Digital Time and Date

Welcome Note

Saturday, October 13, 2012

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை பெண்கள் மறுக்கலாமா?


                                   
தனக்குப் பிடித்தவரைக் கணவனாகதேர்வு செய்ய பெண்ணிற்குஇஸ்லாத்தில் உரிமைவழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடையவிருப்பமில்லாமல் நடத்தப்படும்திருமணம் செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கன்னி கழிந்த பெண்ணை, அவளது(வெளிப்படையான) உத்தரவுபெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மண முடித்துக் கொடுக்க வேண்டாம்'' என்றுசொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத்தெரிந்து கொள்வது)'' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள், "அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்) என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (5136)
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள்.எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி)
நூல் : புகாரி (5138)
பெண்கள் விரும்பினால் அவர்கள் வீட்டார் கூறுகின்ற மாப்பிள்ளையைத் தேர்வுசெய்வதற்கும் பெண்களுக்கு பிடிக்காவிட்டால் மறுப்பதற்கும் பெண்களுக்கு உரிமைஉண்டு.

Wednesday, October 10, 2012

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்.


அல்லாஹ் இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக்குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓ
தினால் பத்து நன்மைகள் கிடைக்கும் குர்ஆனை ஓதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்ணியமான உயர்ந்த மலக்குகளுடன் மறுமையில் இருப்பார்கள். இப்படி குர்ஆனை ஓதுவது பற்றிய நன்மைகளை நாம் அதிகம் தெரிந்திருக்கின்றோம்.

அதனால் குர்அனை தஜ்வீத் முறைப்படி பல தடவைகள் ஓதி முடித்தும் இருக்கின்றோம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கம் இது மட்டுமல்ல, குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதோடு அதன் கருத்துக்களையும் உணர்ந்து, படித்து, தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். அரபு மொழி தெரியாதவர்கள் தனக்குத் தெரிந்த மொழியாக்கம் செய்யப்பட்ட குர்ஆனை, மனம் அமைதிபெறும் நேரத்தில் எடுத்து, அதிலுள்ள சில வசனங்களையாவது கருத்துணர்ந்து தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்த்து படிக்க வேண்டும். சிந்திக்கச் சொல்லும் வசனத்தைக் கண்டால் சிந்திக்க வேண்டும், அல்லாஹ்வின் தண்டனை பற்றிய வசனத்தைக் கண்டால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் கண்ணியம் பற்றிய வசனம் வந்தால் அல்லாஹ்வை துதிக்க வேண்டும். அல்லாஹ்வின் அருள் மற்றும் சுவர்க்கம் பற்றி கூறப்பட்டால் அல்லாஹ்விடம் அதைக் கேட்க வேண்டும். இவ்வாறுதான் குர்ஆனை நாம் அணுக வேண்டும். இவ்வாறில்லாமல் அவசர அவசரமாக கருத்துணராமல் அரபியில் மட்டும் அல்லது மொழியாக்கத்தை வேகம் வேகமாக படித்து முடிப்பதினால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கத்தை நாம் முழுமைப்படுத்த முடியாது. இதனால்தான் குர்ஆனை ஓதிக்கொண்டே குர்ஆனுக்கு மாறு செய்கின்றோம். குர்ஆனை ஓதிக் கொண்டே வட்டி கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் அதிகம் இருக்கின்றார்கள். இவ்வாறே கொலை, கொள்ளை, விபச்சாரம், ஏமாற்று என்று மாபாவச் செயல்களை செய்யக்கூடியவர்கள் நம்மில் அதிகரிக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நாள்தோறும் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் தான். குர்ஆனை ஓதியும் இவர்கள் இம்மாபாவச் செயல்களை விடாமலிருப்பதற்குக் காரணம், குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கவில்லை என்ற ஒரே காரணம்தான். குர்ஆனை கருத்துணர்ந்து, நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் நாம் திருந்த முடியும் இன்ஷா அல்லாஹ்.

கருத்துணர்ந்து குர்ஆனை படிக்க வேண்டும் என்கிற வசனங்களையும், நபிமொழிகளையும் இனி தெரிந்து கொள்வோம்.

இறை வாக்குகள்

1. (நபியே! குர்ஆனாகிய இது) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கிவைத்தோம். (அல்குர்ஆன் 38:29)

குர்ஆனை ஓதுவதால் அதிக நன்மை இருக்கின்றது என்பதில் கொஞ்சம்கூட ஐயமில்லை, அப்படி இருந்தும் இப்புனிதமிக்க குர்ஆன் இறக்கிவைக்கப்பட்ட அடிப்படை நோக்கம், சிந்திப்பதற்கேயன்றி வெறும் கருத்துணராமல் ஓதுவதற்கு மாத்திரமல்ல என்பதை மேலுள்ள திருவசனம் சுட்டிக்காட்டுகின்றது.

ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனின் சட்டதிட்டங்களை பாழ்படுத்திவிட்டு அதன் எழுத்துக்களை மாத்திரம் மனனம் செய்வது குர்ஆனை சிந்திப்பதாகாது. கருத்துணராமல் குர்ஆனை ஓதக்கூடியவர்களில் ஒருவர், நான் குர்ஆன் முழுக்க ஓதிவிட்டேன் எனக்கூறுகின்றார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் அதில் கூறப்படும் நல்லொழுக்கங்களோ, அமல்களோ காணப்படவில்லை!.

2. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: அல்லாஹ் தன் அடியார்களை இக்குர்ஆனை சிந்திக்கும்படியும் அதன் தீர்க்கமான கருத்துக்களையும் இலக்கிய வசன நடைகளையும் உணராமல் அதை புறக்கணிப்பதையும் அல்லாஹ் தடுக்கிறான். இது குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கும்படி ஏவப்பட்ட தெளிவான ஏவலாகும்.

3. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

4. நாம் யாருக்கு வேதத்தை கொடுத்தோமோ அத்தகையோர் – அவர்கள், அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள்தான் இதை (அல்லாஹ்வின் வேதமென) விசுவாசிப்பார்கள். மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ, அத்தகையோர் தாம் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 2:121)

இந்த வசனத்திற்கு இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தை குறிப்பிடுகின்றார்கள்: (என் உயிர் எவனிடம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக! குர்ஆனை ஓதவேண்டிய முறைப்படி என்பது, அது ஹலாலாக்கியதை ஹலாலாக்குவதும், அது ஹராமாக்கியதை ஹராமாக்குவதும் அல்லாஹ் இறக்கிய முறைப்படி ஓதுவதுமாகும்.)

ஷஃகானி(ரஹ்) அவர்கள்: (அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள்) என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்கும்போது, (அதில் உள்ளதைக் கொண்டு அமல் செய்வார்கள்) என்பதுதான் அதன் விளக்கமாகும். ஆகவே அமல் அறிவுக்குப் பிறகுதான் ஏற்படும். அறிவு சிந்திப்புக்கு பின்புதான் ஏற்படும் என்கிறார்கள்.

5. என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள் என்று (நம்) தூதர் கூறுவார். (அல்குர்ஆன் 25:30)

இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்துக்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: குர்ஆனின் கருத்தை உணராமல் படிப்பது அதை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்குவதாகும்.

இப்னுல் கைய்யிம்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: குர்ஆனை புறக்கணிப்பது பல வகையாகும், அதில் நான்காவது வகை கருத்துணர்ந்து படிப்பதை விட்டுவிடுவதாகும்.

நபி மொழிகள்1. அல்லாஹ்வின் வீடுகளில் நின்றும் எந்த ஒரு வீட்டிலாவது ஒரு கூட்டத்தார் ஒன்று கூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை அவர்கள் (விளங்கி) படித்தால் அவர்கள் மீது அல்லாஹ்வின் அமைதி இறங்குகின்றது, இன்னும் அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்கின்றது, இன்னும் அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்கின்றார்கள், அல்லாஹ் தன்னிடமுள்ள (மலக்குகளிடம்) அவர்களை (புகழ்ந்து) கூறுகின்றான். ஆதாரம்: முஸ்லிம் இந்த நபிமொழியில், குர்ஆனை, விளங்கி ஓதுபவர்களுக்குத்தான் அல்லாஹ்வின் அருளும், அமைதியும் கிடைப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் நாம் இந்த நபிமொழியின் ஒரு பகுதியைத்தான் செயல் படுத்துகின்றோம். (அதாவது குர்ஆனை அரபு மொழியில் மாத்திரம் ஓதுகின்றோம்) அதை கருத்துணர்ந்து படிப்பதில்லை. காரணம் கருத்துத் தெரிந்து ஓதுவதினால் அதிகமாக ஓத முடியாது என்பது பலரின் எண்ணம். ஆனால் இது முற்றிலும் தவறாகும். நபி(ஸல்) அவர்கள் ஒரு இரவு சூரத்துல் மாயிதாவின் 118 ஆம் வசனத்தை மட்டும் ஓதிக்கொண்டே அன்றைய இரவின் தொழுகை எல்லாம் தொழுது முடித்திருக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத்

இதோ நபி(ஸல்) அவர்கள் அதிகம் ஓதுவதை விட சிந்திப்பதற்கு முன்னுரிமை வழங்கி ஒரு வசனத்தை மட்டும் ஒரு இரவு முழுக்க ஓதியிருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

2. நான் ஒரு நாள் இரவு நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். முதல் ரக்அத்தில் ”அல்பகரா” ஸுராவை ஓத ஆரம்பித்தார்கள். நூறு வசனங்கள் வந்ததும் ருகூவுக்கு செல்வார்கள் என நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். பின்னர் அவர்கள் தொடர்ந்து ஓதினார்கள். அந்த ஸுராவை ஓதி முடித்து ருகூவுக்குப் போவார்கள் என்று எனக்குள் கூறிக் கொண்டேன். பின்னர் ”அன்னிஸா” அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வசனத்தையும் நிறுத்தி, தெளிவாக ஓதினார்கள். ‘தஸ்பீஹ்’ உள்ள வசனத்தை ஓதும் பொழுது அவர்கள் தஸ்பீஹ் செய்வார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவதின் வசனத்தை ஓதும் பொழுது அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடும் வசனங்களை ஓதினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். அதில் ”ஸுப்ஹான ரப்பியல் அளீம்” எனக் கூறினார்கள். அவர்களது ருகூவு அவர்களது நிலையின் அளவைப் போன்றிருந்தது. பின்னர் ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹு, ரப்பனா லகல் ஹம்து’ என்று கூறினார்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் சென்றார்கள். (ஸஜ்தாவில்) ”ஸுப்ஹான ரப்பியல் அஃலா” எனக் கூறினார்கள். அவர்களது ஸஜ்தா நிலையின் அளவுக்கு நெருக்கமாக இருந்தது.அபூ அப்தில்லாஹ் ஹுதைபா பின் யமான்(ரலி), ஆதாரம்: முஸ்லிம் மேற்கண்ட நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை நிறுத்தி, நிறுத்தி ஓதியது மட்டுமல்லாமல் அல்லாஹ்வை துதிக்கும் வசனத்தை ஓதும்போது அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வார்கள். அல்லாஹ்விடம் கேட்கும் (சுவர்க்கம்) தொடர்புடைய வசனங்கள் வந்தால் அதை அல்லாஹ்விடம் கேட்பார்கள், நரகம் பற்றிய அல்லது அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட சமுதாயம் பற்றியுள்ள வசனம் வந்தால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். கருத்துணர்ந்து நபி(ஸல்) அவர்கள் ஓதவில்லையென்றால் எவ்வாறு இந்தப் பிரார்த்தனைகளைச் செய்திருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை கருத்துணர்ந்து ஓதியிருக்கின்றார்கள் என்பதற்கு இது பெரும் உதாரணமாகும். 3. மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதுபவர் அதை விளங்கமாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்: திர்மிதி, தாரமிமேற்கண்ட நபிமொழியில் மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதி முடிக்கக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் தடுத்திருக்கின்றார்கள். காரணம் அதைவிடவும் குறைந்த நாளில் ஓதினால் குர்ஆனை விளங்க முடியாது. இதிலிருந்து குர்ஆன் இறக்கப்பட்ட நோக்கம் அதை கருத்துணர்ந்து படித்து அதை பின்பற்ற வேண்டும் என்பது தெளிவாகி விட்டது. ஆகவே நாமும் திருமறை குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதி அதன் கருத்துக்களை உணர்ந்து அதன்படி நடந்து பிறருக்கும் எத்திவைத்து ஈருலக வெற்றிபெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

Tuesday, October 9, 2012

தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறதா ?


                                                       
முஸ்லிம்கள் தங்கள் பெயர்களை அரபு மொழியிலேயே சூட்டிக்கொள்கின்றனர். அவர்கள் தமது வழிபாடுகளை அரபு மொழியிலேயேநடத்துகின்றனர். பள்ளி வாசல்களில் தொழுகைக்காக விடப்படும்அழைப்பும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளது.

அரபு நாட்டில் அரபு மொழியில் இவை அமைந்திருந்தால் அதில் நியாயம் இருக்கும். தமிழ் நாட்டிலோ, அரபு மொழி தெரியாத இன்ன பிற பகுதிகளிலோ அரபு மொழியில் இவை அமைந்திருப்பது மற்ற மொழிகளை மட்டம் தட்டும் காரியமே என்பது இஸ்லாத்திற்கு எதிராகக் கூறப்படும் விமர்சனங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

இவையெல்லாம் அரபு மொழியில் ஏன் அமைந்துள்ளன என்பதை அறிவதற்கு முன்னால் மொழிகளைப் பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஒவ்வொரு மொழி பேசக்கூடிய மக்களும் தமது மொழியே உலகில் சிறந்த மொழி என்று நினைக்கின்றனர். அம்மொழியை பேசுவதால் தாம் தான் சிறந்த சமுதாயத்தினர் எனக் கருதுகின்றனர்.
படிப்பறிவில்லாத சாதாரண மக்கள் மட்டும் தான் இவ்வாறு நம்புகின்றார்களா? பண்டிதர்களும்
பகுத்தறிவாதிகளும் கூட இப்படித்தான் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கையை இஸ்லாம் எதிர்க்கிறது. மனிதன் தான் நினைக்கின்ற கருத்தை மற்றவர்களுக்குக் கூறுகின்ற ஒரு சாதனம் தான் மொழி. இதைத் தவிர மொழிக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடு.

எல்லா மொழிகளும் சமமான மதிப்புடையவை தான். எந்த மொழியும் மற்ற எந்த மொழியையும் விட தாழ்ந்ததுமில்லை, உயர்ந்ததுமில்லை. எந்த மொழி பேசுபவர்களும் மற்ற மொழி பேசக்கூடியவர்களை விட சிறந்தவர்களுமல்லர், தாழ்ந்தவர்களுமல்லர் என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

தமிழகத்தில் பிறந்து தமிழ் மொழி பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு யாரும் தமிழகத்தில் பிறக்கவில்லை. பெற்றோர்களும் சுற்றத்தாரும் நம்மீது தமிழைத் திணித்ததால் தமிழ் பேசுகிறோம். வேறு எங்காவது நாம் பிறந்திருந்தால் அங்குள்ள மொழியில் நமது கருத்தைத் தெரிவிப்போம். எனவே இதில் பெருமையடிக்கவோ சிறுமையாகக் கருதவோ இடமில்லை என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசும் சமுதாயத்தில் பிறந்தார்கள். உலகிலேயே அரபுகள் போன்று மொழி வெறி பிடித்தவர்கள் அன்றைக்கு இருந்ததில்லை.

தம்மை அரபுகள் எனக் கூறிக் கொண்டே அந்த சமுதாயம் ஏனைய மொழி பேசுவோரை அஜமிகள்(வாயில்லாத ஜீவன்கள்) என்று குறிப்பிடுவர். மற்ற மொழி பேசும் மக்களை மக்களாகக் கூட அவர்கள் கருதுவதில்லை. மற்றவர்களின் மொழியை வாயில்லா ஜீவன்களின் சப்தமாகத் தான் அவர்கள் மதித்தார்கள்.

மொழி வெறி பிடித்து அலைந்த அந்தச் சமுதாயத்தில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் ”அரபு மொழி பேசுகின்ற எவருக்கும் அரபு மொழி பேசாத எவரையும் விட எந்தச் சிறப்பும் கிடையாது” என்று பிரகடனம் செய்தார்கள். தமது தாய் மொழியே அரபு மொழியாக இருந்தும் தமது மொழிக்குக் கூட எந்தச் சிறப்பும் கிடையாது என்று பிரகடனம் செய்த ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்.

இறைவனின் பார்வையில் எந்த மொழியும் வேறு எந்த மொழியையும் விட சிறந்ததில்லை என்பதை இன்னும் தெளிவாக இஸ்லாம் அறிவிக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடவுளின் தூதர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும். அவர்கள் மட்டும் தான் கடவுளின் ஒரே தூதர் என்று முஸ்லிம்கள் நம்பக் கூடாது. மாறாக நபிகள் நாயகத்துக்கு முன் அவர்களைப் போலவே எண்ணற்ற இறைத் தூதர்கள் வந்துள்ளனர் என்றும் முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அரபுச் சமுதாயத்தில் தோன்றியது போலவே மற்றவர்களும் அரபுச் சமுதாயத்தில் தான் தோன்றினார்களா? இல்லவே இல்லை.
நபிகள் நாயகத்திற்கு முன்னர் அனுப்பப்பட்ட பல்லாயிரக் கணக்கான தூதர்கள் தத்தமது மொழியிலேயே இறைச் செய்தியை எடுத்துரைத்தார்கள். அந்த மொழியிலேயே வேதங்களும் அருளப்பட்டன.
எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தினர் பேசும் மொழியுடையவராகவே நாம் அனுப்பி வந்திருக்கிறோம். (திருக்குர்ஆன் 14:4)

என்று திருக்குர்ஆன் கூறுகிறது. நபிகள் நாயகத்திற்கு முன் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் பேசும் தூதர்கள் வந்துள்ளனர். அவர்கள் யாரென நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் தமிழில்தான் இறைச் செய்தியை எடுத்துரைத்தனர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

கடவுளின் பார்வையில் மொழிக்கு என எந்தச் சிறப்பும் கிடையாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
கடவுளிடம் ஒரு முஸ்லிம் தனது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திக்கும் போது அவனுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் பிரார்த்தனை செய்யலாம். திருமணம் போன்ற சடங்குகளை தாய் மொழியிலேயே நடத்திக் கொள்ளவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

எந்த மொழியும் உயர்ந்த மொழியில்லை என்றால் பள்ளிவாசல்களில் தினமும் ஐந்து தடவை கூறப்படும் பாங்கு ஏன் அரபு மொழியில் அமைந்துள்ளது? தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் மொழியிலேயே பாங்கு எனும் அழைப்பை விடுக்கலாமே? என்ற கேள்விக்கு என்ன விடை என்பதை பார்ப்போம்.

இதற்குக் காரணம் அரபு மொழி தான் தேவமொழி என்பதன்று. தொழுகைக்காக விடுக்கப்படும் அழைப்பு உலகமெங்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே காரணம். இத்தகைய உலக ஒருமைப்பாடு ஏற்பட வேண்டுமானால் ஏதாவது ஒரு மோழியில் தான் இந்த அழைப்பு அமைந்திருக்க வேண்டும்.

அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப்பெரியவன்… என்ற பாங்கை அதே பொருளுடைய வேறு அரபு மொழி வார்த்தைகளைப் பயன்படுத்திக் கூறலாமா? என்றால் கூடாது என்றே இஸ்லாம் கூறுகிறது.
நபிகள் நாயகம் எதைக் கற்றுத் தந்தார்களோ அந்த வார்த்தைகளை மட்டும் தான் கூற வேண்டுமே தவிர அரபு மொழியில் இதற்கு நிகரான எந்த வார்த்தையையும் கூறிவிட முடியாது.அரபு மொழிக்குக் கூடுதல் சிறப்பு உண்டு என்பதற்காக இவ்வாறு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பகுதியில் உள்ள முஸ்லிம்களும் அவரவர் தாய் மொழியில் தொழுகைக்கான அழைப்பைக் கூறலாம் என்றால் அதனால் குழப்பங்கள் தான் ஏற்படும். உலக ஒருமைப்பாடு சிதைந்து விடும்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தமிழ்மொழியில் பாங்கு சொல்லப்படுகிறது. அவர் இது வரை கேள்விப்பட்டிராத வார்த்தைகளை இப்போது தான் கேள்விப்படுகிறார். இந்த நேரத்தில் அந்தப் பகுதியில் ஒரு பள்ளிவாசல் இருப்பதாக அவர் எண்ண மாட்டார். தொழுகை அழைப்பு விடப்படுவதாகவும் புரிந்து கொள்ள மாட்டார்.

உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக தொழுகைக்கான அழைப்பு அமைந்திருந்தால் எந்த மொழியினரும் தொழுகைக்கான அழைப்பை அறிந்து கொள்வர். பள்ளிவாசலை அடையாளம் கண்டு கொள்வர். தொழுகை எனும் கடமையை நிறைவேற்ற இது வாய்ப்பாக அமையும்.

இந்தியாவின் தேசிய கீதம் வங்காள மொழியில் அமைந்துள்ளது. வங்காள மொழி தான் இந்திய மொழிகளில் சிறந்த மொழி என்பதற்காக இவ்வாறு அமைக்கவில்லை. மாறாக அதை இயற்றியவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதற்காகவும் அதன் கருத்துக்காகவும் தான் தேசிய கீதமாக்கப்பட்டது.

தமிழில் அதை விடச் சிறந்த கவிதைகளை இன்றைக்கும் கூட எழுத முடியும். ஆனாலும் தேசிய கீதத்தை நாம் மாற்றுவதில்லை. ஏதாவது ஒரு பாடலைத் தான் தேசிய கீதமாக ஆக்க முடியும்.எந்த மொழியில் அது அமைந்தாலும் மற்ற மொழிகள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படத்தான் செய்யும். எனவே நாட்டின் ஒருமைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு வங்காள மொழி தேசிய கீதத்தை அனைவரும் ஏற்றிருக்கிறோம்.

தமிழகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் அதன் பொருள் தெரியாது. ஆனாலும் அப்பாடல் இசைக்கப்படும் போது தேசிய கீதம் பாடப்படுகிறது என்பது மட்டும் தெரியும்.

இது போல் தான் உலகளாவிய ஒருமைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு உலகம் முழுவதும் அல்லாஹு அக்பர் எனத் தொடங்கும் பாங்கு சொல்லப்படுகிறது. அதன் பொருள் எல்லா முஸ்லிம்களுக்கும் நிச்சயமாகத் தெரியாது. ஆனால் தொழுகைக்காக அழைப்பு விடப்படுகிறது என்பது தெரியும். இவ்வாறு உலகம் முழுவதையும் ஒருங்கிணைக்கத் தான் அரபு மொழியில் அழைப்பு விடுகின்றனர்.

நிச்சயமாக அரபு மொழி உலகத்திலேயே சிறந்த மொழி என்பதற்காக செய்யப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய்மொழி தமிழாக இருந்திருந்தால் தமிழில் தான் இந்த அழைப்பு அமைந்திருக்கும்.
ஒருமைப்பாட்டிற்காக எத்தனையோ விஷயங்களில் நாம் மொழியைப் பின்னுக்குத் தள்ளி வைத்திருக்கிறோம். இராணுவத்தினர், காவல் துறையினர் பயிற்சியின் போது லெப்ட், ரைட் எனக் கூறி நடைபோடுகின்றனர். வலது, இடது எனக் கூற வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. பல்வேறு மொழியினர் வாழும் நாட்டில் கட்டளைகளை அனைவரும் ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தமிழை விட ஆங்கிலம் சிறந்த மொழி என்பது இதன் கருத்தன்று.

இது போலவே அரபு மொழியில் பாங்கு கூறப்படுவதையும் புரிந்து கொள்ள வேண்டும். மொழி,இனம், நாடு, குலம், கோத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் திட்டவட்டமாக மறுக்கிறது. அரபு மொழி மற்ற மொழிகளை விட சிறந்த மொழி என்று இஸ்லாம் கூறவில்லை, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரபு மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஏனைய மொழிகளை இஸ்லாம் இழிவுபடுத்தவில்லை என்றால் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் ஏன் தமிழில் பெயர் சூட்டிக்கொள்வதில்லை. தமிழர்களுக்கு அன்னிய மொழியாக இருக்கும் அரபு மொழியில் பெயர் சூட்டிக் கொள்ளக் காரணம் என்ன? என்பது மற்றொரு சந்தேகம்.
இது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனிலோ நபிகள் நாயகத்தின் போதனைகளிலோ உலக முஸ்லிம்கள் அரபு மொழியில் தான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் பல இறைத்தூதர்கள் வந்திருப்பதாக முன்னர் குறிப்பிட்டுள்ளோம். இப்ராஹீம், இஸ்மாயீல், மூஸா, ஈஸா, அய்யூப், ஸகரிய்யா, எஹ்யா, யூசுப்,யூனுஸ், தாவூத், சுலைமான் ஆகியோர் நபிகள் நாயகத்திற்கு முன் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள்.

இப்பெயர்களில் ஒன்று கூட அரபு மொழிச் சொல் இல்லை. அந்த இறைத்தூதர்களின் தாய் மொழி எதுவோ அந்தந்த மொழிச் சொற்களே தவிர அரபு மொழிச் சொற்கள் அன்று.
மேற்கண்ட அரபு மொழியல்லாத வேற்று மொழிப் பெயர்களை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் சூட்டிக் கொண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட தமது மகனுக்கு இப்ராஹீம் என்று பெயரிட்டார்கள். இது அரபு மொழிச்சொல் அன்று.

நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை உலக முஸ்லிம்கள் மேற்கண்ட பெயர்களைச் சூட்டிக் கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் தத்தமது மொழியிலேயே தமது பெயர்களைச் சூட்டிக் கொள்கின்றனர்.
பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களின் பெயர்களில் பாதிக்கும் மேற்பட்டவை பாகிஸ்தான் மக்களின் தாய்மொழியான உருதுப் பெயர்களேயன்றி அரபு மொழிப் பெயர்கள் அன்று.

நவாஸ், பேநஸீர் போன்ற பெயர்களை உதாரணமாகக் கூறலாம். இந்தோனேசிய முஸ்லிம்கள் சுக்ரனோ, சுகர்டோ போன்ற இந்தோனேசியப் பெயர்களை தமக்குச் சூட்டிக் கொள்கின்றனர். ஈரான் முஸ்லிம்கள் பெரும்பாலும் தமது தாய் மொழியான பாரசீக மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அரபு மொழியில் தான் பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாத்தில் எந்தக் கட்டளையும் இல்லை என்பதற்காகவே இந்த விபரங்களைக் கூறுகிறோம்.
அப்படியானால் தமிழில் பெயர் சூட்டிக் கொள்ள என்ன தடை?
சட்டப்படி எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் நமது நாட்டின் நடைமுறை காரணமாக இங்குள்ள முஸ்லிம்கள் தாமாகவே அதைத் தவிர்த்து வருகின்றனர். இவ்வாறு தவிர்ப்பதற்கு நியாயமான காரணங்களும் உள்ளன.

இஸ்லாமிய மார்க்கம் சாதி வேறுபாட்டை அறவே ஒழித்துக் கட்டுவதைக் கொள்கையாகக் கொண்ட மார்க்கம். பல்வேறு சாதிகளிலிருந்து இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்கள் இரண்டு தலைமுறை கடந்த பின் தாங்கள் எந்தச் சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்றோம் என்பதைக் கூட மறந்து விடுகிறார்கள்.

நமது நாட்டில் சாதியிலிருந்து மக்களை வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை உள்ளது.இஸ்லாத்தை ஏற்ற பின் ஒருவர் தமது பழைய பெயரையே வைத்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் தமது பெயரைக் கூறிய உடன் நீங்கள் எந்த சாதி என்று கேட்கும் வழக்கம் உள்ளது. இவன் என்ன சாதிக்காரனாக இருப்பான் என்பதை எந்த வகையிலாவது அறிந்து கொள்ள முற்படுவார்கள். ஆனால் நமது நாட்டில் நடைமுறையில் இல்லாத பெயர்களைச் சூட்டிக் கொண்டால் அவரது சாதி என்ன என்று யாரும் கேட்க மாட்டார்கள்.

ராமசாமி என்று கூறினால் என்ன சாதி என்று கேட்கும் சமூக அமைப்பு, அப்துல்லா என்றால் சாதி என்ன என்று கேட்பதில்லை. அந்த ஒரு நன்மையை நாடித் தான் தமிழக முஸ்லிம்கள் தமிழ்ப் பெயர்களைத் தவிர்க்கிறார்களே தவிர தமிழை இழிவுபடுத்தி அரபு மொழியை உயர்த்துவதற்காக அல்ல.

இந்தோனேசியா, ஈரான் போன்ற நாடுகளில் சாதி அமைப்பு இல்லாததால் தத்தம் மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வது போல் தமிழகத்திலும் சாதி அமைப்பு அடியோடு ஒழிந்து விடும் பட்சத்தில் தமிழக முஸ்லிம்களும் தமிழில் பெயர் சூட்டிக் கொள்வார்கள்.

நன்றி - PJ அவர்களுக்கு

குர்பானியின் சட்டங்கள்.


                         
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பான

ி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்பானி கொடுக்கும் நாட்கள்

குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.
அறிவிவப்ப்வர் பரா (ரலி) நுல் புகாரி (955,5556)

இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)

பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அறுக்கும் முறை

குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.

கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள் அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நுல் முஸ்லிம் (3637)

முஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள் அறிவிப்பவர் அதா பின் யஸார், நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். அறிவிப்பவர் அலீ (ரலி) நுல் புகாரி (1718)

ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி

மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர் அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) நுல் முஸ்லிம் (2323)
எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்

விநியோகம் செய்தல்

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக் கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானிப் பிராணிகள்

ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள். அறிவிப்பவர் பரா (ரலி) நுல் நஸயீ (4293)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது

நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி) நுல் முஸ்லிம் (3631)
குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) நுல் நஸயீ (428மிழ்
 
நன்றி 
 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சேலம் மாவட்டம்..

பலி கொடுக்க சேவல் இருக்கிறதா ? முஸ்லிம்களை என்கவுண்டர் செய்ய போலீஸ் பயன்படுத்தும் "ரகசிய" வார்த்தை அம்பலம்................!!


                                           
 குஜராத் போலீஸ், மகாராஷ்டிர போலீசை தொடர்பு கொண்டு, பலி கொடுக்க "சேவல்" இருக்கிறதா? எனக்கேட்க, ஆம்.,ஒரு சேவல் (சாதிக் ஜமால்) இருக்கிறது, கொண்டு செல்லுங்கள்,

என பேசிக்கொண்ட "தொலைபேசி உரையாடல்" குறித்த ஆவணங்கள் தற்போது சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. கடந்த 2003 ஜனவரி 13ந்தேதியன்று

குஜராத் போலீசால் "சாதிக் ஜமால்" என்ற இளைஞர் என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆட்டோ டிரைவரான ஜமாலை "லஷ்கர் தையிபா தீவிரவாதி" எனவும், நரேந்திர மோடி உள்ளிட்ட ஹிந்துத்துவா தலைவர்களை கொள்ள வந்தார் என்றும், போலியான கதை கட்டி "என்கவுண்டர்" முறையில் சுட்டுக்கொன்றது குஜராத் போலீஸ்.

சி.பி.ஐ. விசாரணைக்கு சென்ற இந்த என்கவுண்டர் வழக்கில், தற்போது கடும் அதிர்ச்சியளிக்கும் வகையில் "போலீஸ் பித்தலாட்டங்கள்" வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சாதிக் ஜமாலை சுட்டுக்கொன்ற குஜராத் போலீஸ், அது குறித்த "எப்.ஐ.ஆரில்" சாதிக் ஜமாலை தாங்கள் "மட்பேட்" என்ற இடத்தில் வைத்து கைது செய்ததாகவும், அப்போது அவர் டி.வி. பார்த்துக்கொண்டிருந்ததாதகவும் (அதுவும் குஜராத் கலவரம் குறித்த செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தார் என்று) பதிவு செய்துள்ளனர்.

பின்னர், தப்ப முயன்றபோது, இன்ஸ்பெக்டர் "தரோன் பரோட்" தலைமையிலான குழு, சுட்டுக்கொன்றதாக சொல்லப்பட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணையின் போது, இன்ஸ்பெக்டர் "தரோன் பரோட்" தலைமையிலான இதே குழு தான், சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட பலரையும் என்கவுண்டர் முறையில் கொன்றது,தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல், எல்லா என்கவுண்டர்களிலும் ஒரே துப்பாக்கி (.38 mm ரக துப்பாக்கி) பயன்படுத்தி என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பதும் "பாரன்சிக் ரிப்போர்ட்" மூலம் சி.பி.ஐ. கண்டு பிடித்துள்ளது. எனவே, இது எதேச்சையாக நடத்தப்பட்ட என்கவுண்டராக இல்லாமல் திட்டமிட்ட சதி என்பதற்கான மேலும் ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்ட சி.பி.ஐ.க்கு அதிர்ச்சியளிக்கும் "தொலைபேசி உரையாடல்" உள்ளிட்ட பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

சம்பவத்துக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு, மகாராஷ்டிர போலீசிடம் தொலைபேசியில் பேசிய குஜராத் இன்ஸ்பெக்டர், பலி கொடுக்க ஏதாவது "சேவல்" இருக்கிறதா? எனக்கேட்கிறார், ஆம்.ஒரு சேவல் இருக்கிறது, கொண்டு செல்லுங்கள் என மறுமுனையில் பதில் வருகிறது. அதை தொடர்ந்து, குஜராத் போலீஸ், ஜீப்பில் மகாராஷ்டிரா வந்தது. கணக்கில் காட்டப்படாமல் விசாரணைக்கைதியாக தங்கள் வசம் இருந்த சாதிக் ஜமால், குஜராத் போலீசிடம் ஒரு பூங்காவில் வைத்து ஒப்படைக்கப்படுகிறார். குஜராத் போலீசும் கைது குறித்து பதிவு செய்யாமல், பலி கொடுக்க "சேவல்" கிடைத்த சந்தோஷத்தில், சில நாட்கள் சட்டத்துக்கு புறம்பாக அடைத்து வைத்திருந்துவிட்டு கச்சிதமாக என்கவுண்டர் செய்திருப்பது,தெரிய வந்துள்ளது.

எனவே, குஜராத் இன்ஸ்பெக்டர் "தரோன் பரோட்" தலைமையிலான 7 பேர் கொண்ட என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் குழு, இவர்களுக்கு உடந்தையாக செயல் பட்ட மகாராஷ்டிரா வை சேர்ந்த, 2 "டி.எஸ்.பி.ரேன்க்" போலீஸ் அதிகாரிகள், மற்றும் சாதிக் ஜமால் ஒரு பயங்கரவாதி என சித்தரித்த 3 பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 12 நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,என தெரிகிறது. சி.பி.ஐ., விசாரணையை முழுமையாக நடத்திவிட்டதாகவும், இன்னும் மகாராஷ்டிர போலீசில் ஓரிருவரிடம் விசாரணையை முடித்த பிறகு, மேற்கண்ட 12 "காவல்துறை கறுப்பாடுகள்" மீதும், அடுத்த மாத ஆரம்பத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும்,என சிபிஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாத்தில் அண்டை வீட்டாரின் கடமைகள்



“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தர வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 5187அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்க மாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீ
து ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி) நூல்: புகாரீ 6016 அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன் என்று மூன்று தடவை நபிகளார் கூறியது, அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்குகிறது. அண்டை வீட்டாருடன் தொடர்ந்து பகைமைப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாகச் சிந்திக்கட்டும். அண்டை வீட்டாருக்குத் தொல்லைகள் தருபவன் சுவர்க்கம் புக முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் செய்துள்ளார்கள்.“எவனுடைய நாச வேலைகளில் இருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சுவர்க்கம் செல்ல முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 73முஸ்லிமல்லாத அண்டை வீட்டாருக்கும் பிரத்தியேக உபகாரம் செய்வார்முஸ்லிம் தனது அருகிலிருக்கும் முஸ்லிம் குடும்பத்திற்கு உபகாரம் செய்வதுடன் தனது உபகாரத்தை நிறுத்திக் கொள்ளாமல் முஸ்லிமல்லாத குடும்பத்துக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும். ஏனெனில், இஸ்லாமின் மாண்புகள் உலகளாவியது. அது மத, வேறுபாடின்றி உலகின் அனைவரையும் தனது நற்செயல்களால் சூழ்ந்து கொள்ளும் தன்மை பெற்றது.அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி) அவர்களின் வீட்டில் ஆடு அறுக்கப்படும்போது தனது அடிமையிடம், "நமது அண்டை வீட்டாரான யூதருக்கு (ஆட்டிறைச்சியை) அன்பளிப்புச் செய்தாயா? நமது அண்டை வீட்டாரான யூதருக்கு அன்பளிப்புச் செய்து விட்டாயா?'' என (இருமுறை) கேட்பார்கள். "ஏனெனில் நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: "ஜிப்ரீல் எனக்கு அண்டை வீட்டாரைப் பற்றி உபதேசித்துக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு வாரிசுரிமையை ஏற்படுத்தி விடுவார்களோ என்று நான் எண்ணுமளவு (உபதேசித்தார்கள்)'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)அருகிலிருக்கும் அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிப்பார்

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற இஸ்லாமின் சமூக அமைப்பைப் புரிந்துகொண்ட முஸ்லிம் அண்டை வீட்டாரில் மிக நெருக்கமாக இருப்பவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.


அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் இருக்கின்றனர். அந்த இருவரில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்?'' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்த இருவரில் யாருடைய வாசல் (உம் வீட்டுக்கு) நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்று கூறினார்கள். நல்லறங்கள் பல புரிந்தும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாகக் கருதப்படுகிறாள்; ஆனால் அவள் அண்டை வீட்டாருக்குத் தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவள் நரகில் இருப்பாள்’ என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத் தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள்’ என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அஹ்மத் 9298“ஒரு அடியானின் உள்ளம் சரியாகும் வரை அவனுடைய ஈமான் சரியாகாது. அவனுடைய நாவு சீராகும் வரை அவனுடைய உள்ளம் சரியாகாது. யாருடைய அண்டை வீட்டார் அவனின் நாச வேலையிலிருந்து பாதுகாப்பு பெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது. என்று நபிகளார் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அஹ்மத் 12575அண்டை வீட்டாரிடம் முறைகேடாக நடக்க மாட்டார்

அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் அவரது நம்பிக்கைக்குரியவராகத் திகழ்வது அவசியமாகும். பக்கத்து வீட்டில் இருக்கிறார்; அவர் நல்லவர் என்று நம்பி வெளியூர் செல்லும் போது அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் நடந்து கொள்ள வேண்டும். அண்டை வீட்டார் வெளியூர் சென்று விட்டார்; எனவே நாம் அங்கு சென்று திருடலாம், விபச்சாரம் செய்யலாம் என்று எண்ணி தவறான காரியங்களில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். அதற்குக் கடுமையான தண்டனையும் வழங்கப்படும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லி விட்டு “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். “பிறகு எது?” என்று நான் கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: புகாரீ 4477பொதுவாக விபச்சாரம் செய்தல் ஒரு குற்றம்; நம்பியவர்களுக்குத் துரோகம் செய்தல் இன்னொரு குற்றம்; இந்த இரண்டும் சேர்ந்து பெரும் பாவமாக மாறி விடுகிறது.“நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்த ஒன்றாகும். இது மறுமை நாள் வரை ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “ஒருவன் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துப் பெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள். “திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) நூல்: அஹ்மத் 22734அதாவது ஒருவர் பக்க வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வது, மற்ற பத்து பெண்களை விபச்சாரம் செய்தால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும். ஒருவர் பக்கத்து வீட்டில் திருடுவது, மற்ற பத்து வீட்டில் திருடுவதால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும்.

குழம்பில் தண்ணீரை அதிகப்படுத்துங்கள்


அண்டை வீட்டார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நம்மிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கட்டும். நாம் நல்ல பொருள்களை சமைக்கும் போது அவர்களுக்கும் வழங்க வேண்டும். குறைவாக நாம் குழம்பு வைத்தாலும் அதில் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து அவர்களுக்கும் வழங்க வேண்டும்.


''அபூதரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ர­லி) நூல்: முஸ்­ம் (4758)
அற்பமானது என்று கொடுக்காமல் இருந்து விடாதீர்!

நாம் அண்டை வீட்டாருக்கு வழங்கும் பொருள் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையில்லை. சாதாரண பொருளாக இருந்தாலும் அதை வழங்க வேண்டும். கொடுப்பவரும் வாங்குபவரும் அதை அற்பமாகக் கருதக் கூடாது.


''முஸ்­லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ (2566)


அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் தாராளத்தைக் கடைபிடிப்பார்

பக்கத்து வீடு என்று வரும் போது, அவர்கள் வீட்டைக் கட்டும் போது அல்லது வீட்டைப் புதுப்பிக்கும் போது மரக் கட்டைகள் போன்றவற்றை அண்டை வீட்டாரின் சுவற்றில் பதிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இவ்வாறு ஏற்படும் போது அண்டை வீட்டாருக்கிடையில் பெரிய சண்டைகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.


அண்டை வீட்டாருக்கு மரப் பலகைகள் போன்றவற்றை தமது சுவற்றில் பதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதைத் தடுக்கக் கூடாது என்றும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நபிகளார் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.

''ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ர­) சொல்­ விட்டு ''என்ன இது! உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபி வாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்­க் கொண்டேயிருப்பேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அல்அஃரஜ் நூல்: புகாரீ (2463)இஸ்லாமின் மாண்புகளைப் புரிந்த முஸ்லிம் தனது அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் மிக தாராளமாக நடந்து கொள்வார். அவருக்கு உபகாரத்தின் கதவுகளைத் திறந்து, தீமையின் வாயில்களை மூடிவிடுவார். அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் குறைவு எற்படுவதை அஞ்சிக் கொள்வார்.நன்றியற்ற அண்டை வீட்டார்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எத்தனையோ நபர்கள் மறுமை நாளில் தமது அண்டை வீட்டாரை பிடித்துக் கொள்வார்கள். "இறைவனே! என்னைத் தவிர்ப்பதற்காக அவர் தனது வாசலை மூடிவிட்டார்; அதன் மூலம் தனது உபகாரத்தைத் தடுத்துக் கொண்டார்'' என்று கூறுவார். (அல் அதபுல் முஃப்ரத்) "ஒரு முஃமின், மற்றொரு முஃமினுக்கு உதாரணம் ஒரு கட்டிடத்தைப் போன்றதாகும். அதில் ஒன்று மற்றொன்றை பலப்படுத்துகிறது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) மேலும் கூறினார்கள்: "முஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும், கருணைகொள்வதற்கும், இணைந்திருப்பதற்கும் உதாரணமாகிறது, ஒர் உடலைப் போன்றதாகும். அதில் எதேனும் ஒர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலைக் கொண்டும் தூக்கமின்மையைக் கொண்டும் முறையிடுகின்றன.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) ஈமான் எனும் இந்த அற்புதமான இணைப்பின் மூலம் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களையும் இணைப்பதில் இஸ்லாம் ஆர்வம் காட்டுகிறது. அதில் ஒர் அங்கமே அண்டை வீட்டினருடன் உறுதியான உறவை எற்படுத்தியதாகும். நன்மையான காரியங்களில் கூட்டாகுதல் மார்க்கம் தொடர்பான மற்றும் நல்ல காரியங்களில் கூட்டாக செயல்படும் போது கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. அண்டை வீட்டாருக்கு நன்மையான காரிங்களை எடுத்துச் சொல்லுதல், தீமையான காரியங்களைச் செய்தால் அதைத் தடுத்தல், நற்காரியங்கள் நடக்கும் சபைகளுக்கு அழைத்துச் செல்லுதல், தவறும் பட்சத்தில் கேட்ட நல்ல செய்திகளை அண்டை வீட்டாருக்குச் சொல்லுதல் என்று நற்காரியங்களில் கூட்டாக செயல்பட்டு நன்மைகளை அள்ளிச் செல்ல வேண்டும். நபித்தோழர்கள் இவ்வாறு நற்காரியங்களில் கூட்டாகச் செயல்பட்டுள்ளனர்.
நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். அறிவிப்பவர்: உமர் (ரலி)நூல்: புகாரீ 89 அல்லாஹ்விடம் சிறந்தவர்“நண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாக இருப்பவர்களே! பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கத்து வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: திர்மிதீ 1867)நல்ல அண்டை வீட்டார்“நல்ல அண்டை வீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பது ஆகியவை ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மத் 14830 தொல்லையைப் பொறுத்துக் கொள்ளுதல்அண்டை வீட்டார் என்று வரும் போது சில பிரச்சனைகள் ஏற்படத் தான் செய்யும். அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, வாழ்நாள் பகைவர்களாக மாறி விடாதீர்கள்.

அவர்கள் தரும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு அவருக்குச் சரியான அறிவுரைகளைக் கூறி திருத்தினால் இறைவனின் பேரருள் கிடைக்கும்.ஒரு மனிதனுக்குத் தொல்லை தரும் அண்டை வீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு, சாவுக்குப் போதுமானவனாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹாகிம் 2446)

பெண்களும் விளம்பரங்களும்!


நுகத்தடியில் அழுந்தி கிடக்கும் பெண்மை
ஆணாதிக்கத்தின் வெற்றியே பெண்களை தனது ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்ததுதான்.. நடைமுறையில் பெண்ணின் மீது திணிக்கப்படும் ஆணாதிக்க சிந்தனை தான் விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது.

இப்போது ஒரு விளம்பரம் நம் கண்ணில் பட்டுக்கொண்டு இருக்கின்றது. திரும்பிய இடங்களிளெல்லாம் விளம்பர பேனர்களாகவும் காட்சியளிக்கின்றது. அது "எப்போதும் சளைக்காதவர்களுக்கு" அதில் ஒரு கிழவன் ஓரக்கண்ணால் ஒரு இளம்பெண்ணை நோட்டம் விட்டுக்கொண்டு இருக்கின்றான்

கீழே போட்டிருக்கின்றார்கள் "சில எஞ்சின்கள் எப்போதும் சளைப்பதில்லை எப்போது சளைக்காதவர்களுக்கு ''ELF OIL'' விளம்பரம் முடிகின்றது. சாதரன ஆயில் விளம்பரத்துக்கு இவ்வளவு மோசமான உவமை காட்டப்பட்டு இருக்கின்றது.

இந்த விளம்பரம் ஒரு மிக மிக சாதாரண விஷயமாகிவிட்டது.சாலையில் வரும் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட யாவரிடமுமே எந்த கோபத்தையுமே சொல்லிக் கொள்ளும்படி ஏற்படுத்தவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விளம்பரம் மழை வந்து கொண்டிருக்கிறது ஒரு பெண் குடையில் இருக்க மற்றொருவனோ குடைக்கக காத்து பின்னர் பிஸ்கெட்டை காட்டுகிறான் உடனே அப்பெண் அவனோடு சிரித்துக்கொண்டு ஒன்று சேர்வதை போல் முடிகிறது,

ஆணின் பெருமையானது பெண்களை கவர்வதாகவே காட்டப்படுகின்றது. பெண்ணின் பெருமையானது ஆண்களை கவர்வதற்காகவே என்று காட்டப்படுகின்றது. பேர் அண்டு லவ்லி விளம்பரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரே பல்லவி தான் நீ கருப்பாய் இருக்கிறாய் தன்னம்பிக்கை கிடையாது, மற்றவர்களால் ரசிக்கப்படமாட்டாய் எனவே நீ சிவப்பாவது கண்டிப்பாய் நாட்டுக்கு ஆண்களுக்கு தேவை.

ஒரு எஞ்சினின் தரத்தை நிரூபிக்க, ஒரு வண்டியின் தரத்தை நிரூபிக்க பெண்ணின் உடல் தேவைப்படுகின்றது, பலவிளம்பரங்களின் தன்மையே ஆண்மையை பறைசாற்றுவதாகவே அமைந்திருக்கின்றன. சமயல் எண்ணை முதல் பெனாயில் வரை பெண் தான் விளம்பர மாடல்.பிஸ்கெட் தந்தால் போதும் வண்டியின் அழகை பார்த்தால் போது ஒரு பெண் தன்னையே தந்து விடுவாள் அவளுக்கு தேவை எல்லாம் ஒரு ஆண் தன் ஆண்மையை எப்படியாவது நிரூபிக்க வேண்டும். உன் வாய் நாறாமல் வாசமடித்தால் பெண் போலீசு கூட உன் வலையில் தான்...

சமூகத்தில் நடப்பதே ஊடகங்களிலும் தொடர்கின்றது. பெண்ணடிமைத்தனத்தை பேசும் பத்திரிக்கையின் ஒரு பக்கம் மறுபக்கமே ஆபாசபடங்களை போட்டு தனது பெண்ணுரிமை பேணும் விதத்தை சொல்கிறது, கேரள அமைச்சர் ஒருவர் நடிகையிடம் தொந்தரவு செய்ததை சமீபத்தில் கண்டோம்.

சில மாதத்துக்கு முன் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மாணவியை ஆசிரியர்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய செய்தி சில மாதங்களுக்கு முன் வந்தது. காதலிக்க மறுத்த மாணவியின் மீது ஆசி ஊற்றிய மாணவன், காதலிக்க மறுத்த் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த கொடூரன், ஏன் கயர் லாஞ்சி உள்ளிட்ட சாதி வெறித்தாக்குதலில் கூட பெண்கள் தான் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டனர்.

எப்படி இந்த சுமூகத்தில் "பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது" போன்றவை ஜனனாயகமாக காட்டப்பட்டதோ அப்படித்தான் ஆணுக்கு பெண் அடிமையாய் இருப்பது நியதியாக்கப்படுகின்றது. ஒரு பேருந்து முழுக்க செல்லும் பெண்களை கூட சாலையில் உள்ள மூவர் கத்தி சத்தமாக கிண்டலடிக்கமுடியும். ஆனால் அது எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாகாது.

தாழ்த்தப்பட்ட பெண்களை கும்பலாக மற்ற ஆண்கள் கொடுமைகள் செய்யும் போது பெண்களை அமைதியாய் இருக்க வைத்தது எது? சாதிவெறியை தாண்டி பெண்ணடிமைத்தனம் நீடிக்கிறது. அது தான் சினிமாவில் பெண்கள் ஆபாசப்படுத்தப்படும் போதும் ஊடகங்களில் மோசமான விளம்பரத்தையும் கண்டு அமைதியாயிருக்கிறது இருக்க வைக்கிறது.

ஆணாதிக்கத்தின் வெற்றியே பெண்களை தனது ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்ததுதான். இப்படித்தான் தன் ஆண்மையின் பலத்தினை அக்கிழவன் பெண்ணிடம் காட்ட விரும்புவதே அந்த ஆயிலின் த்குதியாக மாற்றப்பட்டது. நடைமுறையில் பெண்ணின் மீது திணிக்கப்படும் ஆணாதிக்க சிந்தனை தான் விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது.

எல்ப் ஆயிலின் விளம்பரம் தான் முதல் பெண்ணடிமைத்தனமான விளம்பரம் எனில் தானே எதிர்ப்புகள் புதியதாய் கிளம்புவதற்கு, பல்லாண்டுகளாக பெண் நுகர்பொருளாக நீடிப்பது இன்று வரை தொடர்கின்றது. இன்று வரை, ஆணாதிக்கம் வரைமுறையின்றி பெண்கள் மேல் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறது. பெண்ணியம் பேசும் பலரும் அழகியலின் ரசவாதத்துக்குள் புகுந்து அதில் மறைந்தே போய்விட்டனர். அரசின் ஆதரவு ஆணாதிக்கத்துக்கு நீடிக்கும் வரை பெண்ணடிமைத்தனம் ஓயப்போவதில்லை.

அரசின் ஆதரவினை எதிர்க்காது சமுதாயத்தை தலைகீழாக புரட்டிப்போடாது சிலரைப்போல் குடும்பக்கதையையும் பக்கத்து வீட்டுகதையையும் பேசி கொண்டிருப்பதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. பெண்கள் அரசியல் ரீதியிலான ஐக்கியம் சாத்தியமாகும் வரை, பெண்கள் இப்போது சொல்லப்படும் பெண்மையாய் நீடிக்கும் வரை ஆணாதிக்கத்தின் நுகத்தடி பெண்ணினத்தை அழுத்திக்கொண்டே இருக்கும்.

எ.சி.எம்.கடாபி
இஸ்லாமிய ஆய்வு மையம்
வாழைச்சேனை
இலங்கை.

பாலைவனத்தில் உள்ள மிகப்பெரிய துவாரமும், அதற்குள் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பும்!


 
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

பாலைவனத்தில் உள்ள மிகப்பெரிய துவாரமும், அதற்குள் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பும்!
சுமார் 40 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது நெருப்பு. காரகும் பாலைவனத்தின் நடுவே உள்ளது இந்த துவாரம்.

தர்க்மெனிஸ்தானில், உள்ள டேர்வஸ் என்ற கிராமத்தில் உள்ளது இந்த ராட்சத துவாரம். லோக்கல் ஆட்கள் இதை, நரகத்தின் கதவு (The Door to Hell) என்று அழைக்கிறார்கள்.

சரி துவாரத்தின் நிஜ பின்னணி என்ன?

1971-ம் ஆண்டு, அந்த நாளைய சோவியத் யூனியன் எண்ணை அகழ்வாளர்கள், இந்த இடத்தில் நிலத்தடியே எரிபொருள் இருப்பதை தெரிந்துகொண்டு, அகழ்வுப் பணியை ஆரம்பித்தார்கள். பாலைவனப் பகுதியில், ராட்சத ஆழ்துளை எந்திரங்களை கொண்டுவந்து நிறுத்தி, ட்ரில்லிங் ஆரம்பித்தது.

இந்த இடத்தில் வந்தது, சிக்கல்! இந்தப் பகுதி மணல், மிகவும் மிருதுவான தன்மை கொண்டது. ராட்சத ஆழ்துளை எந்திரங்களின் எடையை தாங்காமல், மண்சரிவு ஏற்பட, எந்திரங்களும் சரிந்து வீழ்ந்தன. அவற்றை மீண்டும் நிமிர்த்தி, தரையில் ஸ்ட்ராங்காக வைக்க முடியவில்லை.

ஆரம்பத்தில் செய்யப்பட்ட துவாரம், அதனுள் மண்சரிவால் ராட்சத எந்திரங்கள் வீழ்ந்த பள்ளம் எல்லாமாக சேர்ந்து, 70 மீட்டர் குறுக்களவுக்கு ஒரு துவாரத்தை ஏற்படுத்தி விட்டன. எரிவாயு எடுக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எந்திரங்கள் அகற்றப்பட்டன. முதலில் இங்குள்ள நிலத்தை கெட்டிப்படுத்திவிட்டு, திட்டம் மீண்டும் ஆரம்பிப்பது என முடிவாகியது.

ஆனால், மீண்டும் வேறு ஏற்பாடுகளுடன் வந்து சேர்வதற்குள், சோவியத் யூனியன் துண்டுதுண்டாக உடைந்து பல நாடுகளாகின. இந்த துவாரத்தை கவனிக்க யாருக்கும் ஆர்வம் இல்லை.

ஆரம்பத்தில் ரஷ்ய எண்ணை அகழ்வாளர்கள் கண்டுபிடித்தபடி, இந்தப் பகுதியில் நிலத்தடியே எரிவாயு இருப்பது நிஜம் என்பதால், நிலத்தடியே இருந்து, மிருதுவான மண் ஊடாக கசிந்து மேலே வரும் எரிவாயு, தீயை எரிய வைக்கிறது. இதுதான், விவகாரம்.
இப்போது திடீரென தர்க்மெனிஸ்தான் அரசு, இந்த துவாரம் பற்றி கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. காரணம், இதில் கொட்டக்கூடிய பணம் பற்றி இப்போதுதான் அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

அந்த நாட்டின் தலைநகர் அஷ்காபத்தில் இருந்து இந்தப் பகுதி, 260 கி.மீ. வடக்கே டேர்வஸ் என்ற கிராமத்தில் உள்ளது. டேர்வஸ் கிராமத்தின் ஜனத்தொகையே, 350 பேர்தான். இந்த துவாரத்தை மூடுவதற்கான திட்டம் ஒன்று தற்போது போடப்பட்டுள்ளது.

காரணம், ஏழை நாடாக உள்ள தர்க்மெனிஸ்தானில், நிலத்தடியே எரிவாயு இருப்பது பெரிய புதையல் என்பதை இப்போதுதான் உணர்ந்து கொண்டுள்ளார்கள். இந்த துவாரத்தை மூடியபின், இது உள்ள காரகும் பாலைவனத்தில், தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எரிவாயு எடுக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்கள் அவர்கள்.

இந்த காரகும் பாலைவனம், தர்க்மெனிஸ்தான் நாட்டை முழுமையாக கவர் செய்கிறது. காஸ்பியன் கடலின் கிழக்குப் பகுதியில் இது இருப்பதால், இங்கு எடுக்கப்படும் எரிவாயு, சுலபமாக கடல் வழியே ஏற்றுமதி செய்யப்படலாம் என்பதே திட்டம். எரிவாயுவுடன், இந்தப் பகுதியில் எண்ணை வளமும் இருக்கலாம் என்கிறார்கள் இப்போது.

ஒருவேளை எரிவாயு, மற்றும் எண்ணை அகழ்வு முயற்சி வெற்றி பெற்றால், அப்புறம், தர்க்மெனிஸ்தான் நாட்டை பிடிக்க முடியாது. பணம், கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும், இறைவன் நாடினால்!

நன்றி: விறுவிறுப்பு - இணையம்.

Monday, October 8, 2012

மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை !


                                           
 இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!
இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் .
அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ?
அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ?

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு .
சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் . உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார் . இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார் .

முதல் கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார் . வந்து துடிப்பான இளைஞ்சர்களை சந்தித்து . வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் . என்று இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார் . பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின் ஆதரவை திரட்டினார் . ஆனால் அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும் ஆயுதம் எடுத்து போராட முன் வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த போது .

தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான இளைஞர்கள்
சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள் . அந்த இளைஞர்களுக் கெல்லாம் மறைமுகமாக பயிற்சி அளிக்கப்பட்டது . தமிழகத்தில் காந்தியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே போனது . தமிழர்கள் சுபாஷ்சந்திரபோசின் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய ஆரம்பித்தார்கள் .

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள் என்று வெள்ளையர்களுக்கு தெரியவர . இவர்களை எல்லாம் வெள்ளையர்கள் வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள் .

சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டதை அறிந்த காந்தியின் ஆதரவாளர்கள் . சுபாஷ் சந்திரபோசை காட்டி கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அதனால் அவரால் இந்தியாவில் இருந்துகொண்டு செயல்பட முடியாமல் போனது . வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாடுக்கு சென்றார் .

சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின் ஆதரவை திரட்டினார் . ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான ஆயுத தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார் . எல்லாம் தாயாரான பின்பு இந்தியாவில் இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ முகாம்களின் எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல் அறிந்து கொண்ட பின்னர் .

தமிழ் நாட்டில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பினார் . நான் வெளிநாட்டில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன் . இந்த ராணுவத்தில் இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள் . என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்று தகவல் அனுப்பி இருந்தார். இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவியது . இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள் .

அங்கே எல்லோருக்கும் போர்ப் பயற்சி அளிக்கப்பட்டது . அப்போது போராளிகளிடம் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் . எமது தேசத்தில் வெறும் இருபது ஆயிரம் வெள்ளையனின் ராணுவம் இருக்கிறது . நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம் . அவர்களை நாம் கப்பல் மூலம் சென்று டெல்லி வரை தாக்க போகிறோம் டெல்லியில் தான் வெள்ளையனின் முழு பலமும் இருக்கிறது எனவே டெல்லி வரை நாம் சென்று தாக்க போகிறோம் என்று சொன்னார் . ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது .

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது . சுபாஷ்சந்திரபோஸ் திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள் மூலம் சென்று டெல்லி வரை வெள்ளையர்களின் ராணுவத்தை அடித்தார்கள் . அப்போது வெள்ளையர்கள் பாரிய உயிரிழப்புக்களை சந்தித்தார்கள் . வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஆயுத உதவிகளை தடுத்தார்கள் முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ் சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது . அதனால் தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம் செய்யஇயலாமல் ஆயுத பற்றாகுறை வந்தது. பொருளாதார பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் இருப்பது பற்றி கேள்விகுறியானது .

சுபாஷ்சந்திரபோஸ் ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும் சண்டையில் வெள்ளையர்கள் தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள். இந்த தோல்வியை அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. அதனால் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள் .
ஆனால் இந்தியா முழுவதும் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் ராணுவ போராட்டம் தெரியவந்தது .

அதனால் காந்தி வழியில் போராடி கொண்டிருந்தவர்களுள் பெரும்பாலானோர் சந்திரபோஸ் அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால் வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டது . ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ் சந்திர போஸ் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என்றும் கூறி வந்தார் .

காந்தியின் ஆதரவாளர்களால் சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க பட்டார் . அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் வெள்ளையர்கள் . ஆனால் சிறையில் வேலை செய்தவர்களின் உதவியுடன் சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து வந்தார் . அதன் பிறகு
ஆயுத போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வந்தது
வெள்ளையர்கள் வெளியேறும் நிலைமையும் வந்தது .


ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடித்து இந்தியாவில் விரட்டியடிக்க பட்டோம் என்று வந்து விடக் கூடாது என்பதற்காக . அப்படி ஒரு அவமானம் வந்து விட கூடாது என்பதற்காக காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள் .

வெள்ளையர்கள் அகிம்சைரீதியாக போராடும் காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள் அகிம்சை போராட்டத்தால் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம் நாங்கள் இந்தியாவை விட்டு போக போகிறோம் என்று சொன்னார்கள் . காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறினான் .

ஆனால் தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள் . அவரின் மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம் காந்தியின் அகிம்சை போராட்டம் பாதித்து விடும் இந்த வரலாறு மறைந்து விடும் என்பதற்காக .

இந்தியர்களே தமிழர்களே நன்றி மறப்பது நன்றன்று.. எனவே இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த சுபாஷ்சந்திரபோஸ் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கம் இந்நாளில் அந்த வீரனை நினைவு கொள்வோம். 


நன்றி: திரு.சரவனபாண்டியன்..!

Sunday, October 7, 2012

Kingdom of கீழக்கரை...: விண்டோஸ் அட்மின் பாஸ்வேர்ட் உடைக்கும் மர்ம ரகசியம்...

Kingdom of கீழக்கரை...: விண்டோஸ் அட்மின் பாஸ்வேர்ட் உடைக்கும் மர்ம ரகசியம்...: அடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள், மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும்...

Kingdom of கீழக்கரை...: கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக

Kingdom of கீழக்கரை...: கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக: கணினியின் வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கணினி வந்துவி...

ஐயாயிரம் வாசகர்களை அள்ளித்தந்த சிறந்த 10 பதிவுகள்-எட்டி பார்க்க மறந்து விடாதீர்கள் | Kingdom of கீழக்கரை...

ஐயாயிரம் வாசகர்களை அள்ளித்தந்த சிறந்த 10 பதிவுகள்-எட்டி பார்க்க மறந்து விடாதீர்கள் | Kingdom of கீழக்கரை...

INNOCENCE OF MUSLIMS - இதன் பின்னணி என்ன?

ஆசிரியர்: எம்.எஸ்.ஷாஜஹான்
தலைவர், காயல் நல மன்றம் (காவாலங்கா), கொழும்பு, இலங்கை

அது செப்டம்பர் 8 சனிக்கிழமை. எகிப்தின் ஷேக் காலித் அப்துல்லாஹ்வின் தொலைக்காட்சியான அல்-நாஸ் - அறபிய மொழியாக்கம் செய்யப்பட்ட அந்த 13.51 நிமிடங்கள் மட்டும் ஓடும் வீடியோவை முதன்முதலாக வெளியிட்டது. ஒரு சில மணித்தியாலங்களில் அது கணணி மூலம் அறபுலகில் வலம் வந்தது. பல்லாயிரக்கணக்கானோர் அல்லது சில லட்சம் பேர் ஓரிரு நாட்களில் அதனைப் பார்த்தனர். ஆத்திரம் அடைந்தனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் YOU TUBE-இலும் அது வந்ததைப் பார்த்தனர். அவ்வளவுதான்! அறபுலகம் வெடித்தது.

சேம் பெசில் (Sam Bacile) என்ற அந்த நபர் ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று Innocence of Muslim என்ற திரைப்படத்தின் முன்னோட்டத்தை (Trailer) YOU TUBEஇல் பதிவு செய்தார். தன்னை கலிபோர்னியாவின் Real Estate வர்த்தகர் என்று அறிமுகப்படுத்திய அவர், அப்படத்தின் இயக்குநரும், கதை அமைத்தவரும் தானே என்று ஊடகங்களுக்குக் கூறினார்.

இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தைத் தயாரிக்க 100 யூதர்களிடம் மொத்தமாக 50 லட்சம் டொலர் சேர்த்தாகவும் கூறிய அவர், “இஸ்லாம் ஒரு கேன்சர் - புற்றுநோய்” என்று திரும்பத் திரும்ப ஊடகங்களோடு பேசும்போது கூறினார்.

தன்னை ஒரு இஸ்ரேலி - அமெரிக்கன் என்று அவர் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால், இவரது பெயரில் எந்த இஸ்ரேல் - அமெரிக்க பிரஜையும் இருப்பதாக தங்களிடம் குறிப்பு இல்லை என்று இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்தது. ஆகவே, சேம் பெசில் என்பது புனைப்பெயராக இருக்கலாம் என்று ஊடகங்கள் ஊகித்தன - ஆராய்ந்தன.

இப்படத்தின் ஆலோசகராக இருந்த ஸ்டீவ் க்ளெய்ன் (Steve Klein) கூறும்போது, “சேம் பெசலி யூதனோ - இஸ்ரேலைச் சேர்ந்தவனோ அல்ல” என்றார்.

Nakoula Basseley Nakoula என்பதுதான் அவரது இயற்பெயர் என்று காவல்துறை உறுதி செய்தது. இவருக்கு வேறு சில பெயர்களும் உண்டு. நிகோலா பெசிலி (Nicola Bacily), எர்வின் சலமெஹ் (Erwin Salameh) என்ற பெயர்களிலும் இவர் உலாவினார். இவரது கடந்த காலம் சிறப்பானது அல்ல.

பொய்யான வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து, Social Security Numbers எனப்படும் சேமலாப நிதி போன்ற அமைப்பில் உள்ள பிறர் பணத்தைக் களவாடி, தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி, பின்பு அப்பணத்தை வேறு வங்கிக்கு மீண்டும் மாற்றி, கணக்கை மூடிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு, 2010இல் அவருக்கு 790,000 டொலர் பணமும், 21 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

சேம் பெசலி உண்மையில் யூதர் அல்ல. எகிப்தின் Coptic Christians என்று கூறப்படும் கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்தவர். சமீப காலத்தில் இவர்கள் பெரிய அளவில் எகிப்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இம்மக்களுக்கு எதிரான எதிர்ப்பு அலை எகிப்தில் பலமாக இருக்கிறது. அவர்கள் பலவாறாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய பத்திரிக்கைகளில் வந்தன. இக்கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஆதி காலத்திலேயே பிணக்குகள் உண்டு என்று கூறுவர்.

அன்றொரு நாள் கெய்ரோவின் ஆளுநராக இருந்தவரிடம் ஒரு முறைப்பாடு செய்யப்பட்டது. அதாவது, நகரின் ஒரு பகுதியில் இருந்த கிறிஸ்துவர்களின் வழிபாட்டுச் சிலையொன்றின் மூக்கு உடைக்கப்பட்டுள்ளது என்று கிறிஸ்துவர்கள் கூறினர். ஆளுநர், “ஒரு வாரம் அவகாசம் தாருங்கள், குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறேன்” என்றார். ஒரு வாரத்தில் ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் ஒரு வாரம் அவகாசம் கேட்டார். அப்போதும் குற்றவாளி பிடிபடவில்லை.

அடுத்த வாரம் ஆளுநர் கூறினார்: “இன்னும் ஒரு வாரம் தாருங்கள்! அதற்குள் குற்றவாளி பிடிபடாவிட்டால் நீங்கள் பதிலுக்கு எனது மூக்கை உடைக்கலாம்” என்றார். மீண்டும் தோல்வி. ஆளுநர் - மூக்குடைக்கப்பட்ட சிலையின் முன்னால் வந்து நின்றார். அவரது மூக்கை உடைக்க ஒருவர் முன்வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர், “நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!!” என்று கத்தினார். சிலையின் மூக்கை உடைத்தது தானே என்றும், இதன்மூலம் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் சண்டை உண்டாகும் என்று தான் நம்பியதாகவும் அவர் கூறினார்.

Innocence of Muslims படத்தின் முதல் காட்சி இன்றைய எகிப்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. காவல்துறை மவுனித்து நிற்க, வெள்ளை ஆடையணிந்த முஸ்லிம்களால் மருத்துவர் ஒருவரின் சிகிச்சையகம் உடைத்து நொறுக்கப்பட்டு, எரியூட்டப்படுகிறது. உயிர் தப்ப வெளியே ஓடிய மருத்துவர், அடுத்த கட்டிடத்தின் மாடியில் இருந்த தனது மகளை அழைத்து, தனது சிகிச்சையகம் தாக்கப்படுவதாகக் கூறுகிறார். வீடு சென்ற அவர், தனது மகள்களிடம், “இங்குள்ள எல்லா கிறிஸ்துவர்களையும் கொல்ல முஸ்லிம்கள் விரும்புகிறார்கள் - கொல்லுகிறார்கள்... ஆனால் அரசு அதனை மூடி மறைக்கிறது” என்கிறார். இந்தக் காட்சி முஸ்லிம்களுக்கெதிராக கிறிஸ்துவர்களின் உணர்வுகளைத் தூண்டக்கூடியதாக உள்ளது.

அடுத்து வரும் காட்சிகளில் முஹம்மது நபியின் வாழ்க்கை, அவர்களது குடும்பம், அவர்களது கூட்டத்தார் காட்டப்படுகின்றனர். பின்பு தனது மனைவி கதீஜாவுடனும், வேறு பெண்களுடனும் முஹம்மது உறவு கொள்வதாகக் காட்சிகள் வருகின்றன. ஒரு காட்சியில், சிறுமிகளோடு உறவுகொள்ள முஹம்மது அனுமதிப்பதாகவும், இன்னொரு காட்சியில், முஹம்துவின் தோழர்களில் ஒருவர் முஹம்மது ஓரினச் சேர்க்கையாளர் என்று கூறுவதாகவும் உள்ளது. எழுத்தில் வடிக்கவே முடியாத இன்னும் அறுவறுப்பான பாலியல் காட்சிகளும் அதில் உள்ளடக்கம். (நஊது பில்லாஹ்...!)

குர்ஆனை உருவாக்குவதின் பின்னணியில் கதீஜா இருந்ததாகவும், குர்ஆன் ஆனது கிறிஸ்துவ - யூத வேத நூல்களான Tora and New Testamentகளைப் பின்பற்றியதே என்றும் குறிப்பிடுகிறார். மொத்தத்தில், இஸ்லாம் என்பது வன்முறை, பிறர் வெறுப்பு ஆகியவற்றை அடையாமாகக் கொண்டது எனவும், முஹம்மது என்பவர் அறிவு குறைந்தவர் என்றும், அதிகார மோகம் மற்றும் பெண்கள் மயக்கம் கொண்டவர் என்றும் பலவாறாக Innocence of Muslims அள்ளித் தெளிக்கிறது.

ஆரம்பத்தில் இப்படத்திற்கு Desert Storm - பாலைவனப் புயல் என்று பெயர் பதிவு செய்யப்பட்டு இருந்ததாம். பின்பு அது Innocence of Bin Laden என்றும் மாற்றப்பட்டதாம். படத்தில் நடித்தவர்களோ, தங்களுக்கு இப்படத்தின் முழுக் கதையும் சொல்லப்படவில்லை என்றும், ஒரு மாதத்திற்கும் குறைவாக நடந்த படப்பிடிப்பில் அன்றைய தினத்திற்குரிய வசனங்கள் மட்டுமே தரப்படும் என்றும், இது இஸ்லாத்திற்கு எதிரான படம் என்று தங்களுக்கு எதுவுமே தெரியாது என்றும், படப்பிடிப்பிற்குப் பிறகு பல வசனங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முஹம்மதுவாக படத்தில் தோன்றுபவர் தனது பெயர் படத்தில் மாஸ்டர் ஜோர்ஜ் (Master George) என்பதாகவும், இப்படம் இவ்வாறான கதையைக் கொண்டுள்ளது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

பொதுவாக இப்படத்தில் நடித்தவர்களுக்கு அசல் கதை தெரியாது. வித்தியாசமான வசனங்களையே பேசியுள்ளனர். ஆனால், சேம் பெசலி மற்றும் இவனோடு இணைந்த சில முஸ்லிம் எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமே உண்மை தெரியும் என்கின்றனர். அமெரிக்க அரசு YOU TUBE நிறுவனத்திடமும், அதன் உரிமையாளரான GOOGLE இடமும், இந்த 13.51 நிமிட குறும்படம் உங்களது சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம் என்று கூறி, தடை செய்யக் கோரியபோது, GOOGLE அதை முழு அளவில் தடை செய்ய மறுத்துவிட்டதோடு, பிரச்சினைக்குரிய நாடுகளான - மத்திய கிழக்கிற்கும், இந்தியா, இந்தோனேஷியா போன்ற வேறு சில நாடுகளுக்கும் தடை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இன்றும் அதனைப் பார்க்க முடியும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹொலிவுட்டிலுள்ள Vine Theatre என்ற சிறிய திரையரங்கில் இப்படம் ஒரேயொரு காட்சியாக மட்டும் திரையிடப்பட்டது. அப்போது அப்படத்தைப் பார்த்தவர்கள் வெறும் பத்தே பேர்தான். இப்படம் திரையிடப்பட்டபோது, அதன் தயாரிப்பாளரான சேம் பெசலி - அருகிலுள்ள உணவு விடுதியில் அமர்ந்தவாறு, தன் படத்திற்கான வரவேற்பு எப்படியுள்ளது என்று பார்த்துக்கொண்டிருந்தார். தற்சமயம் அத்திரையரங்கம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தை வெறும் பத்து பேர் மட்டுமே பார்த்திருக்க, அதன் 13.51 நிமிட நேரத்தைக் கொண்ட - படத்தின் ஒரு பகுதியை மட்டும் YOU TUBEஇல் பார்த்து இவ்வளவு ஆர்ப்பாட்டங்களை முஸ்லிம்கள் செய்வது ஏன் என்று விஷமத்தனமாக கேள்வி எழுப்புகிறார் அப்படத்தின் ஆலோசகர் ஸ்டீவ் க்ளெய்ன்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நடக்கும் இதுபோன்ற மத நிந்தனைகளை மேற்குலகம் தடை செய்ய வேண்டும். இல்லாவிடில், ஏற்கனவே கனலாக இருக்கும் மேற்கு - கிழக்கு உறவு மேலும் எரியும்

Source :
http://www.kayalpatnam.com/articles.asp?id=22

நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக....

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
நமது மூளை 80% நீரால் ஆனது.
நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்
கண்கள் 31 நிமிடங்கள்
மூளை 10 நிமிடங்கள்

கால்கள் 4 மணி நேரம்
தசைகள் 5 நாட்கள்
இதயம் சில நிமிடங்கள் ......

சுத்தமான தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா கண்டுபிடிப்பு...........................

             
நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களை 24 காரட் சுத்த தங்கமாக மாற்றும் பாக்டீரியாவை, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக மைக்ரோ பயாலஜி மற்றும் மாலிக்குலர் ஜெனடிக்ஸ் துணை பேராசிரியர் கசிம் கசெபி மற்றும் எலக்ட்ரானிக் ஆர்ட் மற்றும் இன்டர் மீடியா இணை பேராசிரிய
ர் ஆடம் பிரவுன் ஆகியோர் இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவிற்கு சில நூறு மைல் தொலைவில் உள்ள சில இடங்களில் கிடைத்த தங்க படிமங்களில் குப்ரியாவிடஸ் மெட்டாலிடியூரன்ஸ் வகை பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இவற்றை ஆய்வுக்கூடங்களில் கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்த தங்க குளோரைடு கரைசலில் வளர்க்க அவர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெற்றதுடன், தங்க குளோரைடு கரைசல் 99.9 சதவீத சுத்த தங்கமாகவும் மாறி ஆச்சர்யம் அளித்துள்ளது. விஞ்ஞான ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. எனினும், தங்க சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை விட, ரசாயன முறையில் தயாரிக்கப்படும் இந்த தங்கத்தின் விலை மிகவும் அதிகம் என்கிறார் பிரவுன்.

ஐன்ஸ்டீனை விட எக்கச்சக்கமான ஐக்யூவுடன் திகழும் 12 வயது

                                             சிறுமி................. ஆலப்ர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை விட அதிக அளவிலான ஐக்யூவுடன் திகழ்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர்.


இவரது ஐக்யூவின் அளவு 162 ஆகும். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐன்ஸ்டீன் மற்றும் ஹாக்கிங்கை விட அதி புத்திசாலி இந்தச் சிறுமி என்று அனைவரும் புகழ்கின்றனர்.
இவரது பெயர் ஒலிவியா
மானிங். லிவர்பூலைச் சேர்ந்தவர். இவரது ஐக்யூ மிகச் சிறந்தது என்று உலகப் புகழ் பெற்ற மற்றும் உலகின் மிகப் பழமையான ஐக்யூ கழகமான மென்சா கூறியுள்ளது.
ஒலிவியாவுக்கு வைக்கப்பட்ட ஐக்யூ டெஸ்ட்டில் அவரு 162 என்று ஸ்கோர் செய்துள்ளார். இது ஐன்ஸ்டீன் மற்றும் ஹாக்கிங்கை விட 2 அதிகமாகும்.
உலக மக்களில் 1 சதவீதம் பேர்தான் மிக மிக அதிக ஐக்யூவைக் கொண்டவர்கள் ஆவர். அந்த வரிசையில் தற்போது ஒலிவியாவும் சேர்ந்துள்ளார். அதுவும் முதல் நிலை இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒலிவியாவுக்கு எந்த விஷயமாக இருந்தாலும் உடனே அதை கிரகித்துக் கொள்ளும் அசாதாரணமான சக்தி இருக்கிறதாம். மேலும் எந்தத் தகவலையும் அவர் மறக்கவே மாட்டார். எப்போது கேட்டாலும் டக்கென சொல்லி விடுவாராம்.

முஹம்மது (ஸல்) அவர்களின் மறுபக்கம்


இறைவனின் திருப்பெயரால் ...

அது கி.பி. ஆறாம் நூற்றாண்டு!


உலகின் மையப்பகுதியான அரேபிய தீபகற்பத்தில் ஒரு பகுதி தனித்து விடப்பட்டிருந்தது. அண்டை நாடுகளை வேட்டையாடி அடிமைப்படுத்துவதில் மும்முரமாக இருந்த ரோம, பாரசீகப் பேரரசுகள்கூட அந்தப் பகுதியைப் பற்றி சிந்தித்தது கிடையாது. காரணம் அங்கு வசித்த மக்களும் அவர்கள் வாழ்ந்த
சூழலும். அந்த நகரம் மக்கா. அந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக,
கல்வியறிவற்றவர்களாக, நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக வாழ்ந்து வந்தனர். கொலை, கொள்ளை, மது, விபச்சாரம், நிர்வாண வழிபாடுகள், பரம்பரைச் சண்டைகள் என்று அவர்களது வாழ்வின் எல்லா நிலைகளிலும் தீமைகளும்
அனாச்சாரங்களும் நிரம்பி வழிந்தன.


ஆனால் வெறும் 23 ஆண்டுகளில் அம்மக்களைப் பண்பட்டவர்களாக, இன்றைய நவீன உலகிற்கு நாகரிகத்தின் அடிப்படையக் கற்பிக்கக் கூடியவர்களாக, உலகின் பெரும்பகுதியை ஆட்சி செய்யும் தகுதியுடையவர்களாக மாற்றிக்காட்டினார் ஒரு தனி மனிதர்! அவர்தான் இறைவனின் தூதர் முஹம்மது நபி(ஸல்*) அவர்கள்.

தீமைகள் தலைவிரித்தாடிய அந்தக் காலகட்டத்திலும் முஹம்மது (ஸல்) அவர்கள் தூய்மையானவராக, வாய்மையானவராக, நேர்மையானவராகத் திகழ்ந்தார்கள். “நான் இன்று இத்தனை பெண்களுடன் விபச்சாரம் செய்தேன்“ என்று பெருமையாகச்
சொல்லிக்கொண்ட மக்களின் மத்தியில் பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத உத்தமராக வாழ்ந்தார்கள். அனாச்சாரங்களைக் கலாச்சாரங்களாகக் கொண்டு
வாழ்ந்த மக்களாலும் "அல் அமீன் – நம்பிக்கைக்குரியவர், அஸ்ஸாதிக் – உண்மையாளர்" என்று கண்ணியத்துடன் அழைக்கப்பட்டார்கள் முஹம்மது (ஸல்).


நற்பண்புகளின் மணிமகுடமாக விளங்கிய அவரை இறைவன் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அறியாமையிலும் மடமையிலும் மூழ்கியிருந்த அந்த மக்களை நேர்வழிப்படுத்தும் பொறுப்பை அவருக்கு வழங்கி அவரை கண்ணியப்படுத்தினான்.


இறைவனின் தூதராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியை அம்மக்கள் மத்தியில் நபி (ஸல்) அறிவித்தபோது, ‘உண்மையாளர், நம்பிக்கைக்குரியவர்’ என்று போற்றிய அதே மக்கள் அவரைப் பொய்யன் என்றும், புத்திபேதலித்தவர் என்றும் தூற்றினர். சொல்லொணாத் துயரங்களை அவருக்கும், அவரைப்
பின்பற்றியவர்களுக்கும் கொடுத்தனர். இறைவனை வணங்கிக்
கொண்டிருக்கும்பொழுது ஒட்டகத்தின் அழுகிய குடலை அவர் முதுகில் வைத்துத் துன்புறுத்தினர்; துண்டால் முகத்தை மூடி மூச்சடைக்கச் செய்தனர்; சிறுவர்களை ஏவி, கல்லால் அடித்துக் காயப்படுத்தினர். அவருடைய தோழர்களை, சுடுமணலில், கடும் வெயிலில் வெறும் உடம்புடன் படுக்க வைத்து, பாறாங்கல்லை
உடம்பில் வைத்தனர். கழுமரத்தில் ஏற்றி உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை அம்புகளால் தைத்தனர். ஒரு பெண் என்றும் பாராமல் சுமையா (இறைவன் அவரைப் பொருந்திக் கொள்வானாக) என்பவரை மர்ம உறுப்பில் ஈட்டியைப் பாய்ச்சிக்
கொன்றனர். உச்சகட்டமாக, பிறந்து-வளர்ந்த மண்ணைவிட்டே வெளியேற்றினர். ஆனால் இவை யாவற்றையும் அவரும் அவருடைய தோழர்களும் பொறுமையுடனும்,
புன்முறுவலுடனும் சகித்துக் கொண்டனர்.
மக்காவை விட்டு வெளியேறி, அருகில் இருந்த மதீனா என்ற நகரத்துக்குச் சென்றனர். அங்கு வாழ்ந்த மக்கள் அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்து, அவரை ஏற்றுக் கொண்டனர். அவர்களைக் கொண்டு ஒரு நல்லரசை முஹம்மது(ஸல்)
அவர்கள் அங்கே நிறுவினார்கள். இஸ்லாத்தை ஏற்காத மக்களை அவர்கள் விரும்பிய மதங்களைப் பின்பற்ற அனுமதி வழங்கினார்கள். யாரையும் கட்டாயமாக மதம் மாறும்படி நிர்பந்திக்கவில்லை.


இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு படையெடுத்து வந்த மக்காவாசிகளை எதிர்த்து, முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் கட்டளையைப்படி போர் புரிந்தார்கள். அவற்றில் வெற்றியும்பெற்றார்கள். அப்போர்களில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும்
சரணடைந்தவர்களைத் தாக்கக் கூடாது என்றும், நிழல் தரும் மரங்களை வெட்டக் கூடாது என்றும், வழிபாட்டுத் தலங்களையும் மத குருமார்களையும் தாக்கக் கூடாது என்றும் தம் படையினருக்கு உத்தரவிட்டு போர்மரபுகளைக் கட்டிக் காத்தார்கள். அருகில் வசித்து வந்த யூதக் குலங்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை மீறாமல் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினார்கள்.


இன்னொரு குலத்தாரின் ஒட்டகம், தெரியாமல் தன் நீர்நிலையில் தண்ணீர் அருந்தியதற்காகக் காலம் காலமாக சண்டையிட்டுக் கொண்டவர்களை ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாக, உடன்பிறவா சகோதரர்களாக மாற்றினார்கள். பீப்பாய் பீப்பாய்களாக வீட்டில் அடைத்துவைத்து மது அருந்தியவர்களை, “மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்ற இறைவனின் கட்டளை
இறங்கியவுடன் வாய்க்குள் விரல் விட்டு வாந்தியெடுத்தவர்களாக,
மதுக்குடங்களை உடைத்துத் தெருவெல்லாம் மதுஆறு ஓடச் செய்தவர்களாக ஆக்கினார்கள். பொழுதுபோக்கைப்போல் விபச்சாரம் செய்தவர்களை அந்நியப் பெண்களை ஏறெடுத்துப் பார்க்காதவர்களாக, ஆண்களோடு இரண்டறக் கலந்து
நிர்வாண வழிபாடுகள் செய்த பெண்களை, அந்நிய ஆண்களிடமிருந்து தங்கள் உடல் உறுப்புகளை மறைக்கும் வகையில் கண்ணியமான ஆடை உடுத்துபவர்களாக
பக்குவப்படுத்தினார்கள். பொய், கொலை, கொள்ளை போன்ற தீமைகளை அவர்கள் வாழ்விலிருந்து இல்லாமல் ஆக்கினார்கள்.


எந்த நாட்டிலிருந்து விரட்டியடித்தார்களோ அந்த மக்காவை வெற்றிகொண்ட பிறகு, தமக்கும் தம் குடும்பத்தார்க்கும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறையாக ஏற்றுக் கொண்ட மக்கத்து முஸ்லிம்களுக்குத் துன்பம் தந்த மக்களுக்குப்
பொதுமன்னிப்பு வழங்கி, தமது பெருந்தன்மையை உலகிற்கு உணர்த்தினார்கள். ஏற்கனவே பதவி வகித்தவர்களை அதே பதவிகளில் தொடரச் செய்தார்கள். அடிமைத் தளையை ஒழித்தார்கள். பெண்சிசுக் கொலையை அறவே அழித்தார்கள். பெண்களுக்குச் சொத்துரிமை பெற்றுத் தந்தார்கள். வறுமை இல்லாத சமுதாயத்தை உருவாக்கிக்காட்டினார்கள். ஓரினச் சேர்க்கையையும் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதையும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தார்கள். நள்ளிரவில்
ஒரு பெண் நாட்டின் ஒரு எல்லையிலிருந்து இன்னோர் எல்லைக்குத் தனியாகப் பயணம் செய்யக் கூடிய அளவிற்குப் பாதுகாப்பான அரசை கட்டமைத்தார்கள். பொறுப்பில் உள்ளவர்களை மக்களுக்கு உண்மையாக சேவையாற்றுபவர்களாகவும், எளிதில் அணுகக் கூடியவர்களாகவும், எளிமையாகவும் வாழச் செய்தார்கள்.


அரசின் தலைவராக இருந்தபோதும்கூட முஹம்மது(ஸல்) அவர்கள் இறுதிக்காலம் வரைக்கும் ஏழ்மையிலேயே வாழ்ந்தார்கள். தம் வாழநாளில் ஒரு போதும் வயிராற உணவு உண்டதில்லை. யார் மீதும் கோபப் பார்வை பார்த்தது கிடையாது. யாரையும் கடிந்து பேசியது இல்லை. பெரியவர்களுடன் மரியாதையுடனும், சிறியவர்களுடன் அன்புடனும் நடந்து கொண்டார்கள். உதவி என்று வந்தவர்களுக்கு இல்லை என்று ஒருபோதும் சொன்னதில்லை. விதவைகளுக்கு வாழ்வளித்தார்கள்.


நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக, ஒரு நாட்டின் தலைவராக, கணவராக, தந்தையாக, நண்பராக, வீரராக வாழ்ந்து உலகம் உள்ளவரை வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவராகத் திகழ்கிறார்கள். அவரை உயிரினும் மேலாய் மதிக்கக்கூடிய பல கோடிக்கணக்கான மக்களை உருவாக்கிய, அவரது போதனைகள் மூலம் இந்த உலகம்
உள்ளவரை இன்னும் பல கோடிக்கணக்கானோரை உருவாக்கக் கூடிய உன்னதத் தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.


அதனால்தான் உலகம் தோன்றியது முதல் இன்றுவரை செல்வாக்கு மிக்க நூறு தலைவர்களைக் குறித்து மைக்கேல் H.ஹர்ட் என்ற அறிஞர் எழுதிய “The Hundred” என்ற புத்தகத்தில் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முதலிடத்தை வழங்கியுள்ளார். அதற்கு அவர் கூறியுள்ள காரணம், “உலகில் தோன்றிய தலைவர்கள் எல்லாம்
ஏதெனும் ஒரு துறையில் மட்டுமே சிறந்து விளங்கியுள்ளனர். ஆனால் முஹம்மது(ஸல்) அவர்கள் மட்டுமே அரசியல், ஆன்மீகம், குடும்பம், கல்வி, பொருளாதாரம் என்று எல்லா துறைகளிலும் தனி முத்திரை பதித்துள்ளார் “.


அவருடைய வரலாறு முழுவதும் உள்ளது உள்ளபடி திறந்த புத்தகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு யாருடைய வாழ்வும் இவ்வாறு பதிவு செய்யப்படவில்லை. அவரைப்போன்ற ஒரு மனிதர், தலைவர் உலகில் அவருக்கு முன்பும் தோன்றியதில்லை; உலகம் அழியும்வரை இனியும் தோன்றப் போவதில்லை.


உலகம் போற்றும் இத்தகைய ஒப்பற்ற மனிதரைக் குறித்து அறிந்த யாரும் அவரைப் பற்றி மறந்தும்கூட தவறாகச் சிந்திக்க மாட்டார்கள். அவரைத் தூற்றியோ, இழிவுபடுத்தியோ இன்னும் எத்தனை நிகழ்வுகள் நடந்தாலும் அவை யாவும் அவரைப்
பற்றியும் அவர் கொண்டுவந்த தூதுச் செய்தியை உலக மக்கள் இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்ள உதவுமேயன்றி அவருக்கு எதிராக ஒரு கரும்புள்ளியைக்கூட அறிவுடையவர்கள் மனத்தில் ஏற்படுத்திவிட முடியாது.


“அவரிடம் உங்கள் அனைவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரி உள்ளது” அல்-குர்ஆன் 33:21.


(* ஸல் – ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் என்ற அரபி வார்த்தையின் சுருக்கம்..”இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும்" என்பது அதன்
பொருள்).


ஜசகல்லாஹ் கைர் சகோ. R. அபுல் ஹசன்
Reference By: www.satyamargam.com

இவன்

முஹம்மது இக்பால், ( Mohamed Iqbal Basheer Ahamed )
அமீர் , இஸ்லாமிய தவாஹ் குழுமம் http://www.facebook.com/groups/islamicdawah1

Join our Islamic Dawah Group: http://www.facebook.com/groups/islamicdawah1/

Join with us : http://www.facebook.com/CuddaloreMuslimFriend

ஹதீஸ் தொகுப்பு வரலாறு


 
ஆறு ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்திலும், அதற்கு முந்திய காலத்திலும் வேறு பல ஹதீஸ் நூல்களும் தொகுக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான சிலதை பார்ப்போம்.

பெயர்

1. முஅத்தா மாலிக்(ரஹ்)
2. முஸ்னது ஷாபிஈ (ரஹ்)
3. முஸ்னது அஹ்மது (ரஹ்)
4. முஸ்னது தவ்ரீ (ரஹ்)
5. முஸ்னது அவ்ஸஈ (ரஹ்)
6. முஸ்னது இப்னு முபாரக்
7. முஸ்னது முஹம்மதுபின் ஸலமா(ரஹ்)
8. முஸ்னது இப்னு உஜன்னா (ரஹ்)
9. முஸ்னது இப்னு முஅம்மர் (ரஹ்)

பிறப்பு-இறப்பு

92-179ஹி
150-204ஹி
164-241ஹி
97-161ஹி
--157ஹி
-181ஹி
-167ஹி
107-198ஹி
-191ஹி

ஊர் நாடு

மதீனா சவுதி
மக்கா சவுதி
பஸ்ரா ஈராக்
கூஃபா ஈரான்
ஷாம் ஈராக்
குராசான் ஈரான்
பஸ்ரா ஈராக்
கூஃபா ஈரான்
யமன் யமன்



1
இந்நூல்களில் முஅத்தா மாலிக் போன்ற ஓரிரு நூல்களைத் தவிர மற்ற அனைத்தும் முஸ்னதுகளாக (தலைப்புகளின் அடிப்படையில்) அமைந்தன. முஸ்னதுகளில் சாதரணமாக இஸ்லாமிய சட்டங்களை கண்டறிவது மிகவும் கடினம். ஒரு ஹதீஸை அறிவிப்பாளர் பெயர் தெரிந்த்தால் மட்டுமே அதனை பார்க்க முடியும்.

இமாம்களான அபூஹனீபா (ரஹ்),மாலிக்(ரஹ்), ஷாபிஈ(ரஹ்), ஹம்பலி(ரஹ்) போன்றோரில் இமாம் அபூஹனீபா(ரஹ்) எழுதிய ஹதீஸ் அல்லது மார்க்கச் சட்ட நூல்களில் இன்று எதுவும் தற்சமயம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் ஹனபி மத்ஹபு பெயரில் புழங்கி வரும் பிக்ஹு நூல்கள் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் எழுதப்பட்டவையல்ல. இமாமுல் அஃலம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ள அபூஹனீபா அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தொகுத்தளித்ததாகும். இந்நூல்களுக்கும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தங்களது சொந்த கருத்துக்கள் மக்களிடம் எடுபடாது என எண்ணி இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் பெயரில் அறங்கேற்றியுள்ளனர் .

இமாம் ஷாபீஈ(ரஹ்) முஸ்னது ஷாபீஈ என்ற ஹதீஸ் தொகுப்பையும், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) முஸ்னது அஹ்மது என்ற ஹதீஸ் தொகுப்பையும் எழுதினார்கள் .

ஆனால் இமாம் மாலிக்(ரஹ்) தனது தொகுப்பு முஅத்தா மாலிக் என்ற ஹதீஸ் தொகுப்பை முஸன்னஃபாக (பாடங்கள் தலைப்பிட்டு) கொடுத்தார். அதில் சுமார் 2000 ஹதீஸ்கள் உள்ளன. இந்நூல் ஸிஹாஹ் ஸித்தா எனப்படும்

ஆறு ஹதீஸ் நூல்கள் வருவதற்கு சுமார் 75 முதல் 100 வருடங்கள் முன்பாகவே மதினாவில் வாழ்ந்த மாலிக்(ரஹ்) ஹதீஸ் நூலாகவும், மார்க்கச் சட்ட நூலாகவும் தொகுத்தார்கள்.

ஹிஜ்ரீ 3ம் நூற்றாண்டிற்குள் பெரும் ஹதீஸ் தொகுப்புக்கள் பல வெளிவந்துவிட்டன. ஹதீஸ் தொகுப்புகளின் பொற்காலமான 3, 4, 5 வது நூற்றாண்டிலும் இப்னு மாஜ்ஜா இந்த தரமிக்க ஹதீஸ் தொகுப்புகளுடன் இணைக்கப்படவில்லை. ஆனால் பெரும் பான்மையானவர்கள் புஹாரி, முஸ்லிம் இவ்விரண்டயும் "ஸஹீஹைன்" (உண்மையான ஹ்தீஸ்களின் இருநூல்கள்) என்றும், மற்றவைகளை "ஸூனன்" என்றே அழைத்தனர் .

ஹிஜ்ரீ 5ம் நூற்றாண்டின் இறுதியில் அபுல்காஸிம் அலி இப்னு முஹம்மது இப்னு அஸாகிர் (இறப்பு 571ஹி) என்ற ஹதீஸ்கலா வல்லுனர் அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா என்ற நான்கு நூல்களிலிருந்து ஹதீஸ்களை தேர்தெடுத்து ஒரே நூலாக "அல்-அஷ்ராப் அலா மஃரிபத்துல் அத்ராஃப்" எனத் தொகுத்தார். அவரைத் தொடர்ந்து அப்துல் கனி பின் அப்துல் வாஹித் அல்-மக்தஸீ (இறப்பு 600ஹி) என்பவர் புஹாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா என்ற ஆறு தொகுப்புகளில் இடம் பெறும் அறிவிப்பாளர் களைப் பற்றி ஒரு ஆய்வு நூல் "அல்-கமால்" என்ற நூல் எழுதினார் .

இந்நூல் இவருக்குப்பின் வந்த பெரும் ஹதீஸ் கலாவல்லுனர்களான தஹபி, இப்னுகதீர், முஃகலாதி, இப்னு ஹஜர் போன்றோருக்கு சிறந்த உதவியாக இருந்தது. இவர்களும் இந்த ஆறு நூல்களின் தொகுப்புக்கு தனி பெயரைக் கொடுக்கவில்லை. ஆனால் இவர்களுக்குப்பின் வாழ்ந்த அல்-ஹாபில் அல்ஹஜ்ஜாஜ் அல்-மஜ்ஜி (இறப்பு 742ஹி) என்பவர் ஆறு நூல்களின் தொகுப்புக்கு "துஹ்பத்துல் அஷ்ராப் பீ மஃரிபத்துல் அத்ராப் என பெயர் நல்கினார். இது நாளடைவில் மக்களிடையே "ஸிஹாஹ் ஸித்தா" எனப் பெயர் பெறலாயிற்று .

ஹதீஸ் நூற்கள் பல வகைகளாக திரட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைளான தொகுப்புகளுக்கும் தனித்தனியான பெயர்கள் உள்ளன.

இன்ஷா அல்லாஹ்.. வளரும்..

ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.




கீழே இருக்கும் படங்களை பாருங்கள் மரங்களின் அருமையை உணருங்கள்
செடிகள் நிறைந்த தொட்டியின் வழியே கீழே இறங்கும் தண்ணீர் வெளியே வரும்போது தெளிவாக இருக்கிறது.
அதே வெறும் மண், அல்லது காய்ந்த இலையுடன் கூடிய மண் வழியே வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது.
நாம் காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டு ஆற்று நீர் ஏன் கலங்கலாக உள்ளது என்று கவலைபடுகிறோம்.
நிறைய மரங்களை வளர்ப்போம், காடுகளைக் காப்போம் தூய்மையான தண்ணீரைப் பெறுவோம்...

This simple experiment shows the importance of trees on the
environment. The water that runs through soil with vegetation -- on
the left, comes out clear, while that that without vegetation is
muddy. COMMON SENSE. Yet, why do we keep cutting the trees in our forests and complaining why the water in our rivers are so muddy
and dirty?