Digital Time and Date

Welcome Note

Saturday, August 18, 2012

நபி வழியில் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)



நபி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு (sports day) ஆக்கிக்கொண்டனர். இதனை செவியுற்ற நபி நீங்கள் ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தேர்வு செய்துள்ளான், அதில் ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள் என்றா
ர்கள். இந்த நபி மொழியை மாலிக்(ரலி) அறிவிக்க அபூதாவூத், பைஹகீ, நஸயீ என்ற நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.


பெருநாள் தொழுகையின் நேரங்கள்

ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகிறான். அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்: இப்னு அஸாகிர்

இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபி தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாக ஆகும். அறிவிப்பாளர்: ஜுன்துப்(ரலி) நூல்: அஹ்மது இப்னுஹஸன்


நோன்புப் பெருநாளில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது.

நபி அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ

சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நபி அவர்கள் ஈதுல் பித்ர் (நோன்பு) பெருநாளன்று காலையில் ஏழு பேரித்தம் பழங்களை சாப்பிடாமல் வெளியேற மாட்டார்கள் அறிவிப்பாளர்: ஜாபிர்பின் சம்ரா(ரலி) நூல்: தப்ரானி

மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) புகாரி


தக்பீர்

ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டும் தக்பீரைக் கொண்டும் அழகு படுத்துங்கள். அறிவிப்பாளர்: அனஸ்பின் மாலிக்(ரலி) ஆதாரம்: நயீம்

ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகைக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது தக்பீர் சொன்னவர்களாகப் புறப்படுவார்கள். தொழும் இடம் (முஸல்லா) வரும் வரை தக்பீர் சொல்வார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: ஹாகிம் சுனன்பைஹகீ, இப்னு அஸாகீர்.

பெருநாள் வந்துவிட்டால் நபி அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். புகாரி

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள். இப்னு உமர்(ரலி), புகாரி

நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி தொழுவார்கள். இப்னு உமர்(ரலி), புகாரி


திடலில் பெருநாள் தொழுகை

பெரும்பாலும் நபி அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

நபி அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அபூ ஸயீத்(ரலி), புகாரி


பெருநாள்களில் பாங்கு இகாமத் சொல்லப்பட்டதில்லை

ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. புகாரி

நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி

பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக்கொள்ள, பெண்கள்
தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். நான், நபி அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். புகாரி

நபி அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். இப்னு உமர்(ரலி), புகாரி



பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தத் தொழுகையும் இல்லை

நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி

நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி


முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும்

நபி அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா

''நோன்புப் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீரும் உள்ளது. அவை இரண்டிற்கும் பின்னரும் கிராஅத் (குர்ஆனை ஓதுதல்) உண்டு'' என நபி அவர்கள் கூறினார்கள் என அம்ரு இப்னு ஷுஐப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். புகாரி, திர்மிதீ


பெருநாள் தொழுகைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும்

நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி

வீட்டில் தனித்து இருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இரு பெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம். தொழுகையில் கலந்து கொள்ளவும், பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்காவது உடை இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்கு நபி அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஓர் உடையை கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என பதில் கூறினர். அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி, இப்னுமாஜ்ஜா

நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கைமீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி

நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி


ஓதிய வசனங்கள்

நபி அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (87வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (88வது அத்தியாயத்தையும்) ஓதி வந்தனர். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வரும்பொழுது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) நூமான் இப்னு பஷீர், நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ

50வது அத்தியாயத்தையும் 54வது அத்தியாயத்தையும் ஓதியதாக ஓர் அறிவிப்பு முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பிரார்த்தனை

பருவமடைந்த மற்றும் மாதவிடாய் பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு வெளியே அனுப்புமாறு நபி அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களுடைய துஆவில் அவர்கள் பங்கு பெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்தின் ஓரப்பகுதியில் இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

கட்டாயம் பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வர நபி அவர்கள் ஆனையிட்டிருக்க மாதவிடாய் கண்ணிப்பெண்கள் முதற்கொண்டு அனைவரும் பெருநாளின் பொது தொழுகையின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதித்து இருக்க நாம் தமிழகத்தில் அவர்களை அனுமதிக்காமலிருப்பது நபி அவர்களின் ஆணைக்கு கட்டுப்படாமையைக் குறிக்கும் என்பதை உணரலாம்.

நாம் பெண்களை தொழுமிடத்திற்கு வராமல் தடுப்பதால்தான் தங்களது போக்கிடமாக அவர்கள் சினிமாக்களையும், தர்ஹாக்களையும் தேடி ஓடுகிறார்கள். அல்லாஹ் நம்மனைவரின் அமல்களை அவனுக்கு உகப்பானதாக ஆக்கி வைப்பானாக! நபி அவர்கள் காட்டிய வழியில் செயல்பட தவ்பீக் தந்தருள்வானாக! ஆமீன்.

Reference By : http://www.readislam.net/

Join our Islamic Dawah Group: http://www.facebook.com/groups/islamicdawah1/

Join with us : http://www.facebook.com/CuddaloreMuslimFriend/likes

Join via Mobile : http://m.facebook.com/a/profile.php?fan&id=330540656965013&gfid=AQBUn7a3fLJdzZtd

உண்மையான காரணங்கள் என்ன

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன் ?
நூலாசிரியர்: பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள.


 
உண்மையான காரணங்கள் என்ன
அப்படியானால் எந்த நோக்கத்தில் இவ்வளவு திருமணங்கள் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்குரிய வரம்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஏன் தளர்த்தப் பட வேண்டும்? என்பதை இனி காண்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சராசரி மனிதர்கலில் ஒருவராக இருக்கவில்லை. சாதாரண தலைவர்களில் ஒருவராகவும் இருக்க வில்லை. மாறாக அல்லாஹ்வின் திருத்தூதராக தம்மை அறிமுகப்படுத்தினார்கள். அதுவும் இறுதித் தூதர் எனப் பிரகடனப்படுத்தினார்கள். தம்மைத் தூதர் எனப் பிரகடனம் செய்தது முதல் உலக முடிவு நாள் வரை அவர்கள் தாம் இறைத்தூதர். உலக முடிவு நாள் வரை தோன்றக் கூடிய எல்லா மாந்தர்களுக்கும் அவர்களே வழிகாட்டியாகவும், அழகிய முன்மாதிரியாகவும் திகழ வேண்டியவர்களாக இருந்தார்கள்.

இறைத்தூதர் எனும் இவ்வுயர் பதவி மற்ற பதவிகளைப் போன்றதல்ல. இப்பதவியை அடைந்தவர் தம் வாழ்க்கையைப் பரிசுத்தமாக அமைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தாக வேண்டிய மகத்தான பொறுப்பு அப்பதவிக்கு உரியவருக்கு ஏற்பட்டு விடுகிறது.

அவர்களின் வாழ்க்கை பரிசுத்தமானது; அப்பழுக்கற்றது என்று உலகின் முன் நிரூபிக்கப்பட்டாக வேண்டும். கலங்கமற்ற அந்த வாழ்க்கையில் சந்தேகத்தின் சாயல் கூட படியாததாகவும் இருக்க வேண்டும். அவரது வாழ்வை எந்தக் கோணத்தில் இருந்து ஆராய்ந்தாலும் அதன் தூய்மை பளிச்சிட வேண்டும். அப்போது தான் இறைத்தூதர் என்று அவரை ஏற்க முடியும். ஏற்கனவே ஏற்றவர்களின் நம்பிக்கை மேலும் உறுதியடைய முடியும்.

ஒரு மனிதனின் வாழ்க்கையை அளந்து பார்க்கின்ற சரியான அளவு கோள் அவனது இல்லற வாழ்க்கை தான். வெளி உலகில் நல்லவனாக எவரும் நடித்திட முடியும். புனிதனாக, புன்னிய ஆத்மாவாக, திருவாளர் பரிசுத்தமாக,ஒழுக்க சீலனாக, குணக்குன்றாக, வள்ளலாக இன்னும் இது போன்ற எந்த வேடத்தையும் ஏற்று உலக மேடையில் நடித்து விடலாம். எல்லா வேடத்தையும் ஏற்றுக் கூட ஒருவன் திறம்பட நடித்து விட முடியும். மக்கள் அதை உண்மையென்று நம்பிவிடவும் முடியும். ஆனாலும் வீட்டில் அவனால் நடிக்க முடியாது. அவனது வாழ்க்கையிலும் பங்காளியாகத் திகழும் மணைவியின் முன்னே அவனது சுயரூபம் நிச்சயம் வெளிப்பட்டு விடும்.

ஒவ்வொரு பெண்ணும் தம் கணவன் பரிசுத்த ஆத்மா தானா? அல்லது பகல் வேஷக் காரண் தானா? என்பதைத் தெளிவாக அறிந்தே வைத்திருக்கிறாள். ஆனாலும் மிகப் பொரும்பாலான மனைவியர் தம் கணவனின் அந்தரங்க வாழ்வைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தாலும் அதை அம்பலப்படுத்த மாட்டார்கள். தனது வாழ்க்கை அவனுடன் பின்னிப் பினைந்துள்ளதாலும் அவனைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலைமை நிலவுவதாலும் கணவனின் கபட நாடகத்தை வெளி உலகுக்கு அம்பலப்படுத்த மாட்டாள்.

ஒரே ஒரு சமயத்தில் மட்டுமே பெண்கள் தம் கணவரின் பலவீனங்களை அம்பலப்படுத்தத் துணிகின்றனர். தனக்குப் போட்டியாக தன் கணவன் மற்றொருத்தியை மணந்து கொள்ளும் போது தான் கணவனின் அந்தரங்க வாழ்க்கை மனைவியால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும். பரவலாக இதை நாம் காண்கிறோம். பெண்களின் இயல்பை அறிந்தவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.

இரண்டு மனைவியரைப் பெற்று விட்டாலே ஒருவனது சாயம் வெளுத்துப் போய்விடும் என்றால் இரண்டுக்கு மேல் பல மணைவியரை அடைந்தவன் தன் நாடகத்தை தொடர்ந்து நடத்த முடியாது. பல்வேறு வயதினராகவும்,பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் பல மணைவியரைப் பெற்று விட்டால் அவனது உண்மை சுயரூபம் வெளிப்பட்டே ஆகும்.

நல்லவனாக வெளி உலகுக்குத் தெரிகின்ற ஒரு மணிதன் உண்மையிலேயே நல்லவன் தானா? என்பதைச் சோதித்து அறிய அவனுக்கு இரண்டு மணைவியர் இருந்து இருவருமே அவனைப் பற்றி நற்சான்று தந்து விடுவது மிகச் சிறந்த ஆதாரமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையையும், நேர்மையையும், நல்லொழுக்கத்தையும் உலக மக்களுக்கு போதனை செய்தார்கள். இவையெல்லாம் உண்மையிலேயே அவர்களிடம் இருந்தனவா? என்பதை நிரூபித்துக் காட்ட அவர்களின் பலதார மனம் மிகச் சிறந்த அளவு கோளாகும்.

பல திருமணங்கள் செய்ய இறைவன் அவர்களுக்கு மட்டுமே அனுமதியளித்து அத்தனை பேரிடமும் நல்லவராகவும் நடக்கச் செய்து அவர்களிடம் இரண்டு வாழ்க்கை இருந்ததில்லை என்பதை நிரூபித்துக் காட்டினான்.

பல்வேறு வயதினராகவும், பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் அவர்களின் மனைவியர் இருந்தனர். எல்லா பெண்களுக்கிடையிலும் ஏற்படக் கூடிய சக்களத்தி சன்டைகள் அவர்களுக்கிடையேயும் நடந்ததுண்டு. அவர்களுக்குள்ளே தான் அந்தச் சண்டைகள் நடந்தனவே அன்றி அல்லாஹ்வின் தூதர் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யப்பட்டதே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைவரிடமும் சமமான முறையில் நடந்து கொண்டாலும் அவர்களையும் மீறி ஆயிஷா (ரலி) என்ற ஒரு மனைவி மீது மட்டும் அதிக அன்பு செலுத்தினார்கள். இதனால் மற்ற மணைவியருக்கு ஆயிஷா மேல் பொறாமை இருந்தது. அப்படி இருந்தும் கூட அவர்களின் அந்தரங்க வாழ்வில் எந்தக் குறையும் இருந்ததாக அவர்கள் விமர்சிக்கவில்லை. விமர்சனம் செய்ய முடியாத அளவுக்கு பரிசுத்த வாழ்க்கையாக அவர்களின் வாழ்க்கை இருந்தது.

ஸைனப் பின் ஜஹ்ஷ் (ரலி) எனும் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பருகுவதற்காக தேன் சேகரித்துக் கொடுப்பார்கள். அதை அருந்துவதற்காக அடிக்கடி அந்த மனைவியிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று வருவார்கள். ஆயிஷாவுக்கும், ஹப்ஸாவுக்கும் இது பொறாமையாக இருந்ததுண்டு. ஆனாலும் இதன் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றி குறைவாக எதையும் அவர்கள் பேசினார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அவர்களால் குறை காண முடியாதவாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.

இறையச்சம் பற்றி வெளி உலகுக்குப் போதனை செய்து விட்டு வீட்டிற்கு வந்தால் அந்த இறையச்சத்திற்கு செயல் வடிவம் கொடுக்க நல்லிறவில் இறைவனை வணங்க ஆரம்பித்து விடுவதைக் கண்ட பின் அவர்கள் எப்படி நபியவர்களைக் குறை கூற முடியும்?

இம்மையின் நிலையாமை பற்றி போதித்து விட்டு வீட்டுக்கு வந்தால் அதைச் செயல் படுத்தும் விதமாக பல சமயங்கள் பட்டினியோடும், பல சமயங்களில் காய்ந்த ரொட்டியுடனும் இரவு பொழுதைக் கழித்த உண்மையான வாழ்வை அவர்களால் விமர்சிக்க முடியுமா என்ன?

ஆடம்பரங்களை வெறுத்து ஒதுக்குமாறு மக்களுக்குச் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து, கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கி கயிற்றின் வரிகள் அவர்களின் முதுகில் ஆழமாகப் பதிந்ததைக் கண்ட பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வை அவர்களால் குறை கூற முடிந்திருக்குமா?

மதீனத்து மாமன்னராக ஆன பின்பும், அவர்களின் குடிசையில் செல்வங்கள் வந்து குவிக்கப்பட்ட பின்பும் அவற்றை மக்களுக்கு விநியோகிக்காமல் உறங்க மறுத்த கண்களுக்கு சொந்தக் காரரிடம் என்ன குறை கண்டிருப்பார்கள்?

பொறுமை, அடக்கம் பற்றியெல்லாம் மக்களுக்குப் போதனை செய்து விட்டு, தன்னை விட பலவீனமாக உள்ள மனைவியடம் கூட இந்தப் பொறுமையைக் கடைப் பிடித்து பண்பாடுகளில் சிகரமாகத் திகழ்ந்த அந்த உயர்ந்த மனிதரிடம் என்ன குறையை அவர்கள் கண்டு பிடிக்க முடியும்?

கடுஞ்சொல் கூறாத, கை நீட்டி அடிக்காத மனைவியரின் வீட்டு வேலைகளிலும் ஒத்தாசை செய்த அந்த உத்தமரிடம் குறை காண்பார்களா என்ன?

உங்களில் சிறந்தவர் யார் எனில் தம் குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடப்பவரே! நான் உங்களை விட குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடக்கிறேன் என்று கூறிய அந்த மாமனிதரை அவர் சொன்னது போலவே நடக்கக் கண்டவர்கள் அவரின் மனைவியர் தான். அதனால் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய அந்த நற்பண்புகள் பற்றி அவர்களின் மனைவியரே வெளி உலகுக்குச் சொல்ல முடிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குணம் எவ்வாறு இருந்தது? என்று கேட்ட போது குர்ஆன் ஆகவே அவர்களின் குணம் இருந்தது என்று அந்த மனைவியரால் பதிலளிக்க முடிந்ததும் இதனால் தான்.

அவர் போதிக்கின்ற குர்ஆனில் கூறப்படுகின்ற எல்லாப் பண்புகளும் அவரால் கடைப் பிடிக்கப் பட்டன என்று அவரது மனைவியரே சான்று பகரும் அளவுக்கு சொல்லுக்கும் நடத்தைக்கும் வித்தியாசம் காட்டாதவர் அவர்.

ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்தால் தன் கணவரைப் பற்றி இப்படிக் கூறி விடலாம். பல மனைவியரைப் பெற்றும் அவர்கள் அனைவருமே இப்படிக் கூற முடிந்தது என்றால் அவரிடம் இரட்டை வாழ்க்கை இருந்தது கிடையாது என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.

எந்தப் பரீட்சையில் அனைவரும் தோற்று விடுவார்களோ அந்தப் பரீட்சை தான் நபியவர்களுக்கு பல திருமணங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி. அந்தப் பரீட்சை அவர்களின் தூய வாழ்வை நிரூபித்துக் காட்ட அவசியமாகவும் இருந்தது. அவர்களால் அதில் தேறவும் முடிந்தது.

அவர்களைத் தவிற மற்றவர்களுக்கு இந்தப் பரீட்சை தேவையுமில்லை. அவர்களால் இதில் தேறவும் முடியாது.

ஒரு கணவன் பல மணைவியரைப் பெற்று அவர்களைச் செல்வ செழிப்பில் வைத்திருக்கும் போது வேண்டுமானால் அவனது அந்தரங்க வாழ்க்கை மனைவியரால் அம்பலப்படுத்தப் படாமல் மறைக்கப்படலாம்.

இம்மாமனிதரைக் கணவராகப் பெற்றவர்களோ வறுமையையும் சேர்த்தே பெற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு மிகவும் நெருக்கமான மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் முஹம்மதின் குடும்பத்தினர் தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிராற உண்டதில்லை என்றார்கள்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிறு நிறைய உண்ணக் கூட வழி இல்லாமல் தான் அவர்களின் மனைவியர் இருந்தார்கள். உணவுக்கே இக்கதி என்றால் ஏனைய வசதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

கட்டிய கணவரால் வேளாவேளைக்குச் சோறு போட முடியாத போதும், அவர் பல மனைவியரை மணந்து தங்கள் இல்லற சுகத்திலும் குறைவு வைத்த போதும், மற்றவர்களுக்கு இல்லாத கட்டுப் பாடுகள் இவர்களுக்கு விதிக்கப்பட்ட போதும் இவர்களுக்கு இடையே பூசல்கள் ஏற்பட்ட போதும், நபியவர்களின் வாழ்க்கை விமர்சிக்கப்பட முடியாத தூரத்தில் இருந்தது.

எந்த மனிதனும் வாழ்ந்து காட்ட முடியாத பரிசுத்த வாழ்வுக்கு அவர் சொந்தக்கார்ர் என்று நிரூபிக்க நபியவர்கள் பல திருமணங்களைச் செய்து காட்ட வேண்டியிருந்தது. இது மட்டுமே காரணம் அல்ல இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம்.

இறைவனது தூதர்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் இடையே ஏறாளமான வித்தியாசங்கள் உள்ளன. அரசியல் தலைவர்களாகட்டும்! குறிப்பிட்ட துறையில் காணப்படும் தவறுகளைக் களையெடுக்கும் இயக்கங்களின் தலைவர்கள் ஆகட்டும்! இவர்கள் மக்களுக்குக் கட்டளை இடுபவர்களாகவோ, குறிப்பிட்ட சில விஷயங்களைப் பிரச்சாரம் செய்பவர்களாகவோ மட்டும் இருப்பார்கள். அப்படி இருந்தால் போதும் என்று தான் மக்களும் விரும்புகிறார்கள்.

அரசியல் தலைவர்கள் என்றால் அவர்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடியவர்களாகவும், மக்களின் உயிர் உடமை, கற்பு போன்றவற்றை பாதுகாப்பவர்களாகவும், நாட்டில் அமைதியை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற அளவுக்குத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். (அரசியல் வாதிகள் அப்படி நடந்து கொள்வதில்லை என்பது தனி விஷயம்.)


இந்த அரசியல் தலைவரிடம் போய் எவற்றை உண்ணலாம், எவற்றை உண்ணக் கூடாது என்றோ எவற்றை விற்கலாம்? எவற்றை விற்கக் கூடாது என்றோ, எத்தகைய உறவுகளை மணக்கலாம்? எவரை மணக்கலாகாது என்றோ கேட்க முடியாது. இல்லறத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளுக்கோ, பெற்றோரிடமும்,மற்றவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டிய முறைகளுக்கோ இன்ன பிற துறைகளுக்கோ வழிகாட்டுதலைப் பெற முடியாது.


எந்தத் துறையைச் சார்ந்த தலைவர்களது நிலையும் இதுவே ஆகும். ஆனால் இறைத்தூதர்கள் எனப்படுவோரின் நிலை இவ்வாறானதன்று.


இறைத் தூதர்கள் என்போர் சிறந்த அரசியல் தலைவராகத் திகழ வேண்டும். தமது பிரஜைகளின் பாதுகாப்புக்கு உறுதி செய்பவராக இருக்க வேண்டும். உலகத்தில் எத்துனை துறைகள் உள்ளனவோ அத்துனை துறைகளிலும் சரியான வழி இது தவறான வழி இது என்பதை கற்றுத் தருபவராக இருக்க வேண்டும்.


பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரையிலும், உறங்கி எழுந்ததிலிருந்து மீண்டும் உறங்கும் வரையிலும் மனிதனது எல்லாப் பிரச்சினைகளுக்கும் வழிகாட்ட இறைத் தூதர் கடமைப்பட்டவர் ஆகின்றார். அவரது வாழ்க்கை ஒழிவு மறைவின்றி திறந்த புத்தகமாக மக்கள் முன்னிலையில் வைக்கப்பட வேண்டும். அவருடைய போதனைகள் மட்டுமின்றி அவரது நடத்தைகளும் கூட பின்பற்றப்படத் தக்கதாக இருக்க வேண்டும்.


அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது என்று திருக்குர்ஆன் கூறுவதும்,என்னிடமிருந்து சிறிய விஷயம் உங்களுக்குத் தெரிந்தாலும் அதைப் பிறருக்கு அறிவித்து விடுங்கள் என நபியவர்கள் கூறியிருப்பதும் இதனை நமக்கு விளக்கிடப் போதுமானதாகும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியவை, செய்து காட்டியவை, அவர்கள் முன்னிலையில் மற்றவர் ஒரு காரியத்தைச் செய்யும்போது நபியவர்களால் அங்கீகரிக்கப் பட்டவை யாவும் யுக முடிவு நாள் வரையிலும் தோன்றக்கூடிய மக்களைச் சென்றடைய வேண்டியுள்ளது. பொதுவாகவே எல்லா இறைத்தூதர்களின் போதனைகளும், அவர்களின் முழு வாழ்க்கையும் மக்களிடம் வைக்கப்பட வேண்டும் என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதிக் தூதர் என்பதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வெளியே நடந்து கொண்ட முறைகளையும், வீட்டுக்கு வெளியே செய்த போதனைகளையும் அவர்களின் அன்புத் தோழர்கள் மிகவும் உண்ணிப்பாக கவனித்து அடுத்த தலைமுறையினருக்கு அந்தச் செய்திகளை எட்டச் செய்தார்கள்.


இந்தப் பணியைச் செய்ய பல்லாயிரக் கணக்காண அவர்களின் தோழர்கள் தம் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டார்கள்.


ஆனால் அவர்கள் வீட்டுக்குள்ளே நடத்திய வாழ்க்கையை வீட்டாரிடம் நடந்து கொண்ட முறைகளை, வீட்டுக்குள் அவர்கள் செய்த போதனையை அந்த்த் தோழர்களால் அறிய இயலாது. எந்த ஒரு மனிதனின் அந்தரங்க வாழ்க்கையையும் அவனது மனைவியைத் தவிர மற்றவர்களால் அறியவே முடியாது.


நபியவர்கள் வீட்டுக்குள் நடந்து கொண்ட முறை மக்களைச் சென்றடைய வேண்டுமானால் அவர்களின் மனைவியர் வழியாக மட்டுமே சென்றடைவது சாத்தியமாகும்.


வீட்டில் நடக்க வேண்டிய அவர்களின் உணவு உண்ணுதல், உறங்குதல் இரவு நேர வணக்கங்கள், இல்லற வாழ்க்கை போன்றவற்றைச் சமுதாயம் அறிவதற்கு அவர்களின் மனைவியரை விட்டால் வேறு வழியில்லை.


அவர்களின் வெளி உலக வாழ்க்கையை அறிவிக்க பல்லாயிரக்கணக்கான தோழர்கள் தேவைப்படும் போது அவர்களது வாழ்க்கையின் மற்றொரு பகுதியை அறிவிக்க ஒரேயொரு மணைவியால் சாத்தியப் படாது. அவர்கள் வீட்டுக்குள் செய்த போதனைகள் அத்தனையும் ஒன்று விடாமல் மனப்பாடம் செய்ய ஒன்றிரண்டு மனைவியரால் சாத்தியப்பட்டிருக்காது.


இஸ்லாமியச் சட்டங்களில் சுமார் சரிபாதி சட்டங்கள் அவர்களின் மனைவியர் வாயிலாகவே உலகுக்கு கிடைத்தன. நபித்தோழர்கள் கூட அந்த விபரங்களை நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் மனைவியரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டனர். அவர்களின் திருமணத்திற்கு வரம்பு ஏதும் இருந்திருக்குமானால் ஏராளமான சட்டங்கள் உலகுக்குக் கிடைத்திருக்வே முடியாது.


பெண்கள் தங்களின் பிரத்தியேகமான விஷயங்களையும், மாதவிடாய் பிரசவத்தீட்டு போன்றவற்றை மட்டும் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் மனைவியர் வாயிலாக அறிந்தார்கள் என்பதில்லை. எப்படி உண்டார்கள்? எப்படி உறங்கினார்கள்? இரவுப் பொழுதை எப்படிக் கழித்தார்கள்? எப்படிக் குளித்தார்கள்? என்பதை அந்த மனைவியரிடம் கேட்டே ஆண்களும் கூட அறிய முடிந்தது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு சிறு பகுதியும் மக்களைச் சென்றடையாமல் இருக்கக் கூடாது. சிலர் சொல்ல மறந்து விட்டாலும் மற்ற சிலரால் உலகுக்கு அது தெரிய வேண்டும். அந்த ஒளிவு மறைவற்ற வாழ்க்கையை உலகம் கவணிக்க வேண்டும் என்பதும் அவர்கள் பல திருமணங்கள் செய்து கொண்டதற்க்கான காரணமாகும்.


இறைத்தூதர் தவிர மற்றவர்களுக்கு இந்தக் காரணம் பொருந்தாது. மற்றும் சில காரணங்களையும் பார்ப்போம்.


நபியவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் இறைவனால் தூதராக அனுப்பப்பட்டவர்கள். அவர்களின் சொற்கள்,செயல்கள், அங்கீகாரங்கள் யாவும் அவர்களை இறைத்தூதராக நம்பிய அனைவராலும் அவசியம் பின்பற்றப் பட வேண்டியவைகளாக உள்ளன. இந்த உயர்வான தகுதியை அவர்களுக்கு வழங்க வேண்டுமானால் அவர்களின் வாழ்க்கை பரிசுத்தமானதாகவும், கலங்கமற்றதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.


தூய்மையாக அவர்கள் வாழ்வது மட்டும் கூட போதாது. அவர்களின் தூய வாழ்க்கையில் சந்தேகத்தின் சாயல் கூட படியக் கூடாது. சீர்திருத்தவாதிகள் அனைவரிடமும் உலகம் இந்தத் தகுதியை எதிர்பார்கிறது. இது நியாயமான எதிர்பார்ப்பும் கூட. முழு உலகுக்கும் முழுமையான வழிகாட்டுதலை தரக் கூடிய நபியவர்களின் வாழ்க்கை நிச்சயம் இந்த அம்சத்தைப் பெற்றிருக்க வேண்டும்.


அகில உலகுக்கும் வழிகாட்டியாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒழுக்க வாழ்வில் சந்தேகம் தோன்றிவிடுமானால் அவர்கள் இறைவனிடமிருந்து கொண்டு வந்த தூதுச் செய்தியே சந்தேகத்திற்கு உரியதாகிப் போகும்.


மிகவும் சிறந்த சீர்திருத்தவாதியாக்க் கருதப்படுபவரிடம் ஒழுக்க்க் கேடான செயல்கள் நிகழும் பேதும், அவருடைய ஒழுக்கத்தில் சந்தேகம் ஏற்படும் போதும் அவரது கருத்துக்களும் ஒதுக்கப்பட்டு வருவதைச் சாதாரணமாக நாம் கண்டு வருகிறோம்.


இந்த அடிப்படையை ஆழமாக மனதில் பதித்துக் கொண்டு நபியவர்கள் வாழ்வை நாம் அலசுவோம்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சத்தியப் பிரச்சாரத்தை துணிவுடன் துவங்கிய போது உலகில் எந்த சீர்திருத்தவாதியும் சந்தித்திராத எதிர்ப்புகளை அவர்கள் சந்தித்தார்கள். அவர்களது பிரச்சாரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.


மூட நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்தவர்கள், குலப்பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள், மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள், ஏமாற்றுவதையும் மோசடியையுமே தொழிலாகக் கொண்டவர்கள், மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப் பட்டார்கள்.


எப்படியாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பிரச்சாரத்தை முடக்கிவிட வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் அவர்களால் தீட்டப்பட்டன. கிறுக்கன் என்றார்கள், திறமை மிக்க கவிஞன் என்றார்கள், கை தேர்ந்த மந்திரவாதி என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். ஏசிப் பார்த்தார்கள். அடித்துப் பார்த்தார்கள். ஊரைவிட்டே விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். உலகை விட்டே அவரை அப்புறப்படுத்தவும் சதி செய்தார்கள்.


இந்தப் பிரச்சாரத்தை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பதில் அவர்களுக்கிருந்த வெறித் தனத்துக்கு இவை தக்க ஆதாரங்களாகும். இப்படியெல்லாம் திட்டம் தீட்டிய அவர்கள் நபியவர்களின் தூய வாழ்வைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை. மற்ற எல்லா ஆயுதங்களை விடவும் பலமான இந்த ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்தியிருந்தால் அதில் அவர்கள் வெற்றி கண்டிருக்கக் கூடும். ஆனாலும்; கூட நபியவர்களின் பரிசுத்த வாழ்க்கை பற்றி அவர்கள் எந்தக் குறையும் கூறவில்லை. கூறவில்லை என்றால் அவர்களால் கூற முடியவில்லை. கூறினால் எதிரிகளும் கூட நம்ப மாட்டார்கள் என்ற நிலை.


இது போன்ற அவதூறுகளின் எல்லா வாசல்களையும் அல்லாஹ் முழுமையாக அடைத்து விட்டான் அதன் ஒரு பகுதியே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியருடன் வாழ்க்கை நடத்தியது.


பொதுவாக ஒரு மனிதனின் மனைவி முதிய வயதுடையவளாக இருந்தால் - அவனிடம் ஒழுக்கம் இல்லாத போது - இளம் வயதுப் பெண்னை விரும்புவான். அல்லது மனைவி இளம் வயதுடையவளாக இருக்கும் போது முதிர் வயதுப் பெண்ணையும் விரும்பக்கூடும்.


மனைவி கருப்பாக இருக்கும் போது சிகப்பு நிற பெண்னை விரும்புவதும், மனைவி சிகப்பாக இருக்கும் போது கருப்பு நிறப் பெண்னை விரும்புவதும் கூட ஆண்களில் பலரது இயல்பாக உள்ளது.


உயரமாக இருந்தால் குட்டையானவளை விரும்புவதும், மெலிந்தவளாக இருந்தால் பருமனானவளை விரும்புவதும் கூட ஆண்களின் பலருடைய இயல்பாக உள்ளது. இந்த இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற மனோபாவம் எல்லோரிடமும் காணப்படாவிட்டாலும் பலரிடம் பரவலாகக் காணப்படுவதை மறுக்க முடியாது.


இந்த மனோபாவம் இருந்ததனால் தான் இளம் வயது மனைவியைப் பெற்றவளுடன் முதிய வயதுடையவளை சம்பந்தப்படுத்திப் பேசும் போதும், சிகப்பு நிற மனைவியைப் பெற்றவனுடன் கருப்பு நிறப் பெண்ணச் சம்பந்தப்படுத்தி பேசும் போதும், இன்னும் பலவிதமான வதந்திகள் கிளப்பப்படும் போதும் இருக்கும், இருக்கும் என்று கூறி ஆமோதிப்பவர்களைக் காண முடிகிறது.


இப்படி ஆமோதிப்பவர்கள் இருப்பதனாலேயே இத்தகைய வதந்திகளைக் கூறவும் முடிகின்றது.


எவ்வளவு ஒழுக்கமானவன் பற்றியும் இப்படிக் கூறி விடலாம் அதை நம்புவதற்கு ஆட்களும் இருப்பார்கள்.


ஆனால் நபியவர்கள் பற்றி அன்று எதிரிகள் இது போன்று அண்ணியப் பெண்ணுடன் சம்பந்தப் படுத்திப் பேசத் துணியவில்லை. அப்படிப் பேசினாலும் எவரும் அதனை நம்பியிருக்கவும் மாட்டார்கள்.


இளம் வயதிலும், முதிய வயதிலும், உயரமாகவும், குட்டையாகவும், பருமனாகவும் மெலிந்தவராகவும் பல மனைவியர் இருந்ததால் அன்னியப் பெண்களை நாடக்கூடிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்பதை எதிரிகளும் உணர்ந்தார்கள்.


முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மனைவி தேவையென்றால் முறையாக உலகுக்குத் தெரியும் வகையில் அறிவித்து விட்டு திருமணம் செய்து கொள்வாரே தவிர முறை கேடாகப் பெண்களை அவர் நாட மாட்டார் என்று எதிரிகளுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது.


பல மனைவியரை அடைந்ததால் செய்யப்படும் விமர்சனத்தை விட தனக்குச் சம்பந்தமில்லாத அன்னியப் பெண்களை விரும்பினார் என்ற விமர்சனம் மிகவும் கடுமையாக இருந்திருக்கும். இதனால் அவர்களின் தூதுத்துவமே சந்தேகிக்கப் பட்டிருக்கும்.


ஆண், பெண் உறவுகளில் சம்பந்தப்படுத்தி எப்படியெல்லாம் மனித உள்ளங்கள் கற்பனை செய்ய முடியுமோ அத்தனை வாசல்களும் அதனால் அடைக்கப்பட்டன. இறைத்தூதர் என்றும் அகில உலக வழிகாட்டி என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவருக்கு இது அவசியமானதே என்பதை மறுக்க முடியாது.


இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும், இதை அனுமதிக்கலாமே என்றெல்லாம் கேட்க முடியாது. ஏனெனில் நபியவர்களின் சமுதாயத்தில் தோன்றிய எந்த சீர்திருத்தவாதியும் சுயமாக எதையும் கூற முடியாது. நபியவர்கள் சொன்னதை மாத்திரமே அவர் எடுத்துச் சொல்ல முடியும். அவருடைய வாழ்வு சந்தேகத்திற்கு உரியதாகிப் போனால் அவர் தான் ஒதுக்கப் படுவாரே தவிர அவர் எடுத்துச் சொன்ன போதனைகளோ, இறை வசனங்களோ ஒதுக்கப் படுவதில்லை.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வு களங்கப்படுத்தப் படாமல் இருக்க அவர்களின் பல திருமணங்கள் கவசமாக உள்ளன. இரு போன்ற நியாயமான காரணங்களினாலேயே நபியவர்கள் பல திருமணங்கள் செய்து கொண்டார்கள்.


மாற்றார் விமர்சிப்பது போல் காம வெறி காரணம் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.


சுருங்கச் சொல்வதென்றால் நபியவர்கள் காம வெறியில் எந்தத் திருமணத்தையும் செய்ததில்லை. அது தான் காரணம் என்றிருந்தால் அவர்களுக்காக உயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு தோழர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள்.


அவர்களின் அத்தனை மனைவியரும் அவரைப் புகழ்ந்து அவரை அப்படியே பின்பற்றி நடந்திருக்க மாட்டார்கள்.


காம வெறி தான் காரணம் என்றால் காம வெறி மேலோங்கி இருக்கக் கூடிய இளமைப் பருவத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத வாழ்வை வாழ்ந்திருக்க முடியாது.


காம வெறி தான் காரணம் என்றால் உடலுறவுக்குரிய தகுதியை அறவே இழந்த பெண்களை அவர்கள் மனந்திருக்க மாட்டார்கள்.


காம வெறி தான் காரணம் என்றிருந்தால் மிகப்பெரும் அதிகாரம் படைத்த மன்னர் திருமணம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. யாருக்கும் தெரியாமல் தினமும் ஒரு பெண்ணை அனுபவிக்க முடியும். பகிரங்கமாக அறிவித்துவிட்டு பல பெண்களைத் திருமணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.


காம வெறி தான் காரணம் என்றால் காம வெறியைத் தூண்டக் கூடிய உணவு வகைகளை அவர் உண்டு பசியும் பட்டனியும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவருக்குத் தான் அது சாத்தியப் படும்.


தொடர்ந்து பல நாட்கள் பட்டினி கிடந்தவருக்கு ஓரிரு பேரீச்சம் பழங்களை மட்டும் அல்லது காய்ந்த ரொட்டிகளை மட்டும், அல்லது குழைத்த மாவை மட்டும் உணவாகப் பெறக் கூடியவரிடம் என்ன காம உணர்வு இருக்கப் போகின்றது?


பல வேளைகள் உண்ண ஏதும் இருக்காதா என்று கேட்டு விட்டு வீட்டில் இல்லை எனக் கூறியதும் நோன்பு நோற்றவரிடம் என்ன காம வெறி இருக்க முடியும்?


இயல்பிலேயே காம வெறி இருந்திருந்தாலும் அவருடைய வறுமை அதை முழுமையாக அப்புறப்படுத்தியிருக்க முடியும்.


இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு அம்மாமனிதரின் வாழ்வை ஆராயும் பக்குவத்தை அனைவருக்கும் வழங்க வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

இயேசு உயிர்த்தெழுதலில் குழப்பம்



உயிர்த்தெழுதலில் குழப்பம் மற்றும் தரிசனத் தடுமாற்றம்


இயேசு உயிர்த்தெழுதலில் குழப்பம்




இயேசு அடக்கம்செய்யப்பட்ட பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதே கிறித்தவத்தின்அடிப்படைக் கோட்பாடு. அவர் உயிர்த்தெழுந்த(?) நிகழ்ச்சியாவதுமுரண்பாடில்லாமல் பைபிளில் கூறப்பட்டிருக்கிறதா?அதிலுள்ள முரண்பாடுகள் தான் எத்தனையெத்தனை?



ஓய்வு நாள் முடிந்தது.வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் மகதேலேனா மரியாளும் மற்ற மரியாளும்கல்லறையைப் பார்க்க வந்தார்கள். இதோ பெரிய பூமி அதிர்ச்சியுண்டாயிற்று!கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்து வாசலில் இருந்த கல்லை உருட்டித்தள்ளி அதன் மேல் உட்கார்ந்தான். அவன் ரூபம் மின்னல் போலவும் அவன் வஸ்திரம் குறைந்தமழை போல் வெண்மையாகவும் இருந்தது. (மத்தேயு 28:1-3)



ஓய்வு நாள் முடிந்தபின் மகதேலேனா மரியாளும் யாகோபின் தாயாகிய மரியாளும் சலாமே என்பவளும் அவருக்குப்பூச வேண்டும் என்று சுகந்த வர்க்கங்களை வாங்கினார்கள். வாரத்தின் முதல் நாள்அதிகாலையில் சூரியோதயத்திலேயே அவர்கள் கல்லறைக்கு வந்தார்கள். கல்லறையின் வாசலில்இருந்த கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான் என்று ஒருவரோடு ஒருவர்சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் வந்து ஏறிட்டுப் பார்த்த போது அது தள்ளப்பட்டிருக்கக்கண்டார்கள். அந்தக் கல் மிகவும் பெரிது. அவர்கள் கல்லறைக்குச் சென்று வெள்ளையங்கிதரித்திருந்த ஒரு வாலிபன் வலது பக்கம் உட்கார்ந்திருந்ததைக் கண்டு திகைத்தார்கள். (மாற்கு 16:1-5)



வாரத்தின் முதலாம் நாள்அதிகாலையில் தாங்கள் ஆயத்தம் செய்த சுகந்த வர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டுகல்லறைக்கு வந்த போது கல்லறையிலிருந்து கல் புறப்பட்டிருப்பதைக் கண்டார்கள். உள்ளேசென்று போதோ ஆண்டவராகிய இயேசுவின் சரீரத்தைக் காணவில்லை. அதைப்பற்றி அவர்கள்கலங்கிக் கொண்டிருக்கையில் பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டு பேர்அவர்கள் அருகேவந்து நின்றார்கள். (லூக்கா24:15)



வாரத்தின் முதல் நாள்காலையில் இருட்டோடே மகதேலேனா மரியாள் கல்லறைக்கு வந்தாள். கல்லறையை அடைத்திருந்தகல் எடுக்கப்பட்டிருக்கக் கண்டு - (யோவான் 20:1)



இயேசுவின் கல்லறைக்கு ஒருமரியாள் மட்டும் வந்ததாக யோவான் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

இரண்டு மரியாள்கள்வந்ததாக லூக்காவும் மத்தேயுவும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

இரண்டு மரியாள்களும்சலாமே என்பவளுமாக மூவர்வந்தார்கள் என்று மாற்கு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அவர்கள் வந்த போதுஅவர்கள் இரண்டு தேவ தூதர்களைச் சந்தித்ததாக லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

ஒரு தேவ தூதன் என்றுமத்தேயுவும் மாற்கும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அந்தத் தேவ தூதனைகல்லறைக்குள் உட்கார்ந்திருக்கக் கண்டார்கள் என்று மாற்குக் கூறுவது கர்த்தரின்வார்த்தையா?

அல்லது வானத்திலிருந்துஅவன் இறங்கி வந்ததாக மத்தேயு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அல்லது இரண்டு பேர் அருகே வந்துநின்றார்கள் என்று லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

உயிர்த்தெழுதலைப் பற்றிபைபிள் கூறும் தகவலில் ஏன் இத்தனை குழப்பங்கள்? உயிர்த்தெழுதல்நடந்திருந்தால் அதில் இவ்வளவு குழப்பங்களுக்கும் இடமிருக்குமா? கிறித்தவநண்பர்களே நடுநிலையோடு சிந்திப்பீர்!

உயிர்த்தெழுந்த பிறகு தரிசனத்தடுமாற்றம்

இயேசு சிலுவையில் அறையப்பட்டுமரணமடைந்தார்; மூன்றாம் நாள்மறுபடியும் உயிர்பெற்றெழுந்தார்; சீடர்களுக்குக் காட்சிதந்தார் என்று மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்குசுவிசேஷக்காரர்களும் சுறுகின்றனர். இந்த விஷயத்தை விபரிக்கும் நான்குசுவிசேஷக்காரர்களும் முரண்பட்ட பல விஷயங்களைக் கூறுகின்றனர்.



மகதேலேனா மரியாளிடமும்மற்ற மரியாளிடமும் தேவ தூதன் காட்சி தந்து இயேசு உயிர்த்தெழுந்ததைக் கூறிசீஷருக்கு இதைக் கூறுமாறும் தெரிவிக்கிறார். அவ்விருவரும் சீஷர்களிடம்கூறுவதற்காகச் செல்லும் போது இயேசுவே அவர்களுக்குக் காட்சி தந்து,

' நீங்கள்போய் கலிலேயாவுக்குப் போகும்படி என் சகோதரருக்குச் சொல்லுங்கள்! அங்கேஎன்னைக் காண்பார்கள் என்றார்.

(மத்தேயு 28:10)



பதினொரு சீஷருமோ இயேசுதங்களுக்குக் குறித்திருந்தபடி கலிலேயாவிலுள்ள மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக்கண்டு பணிந்து கொண்டார்கள்.

(மத்தேயு 28:16)



இயேசுவின் கட்டளைப்படிபதினொரு சீஷரும் கலிலேயா எனுமிடம்சென்று இயேசுவைத் தரிசித்ததாக மத்தேயு இங்கே கூறுகிறார்.

ஆனால் மாற்கு,



அவர் உயிரோடுஇருக்கிறார் என்றும் அவள் அவரை கண்டாள் என்றும் அவர்கள் கேள்விப்பட்ட போது நம்பவில்லை.அதன் பின்பு அவர்களில் இரண்டு பேர்ஒரு கிராமத்துக்கு வழிநடந்து போகிற பொழுதுஅவர்களுக்கு வேறுரூபமாய்த் தரிசனமானார். அவர்களும் போய் மற்றவர்களுக்குஅறிவித்தார்கள். அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. பதினொருவரும் போஜன பந்தியில்இருக்கும் போது அவர்களுக்கு அவர்தரிசனமாகி உயிர்த்தெழுந்திருந்த தம்மைக்கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்கள் விசுவாச்ததைப்பற்றியும் இருதயக் கடினத்தைப் பற்றியும் அவர்களைக் கடிந்து கொண்டார்.

(மாற்கு 16:11-14)



பதினொரு சீடர்களும் இரண்டுமரியாள்களின் கூற்றை ஏற்று இயேசுவைத் தரிசிக்க கலிலேயா என்ற இடத்திற்குச் சென்றதாகமத்தேயு கூறுகிறார். ஒரு மரியாள் என்றும் அவளது கூற்றை சீடர்கள் நம்பவில்லைஎன்றும் மாற்குக் கூறுகிறார்.

வழியில் இரண்டு சீடர்களுக்குஇயேசு தரிசனமானதாக மாற்கு கூறுகிறார்.

மத்தேயு இது பற்றி எதையுமேகூறவில்லை.



கலிலேயா என்ற இடத்திற்குப்புறப்பட்டுச் சென்று அங்கே இயேசுவைத் தரிசனம் செய்ததாக மத்தேயுவும் இயேசுவைஅவர்கள் போஜனம் பண்ணும் இடத்துக்கு வலிய வந்து காட்சி தந்ததாக மாற்கும் கூறுகிறார்கள்.



கிறித்தவத்தின் முக்கியமானகோட்பாட்டை விளக்கும் விஷயத்தில்கூட இவ்வளவு முரண்படுவானேன்? இரண்டுமேகர்த்தரின் தூண்டுதலால் எழுதப்பட்டிருந்தால்இத்தகைய முரண்பாடுகள் இருக்க முடியுமா? இதே விஷயத்தை லூக்கா கூறும் போது முரண்பட்ட இந்த இரண்டுக்கும் முரணாகக் கூறுகிறார்.



அந்நேரமே எழுந்திருந்துஎருசலேமுக்குத் திரும்பிப் போய் பதினொருவர்களும் அவர்களோடிருந்தவர்களும்கூடியிருந்த இடத்தில் அவர்களைக் கண்டார்கள். அவர்கள் இவைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர்தாமே அவர்கள் நடுவிலே வந்து நின்று அவர்களைப் பார்த்துஉங்களுக்குச் சமாதானம் என்றார்.

(லூக்கா 24:33,37)



கலிலேயாவிலும் இயேசுவைச்சந்திக்கவில்லை; அவர்கள் போஜனம் பண்ணும் போதும்சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் எருசலேமில் தரிசனம்தந்ததாக லூக்கா கூறுகிறார்.



மரணித்த பிறகு உயிர்த்தெழுதல் என்பது சாதாரணமான ஒன்றல்ல.அப்படி நடந்திருந்தால் அவ்விஷயத்தில் இவ்வளவுமுரண்பாடுகள் இருக்க வழியில்லை. உயிர்த்தெழுதல் என்பது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது இவ்வளவுமுரண்பாடுகள் உள்ள பைபிள் இறை வேதம் அன்று என்பதைக் கிறித்தவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.இந்த இரண்டில் ஒன்றைத் தவிர உங்களுக்குவேறு வழியிருக்கிறதா கிறிஸ்தவர்களே

Friday, August 17, 2012

ஏன் இந்த எளிய வாழ்க்கை

 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டதற்கு அவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கையே காரணமாக இருந்தது.

மாமன்னர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் காட்டிய ஆன்மீக நெறிக்கும் அது முரணாக இருக்காது.

அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த ஒன்றையும் பெறுவதில்லை என்பதை அவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள். தாம் மட்டுமின்றி தமது மனைவி மக்களும் கூட அவ்வாறு பெறக் கூடாது என்று கொள்கை வகுத்தார்கள். இந்தக் கொள்கையை ஊரறியப் பிரகடனம் செய்தார்கள். இந்தக் கொள்கையில் கடைசி மூச்சு வரை உறுதியாக நின்றார்கள். இது தான் அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தது.

இந்தக் கொள்கையில் அவர்கள் எந்த அளவு பிடிப்புடனும், உறுதியுடனும் இருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு' என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. 'நாம் ஸகாத் (பொது நிதி) பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உமக்குத் தெரியாதா?' என்று பேரனிடம் கேட்டார்கள். நூல் : புகாரி 1485, 1491, 3072

'தமது பேரனின் வாயிலிருந்து பேரீச்சம் பழத்தை வெளியேற்றி விட்டு 'முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தைச் சாப்பிடக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?' எனக் கூறினார்கள் என்று கூறப்படுகிறது நூல் : புகாரி 1485

'பொது நிதியிலிருந்து ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுக்கக் கூடாது; சின்னஞ்சிறு பாலகராக இருந்தாலும் கூட தமது குடும்பத்தார் அதைச் சாப்பிடலாகாது' என்ற அளவுக்கு கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்து விட்டார்கள். ஒரு நாளும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனேயே திரும்பி வந்ததையும் நபித் தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். 'நான் ஏன் அவசரமாகச் சென்றேன் தெரியுமா? அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டி என் வீட்டில் இருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்' என்றார்கள். நூல் : புகாரி 851, 1221, 1430

மரணம் எந்த நேரத்திலும் ஏற்பட்டு விடலாம். ஏழைகளுக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டியை வீட்டில் வைத்து விட்டு மரணித்து விட்டால் குடும்பத்தினர் அதைத் தமக்குரியதாகக் கருதி விடக் கூடும். அவ்வாறு கருதி விடக் கூடாது என்று அஞ்சியே அவசரமாகப் புறப்பட்டுச் சென்று 'அது பொது நிதிக்குச் சொந்தமானது' என்று கூறி விட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.

'எனது படுக்கையில் ஒரு பேரீச்சம் பழம் விழுந்து கிடப்பதைக் கண்டிருக்கிறேன். அது ஸகாத் நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் இல்லாவிட்டால் அதைச் சாப்பிட்டிருப்பேன்' எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 2055, 2431, 2433

நபிகள் நாயகத்தின் வீடு பள்ளிவாசலுடன் ஒட்டி அமைந்திருந்தது. பள்ளி வாசலில் குவிக்கப்படும் ஸகாத் நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்களில் ஒன்றிரண்டு நபிகள் நாயகத்தின் வீட்டுக்குள் வந்து விழுந்திட வாய்ப்பு இருப்பதால் அதைக் கூட சாப்பிட மாட்டேன் என்று அறிவிக்கிறார்கள். பொது நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் கூட அதைத் தவிர்க்கும் அளவுக்கு பேணுதலாக இருந்துள்ளனர்.

இதை விடவும் உயர்வான மற்றொரு பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.

'நான் ஆட்சியில் இருக்கும் போது மட்டுமல்ல. என் மரணத்திற்குப் பிறகு எந்த ஆட்சி வந்தாலும் அரசுக் கருவூலத்தின் ஸகாத் நிதியாதாரம் என் வழித் தோன்றல்களுக்குத் தடை செய்யப்படுகிறது. இந்தத் தடை உலகம் உள்ளளவும் நீடிக்கும்' என்பதே அந்தப் பிரகடனம்.

இன்றும் கூட நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களாக இருப்பவர்கள் எந்த அரசிலும் ஸகாத் நிதியைப் பெறுவதில்லை. முஸ்லிம் நாடுகளில் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதும் இல்லை. இஸ்லாமியச் சட்டப்படி நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் ஸகாத் பெறுவதும், அவர்களுக்கு ஆட்சியாளர்கள் வழங்குவதும் குற்றமாகும்.

தமது வழித் தோன்றல்களாக இருப்பதால் மற்றவர்களுக்குக் கிடைக்கும் சலுகையும் கிடையாது என்று அறிவித்ததற்கு நிகரான தூய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் உலக வரலாற்றில் ஒருவரும் இல்லை.

தாமும், தமது குடும்பத்தினரும் ஸகாத் நிதியைத் தொடாதது மட்டுமின்றி தம்முடன் தொடர்புடையவர்கள் கூட அதிலிருந்து தூரமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள். இதைப் பின் வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

மக்ஸூம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை ஸகாத் நிதியைத் திரட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்போது அபூ ராஃபிவு என்பாரும் அவருடன் செல்லலானார். அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஸகாத் எனும் பொது நிதி நமக்கு அனுமதிக்கப்பட்டதன்று. ஒரு சமுதாயத்தால் விடுதலை செய்யப்பட்டவர் அவர்களைச் சேர்ந்தவரே' என்று குறிப்பிட்டார்கள். நூல்கள் : நஸயீ 2565, அபூதாவூத் 1407

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மனிதர்களில் சிலர் அடிமைகளாக இருந்தனர். அடிமைகளை வைத்திருப்பவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) பல நடவடிக்கைகளை எடுத்தார்கள்.

'அடிமைகளை விடுதலை செய்தால் விடுதலை செய்தவரே அந்த அடிமைக்கு வாரிசு' என்பதும் அத்திட்டங்களில் ஒன்றாகும். அதாவது அந்த அடிமை மரணித்து விட்டால் அவரது சொத்துக்கள் விடுதலை செய்தவரைச் சேரும்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப் பட்டவர் தான் அபூ ராஃபிவு. இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு வாரிசாகும் நிலையில் இருந்தார்கள். அவரும் ஸகாத் நிதியில் எதையும் பெறக் கூடாது என்பதற்காக அவரை ஸகாத் வசூலிக்கச் செல்லக் கூடாது எனக் கட்டளை பிறப்பிக்கிறார்கள்.

அரசாங்கப் பணத்தைத் தமக்கோ, தம் குடும்பத்துக்கோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, உலகம் உள்ளளவும் ஒரு காலத்திலும் ஒரு அரசாங்கத்திலும் தமது வழித் தோன்றல்கள் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று பிரகடனம் செய்தது மட்டுமின்றி மற்றொரு புரட்சிகரமான பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.

எனது வாரிசுகள், தங்கக்காசுகளுக்கோ, வெள்ளிக்காசுகளுக்கோ வாரிசாக மாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள்.) நூல் : புகாரி 2776, 3096, 6729

நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா (ரலி)க்கு ஏற்பட்ட அனுபவம் அந்த மாமனிதரின் அப்பழுக்கற்ற தன்மையைப் பறை சாற்றும்.

நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களின் உற்ற தோழர் அபூபக்ர் (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். அவர்களிடம் நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா வந்தார். தமது தந்தை விட்டுச் சென்ற கைபர், பதக் ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு அபூபக்ரிடம் கேட்டார்...

'எனக்கு யாரும் வாரிசாக முடியாது. நான் விட்டுச் சென்ற யாவும் பொது உடமையாகும்' என்று உங்கள் தந்தை நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே, அதை உங்களிடம் தர இயலாது. நபிகள் நாயகத்தின் மகளாகிய நீங்கள் எனது எல்லா உறவினர்களை விடவும் விருப்பமானவராக இருக்கிறீர்கள். ஆயினும், நான் தர மறுப்பதற்குக் காரணம் நபிகள் நாயகத்தின் கட்டளை தான்' என்று கூறி மறுத்து விட்டார். நூல் : புகாரி 3093, 3094, 3712, 4034, 4036, 4241, 5358, 6725, 6728

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளார் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தும் தமது அற்பமான சொத்துக்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொது உடமையாக்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்களின் மனைவியர் தமக்குரிய வாரிசுரிமையை ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) இடம் கேட்டுப் பெறுவதற்காக உஸ்மான் (ரலி)யை அனுப்பத் திட்டமிட்டனர். அப்போது ஆயிஷா (ரலி) 'எனக்கு யாரும் வாரிசாக முடியாது; நான் விட்டுச் சென்றவை பொது நிதியில் சேர்க்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லையா?' என்று கேட்டு அம்முயற்சியைக் கைவிட வைத்தார். நூல் : புகாரி 6730

ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!

உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.
தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது.
அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.
அந்த நேரத்தில் கெமரூன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த சவூதி சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் ராபிஆ அவர்கள் அந்தக் குழந்தையை தனித்தனியாகப் பிரித்து எடுக்கும் பொறுப்பையும் செலவையும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
ஏப்.21, 2007 அன்று சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட அக்குழந்தைகளுக்கு 16 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 65 மருத்துவர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக இரு குழந்தைகளையும் பிரித்து எடுத்தனர்.

இந்தச் செய்தி பபான்கி கிராமத்திற்குக் கிடைத்தவுடன் அந்தப் பழங்குடி இன மக்கள் வாழும் கிராமமே சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சவூதி மருத்துவ வரலாற்றில் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது.
அதற்குப் பிறகுதான் ஆச்சரியம் நடந்தது. அறுவை சிகிச்சை நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து அந்த கிராமத்திற்கு 2008 ஏப்.21 அன்று சென்ற கெமரூன் நாட்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். ஒரு ஆண்டு காலத்தில் 1000 பேர் வாழும் பழங்குடி இன கிராம மக்களில் 400 பேர் இஸ்லாத்தைத் தழுவி இருந்தனர். அதோடு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குழந்தைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதைக் காண வரும் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அன்றாடம் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஹஜ் செய்வதற்காக பபான்கி கிராமத்தில் இருந்து சுல்தான் ஒமர் என்ற அந்த பழங்குடி இன முக்கியஸ்தர் தலைமையில் 26 பேர் வந்திருந்தனர். அவர்கள் டாக்டர் அல் ரபீஆ அவர்களுக்கும், அறுவை சிகிச்சையின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்ட சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

அந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது தலா ஒவ்வொரு கால்தான் இருக்கிறது. செயற்கைக் கால் பொருத்துவதற்கு மீண்டும் சவூதி அரேபியா செல்ல இருக்கின்றனர். அந்த குழந்தைகளின் தாய் எமரன்ஸியாவாக இருந்தவர் தற்போது ஆயிஷா என்றும், தந்தை நகோங் ஜேம்ஸ் அகும்பு தற்போது அப்துல்லாஹ் என்றும் மாறி தீனுல் இஸ்லாத்தைக் கடைபிடித்து பிறருக்கும் வழிகாட்டி வருகின்றனர்

சவூதி அரேபியாவில்கூடிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மியன்மார் குறித்து ஆராய்வு

57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு செவ்வாய்கிழமை சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் ஆரம்பமானது. இதில் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜாத் உட்பட இஸ்லாமிய நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆரம்பமான மாநாட்டில் சிரியா மற்றும் மியன்மாரில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து விசேட கவனம் செல
ுத்தப்படுவதாக இக்சானொக்லு குறிப்பிட்டார். மியன்மாரில் தொடரும் இன வன்முறையில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொஹிங்கியா முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்த கூட்ட மைப்பின் அவசர கூட்டமாகவே இந்த மாநாடு இடம்பெறுகிறது. இந்த மாநாட்டுக்கு சவூதி மன்னர் அப்துல்லா இம்மாத ஆரம்பத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

கடந்த 1969 ஆம் ஆண்டு அமைக் கப்பட்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இதற்கு முன்னர் 1997 (பாகிஸ்தான்), 2003 (கட்டார்), 2005 (சவூதி) ஆகிய ஆண்டுகளிலும் அவசர கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்நிலையில் முஸ்லிம் நாடுகளில் அரசியல் பதற்றம், வன்முறைகளுக்கு மத்தியிலேயே இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....


கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.

இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.

இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை...