் ஒளிந்துகொண்ட ஆதாமையும் ஏவாளையும் கடவுள் தேடி அலைந்தார் என்று கூறி முற்றிலும் பரிபூரணமடைந்த அவனது ஞானத்தைக் களங்கப்படுத்துகின்றது.

தான் செய்து விட்ட காரியத்திற்காக வருத்தப்படும் கடவுள் என்ற ஆதியாகமம் 6:6ல் கூறப்பட்டுள்ள தகவல் பின்விளைவை அறியாதவனாக இறைவனைச் சிறுமைப் படுத்துகின்றது.

தான் முனரே தீர்மானித்து உறுதிப்படுத்திய ஒரு காரியத்தைச் செய்யாமல் மனம் மாறிவிட்ட தெய்வத்தைப் பற்றி யாத்திராகமம் 32:14 கூறுகின்றது.

இஸ்ரவேல் இனத்தின் பிதாவாகிய யாக்கோபுடன் மல்யுத்தம் நடத்தி இறைவன் தோற்றுவிட்டதாக ஆதியாகமம் 32:28 கூறுகின்றது. மேலும் இஸ்ரவேல் இனஉணர்வின் ஆதிக்கம் பைபிளில் மேலோங்கியுள்ளது என்பதற்கு மேற்படி வசனம் ஒரு சான்றாகும்.

ஆனால் திருக்குர்ஆனில் இப்பேரண்டத்தின் படைப்பாளனும் ஆட்சியாளனும் ஆகிய அல்லாஹ்வைப் பற்றி எடுத்துக் கூறும் இடங்களில் அவனது மகத்துவத்திற்கோ வல்லமைக்கோ களங்கம் கற்பிக்கும் எந்தக் குறிப்புகளும் இல்லை. மாறாக இறைவனைக் குறித்த தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதுடன் அவற்றைப் படிப்பவர்களின் இறைநம்பிக்கையையும் பயபக்தியையும் அதிகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. அல்லாஹ்வாகிய அவ்விறைவன் அரபிகளுக்கு மட்டும் உள்ள இறைவனாகத் திருக்குர்ஆன் அவனைக் குறித்து அறிமுகப்படுத்தவில்லை. திருக்குர்ஆன் அறிமுகப்படுத்தும் இறைவன் அரபிகளையும் அரபியல்லாதவரையும் இன நிற வேறுபாடின்றி அனைவரையும் படைத்தவன்இ அகில உலகத்தாரின் இரட்சகன்.


சில வசனங்கள்:

அல்லாஹ் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் உயிரோடிருப்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனை சிறுதுயிலோஇ உறக்கமோ பீடிக்கா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியது. (அல்குர்ஆன் 2:255)

இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும் உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6:3)

வானங்களையும் பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான் அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல்குர்ஆன் 42:11)

நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்குர்ஆன் 112: 1-4)

2. தீர்க்கதரிசிகளின் வரலாறு

வரலாற்றுத் தகவல்களைப் பொறுத்தவரை விவரிக்கும் விதம் தெய்வீகத் தன்மை ஆகியவற்றில் பைபிளும் திருக்குர்ஆனும் முற்றிலும் வேறுபடுகின்றது. முதலாவதாக ஆதிபிதாவாகிய ஆதமுடைய வரலாற்றைப் பற்றி பைபிள் மற்றும் திருக்குர்ஆன் தரும் தகவல்களைக் காண்போம்.

1. ஆதமிடமும் அவரது மனைவியிடமும் உண்ணக் கூடாது என்று விலக்கப்பட்ட கனியானது நன்மை தீமை குறித்து அறிவிக்கக் கூடிய கனி என்று பைபிள் கூறுகின்றது. (ஆதியாகாமம் 2:17)

பைபிளின் கூற்றுப்படி விலக்கப்பட்ட கனியைப் புசித்ததன் காரணமாகவே மனிதனுக்கு நன்மை தீமைகளைப் பற்றிய அறிவு கிடைக்கின்றது. (ஆதியாகமம் 3:6,7 மற்றும் 3:22) (கனியைப் புசிப்பதற்கு முன் நன்மை தீமைகளைப் பிரித்தறியாத நிலையில் இருந்த மனிதனிடம் விலக்கப்பட்ட கனியைப் புசிக்க வேண்டாம் என்று எவ்வாறு கட்டளையிட முடியும்? ஏவல் விலக்கல்களெல்லாம் நன்மை தீமையைக் குறித்து அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதல்லவா உண்மை? இதன் காரணமாகவே விலங்கினங்களிடம் ஏவல் விலக்கல்கள் செல்லுபடியாவதில்லை என்பதை கவனத்தில் கொள்க.)

ஆனால் திருக்குர்ஆன் விலக்கப்பட்ட கனியைக்குறித்து பேசும் இடத்தில் அது நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் அறிவின் கனி என்று குறிப்பிடவில்லை.

நன்மை புரிந்து உயர்நிலை அடையக்கூடிய அல்லது தீமை புரிந்து இழிநிலை அடையக்கூடிய நிலை இயற்கையாகவே மனுதனின் படைப்பில் அமைந்துள்ளது என்ற உண்மையை திருக்குர்ஆன் எடுத்தியம்புகின்றது. நன்மை தீமைகளைக் குறித்த அறிவு விலக்கப்பட்ட கனியைப் புசிப்பதற்கு முன்னரே இறைவனால் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு அதனால் ஒவ்வொரு பொருளையும் பிரித்தறிந்து அதன் தன்மைகளுக்கு ஏற்ப பெயரிட்டு அழைக்கக் கூடிய ஒரு உன்னதமான ஒரு படைப்பாகவே திருக்குர்ஆன் மனிதனை அறிமுகப்படுத்துகின்றது.(அல்குர்ஆன் 2:30-33) விலக்கப்பட்ட கனியையும் நன்மை தீமைகளைப் பிரித்தறிதலையும் எந்த இடத்திலும் திருக்குர்ஆன் சம்மந்தப்படுத்தவே இல்லை.

2. விலக்கப்பட்ட கனியைப் பற்றிய இறைவனின் கட்டளையை பைபிள் எடுத்துக் கூறும்போது '' அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'' (ஆதியாகமம் 2:17) என்று ஆதமிடம் கர்த்தர் கூறியதாகக் குறிப்பிடுகின்றது. ஆனால் இறைக் கட்டளைக்கு மாறு செய்யத் தூண்டிய சர்ப்பமோ ''நீங்கள் நன்மை தீமையை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்று (ஆதியாகமம் 3:5) கூறியது. அவவாறு விலக்கப்பட்ட கனியை உண்டபோது ஆதம் சாகவில்லை. மாறாக சர்ப்பம் கூறியது போன்று நடந்தது. (பார்க்க. ஆதியாகமம்: 3:6,7 & 3:22)

இறைவன் பொய் கூறி ஆதமை பயமுறுத்தினான் என்றும் பாம்பு ஆதமுக்கு உண்மையை எடுத்துக் கூறியது என்றும் இக்கதை மூலம் விளங்க முடிகின்றது. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் கதைகள் திருக்குர்ஆனில் இல்லை.

3. நன்மை தீமைகளைப் பகுத்துணரும் அறிவு தரும் கனியைப் புசித்த மனிதனைப் பற்றிய அச்சத்தால் மனிதன் தன்னைப் போல் ஆகாதிருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் பலவீனமானவனாக இறைவனை பைபிள் காட்டுகின்றது. (ஆதியாகமம் 3:22)

விலக்கப்பட்ட கனியைப் புசித்தன் காரணமாக இறைதன்மை மனிதனிடம் ஊடுருவி விட்டதாக எந்த இடத்திலும் திருக்குர்ஆன் கூறவில்லை. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் இக் கதைகளை விட்டும் திருக்குர்ஆன் பரிசுத்தமானது!

4. விலக்கப்பட்ட கனியை உண்ணுமாறு மனிதனைத் தூண்டியது பாம்பு (சர்ப்பம்) என்று பைபிள் கூறுகின்றது. (ஆதியாகமம் 3:1-5 & 3:13) இதன் காரணமாகவே பாம்பு இறைவனின் சாபத்துக்கு ஆளாகியது என்றும், அச்சாபத்தின் காரணமாகவே அது தன் வயிற்றினால் (ஊர்ந்து) சஞ்சரிக்கிறது என்றும், அதன் காரணமாகவே மனிதனுக்கும் பாம்புக்கும் பகை ஏற்பட்டது என்றும் பைபிள் கூறுகின்றது. (ஆதியாகமம் 2:35, 36)

ஆனால் திருக்குர்ஆனோ மனிதனை வழிகெடுத்து அவனைச் சுவனத்திலிருந்து வெளியேற்றியவன் ஷைத்தான் என்று கூறுகிறது. (அல்குர்ஆன் 2:35, 36) இச்சம்பவத்தைப் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிட்டுக்காட்டும் எந்த இடத்திலும் பாம்பைப் பற்றிய தகவல் இல்லை.

இறைசாபத்தின் காரயமாகவே பாம்பு வயிற்றினால் ஊர்கின்றது என்பதும் அச்சாபத்தின் காரணமாகவே அது மனிதனால் வெறுக்கப்பட்டது என்பதுவும் உண்மையாயின் இறைசாபத்துக்கு முன் உள்ள பாம்பு எந்த நிலையில் இருந்தது ? கால்களால் நடந்து சென்றதா ? மனிதனால் விரும்பப்பட்டதா? இது குறித்த எந்த விளக்கமும் பைபிளில் இல்லை.

5. விலக்கப்பட்ட கனியை உண்டதோடு அதனை உண்ணத் தூண்டியவள் பெண், இதன் காரணமாக அவள் இறைவனால் சபிக்கப்பட்டு அச்சாபத்தின் காரணமாகவே பெண்ணுக்கு கற்பகால சிரமங்களும் பிரசவ வேதனையும் ஏற்படுகின்றது என்று பைபிள் (ஆதியாகமம் 3:16) கூறுகின்றது. இன்றுவரை தாய்மார்கள் அனுபவித்து வரும் கற்பகால சிரமங்களுக்கும் பிரசவவேதனைக்கும் ஆதிமாதாவின் பாவம் காரணமாம் ? (அப்படியாயின் மனிதனல்லாத இதர ஜீவிகள் அனுபவிக்கும் பிரசவ வேதனைக்கு யார் செய்த பாவம் காரணமாம்?)

தாய்மார்களுக்கு ஏற்படும் பிரசவ வேதனை பாவத்திற்காக வழங்கப்பட்ட தண்டனை என்று திருக்குர்ஆன் கூறவில்லை. மாறாக அதனை ஓர் அருட்கொடையாகவே குறிப்பிடுகின்றது. தாயின் தியாகத்துக்கு எடுத்துக்காட்டாக அச்சம்பவத்தைக் குறிப்பிடுகின்றது. (அல்குர்ஆன் 29:8, 46:15, 31:14) இதன் காரணமாகவே மனிதன் தனது தாய்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் எனவும் கட்டளையிடுகின்றது.

விலக்கப்பட்ட கனியையும் கற்ப காலசிரமங்கள் மற்றும் பிரசவ வேதனையையும் திருக்குர்ஆன் எந்த இடத்திலும் சம்மந்தப்படுத்தவே இல்லை.

6. மனிதனுடைய உழைப்பு, பொருளீட்டல், விவசாயம் போன்றவை எல்லாம் விலக்கப்பட்ட கனியை உண்டதன் காரணமாக ஏற்பட்ட சாபம் என்று பைபிள் (ஆதியாகமம் 3:18, 19) ஆனால் திருக்குர்ஆன் உழைப்பு, பொருளீட்டல் எல்லாம் மனிதனின் திறமையை வெளிப்படுத்தும் அருட்கொடை என்று கூறுகின்றது. (அல்குர்ஆன் 62:10) (இதன் காரணமாகவே குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கி ஒரு ஆண்மகனை கண்ணியப்படுத்துகின்றது (அல்குர்ஆன் 4:34)) மனிதனின் கடின உழைப்பையும் முயற்சியையும் எந்த இடத்திலும் விலக்கப்பட்ட கனியுடன் திருக்குர்ஆன் தொடர்பு படுத்தவில்லை.

7. விலக்கப்பட்ட கனியை உண்ட ஆதமும் ஹவ்வாவும் பாவமன்னிப்புக் கோரியதாகவோ இறைவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கியதாகவோ எந்தத் தகவலும் பைபிளில் இல்லை. ஆனால் திருக்குர்ஆன் ஆதி மாதா பிதாக்கள் இருவரின் மனமுருகிய பிரார்த்தனையையும் பாவமன்னிப்புக் கோரலையும்இ அவர்களுக்கு மன்னிப்பு வழங்கிய இறைவனின் மகத்தான கருணையையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார் ; (இன்னும் அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும் கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)

அதற்கு அவர்கள்; '' எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 7:23)

கொண்டு செல்ல எதுவும் இல்லை உலகில்.. முடிந்த வரை கொடுத்துவிட்டு செல்வோம் உண்மையான அன்பை....



Prophet Muhammad, peace be upon him, feared for his nation from surplus more than he feared from poverty:

“By Allah, it is not poverty about which I fear for you, but I fear in your case that (the worldly) riches may be given to you as were given to those who had gone before you, and that you begin to vie

with one another for them as they vied for them, and that they may destroy you as they destroyed them.” (Al-Bukhari)

Yet, he realized that poverty is quite a great trial. Therefore, he used to supplicate to Allah:

“O Allah, I seek refuge in You from disbelief and poverty.” (Abu-Dawud)

“Steady us in our faith, and protect us from poverty.” (Muslim)

Because the Prophet realized the severity of the crisis of poverty and its attenuating impact on people, he supported the poor and even lived amongst them. His life was not that different from the lives of the poor. Our Mother Aisha Ummah, may Allah be pleased with her, narrated:

“The family of Muhammad did not eat their fill for three successive days till he died.”
(Al-Bukhari)


He treated He treated the poor with mercy and kindness, and he used to give them whatever he could, although he, himself, was poor. He also used to teach his companions to have mercy upon the poor as well. Consider his kind, sweet words:

“O son of Adam! It is better for you if you spend your surplus (wealth), but if you withhold it, it is evil for you. There is (however) no reproach for you (if you withhold the essentials) for a living. And begin (charity) with your dependants; and the upper hand is better than the lower hand.” (Muslim)

He also said:

“If anyone gives as sadaqa (charity) the equivalent of a date from that (earning) earned honestly, for Allah accepts that which is lawful, the Lord would accept it with His Right Hand, and even if it is a date, it would foster in the Hand of the lord, as one of you fosters his colt, till it becomes bigger than a mountain.” (Al-Bukhari)

Nothing is more delighting to me than this that Uhud should be of gold for me, and no dinar is left with me out of it before three nights pass except a dinar which I would set aside for the repayment of debt upon me.” (Al-Bukhari)

The Prophet's MercyThe Prophet was always keen to help the poor by giving them what he had, and when he could not find anything, he would ask his companions to help


The Madinan society was generally poor, and therefore, to list all incidences and narrations that demonstrate the Prophet's mercy is impossible. Yet, we are trying to clarify the picture by giving examples, and those who seek more detail can refer to the Sunnah.

Consider what the Prophet had taught Abu-Dharr, may Allah be pleased with him, although Abu-Dharr was very poor:

“Abu-Dharr, when you prepare the broth, add water to it and invite your neighbor over.” (Muslim)

He also used to teach women to give their neighbors:

“O Muslim women, none of you should consider even a sheep's trotter too insignificant to give to her neighbor.” (Al-Bukhari)

He wanted every individual in the society to care for others and to help them as much as they could afford.

One day, Jabir ibn-Abdullah, may Allah be pleased with him, invited the Prophet to eat with him at his house. Although the Prophet was starving, he did not want to go alone. He took some of the Muhajirin (immigrants from Makkah) and the Ansar (residents of Madinah) along with him, and miraculously, the little amount of food available at Jabir's house became enough to satisfy all those who attended. (Al-Bukhari)

Abu-Talha, may Allah be pleased with him, also invited the Prophet to eat and the Prophet did the same thing; he took along all the people present in the mosque at the time, and again, a miracle happened and everyone was satisfied.

Jareer ibn-Abdullah, may Allah be pleased with him narrated:

“Some desert Arabs clad in wool clothes came to Allah's Messenger. He saw them in sad plight as they had been hard pressed by need. He (the Prophet) exhorted people to give charity, but they showed some reluctance until (signs) of anger were seen on his face. Then a person from the Ansar came with a purse containing silver. Then came another person and then other persons followed them in succession until signs of happiness were seen on his face. Thereupon Allah's Messenger said:

He who introduced some good practice in Islam which would be followed after him (by people) he would be assured of reward like one who followed it, without their rewards being diminished in any respect. And he who introduced some evil practice in Islam which would be followed subsequently (by others), he would be required to bear the burden like that of the one who followed this (evil practice) without their being diminished in any respect.” (Muslim)

The Prophet was always keen to help the poor by giving them what he had, and when he could not find anything, he would ask his companions to help, not to leave a poor man without help.

The Generous HostsThis was how mercy was so evident in Madinah at the time of the Prophet, peace be upon him, who never stopped giving despite his continuous suffering.


Abu-Huraira narrated:

“A person came to Allah's Messenger (peace be upon him) and said, ‘I am hard pressed by hunger.’

The Prophet (peace be upon him) sent a message to one of his wives (to procure food for him) but she said,

‘By Him Who has sent you with Truth, there is nothing with me (to serve him) but only water.’ He then sent the (same) message to another, and she gave the same reply, until all of them gave the same reply. The Prophet then said, ‘Allah would show mercy to him who will entertain this guest tonight’

A person from the Ansar stood up and said, ‘Messenger of Allah, I am ready to entertain him.’

He took him to his house and said to his wife, ‘Is there anything with you (to serve the guest)?’ She said, ‘No, but only sustenance for our children.’ He said, ‘Distract their attention with something, and when the guest enters extinguish the lamp and give him the impression that we are eating.’ So they sat down, and the guest had his meal. When it was morning he went to Allah's Messenger (peace be upon him) who said,

‘Allah was well pleased with what you both did for your guest this night.’”
This was how mercy was so evident in Madinah at the time of the Prophet, peace be upon him, who never stopped giving despite his continuous suffering.

Sahl ibn-Saad narrated:

“A woman brought a woven Burda (sheet) having edging (border) to the Prophet. Then Sahl asked them whether they knew what is Burda, they said that Burda is a cloak and Sahl confirmed their reply. Then the woman said, ‘I have woven it with my own hands and I have brought it so that you may wear it.’ The Prophet accepted it, and at that time he was in need of it. So he came out wearing it as his waist-sheet. A man praised it and said, ‘Will you give it to me? How nice it is!’ The other people said, ‘You have not done the right thing as the Prophet is in need of it and you have asked for it when you know that he never turns down anybody's request.’ The man replied, ‘By Allah, I have not asked for it to wear it but to make it my shroud.’ Later it was his shroud.”

The Prophet always considered giving to be better than keeping, and consequently, he continuously gave. Among the best descriptions of his merciful attitude is what Lady Aisha narrated:

“We slaughtered a sheep and gave away most of it. I told the Prophet only a small piece was left. He then said in all his wisdom, ‘All of it is remaining (through charity) but that piece’”

Such was his life and his mercy!

Out of the Poverty Trap he was keen on teaching the poor the importance of working to fulfill one's own needs


It should not be perceived that by the Prophet’s giving and encouraging his companions to give would mean that he would accept that the poor may continue to ask for help for the rest of their lives. On the contrary he was keen on teaching the poor the importance of working to fulfill one's own needs. He wanted them to avoid the disgrace of asking and begging and enjoy the sweetness of giving.

Anas ibn-Malek, may Allah be pleased with him, narrated:

“A man from the Ansar came to ask the Prophet (peace be upon him) for charity. The Prophet asked about what he has at home, and the man said that he has some fabric which they use to wear sometimes and other times to sit on. The Prophet instructed him to bring it over. Then he asked if any of his companions would like to purchase the fabric. A man offered to buy it for one Dirham. The Prophet asked for a higher price, until a man offered two Dirhams for it.

The Prophet took the money and gave it to the poor man. The Prophet told him to buy food for his family with one Dirham and to use the other to buy and axe-head and bring it back to him. The Prophet then tied a hand to the axe-head and asked the man to use it in cutting wood, then selling it. And so the man went to cut wood and began to sell it. He collected ten Dirhams which he used for food and clothes.

The Prophet said to the man, ‘This is better than asking for charity which you will be asked about on the Day of Judgment. Asking charity is permissible for only three cases; extreme poverty, paying off a large fine, or for paying blood-money in case of killing someone by mistake.’”

The Prophet's mercy upon the poor was for their own good and welfare and to help them attain true happiness. He did not only aim to feed them temporarily, but also to teach them, raise their spirits, and broaden their minds.

He wanted their welfare in this worldly life and in the hereafter as his approach was truly balanced and comprehensive; a sign of a true Prophet!

It was the Prophet’s humility, mercy and kindness that Allah spoke about: “And in no way have We sent you except as a mercy to the worlds.” (Al-Anbiya’, 21:107).

கதையல்ல நிஜம் – காஷ்மீரில் ஒரு தீவிரவாதி உருவான கதை!

கதையல்ல நிஜம் – காஷ்மீரில் ஒரு தீவிரவாதி உருவான கதை!அண்ணனை தீவிரவாதியாக சித்தரிப்பதற்காக ராணுவத்திடம் 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்து கையெறி குண்டு வாங்கி அவனது கடையில் வைத்தார் காசுமீர் மாநிலத்தின் எல்லைப்புற நகரான ரஜோரியைச் சேர்ந்த அவுரங்கசீப்.


கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஜம்மு காசுமீரிலுள்ள எல்லைப்புற மாவட்டமான ரஜோரியில் உள்ள டர்ஹாலி பாலத்திற்கருகில் உள்ள கடை ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் அவசர அவசர

மாக வெளியே வந்தார். ரோந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தவுடன் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். சிறிது நேரத்தில் சவுதிக்கு போய் நன்றாக சம்பாதித்து வந்துள்ள தனது அண்ணன் முகமது இக்பாலுக்கும், தனக்கும் ஏற்பட்ட சமீபத்திய தகராறால் கோபமடைந்த தான் பழிவாங்குவதற்காக அவனது கடையில் கையெறி குண்டு வைத்துவிட்டு திரும்புவதாக ஒத்துக்கொண்டார்.

ஏற்கெனவே நகர காவல்துறை அலுவலகத்திற்கு கடையை சோதனை போட்டால் தீவிரவாதியை பிடிக்கலாம் என்ற ரேஞ்சுக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துவிட்டுத்தான் வந்திருந்தார் அவுரங்கசீப். முகமது இக்பாலை அழைத்துக் கொண்டு அவரது கடைக்கு வந்த போலீசாருக்கு அவுரங்கசீப் தான் குற்றவாளி எனத் தெரிந்ததால் மேற்கொண்டு அவரை விசாரித்தனர்.

குடும்பச் சண்டைக்கு அண்ணனை பழிவாங்க நினைத்த அவுரங்கசீப் ராணுவ வேலைகளுக்கு அடிக்கடி ஒப்பந்த டெம்போ ஓட்டுநராக போய்வரும் தனது ஊரைச் சேர்ந்த முகமது ரசீதிடம் யோசனை கேட்டாராம். அவர் போலீசு கான்ஸ்டபிளான அப்துல் ராபின் மற்றும் எல்லைப்புற பாதுகாப்புப் படை ஜவான் முகமது ஹனீப் ஆகியோரிடம் அறிமுகப்படுத்தினார். ஈத் பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த அவர்கள் இருவரும் ரூ.5000 வாங்கிக் கொண்டு கையெறி குண்டை தந்திருக்கிறார்கள். தற்போது நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2000-ல் கிளிண்டனிடம் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை காட்டுவதற்காக காசுமீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்களை படுகொலை செய்த ராணுவம், அதனை நடத்தியவர்கள் என பத்ரிபால் கிராமத்தை சேர்ந்த 5 ஆடு மேய்ப்பவர்களைக் கொன்றதை நாடே அறியும். அதற்கு நீதிகேட்டு காசுமீர மக்கள் 2000 ஏப் 3-ல் அனந்தநாக் நகரில் நடத்திய போராட்டத்தில் 9 பேரை சுட்டுக் கொன்றது போலீசு. சமீபத்தில் உச்சநீதி மன்றம் இப்போலி மோதலை தான் விசாரிப்பதை விட ராணுவ கோர்ட் விசாரிப்பதுதான் சரி என வழக்கை கைவிட்டது. அநேகமாக அந்த வழக்கை ஊத்தி மூடிவிடுவார்கள். இப்போதும் ராணுவ வீரர் ஒருவர் போலி தீவிரவாதியை சித்தரிக்க முயன்ற குற்றத்துக்காக கைதாகி இருக்கிறார். ராணுவ நீதிமன்றத்தில் இதற்கெல்லாம் பெரிய தண்டனை எதுவும் கிடைத்து விடாது.

ஒருவேளை ரோந்து போலீசார் வருவதற்கு முன்னரே அவுரங்கசீப் கடையை விட்டு வெளியேறி இருந்தால் முகமது இக்பால் ஒரு தீவிரவாதியாகி இருப்பார். அப்சல் குருவுக்கு 2005-ல் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றமே குற்றம் சாட்டப்பட்டவர் தீவிவாத இயக்கத்தில் இல்லாவிட்டாலும், நேரடி சாட்சியம் இல்லாவிட்டாலும், சந்தர்ப்ப சாட்சியம் அவருக்கு எதிராக இருப்பதாலும், சமூகத்தின் ஒட்டுமொத்த மனச்சாட்சிக்கு சமாதானம் அளிப்பதற்காகவும் மரண தண்டனை தருவதாக ஒத்துக்கொண்டது. கடைசியில் இக்பால் எனும் தீவிரவாதி அப்சல்குரு போலல்லாமல் மயிரிழையில் செத்துப் பிழைத்திருக்கிறார்.

Sunday, August 26, 2012

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் மறைவு

 
கிருத்துவ ஆண்டு 632 ஜுன் மாதம் 8ஆம் நாள் தமது 63ம் வயதில் அல்லாஹ்வின் இறைத்தூதர் அவர்கள் இவ்வுலக வாழ்வை விட்டு பிரிந்து சென்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் வைத்துதான் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் வஃபாத்தானார்கள். அதே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். மதினாவில் மஸ்ஜிது நபவி பள்ளியை ஒட்டியுள்ள இந
்த இடத்தில்தான் பெருமானார் அடக்கஸ்தலம் இருக்கிறது. அபுபக்கர் சித்தீக், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மண்ணறைகள் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் மண்ணறைக்கு பக்கத்தில் தான் இருக்கிறது.



பெருமானாரின் காலம் முதல் இன்று வரையிலும் மதீனாவில் உள்ள ஒரு பொது அடக்கஸ்தலம்தான் இது. இதில்தான் பெருமானாரின் மனைவியரும், நபிதோழர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கிருத்துவ ஆண்டு 570ல் ஏப்ரல் மாதத்தில் மக்காவில் அப்துல்லாஹ் ஆமினாவிற்க்கு மகனாக பிறந்து சிறுவயதிலேயே அனாதையாக வளர்ந்து எழுதப் படிக்க அறியாமலும் உண்மையாளன் என்று எதிரிகளாலும் போற்றப்பட்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் தமது நாற்பது வயது வரையிலும் இவ்வுலகத்திற்க்கு எவ்வித அற்புதத்தையும் எடுத்துக் கூறவில்லை. நாற்பது வயதிற்க்கு பிறகு தனக்கு அல்லாஹ்விடமிருந்து தமக்கு கிடைத்தாக எடுத்தறிவித்த வாசகங்களின் வரலாற்று சம்பந்தமான உண்மை ஆதாரங்களைத்தான் நாம் இதுவரையிலும் பார்த்தோம்.

திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.

“ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு”

இந்தியாவின் கிறித்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்தை அளிக்கும் கேரளாவில் அண்மையில் வெளிவந்த ஒரு புத்தகம் கிறித்தவ உலகில் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. “ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு” என்ற அந்த நூல், 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்து பின்னர் சபையிலிருந்து விலகிய ஜெஸ்மி என்ற 53 வயது சகோதரியால் எழுதப்பட்டது.

காங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃப் கார்மெல் எனும் கன்னியாஸ்திரி சபையில் சகோதரியாகப் பணியாற்றிய ஜெஸ்மி, ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, கடைசியாக திருச்சூரில் இருக்கும் பிரபலமான விமலா கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். 35 இலட்சம் உறுப்பினர்களுடன் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய, பணக்கார கத்தோலிக்க சர்ச்சான ஸிரோ மலபார் சர்ச்சால்தான் விமலா கல்லூரி நடத்தப்படுகின்றது. இச்சபையில் இருக்க

ும் முறைகேடுகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததால் ஜெஸ்மிக்கு பைத்தியகார பட்டம் சூட்டி தனிமைப்படுத்த நினைத்த தலைமைப் பாதிரியார்களின் சதியை முறியடிக்கும் வண்ணம் அவர் இந்த சுய வரலாற்று நூலை எழுதியிருக்கின்றார்.

இந்நூலில் சகோதரிகளிடம் நிலவும் ஒரினச்சேர்க்கை, முக்கியமாக தலைமைப் பொறுப்பிலிருக்கும் சகோதரிகள் புதிய இளைய சகோதரிகளைத் தமது ஓரினப் பாலியல் இச்சைக்கு மிரட்டிப் பணியவைப்பது, ஆண் பாதிரியார்களும் புதிய சகோதரிகளைத் தமது அதிகார வலிமையால் பாலியல் வன்முறை செய்வது, இவற்றை எதிர்த்து வரும் குரல்களை சர்ச்சின் கௌரவம்தான் முக்கியமானது என்று புறந்தள்ளுவது என அனைத்தையும், தன் சொந்த அனுவபங்களோடு ஜெஸ்மி பகிர்ந்து கொள்கிறார். மேலும் பண விசயங்களில் நடக்கும் முறைகேடுகளையும், ஊழல்களையும் சேர்த்தே அம்பலப்படுத்துகின்றார். பத்திரிகைகள் பலவும் இந்நூலில் உள்ள செக்ஸ் பிரச்சினைகளை மட்டும் செய்தியாக்கி இருக்கின்றன. வெளிவந்த ஒரே மாதத்தில் மூன்று பதிப்புக்களைக் கண்ட இந்நூல் கேரளத்தில் ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றது.

கிறிஸ்துவர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்... இதுதான் இன்றைய கிறித்தவப் பாதிரியார்களின் நிலை.. இதை நாம் அந்த பாதிரி மார்களிடம் கேட்டால் எங்களது பைபிளில் எங்களுக்கு அனுமதி அளித்ததை தானே நாங்கள் செய்கிறோம் என்று சொல்லி விடுவார்கள்.... இப்படியும் ஒரு பாதிரியார்கள் 

எதிர்க்குரல்: பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்க...

எதிர்க்குரல்: பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்க...: நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்... பெங்களூர் மாநகரம்.  1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோ...

A Chronology of Women Pilots and Women's Flight History




 
1784 - Elisabeth Thible becomes the first woman to fly - in a hot air balloon
1798 - Jeanne Labrosse is the first woman to solo in a balloon
1809 - Marie Madeleine Sopie Blanchard becomes the first woman to lose her life while flying - she was watching fireworks in her hydrogen balloon
1880 - July 4 - Mary Myers is the first American woman to solo in a baloon
1903 - Aida de Acosta is the first woman to solo in a dirigible
1906 - E. Lillian Todd is the first woman to design and build an airplane, though it never flew
1908 - Madame Therese Peltier is the first woman to fly an airplane solo
1910 - Baroness Raymonde de Laroche obtains a license from the Aero Club of France, the first woman licensed in the world
1910 - September 2 - Blanche Stuart Scott, without permission or knowledge of Glenn Curtiss, the airplane's owner and builder, removes a small wood wedge and is able to get the airplane airborne -- without any flying lessons -- thus becoming the first American woman to pilot an airplane
1910 - October 13 - Bessica Raiche's flight qualifies her, for some, as the first woman pilot in America -- because some discount the flight of Scott as accidental and therefore deny her this credit
1910 - Baroness Raymonde de la Roche becomes the first woman in the world to earn her pilot's license
1911 - August 11 - Harriet Quimby becomes the first American woman licensed pilot
1911 - September 4 - Harriet Quimby becomes the first woman to fly at night
1912 - April 16 - Harriet Quimby becomes the first woman to pilot her own aircraft across the English Channel
1913 - Alys McKey Bryant is the first woman pilot in Canada
1916 - Ruth Law sets two American records flying from Chicago to New York
1918 - The US postmaster general approves the appointment of Marjorie Stinson as the first female airmail pilot
1919 - Ruth Law becomes the first person to fly air mail in the Phillipines
1921 - Adrienne Bolland is the first woman to fly over the Andes
1921 - Bessie Coleman becomes the first African American, male or female, to earn a pilot's license
1922 - Lillian Gatlin is the first woman to fly across America as a passenger
1928 - June 17 - Amelia Earhart is the first woman to fly across the Atlantic -- Lou Gordon and Wilmer Stultz did most of the flying
1929 - August - first Women's Air Derby is held, and Louise Thaden wins, Gladys O'Donnell takes second place and Amelia Earhart takes third
1929 - Florence Lowe Barnes - Pancho Barnes - becomes the first woman stunt pilot in motion pictures (in"Hell's Angels")
1929 - Amelia Earhart becomes the first president of the Ninety-Nines, an organization of women pilots.
1930 - May 5-24 - Amy Johnson becomes the first woman to fly solo from England to Australia
1930 - Anne Morrow Lindbergh becomes the first woman to earn a glider pilot license
1931 - Ruth Nichols fails in her attempt to fly solo across the Atlantic, but she breaks the world distance record flying from California to Kentucky
1931 - Katherine Cheung becomes the first woman of Chinese ancestry to earn a pilot's license
1932 - May 20-21 - Amelia Earhart is the first woman to fly solo across the Atlantic
1932 - Ruthy Tu becomes first woman pilot in the Chinese Army
1934 - Helen Richey becomes the first woman pilot hired by a regularly schedule airline, Central Airlines
1934 - Jean Batten is the first woman to fly round trip England to Australia
1935 - January 11-23 - Amelia Earhart is the first person to fly solo from Hawaii to the American mainland
1936 - Beryl Markham becomes the first woman to fly across the Atlantic east to west
1936 - Louise Thaden and Blance Noyes beat male pilots also entered in the Bendix Trophy Race, the first victory of women over men in a race in which both men and women could enter
1937 - July 2 - Amelia Earhart lost over Pacific
1938 - Hanna Reitsch becomes the first woman to fly a helicopter and the first woman to be licensed as a helicopter pilot
1939 - Willa Brown, first African American commercial pilot and first African American woman officer in the Civil Air Patrol, helps form the National Airmen's Association of America to help open up the U.S. Armed Forces to African American men
1939 - January 5 - Amelia Earhart declared legally dead
1939 - September 15 - Jacqueline Cochran sets an international speed record; the same year, she is the first woman to make a blind landing
1941 - July 1 - Jacqueline Cochrane is the first woman to ferry a bomber across the Atlantic
1941 - Marina Raskova appointed by Soviet Union high command to organize regiments of women pilots
1942 - Nancy Harkness Love and Jackie Cochran organize women flying units and training detachment
1943 - Women make up more than 30% of the work force in the aviation industry
1943 - Love's and Cochran's units are merged into the Women Airforce Service Pilots and Jackie Cochran becomes the Director of Women Pilots -- WASPs flew more than 60 million miles before the program ended in December 1944, with only 38 lives lost of 1830 volunteers and 1074 graduates -- these pilots were seen as civilians and were only recognized as military personnel in 1977
1945 - Melitta Schiller is awarded the Iron Cross and Military Flight Badge in Germany
1953 - Jacqueline (Jackie) Cochran becomes first woman to break the sound barrier
1964 - March 19 - Geraldine (Jerrie) Mock is the first woman to pilot a plane around the world
1973 - January 29 - Emily Howell Warner is the first woman working as a pilot for a commercial airline (Frontier Airlines)
1973 - U.S.
Sponsored Links
Learn To Fly Better Here
Be the Pilot you know you can be. Fly at a World Class Flight School.
www.AttitudeAviation.com

Aviation Job
Choose From 100000+ of Airline Jobs Get Your Dream Job Here. Start Now!
Naukri.com
Yash Air - Pilot Training
World class living and learning enviorment in India
www.yashair.com

Navy announces pilot training for women
1974 - Mary Barr becomes the first woman pilot with the Forest Service
1974 - June 4 - Sally Murphy is the first woman to qualify as an aviator with the U.S. Army
1977 - November - Congress passes a bill recognizing WASP pilots of World War II as military personnel, and President Jimmy Carter signs the bill into law
1978 - International Society of Women Airline pilots formed
1994 - Vicki Van Meter is the youngest pilot (to that date) to fly across the Atlantic in a Cessna 210 - she is 12 years old at the time of the flight
1994 - April 21 - Jackie Parker becomes the first woman to qualify to fly an F-16 combat plane
1995 - In the same month, Beverly Burns becomes the first woman to captain a 747 cross country, and Lynn Rippelmeyer becomes the first woman to captain a 747 across the Atlantic
2001 - Polly Vacher becomes the first woman to fly around the world in a small plane - she flies from England to England on a route that includes Australia