Digital Time and Date

Welcome Note

Saturday, April 7, 2012

பெண்களே உஷார் …ஆடைகளைந்து இன்பம் காண அழைக்கும் தமிழ் இணையத்தளம். படங்கள் இணைப்பு


கலாசார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன என்று எழுதுகின்ற இணையத் தளங்களும் அதனுடன் தொடர்பு பட்டவர்களுமே மறு புறத்தில் சமூக சீர்கேடான விடயங்களை செய்து வருகின்றனர். என்னுடைய
தமிழ் பெண்களின் நிர்வாண படங்களை விற்பனை செய்யும் இணையத்தளத்திலிருந்து உங்கள் மனைவி பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள். எனும் முன்னைய பதிவிற்கு சிலர் தேவையற்ற சிதத்தில் மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர். அப்பதிவிற்கான சில விளக்கங்களை இங்கே தருகிறேன்.
இன்று அரட்டை இணையத்தளங்களில் பரவலாக ஆடை களையப்படுகின்றன. அரட்டை இணையத்தளங்களில் அரட்டை அடிப்பதற்கு வருகின்ற பலர் செக்ஸ் அரட்டை அடிப்பதற்கென்றே வருகின்றனர். இதில் ஆண்களும் பெண்களும் வயது வித்தியாசமின்றி செக்ஸ் அரட்டையில் ஈடுபடுகின்றனர். இங்கே இளம் பெண்களின் ஆடைகள் மட்டுமன்றி திருமணமான பல பெண்களும் தமது ஆடைகளை களைகின்றனர். இதனை பல தமிழ் இளைஞர்கள் கிழடுகள் பார்த்து இரசித்துக்கொண்டிருக்கின்றனர். 
இவ்வாறு இரசித்தக்கொண்டிருப்பவர்களின் மனைவி மக்கள் தங்கைகள் இவ்வாறான செயற்பாடுகளைச் செய்ய இடம் கொடுப்பார்களா? இவ்வாறான இணையத்தளங்களை செய்பவர்கள் இவ்வாறு பணம் உழைப்பதனை விடத்து தமது மனைவி மக்களை வைத்து விபச்சார விடுதி நடாத்தலாம்.
எனக்கு ஒருவர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் அதிலே அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் இருக்கின்றது. அதனை எவரும் கட்டுப்படத்த வேண்டிய அவசியமில்லை. ஒருவனோ ஒருத்தியோ தன் உடலை யாருக்கு காட்டினாலும் அதனை கட்டுப்படுத்தும் உரிமை எவருக்கும் இல்லை. என்று குறிப்பிட்டிருந்தார். சரி இணையத்தில் செக்ஸ் அரட்டை செய்வது தவறா தவறு இல்லையா?
இது அப்படியே இருக்க விடயத்துக்கு வருகிறேன். சமூக சீர்கேடு தமிழிழம் தமிழர்கள் என்றெல்லாம் எழுதி வரும் லங்காசிறி இணையத்தளம் மறு புறத்திலே பல சமூக சீர்கேடுகளைச் செய்து வருவதை சமூக ஆர்வலர்கள் எவரும் கண்டுகொள்வதில்லையா? லங்காசிறி வருமானத்திற்காக எதனையும் செய்யும் என்பதற்கு அதன் மற்றொரு இணையத்தளம் சான்றாகின்றது. வெறுமனே தமிழர்களின் உரிமைக்காக தமிழர்களுக்காக தமிழீழத்துக்காக எழுதுகிறோம் என்று சொல்லி தமிழர்களை ஏமாற்றி பணத்தினை உழைத்துக்கொண்டு மறு புறத்தில் பாரிய சமூக சீர்கேடுகளை செய்து வருகின்றார்கள்.
இவர்களால் செய்யப்படும் மற்றுமொரு இணையத்தளம்தான் Hi2 Chatஇணையத்தளம். இந்த அரட்டை இணையத்தளத்திற்கு ஒருமுறை சென்று பாருங்கள் அங்கே இணைய விபச்சாரம் நடக்கின்றது. அங்கே ஆடைகள் களையப்படுகின்றன. இந்த இணையத்தளத்தில் அரட்டை அடிப்பவர்கள் பலர் செக்ஸ் அரட்டைக்காகவே இங்கே வருகின்றனர். ஆண்கள் மட்டுமல்ல பல தமிழ் பெண்களும் செக்ஸ் அரட்டையில் ஈடுபடுகின்றனர். 
அவ் இணையத்தளத்திற்கு ஒரு முறை பெண்ணின் பெயருடன் சென்று பாருங்கள் அங்கே உங்களிடம் எவ்வாறான கேள்விகள் கேட்கப்படுகின்றன. உங்களுக்கு யார் யார் எல்லாம் எதை எதை எல்லாம் காட்டுகின்றார்கள் என்பதனை எல்லாம் பாருங்கள். ஆண்கள் மட்டுமல்ல அங்கே பல இளம் பெண்களும் தமது ஆடைகளை களைகின்றனர். அங்கே இருக்கின்ற பெண்களிடம் பேசிப்பாருங்கள் அவர்களே தானாகவே உங்களை செக்ஸ் அரட்டைக்கு கூப்பிடுவார். 
நான் இவ்வாறான செயற்பாடுகளை அவதானித்து அடிக்கடி பதிவிட்டு வருவதனால் ஆண் மற்றும் பெண் பெயர்களில் அடிக்கடி அங்கு சென்று நிலமைகளை அவதானிப்பதுண்டு. சில இளம் பெண்கள் தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். திருமணமான பெண்கள்கூட விதிவிலக்கல்ல. ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நேரம்கூட ஒதுக்குகிறார்கள்.
ஒருசில ஆண் நண்பர்களை அங்கே நான் நண்பர்களாக்கினேன். அவர்களிடம் இவ்விடயங்களை கேட்டேன் அவர்கள் சொன்ன பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவ் இணையத்தளம் மூலம் பல செக்ஸ் நண்பிகளை தாம் பெற்றிருப்பதாகவும். அரட்டையில் பேசுவதுடன் மட்டும் நின்று விடாது. நேரடியாக செக்ஸ் தொடர்பு வைத்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் பல கிடைப்பதாகவும் குறிப்பிட்டனர். ஒரே நாட்டைச் சேர்ந்த பெண்கள் அரட்டையில் நண்பிகளாகக் கிடைத்தால் அரட்டையில் செக்ஸ் பேசுவோம் பின்னர் நேரடியாக சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்வோம் என்றனர்.
இங்கு பல செக்ஸ் பைத்தியங்கள் சங்கமிக்கும் ஒரு இடமாக இருக்கின்றது. கடும் மோசமான முறையில் முறையில் அரட்டையில் ஈடுபடும் பல பெண்களை நாம் அங்கே காணலாம். நான் குறகிய நாட்கள் அத்தளத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அறிய அரட்டை செய்தாலும் பல பெண்களின் சுய ரூபங்களை பார்த்து கவலைப்பட்டதுண்டு. சில இளம் பெண்கள் ஏன் இவ்வாறு நடக்கின்றனர் என்பது தெரியவில்லை. 
அவ் இணையத்தில் திருமணமான இரு பெண்களின் நட்பு கிடைத்தது. ஒருவர் கனடா இருக்கின்றார். அவருக்கு ஒரு ஆண் ஒரு பெண் இரு பிள்ளைகள் சிறு வயது பிள்ளைகள் அவர் தினமும் இவ் இணையத்தில் அரட்டை செய்பவர் தன் முகத்தை காட்டமாட்டார். ஏன் இவ்வாறு நடக்கின்றீர்கள் என்று கேட்டேன். தான் இலங்கைப்பெண் தனது பெற்றோர் வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து கனடாவிற்கு அனுப்பி வைத்திரக்கின்றனர். அங்கே சென்றதும் சொர்க்கம் போன்று இருந்ததாம். 
கணவன் வேலைக்கு சென்று விடுவார் இரவு 12 மணிக்குப் பின்னர் வந்து சாப்பிட்டு விட்டு தூங்கிவிடுவாராம். வெளியில் ஒரு இடமும் செல்வதுமில்லை. அப்போது தனிமையில் இருக்கும் அவருக்கு இந்த இணையத்தளம் உதவியாக இருக்கிறதாம் பல நட்புக்களோடு தினமும் பேசி மகிழ்வதோடு தனிமையில் இருக்கும் உணர்வில் இருந்து விலகுவதாகவும் சொன்னார். தன் உணர்வுகளை கட்டப்படுத்த முடியாதபோது கணவன் இடங்கொடப்பதில்லை எனவும் வேலை வேலை என்றே இருப்பதாகவும் இவ்வாறான வேளைகளில் இவ் இணையத்தளத்தில் செக்ஸ் அரட்டைக்கு தான் செல்வதாகவும் குறிப்பிட்டார்
இன்னுமொரு பெண் இளம்பெண் 27 வயது திருமணமாகி 2 வருடங்கள்தான் இலங்கைப்பெண் தனிமையில் இருக்கின்றார். அழகான பெண் கணவன் வேலைக்கு சென்றால் ஒரு வாரத்தின் பின்னர்தான் விட்டுக்கு வருவாராம். அப்படியானால் தனிமையில் இருக்கும் பெண் என்ன செய்வாள். இதனைவிட பல பாடசாலை செல்லும் மாணவிகள்கூட இங்கு அரட்டை அடிக்கின்றனர்.
லங்காசிறி இணையத்தள நிர்வாகிகளிடம் சில கேள்விகள்….
தமிழர்களுக்காகவும் தமிழீழத்தக்காகவும் கலாசாரத்தக்காகவும் குரல் கொடுப்பதாக சொல்லப்படுகின்ற நீங்கள் இதனை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றிர்கள். இது சமூக சீர்கேடடு இல்லையா? இவ் இணையத்தளத்தினை நீங்கள் நடாத்தவதன் நோக்கம் என்ன? இவ் அரட்டை இணையத்தளம் முலமாக ஏதாவது நல்ல விடயங்கள் இடம்பெறுகின்றதா? மறைமுகமாக விபச்சார கம்பனிகளை நடாத்தகின்றீர்களா?
இவ்வாறு உங்கள் பிள்ளைகள் மனைவி அக்கா தங்கைகள் ஆடைகளைக் களைந்து இன்னொருவருக்கு காட்டுவதற்கு இடங்கொடுப்பீர்களா? 
இவ்வாறு தரங்கெட்ட மானங்கெட்ட வேலை செய்வதனைவிட பணம் உழைக்க விரும்பினால் ஏனைய பெண்களின் ஆடைகளை களைந்து பணம் உழைப்பதை விடத்து உங்கள் மனைவி பிள்ளைகள் அக்கா தங்கைகளை வைத்து விபச்சார விடுதி நடாத்தி பணம் உழைக்கலாம்.
படத்தை கிளிக் பண்ணி பெரிதாக்கி பார்க்கவும் 
இங்கு படத்தில் இருக்கும் பிரியவும் நான்தான் தாரணியும் நான்தான்
இதனையும் பாருங்கள்.

இரத்த அழுத்தத்தை குணமாக்கும் சீரகம்



ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும் திராட...்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்து பருகவேண்டும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் அதிகரிக்காது. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
See More

அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அனாச்சாரங்கள் !!!

இணைவைத்தல்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே! அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே!
இன்றைய கால கட்டத்தில் இஸ்லாம் மார்க்கம் மக்களிடையே பரவாமல் தடுப்பதென்ற முடிவுடன் பலவித உத்திகளைக் கொண்டு அவப்பெயர் களையும், முஸ்லிம்களை மாத்திரம் தீவிரவாதத்தை உடையவர்களென பொய்ப் பிரச்சாரங்கள், பிட் நோட்டீஸ்கள் இன்னும் பிற முயற்சிகள் மேற்கொண்டாலும், இஸ்லாம் மார்க்கம் மேலும் மேலும் பரவி சத்தியத்தை நிலை நிறுத்துவதைக் காணலாம்.சத்தியம் அறியாத மக்களிடையே பரவினாலும், இந்த சத்திய மார்க்கத்தில் ஒவ்வொருவரும் நன்மையை ஏவி தீமையை தடுத்து சிறந்த சமுதாய முன்னோடிகளாக திகழக் கூடிய முஸ்லிம்களை ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்கி கற்றவர்கள் எனக் கூறிக் கொள்ளும் உலமாக்கள், மெளலவிகள் தங்களின் தவறான பிரச்சாரத்தின் மூலம் ”தர்கா” என்று சொல்லக் கூடிய சமாதிகளின் மீது அடிமைப்பட்டுக் கிடக்க வைத்துள்ளனர். இந்த அடிமைத்தனம் இன்று நேற்றல்ல நூஹு(அலை) அவர்களின் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
படைத்த இறைவனை மறந்து, தத்தமது சமூகங்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட நபியின் வழிமுறைகளை (சுன்னத்துகளை) மறந்து, இறைவனால் தூக்கியெறியப்பட்ட ஷைத்தானின் சூழ்ச்சியாலும், தத்தமது மன இச்சைகளைப் பின்பற்றியும் இறைவன் எதை மன்னிக்கவே மாட்டானோ அந்த இணை வைத்தலை செய்து வருகின்றனர்.
இவர்கள் செய்யக்கூடிய செயல்கள் தவறானது என்று நாம் கூறினோம் என்றால், அவர்கள் அளிக்கக் கூடிய பதில் “”உடம்பு சரியில்லையென்றால் டாக்டரிடம் காட்டுகின்றோம்; அவர் குணப்படுத்துகின்றார்; நாம் ஒரு முதலமைச்சரை சில காரணங்களுக்காக சந்திப்பது என்றால் நம்மால் இயலாது. அதற்கு நமக்கு தெரிந்த ஒரு M.L.A., M.P. ஐயோ தான் நமக்கு சிபாரிசு பண்ணக் கூடியவர் என்று நம்புகின்றோம்; செயல்படுத்துகின்றோம். நாமெல்லாம் பெரும் பாவம் பண்ணி இறைவனின் கோபத்திக்கு ஆளாகியுள்ளோம். எனவே நாம் பாவத்தை மன்னிப்பதற்கும் மறுமையில் சிபாரிசு பண்ணுவதற்கும் வக்கீலாகவே அவ்லியாக்களிடம் வேண்டுகிறோம் என்று கூறுவதைக் காணலாம்.
இவர்களுக்கு இறைவன் கூறக் கூடிய பதில் என்ன? தத்தமது நாயகர்களாக நினைக் கூடியவர்களிடத்தில் நடக்கும் அனாச்சாரங்கள் என்ன? என்பதை பற்றிப் பார்ப்போம்.
“தர்கா” என்பது மார்க்கப் பெரியார்களின் பெயரால் கட்டப்பட்டுள்ள கபுரடிகளாகும். இச்சமாதிகளின் மூலம் வழிகெடுவதுமல்லாமல், பலவித அனாச்சாரங்களைப் புரிவதையும் காணலாம். இது மட்டுமில்லாமல் இறந்துபோய் கபுரில் அடக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவதையும் காணலாம். ஏன் இந்த நிலையென்றால் – இறந்துபோன பெரியவர்கள் மூலம் தமது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகின்றன என்ற தீய எண்ணத்தை தவறான பிரச்சாரத்தின் மூலம் மனதில் நிறுத்தி வைத்திருப்பதே முக்கிய காரணமாகும். அவ்லியாக்கள் எனப்படுவோர் யார்? அவர்களின் தகுதிகளாக இறைவன் குறிப்பிடுவது எவற்றை? அவ்லியாக்களை எவர் அறிய இயலும்? இன்னார்தான் அவ்லியா என்பதற்கு என்ன அத்தாட்சி? இறைநேசகர்கள் யார் என்றால், இறைவனை ஏற்று, இறைவனால் அனுப்பப்பட்ட நபியைப் பின்பற்றி, நன்மை தீமைகளை மக்களிடம் எடுத்துரைக்கக் கூடிய மூஃமின்கள் அனைவரும் இறைநேசகர்கள் தான். இதை இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்(தயவு செய்து பார்க்கவும்) 2:195;2:2222;3:76;3:146,148,159;5:13;5:42;5:93;9:4-7,108;10:62,63; 49:9;60:8;61:4
மேற்குறிப்பிட்ட வசனங்களின் வாயிலாகவே இறைநேசகர்களின் அடையாளங்களையும், தகுதிகளையும் குறிப்பிடுகின்றான்.
தர்காவில் அடங்கி இருக்கும் இந்த இறை நேசர்களெல்லாம் தூய இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும் என்ற நன்நோக்கில் ஊரைவிட்டு, தாம் பிறந்த நாட்டை விட்டு, மனைவி மக்களையெல்லாம் விட்டு சத்தியத்தை எடுத்துரைக்கும் பொருட்டு ஹிஜ்ரத் புரிந்து, மார்க்கத்தை எடுத்துரைத்த இவர்களை இவர்களின் இறப்புக்குப் பின் அவர்களின் கபுரின் மேலாக கட்டிடம் எழுப்பி, அதற்கு வெள்ளையடித்து, பூமாலை, பூக்கள் தூவி அந்த கபுருக்கருகில் பச்சை நிற தலைப் பாகையுடன் ஒருவர் கையில் மயிலிற குடன் அமந்து கொண்டு அங்கு வருவோர் போவோரிடம் அவ்லியா சக்திமிக்கவர் பலவிதநோய்களைத் தீர்க்கக் கூடியவர், பல கராமத்களை உடையவர் என்று கூறி இன்ன அவ்லியாவுக்கு பாத்திஹா ஓதுங்கள் எனக்கூறி, தமக்குத் தெரிந்த அரைகுறையான அரபி வார்த்தைகளை முனுமுனுத்து அதைக் கொண்டு வயிறு வளர்ப்பதைக் காணலாம்.
அங்கு வரக்கூடிய மக்கள் இன்ன அவ்லியாவிடம் வேண்டிக் கொண்டால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைக் கிடைக்கும். நோய் தீரும் என்று நம்பி வந்து தங்களது ஈமானை இழக்கின்றனர். இந்த மக்கள் என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்பார்களா? இறைவனை நம்ப மறுத்து, அதற்கு இணையாக வணங்கும் கற்களை நோக்கி, மாரியம்மா, காளியம்மா , மூலியம்மா என்றழைக்கக்கூடிய காஃபிர்களும் கூட கற்களை வணங்குவதால் அவர்களுக்கும் நோய் தீர்ந்து விடுகின்றது. குழந்தை பிறக்கின்றது. இன்னும் பல தேவைகளும் பூர்த்தியாகின்றன. இதை வைத்து அவர்கள் வணங்க கூடிய கற்களை அவ்லியாக்களாக தங்களது பாதுகாவலர்களாக ஏற்றுக் கொள்வார்களா? சிந்திக்கவும். மேலும் நிராகரிப்பவர்கள் செய்யக்கூடிய செயல்களை யெல்லாம், முஸ்லிம் என்ற லேபிளில் செய்வதைக் காணலாம்.
அவர்கள் தத்தமது தெய்வங்களுக்கு வணங்க சூடம், சாம்பிராணி, பத்தி கொளுத்துவது போன்று, நம்மவர்களும் அவ்லியாக்களின் சமாதிகளுக்கு பூச்சூடி, பத்தி கொளுத்தி வருவதைக் காணலாம். அவர்களிடத்தில் விளக்கு ஏற்றி இறுதியில் பிரசாதம் என்ற பெயரில் சாம்பலை அளிக்கின்றார்கள். நம்மவர்களிடத்தில் துவாரஜகோஜனம் என்னும் பெயரில் பத்தி, நாட்டுச் சர்க்கரை, பூ எல்லாம் கலந்த கலவையாக அளிப்பதையும், அதை வாங்கி பக்தி சிரத்தையுடன் உண்பதற்கும், கூட்டம் அடித்து பிடித்து அலைமோதுவதையும் காணலாம். அவர்கள் ஊர் கூடி பால்குடம், தீர்த்தக் குடம் எடுத்தால், நம்மவர்கள் சந்தனக் குடம் எடுத்து விமரிசையாக கொண்டாட்டம் போடுவதைக் காணலாம். இதுபோன்ற பல உதாரணங்களை நாம் எடுத்துரைக்கலாம். இன்னும் இந்த அவ்லியாக்களுக்கு பல பாத்திஹாக்கள் ஓதுவதைக் காணலாம். பாத்திஹா ஓதுவதால் பரக்கத் ,செல்வம், சிறப்பு என்று பல கிடைக்கின்றன என்றால்,பாத்திஹா ஓத வைக்கக் கூடிய உங்களுக்கு இது போன்றவை கிடைக்கும் எனில்…. ஓதக் கூடிய பச்சை தலைப்பாகை பண்டாரங்களுக்கு எவ்வளவு கிடைக்க வேண்டும்? அதுவும் நீங்கள் பயணம் செய்து அவ்லியாக்களுக்கு பாத்திஹா ஓதுகிறீர்கள். அவ்லியாவுக்கு பக்கத்திலேயே காலம் பூரா அமர்ந்து இந்த செயல்களை செய்கின்ற இந்த பண்டாரங்கள் உங்களோட கைகளை எதிர்பார்த்து ரூ.5,10க்கு ஆசைப்படுவது எதைக் காட்டுகின்றது?
அங்கிருக்கக் கூடியவர்களுக்கே ஒன்றும் இல்லை….ஆனால் உங்களுக்கு மட்டும் பரக்கத் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுவதை எப்படி எதிர்பார்க்க இயலும்? அதுவும் அவ்லியாவின் மேலே அவர்களுக்கே நம்பிக்கையில்லை. தத்தமது உணவு பிரச்சினை தீர்க்க உண்டியல் நடப்பட்டு, அதில் விழக்கூடிய காசுகளை எதிர்பார்ப்பது எதைக் காட்டுகின்றது? சிந்திக்கவும். இங்கு ஓதக் கூடிய பாத்திஹாக்களுக்குப் பின் கொடுக்கப்படும் நார்சா மிக சிறப்பாக கண்ணியப்படுத்தப்படுகின்றது. பக்தி சிரத்தையுடன் பெற்று தமது சொந்தக்காரர்களுக்கு உறவினர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதை சாப்பிடுவதால் பலா முஸீபத்துகள் (நோய் நொடிகள்) வெருண்டோடுவதாகவும் நம்பிக் கொள்கின்றனர். கடையில் இருக்கும் சர்க்கரை, பூ, கல்கண்டு இவைகளுக்கு இருக்கும் இடத்தில் மதிப்பு இல்லை. ஆனால் இது நார்சாவாக உருவெடுத்தால், இவைகளின் மீது அவ்லியாவின் பரக்கத் இறங்கியுள்ளதாக எண்ணுவது எந்த அளவு அறியாமை?
மேலும் இந்த அவ்லியாக்களால் நோய்களையும், பேய்(?)களையும் குணப்படுத்த இயலும் என்று நம்பச் செய்து பேய்(?) பிடித்து இருப்பவர்களை அழைத்து வந்து அவர்களை அங்கு தங்கச் செய்து, பல சித்திரவதைகள் புரிந்து மனநிலை சரியில்லாத்வர்களை குற்றுயிரும், குலையுயிருமாக வெளிக் கொண்டு வருவதையும் காணலாம்.
இறந்தவர்கள் பேயாக வருவதில்லை:
ஒரு மனிதரோ, பெண்ணோ மன அழுத்தத்தின் காரணமாக மன வியாதிக்கு ஆட்பட்டால் அவர்களையெல்லாம் பேய் பிடித்து உள்ளவர் என்று கூறி தர்காக்களில் சங்கிலிகளால் பிணைத்து அவர்களை அடித்து, உதைத்து சித்திரவதைப்படுத்தி தன் வயிறுகளை வளர்க்க மிரட்டி இன்ன இன்ன  பொருள்களை தொடுத்தால் இன்னாரை விட்டு விலகி விடுகின்றேன் எனச் சொல்லச் செய்து, அதே போன்று பொருட்களைப் பெற்று – தர்ம அடிகளை பரிசாகக் கொடுத்து, சுரண்டுவதில் குளிர்காய்கின்றனர்.
மனநிலை சரியில்லாதவர்களை அவ்லியாக்களிடத்தில் சென்றுதான் குணப்படுத்த வேண்டும் என்பதில்லை. இறைவனின் மீது தவக்கல் வைத்து சிறந்த மனநல மருத்துவரை நாடி சிகிட்சை பெற்றாலே போதும். ஆனால் உளறல் பிதற்றல் ஓடுவது, சப்தமிடுவது ஆகிய அனைத்தும் விரோதி சைத்தானின் தூண்டலே. பிறந்த குழந்தை மீண்டும் தாயின் கர்ப்பப்பையில் எப்படி நுழைய முடியாதோ, கறந்த பால் மீண்டும் எப்படி மடிபுகாதோ அதே போல் இறந்தவர்களின் ஆன்மா மீண்டும் இவ்வுலகம் வர முடியாது. 39:42 இறைவாக்கின்படி இறப்பில் கைப்பற்றப்பட்ட ஆன்மா மீண்டும் இவ்வுலகிற்கு வரவே முடியாது. இப்படி இருக்கையில் இறந்த ஒருவரின் ஆன்மா மற்றொருவதை சார்வது எப்படி சாத்தியமாகும்? சிந்திக்கவும்!
“கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களையும் அவற்றில் பள்ளிகள் கட்டுபரைவுயும் விளக்கேற்றுபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தனர்.”  ஆதாரம்: அபூஹுரைரா(ரழி), நூல்: ஸுனன்.
மேற்காணும் ஹதீஸுக்கு மாறாக பெண்கள் சாரைசாரையாக கபுருக்கு செல்வதையும் விளக்கேற்றுவதையும் கப்ரின் மேலே கட்டம் கட்டப்பட்டுள்ளதையும் காணலாம். இச்செயல்கள் மிக வேதனைக் குரியதாக உள்ளன. நபி(ஸல்) அவர்களை நேசிப்பதகாவும், உயிருக்கு மேலானவர்கள் என்று எண்ணக்கூடியவர்கள் கீழ்வரும் ஹதீஸை கவனிக்கவும். நபியின் மகளார் பத்திமா(ரழி)க்கே கப்ருக்கு சென்றால் கடுந்தண்டனை கிடைக்கும் என்பதை காணலாம்.
நபி(ஸல்) அவர்களோடு சென்று நாங்கள் ஓர் மைய்யத்தை அடக்கம் செய்த பின் அவர்களோடு அந்த இறந்தவரின் வீட்டின் பக்கம் திரும்பி வரும் போது எதிர்பாரா வண்ணம் ஒரு பெண் முன்னாலிருந்து வருவதை நபி(ஸல்) கண்டுவிட்டனர். அப்பெண் எவர் என்பதை நபி(ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்று நான் எண்ணிணேன். அவர் பாத்திமா(ரழி) அவர்கள் தாம்! எனவே நபி(ஸல்) அவர்கள் (தம் அருமை மகளாரை நோக்கி)” உம்முடைய வீட்டிலிருந்து எக்காரணம் கொண்டு வெளி வந்தீர்! என்று வினவினார்கள்; அதற்கு பாத்திமா(ரழி) அவர்கள், இறந்தவரின் குடும்பத்தினரிடம் சென்று அவர்களுடைய இறந்த உறவினருக்கு இறையருளைக் கேட்டுவிட்டு அவர்களுக்கும் அனுதாபம் கூறிவிட்டு வருகிறேன் என்று கூறினார்கள். (அது கேட்ட) நபி(ஸல்) அவர்கள் நீர் அவர்களுடன் அவரின் அடக்க இடத்திற்கு சென்றீரா? என்று வினவ (அதற்கு) பாத்திமா(ரழி) அல்லாஹ் என்னை காத்தருள்வானா! நிச்சயமாக தாங்கள் இதுபற்றி (கூடாது என்று) கூறி வந்ததை நான் செவியுற்றேன்”என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் நீர் அவர்களோடு (அவரின்) அடக்கதலத்திற்கு சென்றிருப்பீராயின் அதன் காரணமாக உமக்கு கடும் வேதனையுண்டு என்று கூறி “”உன் தந்தையின் பாட்டன் சொர்க்கம் செல்லும் வரை நீயும் செல்ல முடியாது” என்று கூறினார்கள்.
ஆதாரம்: இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரழி), நூல்: அபூதாவூத், நஸயீ.
மேற்கண்ட ஹதீஸின் வாயிலாக பெண்கள் கப்ருக்குளுக்குச் சென்றால் கடுந்தண்டனை உண்டு என்பதை உணரலாம். இது மாத்திரம் அல்லாமல் தர்காக்களில் தட்டு, தாயத்துகள் விற்கப்படுகின்றன. இதைக் கொண்டு (செப்புத் தகட்டில்) ஏதோ சில அரபி வாசகங்களை எழுதி தத்தமது வீடுகளின் முகப்பில் பிரேமிட்டு மாட்டி விட்டால் முஸீபத்துகள், கெட்ட செயல்களெல்லாம் விலகிவிடும் என்றும், தாயத்துகள் அணிந்து கொண்டால் பேய்கள், ஆவிகள், பயம் ஆகியவற்றி லெல்லாம் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று விற்பனை செய்கின்றனர். இதை நம்பி வாங்கக் கூடிய மக்கள் இந்த தகடு, தாயத்துகள் மீது மிகுந்த மரியாதை செலுத்துவதையும் காண்கின்றோம். இந்தப் செப்புத் தகட்டிற்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பத்தி, சாம்பிராணி போடப்பட்டடு மிக பக்தி சிரத்தையுடன் பாதுகாக்கின்றனர். ஆனால் இதற்கு அளிக்கக்கூடிய சிரத்தையை குர்ஆனுக்கு அளிக்கின்றார்கள்? என்பதை பார்த்தோமானால் நிச்சயம் இல்லையென்றே சொல்லலாம்.
குர்ஆனை பக்குவமாக பட்டுத்துணியெடுத்து அதை உறையாக தைத்து உயரமான இடத்தில் வைத்து விடுகின்றனர்; ஒரு சிறைக் கைதியைப் போல. ஏனெனில் சிறையில் இருக்கக்கூடிய ஒருவன் தான் பரோலில் வெளியே வந்து, பரோலின் காலம் முடிந்த பின் மீண்டும் சிறைக்கு செல்வானோ, அதுபோல குர்ஆனை உயரமான இடத்தில் வைத்து விட்டு, வீடுகளில் எவரேனும் இறந்து, இறந்தவர்களுக்கு -3ம் பாத்திஹா, 7ம் பாத்திஹா, 40ம் பாத்திஹா என்ற நிலைக்கு மாத்திரம் குர்ஆனை கையிலெடுத்து அரபி வாசகங்களை ஓதிவிட்டு, மீண்டும் இருந்த இடத்திலேயே வைக்கின்றார்கள். இறைவன் “”குர்ஆன்”க்கு மாத்திரம் பேசக் கூடிய சக்தியை அளிதிருப்பானாயின் குர்ஆன் இறைவனிடத்தில் பிரார்த்திக்கும் “”யா இறைவா இன்னார் வீட்டில் தொடர்ந்து மரணத்தை அளிப்பாயாக”, ”அப்பொழுதுதான் என்னைக் கையிலெடுத்து ஓதுகின்றார்கள் ” அந்த சந்தர்பத்திலாவது எனக்கு விடுதலை கிடைக்கின்றதாகப் பிரார்த்திக்கும்.
-குர்ஆனைப் பற்றி இறைவன் தன் திருமறையில் இந்த குர்ஆனை நன்கு நினைவுப்படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:40)
இதற்கு மாற்றமான முறையிலேயே பயன் படுத்துவதைக் காணலாம். மேலும் தாயத்துகளை அணிவதை ஹதீஸ் தடை செய்கின்றது. இதுமட்டுமல்ல சந்தனக்கூடு – உரூஸ் என்ற பெயரில் பல அனாச்சாரங்களும் நடக்கின்றன.
சந்தனக்கூடு – உரூஸ் அன்று விசே­பாத்திஹாக்கள் ஓதப்பட்டு, சந்தனம் ஊற்றப்பட்டுள்ள சந்தனக் குடத்தை ஊர்வழியாக ஊர்வலம் சென்று அவ்லியாக்களின் சமாதிகளில் பூச, விழா ஏற்படுத்தி அந்த விழாவில் கூட்டங்கள் அலைமோ, ஆண், பெண் இருபாலரும் கூட்டத்தின் நெரிசலில் இடித்து, கெட்ட செயல்களையெல்லாம் புரிந்து அனாச்சாரங்களை நிறைவேற்றும் இடங்களாக அவ்லியாக்களின் சமாதிகளுகும், அடக்க ஸ்தலங்களும் பயன்படுகின்றன.
இந்த உரூஸில் சிலம்பாட்டம், ஒலியாட்டம், குரங்காட்டம் போன்ற பல செயல்களை இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத முற்றிலும் மாற்று இனத்தவர்கள் புரியக் கூடிய செயல்களை இஸ்லாமிய திருவிழா போல நடத்துவதைக் காணலாம்.
இதுவும் அல்லாமல் பூக்குழி இறங்குதல் என்ற பெயரில் நெருப்பு மிதித்தல் என்ற நிகழச்சியையும் நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி எதன் வாயிலாக நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி எதன் வாயிலாக என்றால் தாங்கள் குடும்பத்தார்கள் படைத்த இறைவனை விட்டு தனது அடிமையிடம் தாங்களது பிரார்த்தனையை வேண்டி, அந்த பிரார்த்தனைகள் இறையருளால் பூரணம் ஆனால் – அது அந்த அவ்லியாவால் தான் நடந்தது என்று எண்ணி அந்த அவ்லியாவுக்கு நன்றிக் கடன் செலுத்துவதாக எண்ணி இந்த நெருப்புக் குழியில் இறங்கி, தங்களது நேரத்தையும், கால்களையும் புண்ணாக்கி கொண்டு, யா முஹைதீன், யா காஜா என்றெல்லாம் கூப்பாடுகளிட்டு அலறுவதில் எத்தகைய பயனும் இல்லை.
அந்த அவ்லியாவுக்கு நேர்ந்து முடி இறக்குவதும், ஆடு மாடு, கோழிகளை அறுத்து பலியிடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.  மேலும் அந்த அவ்லியாக்களின் சமாதிகளில் விபச்சாரங்களும், சீட்டாட்டங்களும், மது விற்பனைகளும் நடப்பதை காண்கையில் நிச்சயமாக இந்த இடம் புனிதமானதாகவோ, பயணம் செய்யக்கூடிய இடங்களோ என்றால் நிச்சயமாக இல்லை. அதுவும் அவ்லியாக்களின் பெயரைக் கேட்டால் சிரிப்பு வரவழைக்கும் பெயர்களைக் காணலாம்.
பீர்அவ்லியா, சட்டி மஸ்தான், நெட்டைபாவா, சைதானீபீவி அவ்லியா என்றெல்லாம் அழைக்கப்பட்டு இந்த அவ்லியாக்களுக்கும் கராமத்துகள் உண்டென்று நம்ப வைத்து பணம் சுரண்டி உண்டு வருவதையும காணலாம். இதுபோன்ற பெயர்களில் எல்லாம் உள்ள அவ்லியாக்கள் நிச்சயமாக இறை நேசகர்களாக இருக்க முடியாது. ஏனெனில் எங்க ஊர் பக்கம் ஒரு கதை சொல்வாங்க.
(இக்கதை மார்க்கமல்ல)
ஓர் ஊரில் தகப்பனும், மகனும் வசித்தார்கள் அவர்கள் இருவரும் வேலை என்றாலே வேப்பங்காய் கசப்பை போன்றதாக எண்ணுபவர்கள். இந்நிலையில் ஊரார்கள் இவர்களின் நிலையைக் கண்டு அடித்து விரட்டவே, இவர்கள் தங்கள் உணவிற்காக அடுத்த ஊரை நோக்கிச் சென்றார்கள். செல்லும் போது தகப்பனுக்கு ஓர் எண்ணம்!
தன் மகனிடம் “”மகனே நீ பக்கத்து ஊருக்கு போ, நான் வேறு ஊருக்கு செல்லுகின்றேன்” என்று கூறி சென்று விடவே, மகன் பக்கத்து ஊருக்குச் சென்றான். பக்கத்து ஊரில் அவனுக்கு எவரும் உணவளிக்க மறுக்கவே, உட்கார்ந்த இடத்திலிருந்தே உண்ணவும், பணம் சம்பாதிக்கவும் எண்ணிய அவன், அவ்வழியே சென்ற ஒரு நொண்டிப் கழுதையினை அடித்து புதைத்து விட்டு, புதைத்த இடத்தில் மண் கோபுரம் எழுப்பி, அதற்கு பூஜைகளை செய்து வந்தான். அவ்வழியே வருவோர் போவாரிடம், இன்ன இடத்தில் மிகப் பெரிய மகான் ஒருவர் அடங்கி உள்ளார். இவருக்கு பல சக்திகள் உண்டு, நோய்களை தீர்ப்பார், பேய்களை விரட்டுவார் என்றெல்லாம் கூறவே, அதை நம்பிய மக்கள் தத்தமது தேவைகளை நிறைவேற அந்த மிகப் பெரிய(?) மகானிடம் வேண்ட அதுவும் ஏதோ காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக நிறைவேற, கூட்டம் கூடவே, மகானுக்கு தட்சணை என்ற பெயரில் மக்கள் பொருட்களையும், பணங்களையும் கொடுக்க அதை மகன் எடுத்து தம் வயிற்றுப் பசி நீக்கி, எஞ்சிய பொருட்களில் மிகப்பெரிய வீடுகட்டி வாழ, அதை அறிந்த தகப்பன் வந்து சேர்ந்து, மகனிடம் நீ எவ்வாறு இவ்வளவு பெரிய ஆளாக ஆனாய்? என்று வினவவே, அவன் “”கழுதை மிகப்பெரிய மகானான கதை” கூறினார். இந்த சிந்தனை எனக்கு வரவில்லை,என்று கூறி “மகனுடன் தகப்பனும் சேர்ந்து கொண்டான்”.
மேற்கண்ட கதையைப் போலவே தத்தமது வயிறுகளை வளர்க்க நம்மவர்கள் உருவாக்கிய பல சமாதிகளாக பல தர்காக்கள் கட்டி வைத்துக் கொண்டு மக்களிடம் சுரண்டி வருகின்றனர். மேற்கூறப்பட்ட செயல்களுக்கும், அவ்லியாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மேலும் இறைவனும், இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களும் காட்டி தந்த முறைதானா என்றாலும் இல்லை. மாறாக இறைவன் தன் திருமறையில், தன்னை விட்டு தன் அவ்லியாவிடம் கையேந்துபவர்களை நோக்கிக் கூறுகின்றான்.
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி, எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவர்களும், உங்களைப் போன்ற அடிமைகளே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்லுபவர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள், உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்.” (அல்குர்ஆன் 7:194)
“”….அவர்களுக்கு கால்கள் இருக்கின்றனவா? அவைகளைக் கொண்டு நடக்கின்றார்களா? அவர்களுக்குக் கைகள் இருக்கின்றனவா; அவைகளை கொண்டு பிடிக்கின்றாரக்ளா? அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றனவா; அவைகளைக் கொண்டு பார்க்கின்றனரா? அவர்களுக்கு காதுகள் இருக்கின்றனவா; அவைகளைக் கொண்டு கேட்கின்றனரா? (அல்குர்ஆன் 7:195)
இறந்துவிட்ட அவ்லியாவுக்கு கால்கள் இருந்தும் நடந்து வர இயலாது. கைகள் இருந்தும் அதைக் கொண்டு எவ்வித செயல்களை செய்ய இயலாது. கண்கள் இருந்தும் எந்த ஒரு பொருளையும் பார்க்க இயலாது. காதுகள் இருந்தும், (கேட்கும் பிரார்த்தனைகளை) செவி சாய்த்து, பதில் கூறவோ சிபாரிசு பண்ணவோ இயலாது. மேலும் அவ்லியாக்களுக்கு நேர்ச்சை புரிந்து, ஆடு,கோழி, மாடுகளை அறுத்து பலியிடுகின்றனர். பலியிடுவது முழுவதும் அல்லாஹ்வுக்கே….
“” கால்நடைகளிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு நேர்ச்சைக்காக) இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி, நாங்கள் விரும்புகிற (புரோகிதர், அவ்லியா முதலிய) வர்களைத் தவிர, (மற்றெவரும்) அதனைப் புசிக்க கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர்.” (அல்குர்ஆன் 6:138)
அவ்லியாக்கள் எங்களுடைய கனவில் வந்து இன்ன தர்காவிற்கு வரச் சொன்னார். அதனால் போகின்றோம் எனக் கூறி தர்காக்களுக்கு செல்லுபவர்களுக்கென அல்லாஹ் கூறுகின்றான்.
“”(நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) என்னுடன் இருப்பவர்களின் வேதமும், (அதவாது, குர்ஆன் இன்ஜில், தவ்றாத்) இதோ இருக்கின்றன.(அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதற்கு) உங்களுடைய அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்” என்று கூறும். எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிந்து கொள்ளாமல் புறக்கணிக்கின்றனர். (அல்குர்ஆன் 21:24)
மேற்கூறப்பட்ட வசனத்திலிருந்து அவ்லியாக்களை வணங்குவ தற்கும், நேர்ச்சை புரிவதற்கும் எந்தவித அத்தாட்சியையும் இறைவனு டைய வேதத்திலிருந்தும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையிலிருந்து எவரும் கொடுக்க முடியாது என்பதை உணரலாம்.
எனவே இறைவனுடைய வாக்கான “”இணைவைத்தலை மண்ணிக்கவே மாட்டேன் ” என்பதற்கிணங்க நாமும் நம் பின்வரும் சந்ததிகளும் இதுபோன்ற விலக்கப்பட்ட செயல்களை விட்டு விலகி, நன்மையை ஏவி தீமையை தடுத்து ரஸூல்(ஸல்) காட்டி தந்த முறையை செயல்படுத்த நம்மீது இறைவன் அருள்புரிவானாக!
http://www.readislam.net/portal/archives/2196#comment-733.
அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அனாச்சாரங்கள்
அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அனாச்சாரங்கள்
அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அனாச்சாரங்கள்

Friday, April 6, 2012

ரத்த தானம் வேண்டுவோர்க்காண ஆன்லைன் சேவை!



இந்தியாவில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் சில நேரங்களில் ஆபத்து காலத்தில் ரத்தம் கொடுப்பவர்களை எப்படி தேடுவது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.இதுவரை ரத்த தானம் மூலம் 40 ஆயிரம் பேரின் குடும்பத்துக்கு ஒளியை அளித்திருக்கிறது இத்தளம் .இணையதள முகவரி: 
http://www.friends2support.org/
இத்தளதிற்கு சென்று என்ன ரத்தப் பிரிவு தேவை என்பதையும்,இந்தியாவில் எந்த எந்த மாநிலத்தில்,எந்த மாவட்டத்தில்,எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்தல் போதும்.உங்கள் மாவட்டத்தில் ரத்தம் கொடுத்து உதவ எத்தனை நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களின் முகவரி அல்லது அலைபேசி எண்ணை உங்களுக்கு காட்டும் உடனடியாக நாம் அவர்களை தொடர்பு கொண்டு ரத்தம் கொடுப்பது பற்றி பேசலாம்.
5 வருடத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் பங்கு கொண்டு ரத்த தானம் செய்வது என்பது ஒரு இமாலய வெற்றி தான்.ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களின் தகவல்களை கொடுத்து இத்தளத்தில் உறுபினராக பதிந்து கொள்ளலாம்
.எங்கோ கிராமத்தில் வாழும் ஒரு குழந்தைக்கு அரிய வகை ரத்தம் தேவைபடும் அங்கும் இங்கும் ஓடி சென்று தேடி கிடைக்காமல் யாரிடம் தொடர்பு கொண்டால் கிடைக்கும் என்று தெரியாமல் இருக்கும் நம்மவர்களுக்கு இத்தளத்தை அறிமுகபடுத்துங்கள் ஒருவரின் வாழ்வை நாம் காப்பாற்றியது போல் உணர்வு கண்டிப்பாக இருக்கும்.
உதவுங்கள் முகம் தெரியாத நண்பர்களுக்கு.

23 பேர் உட்காரும் பிரமாண்ட கார் : பெண் விஞ்ஞானி அசத்தல் !


‘சூப்பர் பஸ்’ என்ற பெயரில் பஸ்சைவிட பெரிய சொகுசு காரை இத்தாலியை சேர்ந்த பெண் விஞ்ஞானி வடிவமைத்துள்ளார். 23 சீட்கள் கொண்ட இந்த கார் விலை ரூ.55 கோடி.
இத்தாலியை சேர்ந்த விமானவியல் விஞ்ஞானி அன்டோனியா டெர்சி (40). ஹாலந்தின் டெல்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் விமான வடிவமைப்பு துறை ஆராய்ச்சியாளராக பணியாற்றி உள்ளார். ரேஸ் கார்கள் வடிவமைப்பதிலும் கில்லாடி.
பிரமாண்ட சொகுசு கார் உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சி இவரது தலைமையில் டெல்ட் பல்கலைக்கழகத்தில் நடந்தது. ஹாலந்து அரசு உதவியுடன் அமெரிக்காவை சேர்ந்த ‘டாவ்’ ரசாயன நிறுவனம் மற்றும் ஆட்டோமொபைல் துறை ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு நடந்தது. சூப்பர் வாகனத்துக்கான தொழில்நுட்பம் இறுதி செய்யப்பட்ட பிறகு, வாகன வடிவமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது ‘சூப்பர் பஸ்’ என்ற பெயரில் பிரமாண்ட சொகுசு கார் தயாரிக்கப்பட்டுள்ளது. 49 அடி நீளம், 8 அடி அகலம், 5 அடி உயரம் என நீ...ளமான கார் போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 23 பேர் உட்காரலாம். இந்த பக்கம் 8, அந்த பக்கம் 8 என மொத்தம் 16 கதவுகள். சூப்பர் பஸ்சின் முன், பின் பக்கங்கள் உலகப்புகழ் பெற்ற லம்போர்கினி கார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணம் மிக மிக சொகுசாக இருப்பதற்கேற்ப அதிநவீன ஹைட்ராலிக் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அலுமினியம், கார்பன் பைபர், பைபர் கிளாஸ், பாலிகார்பனேட் ஆகியவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கார் என்பதால் எடை குறைவு. அதிகபட்சம் 250 கி.மீ. வேகத்தில் போக முடியும். சூப்பர் பஸ் விலை ரூ.55 கோடி. சூரிய ஒளியில் பேட்டரியில் சார்ஜ் ஏற்றப்பட்டு இந்த கார் இயங்குகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சூப்பர் பஸ்சை முதன்முதலில் வாங்கியிருக்கிறார். ஹாலந்தில் இருந்து ஜம்போ ஜெட் வாகனத்தில் வைத்து அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்ட சூப்பர் பஸ், அங்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. காரை டிசைன் செய்த பெண் விஞ்ஞானி அன்டோனியா டெர்சி ஓட்டிக் காட்டினார்.

23 பேர் உட்காரும் பிரமாண்ட கார் : பெண் விஞ்ஞானி அசத்தல் !


‘சூப்பர் பஸ்’ என்ற பெயரில் பஸ்சைவிட பெரிய சொகுசு காரை இத்தாலியை சேர்ந்த பெண் விஞ்ஞானி வடிவமைத்துள்ளார். 23 சீட்கள் கொண்ட இந்த கார் விலை ரூ.55 கோடி.
இத்தாலியை சேர்ந்த விமானவியல் விஞ்ஞானி அன்டோனியா டெர்சி (40). ஹாலந்தின் டெல்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் விமான வடிவமைப்பு துறை ஆராய்ச்சியாளராக பணியாற்றி உள்ளார். ரேஸ் கார்கள் வடிவமைப்பதிலும் கில்லாடி.
பிரமாண்ட சொகுசு கார் உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சி இவரது தலைமையில் டெல்ட் பல்கலைக்கழகத்தில் நடந்தது. ஹாலந்து அரசு உதவியுடன் அமெரிக்காவை சேர்ந்த ‘டாவ்’ ரசாயன நிறுவனம் மற்றும் ஆட்டோமொபைல் துறை ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு நடந்தது. சூப்பர் வாகனத்துக்கான தொழில்நுட்பம் இறுதி செய்யப்பட்ட பிறகு, வாகன வடிவமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது ‘சூப்பர் பஸ்’ என்ற பெயரில் பிரமாண்ட சொகுசு கார் தயாரிக்கப்பட்டுள்ளது. 49 அடி நீளம், 8 அடி அகலம், 5 அடி உயரம் என நீ...ளமான கார் போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 23 பேர் உட்காரலாம். இந்த பக்கம் 8, அந்த பக்கம் 8 என மொத்தம் 16 கதவுகள். சூப்பர் பஸ்சின் முன், பின் பக்கங்கள் உலகப்புகழ் பெற்ற லம்போர்கினி கார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணம் மிக மிக சொகுசாக இருப்பதற்கேற்ப அதிநவீன ஹைட்ராலிக் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அலுமினியம், கார்பன் பைபர், பைபர் கிளாஸ், பாலிகார்பனேட் ஆகியவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கார் என்பதால் எடை குறைவு. அதிகபட்சம் 250 கி.மீ. வேகத்தில் போக முடியும். சூப்பர் பஸ் விலை ரூ.55 கோடி. சூரிய ஒளியில் பேட்டரியில் சார்ஜ் ஏற்றப்பட்டு இந்த கார் இயங்குகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சூப்பர் பஸ்சை முதன்முதலில் வாங்கியிருக்கிறார். ஹாலந்தில் இருந்து ஜம்போ ஜெட் வாகனத்தில் வைத்து அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்ட சூப்பர் பஸ், அங்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. காரை டிசைன் செய்த பெண் விஞ்ஞானி அன்டோனியா டெர்சி ஓட்டிக் காட்டினார்.

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள்


மகளின் தயவில் தாய்
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777, 50
பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)
குறிப்பிட்டார்கள்.
நூல்: புகாரி 50
குடிசைகள் கோபுரமாகும்
இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 7121
விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231
தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள்
நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு
காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று
விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 59, 6496
பாலை வனம் சோலை வனமாகும்
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்
கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக
மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
நூல் : முஸ்லிம் 1681
காலம் சுருங்குதல்
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)
ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.
(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு
விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.
நூல் : திர்மிதீ 2254)
கொலைகள் பெருகுதல்
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம்
(ஸல்) கூறியுள்ளனர்.
நூல் : புகாரி 85, 1036, 6037, 7061
நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள்
நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல்: புகாரி 1036, 7121
பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.
நெருக்கமான கடை வீதிகள்
கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: அஹ்மத் 10306
பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்
அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: புகாரி 81, 5231, 5577, 6808
ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 3971, 5098
உயிரற்ற பொருட்கள் பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.
நூல்: அஹ்மத் 11365
பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்
வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: அஹ்மத் 1511
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493
பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493
சாவதற்கு ஆசைப்படுதல்
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல்
செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.
நூல்: புகாரி 7115, 7121
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக
முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 3609, 7121
முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்
நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3456, 7319
யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.
நூல்: புகாரி 2926
கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள்
சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.
நூல் : புகாரி 5179
யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 7119
கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்
மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 3517, 7117
அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது
நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5183
எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப்
பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5191
செல்வம் பெருகும்
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 1036, 1412, 7121
ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 1424
மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்
ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே
வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936
பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்
4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12
ஆயிரம் பேர் இருப்பார்கள்.
நூல் : புகாரி 3176
மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 2451
அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 3546
மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து
விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள்
நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.
புகை மூட்டம்
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக!
அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக
அமைந்திருக்கும்.
(அல்குர்ஆன் 44:10,11)
உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.
அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்
பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.
மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)
நூல்: தப்ரானி
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே
அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(அல்குர்ஆன் 21:96)
ஈஸா(அலை) அவர்களின் வருகை
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.
(அல்குர்ஆன் 43:61)
மூன்று பூகம்பங்கள்
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு
தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்
பெரு நெருப்பு
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச்
செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்

மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது இதுதான்

நாவின் விபரீதம்
அல்லாஹ் மனிதனுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கின்றான். அவைகளில் மிக முக்கியமானது பேசும் நாவாகும். நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம். கத்தியைக் கொண்டு ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரின் உயிரைப் பாதுகாக்கவும் செய்யலாம். அதே கத்தியைக் கொண்டு ஒருவரின் உயிரை எடுத்தும் விடலாம். இதே போன்றது தான் நாவும். நாவைக் கொண்டு சொர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமையலாம். ஆகவே நாவை பேணிப் பாதுகாப்போம்.
மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது நாவு என்று சொன்னால் அது மிகையாகாது. இதை எப்படி நாம் பயன்படுத்துகிறோமோ அதன் படியே முடிவும் இருக்கும். சிலர் இந்த நாவை சரியாகப் பயன்படுத்தி மனிதர்களில் ‘சிறப்பிடத்தைப்’ பெற்று விடுகிறார்கள். சிலர் இதே நாவை முறையற்ற வழியில் பயன்படுத்தி ‘மனிதர்களில் தரம் தாழ்ந்தவர்கள்’ பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள். இப்படிப்பட்ட நாவைப் பற்றி திருக்குர்ஆனும் நபி மொழியும் என்ன கூறுகின்றன என்பதைக் காண்போம்.
‘எதைப் பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைப் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலன், பார்வை இதயம் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்பற்றி) கேள்வி கேட்கப்படும்’. (அல்குர்ஆன் 17:36)
‘ஒருவனிடம் கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை’. (அல்குர்ஆன் 50:18)
நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கு உரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) அல்லாஹ், அதற்காக அவன் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)
ஓர் அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
‘(நாளை மறுமையில்) மனிதர்களை முகம் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)
அரைகுறை ஞானமுள்ள எந்த விஷயத்தையும் நாம் வெளிப்படுத்தக் கூடாது! ஏனென்றால் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் வானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தவறாகப் பயன்படுத்திய வார்த்தைகளைப் பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய தண்டனை வழங்கப்படும்.
நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த்தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத்திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும் என நபி ஸல் அவர்கள் கூறியதை மனதில் பதிய வைக்க வேண்டும். இந்த ஹதீஸ் நாவை எந்த அளவிற்கு கவனமாகக் கையாள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.
நாவினால் நிகழும் சில தவறுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. அவற்றைத் தெரிந்து முற்றிலும் அப்படிப்பட்ட தவறுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
1. புறம் பேசுதல்
மனிதர்கள் கூட்டமாக கூடி விட்டாலே அங்கு யாரையாவது குறை கூறி விடுகின்றனர். ஆண், பெண் இருபாலாரும் அடுத்தவரைப் பற்றி குறிப்பிட்டு புறம் பேசுவது வாடிக்கையான செயலாக மாறி விட்டது. இப்படி அடுத்தவரைக் குறை கூறி பேசுவதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.
சிலர் நாங்கள் உண்மையைத்தானே கூறுகிறோம், இதில் தவறென்ன இருக்கிறது? என்று கேட்கலாம். ஒருவரிடத்தில் இருக்கும் தவறைக் கூறுவதே புறமாகும். ஒருவரிடத்தில் தவறிருக்கக் கண்டால் அந்த தவறை உரியவரிடம் நேரடியாகக் கூறி அவரது தவறை நீக்க முயல வேண்டுமே தவிர ஊர் முழுக்கப் பறைசாற்றக் கூடாது.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் புறம் பேசுவது என்றால் என்ன? என தோழர்களிடம் வினவினார்கள். அதற்கு தோழர்கள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே இதனை நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுவது என்பது) நீர் உம் சகோதரரைப் பற்றி அவர் வெறுப்பதைக் கூறுவதாகும் என பகர்ந்தார்கள். நான் கூறும் விஷயம் என் சகோதரரிடம் இருந்தால்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நீர் கூறும் விஷயம் அவரிடம் இருந்தால் நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டீர். நீர் கூறும் விஷயம் அவரிடம் இல்லையென்றால் நிச்சயமாக நீர் அவரைப்பற்றி அவதூறு கூறிவிட்டீர் எனப் பகர்ந்தார்கள். (நூல்: முஸ்லிம்)
புறம் பேசுவது தனது சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பதைப் போன்றது என்று திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றது.
‘மேலும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்’. (49:12)
புறம் பேசுதலைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது புறம் பேசுபவரின் வார்த்தையைக் கடலில் போட்டால் இதனுடைய கடுமையான சொல்லின் காரணத்தால் கடல் நீரின் தன்மையே மாறிவிடும் என்றார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம், சஃபிய்யா (ரலி) அவர்களுடைய இன்னன்ன விஷயங்கள் உங்களுக்குப் போதுமானதாகும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ கூறிய அந்த வார்த்தையை கடல் நீரில் கலந்தால் (அதனுடைய தன்மையையே) மாற்றி விடும் என்றார்கள். (நூல்: அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்)
புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களாலேயே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தை கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினால் ஆன நகங்கள் இருந்தன. அவற்றின மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் (தாமே) காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே இவர்கள் யார்? என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தை சாப்பிட்டார்கள் (அதாவது புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் பங்கம் விளைவித்தவர்கள் என விளக்கமளித்தார்கள். (நூல்: அஹ்மத், அபூதாவூத்)
இப்படிப்பட்ட பெரும் பாவமான புறம் பேசுதலை நாமும் தவிர்ந்து கொண்டு, அவை பேசப்படும் இடத்தை விட்டு விலகி விடவும் வேண்டும்.
(முஃமின்கள்) வீணானதை செவியுற்றால் அதைப் புறக்கணித்து, எங்களுக்கு எங்கள் அமல்கள், உங்களுக்கு உங்கள் அமல்கள்! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள்’. (அல்குர்ஆன் 25:55)
‘(ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்திற்குரியவர்கள்) வீணானவற்றை விட்டு விலகி இருப்பார்கள்’ (அல்குர்ஆன் 23:3)
புறம் பேசுதலைத் தவிர்ந்து கொள்வதற்கு நபி ஸல் அவர்கள் கூறிய மணிமொழிகளை மனதில் பதிய வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
1. முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
2. எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
3. நான் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளத் தக்க ஒரு விஷயத்தை அறிவியுங்கள்! என்று கேட்டேன். ‘எனது இறைவன் அல்லாஹ் என்று கூறி, பிறகு அதிலேயே உறுதியாக இருப்பீராக’ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். என்னுடைய விஷயத்தில் தாங்கள் அதிகம் அஞ்சுவது என்ன? என்று கேட்டேன். அப்போது தனது நாவை பிடித்துக் காட்டி இது தான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்: திர்மிதி)
2. அவதூறு
நிச்சயமாக கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகையோர், இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 24:23)
3. கோள்
‘ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் இல்லாத ஒன்றை கூறி இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்படுத்துவதை’ சிலர் தொழிலாகவே கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ பேர் கொலை கூட செய்யப்பட்டுள்ளனர். இப்படி பெரும் பாதிப்புகள் இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதே இல்லை. இப்படி கோள் சொல்லித் திரிபவர்களை அல்லாஹ் மன்னிக்க வில்லையெனில் நரகம் செல்வார்களே தவிர, சுவர்க்கம் செல்லவே முடியாது.
குறை சொல்லி புறம் பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)
கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்லும் போது இந்தப் கப்ருகளில் உள்ள இருவரும் வேதனை செய்யப்படுகின்றார்கள், அவர்கள் இருவரும் (அவர்களின் எண்ணத்தில்) பெரும் பாவத்தினால் வேதனை செய்யப்படவில்லை. என்றாலும் அது பெரும் பாவம் தான். அவ்விருவரில் ஒருவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார். மற்றவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார் எனக் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
4. பொய் சாட்சி
அவர்கள் (அல்லாஹ்வின் அடியார்கள்) பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள். மேலும் அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவர்களாக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள். (அல்குர்ஆன் 25:72)
பெரும் பாவங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘அல்லாஹ்விற்கு இணை வைப்பது, பெற்றோருக்கு நோவினை செய்வது, பொய் சாட்சி சொல்வது’ என்று பதிலளித்தார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
5. தர்மம் செய்ததை சொல்லிக் காட்டுதல்
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தம் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததை சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் தர்மங்களை, பாழக்கி விடாதீர்கள். (அல்குர்ஆன் 2:264)
மறுமை நாளில் அல்லாஹ் மூன்று சாரார்களுடன் பேசவும மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். கைசேதப்பட்ட, நஷ்டமடைந்த அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். (தனது) கீழாடையை (பெருமைக்காக, கரண்டைக் காலுக்கு கீழ்) தொங்க விடுபவன், (தான் செய்த தர்மத்தை) சொல்லிக் காட்டுபவன், பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம்)
6. சபித்தல்
ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி, அபூதாவூது)
ஒருவர் இன்னொருவரை ‘பாவி’ என்றோ ‘காஃபிர்’ என்றோ கடுஞ்சொல் கூற வேண்டாம். (ஏனெனில்) குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் (சொன்னவர்) பக்கமே திரும்பி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)
7. இறந்தவர்களை ஏசக்கூடாது
இறந்தவர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் முற்படுத்தியதற்குரியதை பெற்றுக் கொண்டார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)
8. பக்கத்து வீட்டுக்காரருக்கு துன்பம் தருதல்
யார் அல்லாவையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும், இல்லையெனில் மௌனமாக இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
9. காலத்தைத் திட்டுதல்
காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்தி விடுகிறார்கள், காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறி வரச் செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)
இதுவரை நாம் நாவினால் ஏற்படும் தீங்குகளையும் அவற்றைப் பற்றிய திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் எச்சரிக்கைகளையும் கண்டோம்.
சொர்க்கம் செல்வதற்கு நாவு தடையாகிறது என்பதை எச்சரித்த நபி (ஸல்) அவர்கள் நாவை சரியாக பயன் பயன்படுத்துவோருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதையும் கூறுகிறார்கள்.
எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
இதுவரை நாவின் விபரீதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இதே நாவை நல்ல காரியங்களில் பயன்படுத்தினால் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. நாவைக் கொண்டு தஸ்பீஹ் செய்யலாம், குர்ஆன் ஓதலாம், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கலாம். இன்னும் இவைகள் போன்ற எத்தனையோ நல்ல காரியங்களில் ஈடுபடலாம். நாவை நல்ல வழிகளில் பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மைகளில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.
1. குர்ஆன் ஓதுதல்
நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்கு (அதை ஓதியவர்களுக்கு) பரிந்துரை செய்யக்கூடியதாக வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். ‘அலிஃப், லாம், மீம் என்பது ஓர் எழுத்து’ என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)
2. தஸ்பீஹ் செய்தல்
இரு வார்த்தைகள் (சொல்வதற்கு) நாவுக்கு மிக இலகுவானவை, இறைவனின் தராசில் மிக கனமானவை, இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை (அவ்விரு வார்த்தை) ‘சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
3. நன்மையை ஏவி தீமையை தடுத்தல்
(விசுவாசங் கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தவர்களில் எல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும் நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 3:110)
நாவு மனிதனை சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ கொண்டு செல்லக்கூடிய உறுப்பு என்பதை தெரிந்து கொண்டோம். ஆகவே நரகம் செல்லக் கூடிய (சொல்) செயல்களிலிருந்து நாம் நாவைப் பாதுகாத்து சுவர்க்கம் செல்லக்கூடிய (சொல்) செயல்களைச் செய்து நாவினால் சுவர்க்கம் செல்ல நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

தீனுல் இஸ்லாம்



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாதுல்லாஹி வ பரகாதுஹு இஸ்லாத்தை அறிய விரும்பும் அன்பர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் இறைவனுக்கு முற்றிலுமாக அடிபணிவது/அர்ப்பணிப்பது என்று அர்த்தம். எவர் ஒருவர் அப்படி செய்கின்றாரோ அவர் முஸ்லிம் என அழைக்கப்படுகின்றார். உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) தொடங்கி, மூசா (Moses) (அலை), ஈசா (Jesus) (அலை), முஹம்மது (ஸல்) என்று இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களுக்கும் கொடுக்கப்பட்டதும், அவர்களால் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதும் இஸ்லாம் தான்.

இஸ்லாம் கூறும் செய்தி:

இஸ்லாம் கூறும் செய்தி மிக எளிமையானது. இறைவன் ஒருவனே, அவனுக்கு இணை யாருமில்லை, அவனை மட்டுமே வழிபடுங்கள் என்பது தான் அது.

நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவருமில்லை — குரான் (112:1-4)

இந்த பிரபஞ்சத்தை, அதனுள் உள்ள நம்மை என்று அனைத்தையும் படைத்த இறைவனை மட்டுமே வழிபடுமாறும், அவனால் படைக்கப்பட்ட சக உயிரினங்களையோ அல்லது உயிரற்றவையையோ வழிபடுவதை விட்டொழிக்குமாறும் அறிவுறுத்துகின்றது இஸ்லாம்.

படைத்தவனை மட்டுமே வணங்குங்கள், அவனால் படைக்கப்பட்டவையை வணங்காதீர்கள் என்பது தான் இஸ்லாம் உலக மக்களுக்கு கூறும் செய்தி.

குர் ஆன்:

இறைவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தூதரும் அற்புதங்களோடு அனுப்பப்பட்டார்கள். இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதம் குர் ஆன்.

குரான் இருபத்தி மூன்று ஆண்டு கால இடைவெளியில் சிறுகச் சிறுக இறைவனால் இறுதித் தூதருக்கு அருளப்பட்டது.

எப்படிப்பட்ட வேதம் குர்ஆன்?

இன்னும், நம் அடியாருக்கு அருளியுள்ளதில் நீங்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் — குர்ஆன் (2:23).

இது மனித குலத்திற்கு இறைவனால் விடப்பட்ட சவால். அன்றிலிருந்து இன்று வரை இந்த சவாலுக்கு நெருக்கத்தில் கூட யாராலும் வரமுடியவில்லை. அதன் விளைவாக, இது மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட வேதமென்று கோடானு கோடி மக்கள் தொடர்ந்து நம்பி வருகின்றார்கள்.

இந்த வேதம் அன்று இருந்த சிந்தனையாளர்களுக்கும் சரி, இன்று இருக்க கூடிய சிந்தனையாளர்களுக்கும் சரி தொடர்ந்து ஆச்சர்யத்தை தந்து வருகின்றது.

மருத்துவ துறையில் மதிப்புமிக்க இடத்தை பெற்றுள்ள டாக்டர் கீத்மூர் (Dr.Keith Moore), தன்னுடைய “The Developing Human” புத்தகத்தில் குரானின் அறிவியல் உண்மைகள் குறித்து ஒரு பகுதியை ஒதுக்கி இருக்கின்றார்.

பிரான்சின் மதிப்புமிக்க மருத்துவரான டாக்டர் மவ்ரீஸ் புகேய்ல் (Dr.Maurice Bucaille) அவர்கள் தன்னுடைய “The Bible, the Qur’an and Science” புத்தகத்தில்,

“ஒரு பிழையை கூட குர்ஆனில் நான் காணவில்லை. இந்த புத்தகம் ஒரு மனிதனால் எழுதப்பட்டிருந்தால், எப்படி நவீன அறிவியல் கண்டுபிடித்திருக்க கூடிய உண்மைகளை அன்றே சொல்லி இருக்க முடியும்?”

அறிஞர்கள் மட்டுமல்லாது, பெரும்பாலான மற்ற முஸ்லிம்கள் கூட, குர்ஆனில் குறிப்பிடத்தக்க ஞானம் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களது குரான் அறிவை கண்டு நீங்கள் ஆச்சர்யப்பட்டிருக்கலாம். இதற்கெல்லாம் காரணம், குரான் உங்களது நேரத்தை அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதே ஆகும். சில நாட்களிலேயே கூட உங்களால் முழு குரானையும் படித்து விட முடியும்.

மேலும், குரான் என்னும் இறைவேதம், உலக மக்கள் அனைவருக்குமானது. நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டவர்கள்.

(நபியே) உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை – குரான் 21:107.

நம் அனைவருக்கும் சொந்தமான, படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத குரானை ஏன் ஒரே ஒரு முறை படித்து பார்க்க நீங்கள் முன்வரக்கூடாது?

தன்னை படிப்பவர்களை உரையாடலுக்கு உட்படுத்தி அவர்களுடன் ஒரு அறிவார்ந்த விவாதத்தை ஏற்படுத்தும் குரான் என்னும் அற்புதத்தின் தமிழ் அர்த்தங்களை படிக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் ஒரு மெயில் அனுப்புங்கள். இறைவன் நாடினால், அனுப்பி வைக்கின்றேன்.

சகோதரத்துவம்:

ஆதாம், ஏவாள் (இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவுவதாக) ஆகிய இருவரிலிருந்தே நாம் அனைவரும் வந்ததால் இவ்வுலகில் உள்ள அனைவருமே சகோதர/சகோதரிகள் என்று கூறுகின்றது இஸ்லாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி கூறிய விசயங்களில் சகோதரத்துவமும் ஒன்று. தன்னுடைய இறுதி பேருரையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள் இறுதி தூதர் (ஸல்) அவர்கள்,

“எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல”

இஸ்லாமை பொறுத்தவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாருமில்லை. எவர் ஒருவர் இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்கின்றாரோ அவரே இறைவனிடத்தில் உயர்ந்தவர். பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது.

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்” — குரான் 49:13

புரட்சி:

நாம் பல புரட்சிகளை பற்றி கேள்விபட்டிருக்கலாம். ஆனால், அவையெல்லாம் விட இஸ்லாம் செய்த புரட்சி மகத்தானது. மற்ற புரட்சிகளில் மக்களின் புறம் சார்ந்த சூழ்நிலைகள் மாறியிருக்கலாம். ஆனால் இஸ்லாமிய புரட்சியில் மக்களின் அகம், புறம் என இரண்டுமே மாற்றம் கண்டன. அவர்கள் உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடையிலிருந்து, மற்றவரை அணுகும் முறையிலிருந்து, சகோதரத்துவத்தின் அருமையை உணர்ந்து கொண்டதிலிருந்து என்று மாபெரும் எழுச்சியை இருபத்தி மூன்றே ஆண்டுகளில் செய்து காட்டினார் இறைத் தூதர் (ஸல்) அவர்கள்.

நல்ல விஷயங்களை நோக்கி பயணிக்க ஆசைப்படும் தங்களுக்குள்ளும் (இறைவன் நாடினால்) அந்த புரட்சி ஏற்படலாம். அதற்கு தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு முறை குரானை திறந்த மனதோடு முழுமையாக படிக்க முன்வருவது தான். ஆம், குரானுடன் நீங்கள் புரியப்போகும் விவாதம் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம், உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டலாம்.

உங்களுடைய நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. விரைவில் உண்மையை கண்டறிய இறைவன் உங்களுக்கு உதவுவானாக…ஆமீன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்வானாக…ஆமீன்..
உங்கள் சகோதரன், A.RINASH

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...!



இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
(Surat Ar-Rūm 30:23-அல்குரான்)

... அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான். (அல்குர்ஆன் 25:47)

இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்ட அற்புதமான அருட்கொடை
தூக்கம் நமக்கு கிடைத்த இறைவனது அருட்கொடையில் மிக முக்கியமானது .
குழந்தையின் தூக்கம் கெடுத்து விட்டால்,தாய் சினம் கொள்வாள்.காரணம் பிறந்த குழந்தைக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகின்றது
தூக்கம் நமது இழந்த சக்தியினை மீட்டு அடுத்த நாள் உழைக்க பலுவினை தருகின்றது .
சிலருக்கு தூக்கம் குறைவாக இருக்கலாம் அதனால் அவர் அதற்காக அதே சிந்தனையில் இருக்கக்கூடாது .அந்த எண்ணம்தான் அவர் உடல்நிலையினை மிகவும் பாதிக்கும்.. தூக்கம் இல்லாமல் எந்த மனிதனும் வாழ முடியாது . நிம்மதியான தூக்கம் இல்லை என்றாலும் அவரை அறியாமல் பூனைத் தூக்கம் அவருக்கு கிடைத்திருக்கும் .
மனிதனுக்கு ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நேரத்தில் அது கிடைக்கலாம் . கிடைக்கும் நேரத்தினை பயன் படுத்திக் கொள்ளட்டும். பகலில் உணவுக்கு முன் பூனைத் தூக்கம் போடுவது நல்லதுதான்.
கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை
சிலர் நல்ல தூங்கு மூஞ்சியாக இருந்து காலத்தினையும் உடலையும் கெடுத்துக்கொள்வர். அவர்களுக்கு தூக்கம்தான் வாழ்க்கை .
8 மணி நேர தூக்கம் போதுமானது .
பால்காரர்களும் பேப்பர்காரர்களும் ஓசோன் காற்றை சுவாசிப்பதால்தான் அவர்களால் வேகமாக செயல் பட முடிகின்றது . காலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.
தூய்மையான அதி காலை காற்று உடல் நலத்துக்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும் போது சுத்தமான ஓசோன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் ஒரு உற்சாகம் அது மிகவும் உயர்வானது


மிதமிஞ்சிய பேச்சு, உணவு, தூக்கம் ஆகியவற்றின் காரணமாக அவலநிலையும், அழிவு நிலையும் ஏற்படுவதால் நபி வழியில் ஷரீஅத் சட்ட ஒளியில் நாம் முதலில் நடந்து, பிற சமுதாயத்தினரும் இப்பேருண்மையை ஏற்று குற்றமற்ற நிம்மதி நிறைந்த உலகைப் படைக்க முயற்சிப்போமாக, வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
See More


Wednesday, April 4, 2012

குர்ஆனின் மொத்த வசனங்களின் எண்ணிக்கை "6666"? முஸ்லிம்களுக்கு மட்டும்.



சமீபத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. திருக்குர்ஆன் பற்றிய செய்தியாக இருந்ததால் ஆர்வமுடன் அதை படிக்க ஆயத்தமானேன். அதில் குர்ஆனில் மொத்தம் எத்தனை சூராக்கள், எத்தனை வசனங்கள், இந்த பெயர் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது, போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் மிகவும் வேதனை அடைய வேண்டிய விஷயம் என்னவென்றால் பலரும் ஒரு உண்மையை உணராமல் தவறான பிரச்சாரத்தால் கவரப்பட்டு தனக்கு கிடைத்த செய்தி உண்மையா? என்றுகூட ஆராயாமல் அப்படியே பிறருக்கும் அதை அனுப்பி வைக்கிறார்கள்.
இன்றைக்கு எந்த ஒரு முஸ்லிமிடம் ஒரு கேள்வியை கேட்டால் உடனே பதில் வரும். அந்த கேள்வி தான் மொத்தம் குர்ஆனில் எத்தனை வசனங்கள்? என்று உடனே பதில் கிடைக்கும் "6666" என்று. இது உண்மையா? பொய்யா? என்பது கூட அவர்களுக்கு தெரியாது. காரணம் அதைப் பற்றி ஆராயவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு உதிப்பதில்லை.
சமீபத்தில் ஒரு மதரஸாவினுடைய ஆண்டு விழா நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கே மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதிலும் ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் இதே கேள்வியை கேட்க, மாணவனும் சற்று கூட சிந்திக்காமல் "6666" வசனங்கள் என்று பதிலளித்தான். அதற்கு அந்த ஆசிரியர் அந்த மாணவனின் பதிலைக்கேட்டு பாராட்டுகிறார்.
ஒரு மார்க்கல்வியை கற்றுக்கொடுக்கும் பாடசாலையிலேயே இப்பேற்பட்ட நிலைதான் என்றால் சாதாரண மார்க்க அறிவு இல்லாத ஒருவரின் நிலை எவ்வாறு இருக்கும்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அன்று என்னோடு தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியை கண்ட என் குடும்பத்தார்களிடம் இந்த செய்தியை தெரிவித்த போதுதான் அன்று தான் அவர்களே உணர்ந்தார்கள்.
குர்ஆனில் மொத்த வசனங்கள் "6666" என்பது தவறாகும். எப்படி இப்பேற்பட்ட ஒரு பொய்யான தகவல்கள் பரவுகிறது? இப்பேற்பட்ட பொய்யான தகவல் யாரால் உருவாக்கப்பட்டது என்பதை விளக்கிக்கூற கடமைப்பட்டுள்ளேன்.
இது கிருத்தவ மிஷனரிகளால் பரப்பப்பட்ட ஒரு பொய்யான தகவலாகும். அறியாமையின் காரணமாக‌ முஸ்லிம்களில் பலரும் இதையே பரப்பி வருகின்றனர். பல இணையதளங்களில் பார்க்கும் போது கூட இப்பேற்பட்ட தவறான பதில்கள் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் கூட நான் மேற்கூறியவாறு குர்ஆனில் மொத்தம் "6666" வசனங்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
கிருத்தவ மத சாஸ்திரப்படி பைபிளில் தஜ்ஜாலின் குறியீடாக "666" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை குர்ஆனோடு தொடர்பு படுத்தி நமது நபிகள் நாயகத்தை தஜ்ஜாலாக ( நவூதுபில்லாஹ்!) அந்தி கிருஸ்துவாக பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவ்வாறான தவறான செய்திகளை பர்ப்பி உள்ளனர்.
இது சம்பந்தமாக கிருத்தவர்களை நாம் நம்முடைய கேள்விகளை கொண்டு வெகு சுலபமாக வீழ்த்தலாம்...
1. கிருத்தவர்களில் பெந்தகோஸ்தே பிரிவினர் தங்களுடைய புனித பைபிளில் 66 புத்தகங்கள் தான் கடவுளின் வார்த்தையாக நம்புகின்றனர். கிருத்தவர்கள் "6666" அந்திகிருஸ்துவோடு இணைக்கும்போது ஏன் "66" புத்தகங்களையும் இணைக்கக்கூடாது? "666"வுடன் "6" சேர்க்கும் இவர்கள் ஏன் ஒரு "6" எடுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லையே!
2. பைபிளில் அந்திகிருஸ்துவின் எண் "666" என்று எழுதப்பட்டிருக்கும் புத்தகமான "வெளிப்படுத்தின வீஷேசம்" புத்தக்கத்தை முந்தைய கால கிருஸ்தவர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணத்திற்கு மர்சியோன், ரோமை சேர்ந்த சியோஸ், அலெக்ஸ்ஸான்டிரியாவைச் சேர்ந்த டியோனிஸிஸ், சிரில் ஆஃப் ஜெருசலேம், போன்றவர்களாவர்.
3. இன்றுவரை கிழக்கு பகுதியில் உள்ள கிருத்தவ தேவாலயங்கள் இந்த "ரிவிலேஷன்" என்னும் புத்தகத்தை எற்றுக்கொள்ளவில்லை.
4. பெந்தகோஸ்தே கிருத்தவர்களின் மூத்த தலைவர் மார்ட்டின் லூதர் உட்பட பலரும் இந்த புத்தகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
5. பழைய கால பைபிள்களில் "666" என்பதற்கு பதிலாக "616" என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆக இவர்கள் குர்ஆனையும், ரஸூலையும் அந்திகிருஸ்துவோடு இணைப்பது அபத்தமாகும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
குர்ஆனின் மொத்த வசனங்கள் "6236" என்பது தான் சரியானதாகும். இது சிலரின் கருத்துக்களோடு சற்று மாறுபடும். சிலர் ஒவ்வொரு சூராக்களிலும் உள்ள "பிஸ்மில்லாஹ்....." யும் ஒரு வசனாமாக் எண்ணுவார்கள். எப்படி இருந்த போதிலும் குர் ஆனின் வசனங்கள் "6666" என்பது ஒரு மிகப்பெரிய பொய்யாகும். யார் எண்ணிவிடப்போகிறார்கள் என்ற தைரியத்தில் இப்பேற்பட்ட தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவிடுகிறார்கள்.
இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால் அது உண்மைதானா என்று சரி பார்த்த பின்னர் பிறருக்கு தெரிவியுங்கள் என்று குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது. ஆகவே இத்தகைய தவறான பிரச்சாரத்தில் இருந்து ஏனைய முஸ்லிம்களையும் பாதுகாப்போம்!
தங்களின் பார்வைக்காக குர் ஆனின் சூராக்களும், அதில் உள்ள வசனங்களின் அட்டவனையை தயார் செய்து கீழே தந்துள்ளேன்.
எண் 
சூராவின் பெயர்கள் 
வசனங்கள்
அல் ஃபாத்திஹா 
7
சூரத்துல் பகரா 
286
சூரத்துல் ஆல இம்ரான் 
200
சூரத்துன் நிஸா 
176
சூரத்துல் மாயிதா 
120
சூரத்துல் அன்ஆம் 
165
சூரத்துல் அஃராஃப் 
206
சூரத்துல் அன்ஃபால் 
75
சூரத்துத் தஃவ்பா 
129
10 
சூரத்துல் யூனுஸ் 
109
11 
சூரத்துல் ஹூது 
123
12 
சூரத்துல் யூசுஃப் 
111
13 
சூரத்துல் ராஃது 
43
14 
சூரத்துல் இபுராஹிம் 
52
15 
சூரத்துல் ஹிஜ்ர் 
99
16 
சூரத்துல் நஹ்ல் 
128
17 
பனி இஸ்ராயீல் 
111
18 
சூரத்துல் கஹ்ஃப் 
110
19 
சூரத்துல் மரியம் 
98
20 
சூரத்துத் தாஹா 
135
21 
சூரத்துல் அன்பியா 
112
22 
சூரத்துல் ஹஜ் 
78
23 
சூரத்துல் முஃமினூன் 
118
24 
சூரத்துந் நூர் 
64
25 
சூரத்துல் ஃபுர்கான் 
77
26 
சூரத்துல் ஷுஹரா 
227
27 
சூரத்துந் நம்லி 
93
28 
சூரத்துல் கஸஸ் 
88
29 
சூரத்துல் அன்கபூத் 
69
30 
சூரத்துல் ரூம் 
60
31 
சூரத்துல் லுக்மான் 
34
32 
சூரத்துல் ஸஜ்தா 
30
33 
சூரத்துல் அஹ்ஜாப் 
73
34 
சூரத்துல் ஸபா 
54
35 
சூரத்துல் ஃபாத்தீர் 
45
36 
சூரத்துல் யாஸீன் 
83
37 
சூரத்துல் ஸாஃப்ஃபாத் 
182
38 
சூரத்துல் ஸாத் 
88
39 
சூரத்துஜ் ஜுமர் 
75
40 
சூரத்துல் முஃமீன் 
85
41 
சூரத்துல் ஹாமீம் ஸஜ்தா 
54
42 
சூரத்துல் ஷூரா 
53
43 
சூரத்துல் ஜுக்ரூஃப் 
89
44 
சூரத்துல் துகான் 
59
45 
சூரத்துல் ஜாஸியா 
37
46 
சூரத்துல் அஹ்காஃப் 
35
47 
சூரத்துல் முஹம்மது 
38
48 
சூரத்துல் ஃபதஹ் 
29
49 
சூரத்துல் ஹுஜூராத் 
18
50 
சூரத்துல் ஃகாஃப் 
45
51 
சூரத்துத் தாரியாத் 
60
52 
சூரத்துத் தூர் 
49
53 
சூரத்துந் நஜ்ம் 
62
54 
சூரத்துல் கமர் 
55
55 
சூரத்துர் ரஹ்மான் 
78
56 
சூரத்துல் வாகியா 
96
57 
சூரத்துல் ஹதீத் 
29
58 
சூரத்துல் முஜாதலா 
22
59 
சூரத்துல் ஹஷீர் 
24
60 
சூரத்துல் மும்தஹினா 
13
61 
சூரத்துல் ஸஃப்ஃபு 
14
62 
சூரத்துல் ஜுமுஆ 
11
63 
சூரத்துல் முனாஃபிக்கூன் 
11
64 
சூரத்துல் தகாபூன் 
18
65 
சூரத்துல் தலாக் 
12
66 
சூரத்துத் தஹ்ரீம் 
12
67 
சூரத்துல் முல்க் 
30
68 
சூரத்துல் கலம் 
52
69 
சூரத்துல் ஹாஃக்ஃகா 
52
70 
சூரத்துல் மஆரிஜ் 
44
71 
சூரத்து நூஹ் 
28
72 
சூரத்துல் ஜின்னு 
28
73 
சூரத்துல் முஸ்ஸம்மில் 
20
74 
சூரத்துல் முத்தஸ்ஸிர் 
56
75 
சூரத்துல் கியாமா 
40
76 
சூரத்துத் தஹ்ர் 
31
77 
சூரத்துல் முர்ஸலாத் 
50
78 
சூரத்துந் நபா 
40
79 
சூரத்துல் நாஜியாத் 
46
80 
சூரத்து அபஸ‌ 
42
81 
சூரத்துத் தக்வீர் 
29
82 
சூரத்துல் இன்ஃபிதார் 
19
83 
சூரத்துல் முதஃப்ஃபிஃபீன் 
36
84 
சூரத்துல் இன்ஷிகாக் 
25
85 
சூரத்துல் புரூஜ் 
22
86 
சூரத்துல் தாரிக் 
17
87 
சூரத்துல் ஆலா 
19
88 
சூரத்துல் காஷியா 
26
89 
சூரத்துல் ஃபஜ்ரி 
30
90 
சூரத்துல் பலத் 
20
91 
சூரத்துஷ் ஷம்ஸ் 
15
92 
சூரத்துல் லைல் 
21
93 
சூரத்துல் ளுஹா 
11
94 
சூரத்து அலம் நஸ்ரஹ் 
8
95 
சூரத்துத் தீன் 
8
96 
சூரத்துல் அலக் 
19
97 
சூரத்துல் கத்ரி 
5
98 
சூரத்துல் பய்யினா 
8
99 
சூரத்துஜ் ஜில்ஜால் 
8
100 
சூரத்துல் ஆதியாத்தி 
11
101 
சூரத்து அல்காரியா 
11
102 
சூரத்துத் தகாஸுர் 
8
103 
சூரத்துல் அஸ்ரி 
3
104 
சூரத்துல் ஹுமஜா 
9
105 
சூரத்துல் ஃபீல் 
5
106 
சூரத்து குறைஷின் 
4
107 
சூரத்துல் மாவூன் 
7
108 
சூரத்துல் கவ்ஸர் 
3
109 
சூரத்துல் காஃபிரூன் 
6
110 
சூரத்துந் நஸ்ர் 
3
111 
சூரத்துல் லஹப் 
5
112 
சூரத்துல் இக்லாஸ் 
4
113 
சூரத்துல் ஃபலக் 
5
114 
சூரத்துந் நாஸ் 
6
மொத்தம் - 6236 வசனங்கள்.
குர்ஆனில் மொத்த வசனங்கள் "6666" என்பது பொய் என்றும்"6236" தான் உண்மை என்பதை அனைவருக்கும் பரப்புவோம் இன்ஷா அல்லாஹ்!
வீண் குழப்பத்திலிருந்தும், நசாராக்களின் சூழ்ச்சியிலிருந்தும் அல்லாஹ் இந்த உம்மத்தைப் பாதுகாப்பானாக! ஆமீன்!