Digital Time and Date

Welcome Note

Saturday, August 4, 2012

உம்ரா செய்வது எப்படி?



'ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 'ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஆவார்கள். அவர்கள் அவனிடம்
கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: நஸயி, இப்னுமாஜா)


மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களும் இன்னும் பல ஹதீஸ்களும் உம்ராவின் சிறப்புகளைக் கூறுகின்றன.


இன்று உம்ரா செல்லக்கூடியவர்கள் அதிகரித்துள்ளனர், ஆனால் உம்ராவிற்கான வழிகாட்டுதல்கள் தனியாகத் தொகுக்கப்படாமல் ஹஜ்ஜுடன் சேர்த்து கூறப்பட்டடிருப்பது புதிதாக உம்ராச் செல்லக் கூடியவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. இக்குறையை நீக்குவதற்காக இங்கு உம்ராச் செய்வதற்கான வழிகாட்டுதல் சுருக்கமாகத் தரப்படுகிறது.


1. இஹ்ராம் :


மீக்காத் எனும் எல்லையை அடைந்ததும் குளித்து விட்டு இஹ்ராம் உடையை அணிந்து கொள்ள வேண்டும். (மீக்காத்திலிருந்து கஃபாவை தவாஃப் செய்ய ஆரம்பிக்கும் வரை வலது தோளைத் திறந்த வைத்துக் கொள்வது நபிவழிக்கு மாற்றமானது.)


பர்ளுத் தொழுகையின் நேரமாக இருந்தால் அதனைத் தொழுதுவிட்டு அல்லது உளூவுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துக்களைத் தொழுது விட்டு உம்ராவுக்கு நிய்யத் வைக்க வேண்டும். (இஹ்ராமிற்கென்று பிரத்தியேகமான எந்தத் தொழுகைக்கும் நபிவழியில் ஆதாரம் இல்லை.)


உம்ராச் செய்வதாக மனதால் நினைப்பதே நிய்யத் எனப்படும். அவ்வாறு நினைத்து விட்டு لَبَّيْكَ اَللهُمَّ عُمْرَةً (லப்பைக அல்லாஹும்ம உம்ரதன்) என்றோ اَللهُمَّ لَبَّيْكَ عُمْرَةً (அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்) என்றோ கூற வேண்டும்.


2. உம்ராவுக்கு நிய்யத் வைத்ததிலிருந்து கஃபதுல்லாஹ்வைச் சென்றடையும் வரை தல்பியாவைத் திரும்பத் திரும்பச் செல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் சத்தத்தை உயர்த்தியும் பெண்கள் மெதுவாகவும் தல்பியாவைச் சொல்ல வேண்டும். தல்பியா வாசகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ (அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்நிஃமத லக வல் முல்க், லாஷரீக லக்.)


3. தவாஃப் செய்தல்:


மஸ்ஜிதுல் ஹராமை அடைந்ததும் வுழூச் செய்து விட்டு கஃபதுல்லாஹ்வை நோக்கிச் செல்ல வேண்டும். தனது வலது தோளைத் திறந்தவராக ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று, அதனைத் தனது வலது கையினால் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூற வேண்டும். முடிந்தால் அக்கல்லை முத்தமிடலாம். முடியாவிட்டால் கல்லைக் கையினால் தொட்டு கையை முத்தமிட வேண்டும். அதற்கும் முடியவில்லையென்றால் அதனை முன்னோக்கி அல்லாஹுஅக்பர் என்று கூறி தனது வலது கையால் அதன்பால் சுட்டிக்காட்ட வேண்டும். அப்போது கையை முத்தமிடக் கூடாது.


அவ்விடத்திலிருந்து தவாiஃப ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வதிலிருந்து ஆரம்பித்து மீண்டும் ஹஜருல் அஸ்வதை வந்தடைவது ஒரு சுற்றாக கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்றின் ஆரம்பத்திலும் முடிந்தால் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது அல்லது அதனைத் தொட்டு கையை முத்தமிடுவது அல்லது அதனை நோக்கிக் கையைக் காட்டுவது நபிவழியாகும்.


ஆரம்ப மூன்று சுற்றுக்களிலும் தொங்கோட்டமாகவும், ஏனைய நான்கிலும் சாதாரணமாகவும் செல்ல வேண்டும்.


தவாஃபின் போது (ஹஜருல் அஸ்வதிற்கு முன்னாலுள்ள) ருக்னுல் யமானி என்ற மூலையை அடைந்தால் பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூறி அதனைத் தொட வேண்டும். கையை முத்தமிடக் கூடாது. தொட முடியாவிட்டால் அதற்குக் கையைக் காட்டக் கூடாது.


ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வதை அடையும் வரை, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار 'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று கூற வேண்டும். (பொருள்: எங்கள் இரட்சகா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!) இது அல்லாமல் தவாஃபின் போது ஒதுவதற்கென்று எந்த துஆக்களும் ஹதீஸ்களில் வர வில்லை. எனவே தான் விரும்பிய துஆக்களைத் தனக்குத் தெரிந்த மொழிகளில் கேட்கலாம். அல்குர்ஆன் ஓதலாம். மேலும் திக்ருகள் செய்யலாம்.


தவாஃப் செய்து முடிந்ததும் வலது தோளை மூடிக் கொள்ளலாம்.


4. தவாஃப் செய்து முடிந்தால்...?: தவாஃப் செய்து முடிந்ததும் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். முதலாவது ரக்அத்தில் சூரத்தல் ஃபாத்திஹாவுடன் குல் யா அய்யுஹல் காபிரூன் சூராவையும், இரண்டாவது ரக்அத்தில் சூரதுல் ஃபாத்திஹாவுடன் குல் ஹுவல்லாஹு அஹத் சூராவையும் ஓத வேண்டும்.


இந்த தொழுகையை மாகமு இப்ராஹீமிற்குப் பின்னால் நின்று தொழுவது சிறந்தது. முடியாவிட்டால் பள்ளியின் எந்த இடத்திலும் தொழலாம்.


தொழுது முடிந்ததும் ஸம்ஸம் தண்ணீரை அதிகமாகக் குடிப்பது சுன்னத்.


5. ஸயீ செய்வது:


தவாஃப் செய்து, தொழுது முடிந்தால் ஸயீ செய்வதற்காக ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும்.


ஸஃபாவை நெருங்கும் போது, إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِر الله فَمَنْ حَجَّ الْبَيْتَ أَو اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ الله شَاكِرٌ عَلِيْمٌ 'இன்னஸ் ஸஃபா வல்மாவத மின் ஷஆயிரில்லாஹ், ஃபமன் ஹஜ்ஜல் பைத அவிஃதமர ஃபலா ஜுனாஹ அலைஹி அய்யத்தவ்வஃப பிஹிமா, வமன் ததவ்வஅ கைரன் ஃபஇன்னல்லாஹ ஷாகிருன் அலீம்'. (2:158) என்று ஓத வேண்டும்.


பின்னர் கஃபாவைக் காணுமளவுக்கு ஸஃபாவில் ஏறி பின்வருமாறு ஓத வேண்டும்.


لآ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ 'லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யி வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஇலாஹ இல்லல்லாஹுவஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'. பிறகு கையை உயர்த்தி தனக்கு விருப்பமான துஆக்களை (விரும்பிய மொழியில்) கேட்க வேண்டும். துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரைக் கூறிவிட்டு மீண்டும் கைகளை உயர்த்தி துஆச் செய்ய வேண்டும். இரண்டாவது முறை துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரை ஓதிவிட்டு மாவாவை நோக்கிச் செல்ல வேண்டும். பச்சை அடையாளம் இடப்பட்ட தூண்களுக்கு இடையில் ஆண்கள் தொங்கோட்டமாகச் செல்ல வேண்டும். (பெண்கள் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.)


மர்வாவை அடைந்ததும் அதில் ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபாவில் செய்தது போன்று (திக்ரு, துஆ) செய்ய வேண்டும்.


ஸஃபாவிலிருந்து மாவாவுக்குச் செல்வது ஒரு சுற்றாகும். மர்வாவிலிருந்து மீண்டும் ஸஃபாவுக்கு வருவது இரண்டாவது சுற்றாகக் கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஏழாவது சுற்று மர்வாவில் முடியும். ஸஃபா, மர்வாவில் ஓதுவதற்கென்று ஏற்கனவே கூறப்பட்ட திக்ருகளைத் தவிர ஸயீயில் ஓதுவதற்கென்று குறிப்பாக ஏதும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட வில்லை. எனவே தவாiஃபப் போன்று குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், துஆச் செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.


ஸயீ செய்வதற்கு வுழு அவசியமில்லை. 6. ஸயீ முடிந்ததும்:


ஸயீ முடிந்ததும் தலை முடியை முற்றாக மழிக்க வேண்டும், அல்லது கத்தரிக்க வேண்டும்.


கத்தரியால் சில முடிகளை மட்டும் வெட்டுவது மிகப் பெரிய தவறாகும்.


இத்துடன் உம்ரா நிறைவு பெறுகிறது.


(குறிப்பு: இஹ்ராமில் தடுக்கப்பட்டவை, இஹ்ராம் கட்டியவர் தவிர்ந்து கொள்ள வேண்டியவை போன்ற மேலதிக விபரங்களை விரிவான நூற்களில் காணவும்.)


உங்களது உம்ராவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!

Wednesday, August 1, 2012

தாய்ப் பால் உலகில் விலைமதிப்பற்ற பொக்கிசம்.......


 
தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்மீகத்தையும் ஒவ்வொரு இளம் தாய்க்கும் உணர்த்தும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் “தாய்ப்பால் ஊட்டுவது பேரிடரிலும் இன்றியமையாதது – நீங்கள் தயாரா?” என்பதை இந்த ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் கோஷமாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) வரையறுத்துள்ளது.

பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். ஒரு குழந்தை பிறந்ததும் அக்குழந்தைக்கு தாயின் பாலை ஊட்டுவது இயற்கையானது. குறிப்பிட்ட காலம்வரை குழந்தைக்கு தாய்ப் பாலை ஊட்ட வேண்டிய கடமை தாய்க்குண்டு.

இந்த நவீன இலக்ரோனிக் யுகத்தில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக பல்வேறுபட்ட சிரம நிலைகள் கூறப்பட்டாலும்கூட,வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி, வளர்முக நாடுகளிலும் சரி தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டின் உறுதித்தன்மையில் மாத்திரம் மாற்றங்களே வரவில்லை. விஞ்ஞானம் வளர்ச்சிடைய வளர்ச்சியடைய தாய்ப்பாலின் முக்கியத்துவம் விஞ்ஞான ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டே வருகின்றது.

வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் தாய்ப்பாலூட்டுவது இன்று ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வருகின்றது. இந்நிலையைக் கருத்திற் கொண்டு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் சரி, அபிவிருத்தியடைந்துவரும் பெரும்பாலான நாடுகளிலும் சரி ‘சிசு” பராமரிப்பைக் கருத்திற் கொண்டு பிரசவத்தின் பின்பு தாய்க்கு நீண்டகால விடுமுறை வழங்கப்படுகின்றது. அது தவிர, பாலூட்டும் காலம்வரை சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனாலும், சில தாய்மார் குறிப்பாக தொழில் செய்யும் தாய்மார் இது விடயத்தில் ஓரளவுக்கு அசட்டைத்தனம் காட்டுவதும் தமது பிரசவ விடுமுறை முடிவதற்கு முன்பு குழந்தைக்கு வேறு ஏதாவது ஒரு பாலைப் பழக்கி விடவேண்டும் என்று ஆர்வம் காட்டுவதையும் காணமுடிகின்றது. எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்த பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப்படுத்துகின்றனர். எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும் குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்ட ஒரு தாய் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தினையே இவ்வாண்டுக்கான உலக தாய்ப்பால் வாரத்தின் தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இத்தகைய தாய்மாரின் மனோநிலைகளும் போக்குகளும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களுக்கு கிடைக்கும் மருத்துவ விடுப்பில் முழுமையாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையே முக்கிய பணியாகக் கருத வேண்டும். குழந்தை அழும்போதெல்லாம் அதற்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அடிக்கடி பாலூட்டும்போது தான் போதுமான அளவு பால் சுரக்க வழி ஏற்படுகிறது. பேறு கால மருத்துவ விடுப்பு முடிந்து, குழந்தையை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் வேலைக்குச் செல்லும் நிலையிலும் தாய்ப்பால் கொடுக்க முடியும். காலையில் வேலைக்கு புறப்படும் முன்பு, எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அத்தனை முறை கொடுக்கலாம். வேலைக்குக் கிளம்புவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, தாய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் சேகரித்து வைத்து வீட்டில் உள்ளோர் மூலம் பாலாடை மூலம் அதைக் கொடுக்கலாம். அதற்குத் தாய்ப்பாலை தனியாக சுத்தமான கிண்ணத்தில் எடுத்து வைத்து வீட்டில் உள்ளோரிடம் அதனைக் குழந்தைக்கு முறைப்படி கொடுக்கச் சொல்லி விட்டு பணிக்குச் செல்லவும்.

சாதாரண வெப்பநிலையில் 12 மணி நேரமும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 24 மணி நேரமும் தாய்ப்பால் கெடாமல் இருக்கும். பணியிலிருந்து வீட்டிற்கு திரும்பியவுடன் மறுபடியும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை இரவு, பகல் பாராமல் தொடர வேண்டும். பால் புளித்திருக்கும் போது கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.

அத்துடன் மார்பகக் காம்பில் விரிசல் ஏற்பட்டு தாய்க்கு வலி ஏற்படின் தாய்ப்பாலை கறந்து கிண்ணத்தில் வைத்து தேக்கரண்டி அல்லது பாலாடை மூலம் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். மார்பகக் காம்பு அளவுக்கதிகமாக நீண்டு இருந்தாலும் குழந்தையால் பால் குடிக்க முடியாது. குழந்தையின் தொண்டையில் அடைத்துக் கொள்வதால் மூச்சு திணற ஏதுவாகும்.

பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும், ஈடு இணையற்றதுமானது தாயின் பாலாகும். இதை பாமரத் தாய்மார்கள முதல், படித்த தாய்மார் வரை நன்கு தெரிந்து வைத்தே உள்ளனர். கர்ப்பத்தில் தாய்க்கும் சேய்க்குமுள்ள தொப்புள்கொடி உறவைத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதினூடாகவே தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவு நெருக்கமாக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள்.

இயற்கையின் படைப்புகளில், விந்தைகளில், நியதிகளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று. உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றாக மனித இனமும் காணப்படுகின்றது. ஆனால், ஆறறிவு படைத்த மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாவது விந்தைக்குரியதே. பொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது. ஐயறிவு படைத்த ஜீவராசிகள் கூட தமது குட்டிகளுக்கு தமது பாலையே ஊட்டும். இது தவிர, பிற மிருகங்களின் பாலை ஊட்ட எத்தனிக்காது. இது இயற்கை. இந்த எல்லா உயிரினங்களிலும் நாம் மட்டுமே மற்ற விலங்குகளின் பாலை விலை கொடுத்து வாங்கிக் குடிக்கின்றோம். குறிப்பாக அந்தந்த இனத்தின் தேவைக்கேற்ப அந்தந்தப்பால் அமைந்துள்ளது என இயற்கை விதியினை மறந்து புறக்கணிக்கின்றோம்.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டிற்கே பொருளாதாரப் பொக்கிஷம். குழந்தைகளை நோய்களிலிருந்து தாய்ப்பால் காப்பதுடன் குடும்பச் செலவுகளையும் குறைக்கின்றது. தாய்ப்பால் எளிதில், வெதுவெதுப்பான சூட்டில் தேவைப்படும் போதெல்லாம் குழந்தைக்குக் கிடைக்கக் கூடியது. கலப்படம் செய்ய முடியாதது. உயர்தரப் புரதம், கொழுப்பு, அமினோஅமிலங்கள், தாது உப்புக்கள் மற்றும் லேக்டோ பேசிலஸ் பைபிடஸ்பேக்டர் போன்ற தடுப்புப் பொருட்கள் இவை அனைத்தையும் கொண்ட குழந்தையின் முதல் மூன்று மாதங்களுக்கான ஒரு முழுமையான உணவு.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் எண்ணற்ற பயன்கள் உள்ளன. தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது. குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது. கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.
குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் சமிபாடடையும். தாய்ப்பாலில் உள்ள “நோய் எதிர்க்கும் சக்தியை உடைய புரதப் பொருள்’ (Immuno Globulin) குழந்தையை கொடிய நோய்கள், மார்புச் சளி (நிமோனியா), தோலில் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜிக்) போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. மருந்துகளே கிடைக்க வழியில்லாத குக்கிராமங்களில்கூட கிருமிகளினால் ஏற்படும் வாந்தி, பேதியை தாய்ப்பால் மட்டும் கொடுத்து குணப்படுத்தலாம். தாய்ப்பாலில் புரதம், கொழுப்புச் சத்து மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமில, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருப்பதால் குழந்தை சீராக உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி பெற்று வளரும்.

தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் சில நோய்களுக்கும் மருந்தெனவும் சித்த வைத்தியம் குறிப்பிடுகின்றது. அதாவது எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து, ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு தாய்ப்பாலை தடவி வந்தால் விரைவில் குணமாகி விடும், கண்களில் ஏற்படும் எல்லாவித எரிச்சல், உறுத்தல், கண் வலி நோய் போன்றவற்றிற்கு கண்களில் தாய்ப்பாலை ஒரு சொட்டு விட்டு உடனடி நிவாரணம் பெறலாம், இரத்த சோகை: இந்த நோயினால் மிகவும் உடல் வலுவின்றிக் காணப்படுவோர் நாள்தோறும் ஒரு சிறிய தேனீர் குவளை அளவு தாய்ப்பாலினைப் பருகி வர நல்ல பலன் தெரியும், கொசுக்கடி, எறும்பு மற்றும் பூச்சிக்கடியினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட இடத்தில் தாய்ப்பாலைத் தடவலாம், குழந்தைகளின் உடல் சூடு மற்றும் வயிற்று வலிகளுக்கு தாய்ப்பாலினை குழந்தைகளின் வயிறு, உச்சித் தலை மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் தடவி வரலாம், சளி, இருமலுக்கும் சிறந்த மருந்து, தொண்டை கரகரப்பு, மூக்கடைப்புக்கும் ஏற்றது, காது வலிக்கு காதில் ஒரு சொட்டு விட்டால் போதும்….

புட்டிப்பால் தருவதினால் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவதுடன் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது. புட்டிப் பாலினால் ஏற்படும் வாந்தி , பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

தாய்ப்பால் ஊட்டுவதினூடாக தனது அழகு சீர்குலைந்துவிடுமென சில தாய்மார் கருதுகின்றனர். ஆனால், விஞ்ஞான ரீதியான விளக்கப்படி தாய்ப்பால் ஊட்டுவதினுடாக தாயின் மனநலம் பாதுக்கப்படுகின்றது. இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது;. கருப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலையில், 98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது தடுக்கப்படுகிறது. மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக இரத்தப் போக்கும் தடுக்கப்படுகிறது.

குழந்தையை அடிக்கடி பாலூட்ட அனுமதிக்காத தாய்மார்களுக்கு மார்பகத்தில் தாய்ப்பால் கட்டி வேதனை எடுக்க ஆரம்பிக்கும். இம்மாதிரி நிலை, அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந்திடும் தாய்மார்களுக்கும் ஏற்படுகிறது. இதனால் குளிர் காய்ச்சல் ஏற்பட்டு தாய்மார் அவதிப்படுவது உண்டு. சில நேரங்களில் மார்பகத்தில் கட்டியுள்ள பால் சீழாக மாறும் நிலை ஏற்பட்டு, அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். தாய் தன் பாலைக் கொடுக்க முடியாத நேரத்தில், மற்றொரு தாயின் பாலைக் கொடுப்பதில் தவறில்லை.

ஒரு பெண் தாய்மை அடையும்போது இயற்கையாகவே பெண்களின் உடல் அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன கருவான குழந்தையை தட்ப வெப்ப சூழ் நிலைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக காப்பதற்கு உதவியாக கருவறை என்னும் கருப்பையில் அக் குழந்தைக்கு தேவையான, காற்று , நீர், மற்றும் அதற்கு தேவையான உணவு, அத்தனையும் தாயின் தொப்புள் கொடி வழியாக செலுத்தப்படும் பிறந்த குழந்தைக்கு இந்த உலகில் வந்தவுடன் உணவுப் பொருளாக தாய்ப்பால் தானாகவே சுரக்க ஆரம்பிக்கிறது

குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் கண்டிப்பாக ஒவ்வொரு தாயும் தாய்ப்பால் கொடுத்திட வேண்டும். சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளிவந்த உடன் பாலூட்டத் தொடங்கிவிடலாம். குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் தொடங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். அதுவும் குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மஞ்சள் நிற – நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த சீம்பாலை கட்டாயம் குழந்தைக்கு தாய் கொடுக்க வேண்டும். பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த ‘கொலஸ்ட்ரம்” என்ற சீம்பால் – வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும். பொதுவாக கிராமப்புறங்களில் அல்லது வயது முதிர்ந்தவர்களிடம் இந்த மஞ்சள் நிற சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது எனவும் அந்தப் பாலை பீய்ச்சி வெளியேற்றிவிட வேண்டும் என்றும் கூறுவர். உண்மையிலேயே இது மிகவும் தவறான கருத்தாகும். விஞ்ஞான விளக்கங்களின்படி இந்த சீம்பாலிலே குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்திகள் கூடவே காணப்படுகின்றது. பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.

சில தாய்மாருக்கு தனது பிள்ளைக்கு தேவையான அளவு பால் சுரப்பதில்லை என்று ஒரு ஆதங்கம் காணப்படுவதுண்டு. சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும். அத்தாய் நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலம் உள்ள நிலையில் காணப்படின் தாய்க்கு தடையின்றி தாய்ப்பால் உறுதியாகச் சுரக்கும். இது இயற்கையானது. அதேநேரம், மனோ ரீதியானதும்கூட. எனவே, தனக்குப் போதிய அளவு தாய்ப் பால் இல்லையே என்ற மனநிலையைத் தவிர்த்து தனது குழந்தைக்கு “நிச்சயம் பால் கொடுப்பேன்’ என்ற எண்ணம் மேலோங்கி இருந்தாலே போதும்; அதிகபட்சம் 500 மில்லி லிட்டர் தாய்ப்பால் ஒரு நாளைக்குச் சுரக்கும் என்பதை ஒவ்வொரு தாயும் உணர வேண்டும். சில தாய்மாருக்கு மார்பகங்கள் சிறிதாக இருந்தால் குறைந்த அளவுதான் பால் சுரக்கும் என நினைப்பது முற்றிலும் தவறானது. மார்பகத்தின் அளவிற்கும் பால் சுரக்கும் தன்மைக்கும் தொடர்பே கிடையாது. இதனை ஒவ்வொரு தாயும் புரிந்து கொள்ள வேண்டும்.

சில தாய்மாருக்கு சில பாரதூரமான நோய்கள் காணப்படின் உதாரணமாக, காச நோய், மலேரியா மற்றும் டைபாய்டு காய்ச்சல் போன்ற நோய்கள் இருக்கும்போது குழந்தைக்குத் தாய்ப் பால் ஊட்டலாமா? என்ற ஐயப்பாடும் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் தங்கள் டாக்டருடன் கலந்துரையாடி தாய்ப்பாலைக் கொடுக்கலாம். மேலும், குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சில தாய்மார் பாலூட்டுவதை நிறுத்த எத்தனிப்பர். இது தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அதிலுள்ள நோய் எதிர்க்கும் சக்தியான “இம்னோ குளோபிலின்’ என்ற புரதச்சத்து நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி வயிற்றுப் போக்கினைக் குணப்படுத்த பெதும் உதவுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைக்கு எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதில் சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. குழந்தை பிறந்தது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் நிலையில், தண்ணீர்கூட கொடுக்கத் தேவை இல்லை. தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது என்ற உறுதியான முடிவை ஒவ்வொரு தாயும் எடுக்க வேண்டும். புட்டிப்பாலை இயன்றவரை தவிர்க்க வேண்டும். தாய்ப்பாலுக்குப் பகரமாக வேறெந்த மாற்றுவகைத் தயாரிப்புகளான பால் மாவினை தவிர்க்க வேண்டும். 4 மாதங்கள் முதல் டாக்டர் அல்லது பிரதேச வைத்திய ஆலோசகரின் ஆலோசனைப்படி சில உணவு வகைகளைக் கொடுக்கலாம்.

மூன்றாம் உலக நாடுகளில் தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பாகவும், தாய் சேய் தொடர்பாகவும் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இலங்கையில் இத்தகைய செயற்றிட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. இலங்கையில் சுமார் 75 சதவீதமான தாய்மார் தமது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதகாலத்திற்கு தாய்பாலை மட்டுமே உணவாகக் கொடுப்பதாகவும் இது ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அண்மைய ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.

கடந்த ஏழு வருடங்களில் மாத்திரம் இந்த நிலைமை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாகவும், இதற்கு உலக சுகாதார ஸ்தாபனம், இலங்கை சுகாதார அமைச்சின் தாய்/சேய் நலன்பிரிவு உள்ளிட்ட பல அமைப்புக்களினதும் கடுமையான பிரச்சாரமே காரணம் என்றும் கருதப்படுகிறது.

நாங்கள் வாழும் காலகட்டம் வர்த்தகமயமாக்கப்பட்ட ஒரு காலகட்டமாக காணப்படுகின்றது. எனவே, குழந்தைகள் பால்மா தொடர்பான பல்வேறுபட்ட விளம்பரங்கள் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கைப் போன்ற சில நாடுகளில் இத்தகைய விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுமுள்ளன. விளம்பரங்களால் கவரப்பட்டு தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறு பால்மா வகைகளை எமது தாய்மார் கொடுக்க விளைவதையும் காணுகின்றோம். உண்மையிலேயே இது பெரும் தவறாகும். இறைவன் எமக்கருளிய வளத்தினை எமது குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தைகளின் உரிமைகளையும் பேண வேண்டியது தாய்மாரின் கடமையாகும். அதாவது, தாய்ப்பால் ஒரு குழந்தையின் உரிமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறு மறந்து செயற்படுவது இயற்கைக்கும் எமது குழந்தைக்கும் நாம் செய்யும் துரோகமாகும்....

Monday, July 30, 2012

முஸ்லிம் உலகம்: அறிவியல்

முஸ்லிம் உலகம்: அறிவியல்: ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சியில், முஸ்லிம் விஞ்ஞானிகளின்   பங்களிப்பு. நவீன உலகில் மருத்துவம்,விஞ்ஞானம்,கணிதம,வானவியல் போன்ற பல்வ...

முஸ்லிம் உலகம்: உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் - 2011

முஸ்லிம் உலகம்: உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் - 2011: உலக சனத்தொகையில் 1.6  பில்லயின் பேர் முஸ்லிம்களாவர். உலக சனத்தொகையில் 5 பேரில் ஒருவர் முஸ்லிமாவார். சர்வதேச மட் ட த்தில் மிக வே...

பெருந்தலைவர் காமராஜர் சகாப்தம்..

பெருந்தலைவர் காமராஜர் சகாப்தம்..
இன்னைக்கெல்லாம் இப்படி ஒரு சம்பவம் நடக்கும்னு நினைச்சுக்கூட பார்க்க முடியாது..

படித்துப்பாருங்கள்.. படித்து முடிக்கையில் தேகம் சிலீர்த்துவிடும்..

//இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ராஜீவ் படுகொலை தொடர்பான புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்...

“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் முக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம்
என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....

-நண்பர் ஏகலைவன். பா எழுதிய பதிவு.

"AMWAY " சில கொள்ளை உண்மைகள்

"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை  கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.
ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.
FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.
பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:
ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.
இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.
இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.
ஏமாற்றும் வழிகள்:
இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.
நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.
►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).
►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)
மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.
TOOTHBRUSH(1) - 19 ரூபாய்
HAIR OIL(500 ML) - 95 ரூபாய்
SHAVING CREAM(70G) - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்
FACE WASH -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்
மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.
நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?

► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும். (எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)
►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)
► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.
இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:
►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.
►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .
►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.
இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.
►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)
100 x 995 = 99500 ரூபாய்
இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.
3000 x 100 = 300000 ரூபாய்
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).
இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.
இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.
300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.
லட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.
இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.
இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:
தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.
நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம்...

இந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா?

Did u Forgot This Girl Sarika Shah:
Eve teasing

Photo: Did u Forgot This Girl Sarika Shah
இந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா?

Learn to do
Let us know and share
தெரியாததை தெரிந்து கொள்வோம் 
தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

Did u Forgot This Girl Sarika Shah:
Eve teasing

Eve teasing is a euphemism used in India and sometimes Pakistan, Bangladesh and Nepal[1] for public sexual harassment or molestation of women by men, with use of the word "Eve" being a reference to the biblical Eve, the first woman.[2] It implies that the woman is in some way responsible for the behaviour of the perpetrators of this act. Considered a problem related to delinquency in youth,[3] it is a form of sexual aggression that ranges in severity from sexually suggestive remarks, brushing in public places and catcalls to outright groping.[4][5][6] Sometimes it is referred to with a coy suggestion of innocent fun, making it appear innocuous with no resulting liability on the part of the perpetrator.[7] Some voluntary organisations have suggested that the expression be replaced by a more appropriate term.[8] According to them, considering the semantic roots of the term in Indian English, Eve teasing refers to the temptress nature of Eve, placing responsibility on the woman as a tease.[9]
Sexual harassment by strangers, as with any type of harassment, has been a notoriously difficult crime to prove, as perpetrators often devise ingenious ways to harass women, even though eve teasing usually occurs in public places, streets, and public transport.[10] Some feminist writers claim that this behaviour is a kind of "little rape".[11] Some guidebooks to the region warn female tourists to avoid attracting the attention of these kinds of men by wearing conservative clothing.[12][13] However, this harassment is reported both by Indian women and by conservatively-dressed foreign women.[14]

Murder charges in eve-teasing case

CHENNAI, July 26: The Chennai police on Sunday arrested nine persons including eight Youth Congress volunteers in connection with the eve-teasing incident that claimed the life of 20-year-old Sarika Shah.
Six of those accused have been charged with murder.

Recounting the sequence of events that led to the arrests a week after the incident, Police Commissioner P Kalimuthu said the Youth Congress had held a meeting at Anand Theatre in the city on July 18. Two persons Sreedhar (22), a Presidency College student and Gurunathan (28), said to be aiming for a party post had organised the crowd for the meeting. About 25 autorickshaws were engaged by them from various parts of the city for the meeting.

After the meeting ended in the afternoon, the organisers dispersed to their respective areas. Around 12.45 pm, Sarika along with her friends Rusi, Madhavi and Kavitha were walking towards a juice bar when the occupants of one of the autos returning from the Youth Congress meeting, sprayed water on the girls.Suddenly the auto swerved to the left to avoid another vehicle coming from the opposite direction. Twenty one-year-old Hari who was sitting on the edge of the seat on the left side, lost his balance and fell on Sarika as the meter rod which he was holding gave way. Under the impact, Sarika fell down hurting her head. The auto however sped away without waiting for Hari.

Immediately a TNEB worker, Nandan, caught Hari and began thrashing him but the 21-year-old escaped and hid in the bushes nearby, waiting for the commotion to die down.

Some time later, realising what had happened, two autos returned for Hari, picked him up and went away. The incident was reported to the traffic control room where it was booked as a traffic accident case. It was only on Tuesday that the news about the eve-teasing attempt broke out. Meanwhile, Sarika who had been in a coma passed away on Friday night.

The breakthrough came when police discovered that the two autos which had returned to pick up Hari displayed a Congressflag. This led to to information about the Congress meeting at Anand theatre and a search was launched for the organisers. From the organisers, the police learnt about the autos engaged for the meeting.

Four police teams led by Deputy Commissioner of Police (Triplicane) P Balasubramanian and Assistant Commissioners of Police M C Sarangan and C Sridhar reconstructed the route which the auto was presumed to have taken. Within a day, police narrowed down the route to the Sembium, Purasawalkkam and Choolaimedu areas. Three more police teams were formed to coordinate with the first four teams to nab the culprits. These route teams were sent in different directions to gather more information about the autos.

During one such encounter, police got information from autorickshaw drivers about an auto involved in an accident. They later traced the vehicle to the Kannikapuram area. The next breakthrough came when an auto driver in Sembium area informed the police team that it was Murugan who had organised the crowdfor the meeting.

Murugan referred the teams to another organiser, Sreedhar, who gave them more leads about the accident. The police zeroed in on Hari on Saturday night and took him into custody. Later, Hari informed the police about the whereabouts of the auto and gave details about the other occupants. Two persons were caught hiding in a building in the area.

Trial court verdict in Sarika Shah case upheld

“Sessions Judge had not committed any error in sentencing the accused”

CHENNAI: The Madras High Court on Friday upheld a trial court order convicting and sentencing nine persons to five years rigorous imprisonment in the Sarika Shah eve-teasing case. Justice S.K. Krishnan said the Sessions Judge had not committed any error in convicting and sentencing the accused. “The entire case on hand tells tales of woe faced by women and girls day in and day out at the hands of unruly elements,” the Judge said.

Keeping in mind the social menace to girls and women, Mr. Justice Krishnan said he would recommend to the State Government to introduce a special subject for girl students relating to the laws of the land under which they could seek remedy from legal forums and legal rights they were entitled to, such as how to react and defend themselves in the event of an incident such as eve teasing, molestation and sexual harassment; make it mandatory for all schools and colleges to conduct classes by experts at least once in a week to motivate and educate girl students on their rights and to issue instructions to police to act swiftly whenever a girl or woman approached them with complaints of such incidents without causing embarrassment to them.

The prosecution case was that on July 18, 1998, Sarika Shah, who was studying B.B.M.II year in Ethiraj College, and her college mate were proceeding to a juice shop near the institution, when a group of persons came in an autorickshaw and teased them. One among them poured water on the two. He later jumped on Sarika Shah as a result of which she fell down, sustained head injury and later died.

In April 2001, the First Additional Sessions Judge sentenced Hari and eight others to five years rigorous imprisonment and fines under various counts. Challenging this, the nine preferred appeal.

Mr. Justice Krishnan said the prosecution case could not be shaken on the ground that the accused were not identified by some witnesses before the test identification parade. Mere non-identification by prosecution witnesses in the test identification parade could not be taken as a ground to disbelieve the entire prosecution case since, admittedly, the same witnesses had identified the accused in the open court. The court found considerable force in the submission of the Government Advocate (Criminal Side), Hasan Md.Jinna. There was no substance in the contentions raised by the appellants’ counsel.

The contention that the prosecution witnesses were tutored and got knowledge about the accused’ identity through media and hence their evidence could not be relied upon, could not be sustained because independent witnesses, who did not have affinity towards the complainant or animosity against the accused identified the accused correctly. Further, the evidence of Sarika Shah’s college mates and other witnesses were cogent, clear and corroborated with one another.

இந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா?

ஈவ் டீசிங்கில் கல்லூரி மாணவி பலி: ஒன்பது பேருக்கு 5 ஆண்டு சிறை உறுதி
சென்னை: சென்னையில் `ஈவ்டீசிங்' குக்கு கல்லூரி மாணவி சரிகா ஷா பலியான வழக்கில் ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது. மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய விழிப்புணர்வை வளர்ப்பதற்காக நிபுணர்களை கொண்டு பள்ளிகள், கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷா. கல்லூரியில் இருந்து தனது தோழிகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சி கொடி கட்டப்பட்ட ஒரு ஆட்டோவில் இளைஞர்கள் வந்தனர். சரிகா ஷா மீது ஆட்டோவில் வந்த ஒருவன், தண்ணீர் பாக்கெட்டை பீச்சியடித்தான். பின்னர் ஆட்டோவில் இருந்து அவர் மீது விழுந்தான். இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த சரிகா ஷா, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐந்து நாட்களுக்குப் பின்னர் அவர் இறந்தார். கடந்த 98ம் ஆண்டு ஜூலை மாதம் இச்சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக முருகன், அரி, சரவணன், பன்னீர்செல்வம், ஷ்ரீதர், வினோத், பிரபுதாஸ், புகழேந்தி, சி. ஷ்ரீதர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கும் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டைனையை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் இவர்கள் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர்களின் செயல்களை பார்க்கும் போது, பொது இடத்தில் அவர்கள் அநாகரிகமானமுறையில் நடந்து கொண்டனர். கேலி கிண்டல் செய்யும் விதமாக நடந்து கொண்டதன் மூலம் மாணவி மரணமடைந்துள்ளார். அரசு தரப்பு சாட்சியங்கள் நம்பத்தகுந்தவை. கோர்ட்டில் குற்றவாளிகளை மூன்று மாணவிகள் அடையாளம் காட்டியுள்ளனர். சரிகா ஷாவின் வகுப்புத் தோழிகளான இந்த மூன்று பேரும் அளித்த சாட்சியங்களை பார்க்கும் போது, அவர்கள் இந்தச் சம்பவத்தை நேரில் அருகில் இருந்து பார்த்துள்ளனர். அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காட்ட அவர்கள் தவறியிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகியிருந்த போது அவர்களை அடையாளம் காட்டியுள்ளனர். இவர்கள் அளித்த சாட்சியத்தை உறுதி செய்யும் விதத்தில் வேறு இருவர் அவர்களை அடையாளம் காட்டியுள்ளனர். அரசு தரப்பு சாட்சியங்களை சந்தேகப்பட முடியாது. எனவே கீழ்கோர்ட் முடிவில் எந்த தவறும் இல்லை. ஒன்பது பேருக்கும் தண்டனை விதித்ததில் தவறில்லை. இந்த அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் ஜாமீனில் இருந்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவிக்க சரணடைய வேண்டும். பொது இடங்களில் `ஈவ்டீசிங்' செய்வது பெரிய பிரச்னையாக உள்ளது.

 பெண்களுக்கான அடிப்படை உரிமை மீறப்படுகிறது. இது ஒரு வித்யாசமான சமூக குற்றம். நாகரிகமான இந்த சமூகத்தில் இப்பிரச்னையை எளிதாக விட்டு விட முடியாது. தனது பிறந்த நாளன்று சரிகா ஷா மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டு `ஈவ்டீசிங்'கை ஒடுக்கும் விதமாக தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. 98ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி இச்சட்டம் அமலுக்கு வந்தது. இதற்கு பிறகும் கூட பெரும்பாலான சம்பவங்கள் நடந்துள்ளன. `ஈவ்டீசிங்'கால் தற்கொலை கூட செய்துள்ளனர். பெண்களும், சிறுமிகளும் இத்தகைய `ஈவ்டீசிங்'கால் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பு ஆகியவற்றை அளிக்க வேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டுள்ளது. பெண்கள் அமைதி காக்க வேண்டும் என்பதால் தற்போது எந்த பயனும் ஏற்பட போவதில்லை. மாறாக பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவானவர்களாக ஆக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை அணுக சிறுமிகளிடம் தைரியத்தை பெற்றோர்களும், அரசும் ஊட்ட வேண்டும். சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு, சில நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு இந்த கோர்ட் சில பரிந்துரைகளை வழங்குகிறது. ஈவ்டீசிங், செக்ஸ் தொந்தரவு, போன்ற சம்பவங்கள் நேரும் போது அவற்றை எப்படி அணுகுவது, பாதுகாத்து கொள்வது, அதுகுறித்த சட்டம், சட்டப்பூர்வமான உரிமைகள் ஆகியவை பற்றி பள்ளிகள், கல்லூரிகளில் விசேஷ பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும். 

மாணவிகள், பெண்களுக்கு தன்னம்பிக்கை, சுய விழிப்புணர்வு, உடல் வலுவை ஊட்டுவதற்காக வாரம் ஒரு முறையாவது நிபுணர்களை கொண்டு பள்ளிகள், கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த வேண்டும். ஈவ்டீசிங் பற்றி எந்த சிறுமியாவது, பெண்ணாவது போலீசில் புகார் அளித்தால் உடனடியாக அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காமல் அவர்களிடம் நட்பு ரீதியாக செயல்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தனது உத்தரவில் கூறியுள்ளார். பெண்களுக்கே உரித்தான அடக்கம், அமைதியினால் சரிகாஷாவின் உயிரும் அடங்கி விட்டது' என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி கிருஷ்ணன் தனது உத்தரவில், "இளைய சமுதாயத்தினர் மத்தியில் அடக்கம், அமைதி புகட்டப்படுகிறது. சமூக விரோதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்படாததால் சரிகாஷாவின் உயிர் போய் விட்டது. தண்ணீரை பீய்ச்சியடிக்கும் போதே துணிச்சலாக சரிகாஷா எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்திருப்பதற்குப் பதில், அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அவரது அமைதியை கண்டு குற்றவாளிகளுக்கு மேலும் தைரியம் வந்து அவர் மீது விழுந்துள்ளனர். இதன் விளைவாக அவரது வாழ்க்கையே அடங்கி விட்டது. சமூக விரோதிகளால் பெண்களும், சிறுமிகளும் எதிர்கொள்ளும் துன்பங்களை இந்த வழக்கு சித்தரிக்கிறது. எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கான சமூக பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

மாண‌வி சரிகா ஷா பலி: 9 பே‌ரி‌ன் தண்டனையை உறுதி செ‌ய்தது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!

ஈ‌வ்-டீ‌சி‌ங்‌கி‌ல் மாண‌வி ச‌ரிகா ஷா ப‌லியாக காரணமாக இரு‌ந்த 9 பேரு‌க்கு ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌‌ளி‌த்த 5 ஆ‌ண்டு ‌சிறை த‌ண்டனையை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உறு‌தி செ‌ய்து‌ள்ளது.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சரிகா ஷா. இவ‌ர் கடந்த 98ம் ஆண்டு கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ர். அ‌ப்போது, ஆட்டோவில் வந்த வாலிபர்கள் மாணவி சரிகா ஷாவை ஈவ்-டீசிங் செய்தனர். இ‌தி‌ல் நிலை தடுமாறி ‌கீ‌ழே ‌விழு‌ந்த ச‌ரிகா ஷாவு‌க்கு தலையில் பல‌த்த அடி ஏ‌ற்‌ப‌ட்டு ‌நி‌க‌‌ழ்‌விட‌த்‌திலேயே இ‌ற‌ந்தா‌ர்.

இத‌ற்கு காரணமான கு‌ற்றவா‌ளிக‌ள் ‌வினோ‌த், ஸ்ரீத‌ர், அரி, புகழே‌ந்‌தி, சரவணன், முருக‌ன், ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம், ‌பிரபுதா‌ஸ் ம‌ற்றொரு ஸ்ரீத‌ர் ஆ‌கியோரை எழு‌ம்பூ‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் செ‌ய்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் அவர்கள் ‌பிணை‌யி‌ல் ‌விடுதலையா‌யின‌ர்.

இ‌ந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செசன்சு ‌நீ‌திம‌ன்ற‌‌ம், கு‌ற்றவா‌ளிக‌ள் 9 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் ‌சிறை தண்டனை விதி‌த்து கட‌ந்த 2001ஆ‌ம் ஆ‌ண்டு ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 9 பேரும் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் அப்பீல் செய்தனர்.

இந்த வழக்‌கி‌ல் இன‌்று உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி எஸ்.கே.கிருஷ்ணன் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர். அ‌தி‌ல், குற்றவாளிகள் 9 பேரும் ஈவ்டீசிங் செய்ததாலேயே மாணவி சரிகா ஷா பலியாகி உள்ளார். எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு ‌சிறை தண்டனையை உறுதி செய்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி- கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை அரசு கற்றுக் கொடுக்க வேண்டும். பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் அரசு பாட‌த் ‌தி‌ட்ட‌ங்களை கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் காவ‌ல்துறை‌யின‌ர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று ‌நீ‌திப‌தி ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

சரிகா ஷா கொலை வழக்கில் 9 பேருக்கு சிறைத் தண்டனை உறுதி:

சென்னை: ஈவ் டீசிங்கில் சென்னை மாணவி சரிகா ஷா கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்தவர் சரிகா. இவர் எத்திராஜ் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்ப வெளியே வந்தார்.

அப்போது ஆட்டோவில் வந்த ஒரு காலிக் கும்பல் சரிகா ஷா மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலாட்டா செய்தனர். அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க ஓடியபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார் சரிகா ஷா.

தமிழகத்ைத பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹரி, புகழேந்தி, பிரபுதாஸ், வினோத், ஸ்ரீதர், இன்னொரு ஸ்ரீதர், பன்னீர் செல்வம், சரவணன், முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.  ஆனால் அத்தனை பேரும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.

இவர்கள் மீது சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 2001ம் ஆண்டு 9 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து 9 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் விசாரித்தார். இதில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, குற்றவாளிகள் 9 பேருக்கும் விதிக்கப்பட்ட தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தனது தீர்ப்பில் நீதிபதி கிருஷ்ணன் கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவது வேதனை தரக்கூடியது. 9 பேரும் ஈவ்டீசிங் செய்ததாலேயே மாணவி சரிகாஷா பலியாகி உள்ளார்.

எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்கிறேன்.

இந்த வழக்கில் அரசுக்கு சில பரிந்துரைகளை சொல்ல விரும்புகிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி-கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும், பள்ளி, கல்லூரி பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் வகுப்புகளை நடத்த வேண்டும். இதற்காக அரசு பாடம் கொண்டு வர வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நீதிபதி.


PDF File Document:

https://docs.google.com/viewer?a=v&q=cache:2luVGSl2JfEJ:www.cscsarchive.org:8081/MediaArchive/audience.nsf/b1bc9409c64d85a06525698d0025dc3c/4f42ff30972ae066652572fe0028f8c1/%24FILE/A0200352.pdf+sarika+shah+death&hl=en&gl=ae&pid=bl&srcid=ADGEESgcwfTwRDixeuD1scGuLuwainxIo4UAD-cb5FGs8q2c87a1ySJP2sfQDCgOsuXZmjLfZO-BrWq6oojgyvcQfVhNDAEhLEQ5NKFclbErdv427z0RYikOHQyEUG2u2AxNtdO8AyQ_&sig=AHIEtbTTZC4lmD3ip3Wb1uxUE9L039-skw

Proof:
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0803/14/1080314052_1.htm

http://tamil.oneindia.in/news/2008/03/14/tn-hc-confirms-lower-courts-judgement-in-sarika.html

http://www.financialexpress.com/news/pointless-death-a-time-to-demand-better-governance/187348/3

http://www.expressindia.com/news/ie/daily/19980727/20850084.html

http://tamilan-sundarmeenakshi.blogspot.com/2008/03/5.html

Did u Forgot This Girl Sarika Shah
இந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா?

Learn to do
Let us know and share
தெரியாததை தெரிந்து கொள்வோம் 
தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம் 
Eve teasing is a euphemism used in India and sometimes Pakistan, Bangladesh and Nepal[1] for public sexual harassment or molestation of women by men, with use of the word "Eve" being a reference to the biblical Eve, the first woman.[2] It implies that the woman is in some way responsible for the behaviour of the perpetrators of this act. Considered a problem related to delinquency in youth,[3] it is a form of sexual aggression that ranges in severity from sexually suggestive remarks, brushing in public places and catcalls to outright groping.[4][5][6] Sometimes it is referred to with a coy suggestion of innocent fun, making it appear innocuous with no resulting liability on the part of the perpetrator.[7] Some voluntary organisations have suggested that the expression be replaced by a more appropriate term.[8] According to them, considering the semantic roots of the term in Indian English, Eve teasing refers to the temptress nature of Eve, placing responsibility on the woman as a tease.[9]
Sexual harassment by strangers, as with any type of harassment, has been a notoriously difficult crime to prove, as perpetrators often devise ingenious ways to harass women, even though eve teasing usually occurs in public places, streets, and public transport.[10] Some feminist writers claim that this behaviour is a kind of "little rape".[11] Some guidebooks to the region warn female tourists to avoid attracting the attention of these kinds of men by wearing conservative clothing.[12][13] However, this harassment is reported both by Indian women and by conservatively-dressed foreign women.[14]

Murder charges in eve-teasing case

CHENNAI, July 26: The Chennai police on Sunday arrested nine persons including eight Youth Congress volunteers in connection with the eve-teasing incident that claimed the life of 20-year-old Sarika Shah.
Six of those accused have been charged with murder.

Recounting the sequence of events that led to the arrests a week after the incident, Police Commissioner P Kalimuthu said the Youth Congress had held a meeting at Anand Theatre in the city on July 18. Two persons Sreedhar (22), a Presidency College student and Gurunathan (28), said to be aiming for a party post had organised the crowd for the meeting. About 25 autorickshaws were engaged by them from various parts of the city for the meeting.

After the meeting ended in the afternoon, the organisers dispersed to their respective areas. Around 12.45 pm, Sarika along with her friends Rusi, Madhavi and Kavitha were walking towards a juice bar when the occupants of one of the autos returning from the Youth Congress meeting, sprayed water on the girls.Suddenly the auto swerved to the left to avoid another vehicle coming from the opposite direction. Twenty one-year-old Hari who was sitting on the edge of the seat on the left side, lost his balance and fell on Sarika as the meter rod which he was holding gave way. Under the impact, Sarika fell down hurting her head. The auto however sped away without waiting for Hari.

Immediately a TNEB worker, Nandan, caught Hari and began thrashing him but the 21-year-old escaped and hid in the bushes nearby, waiting for the commotion to die down.

Some time later, realising what had happened, two autos returned for Hari, picked him up and went away. The incident was reported to the traffic control room where it was booked as a traffic accident case. It was only on Tuesday that the news about the eve-teasing attempt broke out. Meanwhile, Sarika who had been in a coma passed away on Friday night.

The breakthrough came when police discovered that the two autos which had returned to pick up Hari displayed a Congressflag. This led to to information about the Congress meeting at Anand theatre and a search was launched for the organisers. From the organisers, the police learnt about the autos engaged for the meeting.

Four police teams led by Deputy Commissioner of Police (Triplicane) P Balasubramanian and Assistant Commissioners of Police M C Sarangan and C Sridhar reconstructed the route which the auto was presumed to have taken. Within a day, police narrowed down the route to the Sembium, Purasawalkkam and Choolaimedu areas. Three more police teams were formed to coordinate with the first four teams to nab the culprits. These route teams were sent in different directions to gather more information about the autos.

During one such encounter, police got information from autorickshaw drivers about an auto involved in an accident. They later traced the vehicle to the Kannikapuram area. The next breakthrough came when an auto driver in Sembium area informed the police team that it was Murugan who had organised the crowdfor the meeting.

Murugan referred the teams to another organiser, Sreedhar, who gave them more leads about the accident. The police zeroed in on Hari on Saturday night and took him into custody. Later, Hari informed the police about the whereabouts of the auto and gave details about the other occupants. Two persons were caught hiding in a building in the area.

Trial court verdict in Sarika Shah case upheld

“Sessions Judge had not committed any error in sentencing the accused”

CHENNAI: The Madras High Court on Friday upheld a trial court order convicting and sentencing nine persons to five years rigorous imprisonment in the Sarika Shah eve-teasing case. Justice S.K. Krishnan said the Sessions Judge had not committed any error in convicting and sentencing the accused. “The entire case on hand tells tales of woe faced by women and girls day in and day out at the hands of unruly elements,” the Judge said.

Keeping in mind the social menace to girls and women, Mr. Justice Krishnan said he would recommend to the State Government to introduce a special subject for girl students relating to the laws of the land under which they could seek remedy from legal forums and legal rights they were entitled to, such as how to react and defend themselves in the event of an incident such as eve teasing, molestation and sexual harassment; make it mandatory for all schools and colleges to conduct classes by experts at least once in a week to motivate and educate girl students on their rights and to issue instructions to police to act swiftly whenever a girl or woman approached them with complaints of such incidents without causing embarrassment to them.

The prosecution case was that on July 18, 1998, Sarika Shah, who was studying B.B.M.II year in Ethiraj College, and her college mate were proceeding to a juice shop near the institution, when a group of persons came in an autorickshaw and teased them. One among them poured water on the two. He later jumped on Sarika Shah as a result of which she fell down, sustained head injury and later died.

In April 2001, the First Additional Sessions Judge sentenced Hari and eight others to five years rigorous imprisonment and fines under various counts. Challenging this, the nine preferred appeal.

Mr. Justice Krishnan said the prosecution case could not be shaken on the ground that the accused were not identified by some witnesses before the test identification parade. Mere non-identification by prosecution witnesses in the test identification parade could not be taken as a ground to disbelieve the entire prosecution case since, admittedly, the same witnesses had identified the accused in the open court. The court found considerable force in the submission of the Government Advocate (Criminal Side), Hasan Md.Jinna. There was no substance in the contentions raised by the appellants’ counsel.

The contention that the prosecution witnesses were tutored and got knowledge about the accused’ identity through media and hence their evidence could not be relied upon, could not be sustained because independent witnesses, who did not have affinity towards the complainant or animosity against the accused identified the accused correctly. Further, the evidence of Sarika Shah’s college mates and other witnesses were cogent, clear and corroborated with one another.

இந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா?

ஈவ் டீசிங்கில் கல்லூரி மாணவி பலி: ஒன்பது பேருக்கு 5 ஆண்டு சிறை உறுதி
சென்னை: சென்னையில் `ஈவ்டீசிங்' குக்கு கல்லூரி மாணவி சரிகா ஷா பலியான வழக்கில் ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது. மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய விழிப்புணர்வை வளர்ப்பதற்காக நிபுணர்களை கொண்டு பள்ளிகள், கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷா. கல்லூரியில் இருந்து தனது தோழிகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சி கொடி கட்டப்பட்ட ஒரு ஆட்டோவில் இளைஞர்கள் வந்தனர். சரிகா ஷா மீது ஆட்டோவில் வந்த ஒருவன், தண்ணீர் பாக்கெட்டை பீச்சியடித்தான். பின்னர் ஆட்டோவில் இருந்து அவர் மீது விழுந்தான். இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த சரிகா ஷா, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐந்து நாட்களுக்குப் பின்னர் அவர் இறந்தார். கடந்த 98ம் ஆண்டு ஜூலை மாதம் இச்சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக முருகன், அரி, சரவணன், பன்னீர்செல்வம், ஷ்ரீதர், வினோத், பிரபுதாஸ், புகழேந்தி, சி. ஷ்ரீதர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கும் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டைனையை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் இவர்கள் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர்களின் செயல்களை பார்க்கும் போது, பொது இடத்தில் அவர்கள் அநாகரிகமானமுறையில் நடந்து கொண்டனர். கேலி கிண்டல் செய்யும் விதமாக நடந்து கொண்டதன் மூலம் மாணவி மரணமடைந்துள்ளார். அரசு தரப்பு சாட்சியங்கள் நம்பத்தகுந்தவை. கோர்ட்டில் குற்றவாளிகளை மூன்று மாணவிகள் அடையாளம் காட்டியுள்ளனர். சரிகா ஷாவின் வகுப்புத் தோழிகளான இந்த மூன்று பேரும் அளித்த சாட்சியங்களை பார்க்கும் போது, அவர்கள் இந்தச் சம்பவத்தை நேரில் அருகில் இருந்து பார்த்துள்ளனர். அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காட்ட அவர்கள் தவறியிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகியிருந்த போது அவர்களை அடையாளம் காட்டியுள்ளனர். இவர்கள் அளித்த சாட்சியத்தை உறுதி செய்யும் விதத்தில் வேறு இருவர் அவர்களை அடையாளம் காட்டியுள்ளனர். அரசு தரப்பு சாட்சியங்களை சந்தேகப்பட முடியாது. எனவே கீழ்கோர்ட் முடிவில் எந்த தவறும் இல்லை. ஒன்பது பேருக்கும் தண்டனை விதித்ததில் தவறில்லை. இந்த அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் ஜாமீனில் இருந்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவிக்க சரணடைய வேண்டும். பொது இடங்களில் `ஈவ்டீசிங்' செய்வது பெரிய பிரச்னையாக உள்ளது.

பெண்களுக்கான அடிப்படை உரிமை மீறப்படுகிறது. இது ஒரு வித்யாசமான சமூக குற்றம். நாகரிகமான இந்த சமூகத்தில் இப்பிரச்னையை எளிதாக விட்டு விட முடியாது. தனது பிறந்த நாளன்று சரிகா ஷா மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டு `ஈவ்டீசிங்'கை ஒடுக்கும் விதமாக தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. 98ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி இச்சட்டம் அமலுக்கு வந்தது. இதற்கு பிறகும் கூட பெரும்பாலான சம்பவங்கள் நடந்துள்ளன. `ஈவ்டீசிங்'கால் தற்கொலை கூட செய்துள்ளனர். பெண்களும், சிறுமிகளும் இத்தகைய `ஈவ்டீசிங்'கால் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பு ஆகியவற்றை அளிக்க வேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டுள்ளது. பெண்கள் அமைதி காக்க வேண்டும் என்பதால் தற்போது எந்த பயனும் ஏற்பட போவதில்லை. மாறாக பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவானவர்களாக ஆக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை அணுக சிறுமிகளிடம் தைரியத்தை பெற்றோர்களும், அரசும் ஊட்ட வேண்டும். சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு, சில நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு இந்த கோர்ட் சில பரிந்துரைகளை வழங்குகிறது. ஈவ்டீசிங், செக்ஸ் தொந்தரவு, போன்ற சம்பவங்கள் நேரும் போது அவற்றை எப்படி அணுகுவது, பாதுகாத்து கொள்வது, அதுகுறித்த சட்டம், சட்டப்பூர்வமான உரிமைகள் ஆகியவை பற்றி பள்ளிகள், கல்லூரிகளில் விசேஷ பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

மாணவிகள், பெண்களுக்கு தன்னம்பிக்கை, சுய விழிப்புணர்வு, உடல் வலுவை ஊட்டுவதற்காக வாரம் ஒரு முறையாவது நிபுணர்களை கொண்டு பள்ளிகள், கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த வேண்டும். ஈவ்டீசிங் பற்றி எந்த சிறுமியாவது, பெண்ணாவது போலீசில் புகார் அளித்தால் உடனடியாக அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காமல் அவர்களிடம் நட்பு ரீதியாக செயல்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தனது உத்தரவில் கூறியுள்ளார். பெண்களுக்கே உரித்தான அடக்கம், அமைதியினால் சரிகாஷாவின் உயிரும் அடங்கி விட்டது' என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி கிருஷ்ணன் தனது உத்தரவில், "இளைய சமுதாயத்தினர் மத்தியில் அடக்கம், அமைதி புகட்டப்படுகிறது. சமூக விரோதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்படாததால் சரிகாஷாவின் உயிர் போய் விட்டது. தண்ணீரை பீய்ச்சியடிக்கும் போதே துணிச்சலாக சரிகாஷா எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்திருப்பதற்குப் பதில், அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அவரது அமைதியை கண்டு குற்றவாளிகளுக்கு மேலும் தைரியம் வந்து அவர் மீது விழுந்துள்ளனர். இதன் விளைவாக அவரது வாழ்க்கையே அடங்கி விட்டது. சமூக விரோதிகளால் பெண்களும், சிறுமிகளும் எதிர்கொள்ளும் துன்பங்களை இந்த வழக்கு சித்தரிக்கிறது. எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கான சமூக பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

மாண‌வி சரிகா ஷா பலி: 9 பே‌ரி‌ன் தண்டனையை உறுதி செ‌ய்தது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!

ஈ‌வ்-டீ‌சி‌ங்‌கி‌ல் மாண‌வி ச‌ரிகா ஷா ப‌லியாக காரணமாக இரு‌ந்த 9 பேரு‌க்கு ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌‌ளி‌த்த 5 ஆ‌ண்டு ‌சிறை த‌ண்டனையை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உறு‌தி செ‌ய்து‌ள்ளது.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சரிகா ஷா. இவ‌ர் கடந்த 98ம் ஆண்டு கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ர். அ‌ப்போது, ஆட்டோவில் வந்த வாலிபர்கள் மாணவி சரிகா ஷாவை ஈவ்-டீசிங் செய்தனர். இ‌தி‌ல் நிலை தடுமாறி ‌கீ‌ழே ‌விழு‌ந்த ச‌ரிகா ஷாவு‌க்கு தலையில் பல‌த்த அடி ஏ‌ற்‌ப‌ட்டு ‌நி‌க‌‌ழ்‌விட‌த்‌திலேயே இ‌ற‌ந்தா‌ர்.

இத‌ற்கு காரணமான கு‌ற்றவா‌ளிக‌ள் ‌வினோ‌த், ஸ்ரீத‌ர், அரி, புகழே‌ந்‌தி, சரவணன், முருக‌ன், ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம், ‌பிரபுதா‌ஸ் ம‌ற்றொரு ஸ்ரீத‌ர் ஆ‌கியோரை எழு‌ம்பூ‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் செ‌ய்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் அவர்கள் ‌பிணை‌யி‌ல் ‌விடுதலையா‌யின‌ர்.

இ‌ந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செசன்சு ‌நீ‌திம‌ன்ற‌‌ம், கு‌ற்றவா‌ளிக‌ள் 9 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் ‌சிறை தண்டனை விதி‌த்து கட‌ந்த 2001ஆ‌ம் ஆ‌ண்டு ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 9 பேரும் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் அப்பீல் செய்தனர்.

இந்த வழக்‌கி‌ல் இன‌்று உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி எஸ்.கே.கிருஷ்ணன் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர். அ‌தி‌ல், குற்றவாளிகள் 9 பேரும் ஈவ்டீசிங் செய்ததாலேயே மாணவி சரிகா ஷா பலியாகி உள்ளார். எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு ‌சிறை தண்டனையை உறுதி செய்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி- கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை அரசு கற்றுக் கொடுக்க வேண்டும். பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் அரசு பாட‌த் ‌தி‌ட்ட‌ங்களை கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் காவ‌ல்துறை‌யின‌ர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று ‌நீ‌திப‌தி ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

சரிகா ஷா கொலை வழக்கில் 9 பேருக்கு சிறைத் தண்டனை உறுதி:

சென்னை: ஈவ் டீசிங்கில் சென்னை மாணவி சரிகா ஷா கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்தவர் சரிகா. இவர் எத்திராஜ் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்ப வெளியே வந்தார்.

அப்போது ஆட்டோவில் வந்த ஒரு காலிக் கும்பல் சரிகா ஷா மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலாட்டா செய்தனர். அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க ஓடியபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார் சரிகா ஷா.

தமிழகத்ைத பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹரி, புகழேந்தி, பிரபுதாஸ், வினோத், ஸ்ரீதர், இன்னொரு ஸ்ரீதர், பன்னீர் செல்வம், சரவணன், முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஆனால் அத்தனை பேரும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.

இவர்கள் மீது சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 2001ம் ஆண்டு 9 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து 9 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் விசாரித்தார். இதில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, குற்றவாளிகள் 9 பேருக்கும் விதிக்கப்பட்ட தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தனது தீர்ப்பில் நீதிபதி கிருஷ்ணன் கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவது வேதனை தரக்கூடியது. 9 பேரும் ஈவ்டீசிங் செய்ததாலேயே மாணவி சரிகாஷா பலியாகி உள்ளார்.

எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்கிறேன்.

இந்த வழக்கில் அரசுக்கு சில பரிந்துரைகளை சொல்ல விரும்புகிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி-கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும், பள்ளி, கல்லூரி பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் வகுப்புகளை நடத்த வேண்டும். இதற்காக அரசு பாடம் கொண்டு வர வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நீதிபதி.


Sunday, July 29, 2012

விடி ஸஹர் என்பதே இல்லை..........


தமிழகத்தின் சில பகுதிகளில் விடி ஸஹர் என்ற வழக்கம் உள்ளது.
உறக்கம் மேலிடுவதால் சில நேரங்களில் ஸஹர் நேரம் முடிந்த பிறகு தான் சிலர் விழிப்பார்கள். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு இல்லாததினால் நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.

ஸஹர் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அவசரமாக ஒரு குவளைத் தண்ணீர் குடித்து விட்டு (இதைத் தான் விடி ஸஹர் என்கின்றனர்) நோன்பு நோற்பதாக நிய்யத் செய்து கொள்கின்றனர்.

சுபுஹ் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது என்று கட்டளை உள்ளது. எந்த நேரத்தில் சாப்பிடவோ பருகவோ கூடாதோ அந்த நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் ஒரு நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.

இதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டால் இந்த நிலையை நாம் தவிர்த்து விடலாம்.

இரவில் படுக்கைக்குச் செல்லும் போதே, இன்று நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டுப் படுக்க வேண்டும். அல்லாஹ், ஸஹர் செய்வதற்கு ஏற்ப விழிப்பை ஏற்படுத்தினால் ஸஹர் செய்யலாம்.
அவ்வாறு விழிக்காமல் சுபுஹு நேரத்திலோ அது கடந்த பின்னரோ விழித்தால் எதையும் உண்ணாமல் நோன்பைத் தொடரலாம். ஏனெனில் இரவிலேயே நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டோம்.

அதிகமாக உண்பது

நோன்பு துறக்கும் போதும், ஸஹர் நேரத்திலும் அதிக சுவைகளுடனும், அதிக அளவிலும் உணவு உட்கொள்ளும் வழக்கம் உள்ளது.

மார்க்க அறிவு இல்லாத சூஃபிய்யாக்கள் எனும் அறிவிலிகள் இந்தப் பழக்கத்தைக் குறை கூறுகின்றனர். சுவையாக உண்பதால் நோன்பின் நோக்கமே பாழாகி விட்டதாகவும் எழுதி வைத்துள்ளனர்.

நோன்பின் நோக்கம் உணவின் அளவையும், சுவையையும் குறைத்துக் கொள்வதற்கான பயிற்சி அல்ல! மாறாக இறையச்சத்தை அதிகரிப்பதற்கான பயிற்சியே என்பதை முன்னரே நாம் விளக்கியுள்ளோம். இந்தத் தத்துவத்திற்கு இது மாறாகவுள்ளது.
நமது சக்திக்கும், வசதிக்கும் தக்கவாறு எத்தனை வகைகளிலும் உணவு உண்ண நமக்கு அனுமதி உள்ளது.

நோன்பு துறந்த பின்பும் நோன்பாகவே இருங்கள் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.

அதிக அளவோ, அதிக சுவையோ கூடாது என்றால் அதைக் கூற வேண்டிய அதிகாரம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் தான் உள்ளது. மார்க்க அறிவற்ற சூஃபிய்யாக்களுக்கு இல்லை.
அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

வகை வகையான உணவில் நாட்டமிருந்தும், எனக்காக அந்த ஆசையை எப்படி என் அடியான் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்று அல்லாஹ் மகிழ்ச்சியடைவானே தவிர அவன் அனுமதித்ததைச் செய்யும் போது அதிருப்தி அடைய மாட்டான்.

பிரிட்டனின் மத ஒப்பீட்டு ஆய்வாளர் புனித இஸ்லாத்தை ஏற்றார்


பிரித்தானியாவின் பிரபல மத ஒப்பீட்டு ஆய்வாளரான அன்னா கென்னடி புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பலஸ்தீனுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டுள்ள அவர் பலஸ்தீன் முஸ்லிம் புலமையாளர்கள் சங்கத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக கூறியுள்ளார்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இவர் தனது இந்த அறிவிப்பை ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாக அறிவித்தார். 39 வயதுடைய அன்னா கென்னடி, லண்டன் பல்கலைக்கழகத்தில் மத ஒப்பீட்டுத் துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்து வருகின்ற அதேவேளை விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

பலஸ்தீன் முஸ்லிம் புலமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெய்ஹ் சாலிம் சலாமா அன்னா கென்னடிக்கு அல்குர்ஆன் பிரதியையும் இதன்போது அள்பளிப்புச் செய்துள்ளார்.

→║Growing Beards is Mandatory in Islam║←


Those who genuinely wish to learn and practice what is right, here are sufficient proofs from the Qur'an, Ahadith and learned scholars. At an age when moral and spiritual decline is at its peak, acting upon a single prophetic tradition could insure success in the hereafter.

Keeping the beard has been the practice of the Prophet Muhammad (Sallallahu Alayhi Wasallam), as it has also been the practice of the earlier Prophets before him.

When Musa (alaihis salaam) returned from his journey of Mount 'Tur' and found the Israelites engrossed in idolatry, he became furious and in severe anger he pulled the beard of his deputy (and brother) Haroon (alaihis salaam) who said:

"O son of my mother, seize me not by my beard or by my hair." [Qur'an 20:94]

In the books of Ahadith there are numerous Hadith which describe the importance of beard.

Importance of the Beard in Ahadith:

Sahih Bukhari

Narrated Nafi' (Radhiallaahu Án) "Ibn Umar (Radhiallaahu Án) said, The Prophet (Sallallaahu Álayhi Wasallam) said, "Do the opposite of what the pagans do. Keep the beards and cut the moustaches short." Whenever Ibn ‘Umar performed the Hajj or ‘Umra, he used to hold his beard with his hand and cut whatever moustaches. Ibn Umar used to cut his moustache so short that the whiteness of his skin (above the upper lip) was visible, and he used to cut (the hair) between his moustaches and his beard. (Volume 7, Book #72, Hadith #780)

Narrated Ibn ‘Umar: Allah’s Apostle said, “Cut the moustaches short and leave the beard (as it is).” (Book#72, Hadith #781)

Narrated Abu Sa'id Al-Khudri (Radhiallaahu Án): Rasulullah (Sallallaahu Álayhi Wasallam) said, “There will emerge from the East some people who will recite the Qur’an but it will not exceed their throats and who will go out of (renounce) the religion (Islam) as an arrow passes through the game, and they will never come back to it unless the arrow, comes back to the middle of the bow (by itself) (i.e., impossible). The people asked, “What will their signs be?” He said, “Their sign will be the habit of shaving (of their beards). (Fateh Al-Bari, Page 322, Vol. 17th) (Volume 9, Book #93, Hadith #651)

Sahih Muslim
Ibn Umar said: The Apostle of Allah (may peace be upon him) said: Trim closely the moustache, and let thebeard grow. (Book #002, Hadith #0498)

Ibn Umar said: The Apostle of Allah (may peace be upon him) ordered us to trim the moustache closely and spare the beard. (Book #002, Hadith #0499)

Ibn Umar said: The Messenger of Allah (may peace be upon him) said: Act against the polytheists, trim closely the moustache and grow beard. (Book #002, Hadith #0500)

Narrated Abu Hurayrah (Radhiallaahu Án) "Rasulullah (Sallallaahu Álayhi Wasallam) said: Trim closely the moustache, and grow beard, and thus act against the fire-worshippers. (Book #002, Hadith #0501)

Narrated Aisha (Radhiallaahu Ánha): Rasulullah (Sallallaahu Álayhi Wasallam) said: “Ten things are part of the fitrah: cutting the moustache, letting the beard grow, cleaning the teeth with a siwaak, rinsing the nose with water, cutting one’s nails, washing between the finger-joints, plucking the armpit hairs, shaving the pubic hair and cleaning one’s private parts with water.” (Reported by Imaan Ahmad, Muslim and the four authors of Sunan, from the hadith of ‘Aisha (Radhiallaahu Ánha). (Book #002, Hadith #0502)

Sunan Abu Dawood
Narrated Aisha (Radhiallaahu Ánha), The Apostle of Allah (Sallallaahu Álayhi Wasallam) said: Ten are the acts according to fitrah (nature): clipping the moustache, letting the beard grow, using the tooth-stick, cutting the nails, washing the finger joints, plucking the hair under the arm-pits, shaving the pubes, and cleansing one’s private parts (after easing or urinating) with water. The narrator said: I have forgotten the tenth, but it may have been rinsing the mouth. (Book #1, Hadith #0052)

Malik’s Muwatta
Yahya related to me from Malik from Abu Bakr ibn Nafi from his father Nafi from Abdullah ibn Umar that the Messenger of Allah, may Allah bless him and grant him peace, ordered the moustache to be trimmed and the beard to be left. (Book #51, Hadith #51.1.1)

Order to Follow Prophet (Sallallaahu Alayhi Wasallam) in the Quran:

It is very clear that following Sunnah of Rasulullah (may Allah’s blessings and peace be upon him) is not optional but obligatory as Allah has ordered us to do so. If Allah orders something in the Quran, then it becomes obligatory on us to obey that order.

O you who have believed, obey Allah and obey the Messenger and those in authority among you. And if you disagree over anything, refer it to Allah and the Messenger, if you should believe in Allah and the Last Day. That is the best [way] and best in result. [Qur'an 4:59]

O you who have believed, obey Allah and His Messenger and do not turn from him while you hear [his order]. [Qur'an 8:20]

O you who have believed, respond to Allah and to the Messenger when he calls you to that which gives you life. And know that Allah intervenes between a man and his heart and that to Him you will be gathered. [Qur'an 8:24]

There has certainly been for you in the Messenger of Allah an excellent pattern for anyone whose hope is in Allah and the Last Day and [who] remembers Allah often. [Qur'an 33:21]

And whatever the Messenger has given you - take; and what he has forbidden you - refrain from. And fear Allah ; indeed, Allah is severe in penalty. [Qur'an 59:7]

And obey Allah and the Messenger that you may obtain mercy. [Qur'an 3:132]

O you who have believed, obey Allah and obey the Messenger and do not invalidate your deeds. [Qur'an 47:33]

”And let those who oppose the Messenger’s (Muhammad SAW) commandment (i.e. his Sunnah legal ways, orders, acts of worship, statements, etc.) beware, lest some Fitnah (disbelief, trials, afflictions, earthquakes, killing, overpowered by a tyrant, etc.) befall them or a painful torment be inflicted on them.” [Qur'an 24:63]

It is reported in the Tabrani Vol 3 Page 90/9, that Kaiser, the King of Persia, after having read the letter sent by the Rasulullah (Sallallaahu Álayhi Wasallam) inviting him to accept the faith of Islam, ordered his sub-ordinate Bayon (Badhun), the governor of Yemen, to send two persons to bring the RASUL of Islam before him. Bayan accordingly sent two messengers who according to the fashion of those days were clean shaven and having long mustaches. When they appeared on the scene toward the Rasulullah (Sallallaahu Álayhi Wasallam), he very much disliked the unnatural appearances of those persons and said; “Woe to you, Woe to you. Who ordered you to adopt such appearances? They said; “Our lord Kaiser”. Rasulullah (Sallallaahu Álayhi Wasallam) then told them “My Rabb COMMANDED me to lengthen my beard and clip my mustaches”.

The opinions of the great scholars about the beard:

Imam Abu Hanifa (Rahimahullah):

Imam Muhammed (Rahimahullah) writes in his book "kitabul Aathaar" where he relates from Imam Abu Hanifa (RA) who relates from Hazrat Haytham (Rahimahullah) who relates from Ibn Umar (RA) that he (Ibn Umar) used to hold his beard in his hand and cut off which was longer. Imam Muhammed (Rahimahullah) says that this what we follow and this was the decision of Imam Abu Hanifa. Therefore. according to Hanafies, to shorten the beard less that a FIST LENGHT is HARAAM and on this is IJMA (consensus of opinion).

Imam Shafi (Rahimahullah):

Imam Shafi (Rahimahullah) in his Kitabul Umm states, "To shave the beard is HARAAM." (Shari Minhaj dar Shara Fasi Aqueeqa)

Imam Malik (Rahimahullah):

Sheikh Ahmad Nafarawi Maliki in the commentary of Imam Abu Zayed's booklet states, "to shave the beard is without doubt haraam according to all Imams." It is also mentioned in "Tamheed" which is a commentary of "Muatta"(Sunnan Imam Malik (RA) that to shave the beard is HARAAM and among males the only ones to resort to this practice (of shaving) are the HERMAPHRODITES (persons who posses both male and female features and characteristics). (From the book "Tamheed")

Imam Ahmed bin Hanbal (Rahimahullah):

The Hambalies in teh famous Al-Khanie a Hambali Fatawa Kitab state that "to grow the beard is essential and to shave it is HARAAM." Also in the Hanbali Mathab books "Sharahul Muntahaa" and "Sharr Manzoomatul Aadaab", it is stated "The most accepted views is that it is HARAAM (prohibited to shave the beard)."

As Muslims, we should adopt this very important Sunnah and encourage others with Hikmah (wisdom) to do so. The Sunnah of Rasulullah (may Allah’s blessings and peace be upon him) not only will help us to gain rewards and mercy of Allah but also help us protect our Imaan. If children are forced to shave their beard by their parents, the children must oppose them, for there is no obedience to anyone when the rules of Shari’ah are asked to be violated. May Allah give us the ability to adopt complete Sunnah in our lives. Ameen.