Digital Time and Date

Welcome Note

Saturday, March 31, 2012

இஸ்லாம் - கட்டாய மதமாற்றம்

மதம் என்பது வெளிப்படையான வழிபாடு,சடங்குகள்,மற்றும் கிரியைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.அது நம்பிக்கை சார்ந்த ஒன்று,எந்த ஒரு கட்டாயமும் இன்றி மனம் அதை ஏற்கும் பொழுது,அங்கு மதம் உயிர் பெருகிறது.கட்டாய தினிப்பு மற்றும் கடுமையான கொள்கையானது ஒரு மதத்தை உயிர் கொள்ளச் செய்யாது,மாறாக அதன் மீதான தவறான எண்ணங்கள் வழுப்பெற்று,அங்கெ மதம் தோல்வியுறுகிறது.

இதன் மூலம் மதம் என்பது மனம் சார்ந்த ஒன்று என்பது தெளிவு.இந்த பதிவானது மதம் என்ற தலைப்பில் மனங்களை அலசுவதால்,இது மதம் சார்ந்த பதிவென்பதை விட,மனம் சார்ந்த பதிவாகக் கொள்ளலாம்.


மதம்:மனித வாழ்கையில் மதம் என்பது பிரிக்கவியலாத காரணியாகும்.அது மனித வாழ்க்கைக்கு தேவையான நெறிகளை வகுத்து,நன்மை தீமையை பகுத்து ,அவனது வாழ்வை சீர் செய்துகொள்ள பயன்படுகிறது.

மதம் என்ற ஒன்றை பயன்படுத்தாது,தனது வாழ்வை அமைத்துக் கொள்பவர்களும் உலகில் இல்லாமல் இல்லை.அவர்கள் நாத்தீகர்கள்,அதாவது கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்போர்.அவர்கள் உலகின் மொத்த மக்கள் தொகையில் வெகு சொற்பமேயாகையாலும்,நாத்தீகம் இக்கட்டுரையின் பேசுபொருள் அல்ல என்பதாலும்,உலகின் பெரும்பான்மை மக்களின் மனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் மதம் மற்றும்,மதமாற்றம் சார்ந்த விடயங்களை இந்தப் பதிவில் அலசுவோம்.


இன்று உலகின் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதங்களை பார்க்கின்,குறிப்பாக ஹிந்துமதம் பலதெய்வ வழிபாடும்,கிருஸ்தவ மதம் மூன்று தெய்வ வழிபாடும்,இஸ்லாம் ஒரு தெய்வ வழிபாடும் கொண்டது.

மதம் என்பது கடவுள் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப் படுகிறது.அந்தந்த மதம் சார்ந்த மக்கள்,தாங்கள் வழிபடும் கடவு(ள்க)ளின் மீது நம்பிக்கை கொண்டு,அந்த கோட்பாடுகளின் படி தங்களது வாழ்க்கையை செழுத்த முயல்கின்றனர்.


மதமாற்றம்: மதம் என்பது நாம் முன்னரே சொன்னது போல் மனம் சார்ந்த ஒன்றாவதால்,மதமாற்றம் என்ற வார்த்தை,பொருத்தமான ஒன்றாக இல்லை.மாறாக மனமாற்றம் என்ற பதமே பொருத்தமானது.மேலும் உண்மையான மதமாற்றம் என்பது மனமாற்றமே.


 இஸ்லாம் - முந்தைய காலங்களில் அதன் கொள்கைகளால் கவரப்பட,உலகில் வியாபித்தது ஒரு புறம் இருந்தாலும்,தற்காலங்களில் இஸ்லாம் குறித்த எதிர்மறையான விமர்சனங்களாலும்,சர்ச்சைக்குரிய கேள்விகளாலும்,இஸ்லாம் புதிய பரிமாணத்தில் வளர்கிறது என்றால் மிகையல்ல.

அதெப்படி,எதிர்மறையான விமர்சனங்கள் வளர்ச்சிக்கு உதவிடமுடியும்?..என்றால்,-முடியும்.எதிர்மறையான கேள்விகளுக்கு, முறையான பதில்களாலும்,தெளிவான விளக்கங்களாலும்,அதன் உண்மைநிலையை உலகுக்கு ஓங்கி ஒலித்திட, இந்த வளர்ச்சி சாத்தியப்படுகிறது.

சரி தலைப்புக்கு வருவோம்.இஸ்லாம்,என்ற உடனேயே மாற்றுமத சகோதரர்கள் மத்தியில் "வாளால் பரப்பப்பட்ட மதம்".என்ற ஒரு கருத்து வேரூன்றி இருப்பது உண்மை.இது சாத்தியமா?வன்முறை கொண்டு உலகில் கட்டமைக்கப்பட்ட எந்த ராஜ்ஜியமும் வீழ்ச்சியை சந்திக்காமல் இருந்ததில்லை என்பதை வரலாற்றின் பக்கங்கள் பதியாமல் விட்டதில்லை.அதுமட்டுமல்லாது மதம் என்பது மனிதன் மனங்கொண்டால் மட்டுமே முதலில் அவனைக் கடக்க ,பின் வளர,பரவ சாத்தியப்படும்.இது குறித்து அனைவரும் கருத்து தெரிவித்திருக்க,பேசுபொருளான இஸ்லாம் இது குறித்து என்ன சொல்கிறது,என்பதை பார்ப்போம்.....

கட்டாய மதமாற்றம் என்ற சொல்லாடல்,மிக நீண்ட காலமாகவே புழக்கத்தில் இருந்து வருகிறது.கட்டாய மதமாற்றம் என்பது எப்படி இருக்க முடியும்?

அனைத்திற்கும் மேலாக இப்படி ஒரு மதமாற்றம்,யாருக்கு எப்பயனை அளிக்கிறது.மதம் மாற்றுபவருக்கும் சரி.மதம் மாற்றப்படுபவருக்கும் சரி,எள்ளின் முனையளவும் இதில் பயன் இல்லை.ஒருவேலை பணத்திற்காக மதம் மாற்றும்,அல்லது மதம் மாறும் மா'க்களுக்கு,அந்த பணம் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் இங்கு மதம் மனம் சார்ந்த ஒன்றாவதால்,மதத்தை பணம் சார்ந்த ஒன்றாக பாவிப்பவர்களை கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியமற்றது.ஏனெனில் அவர்களுக்கு வாய்த்த மதமும்,அவர்கள் வந்த மதமும் பொருளற்ற,மற்றும் பொருள் சார்ந்த ஒன்றே.

முஸ்லீம்கள் இஸ்லாத்தை,உலகமக்களுக்கு அறிமுகப்படுத்த,அவர்களை இஸ்லாத்தின்பால் அழைக்க பணிக்கிறது.ஆனால் ஒரு முஸ்லிம் எந்த எல்லை வரை இஸ்லாத்தை பிறருக்கு எத்திவைக்கமுடியும் என்பதற்கான வரைமுறைகள் உண்டு.

கட்டாய மதமாற்றத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.அதனால் எப்பயனும் இல்லை என்பது கண்கூடு.இஸ்லாத்தை பொருத்தவரை ஒருவர் இறைவனை உள்ளத்தால் உணர்ந்து ஏற்காதவரை அவர் பிறவி முஸ்லீமாக இருந்தாலுமே,அவர் முஸ்லிம் அல்ல.பெயரளவிலான முஸ்லிமை,முனாஃபிக் (நயவஞ்சகன்) என இஸ்லாம் அடையாளப்படுத்துகிறது.அதாவது உள்ளத்தால் நம்பிக்கை கொள்ளாமல்,உதட்டளவில் முஸ்லிமாக இருப்பவனை இஸ்லாம் இங்ஙனம் சாடுகிறது.அதுமட்டுமல்லாது,இறைவனாலும் இவர்கள் வெறுக்கப்பட்டவர்கள்.

கட்டாய மதமாற்றம் மூலம் வருபவர்கள் இப்படிப்பட்டவர்களே.இவர்களை இழுத்துவருவதால், கொண்டுவந்தவனுக்கு,இவ்வுலகிலும் பயனில்லை,மறுமையிலும் பயனில்லை.மேலும் இவர்களால் இஸ்லாத்திற்கு ஆபத்தே தவிர நன்மை இல்லை.இவர்கள் குறித்த நேரத்தில்,காலை வாரி,மதம் மாற்றியவனை குழியில் தள்ளிவிடுவார்கள்.அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை.தன்னை கட்டுக்குள் வைக்க முயலும் ஒருவனை யாரும் சமயம் பார்த்து அழிக்கவே முயல்வர்.


மனிதர்கள் யாவரும் முஃமீன்களாக (நம்பிக்கை கொண்டோராக)ஆகிவிடவேண்டுமென்று நீர் அவர்களை கட்டாயப்படுத்த முடியுமா? அல்குர்ஆன் - 10 : 99. என அல்லாஹ் நபியை பார்த்து கேட்கிறான்.மேலும் நபியே நீர் கூறுவீராக!நான் (உங்களை கட்டாயப்படுத்தி)உங்களின் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன். அல்குர்ஆன் - 10 : 108 
எனவாரான மேற்கண்ட வசனங்கள் மூலம் கட்டாய மதமாற்றம் என்பது இஸ்லாமிய அணுகுமுறையே அல்ல என்பதை உணரமுடியும்.

இஸ்லாம் அழைப்புப்பணி செய்ய சில அழகிய வழிமுறைகளை முஸ்லிம்களுக்கு அளிக்கிறது.அவ்வழிமுறையை பின்பற்றி ,ஒவ்வொரு முஸ்லிமும் மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்திவைக்கும் கடமையை கொண்டுள்ளார்.

அதன் எல்லை எதுவரை எனில்,இஸ்லாம் குறித்து விளக்கி,அதில் ஏற்படும்,சந்தேகங்களை கலைந்து அவர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பது மட்டுமே ஒரு முஸ்லிமுக்கு கடமையாகிறது.அத்துடன் அவரது பணி முற்றுப்பெறுகிறது.


(நபியே அவர்களிடம்) "வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான)ஒரு பொதுவான விஷயத்தின் பக்கம் வாருங்கள் (அதாவது)நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்.அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்.அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரை கடவுளர்களாக எடுத்துக் கொள்ளமாட்டோம்"எனக் கூறும்.(முஃமீன்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால் "நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!"என்று நீங்கள் கூறிவிடுங்கள் அல்குர்ஆன் - 3:64, மற்றும் 16:125 ஆகிய குர்ஆன் வசனங்கள் மூலம் மக்களை எங்ஙனம் அழைப்பது,அவர்களுடன் எப்படி அழகிய முறையில் உரையாடுவது,என இறைவேதம் எடுத்தியம்புகிறது.

இதன் பின் அவர் இஸ்லாத்தை ஏற்பது,மறுப்பது குறித்த கவலை அவருக்குறியதல்ல.அவருடைய உள்ளத்தில் மாற்றத்தை கொண்டுவருவதும் வராததும்,வல்ல இறைவனின் நாட்டம்.

அல்லாஹ் அனுப்பிய இறுதித்தூதர்,முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கே அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் அறிவுறுத்துகிறான்.


நபியே ! நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர். அல்குர்ஆன் 6-107

மேலும் உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு (அல்குர்ஆன் 109-6) என அழகிய முன்மாதிரியாக சமூக நல்லிணக்கத்தை கற்றுத்தருகிறது இஸ்லாம்.

வாள் முனையில் இஸ்லாத்தை பரப்பி,மக்கள் முஸ்லிம்(முனாஃபிக்)களாவதை இறைவன் விரும்பவில்லை.வாட்களை வீசி முனாஃபிக்களை இஸ்லாத்தின் அங்கத்தினராக்கி இருந்தால்,இன்று இஸ்லாம் என்ற ஒன்று இல்லாமல் போய் இருக்கும்.(இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்)

( அல்லாஹ் உள்ளத்தை பார்க்கக் கூடியவனாக இருக்கிறான்)

அப்படி வாள் முனையில் மதம் மாறியவர்கள்,சமயம் கிடைக்கும் போது தனது பழைய மதத்துக்கு போக வெகு நேரம் ஆகாது.எத்துனை தலைமுறையானாலும்,தனது வாரிசுகளுக்கு சொல்லிவிட்டு போக முடியும்.இது நம் மதம் அல்ல,நாம் கட்டாயமாக மாற்றப்பட்டவர்கள்.இவர்களை வீழ்த்தி,"தாய்மதம் திரும்புக”என அவர்களை எச்சரித்திட முடியும்.ஒரு தலைமுறை கழிந்தாலும்,மறு தலைமுறை,மதத்தில் இருந்து வெளியேரும்.


மேலும் உலகில் ஏகாதிபத்தியம்,இன,நிற அடக்குமுறைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரங்கேறி,பின் அவை வழுவான போராட்டம் மற்றும் புரட்சியின் கரம் கொண்டு,காலாவதியாக்கப்பட்டதை நாம் அறியாமல் இல்லை.இஸ்லாம் இத்தகைய வாள்முனை பரலாக இருந்திருப்பின் உலகில் எங்கேனும் அதற்கு எதிரான கிளர்ச்சிகளும்,புரட்சிகளும் வெடித்து,அது அந்த அடக்குமுறையை முடிவுக்கு கொண்டுவந்திருக்குமல்லவா?அவ்வாறான செய்திகளை நமக்கு வரலாறுகள் காணத்தராததில் இருந்தே,வாள் முனை மதமாற்றம் என்பது மத அரசியலின் அற்பமான பிரச்சார யுக்தி என்பதை அறிந்துகொள்ள முடியும்.

அப்படி ஒரு நிலை இருந்திருப்பின்,குப்பன்,சுப்பனாக இருந்து இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்ற எனது முன்னோர்கள்,அவர்களின் அடக்குமுறை உடைந்தபின் மாறி இருப்பார்கள்.இல்லை,இன்று என் கழுத்தில் யாருடைய கத்தி இருக்கிறது,நான் இஸ்லாத்தில் நிலைத்திருக்க.வெளிப்படையாக அகங்காரமாக ஆணவமாக இஸ்லாத்தில் இருந்து வெளியேற எனக்கென்ன தடை இருக்கிறது(அது எனக்கு கைசேதமே).இன்றையதினம் இஸ்லாத்தை பொய்ப்பித்து ஒருவன் வெளியேறுவதை விட தலைப்புச்செய்தியாக உலகை கலக்க வேரொன்று தேவை இல்லை.

அப்படி இருக்க நாளுக்கு நாள்,எது என்னை இஸ்லாத்தின் பால் ஈர்த்தவண்ணம் இருக்கிறது.எது என்னை இஸ்லாத்தில் நிலைபெற்றிருக்கச் செய்கிறது??உண்மையான இறைக்கொள்கையும்,தெளிவான வழிகாட்டலும்,நன்மை தீமை பிரித்தறிவித்தலும்,வாழ்வின் அத்துனை சூழலுக்குமான தீர்வுகளும்,இஸ்லாத்தை விட,உலகின் எந்த மதமும் தீர்க்கமாக தருவதற்கில்லை,இனி தரப்போவது இல்லை.இது மட்டுமே நான் இஸ்லாத்தில் நீடிக்கவும்,இன்னும் பலர் இஸ்லாத்தை தழுவிக்கொள்ளவும் ஆதாரமாக நிற்கிறது.

இந்தியாவில் இஸ்லாம் பரவியது,வாள் ஏந்திய மன்னர்களால் அல்ல.அவர்களின் நோக்கம் நாடு பிடிப்பதேயொழிய இஸ்லாத்தை பரப்புவதல்ல.இந்தியாவில் இஸ்லாம் பரவியது சூஃபிக்கள் எனப்படும் இஸ்லாமிய ஞானிகளாலும்,வியாபாரிகளாலும் தான்.அவர்களின் இறைக்கொள்கை,மற்றும் அவர்கள் வியாபாரத்தில் காட்டிய நேர்மை,அவர்களது பழக்கங்களால் கவரப்பட்டு,இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றவர்களே இந்திய முஸ்லீம்கள்.


அப்படி இஸ்லாத்தை ஏற்றதாலே,இன்றும் அது இந்திய முஸ்லீம்களின் மனங்களையும்,வாழ்வையும் வழிநடத்தும் காரணியாக இருக்கிறது.இன்னும் உலகமக்களின் மனங்களை கவர்ந்து கொண்டே வெற்றிகரமாக வளர்கிறது.

கூகுளில் புதிய வசதி Account Activity ஆக்டிவேட் செய்ய

இணையத்தில் பெரும்பாலானவர்களின் இதயத்துடிப்பாக இருப்பது கூகுள் நிறுவனம். பயனுள்ள சேவைகளான Blogger, Gmail, Youtube, Adsense இன்னும் பல சேவைகளை இலவசமாக வழங்கி கொண்டுவருவதால் தான் இன்றும் பெரும்பாலானவர்களின் அமோக ஆதரவுடன் இன்னும் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது கூகுள் நிறுவனம். பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கூகுள் வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். கூகுளில் Account Activity என்ற புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர். 
நீங்கள் ஒரு மாதத்தில் கூகுள் தயாரிப்புகளை எத்தனை முறை உபயோகித்து உள்ளீர்கள் எதற்க்காக உபயோக படுத்தி உள்ளீர்கள், ஒரு மாதத்தில் எத்தனை மெயில் உங்களுக்கு வந்துள்ளது எத்தனை மெயில் நீங்கள் அனுப்பியுள்ளீர்கள் என்ற முழு அறிக்கையையும் பார்க்க உதவுவது தான் Account Activity என்ற புதிய வசதி இதனை ஆக்டிவேட் செய்வது எப்படி என பார்ப்போம்.

Account Activity வசதியை ஆக்டிவேட் செய்வது எப்படி:
  • முதலில் கூகுள் பிளஸ் தளத்தை திறந்து Account Settings ==> Products ==> Go to Account Activity என்பதை க்ளிக் செய்யவும். 
  • கூகுள் பிளஸ் கணக்கு இல்லாதவர்கள் இந்த லிங்கில் google.com/settings/activity க்ளிக் செய்து Account Activity வசதியை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் Opt in என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
  • Opt in பட்டனை அழுத்தியவுடன் உங்களுடைய கோரிக்கை அவர்களுக்கு அனுப்பப்படும். அதிகபட்சமாக இரண்டு நிமிடத்தில் உங்கள் அறிக்கை தயாராகிவிடும். இதனை உறுதி படுத்த உங்களுக்கு மெயில் அனுப்புவார்கள். 
  • அந்த மெயிலில் உள்ள லிங்கின் மூலமாகவோ அல்லது Google Plus ==> Account Settings ==> Products ==> Go to Account Activity என்ற இடத்திற்கு சென்று உங்களுடைய ஒரு மாத அறிக்கையை பார்த்து கொள்ளலாம். 
இனி ஒவ்வொரு மாதமும் அறிக்கை தயாரானவுடன் உங்களுக்கு தானாகவே ஈமெயில் வந்து விடும். 
Note : வெப் ஹிஸ்டரியை disable செய்து வைத்து இருந்தால் நீங்கள் தேடிய எண்ணிக்கைகள் இதில் காட்டாது.

உள்ளம் அமைதி பெற 10 கொள்கைகள்!

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:
நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.

நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.
மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்! 


2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!
மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.


3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!
இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள். 


4. பொறாமை கொள்ளாதீர்!
வயிற்றெரிச்சல் (பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது! நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்! 


5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!
உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள். 


6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!
இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும். 


7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!
இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள் முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும். 


8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்
தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.
சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும். 


9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!
வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.


10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!
"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள். முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?


இதில் பலவிசயங்களை நான் என் வாழ்வில் கொண்டுவர முயலும் அதே சமயம், இதை படிப்பவர்களும் வாழ்வில் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் - அதனால் பகிர்கிறேன்.

3/31/2012 கூகுள் பிளசில் உங்களின் போட்டோக்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ் கொடுக்க




பிரபல போட்டோ எடிட்டிங் இணையதளமான பிக்னிக் இணையதளம் April 19 தேதியோடு மூட படுகிறது என்பதை நாம் முந்தைய பதிவில் பார்த்தோம். கூகுள் பிளஸ் தளத்தை பிரபலமாக்கும் நோக்கில் பல அதிரடி மாற்றங்களை செய்து வரும் கூகுள் நிறுவனம் பிக்னிக் தளத்தை மூடி அந்த வசதிகளை கூகுள் பிளஸ் தளத்தில் இணைத்து உள்ளது. இனி உங்கள் போட்டோக்களுக்கு விதவிதமான எபெட்களை கூகுள் பிளஸ் தளத்தில் கொடுக்கலாம். 
சிறப்பம்சங்கள்:
  • போட்டோக்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி.
  • தலைகீழாக உள்ள போட்டோக்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி.
  • படத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை மாற்ற Exposure வசதி
  • போட்டோக்களின் அளவை குறைக்க Resize வசதி.
  • 20 க்கும் மேற்ப்பட்ட பல்வேறு வகையான எப்பெக்ட்களை கொடுத்து கொள்ளலாம். 
  • உங்கள் போட்டோக்களுக்கு Speech Bubbles, Masks, Sports மட்டும் பல்வேறு  வசதிகளை சேர்க்க கூடிய Decorate வசதி.
  • போட்டோவில் உங்களுக்கு விருப்பமான எழுத்துக்களை சேர்க்க Text வசதி என்று எல்லாமே நிறைந்து காணப்படுகிறது. 
வழிமுறை:
  • முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து Photos பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • போட்டோ பக்கம் திறந்ததும் Effects சேர்க்க விரும்பும் போட்டோவை க்ளிக் செய்து ஓபன் செய்யுங்கள்.
  • Lightbox Mode-ல் உங்கள் போட்டோ திறக்கும் அதில் உள்ள Creative Kit என்ற லிங்கை க்ளிக் செய்யவும். 
  • அடுத்து பிக்னிக் போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும் உங்கள் இணைய வேகத்தை பொருத்து திறக்க சில நிமிடங்கள் எடுத்து கொள்ளும் காத்திருக்கவும்.
  • அடுத்து போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும் அதில் உங்கள் போட்டோக்களுக்கு விதவிதமான எபெக்ட் கொடுத்து கொள்ளலாம். 

 அழகுபடுத்திய போட்டோக்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.

கூகுளுக்கும் பேஸ்புக்கிற்கும் இடையே நடக்கும் போட்டியில் வாசகர்களாகிய நமக்கு சில பயனுள்ள வசதிகள் கிடைத்தால் நலமே.

Thanks- How to add special effects to your photos in Google plus [Picnik into Plus]


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

மேகங்களின் வகைகள் – விளக்கத்துடன் கூடிய புகைப்பட தொகுப்பு

மேகங்களின் வகைகள் – விளக்கத்துடன் கூடிய புகைப்பட தொகுப்பு

அல்டோகுமுலுஸ் வகை மேகம். இவை விமானங்கள் செல்வதனால் உருவாகக் கூடியவை.
அல்டோகுமுலுஸ்
அல்டோகுமுலுஸ்
குமுலுஸ் வகை மேகம்
குமுலுஸ்
குமுலுஸ்
குமுலுஸ் வகை மேகங்களின் அடியில் குமுலுஸ் ஃபிராக்டஸ் வகை மேகங்கள். இவ்வாறான மேகங்கள் தெரிந்தால், கடுமையாக மழை பெய்யும்.
குமுலுஸ் ஃபிராக்டஸ்
குமுலுஸ் ஃபிராக்டஸ்
குமுலுஸ் ஹுமுலிஸ் வகை மேகங்கள். வெயில் காலத்து காலைப் பொழுதுகளில் தோன்றும் மேகம் இவை. சூரிய ஒளி பட்டு தரை வெப்பமாவதால் உருவாகும் சூடான காற்று மேலெழுந்து இவ்வகை மேகங்களை உருவாக்குகின்றன.
குமுலுஸ் ஹுமுலிஸ்
குமுலுஸ் ஹுமுலிஸ்
நொக்டிலுசெண்ட் வகை மேகங்கள். இவ்வகை மேகங்கள் மிகுந்த உயரத்தில் தோன்றுவதால், இரவில்கூட இவற்றின்மேல் சூரிய ஒளி படுவதை அவதானிக்க முடியும்.
நொக்டிலுசெண்ட்
நொக்டிலுசெண்ட்
சிர்ரஸ், சிர்ரோஸ்டிராடஸ் மற்றும் அரிதாகவே தோன்றும் கெல்வின் ஹெல்ம்ஹோல்ட்ஸ் வகை மேகங்கள். காற்று மண்டலத்தின் தாழ்வான பரப்பில் காற்று வீசுகின்ற வேகத்தை விட மேல் பரப்புகளில் அதிக வேகமாக காற்று வீசும்போது இவ்வகை மேகங்கள் தோன்றுமாம்.
சிர்ரஸ், சிர்ரோஸ்டிராடஸ் மற்றும் அரிதாகவே தோன்றும் கெல்வின் ஹெல்ம்ஹோல்ட்ஸ் வகை மேகங்கள்.
சிர்ரஸ், சிர்ரோஸ்டிராடஸ், கெல்வின் ஹெல்ம்ஹோல்ட்ஸ்
ஸ்டாடோகுமுலுஸ் வகை மேகம். இம்மேகங்கள் சாதாரணமாக மழைக்காலங்களில் தோன்றும். இந்தப் படத்தில் மேகத்தின் அடியில் மழை பொழிவதையும் காணமுடிகிறது.
ஸ்டாடோகுமுலுஸ்
ஸ்டாடோகுமுலுஸ்
கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்

ராடாரின் பயன்களைப் பற்றி சற்று ஆராய்வோமா!


'தாவூதுக்கு நம் அருளை வழங்கினோம்.'மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து துதியுங்கள்' எனக் கூறினோம். போர்க் கவசங்களைச் செய்வீராக! அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக!' எனக் கூறி அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம்.'
-குர்ஆன் 34:10,11

'அதை சுலைமானுக்கு விளங்க வைத்தோம். இருவருக்குமே அதிகாரத்தையும் கல்வியையும் வழங்கினோம். பறவைகளையும் மலைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை இறைவனைத் துதித்தன. நாம் எதையும் செய்யக் கூடியவராவோம்'

-குர்ஆன் 21:79

'சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது'

-குர்ஆன் 38:36

மேலே உள்ள வசனங்கள் இறைத் தூதர் சுலைமானுக்கும் இறைத் தூதர் தாவூதுக்கும் இறைவன் கொடுத்த சில சிறப்பியல்புகளை சொல்லிக் காட்டப்படுகிறது. இந்த வசனங்கள் நாம் தற்போது உபயோகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் காந்த அலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகப் படுகிறது. இது பற்றிய முழு உண்மையை இறைவனே அறிந்தவன். சூரா 34:10 ல் உபயோகப்படுத்தப்பட்டுள்ள 'அவ்விபி' என்ற அரபு வார்த்தையானது “திரும்பப் பெறப்படும் ஒலி” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். இது தற்போது நமது பயன்பாட்டில் உள்ள ரேடாரின் தொழில் நுட்பத்தை ஒத்திருக்கிறது.

ரேடாரின் இயக்கம் என்பது ஒலி பிரதிபலிப்புக்கு நெருங்கிய தொடர்புடையது. உதாரணத்துக்கு ஒருவர் ஒரு பள்ளத்தாக்கிலோ அல்லது ஒரு குகையிலோ நின்று கொண்டு வேகமாக சப்தமிட்டால் அவருடைய ஒலியே அவருக்கு பிரதிபலிப்பாக திரும்ப வருவதை உணருவார். (படம் 1) (மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல..அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது...புனிதமானது....:-)) இதிலிருந்து காற்றில் நமது ஒலியானது எவ்வாறு பயணிக்கிறது. எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதை துல்லியமாகக் கணக்கிட முடியும்.





ரேடாரின் தொழில் நுட்பத்தில் மின் காந்த அலைகளின் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதாக நாம் முன்பு பார்த்தோம். ஒலியானது மைக்ரோவேவ் அதிர்வெண் சிக்னல்களால் உமிழப்பட்டு அவை திருப்பி அனுப்பப்படுகிறது. இத்தகைய சமிக்ஞைகளை நாம் எகோ(echo) என்கிறோம். ரேடார் சாதனமானது ஒளியின் அளவையும் அவற்றின் தூரத்தையும் கணக்கிட்டு எதிரொலிக்கும் வேலையை செய்து தருகிறது. (படம் 2)



ரேடாரின் அதிர்வெண்கள் உபயோகத்துக்குத் தக்கவாறு மாறுபடும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. மின் காந்த ஆற்றல் வானொலி தொலைக்காட்சி என்று நமது தேவைக்குத் தக்கவாறு ரேடாரின் அதிர்வெண்களும் மாறுபடும். (படம் 2).

எகோவாக பிரதிபலிக்கும் ஒலிகள் எண்களாக மாற்றப்பட்டு ரேடார் ரிசீவர் மூலமாக டேட்டாவாக சேமிக்கப்படுகிறது. (படம் 3)




முடிவாக இந்த டேட்டாக்கள் படங்களாக மாற்றப்படுகிறது. (படம் 4)




குர்ஆன் 34:10ல் அரபி மொழியின் வினைச் சொல் 'அலென்னா' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தமானது 'இணக்கமானதாக நாம் மாற்றுவோம்' என்ற பொருளில் வரும். குர்ஆனில் இங்கு தேர்ந்தெடுத்து இந்த வார்த்தையை இறைவன் பயன்படுத்தியிருக்கிறான். அதாவது கடினத் தன்மை உடைய இரும்பை இலகுவானதாக மாற்றித் தருகிறான். ரேடார் தொழில் நுட்பத்தில் மென்மைப்படுத்தப்பட்ட இரும்பையே நாம் உபயோகப்படுத்துகிறோம். (படம் 5)




“அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது'” என்று இறைத் தூதர் சாலமன் காற்றுக்கு கட்டளையிட்டது மின் காந்த சமிஞ்கைகளின் உதவியால் இருக்கலாம். இறைவனே இதன் முழு உண்மையையும் அறிந்தவன்.

ரேடாரின் உபயோகத்தை இன்று நாம் நிதர்சனமாக பார்த்து வருகிறோம். கோள்களின் அமைப்பு, பூமியின் அமைப்பு, ஒரு நாட்டின் அமைப்பு, ஒரு ஊரின் ஏன் ஒரு வீட்டின் அமைப்பையையே இன்று ரேடாரின் உதவி கொண்டு துல்லியமாக கணக்கிட்டு விடுகிறோம்.



'பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை ஒழுங்குப் படுத்த நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கட்டளையிட்டான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.'
-குர்ஆன் 41:11,12

இது போன்ற வசனங்களை எல்லாம் நாம் பார்க்கும் போது எப்படி காற்றும், பூமியும் மலைகளும், பேச முடியும் என்ற கேள்வி எழலாம். இறைவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்றோ அல்லது அவனது ஆற்றல் எதை எல்லாம் உள்ளடக்கியது என்றோ நம்மால் ஒருக்காலும் விளங்க முடியாததாகும். அவன் அனைத்து சார்பியல் நிலைகளையும் ஒப்பீடுகளையும் கடந்து தமக்குத் தாமே சம்பூரணமானவன். எனவே அவனது அறிவாற்றலுக்கு முன்னால் உயிருள்ளவை உயிரற்றவை என்ற பாகுபாடு கிடையாது.

மனிதர்களாகிய நாம் கூட உயிரற்ற பொருட்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டை எடுத்துக் கொள்வோம். அதை விண்ணில் செலுத்தவதற்கும் அது விண்வெளியில் செய்யப்படக் கூடிய வேலைகளையும் நாம் பூமியில் இருந்து கொண்டே கட்டளைகளை அதற்கு பிறப்பிக்கிறோம். அவைகள் நமது கட்டளைகளை உடன் நிறைவேற்றுகின்றன. (சம்பள உயர்வு கேட்பதில்லை: வேலை நிறுத்தமும் செய்வதில்லை.:-)) இயக்கத்தில் சில குறைபாடுகள் இருந்தால் அதையும் சரி செய்ய சொல்லி அவை சமிக்ஞை தருகிறது. பொறியாளர்கள் சரி செய்தவுடன். அவை தங்களின் வேலைகளை சரி வர செய்கின்றன. இந்த பொருட்களுடன் நாம் உரையாட மனித மொழிகளை உபயோகிக்காமல் மின் அணு மொழியில் இயந்திரங்களோடு உரையாடுவதால் அவற்றின் வேலைகளை நம்மால் வாங்க முடிகிறது. எனவே உயிரற்ற பொருட்கள் விளங்கும் மொழியில் நமது பரிமாற்றம் இருந்தால் அத்தகைய அறிவு நமக்கு கொடுக்கப்பட்டிருந்தால் எவற்றுடனும் நம்மால் சம்பாஷனை நடத்த முடியும் என்று அறிகிறோம். அற்பனான மனிதன் ராக்கெட்டுகளோடு உரையாடும் போது நம்மை படைத்த இறைவன் மலைகளோடும், காற்றோடும் நதிகளோடும் உரையாட கருத்துப் பரிமாற்றம் செய்ய வல்லமை உடையவனே என்றும் நாம் நம்புகிறோம்.

Friday, March 30, 2012

தூக்கத்தின் தந்தை

நன்றாக உறங்குகிறேன்
ஐந்து ஆறு கண்கள் இருப்பதுபோன்ற அலுப்பில்
நான் நன்றாக உறங்குகிறேன்
எனது புதிய கனவின் முகத்தில்
பேய் ஓவியங்களை அள்ளி எறிந்தவர்கள்
தூக்கத்தில் நடக்கும் மனிதர்கள்
எனது வீடு நிறைய நிசி
விளக்கைத் தேடி எடுப்பதென்பது
கண்களை ஒரு துணியினால் கட்டி
விளையாடுவது போலிருக்கு
இங்கே
பேய் ஓவியர்கள் அமர்ந்திருப்பர்
குடும்பக் கதையெல்லாம் சொல்லி
வேட்டைப் பற்களைக் காட்டி சிரிப்பர்
என்று
என் மகனுக்குச் சொன்ன கதைகள்
ஞாபகத்தில் வர
பயந்து கத்திவிட்டேன்
நிசி
பேய் ஓவியர்களின் வர்ணம்
பேய் ஓவியர்களின் வர்ணத்திற்குள்
இறங்கிக் கிடக்கும் நான்
உறக்கத்தில் பலவும் பேசுகிறேன்
உறக்கத்தில் பலவும் பேசுவதாக
முன்பொரு விடியற்காலையில்
மனைவி சொன்னாள்
இன்று
பொழுதுவிடிந்தும்
உறங்கியவாறு கிடக்கிறேன்
எனது பலவருடகால படுக்கையில்
அசதியாக இருக்கும் என நினைத்தோ
அழவேண்டி இருக்கும் என நினைத்தோ
முதுகில் தட்டி
என்னை வழமையாக எழுப்புவது போன்று
எழுப்பவில்லை மனைவி

எனதுடலுக்குள்
தூக்கத்தின் தந்தை குடியேறியிருக்கிறார்
என்பதை எழுந்தவுடன் சொல்ல எண்ணியிருந்தேன்
இப்போது நான்
நீளமாகவும், அகலமாகவும்
வானில் பறக்கிறேன்
என்னுடன் அபூர்வமான பறவைகளும்
பேசிக்கொண்டு வருகின்றன
ஒரு பறவை சொல்லிவருகிறது
உன்னை சந்தூக்கில் வைத்து தூக்கி வருகிறார்கள்
உனக்கு பறப்பது போலிருக்கா?
இதைக் கேட்ட நான்
ஏங்கி அழுகிறேன்
எனது கண்ணீரை பன்னீர் என்று
சொல்லிக் கொண்டுவருகின்றனர்
அக் கூட்டத்தினர்

முக்கிய ஏரிகள்

பெயர்                                                                       நாடு                                      பரப்பளவு (ச.கி.மீ)
காஸ்பியன் கடல்                                 ஆசியா-ஐரோப்பா                                  3,71,000
சுப்பீரியர்                                                   வட அமெரிக்கா                                          82,100
விக்டோரியா                                            ஆப்பிரிக்கா                                                69,500
ஹுரோன்                                                வட அமெரிக்கா                                         59,600
மிச்சிகன்                                                  வட அமெரிக்கா                                         57,800
டங்கனிகா                                                ஆப்பிரிக்கா                                               32,900
பெய்கல்                                                        ஆசியா                                                    31,500
கிரேட் பீர்                                               வட அமெரிக்கா                                         31,300
அரல் கடல்                                                ஆசியா                                                     30,700
மலாவி                                                   ஆப்பிரிக்கா                                                28,900
கிரேட் சால்வி                                          கனடா                                                      28,568
எரி                                                         வட அமெரிக்கா                                           25,667
வின்னிபெக்                                             கனடா                                                      24,387
ஒன்டாரியா                                       வட அமெரிக்கா                                        19,529
பால்கஷ்                                             கஸாக்ஸ்தான்                                         18,300
லடோகா                                                  ருஷ்யா                                                   17,703
சாட்                                                        ஆப்பிரிக்கா                                               16,317
மராகைபோ                                         வெனிசுலா                                                13,512
ஒனேகா                                                    ருஷ்யா                                                    9,609
எரே                                                     ஆஸ்திரேலியா                                            9,324
நிகராகுவா                                          நிகராகுவா                                                  8,485
டிடிகாகா                                          பெரு-பொலிவியா                                       8,303
அதபாஸ்கா                                              கனடா                                                     7,936

உலகின் முதல் பெண்கள்

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி : மேரி க்யூரி, இயற்பியல் (1903)
நோபல் (இயற்பியல்) பரிசு பெற்ற முதல் பெண்மணி : மேரி க்யூரி
நோபல் (வேதியியல்) பரிசு பெற்ற முதல் பெண்மணி : மேரி க்யூரி
நோபல் (அமைதி)  பரிசு பெற்ற முதல் பெண்மணி : பரோனஸ் பெர்த்தா சோஃபி ஃபெலிஸிடா வோன் சுட்னர் (1905)
நோபல் (இலக்கியம்) பரிசு பெற்ற முதல் பெண்மணி : செல்மா ஒடீலியா லோவிசா லேகர் லோஃப் (1909)
நோபல் (இலக்கியம்) பரிசு பெற்ற முதல் கறுப்பினப் பெண் : டோனி மோரிசன் (1993)
நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்லாமியப் பெண் : ஷிரின் எபாடி (2003)
பிரபல டைம் பத்திரிகையின் ‘ஆண்டின் சிறந்த மனிதர்’ தகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி : வேலிஸ் பார்ஃபீல்டு சம்ப்சன் (1936)
ஆஸ்கர் சிறந்த நடிகை விருது பெற்ற முதல் பெண் : ஜானெட் கெய்னர் (1928)
ஆஸ்கர் சிறந்த நடிகை விருது பெற்ற முதல் கருப்பின் பெண் : ஹல்லே பெரி (2002)
முதல் ஏர் ஹோஸ்டஸ் : எல்லன் சர்ச், யுனைடெட் ஏர்லைன்ஸ் (1930)
அமெரிக்க கார் நிறுவனத் தலைவரான முதல் பெண்மணி : டாக்டர் சிந்தியா, எம்.ட்ரூடெல், சார்ட்டன் கார்ப்பரேஷன் (1999)
தூதராக பணியாற்றிய முதல் பெண்மணி : ரோஸிகா ஷ்விம்மா, சுவிட்சர்லாந்துக்கான ஹங்கேரிய தூதர் (1918)
பைலட் லைசென்ஸ் பெற்ற உலகின் முதல் பெண்மணி : பரோனஸ் ரெய்மோன்ட் டி லா ரோச்சே, பிரான்ஸ் (1910, மார்ச், 08)
அமெரிக்க விமானப்படையில் காப்டனான முதல் கன்னியாஸ்திரி : மேரி ஹார்கிரா ஃபன் (சிஸ்டர் மேரி கார்ல்) (1978)
அமெரிக்காவின் முதல் பெண் போலீஸ் : ஆலிஸ் ஸ்டெப்பின்ஸ் வெல்ஸ் (1910)
பேச்சுத் திறனும், கேள்வித்திறனும் இழந்தும் பட்டம் பெற்ற முதல் பெண்மணி : ஹெலன் கெல்லர், ராட்கிளிஃப் கல்லூரி (1904)

****ஒரு முதிர்க் கன்னி.. இளைஞர்களை நோக்கி....****



வீட்டு வாசலில் அமர்ந்திருந்தேன்...
என்னை நோக்கி....
என் தோழியின் பத்து வயது மகள் ஓடி வந்தாள்..
"ஆண்டி" என்று என்னை நெஞ்சோடு இருக்க கட்டிக் கொண்டாள்...!

நான் "ஆண்டி"யாம் ...?

என்னைவிட வயதில் குறைந்த என் தோழிக்கு

பத்து வயதில் ஒரு குழந்தை....!

நானோ...
திருமணச் சந்தையில் இன்னும்

"விலை" போகாத,காட்சிப் பொருளாய்....!

நாட்கள் செல்கிறது...

வயதோ கூடிக் கொண்டே போகிறது...

என்னை பெண் பார்க்க ஒவ்வொரு நாளும்,

ஒவ்வொருவராய் வருகிறார்கள்..!

நானோ காட்சிப் பொருளாய் ..
ஒவ்வொருநாளும் ஒவ்வொருவருக்காகவும் அலங்கரிக்கப்படுகிறேன்...!

அழகில் குறையில்லை என்றார்கள்..
நிறத்தில் குறையில்லை என்றார்கள்...
குணத்தில் குறையில்லை என்றார்கள்...

பணத்தில் மட்டும் குறையைக் கண்டார்கள்!

ஆம்! நானோ ஏழைக்குப் பிறந்த பேழை..!

என்னை ஏழை என்பதற்காக ஒதுக்கும் இளைஞர்களே!

நான் உங்கள் வீட்டில் பிறந்த சகோதரியாக இருந்தால்..
முதிர்க் கன்னியாக இருந்தால்...
என் "வேதனையின் வலி" உங்களுக்குப் புரியும்தானே!

கை கூலி வாங்குவது கையாலாகாத தனம்
என்பது புரிந்தும் புரியாமல் நடிக்கும் இளைஞர்களே!!

எந்தப் பெண்ணும் கேட்காத,
எந்தப்பெண்ணிடமும் நீங்கள் கேட்டிறாத..
ஒன்றை உங்களை நோக்கி ..நான் கேட்கவா..?

என்னைத் திருமணம் செய்ய விலை பேசும்
கையாலாகாத இளைஞனே!

திருமணத்திற்குப் பின்பு...உன் குழந்தையை
என் வயிற்றில் சுமக்கப்போறேனே....
அதற்கு என்ன விலை நீ தருவாய்...?

என் கஷ்டத்தைத் தாங்கி ...
உன்னை சந்தோஷப் படுத்துவேனே..
அதற்கு என்ன விலை நீ தருவாய்....?

உன் குழந்தைகளைப் பராமரிக்கப் போறேனே...
அதற்கு என்ன விலை நீ தருவாய்...?

உனக்காக என் சொந்தப் பந்தத்தை
தியாகம் செய்யப் போறேனே...
அதற்கு என்ன விலை நீ தருவாய்..?

நீ என்னை என்ன கொடுமைப் படுத்தினாலும்,
பெண்ணா பிறந்ததினால்....
அதையும் அனுபவிக்கப் போறேனே...
அதற்கு என்ன விலை நீ தருவாய்....?

கோபம் வருகிறதா..?
ரோஷம் வருகிறதா..?
வெட்கம் வருகிறதா..?

உனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யும்
என்னை விலை பேச மட்டும் .....
உனக்கு எப்படி மனசு வருகிறது....?

இருப்பினும்...
அல்லாஹ்வுக்காக என் உணர்வுகளை...
கட்டுப் படுத்திக் கொள்கிறேன்...!

நான் மறுமைக்காக வாழ்பவளாக இருப்பதால்...
தவறு செய்வதை என் கற்பனையில் கூட
நான் நினைக்கவில்லை...!

என் இறைவன் எண்ணைக் கைவிட மாட்டான்..
என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு..
இன்னும் இருக்கிறது...! இன்ஷா அல்லாஹ் இந்த நம்பிக்கைத் தொடரும்!

வழி மீது விழி வைத்துக் காத்திருக்கிறேன்!
ஒரு உண்மையான (கை கூலி வாங்காத)
ஆண் மகனை எதிர்பார்த்து......!!


(அன்புச் சகோதர்களே! நான் பழகிய என் சில சகோதரிகளின் கண்ணீர்க் கதைக்காக இந்தப் பதிவு!எழுத்துக்கள் என்னுடையதாக இருந்தாலும்..உணர்வுகள் ..என் சகோதரிகளின் உணர்வுகள்!
அல்லாஹ்வைப் பயப்படுவோம்!
வரதட்சனையின்றி திருமணம் செய்வோம்!!)

இந்தப் பதிவின் மூலம் வரதட்சணை வாங்க நினைக்கும்..
ஒரு இளைஞன் திருந்தினாலும்...அது இந்தப் பதிவிற்கு கிடைத்த மகத்தான வெற்றியாக நான் கருதுவேன்!!

முகநூலில் ஒரு சகோதரியிடமிருந்து...



وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ (05-02)

..and help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting(05;02)

”..நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" (05,02)

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ?



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள். இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந...்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (அல்குர்ஆன்: 2:275)

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(2:276.)

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்(3:130

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(2 :278 )

“வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்” (அல்-குர்ஆன் 4:161)

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 3:130-132)

“(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்” (அல்-குர்ஆன் 30:39)

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” (என்று கூறினார்கள்). அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

வட்டியின் மூலம் கிடைத்த ஒரு திர்ஹம் முப்பத்தி ஆறு விபச்சாரத்தை விட அல்லாஹ்விடம் மிகக் கொடுமையானது என்றும், ஒருவனுடைய மாமிசம், (அல்லாஹ்வால்) தடுக்கப்பட்ட ஒன்றின் (வட்டியின்) மூலம் வளர்ச்சியடைந்தால் அதற்கு நரகமே மிக ஏற்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : தப்ரானி

2086. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் கூறினார்:
இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவரின் தொழில் கருவிகளை உடைத்துவிட்டார்கள்.) இது தொடர்பாக அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்குப் பெறுகிற கூலியை)யும் தடை செய்தார்கள்; பச்சை குத்துவதையும், பச்சை குத்திக் கொள்வதையும் தடை செய்தார்கள்; வட்டி உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!" என்று பதிலளித்தார்கள்.
Volume :2 Book :34

2170. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடக் மாற்றினாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர!" என உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :34

2312. அபூ ஸயீத் குல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் பிலால்(ரலி) 'பர்னீ' எனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் 'இது எங்கிருந்து கிடைத்தது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்! என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அடடா! இது வட்டியேதான்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் வாயிலாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக! என்றார்கள்.
Volume :2 Book :40


2766. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று (பதில்) கூறினார்கள்.
Volume :3 Book :55
See More

Wednesday, March 28, 2012

விக்கிபீடியா பற்றி சில சுவாராசியமான தகவல்கள்


அண்மையில் 1766 முதல் 2010 வரை 244 வருடங்களாக தனது அச்சுப்பதிப்பை வெளியிட்டு வந்த என்சைக்ளோபீடியா
நிறுவனம் தற்போது அதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது இதற்கு டிஜிட்டல் உலகின் விக்கிபீடியா போன்ற தளங்களும் காரணமாக இருப்பதாக கருதப்படுகின்றது. தற்போது விக்கிபீடியா தொடர்பான சில சுவாராசியமான தகவல்களை பார்க்கலாம்.
விக்கிபீடியா எனும் பெயரின் காரணம் இதுதான் wiki என்றால் இணையங்களை பகிர்வதாம் pedia என்பது 
என்சைக்ளோபீடியா(encyclopedia) என்பதின் சுருக்கம்.
விக்கிபீடியா Jimmy Wales மற்றும் Larry Sanger எனும் இருவரால் 2001ல் நிறுவப்பட்டது.
விக்கிபீடியாவில் தற்போது உள்ள மொழிகளின் எண்ணிக்கை 260
வீக்கிபீடியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 680 மில்லியன் பக்கங்கங்களை உருவாக்கின்றது.
மோசமான வானிலை விக்கிபீடியாவின் மேம்படுத்தல்களுக்கு பாதிப்பை ஏற்படுதிகிறதாம். அதனால்தான் டச் மொழி 
விக்கிபீடியா ஸ்பையின் மொழி விக்கிபீடியாவை விட அதிக பக்கங்களை கொண்டுள்ளதாம்.
ஆங்கில மொழி விக்கிபீடியா, 3மில்லியனுக்கும் அதிகமான கட்டுரை தகவல்களை கொண்டுள்ளதாம். அதே போல்
ஜெர்மன் மொழியில் - 1.08மில்லியன்
பிரான்ஸ் மொழியில் - 958,000
இத்தாலி மொழியில் - 697,000
ஸ்பையின் மொழியில் - 608,000
விக்கிபீடியா எந்தவொரு விளம்பரங்களையும் கொண்டிருப்பதில்லை.
விக்கிபீடியர்கள் என வீக்கிபிடியா சமூக உறுப்பினர்களை குறிப்பிடபடுகிறார்களாம். ஆனால் எவரும் அங்குள்ள 
கட்டுரைகளை திருத்த முடியும்.
விக்கிபீடியாவின் நோக்கமே உலகில் உள்ள அனைத்து விபரங்களும் ஒவ்வொரு மொழிகளிலும் கிடைக்ககூடிய 
வகையில் இருக்கவேண்டுமென்பதாம்.
இதில் தணிக்கை முறை என்று எதுவும் இல்லை ஆனால் கட்டுரைகள் கட்டாயமாக இம்மூன்று வழிகாட்டுதல்களை 
சேர வேண்டுமாம். அது கலைக்களஞ்சியம், இயற்கை தன்மை, மெய்ப்பிக்கத் தக்கதாகவும் இருக்க வேண்டுமாம்.
யாரேல்லாம் விக்கிபீடியாவின் பக்கங்களை திருத்துகிறார்கள்:
69% வீதமானோர் பிழை சரிகளை திருத்திகிறார்கள்
73% வீதமானோர் தங்களின் அறிவை பகிர்ந்து கொள்ள விரும்புவோர்
19% வீதமானோர் முதுகலை பட்டம் பெற்றவர்கள்
4.4% வீதமானோர் PhD பட்டம் பெற்றவர்கள் 
13% வீதமானோர் பெண்கள் (31% வீதமே வாசிப்பவர்கள் பெண்கள்)
ஆக 2008ல் ஆய்வுகளின் படி விக்கிபீடியாவின் கட்டுரைகளின் துல்லியத்தன்மைக்கும் அதைப் போன்று என்சைக்ளோபிடியா பிரித்தானியா, அமெரிக்க வரலாறு அகராதி மற்றும் அமெரிக்க தேசிய வாழ்க்கை வரலாறு 
இணையம் என்பனவற்றின் கட்டுரை தகவல்களுடன் ஒப்பிடும் போது
விக்கிபீடியா - 80%வீதம் B-
மற்றவை 95 - 96% வீதம் A என்று குறிப்பிடுகின்றனர்.

M G R இன் கடைசி வரை நிறை வேறாத ஆசை.





ஆரூர் தாஸ் - கிட்டத் தட்ட ஆயிரம் படங்களுக்கும் மேல் வசனம் எழுதியவர். 
ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாமல் வெளியேற முடியாத அற்புத உணர்ச்சிக் காவியங்களை தமிழில் படைத்தவர். 
எம்.ஜி.ஆர் இவரை ஆசிரியர் என்று அழைப்பார். 
சிவாஜி உரிமையுடன் பழகக் கூடியவர். 
அவர்கள் இருவரின் படங்களுக்கும் ஒரு சேர வசனம் எழுதியவர்.
பாசமலர், தாய் சொல்லை தட்டாதே,விதி, அவரின் வசனத்தில் ஒரு துளி. 
ஆரூர் தாஸ் என்கிற யேசு தாஸ். 
துளியும் கோபம் வராத மனிதர். 
சமீபத்தில் சதாபிசேகம் கொண்டாடிய அவரின் நெகிழ வைக்கும் திரை அனுபவம் இது.
தங்கத்துக்கும் ஒரு குறை உண்டு போல :
ஒரு நாள் ஒப்பனை அறையில் நாங்கள் தனித்திருந்த வேளையில் எம்ஜிஆர், என்னிடம் (ஆரூர்தாஸ்) சொன்னார்:
“பசி பட்டினியின் எல்லையையே பார்த்தவன் நான். அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளின் சிகரத்தைத் தொட்டிருக்கேன். இப்போ புகழின் உச்சியிலே இருக்கேன். வசதிக்குப் பஞ்சம் இல்லே. தினமும் என் வீட்டுல மூணு வேளையும் குறைஞ்சது 50–60 இலைங்க விழுது. ஆனாலும், ரெண்டே ரெண்டு குறைகளை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது. ஒண்ணு: குழந்தைங்க வாரிசு இல்லாத குறை ! இன்னொண்ணு…’
நான் இடைமறித்து, “ஏன், பெருந்தலைவர் காமராஜருக்குக் கூடத்தான் குழந்தைங்க வாரிசு இல்லே. அதனால் என்ன குறைஞ்சி போயிட்டாரு !’ என்றேன்.
“அப்படி இல்லே. காமராஜருக்குக் கல்யாணமே ஆகாத காரணத்தால குழந்தைங்க இல்லாம போயிடுச்சி; ஆனா, எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே ! எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பெத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா?’ அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.
பெரிய, பெரிய ஜோசியரை எல்லாம் ரகசியமா வீட்டுக்கு வரவழைச்சி என் ஜாதகத்தைக் காட்டிக் கலந்து ஆலோசனை பண்ணுவேன், ஜோதிடர் கலையில் நிபுணர்களான ரெண்டு, மூணு பேரு மட்டும் ஒத்து ஒரே கருத்தைச் சொன்னாங்க. இது பலதார ஜாதகம்! ஒங்க வாழ்க்கையிலே பல பெண்கள் குறுக்கிடுவாங்க. அவுங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க குடுப்பீங்க; ஆனா, அவுங்க யாரும் ஒங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் குடுக்க மாட்டாங்க; குடுக்கவும் முடியாது. குறை அவுங்ககிட்டே இல்லே’ன்னு சொன்னாங்க.
சமீபத்தில் ஆயுள் இன்சூரன்சுக்காக முக்கியமான ஒரு பெரிய மருத்துவர்கிட்டே உடல் பரிசோதனை பண்ணிக்கிட்டேன். அவர் உங்க மாதிரி என் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். இனிமே எனக்கு குழந்தை உண்டாகிறதுக்கு வாய்ப்பே இல்லேன்னு உறுதியா சொல்லிட்டாரு. அதைக் கேட்டு நான் அப்படியே உடைஞ்சி நொறுங்கிப் போயிட்டேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கவே இல்லே. அழுது, அழுது தலையணையே நனைஞ்சிடுச்சி. என் அண்ணனுக்கு அத்தனைக் குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு, எனக்கு ஒரு குழந்தை – ஒரே ஒரு குழந்தையைக் கூட குடுக்க மனசு வரலே பாத்தீங்களா?
எத்தனையோ சகோதரிகள், தாய்மார்கள் அவங்க பெத்தக் குழந்தைகளை என் கையில் கொடுத்து என்னைப் பேர் வைக்கச் சொல்லும்போது, உள்ளுக்குள்ளே என் நெஞ்சு பதறும். ஆனாலும், அதை வெளியில் காட்டிக்காம, அந்தக் குழந்தைகளுக்கு அப்பப்போ எனக்குத் தோணுற பேரை வச்சி, அவுங்க ஆசையை நிறைவேத்துறேன். போகட்டும்… நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்!
என்னோட ரெண்டாவது குறை என்னன்னா ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்திலே கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர பெரிசா ஒண்ணும் படிக்கத் தெரிஞ்சுக்கலே. இளமையிலே பட்ட வறுமை காரணமா அந்த வாய்ப்பு, வசதி இல்லாமப் போயிடுச்சி.
அண்ணாதுரை, கிருபானந்த வாரியார் இவுங்களோட சொற்பொழிவைக் கேட்கும்போது, என்னால அவுங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைச்சி வருத்தப்படுவேன். ஆனாலும், எப்படியோ பேசிச் சமாளிச்சி, மத்தவங்களை சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும் குறை, குறைதானே! அதுவும் பூர்த்தி செய்ய முடியாத குறை. அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா அதுலயாவது நான் பெரிய புள்ளைக் குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!
நடிப்பிற்கு அப்பாற்பட்டு அவரது கண்கள் நீர் நிலைகளானதை நேரில் நான் கண்டது அதுவே முதல் முறை!
குறிப்பு:வெளியான படம் தவறு.மன்னிக்கவும்.புகைப் படம் மட்டும் தனியே வெளியிடப் பட்டுள்ளது.

Tuesday, March 27, 2012

அமெரிக்கா உலகை ஆண்ட காலம் முடிந்துவிட்டது – அஹ்மத் நஜாத்!

அமெரிக்காவும், நேட்டோவும் உலக நாடுகளுக்கு கூடுதல் காலம் கட்டளை பிறப்பிக்க இயலாது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். உலகை ஆண்ட அமெரிக்காவின் காலம் முடிந்துவிட்டது. தங்களது கொள்கையை மாற்ற அவர்கள் தயாராகவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஆப்கானின் பொருளாதார நிலைக்குறித்து தாஜிகிஸ்தானில் நடந்த மாநாட்டில் உரைநிகழ்த்தினார் நஜாத். தெற்கு-மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு துணைச்செயலாளர் ராபர்ட் ப்ளேக்கின் தலைமையில் அமெரிக்க குழுவும் இம்மாநாட்டில் பங்கேற்கிறது. ஆனால், நஜாத் உரை நிகழ்த்த எழுந்தவுடன் அரங்கை விட்டு வெளியேறிய இக்குழுவினர் பின்னர் அவர் உரையை பேசி முடித்ததும் அரங்கிள் நுழைந்தனர்.

நஜாத் தனது உரையில், காலனி மயமாக்கலை லட்சியமாக கொண்டு செயல்படும் நேட்டோ உறுப்பு நாடுகளின் கொள்கைதான் உலகத்தில் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று நஜாத் சுட்டிக்காட்டினார்.
ஆப்கானில் இருந்து வெளிநாட்டு ராணுவம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும். உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் அமெரிக்காவும், நேட்டோவும் ஆகும். தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்காவும், நேட்டோவும் ஆப்கானில் நுழைந்தன. இதே பேனரில் தான் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை சுற்றியும் இவர்கள் செயல்படுகின்றனர். நேட்டோவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு சீர்கெடவும் இதுதான் காரணம். இவ்வாறு நஜாத் கூறினார்.

Monday, March 26, 2012

கௌரவம் பாராத மாமனிதர் பகுதி



நபிகள் நாயகம் அவர்களின் வீட்டு உபயோகப் பொருட்கள்


... கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 6456


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும்.

இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது?

மரத்தின் நிழல் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.
இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.
நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991


பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள்.


ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம்
இருந்தது ஒரே ஒரு பாய் தான்.


'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகல் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 730, 5862


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாயின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?' என்று நான் கூறினேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?' எனக் கேட்டார்கள்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இரண்டாவது
ஜனாதிபதியாகப் பதவி வகித்த உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 4913


கூளம் நிரப்பப்பட்ட இந்தச் சாதாரண தலையணை கூட அவர்களிடம் ஒன்றே ஒன்று தான் இருந்துள்ளது. அதிக மதிப்பில்லாத அற்பமான தலையணை கூட ஒன்றே ஒன்று தான் அவர்களிடம் இருந்தது என்ற இந்தச் செய்தி பதவியைப் பயன்படுத்தி எந்தச் சொகுசையும் நபிகள் நாயகம் அனுபவிக்கவில்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.

வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த இந்த வாழ்க்கையை மிக மிக ஏழ்மை நிலையில் இருப்பவர் கூட வாழ முடியுமா?

ஜசகல்லாஹ் கைர் வாஞ்சூர்

தொடர்பு உடையவை :


கௌரவம் பாராத மாமனிதர் பகுதி -7
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்
பிறர் தவறு செய்யும்போது கன்டித்த விதம் : http://www.facebook.com/photo.php?fbid=237481176347169


கௌரவம் பாராத மாமனிதர் பகுதி -6
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் : http://www.facebook.com/photo.php?fbid=222387337856553


கௌரவம் பாராத மாமனிதர் - Part 5
அதிசய மனிதர் முஹம்மத் (ஸல்) : http://www.facebook.com/photo.php?fbid=200353423393278


கௌரவம் பாராத மாமனிதர் - Part 4
(நபிகள் நாயகத்தின் அரண்மனை ) : http://www.facebook.com/photo.php?fbid=165134426915178


கௌரவம் பாராத மாமனிதர் - Part 3
( மாமன்னரின் எளிய வாழ்க்கை) : http://www.facebook.com/photo.php?fbid=163075517121069


கௌரவம் பாராத மாமனிதர் - சம்பவம் 2
(கடனைக் கேட்பவருக்கான உரிமை) : http://www.facebook.com/photo.php?fbid=154483547980266


கௌரவம் பாராத மாமனிதர் - சம்பவம் 1 : http://www.facebook.com/photo.php?fbid=125008170927804


முன்மாதிரி அரசியல் தலைவர் : http://www.facebook.com/photo.php?fbid=127301107365177


இறுதி நபியின் இறுதிப் பேருரை : http://www.facebook.com/photo.php?fbid=142619529166668


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள் - Part 1 : http://www.facebook.com/photo.php?fbid=140511936044094


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள் Part-2 : www.facebook.com/photo.php?fbid=140949772666977


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள் Part-3 : www.facebook.com/photo.php?fbid=141338659294755


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள் Part-4 :
http://www.facebook.com/photo.php?fbid=148482035247084