Digital Time and Date

Welcome Note

Saturday, December 1, 2012

வரலாற்றில் இன்று

டிசெம்பர் 01

1878: அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு முதலாவது தொலைபேசி இணைப்பு கொடுக்கப்பட்டது.

1891: ஜேம்ஸ் நைஸ்மித் என்பவர் கூடைப்பந்தாட்டத்தை உருவாக்கினார்.

1955: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பின பெண், பஸ்களில் வெள்ளையினத்தவர்களுக்கு கறுப்பினத்தவர்கள் தமது ஆசனங்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை மீறி வெள்ளையினத்தவருக்கு ஆசனம் கொடுக்க மறுத்தார். இச்சம்பவம் அமெரிக்க கறுப்பினத்தவர்களின் சிவில் உரிமை போராட்டத்தில்தில் திருப்புமுனையாக அமைந்தது.

1963: நாகலாந்து இந்தியாவின் 16ஆவது மாநிலமாகியது.

1971: பாகிஸ்தான் கைப்பற்றியிருந்த காஷ்மீர் பகுதியொன்றை மீண்டும் இந்தியா கைப்பற்றியது.

1973: இஸ்ரேலின் ஸ்தாபகத் தந்தை டேவிட் பென் குரியோன் தனத 87ஆவது வயதில் காலமானார்.

1981: எய்ட்ஸ் வைரஸ் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

1982: அமெரிக்காவின் உட்டா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை மூலம், பேர்னி கிளார்க் என்பவர் உலகில் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதரானார்.

1989: கிழக்கு ஜேர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரசாங்கத்தில் முதன்மைபாத்திரம் வழங்கும் அரசியலமைப்பு நீக்கப்பட்டது.

1990: பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.

1991: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதற்கு உக்ரைன் மக்கள் சர்வஜன வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்தனர்.

Friday, November 30, 2012

12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டையிலிருந்து இரட்டைக் குழந்தைகள் பெற்ற பெண்

12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டை மூலம் கருத்தரித்த அர்ஜென்டினா பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியூனஸ் ஏர்ஸைச் சேர்ந்தவர் மோனிகா ஜபோடாக்ஸ்னி(45). அவரது கணவர் கில்லர்மோ ஹூசக். இயற்கையாக கருத்தரிக்க முடியாத மோனிகா செயற்கை முறை மூலம் கருத்தரிக்க முயன்று பல தடவை தோல்வியையே சந்தித்தார். இனி தான் கருத்தரிக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்.
அப்போது கடைசி முறையாக செய்து பார்ப்போம் என்று மோனிகா தான் 33 வயதாக இருந்தபோது ஆய்வகத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்ட கருமுட்டை கடந்த ஆண்டு பயன்படுத்தினார். அவரது இறுதி முயற்சி இரட்டைப் பலனைக் கொடுத்தது. அவருக்கு கடந்த ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை மூலம் மெர்சிடீஸ், குவாடலூப் என்னும் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட கருமுட்டையில் இருந்து தான் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுகள் ஆக ஆக கருமுட்டை சேதமடையலாம் என்னும் நிலைமையில் மோனிகா 12 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட கருமுட்டையில் இருந்து இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்படு குணமடைந்தவர்கள் மற்றும் வேலையில் கவனம் செலுத்த கர்பத்தை தள்ளிப்போடும் பெண்களுக்கு இந்த செய்தி ஒரு இனிய செய்தியாகும்.

வரலாற்றில் இன்று

நவம்பர் 30


1700: 8500 பேர் கொண்ட சுவீடன் படைகள் பாரிய ரஷ்ய படையை எஸ்டோனியாவின் நார்வா நகரில் தோற்டித்தன.

1782: அமெரிக்க புரட்சி யுத்தத்தில் அமெரிக்க, பிரித்தானிய பிரதிநிதிகள் பாரிஸில் முன்னோடி சமாதான ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

1872: உலகின் முதலாவது சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது.

1908: அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுரங்கமொன்றல் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் 154 பேர் பலி.

1934: நீராவி ரயிலொன்று முதல் தடவையாக உத்தியோகபூர்வமாக 100 மைல் வேகத்தை அடைந்தது.

1954: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் எரிகல்லொன்று வீடொன்றின் கூரைவழியாக வீழ்ந்து, உறங்கிக்கொண்டிருந்த பெண்ணொருவரை தாக்கியது. விண்ணிலிருந்து விழுந்த பொருளொன்றினால் மனிதர்களுக்கு காயம் ஏற்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட ஒரேயொரு சம்பவம் இது.

1966: பிரிட்டனிடமிருந்து பார்படோஸ் சுதந்திரம் பெற்றது.

1967: பிரிட்டனிடமிருந்து தெற்கு யேமன் குடியரசு சுதந்திரம் பெற்றது.

1967: பாகிஸ்தான் மக்கள் கட்சி ஸுல்பிகார் அலி பூட்டோவினால் உருவாக்கப்பட்டது.

1995: குவைத் மீதான குவைத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட 'பாலைவனப் புயல்' யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவுற்றது.

1999: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பூகோள மயமாக்கலுக்கு எதிரானோரின் ஆர்ப்பாட்டம் காரணமாக, உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டு ஆரம்ப வைபவம் இரத்துச்செய்யப்பட்டது.

Thursday, November 29, 2012

மனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியதகவல்கள்



இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்
ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.
நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கு ம் அளவு 400 கன அடி காற்று.



மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராண வாயுவில் 20 சதவிகித அளவு.
உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடது பக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.
உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது.
 



ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள்.
இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணுலியூக் கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது.
இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை ஒரு நிமிடத்திற்குள் கொண்டு போய் சேர்க்கின்றன.
மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது.
 
 



ரெடினா என்பது விழித்திரை
ஹைப்போஜியுஸியா என்பது நாக்கில் ஏற்படும் நோய். இதன் அறி குறி சுவை குறைந்து விடும்.
ஓரோபாரின்க்ஸ் என்பது வாயின் பின்பகுதி, தொண்டையில் சேரு மிடம்.
கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.
மீடியாஸ்டினம் என்பது இரண்டு நுரையீரல்களுக்கு இடைப்பட்ட பகுதி.
 
 



ப்ளூரா என்பது நுரையீரல் உறை
இன்சுலின் – இதன் வேலை ரத்த்த்தில் இருக்கும் சர்க்கரை அளவை சரியாக வைப்பது.
சிறுநீரகங்கள் கீழ் முதுகில், முதுகுத் தண்டிற்கு இருபக்கமும் உள் ளன.
அல்வியோலஸ் என்பது மெல்லிய சுவருடைய காற்று செல். மனித நுரையீரல்களில் 750,000,000 அல்வியோலஸ் செல்கள் உள்ளன.
ஒரு குழந்தை 330 எலும்புகளுடன் பிறக்கிறது.

உடலில் 206 எலும்புகள் உள்ளன.
பிபுல்லா என்பது முழங்காலையும் குதிகா லையும் இணைக்கும் எலும்பு
மனித உடலில் உள்ள நீளமான எலும்பு தொ டை எலும்பு.
மனித உடலில் உள்ள சிறிய எலும்பு காது எலும்பு.
மனித உடலில் உள்ள முதுகெலும்புகள் 33.
முகத்தில் உள்ள எலும்புகள் 14.
கைகளில் உள்ள எலும்புகள் 27.
மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.
மூளையில் பெரிய பகுதி பெருமூளை – செரிப்ரம் என்று அழைக்கப் படுகிறது. இது பேச்சு, பார்வை, கேட்டல், நுகரல், சிந்தனை, ஞாபக ம், செயல், உணர்வு, இயக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.
  




சிறு மூளை உடல் சமன்பாடு, அசைவுகளை இணைத்தல் பணியை செய்கிறது.
உணவுப் பாதையின் நீளம் – வாய் முதல் மலவாய் வரை 15 அடிகள்
நகமாக வளரும் புரதப் பொருள் கெரட்டின்.
எலும்பு மஜ்ஜை ஒரு நாளைக்கு 25000கோடி இரத்த சிவப்பணுக் களை உருவாக்குகிறது.
மூக்கில் 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன.
மனித உடலிலுள்ள எலும்புகள் ஒன்பது கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
 
 
 

பெருவிரலுக்கும் மூளைக்கும் தொடர்பு அதிகமாக உள்ளது.
நம் தலையில் சுமார் 1,50,000 முடிகள் உள்ளன.
30 வயதிற்கு மேல் புதிய தலை முடி உருவாகுவதில்லை.
குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்
ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.
சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண் டுள்ளது.
 



இருமும் போது ஏற்படும் ஒலியின் வேகம் மணிக்கு 245 மைல்கள்.
இருதயப் பணியின் ஒரு சுழற்சி முடிய 0.8 வினாடி நேரமாகிறது.
உடலில் வளராத, மாறாத பகுதி கண்ணிலுள்ள பாப்பா.
ஒரு நாளில் இரத்தம் நமது உடலில் 1680 மைல் தூரம் அளவு ஓடும்.
குடலில் மொத்த நீளம் 9 மீட்டர்.
உடலில் வேர்க்காத பகுதி உதடுகள்
உடலில் குளிர்ச்சியான இடம் மூக்கின் நுனி.
மூளையின் எடை சராசரி ஒன்றரை கிலோ.
உடலின் சீரான வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்.
ஒரு நாளில் 1200 முதல் 1500 மிலி வரை உமிழ் நீர் சுரப்பாகிறது.
வெஸ்டிபுலே–எனப்படுவது பற்கள், கன்னத்திற்குஇடைப்பட்ட பகுதி.
 
 



சைனஸ் என்பது முக எலும்புகளிலுள்ள காற்றறைகள். சுவாசிக்கு ம் காற்றை நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்துவது இதன் பணியா கும். குரல் தெளிவாக இருக்க, முக எலும்புகள் கனம் குறைய இது உதவுகிறது.
இரத்தக் கசிவு 1 முதல் 3 நிமிடங்கள் இருக்கும்.
இரத்தம் உறைவதற்கான நேரம் 4 முதல் 8 நிமிடங்கள்.
உடலின் தோல் மூன்று அடுக்கால் ஆனது. தோலின் மேலடுக்கு எபி டெர்மிஸ், இதில் இரத்த ஓட்டம் இல்லை. தோலின் இரண்டாவது அடுக்கு டெர்மிஸ் பகுதி என்றும், அடிப்புற அடுக்கு அடித்தோல் என் றும் அழைக்கப்படுகிறது.
 
 



மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.
நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் உள்ளது.
கழுத்து வலி மருத்துவத் துறையில் செர்விகல் ஸ்பான்டிலிடிஸ் என் று அழைக்கப்படுகிறது.
ஹைப்பர் தெரிமியா என்பது உடல் வெப்பநிலை அதிகமாகுதல்.
ரேணுலா என்பது நாக்குக்கு அடியில் தோன்றும் நீர்க்கட்டி
எலும்பு, பற்களில் உள்ள புரதம் ஆஸ்சின்.
 
 மனிதஉடலில் வியர்வை சுரப்பிகள் சுமார் 3மில்லியன்களுக்குமேல் உள்ளன.
செரடோனின்–வேதிப்பொருள் குறையும் போது தலைவலி ஏற்படும்.
வேகஸ் நரம்பிற்கு இதயத் துடிப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
இரத்தத்திற்கு நிறம் கொடுப்பது ஹீமோகுளோபின்.
பெருங்குடலின் நீளம் 100 முதல் 150 செ.மீ ஆகும். சிறுகுடலின் நீளம் 5 மீட்டர்.
பெருங்குடலின் பணி தண்ணீர் மற்றும் தாது உப்புக்களை உறிஞ் சுதல்.
உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.
பித்தப்பை கல்லீரலின் கீழ்ப் பாகத்தில் அமைந்துள்ளது.
 

சுவாரஷ்சியமான சில தகவல்கள் உங்களுக்காக.......

சுவாரஷ்சியமான சில தகவல்கள் உங்களுக்காக.......


Ø உலகில், கண்டங்களுக்கிடையிலான மிகக்குறைந்த நேர அளவினைக்கொண்ட வணிக விமானப் பறப்பு இடம்பெறுவது ஐரோப்பாவின் ஜிப்ரொல்ருர் மற்றும் ஆபிரிக்காவின் ரான்ஜிர் இடையிலாகும். 34 மைல்கள் தூரம், 20 நிமிட நேர விமானப் பறப்பு.


Ø உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானமானது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் சைல் நகரில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2444 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது.






Ø புவியின் உபகோளாகிய சந்திரன் வருடாந்தம் 1.5 அங்குலங்கள் புவியிருந்து விலகிக்செல்கின்றதாம்.


Ø ஒலியானது வளியில் செக்கனுக்கு 331 மீற்றர்கள்(740 mph) பயணம் செய்யும்.ஆனால், 20ºC அறை வெப்ப நிலையில் ஒலியானது செக்கனுக்கு 343 மீற்றர்கள்(767 mph) பயணம் செய்யும்.


Ø ஹங்கேரி நாட்டின் தலைநகரமாக புடாபெஸ்ட் விளங்குகின்றது. உண்மையில் புடா மற்றும் பெஸ்ட் ஆகிய இரண்டு நகரங்களின் கூட்டிணைவே இவையாகும்.ஆரம்பத்தில் ஒன்றாகக் காணப்பட்ட நகரினை டன்யூப் நதியானது இரண்டாக பிரித்துவிட்டது.






குறிப்பு - வொல்கா நதியினை அடுத்து ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய நதி டன்யூப் ஆகும். வியன்னா,பெல்கிரேட், புடாபெஸ்ட் ஆகிய நகரங்கள் டன்யூப் நதிக்கரையிலே அமைந்துள்ளன.


அமெரிக்காவின் பிரதான மாநிலங்களில் ஒன்றாக புளோரிடா விளங்குகின்றது. ஸ்பெய்னிடமிருந்து, 1819ம் ஆண்டு புளோரிடா மாநிலத்தை 5மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்கா கொள்வனவு செய்தது.

  
 @ மைனாக்கள் பிறப்பிடம் "இந்தியா"








உங்களுக்கு தெரியுமா ?
ஒருவர் ஆஸ்திரேலியா காட்டுக்குள் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது ஒரு வினோதமான விலங்கினை கண்டு அந்த காட்டில் இல்ல காட்டு வாசிகளிடம் இது என்ன விலங்கு என்று கேட்டாராம் அதற்க்கு அந்த காட்டுவாசி "கங்காரு" என்றாராம் . அதனை thodarnthu இந்த நாள்வரை அந்த வினோத விலங்கிற்கு கங்காரு என்றே பெயரிட்டு அழைத்து வருகின்றோம்.
உண்மையில் கங்காரு என்றால் "தெரியாது" என்று அர்த்தமுங்க.








இணையதளம் பயன் படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில உள்ளதுங்க.
இரண்டாம் இடம் அமெரிக்கா , முதல் இடத்தில சீனா. மிக விரைவில் நம்ம இந்தியா அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் வகிக்க உள்ளதாக ஒரு கருது கணிப்பு கூறியுள்ளது.
சூப்பர் இந்தியா.

வரலாற்றில் இன்று.

நவம்பர் 29

  • 1781 - கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
  • 1830 - போலந்தில் இரசியாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
  • 1855 - துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்சு நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
  • 1877 - தோமசு அல்வா எடிசன் ஒலிவரைவி (போனோகிராஃப்) என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
  • 1915 - கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீயில் எரிந்தன.
  • 1922 -அவார்டு கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையைப் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விட்டார்.
  • 1929 - அமெரிக்க கடற் படையைச் சேர்ந்த அட்மிரல் ரிச்சர்ட் பைர்ட், பெர்ன்ட் பால்கன் எனும் விமானியுடன் முதன் முதலாகத் தென் துருவத்தை விமானம் மூலம் கடந்து சாதனை படைத்தார்.
  • 1945 - யூகொசுலாவிய சமசுட்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
  • 1947 - பாலசுதீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.
  • 1948 - இந்தியாவில் 'தீண்டாமை ஒழிப்புச் சட்டம்' நிறைவேற்றப்பட்டது.
  • 1950 - வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.
  • 1961 - நாசாவின் மேர்க்குரி-அட்லசு 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது).
  • 1982 - ஐநா பொது அவை சோவியத் படைகளை ஆப்கானிசுதானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.
  • 2006 - அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய சாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிசுதான் வெற்றிகரமாக நடத்தியது.

Wednesday, November 28, 2012

"டைனோசர்" என்ற சொல் தோற்றம் பெற்றது எவ்வாறு தெரியுமா?.....





பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் ஒன்றாக டைனோசரினை விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.


பல்வேறுபட்ட காலகட்டங்களில் பல்வேறுவிதமான "டைனோசர்" இனங்கள் வாழ்ந்ததாகவும் அவற்றில் சில இனங்கள் மிகப்பெரியனவையாகவும், சில இனங்கள் மிகச்சிறியனவையாகவும், சில இனங்கள் இரண்டு கால்களில் நடப்பவையாகவும், சில இனங்கள் நான்கு கால்களில் நடப்பவையாகவும், சில இனங்கள் மிக வேகமாக செல்பவையாகவும், சில இனங்கள் மிக மெதுவாக அசைந்தசைந்து செல்பவையாகவும், சில இனங்கள் ஊனுண்ணியாகவும், சில இனங்கள் தாவரவுண்ணியாகவும், சில இனங்கள் கவசம் போன்ற உடம்பினைக் கொண்டவையாகவும், சில இனங்கள் அடர்ந்த, சமதளமற்ற உடம்பினைக் கொண்டவையாகவும், சில இனங்கள் கொம்பினைக் கொண்டவையாகவும், சில இனங்கள் பறக்கும் ஆற்றலைக் கொண்டவையாகவும் விஞ்ஞானிகள் வகைப்படுத்தியுள்ளனர்.


இந்த உயிரினங்கள் பூமியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புக்களால் அழிவடைந்ததாகவும், பூமியை தாக்கிய பிரமாண்டமான விண்கற்களினால் அழிவடைந்ததாகவும், இயற்கையில் ஏற்பட்ட மாறுதல்களால் அழிவடைந்ததாகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன.


சேர் ரிச்சர்ட் ஓவன்



"டைனோசர்(Dinosaur)" என்கின்ற சொல்லானது "டைனோஸ்(Deinos)", மற்றும் "சரஸ்(Sauros)" ஆகிய இரண்டு கிரேக்கமொழி சொற்களிலிருந்தும் தோற்றம்பெற்றதாகும். "டைனோஸ்(Deinos)" என்பதற்கு பயங்கரமானது,சக்திவாய்ந்தது, ஆச்சரியமானது என்கின்ற அர்த்தங்களாகும்.
"சரஸ்(Sauros)" என்பதற்கு பல்லி என்றும் அர்த்தமாகும்.


"டைனோஸ்(Deinos)" மற்றும் "சரஸ்(Sauros)" ஆகிய இரண்டு சொற்களையும் கோர்த்து 1841ம் ஆண்டு "டைனோசரியா(Dinosauria)" என்கின்ற பதத்தினை உயிரியல் விஞ்ஞானி, புதைபடிவ ஆய்வாளராகிய "சேர் ரிச்சர்ட் ஓவன்" உருவாக்கிய பின்னரே இந்தப் பதமானது பிரபல்யம் அடைந்தது.




அறிந்துகொள்வோம்....

Ø முதன்முதலில் டைனோசர் முட்டை எச்சங்கள் 1869ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Ø டைனோசர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற "ஜூராசிக் பார்க்(Jurassic Park)" என்கின்ற திரைப்படத்தினை 1993ம் ஆண்டு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இயக்குனர் ஸ்ரிவன் ஸ்பில்பேர்க் உருவாக்கினார். ஜூராசிக் பார்க் திரைப்படமானது 03 ஓஸ்கார் விருதுகளை 1994ம் ஆண்டு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெயர்க்காரணம் தெரிந்துக் கொள்ளுங்கள்

ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ்

இதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பி சாப்பிடும் பழம் ஆப்பிள்! நிறுவனம் தொடங்கி மூன்று மாதங்களாகியும் பெயர் வைக்காமல் இருந்தார். தன் சகாக்கள், கடைசிநாள் மாலைக்குள் வேறு பெயர்களை பரிந்துரைக்காவிட்டால் ஆப்பிள் என்று பெயர் சூட்டப்போவதாகச் சொன்னார். ஆப்பிள் கனிந்தது.


யாஹு

ஜொனாதன் ஸ்விஃப்ட் எழுதிய ‘குலிவர்ஸ் டிராவல்ஸ்’ என்ற புத்தகத்தில் வரும் பாத்திரம் இது. துறுதுறுவென்று இயங்கும் ஒரு மனிதனின் பெயரை, தன் இணையதளத்திற்கு சூட்டினார்கள், யாஹுவை நிறுவிய ஜெர்ரியாங் மற்றும் டேவிட் ஃபிலோ.


ஜெராக்ஸ்

‘ஜெர்’ என்பது உலர்தலைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லை வேராகக் கொண்டது. நகலெடுக்கும்போது மை காய்ந்திருக்கும் என்பதைக் குறிக்க சென்டர் காரிஸன் இப்பெயரை வைத்தார். அதற்குமுன், நகலெடுத்தால், மை காய்வதற்குள் மண்டை காய்ந்துவிடும்.


லோட்டஸ்

இதன் நிறுவனர் மிட்ச் கபூர், மகரிஷி மகேஷ் யோகியின் தியானமுறை பயிற்றுனர். பத்மாசனம் இட்டு அமர்கிற யோகாசனத்தின் அடிப்படையில், லோட்டஸ் என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்தார்.


அடோப் (ADOBE)

அடோப் நிறுவனர் ஜான் வார்னாக்-கின் வீட்டுக்குப் பின்புறம் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயர் அடோப்.


சன் மைக்ரோசிஸ்டம்ஸ்

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த நான்கு நண்பர்கள் இணைந்து Stanford University Network என்பதை சுருக்கி
SUN MICRO SYSTEMS என்று பெயர் வைத்தனர்.

வரலாற்றில் இன்று

நவம்பர் 28



  • 1520 - தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
  • 1729 - மிசிசிப்பியில் நட்சே இந்தியர்கள் குழந்தைகள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இனத்தவரைக் கொன்றார்கள்.
  • 1821 - பனாமா இசுபெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
  • 1843 - அவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
  • 1893 - நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
  • 1905 - ஐரிசு தேசியவாதி ஆர்தர் கிறிபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் ஃபெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.
  • 1912 - அல்பேனியா ஒட்டோமான் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1918 - புக்கோவினா ருமேனிய இராச்சியத்துடன் இணைய முடிவு செய்ததூ.
  • 1922 - வானில் வண்ணப் புகையைப் கொண்டு எழுத்துக்களை உருவாக்கும் கலை முதன் முறையாகச் செய்து காட்டப்பட்டது. Cyril Turner கண்டுபிடித்த அந்த முறை வர்த்தக ரீதியில் பயன்படத் தொடங்கியது.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: செர்மனியையும், சப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க சனாதிபதி பிராங்கிளின் உரூசுவெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்சுடன் சேர்ச்சில், இரசிய அதிபர் சோசப் தாலின் ஆகிய மூவரும் டெஃக்ஹ்ரானில் சந்தித்துப் பேசினார்கள்.
  • 1948 - உடனடியாக ஒளிப்படம் எடுத்துக் கொடுக்கும் Polaroid Camera முதன் முதலாக பா
  • சுட்டன் நகரில் விற்பனைக்கு வந்தது.
  • 1958 - சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.
  • 1960 - மவுரித்தேனியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
  • 1964 - நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
  • 1967 - சுயமரியாதைத் திருமணச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
  • 1975 - கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1989 - பனிப்போர்: செக்கொசிலவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிசுட் கட்சி அறிவித்தது.
  • 1990 - ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
  • 1990 - லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.
  • 1991 - தெற்கு ஒசேத்தியா சியார்சியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
  • 2006 - நாசாவின் நியூ அரைசன்ஸகு தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது

அறியாமைக் கால அரபியச் சமுதாயம்

அறியாமைக் கால அரபியச் சமுதாயம்

இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

சமுதாய அமைப்பு

அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள். அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும் திகழ்ந்தனர். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி போர் செய்யவும் அவர்கள் துணிந்திருந்தனர்.

ஓர் ஆண் தனது கொடைத்தன்மை, வீரம், வலிமையைக் கூறி தன்னைப் புகழ்ந்துக்கொள்ள நினைக்கும்போது தனது கவிதைகளில் பெண்ணை விளித்து பேசுவது போல பேசுவார். சில சந்தர்ப்பங்களில் பெண் விரும்பினால் தங்களது குலத்தாரிடையே காணப்படும் பிளவுகளை சரிசெய்து அமைதி நிலவச் செய்திடுவாள். அவள் நினைத்தால் மக்களிடையே போர் நெருப்பை மூட்டிவிடுவாள். எனினும், எவ்விதக் கருத்து வேறுபாடுமின்றி ஆண் குடும்பத் தலைவனாக விளங்கினான். அவனே முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தான். அவர்களிடையே ஆண், பெண் தொடர்பு என்பது அப்பெண்களுடைய காப்பாளர்களின் அனுமதி பெற்று திருமணத்தின் மூலமே ஏற்படுத்தப்பட்டது. தங்கள் குடும்ப ஆண்களை மீறி செயல்பட, பெண்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தார்கள்.

ஆனால், கீழ்மட்ட மக்களிடத்தில் ஆண், பெண் இணைந்து வாழ்வதற்கு பல்வேறு நடைமுறைகள் காணப்பட்டன. அவை அனைத்தும் வெட்கமற்ற இழிவான ஈனத்தனமான பழக்க வழக்கங்களாகவே இருந்தன. இது குறித்து அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:

திருமணங்கள் அறியாமைக் காலத்தில் நான்கு வகைகளாக இருந்தன.

முதல் வகை: இன்று மக்களிடையே நடைமுறையிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

இரண்டாம் வகை: ஒருவர் தம் மனைவியிடம் “நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்தவுடன் இன்ன நபருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்!” என்று கூறி அனுப்பி விடுவார். அதன்பின் அந்த மனிதர் மூலம் கர்ப்பமானது தெரியும்வரை அவர் தன் மனைவியுடன் சேராமல் விலகி இருப்பார். அந்த மனிதர் மூலம் அவள் கர்ப்பமாகி விட்டாளெனத் தெரியவந்தால் தன் விருப்பத்திற்கேற்ப கணவர் அவளுடன் சேர்ந்து கொள்வார். திடகாத்திரமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலேயே இவ்வாறு செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ழாவு’ என்று அரபியில் பெயர் கூறப்படும்.

மூன்றாம் வகை: பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணுடன் உறவு கொள்வார்கள். அவள் கர்ப்பமாகி குழந்தை பிரசவித்த சில நாட்களுக்குப் பின் அவர்கள் அனைவரையும் தன்னிடம் வரச் சொல்வாள். அவர்கள் அனைவரும் எவ்வித மறுப்புமின்றி அவளிடம் ஒன்று கூடுவார்கள். அவர்களிடம் அவள்: “நீங்கள் செய்தது உங்களுக்குத் தெரிந்ததே! (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்து விட்டது” என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) “இது உன் குழந்தையே” என தான் விரும்பியவன் பெயரைக் குறிப்பிடுவாள். அக்குழந்தை அந்த நபரிடம் ஒப்படைக்கப்படும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

நான்காம் வகை: பலர் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வர். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள். இப்பெண்கள் விலை மாதர்கள் ஆவர். இவர்கள் தங்களது வீட்டு வாசலில் கொடியை நட்டு வைத்திருப்பார்கள். பலர் அங்கு வந்து போவார்கள். இதில் ஒருத்தி கர்ப்பமாகிக் குழந்தை பெற்றால் மக்கள் ஒன்று கூடி அங்க அடையாளங்களை வைத்து குழந்தையின் தந்தையை கண்டறியும் முகக்குறி நிபுணர்களை அழைத்து வருவார்கள். அந்த நிபுணர்கள் ஆராய்ந்து தந்தையை முடிவு செய்து அம்மனிதனுடன் அந்தக் குழந்தையை இணைத்து விடுவார்கள். அவனிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டு அவனுடைய மகன் என்று பெயர் சொல்லி அழைக்கப்படும். அதைத் தன் குழந்தையல்ல என்று அவனும் மறுக்க மாட்டான்.

அல்லாஹ் சத்திய மார்க்கத்துடன் முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பியபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள இஸ்லாமியத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத்திருமணங்கள் அனைத்தையும் தகர்த்து விட்டான். (ஸஹீஹுல் புகாரி, ஸுனன் அபூதாவூது)

சிலசமயம் இரு வகுப்பாரிடையே போர் நடைபெறும். அதில், தோல்வி அடைந்தவர்களின் பெண்களை வெற்றிபெற்ற பிரிவினர் சிறைபிடித்து தங்களது அடிமைகளாக்கி அனுபவிப்பார்கள். இதில் பிறக்கும் குழந்தைகளின் பெயர்கள் காலம் முழுவதும் அடிமைகளான அவர்களது தாய்மார்களின் பெயர்களுடன் சேர்த்து அழைக்கப்படும் அவமானம் இருந்து வந்தது.

அறியாமைக் காலத்தில் ஆண்கள் எவ்வித வரம்புமின்றி பல பெண்களை மணந்து கொண்டனர். இஸ்லாம் அதை தடுத்து நான்கு பெண்களுக்கு மேல் மணமுடிக்கக் கூடாது என வரையறுத்தது. மேலும், இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மணந்து கொண்டனர். தங்களது தந்தை இறந்துவிட்டால் அல்லது விவாகரத்து செய்துவிட்டால் அவன் மனைவியை (மாற்றாந்தாயை) மணந்து கொள்ளும் பழக்கமும் அவர்களிடையே காணப்பட்டது. இவ்விரண்டையும் இஸ்லாம் தடை செய்தது. (பார்க்க அல்குர்ஆன் 4 : 22, 23). அவ்வாறே விவாகரத்து செய்வதில் குறிப்பிட்ட முறை எதுவுமின்றி விரும்பிய நேரத்தில் தலாக் (விவாகரத்து) கூறி விரும்பிய நேரத்தில் மனைவியரை திரும்ப அழைத்துக் கொண்டனர். இதை தடை செய்து மூன்று முறைக்கு மேல் இவ்வாறு செய்யலாகாது என இஸ்லாம் வரையறுத்தது. (ஸுனன் அபூதாவூது)

சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் விபசாரம் பரவியிருந்தது. சிலர் மட்டும் இந்த இழிசெயலை வெறுத்து கௌரவத்துடன் வாழ்ந்தனர். அடிமைப் பெண்களின் நிலைமை சுதந்திர பெண்களின் நிலைமையைவிட மிக மோசமாக இருந்தது. அந்த அறியாமைக்கால மக்களில் பெரும்பாலோர் விபசாரத்தை ஒரு குற்றச் செயலாகவே கருதவில்லை.

இது குறித்து நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஒரு மனிதர் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! இன்னவன் என் மகனாவான். அறியாமைக் காலத்தில் நான் அவனது தாயுடன் விபசாரம் செய்துள்ளேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இஸ்லாமிய மார்க்கத்தில் இவ்வாறான உரிமைக் கோரலுக்கு வாய்ப்பில்லை. அறியாமைக் கால செயல்களெல்லாம் முடிந்துபோய் விட்டன. இப்போது குழந்தை அதனுடைய தாயின் கணவனையே சாரும். விபசாரம் புரிந்தவனைக் கல்லால் எறிந்து கொல்லப்படும்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூது)

ஸஅது இப்னு அபீ வக்காஸ், அப்து இப்னு ஜம்ஆ ஆகிய இருவருக்கிடையே ஜம்ஆவின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்த அப்துர் ரஹ்மான் இப்னு ஜம்ஆவின் விஷயத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் மிகப் பிரபலமானதாகும். (பார்க்க ஸஹீஹுல் புகாரி 2053, 2218)

அரபியர்கள் தங்களது பிள்ளைகளுடன் கொண்டிருந்த தொடர்பு பலவகைகளில் அமைந்திருந்தது. அவர்களில் சிலர் தங்களது பிள்ளைகளை உயிருக்குயிராக நேசித்தனர். இதைப் பற்றி ஒரு கவிஞர் கூறுவதாவது:

“நமது குழந்தைகள் புவியில் தவழும் நமது ஈரக்குலைகளாவர்.”

தற்காலத்தைப் போன்றே, அக்காலத்தில் சிலர் பெண் பிள்ளைகளை அவமானமாகக் கருதியும் செலவுக்குப்பயந்தும் உயிருடன் புதைத்தனர். மேலும் சிலர், வறுமைக்கு அஞ்சி தங்களின் ஆண் குழந்தைகளையும் கொலை செய்தனர். (பார்க்க அல்குர்ஆன் (6 : 151), (16 : 58, 59), (17 : 31), (81 : 8) எனினும் இப்பழக்கம் பரவலாகக் காணப்படவில்லை. காரணம், எதிரிகளுடன் போரிடுவதற்கு அவர்களுக்கு ஆண் மக்களின் தேவை அதிகமாக இருந்தது.

அரபியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்குள் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தனர். குலப்பெருமைக்காகவே வாழவும் குலப்பெருமைக்காகவே சாகவும் துணிந்தனர். ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சமூகப் பித்தும் இனவெறியும் கொண்டு அலைந்தனர். இனவாதமும் இரத்த பந்தமான குடும்பப் பாரம்பரியமும் அவர்களது சமூக அமைப்பின் அஸ்திவாரமாகத் திகழ்ந்தன. அவர்களிடையே அறியப்பட்ட “உன் சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய்” என்ற பழமொழியின் வெளிப்படையான பொருளுக்கேற்பவே அவர்கள் நடந்து வந்தார்கள். ஆனால், இஸ்லாம் இப்பழமொழிக்கு நேரடிப் பொருள் கொள்வதை மாற்றி அநியாயக் காரனை அவனுடைய அநியாயத்திலிருந்து தடுப்பதுதான் அவனுக்குச் செய்யும் உதவி என பொருள் தந்தது. எனினும், சில நேரங்களில் தலைமைத்துவத்தை அடைவதற்காக ஒரே வமிசத்தில் தோன்றியவர்கள் கூட தங்களுக்குள் வாளெடுத்துப் போரிட்டுக் கொண்டனர். எடுத்துக்காட்டாக அவ்ஸ்-கஸ்ரஜ், அப்ஸ்-துப்யான், பக்ர்-தக்லிப் கோத்திரத்தினர் தலைமைப் பதவிக்காக தங்களுக்குள் பகைவர்களாக இருந்தனர்.

பல மாறுபட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பற்றவர்களாக பிரிந்து வாழ்ந்தனர். குடும்பச் சண்டையிலேயே தங்கள் ஆற்றல்களை இழந்தனர். சில நேரங்களில் அவர்கள் கொண்டிருந்த மத நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அவர்களுக்கிடையில் இருந்த பகைமையின் வேகத்தை குறைத்தன. மற்றும் சில நேரங்களில் சமாதான ஒப்பந்தங்களும் நட்பு ஒப்பந்தங்களும் பல மாறுபட்ட கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தின. புனித மாதங்கள் அவர்களுக்கு அருளாகவும் வாழ்வுக்கும் வியாபாரத்திற்கும் பேருதவியாகவும் அமைந்திருந்தன. புனித மாதங்களை அவர்கள் கண்ணியப்படுத்தி வந்ததால் அம்மாதங்களில் மட்டும் அவர்கள் முழு நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் இருந்தனர்.

அபூரஜா அல் உதாதி (ரழி) கூறுகிறார்: “ரஜபு மாதம் வந்துவிட்டால் நாங்கள் ஈட்டிகளின் கூர்மையை அகற்றும் மாதம் வந்துவிட்டது” என்று கூறி ஈட்டி, அம்புகளின் முனையை அகற்றிவிடுவோம். இவ்வாறே மற்ற புனித மாதங்களிலும் நடந்து கொள்வோம். (ஸஹீஹுல் புகாரி. ஃபத்ஹுல் பாரி)

சுருங்கக்கூறின் சமூக அமைப்பு தரங்கெட்டு உருக்குலைந்து இருந்தது. மூட நம்பிக்கைகள் மிகைத்திருந்தன. அறியாமை அவர்களை ஆட்டிப் படைத்தது. மனிதர்கள் கால்நடைகளாக வாழ்ந்தனர். பெண்கள் விற்பனைப் பொருளாக்கப்பட்டு ஜடமாகவே பாவிக்கப்பட்டனர். சமூகங்களுக்கிடையில் உறவுகள் துண்டிக்கப்பட்டிருந்தன. குடிமக்களைச் சுரண்டி தங்களது கருவூலங்களை நிரப்பிக்கொள்வது அல்லது எதிரிகளின் மீது தாக்குதல் நடத்துவதே ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.

பொருளாதாரம்

சமூக நிலைமைக்கேற்ப பொருளாதாரம் அமைந்திருந்தது. அரபியர்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்யும்போது இக்கருத்து நமக்குத் தெரியவரும். அவர்களது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வியாபாரமே பெரும் துணையாக இருந்தது. அமைதியும் பாதுகாப்பும் இருந்தால்தான் வியாபாரப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பது தெரிந்ததே! ஆனால், அரபிய தீபகற்பத்தில் புனித மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் அந்த அமைதியும் பாதுகாப்பும் இருக்கவில்லை. இப்புனித மாதங்களில்தான் உக்காள், தில்மஜாஸ், மஜன்னா போன்ற அரபியர்களின் பெயர் போன வியாபாரச் சந்தைகள் நடைபெற்றன.

அரபியர்களிடம் தொழில் துறைகளைப் பற்றிய அறிவு காணப்படவில்லை. துணி நெய்தல், தோல் பதனிடுதல் போன்ற சில தொழில் யமன், ஹீரா மற்றும் ‘மஷாஃபுஷ் ஷாம்’ ஆகிய பகுதிகளில் மட்டும் காணப்பட்டன. அரபிய தீபகற்பத்தின் உட்புறத்தின் சில பகுதிகளில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நடைபெற்று வந்தன. அரபியப் பெண்கள் அனைவரும் நெசவுத் தொழில் செய்தனர். எனினும், அனைத்து செல்வங்களும் போர்களில் செலவழித்து வீணடிக்கப்பட்டன. அவர்களிடையே வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடியது. அணிவதற்கான ஆடைகள் கூட இல்லாமல் தவித்தனர்.

பண்பாடுகள்

அக்கால மக்களிடையே செம்மையான சிந்தனையோ பகுத்தறிவோ இல்லை என்பதால் அக்காலத்தை “அறியாமைக்காலம்” என வருணிக்கப்பட்டது. ஏற்க இயலாத செயல்பாடுகளும் இழிவான நடத்தைகளும் குடி கொண்டிருந்தன. அதே நேரத்தில் வியக்கத்தக்க சில அரிய பண்புகளும் அவர்களிடம் குடிகொண்டிருந்தன.

அவையாவன:

1) கொடைத் தன்மை மற்றும் தயாளத்தன்மை: அவர்கள் கொடைத் தன்மையில் ஒருவரையொருவர் போட்டியிட்டனர். இந்தக் கொடைத் தன்மையைக் கொண்டே தங்களது பெரும்பாலான கவிகளில் தங்களையும் பிறரையும் புகழ்ந்து கொண்டனர்.

கடுமையான குளிரும் பஞ்சமும் நிலவி வரும் காலத்தில் ஒருவரிடம் விருந்தினர் ஒருவர் வருகிறார். அம்மனிதரிடம் தனது குடும்பத்தின் தேவைக்காக இருக்கும் ஓர் ஒட்டகையைத் தவிர வேறொன்றுமில்லாத நிலையிலும் அந்த ஒட்டகையை அறுத்து விருந்தினரை உபசரிக்க அவரைத் தூண்டுமளவு அவர்களிடம் விருந்தோம்பல் குணம் மிகைத்திருந்தது.

அவ்வாறே அவர்களில் இயலாத ஒருவர் நஷ்டஈடு வழங்க வேண்டியிருந்தால் அது தங்களது சக்திக்கு மீறியதாக இருப்பினும் அந்தத் தொகையைத் தான் தருவதாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். இதனால், பிறர் உயிர் பறிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தார்கள். இதைத் தங்களுக்குப் பெருமையாகக் கருதினார்கள்.

அவர்களிடமிருந்த தர்ம சிந்தனையின் விளைவாக மது அருந்துவதை பெருமைக்குரியதாக கருதினர். அது ஒரு சிறப்பான செயல் என்பதற்காக அதனை அவர்கள் நேசிக்கவில்லை. மாறாக, மது அருந்துவது தர்மம் செய்வதற்கான ஒரு வழியாக இருக்கிறது. செல்வத்தை வாரி இறைப்பதை மனதிற்கு எளிதாக்குகிறது என்பதால் அதை நேசித்தனர். அதனாலேயே திராட்சைக் கொடிக்கு ‘கரம்’ (கொடை) என்றும் அதிலிருந்து பிழியப்பட்ட மதுவுக்கு ‘பின்துல் கரம்’ (கொடையின் புதல்வி) எனவும் பெயரிட்டிருந்தனர். எனவேதான், மது அருந்துவதை பெருமைப்படுத்தியும் புகழ்ந்தும் பல அரபுக்கவிதைகள் அறியாமைக் காலத்தில் இயற்றப்பட்டதை நாம் பார்க்கிறோம்.

இதுபற்றி அன்தரா இப்னு ஷத்தாத் அல் அபஸீ தனது கவிதைத் தொகுப்பில் கூறுகிறார்:

“மதிய வேளைக்குப் பின் வடிகட்டியுடன் உள்ள
மஞ்சள் நிறக் கண்ணாடி கெண்டியிலிருந்து
அடையாளமிடப்பட்ட தெளிவான கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றி
இடக்கையால் மது அருந்தினேன்.
நான் குடித்தால் என் செல்வங்கள் அனைத்தையும் வாரி இறைப்பேன்.
ஆனால் எனது கண்ணியத்தை கரைபடியாது காப்பேன்.
மது மயக்கம் தெளிந்த பின்னும் வாரி வழங்குவதில் ஒரு குறையும் வைக்கமாட்டேன்.
இத்தகைய என் பண்பாடும் பெருந்தன்மையும் உனக்குத் தெரிந்ததே!”

சூதாடுவதையும் தங்களது கொடைத்தன்மையின் வெளிப்பாடாக அவர்கள் கருதினார்கள். ஏனெனில், சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர், தான் செலவிட்டதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை ஏழை, எளியோருக்கு கொடுத்து விடுவார். இதனாலேயே மது அருந்துவதிலும் சூதாடுவதிலும் எப்பலனுமே இல்லை என்று குர்ஆன் மறுக்கவில்லை. மாறாக, அதன் பலனைவிட அதன் தீய விளைவுதான் அதிகம் என்று கூறுகிறது.

(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: “அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றிலுள்ள பாவம் அவற்றின் பயனை விட மிகப் பெரிது.” (அல்குர்ஆன் 2 : 219)

2) ஒப்பந்தங்களை நிறைவேற்றல்: அவர்கள் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதிலும் வாக்குகளைக் காப்பாற்றுவதிலும் மிக உறுதியாக இருந்தனர். தங்களது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டாலும் தங்களது வீடுகள் தகர்க்கப்பட்டாலும் அது குறித்து சிறிதும் இலட்சியம் செய்யாமல் தங்களது ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். இதற்கு ஹானி இப்னு மஸ்வூத் ஷைபானி, ஸமவ்அல் இப்னு ஆதியா போன்றவர்களின் சம்பவங்கள் சான்றாகும். (இதிலுள்ள ஹானியின் சம்பவம் ‘ஹீரா நாட்டில் ஆட்சி’ என்ற தலைப்பில் சென்றுள்ளது.)

அடுத்து ஸமவ்அல் இப்னு ஆதியா பற்றிய சம்பவமாவது: ஸமவ்அலிடம் இம்ரவுல் கைஸ் சில கவச ஆடைகளை அமானிதமாகக் கொடுத்திருந்தார். ‘ஹாஸ்’ என்ற கஸ்ஸானிய மன்னன் அதனை அபகரிக்க நாடினான். ஸமவ்அல் தீமாவிலுள்ள தனது கோட்டையில் தஞ்சம் புகுந்தான். அவருடைய பிள்ளைகளில் ஒருவர் கோட்டைக்கு வெளியில் மாட்டிக்கொண்டார். அவரை மன்னன் ஹாஸ் பணயமாகப் பிடித்துக்கொண்டு கவச ஆடைகளை கொடுக்காவிட்டால் பிள்ளையைக் கொன்று விடுவேன் என மிரட்டினான். ஸமவ்அல் கொடுக்க மறுத்து தன் கண்ணெதிரே தன் பிள்ளை கொல்லப்படுவதையும் சகித்துக்கொண்டார்.

3) சுயகௌரவம் மற்றும் அநீதத்தை சகித்துக் கொள்ளாத் தன்மை: இப்பண்புகள் அவர்களிடம் கட்டுக்கடங்கா வீரத்தையும் அதிரடி ரோஷத்தையும் வேகமாக உணர்ச்சி வசப்படுவதையும் தூண்டின. எவருடைய சொல்லாவது தனக்கு கௌரவக் குறைவை அல்லது இழிவை ஏற்படுத்துகிறது என அறிந்தால் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள். தங்களது உயிரைப் பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் வாளாலும், அம்புகளாலும் அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.

4) செயலில் உறுதியுடன் இருத்தல்: அம்மக்கள் ஒரு செயல் தங்களது பெருமைக்கும் உயர்வுக்கும் காரணமாக அமையும் என நம்பினால் அதை செயல்படுத்துவதிலிருந்து அவர்களை எந்தவொரு சக்தியும் தடுத்துவிட முடியாது. தங்களது உயிரைக் கொடுத்தாவது அதனை அவர்கள் செய்து முடிப்பார்கள்.

5) நிதானித்தல், சகித்தல், அமைதி காத்தல்: இப்பண்புகளும் அவர்களிடம் அமைந்திருந்தன. எனினும், வீரமும் போர் மீதான ஆர்வமும் மிகுந்திருந்ததால் இப்பண்புகள் மிக அரிதாகவே காணப்பட்டன.

6) எளிமையை விரும்பிப் பகட்டை வெறுத்தல்: அவர்களிடம் இப்பண்பும் காணப்பட்டது. அதனால் அவர்கள் உண்மை, நேர்மை, வாய்மை போன்றவற்றை நேசித்து மோசடி, ஏமாற்றுதல் போன்ற இழிகுணங்களை வெறுத்தனர்.

உலகின் ஏனைய பகுதிகளைப் பார்க்கிலும் அரபிய தீபகற்பத்துக்குப் புவியியல் ரீதியான முக்கியத்துவம் அமைந்திருந்தது. அத்துடன் அம்மக்களிடம் இருந்த மேற்கூறிய சில அரிய பண்புகளும் இருந்தன. இதன் காரணமாகவே இறுதி இறைத்தூதை சுமப்பதற்கும் மனித குலத்தை சீர்படுத்தி நேர்வழி நோக்கி அழைத்துச் செல்வதற்கும் அரபியர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.

அந்த மக்களிடம் அமைந்திருந்த இந்த பண்புகளில் சில தீமைகளை, துன்பங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தாலும் அடிப்படையில் அவை மிக உயரிய பண்புகளாகவே இருந்தன. அதனைச் சற்று சீரமைக்கும்போது மனித குலத்துக்கு அந்த பண்புகளால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன இஸ்லாம் அந்த சீர்திருத்தத்தையே செய்தது.

அவர்களிடமிருந்த மிக உயரிய பண்புகளில் “ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல்” என்ற நற்பண்புக்கு அடுத்ததாக “உயர்வான காரியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருத்தல்” என்ற பண்பு மக்களுக்கு மிக நன்மை பயக்கக் கூடியதாகும். ஏனெனில், தீமைகளையும் குழப்பங்களையும் களைந்து நீதியையும் நன்மையையும் நிலை நிறுத்துவதற்கு இந்த பண்பு மிக அவசியமாக இருக்கிறது.

மேற்கூறப்பட்டவை மட்டுமின்றி இன்னும் பல அரிய பண்புகளும் உயரிய குணங்களும் அவர்களிடம் இருந்தன. அவை அனைத்தையும் இங்கு கூறுவது நமது நோக்கமல்ல.


இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்
பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

சமுதாய அமைப்பு


அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள். அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும் திகழ்ந்தனர். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி போர் செய்யவும் அவர்கள் துணிந்திருந்தனர்.


ஓர் ஆண் தனது கொடைத்தன்மை, வீரம், வலிமையைக் கூறி தன்னைப் புகழ்ந்துக்கொள்ள நினைக்கும்போது தனது கவிதைகளில் பெண்ணை விளித்து பேசுவது போல பேசுவார். சில சந்தர்ப்பங்களில் பெண் விரும்பினால் தங்களது குலத்தாரிடையே காணப்படும் பிளவுகளை சரிசெய்து அமைதி நிலவச் செய்திடுவாள். அவள் நினைத்தால் மக்களிடையே போர் நெருப்பை மூட்டிவிடுவாள். எனினும், எவ்விதக் கருத்து வேறுபாடுமின்றி ஆண் குடும்பத் தலைவனாக விளங்கினான். அவனே முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தான். அவர்களிடையே ஆண், பெண் தொடர்பு என்பது அப்பெண்களுடைய காப்பாளர்களின் அனுமதி பெற்று திருமணத்தின் மூலமே ஏற்படுத்தப்பட்டது. தங்கள் குடும்ப ஆண்களை மீறி செயல்பட, பெண்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தார்கள்.


ஆனால், கீழ்மட்ட மக்களிடத்தில் ஆண், பெண் இணைந்து வாழ்வதற்கு பல்வேறு நடைமுறைகள் காணப்பட்டன. அவை அனைத்தும் வெட்கமற்ற இழிவான ஈனத்தனமான பழக்க வழக்கங்களாகவே இருந்தன. இது குறித்து அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:


திருமணங்கள் அறியாமைக் காலத்தில் நான்கு வகைகளாக இருந்தன.


முதல் வகை: இன்று மக்களிடையே நடைமுறையிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.


இரண்டாம் வகை: ஒருவர் தம் மனைவியிடம் “நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்தவுடன் இன்ன நபருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்!” என்று கூறி அனுப்பி விடுவார். அதன்பின் அந்த மனிதர் மூலம் கர்ப்பமானது தெரியும்வரை அவர் தன் மனைவியுடன் சேராமல் விலகி இருப்பார். அந்த மனிதர் மூலம் அவள் கர்ப்பமாகி விட்டாளெனத் தெரியவந்தால் தன் விருப்பத்திற்கேற்ப கணவர் அவளுடன் சேர்ந்து கொள்வார். திடகாத்திரமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலேயே இவ்வாறு செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ழாவு’ என்று அரபியில் பெயர் கூறப்படும்.


மூன்றாம் வகை: பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணுடன் உறவு கொள்வார்கள். அவள் கர்ப்பமாகி குழந்தை பிரசவித்த சில நாட்களுக்குப் பின் அவர்கள் அனைவரையும் தன்னிடம் வரச் சொல்வாள். அவர்கள் அனைவரும் எவ்வித மறுப்புமின்றி அவளிடம் ஒன்று கூடுவார்கள். அவர்களிடம் அவள்: “நீங்கள் செய்தது உங்களுக்குத் தெரிந்ததே! (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்து விட்டது” என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) “இது உன் குழந்தையே” என தான் விரும்பியவன் பெயரைக் குறிப்பிடுவாள். அக்குழந்தை அந்த நபரிடம் ஒப்படைக்கப்படும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.


நான்காம் வகை: பலர் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வர். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள். இப்பெண்கள் விலை மாதர்கள் ஆவர். இவர்கள் தங்களது வீட்டு வாசலில் கொடியை நட்டு வைத்திருப்பார்கள். பலர் அங்கு வந்து போவார்கள். இதில் ஒருத்தி கர்ப்பமாகிக் குழந்தை பெற்றால் மக்கள் ஒன்று கூடி அங்க அடையாளங்களை வைத்து குழந்தையின் தந்தையை கண்டறியும் முகக்குறி நிபுணர்களை அழைத்து வருவார்கள். அந்த நிபுணர்கள் ஆராய்ந்து தந்தையை முடிவு செய்து அம்மனிதனுடன் அந்தக் குழந்தையை இணைத்து விடுவார்கள். அவனிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டு அவனுடைய மகன் என்று பெயர் சொல்லி அழைக்கப்படும். அதைத் தன் குழந்தையல்ல என்று அவனும் மறுக்க மாட்டான்.


அல்லாஹ் சத்திய மார்க்கத்துடன் முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பியபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள இஸ்லாமியத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத்திருமணங்கள் அனைத்தையும் தகர்த்து விட்டான். (ஸஹீஹுல் புகாரி, ஸுனன் அபூதாவூது)


சிலசமயம் இரு வகுப்பாரிடையே போர் நடைபெறும். அதில், தோல்வி அடைந்தவர்களின் பெண்களை வெற்றிபெற்ற பிரிவினர் சிறைபிடித்து தங்களது அடிமைகளாக்கி அனுபவிப்பார்கள். இதில் பிறக்கும் குழந்தைகளின் பெயர்கள் காலம் முழுவதும் அடிமைகளான அவர்களது தாய்மார்களின் பெயர்களுடன் சேர்த்து அழைக்கப்படும் அவமானம் இருந்து வந்தது.


அறியாமைக் காலத்தில் ஆண்கள் எவ்வித வரம்புமின்றி பல பெண்களை மணந்து கொண்டனர். இஸ்லாம் அதை தடுத்து நான்கு பெண்களுக்கு மேல் மணமுடிக்கக் கூடாது என வரையறுத்தது. மேலும், இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மணந்து கொண்டனர். தங்களது தந்தை இறந்துவிட்டால் அல்லது விவாகரத்து செய்துவிட்டால் அவன் மனைவியை (மாற்றாந்தாயை) மணந்து கொள்ளும் பழக்கமும் அவர்களிடையே காணப்பட்டது. இவ்விரண்டையும் இஸ்லாம் தடை செய்தது. (பார்க்க அல்குர்ஆன் 4 : 22, 23). அவ்வாறே விவாகரத்து செய்வதில் குறிப்பிட்ட முறை எதுவுமின்றி விரும்பிய நேரத்தில் தலாக் (விவாகரத்து) கூறி விரும்பிய நேரத்தில் மனைவியரை திரும்ப அழைத்துக் கொண்டனர். இதை தடை செய்து மூன்று முறைக்கு மேல் இவ்வாறு செய்யலாகாது என இஸ்லாம் வரையறுத்தது. (ஸுனன் அபூதாவூது)


சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் விபசாரம் பரவியிருந்தது. சிலர் மட்டும் இந்த இழிசெயலை வெறுத்து கௌரவத்துடன் வாழ்ந்தனர். அடிமைப் பெண்களின் நிலைமை சுதந்திர பெண்களின் நிலைமையைவிட மிக மோசமாக இருந்தது. அந்த அறியாமைக்கால மக்களில் பெரும்பாலோர் விபசாரத்தை ஒரு குற்றச் செயலாகவே கருதவில்லை.


இது குறித்து நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஒரு மனிதர் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! இன்னவன் என் மகனாவான். அறியாமைக் காலத்தில் நான் அவனது தாயுடன் விபசாரம் செய்துள்ளேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இஸ்லாமிய மார்க்கத்தில் இவ்வாறான உரிமைக் கோரலுக்கு வாய்ப்பில்லை. அறியாமைக் கால செயல்களெல்லாம் முடிந்துபோய் விட்டன. இப்போது குழந்தை அதனுடைய தாயின் கணவனையே சாரும். விபசாரம் புரிந்தவனைக் கல்லால் எறிந்து கொல்லப்படும்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூது)


ஸஅது இப்னு அபீ வக்காஸ், அப்து இப்னு ஜம்ஆ ஆகிய இருவருக்கிடையே ஜம்ஆவின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்த அப்துர் ரஹ்மான் இப்னு ஜம்ஆவின் விஷயத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் மிகப் பிரபலமானதாகும். (பார்க்க ஸஹீஹுல் புகாரி 2053, 2218)


அரபியர்கள் தங்களது பிள்ளைகளுடன் கொண்டிருந்த தொடர்பு பலவகைகளில் அமைந்திருந்தது. அவர்களில் சிலர் தங்களது பிள்ளைகளை உயிருக்குயிராக நேசித்தனர். இதைப் பற்றி ஒரு கவிஞர் கூறுவதாவது:


“நமது குழந்தைகள் புவியில் தவழும் நமது ஈரக்குலைகளாவர்.”


தற்காலத்தைப் போன்றே, அக்காலத்தில் சிலர் பெண் பிள்ளைகளை அவமானமாகக் கருதியும் செலவுக்குப்பயந்தும் உயிருடன் புதைத்தனர். மேலும் சிலர், வறுமைக்கு அஞ்சி தங்களின் ஆண் குழந்தைகளையும் கொலை செய்தனர். (பார்க்க அல்குர்ஆன் (6 : 151), (16 : 58, 59), (17 : 31), (81 : 8) எனினும் இப்பழக்கம் பரவலாகக் காணப்படவில்லை. காரணம், எதிரிகளுடன் போரிடுவதற்கு அவர்களுக்கு ஆண் மக்களின் தேவை அதிகமாக இருந்தது.


அரபியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்குள் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தனர். குலப்பெருமைக்காகவே வாழவும் குலப்பெருமைக்காகவே சாகவும் துணிந்தனர். ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சமூகப் பித்தும் இனவெறியும் கொண்டு அலைந்தனர். இனவாதமும் இரத்த பந்தமான குடும்பப் பாரம்பரியமும் அவர்களது சமூக அமைப்பின் அஸ்திவாரமாகத் திகழ்ந்தன. அவர்களிடையே அறியப்பட்ட “உன் சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய்” என்ற பழமொழியின் வெளிப்படையான பொருளுக்கேற்பவே அவர்கள் நடந்து வந்தார்கள். ஆனால், இஸ்லாம் இப்பழமொழிக்கு நேரடிப் பொருள் கொள்வதை மாற்றி அநியாயக் காரனை அவனுடைய அநியாயத்திலிருந்து தடுப்பதுதான் அவனுக்குச் செய்யும் உதவி என பொருள் தந்தது. எனினும், சில நேரங்களில் தலைமைத்துவத்தை அடைவதற்காக ஒரே வமிசத்தில் தோன்றியவர்கள் கூட தங்களுக்குள் வாளெடுத்துப் போரிட்டுக் கொண்டனர். எடுத்துக்காட்டாக அவ்ஸ்-கஸ்ரஜ், அப்ஸ்-துப்யான், பக்ர்-தக்லிப் கோத்திரத்தினர் தலைமைப் பதவிக்காக தங்களுக்குள் பகைவர்களாக இருந்தனர்.


பல மாறுபட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பற்றவர்களாக பிரிந்து வாழ்ந்தனர். குடும்பச் சண்டையிலேயே தங்கள் ஆற்றல்களை இழந்தனர். சில நேரங்களில் அவர்கள் கொண்டிருந்த மத நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அவர்களுக்கிடையில் இருந்த பகைமையின் வேகத்தை குறைத்தன. மற்றும் சில நேரங்களில் சமாதான ஒப்பந்தங்களும் நட்பு ஒப்பந்தங்களும் பல மாறுபட்ட கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தின. புனித மாதங்கள் அவர்களுக்கு அருளாகவும் வாழ்வுக்கும் வியாபாரத்திற்கும் பேருதவியாகவும் அமைந்திருந்தன. புனித மாதங்களை அவர்கள் கண்ணியப்படுத்தி வந்ததால் அம்மாதங்களில் மட்டும் அவர்கள் முழு நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் இருந்தனர்.


அபூரஜா அல் உதாதி (ரழி) கூறுகிறார்: “ரஜபு மாதம் வந்துவிட்டால் நாங்கள் ஈட்டிகளின் கூர்மையை அகற்றும் மாதம் வந்துவிட்டது” என்று கூறி ஈட்டி, அம்புகளின் முனையை அகற்றிவிடுவோம். இவ்வாறே மற்ற புனித மாதங்களிலும் நடந்து கொள்வோம். (ஸஹீஹுல் புகாரி. ஃபத்ஹுல் பாரி)


சுருங்கக்கூறின் சமூக அமைப்பு தரங்கெட்டு உருக்குலைந்து இருந்தது. மூட நம்பிக்கைகள் மிகைத்திருந்தன. அறியாமை அவர்களை ஆட்டிப் படைத்தது. மனிதர்கள் கால்நடைகளாக வாழ்ந்தனர். பெண்கள் விற்பனைப் பொருளாக்கப்பட்டு ஜடமாகவே பாவிக்கப்பட்டனர். சமூகங்களுக்கிடையில் உறவுகள் துண்டிக்கப்பட்டிருந்தன. குடிமக்களைச் சுரண்டி தங்களது கருவூலங்களை நிரப்பிக்கொள்வது அல்லது எதிரிகளின் மீது தாக்குதல் நடத்துவதே ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.


பொருளாதாரம்


சமூக நிலைமைக்கேற்ப பொருளாதாரம் அமைந்திருந்தது. அரபியர்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்யும்போது இக்கருத்து நமக்குத் தெரியவரும். அவர்களது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வியாபாரமே பெரும் துணையாக இருந்தது. அமைதியும் பாதுகாப்பும் இருந்தால்தான் வியாபாரப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பது தெரிந்ததே! ஆனால், அரபிய தீபகற்பத்தில் புனித மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் அந்த அமைதியும் பாதுகாப்பும் இருக்கவில்லை. இப்புனித மாதங்களில்தான் உக்காள், தில்மஜாஸ், மஜன்னா போன்ற அரபியர்களின் பெயர் போன வியாபாரச் சந்தைகள் நடைபெற்றன.


அரபியர்களிடம் தொழில் துறைகளைப் பற்றிய அறிவு காணப்படவில்லை. துணி நெய்தல், தோல் பதனிடுதல் போன்ற சில தொழில் யமன், ஹீரா மற்றும் ‘மஷாஃபுஷ் ஷாம்’ ஆகிய பகுதிகளில் மட்டும் காணப்பட்டன. அரபிய தீபகற்பத்தின் உட்புறத்தின் சில பகுதிகளில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நடைபெற்று வந்தன. அரபியப் பெண்கள் அனைவரும் நெசவுத் தொழில் செய்தனர். எனினும், அனைத்து செல்வங்களும் போர்களில் செலவழித்து வீணடிக்கப்பட்டன. அவர்களிடையே வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடியது. அணிவதற்கான ஆடைகள் கூட இல்லாமல் தவித்தனர்.


பண்பாடுகள்


அக்கால மக்களிடையே செம்மையான சிந்தனையோ பகுத்தறிவோ இல்லை என்பதால் அக்காலத்தை “அறியாமைக்காலம்” என வருணிக்கப்பட்டது. ஏற்க இயலாத செயல்பாடுகளும் இழிவான நடத்தைகளும் குடி கொண்டிருந்தன. அதே நேரத்தில் வியக்கத்தக்க சில அரிய பண்புகளும் அவர்களிடம் குடிகொண்டிருந்தன.


அவையாவன:


1) கொடைத் தன்மை மற்றும் தயாளத்தன்மை: அவர்கள் கொடைத் தன்மையில் ஒருவரையொருவர் போட்டியிட்டனர். இந்தக் கொடைத் தன்மையைக் கொண்டே தங்களது பெரும்பாலான கவிகளில் தங்களையும் பிறரையும் புகழ்ந்து கொண்டனர்.


கடுமையான குளிரும் பஞ்சமும் நிலவி வரும் காலத்தில் ஒருவரிடம் விருந்தினர் ஒருவர் வருகிறார். அம்மனிதரிடம் தனது குடும்பத்தின் தேவைக்காக இருக்கும் ஓர் ஒட்டகையைத் தவிர வேறொன்றுமில்லாத நிலையிலும் அந்த ஒட்டகையை அறுத்து விருந்தினரை உபசரிக்க அவரைத் தூண்டுமளவு அவர்களிடம் விருந்தோம்பல் குணம் மிகைத்திருந்தது.


அவ்வாறே அவர்களில் இயலாத ஒருவர் நஷ்டஈடு வழங்க வேண்டியிருந்தால் அது தங்களது சக்திக்கு மீறியதாக இருப்பினும் அந்தத் தொகையைத் தான் தருவதாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். இதனால், பிறர் உயிர் பறிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தார்கள். இதைத் தங்களுக்குப் பெருமையாகக் கருதினார்கள்.


அவர்களிடமிருந்த தர்ம சிந்தனையின் விளைவாக மது அருந்துவதை பெருமைக்குரியதாக கருதினர். அது ஒரு சிறப்பான செயல் என்பதற்காக அதனை அவர்கள் நேசிக்கவில்லை. மாறாக, மது அருந்துவது தர்மம் செய்வதற்கான ஒரு வழியாக இருக்கிறது. செல்வத்தை வாரி இறைப்பதை மனதிற்கு எளிதாக்குகிறது என்பதால் அதை நேசித்தனர். அதனாலேயே திராட்சைக் கொடிக்கு ‘கரம்’ (கொடை) என்றும் அதிலிருந்து பிழியப்பட்ட மதுவுக்கு ‘பின்துல் கரம்’ (கொடையின் புதல்வி) எனவும் பெயரிட்டிருந்தனர். எனவேதான், மது அருந்துவதை பெருமைப்படுத்தியும் புகழ்ந்தும் பல அரபுக்கவிதைகள் அறியாமைக் காலத்தில் இயற்றப்பட்டதை நாம் பார்க்கிறோம்.


இதுபற்றி அன்தரா இப்னு ஷத்தாத் அல் அபஸீ தனது கவிதைத் தொகுப்பில் கூறுகிறார்:


“மதிய வேளைக்குப் பின் வடிகட்டியுடன் உள்ள

மஞ்சள் நிறக் கண்ணாடி கெண்டியிலிருந்து
அடையாளமிடப்பட்ட தெளிவான கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றி
இடக்கையால் மது அருந்தினேன்.
நான் குடித்தால் என் செல்வங்கள் அனைத்தையும் வாரி இறைப்பேன்.
ஆனால் எனது கண்ணியத்தை கரைபடியாது காப்பேன்.
மது மயக்கம் தெளிந்த பின்னும் வாரி வழங்குவதில் ஒரு குறையும் வைக்கமாட்டேன்.
இத்தகைய என் பண்பாடும் பெருந்தன்மையும் உனக்குத் தெரிந்ததே!”

சூதாடுவதையும் தங்களது கொடைத்தன்மையின் வெளிப்பாடாக அவர்கள் கருதினார்கள். ஏனெனில், சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர், தான் செலவிட்டதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை ஏழை, எளியோருக்கு கொடுத்து விடுவார். இதனாலேயே மது அருந்துவதிலும் சூதாடுவதிலும் எப்பலனுமே இல்லை என்று குர்ஆன் மறுக்கவில்லை. மாறாக, அதன் பலனைவிட அதன் தீய விளைவுதான் அதிகம் என்று கூறுகிறது.


(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: “அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றிலுள்ள பாவம் அவற்றின் பயனை விட மிகப் பெரிது.” (அல்குர்ஆன் 2 : 219)


2) ஒப்பந்தங்களை நிறைவேற்றல்: அவர்கள் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதிலும் வாக்குகளைக் காப்பாற்றுவதிலும் மிக உறுதியாக இருந்தனர். தங்களது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டாலும் தங்களது வீடுகள் தகர்க்கப்பட்டாலும் அது குறித்து சிறிதும் இலட்சியம் செய்யாமல் தங்களது ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். இதற்கு ஹானி இப்னு மஸ்வூத் ஷைபானி, ஸமவ்அல் இப்னு ஆதியா போன்றவர்களின் சம்பவங்கள் சான்றாகும். (இதிலுள்ள ஹானியின் சம்பவம் ‘ஹீரா நாட்டில் ஆட்சி’ என்ற தலைப்பில் சென்றுள்ளது.)


அடுத்து ஸமவ்அல் இப்னு ஆதியா பற்றிய சம்பவமாவது: ஸமவ்அலிடம் இம்ரவுல் கைஸ் சில கவச ஆடைகளை அமானிதமாகக் கொடுத்திருந்தார். ‘ஹாஸ்’ என்ற கஸ்ஸானிய மன்னன் அதனை அபகரிக்க நாடினான். ஸமவ்அல் தீமாவிலுள்ள தனது கோட்டையில் தஞ்சம் புகுந்தான். அவருடைய பிள்ளைகளில் ஒருவர் கோட்டைக்கு வெளியில் மாட்டிக்கொண்டார். அவரை மன்னன் ஹாஸ் பணயமாகப் பிடித்துக்கொண்டு கவச ஆடைகளை கொடுக்காவிட்டால் பிள்ளையைக் கொன்று விடுவேன் என மிரட்டினான். ஸமவ்அல் கொடுக்க மறுத்து தன் கண்ணெதிரே தன் பிள்ளை கொல்லப்படுவதையும் சகித்துக்கொண்டார்.


3) சுயகௌரவம் மற்றும் அநீதத்தை சகித்துக் கொள்ளாத் தன்மை: இப்பண்புகள் அவர்களிடம் கட்டுக்கடங்கா வீரத்தையும் அதிரடி ரோஷத்தையும் வேகமாக உணர்ச்சி வசப்படுவதையும் தூண்டின. எவருடைய சொல்லாவது தனக்கு கௌரவக் குறைவை அல்லது இழிவை ஏற்படுத்துகிறது என அறிந்தால் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள். தங்களது உயிரைப் பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் வாளாலும், அம்புகளாலும் அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.


4) செயலில் உறுதியுடன் இருத்தல்: அம்மக்கள் ஒரு செயல் தங்களது பெருமைக்கும் உயர்வுக்கும் காரணமாக அமையும் என நம்பினால் அதை செயல்படுத்துவதிலிருந்து அவர்களை எந்தவொரு சக்தியும் தடுத்துவிட முடியாது. தங்களது உயிரைக் கொடுத்தாவது அதனை அவர்கள் செய்து முடிப்பார்கள்.


5) நிதானித்தல், சகித்தல், அமைதி காத்தல்: இப்பண்புகளும் அவர்களிடம் அமைந்திருந்தன. எனினும், வீரமும் போர் மீதான ஆர்வமும் மிகுந்திருந்ததால் இப்பண்புகள் மிக அரிதாகவே காணப்பட்டன.


6) எளிமையை விரும்பிப் பகட்டை வெறுத்தல்: அவர்களிடம் இப்பண்பும் காணப்பட்டது. அதனால் அவர்கள் உண்மை, நேர்மை, வாய்மை போன்றவற்றை நேசித்து மோசடி, ஏமாற்றுதல் போன்ற இழிகுணங்களை வெறுத்தனர்.


உலகின் ஏனைய பகுதிகளைப் பார்க்கிலும் அரபிய தீபகற்பத்துக்குப் புவியியல் ரீதியான முக்கியத்துவம் அமைந்திருந்தது. அத்துடன் அம்மக்களிடம் இருந்த மேற்கூறிய சில அரிய பண்புகளும் இருந்தன. இதன் காரணமாகவே இறுதி இறைத்தூதை சுமப்பதற்கும் மனித குலத்தை சீர்படுத்தி நேர்வழி நோக்கி அழைத்துச் செல்வதற்கும் அரபியர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.


அந்த மக்களிடம் அமைந்திருந்த இந்த பண்புகளில் சில தீமைகளை, துன்பங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தாலும் அடிப்படையில் அவை மிக உயரிய பண்புகளாகவே இருந்தன. அதனைச் சற்று சீரமைக்கும்போது மனித குலத்துக்கு அந்த பண்புகளால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன இஸ்லாம் அந்த சீர்திருத்தத்தையே செய்தது.


அவர்களிடமிருந்த மிக உயரிய பண்புகளில் “ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல்” என்ற நற்பண்புக்கு அடுத்ததாக “உயர்வான காரியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருத்தல்” என்ற பண்பு மக்களுக்கு மிக நன்மை பயக்கக் கூடியதாகும். ஏனெனில், தீமைகளையும் குழப்பங்களையும் களைந்து நீதியையும் நன்மையையும் நிலை நிறுத்துவதற்கு இந்த பண்பு மிக அவசியமாக இருக்கிறது.


மேற்கூறப்பட்டவை மட்டுமின்றி இன்னும் பல அரிய பண்புகளும் உயரிய குணங்களும் அவர்களிடம் இருந்தன. அவை அனைத்தையும் இங்கு கூறுவது நமது நோக்கமல்ல.

இன்றைய இளம்பெண்கள்

இன்றைய இளம்பெண்கள்
  
 ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.

இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.

இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்;

தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்;

மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.

அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)


ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் ம
ுறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.

இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.

இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்;

தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்;

மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.

அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)

காதலில் சிக்கி ஓடிப் போக நினைக்கும் பெண்களின் கவனத்திற்கு!!-ஒரு விழிப்புணர்வு ஆய்வு ..

ஒவ்வொரு நாளும் ஒரு தகவல் !

காதலில் சிக்கி ஓடிப் போக நினைக்கும் பெண்களின் கவனத்திற்கு!!-ஒரு விழிப்புணர்வு ஆய்வு ..

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும்தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள். 

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிபோக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, சகோதரி களே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை மற்றும் சகோதரிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்,நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோஅல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள்.

 ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.

நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.

கடந்த மாதம்  முன்பு நடந்த ஒரு கொடூரத்தை சொல்கிறேன், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு அழகாண இஸ்லாமிய பெண், ஒரு காபிரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்தால், அவனும் இஸ்லாமிய மதத்திற்கு வந்து தான் அவளை திருமணம் செய்தான். ஆனால், அந்தஇன்பம் 40 நாட்களுக்குள் அவளுக்கு முடிவுக்கு வந்தது . ஆம், அவளை ஒரு அறையில் அடைத்து கொடூரமாககொன்று , நகை, பணங்கள் எடுத்து ஓடிவிட்டான், 3 நாட்களுக்கு பிறகு காவலர்கள் உதவிடன் அறையை திறக்கும்
போது, உடல் அழுகிய நிலையில் அவளின் பிணம், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவள் கற்பமாக உள்ளாள் என்பது குறிப்பிட தக்கது, இந்த சம்பவத்தை ஊடகங்கள் மறைத்தது அதை விட கொடுமையானது.


ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம். உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற்றோர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்,தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும். நம் சகோதரிகளை பாதுகாக்கவேண்டும்..

இது பற்றிய இஸ்லாம் கூறுவது.....



இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்... 
நினைவில் கொள்க ! நீங்கள் ஒவ்வொரு வரும் பொருப்பாளியே . உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொருப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள் . ஆட்சித் தலைவர் மக்களின் பொருப்பாளராவார் . அவர் தன் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார் . ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொருப்பாளன் ஆவான் . அவன் , தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான் . பெண் தன் கணவனின் வீட்டாருக்கும் , அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள் . அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள் . ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான் . அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான் . நினைவில் கொள்க ! உங்களில்ஒவ்வொருவரும் பொருப்பாளியே ! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் .(ஆதாரம் ஷஹீஹில் புஹாரி பாகம் 7 , அத்தியாயம் 93 எண் 7138)

அல் குரான் கூறுவது...
                                    நரகத்தில் நெருப்புக்கு அதிகமான உணவு பெண்கள் தான் என்றும், தமது கணவருக்கு மாறு செய்யும் பெண்களுக்குசொர்க்கம் ஹராம் என்றும், அழகும்,பணமும்,ஆரோக்யமும் நிறைந்த ஒரு காபிரை விட, இது எல்லாம் இல்லாத ஒருசாதாரண மூமினை தான் திருமணம் பண்ணவேண்டும் என்றும், சூரத்துல் அல்-பகரா , அந்நிஸா போன்றஅத்தியாயங்களில் கடுமையாக கட்டளையிட்டு நம்மை எச்சரிக்கின்றான்.
ஒவ்வொரு நாளும் ஒரு தகவல் !


பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள
் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும்தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிபோக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, சகோதரி களே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை மற்றும் சகோதரிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்,நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோஅல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள்.


ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.


நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.


இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.


கடந்த மாதம் முன்பு நடந்த ஒரு கொடூரத்தை சொல்கிறேன், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு அழகாண இஸ்லாமிய பெண், ஒரு காபிரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்தால், அவனும் இஸ்லாமிய மதத்திற்கு வந்து தான் அவளை திருமணம் செய்தான். ஆனால், அந்தஇன்பம் 40 நாட்களுக்குள் அவளுக்கு முடிவுக்கு வந்தது . ஆம், அவளை ஒரு அறையில் அடைத்து கொடூரமாககொன்று , நகை, பணங்கள் எடுத்து ஓடிவிட்டான், 3 நாட்களுக்கு பிறகு காவலர்கள் உதவிடன் அறையை திறக்கும்

போது, உடல் அழுகிய நிலையில் அவளின் பிணம், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவள் கற்பமாக உள்ளாள் என்பது குறிப்பிட தக்கது, இந்த சம்பவத்தை ஊடகங்கள் மறைத்தது அதை விட கொடுமையானது.


ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம். உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற்றோர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்,தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும். நம் சகோதரிகளை பாதுகாக்கவேண்டும்..


இது பற்றிய இஸ்லாம் கூறுவது.....




இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...

நினைவில் கொள்க ! நீங்கள் ஒவ்வொரு வரும் பொருப்பாளியே . உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொருப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள் . ஆட்சித் தலைவர் மக்களின் பொருப்பாளராவார் . அவர் தன் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார் . ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொருப்பாளன் ஆவான் . அவன் , தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான் . பெண் தன் கணவனின் வீட்டாருக்கும் , அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள் . அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள் . ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான் . அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான் . நினைவில் கொள்க ! உங்களில்ஒவ்வொருவரும் பொருப்பாளியே ! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் .(ஆதாரம் ஷஹீஹில் புஹாரி பாகம் 7 , அத்தியாயம் 93 எண் 7138)

அல் குரான் கூறுவது...

நரகத்தில் நெருப்புக்கு அதிகமான உணவு பெண்கள் தான் என்றும், தமது கணவருக்கு மாறு செய்யும் பெண்களுக்குசொர்க்கம் ஹராம் என்றும், அழகும்,பணமும்,ஆரோக்யமும் நிறைந்த ஒரு காபிரை விட, இது எல்லாம் இல்லாத ஒருசாதாரண மூமினை தான் திருமணம் பண்ணவேண்டும் என்றும், சூரத்துல் அல்-பகரா , அந்நிஸா போன்றஅத்தியாயங்களில் கடுமையாக கட்டளையிட்டு நம்மை எச்சரிக்கின்றான்.

போலியின் அடையாளம்..

சீ.என்.என் செய்தியில் பாப்பரசரின் சர்ச்சைக்குரிய நூல்...!

பாப்பரசரின் புத்தகத்தில்,
நாம் இன்று பாவித்துக்கொண்டிருக்கும் கிறிஸ்துவ காலண்டர் உண்மையிலேயே 6ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு மடத்தனமான பாதிரியாரினால் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இன்னும், நாம் கணக்கிட்டு வைத்திருப்பது போல இயேசு பிறந்தவருடம் சரியானதல்ல. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரேயே இயேசு பிறந்துவிட்டார்.
அவருடைய பிறந்த தினத்தை கூட பிழையாக தான் நாம் விளங்கிக்கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இந்த நூல் பல மொழிகளிலும் வெளியிடப்படவிருக்கின்றது.

ஒருவேளை இச்செய்தி ஆதாரமற்றது என்று சிலர் மறுக்க முற்படலாம்.

அதற்காக சீ.என்.என் செய்தியின் அதிகார பூர்வ இணைய லின்க்கை தருகின்றோம்.

http://edition.cnn.com/2012/11/22/world/europe/vatican-pope-jesus-book/index.html

நன்றி.

[[[அல்-குர்'ஆன் 17:81
(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.]]]
சீ.என்.என் செய்தியில் பாப்பரசரின் சர்ச்சைக்குரிய நூல்...!

பாப்பரசரின் புத்தகத்தில்,
நாம் இன்று பாவித்துக்கொண்டிருக்கும் கிறிஸ்துவ காலண்டர் உண்மையிலேயே 6ம் நூற்
றாண்டை சேர்ந்த ஒரு மடத்தனமான பாதிரியாரினால் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இன்னும், நாம் கணக்கிட்டு வைத்திருப்பது போல இயேசு பிறந்தவருடம் சரியானதல்ல. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரேயே இயேசு பிறந்துவிட்டார்.
அவருடைய பிறந்த தினத்தை கூட பிழையாக தான் நாம் விளங்கிக்கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இந்த நூல் பல மொழிகளிலும் வெளியிடப்படவிருக்கின்றது.

ஒருவேளை இச்செய்தி ஆதாரமற்றது என்று சிலர் மறுக்க முற்படலாம்.

அதற்காக சீ.என்.என் செய்தியின் அதிகார பூர்வ இணைய லின்க்கை தருகின்றோம்.

http://edition.cnn.com/2012/11/22/world/europe/vatican-pope-jesus-book/index.html

நன்றி.

[[[அல்-குர்'ஆன் 17:81
(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.]]]

நிலநடுக்கம் ஏற்படுவது எப்படி என்று பார்ப்போம் !!



நமது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது உங்களில் சிலர் அதனை உணர்ந் திருப்பீர்கள். அந்த நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

இலேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 இலட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன.

பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக் கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும்.

ஜப்பானில்தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக இலேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை.

பசிபிக் கடலில் உள்ள பல தீவுகள், இந்தோனேஷியா, துருக்கி, கிரேக்கம், தென் அமெரிக்கச் சிலி ஆகியன நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளன. 1883ஆம் ஆண்டு ஆகச்டு மாதம் 26ஆம் நாள் இந்தோனேஷியா அருகே யுள்ள கிரகடோவாத் தீவில் கராங் எனும் எரிமலை பயங்கரமாகக் கக்கியபோது நிலநடுக்கம் ஏற்பட்டு அத்தீவின் சில பகுதிகள் கடலில் மூழ்கின.

1923ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் பேர் உயிரிழந்தனர்.

1939இல் தென் அமெரிக்கச் சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருபதாயிரம் பேரும், அதே ஆண்டில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.

1993 ஆம் ஆண்டு இந்தியாவின் மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 25 ஆயிரம் மக்களும்,

2001 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். இப்படிப் நிலநடுக்கம் ஏற்பட்டுப் பல உயிர்கள், உடமைகள் அழிவது ஏன்? பூமியில் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களின் வெளிவிளைவுகளே நிலநடுக்கம்.

பூமியின் மேலே தோடுபோல அமைந்துள்ள மேற்புறப் பகுதி பாறைகளைக் கொண்டுள்ளது. இதனைப் புறணி என்பர்.

இப்புறணி எல்லா இடங்களிலும் நிலையாக அமைந்து இருக்கவில்லை. அவ்வாறு உறுதியாக அமைந்திராத இடங்களில் உட்புறப் பாறைகள் விரிசல் விட்டுச் சரிகையில், உட்புறத்தில் அமைந்த பெரும்பாறைகள் வேறு பெரும்பாறைகளுடன் மிகுந்த ஆற்றலுடன் உராய்கின்றன. அதனால் ஏற்படும் அதிர்வுகள் பூமியின் மேற்பரப்பை அடைவதால் பூமி அதிர்ச்சியான நிலநடுக்கம் ஏற்படுகிறது.

பூமிக்குள்ளே ஏற்படக்கூடிய இம்மாறுதல்கள் எல்லாமே வெளிப்பகுதியில் விளைவினை உண்டாக்குவதில்லை.

பூமியின் மேற்புறப் பாறை அடுக்குகள் காப்பு உறை போல அமைந்துள்ளதால், சில இடங்களில் மட்டுமே பூமியின் உள்ளே ஏற்படும் மாறுதல்கள் வெளிப்பகுதியில் விளைவை ஏற்படுத்துகின்றன. எனவேதான் பூமியில் சில இடங்களில் மட்டும் அடிக்கடி பூமி அதிர்வு ஏற்படுகிறது.

நன்றி
பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன்

Tuesday, November 27, 2012

வரலாற்றில் இன்று

நவம்பர் 27 




 

1895: தனது சொத்துக்களில் 94 சதவீதம் நோபல் பரிசை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தனது கடைசி உயிலில் அல்பிரட் நோபல் கையெழுத்திட்டார்.

1944: பிரித்தானிய விமானப்படை ஆயுதக் களஞ்சியமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 70 பேர் பலி.

1964: அணு ஆயுத பரிசோதனைகளை நிறுத்துமாறும் ஆயுதக்களைவை ஆரம்பிக்குமாறும் அமெரிக்கா, சோவியத் யூனியனிடம் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு கோரினார்.

1975: கின்னஸ் சாதனை நூல் ஸ்தாபகரும் தொலைக்காட்சி அறிவிப்பாளருமான ரோஸ் மெக்வேர்டர் லண்டனில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1983: ஸ்பெய்னின் மட்ரிட் நகருக்கு அருகில் விமானம் வீழ்ந்ததால் 181 பேர் பலி.

1999: நியூஸிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக ஹெலன் கிளார்க் தெரிவானார்.

2005: உலகின் முதலாவது பகுதியளவு முகமாற்றுச் சிகிச்சை பிரான்ஸில் நடைபெற்றது.

2006: ஐக்கிய கனடாவுக்குள் கியூபெக் ஒரு தேசமாக இருக்குமென்ற பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் முன்மொழிவை கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

வரலாற்றில் இன்று

நவம்பர் 26
 

1944: ஜேர்மனியின் வி-2 ரொக்கட் மூலம் பிரிட்டனில் வர்த்தக நிலையமொன்று தாக்கப்பட்டதில் 168 பேர் பலி.


1944: பெல்ஜியத்தின் மீது ஜேர்மனி வி-2 ரொக்கட் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது.


1949: டாக்டர் பி.ஆர். அம்பேத்காரினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பை இந்திய நாடாளுமன்றம் அங்கீகரித்தது.


1950: கொரிய யுத்ததத்தில் தென்கொரியா மற்றும் ஐ.நா. படைகளுக்கு எதிராக சீனா பாரிய தாக்குதல்களை ஆரம்பித்தது.


1954: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார்.


1965:அஸ்டெரிஸ்-1 செய்மதியை சஹாரா பாலைவனத்தில் வைத்து ஏவியதன் மூலம் செய்திமதியை ஏவிய மூன்றாவது நாடாகியது பிரான்ஸ்.


1983: லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் 6800 தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டன.



1990: விண்கலங்களை ஏற்றிச்செல்லும் டெல்டா –ii ரொக்கட் தனது முதல் பறப்பை ஆரம்பித்தது.



2008: மும்பையில் தொடர் தாக்குதல்களில் 175 பேர் பலி, 300 இற்கும் அதிகமானோர் காயம்.

தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடம்!




தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடம்!

தங்கம் இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. விலை ஏறினாலும் விற்பனை குறையவில்லை. 2–வது இடத்தில் சீனா உள்...
ளது

இந்தியாவிற்கான தங்கத்தின் தேவை 92 சதவீதம் இறக்குமதி மூலமே சரிசெய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களிடம் தற்போது, 18 ஆயிரம் டன் தங்க நகைகள் உள்ளதாக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.

1930–ம் ஆண்டு முதல் ஒரு சவரன் தங்கத்தின் விலை..

1930 – ரூ.14
1935 – ரூ.24
1940 – ரூ.28
1945 – ரூ.49
1950 – ரூ.79
1955 – ரூ.63
1960 – ரூ.88
1965 – ரூ.56
1970 – ரூ.147
1975 – ரூ.432
1980 – ரூ.1064
1985 – ரூ.1544
1990 – ரூ.2520
1995 – ரூ.3600
2000 – ரூ.3480
2005 – ரூ.4640
2006 – ரூ.7680
2007 – ரூ.7600
2008 – ரூ.9200
2009 – ரூ.10944
2010 – ரூ.12500
2011 – ரூ.21120
இன்றைக்கு - ரூபாய் 26252

கர்ப்பம்” இஸ்லாமின் பார்வை.



இறைவன் முதல் மனிதனை மண்ணால் படைத்து அவரிலிருந்தே அவருக்கு ஒரு துணையையும் படைத்தான். அதன் பிறகு அந்த இருவரின் ம...
ூலமாக மனிதவர்க் கத்தைப் இந்திரியதைக் கொண்டு படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.
(கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு. (53:46) (உங்களைப் படைக்கின்றான்).
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா (75:37)
அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண் பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான் அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “திண்ணமாக அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர் 'இறைவா! (இது ஒரு துளி) விந்து இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு'' என்று கூறிக் கொண்டிருப்பார். அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும்போது 'இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா? நற்பாக்கியம் பெற்றதா? துர்பாக்கியம் உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு? என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும். (புகாரி: 3333)
இறைவன் தான் விரும்புகின்ற விதத்தில் மனிதனைப்படைத்து அந்த மனிதனுடைய விதியையும் கர்ப்பக் கோளறையிலேயே நிர்ணயித்து விடுகின்றான். இதை ஒருவன் மறுத்தால் அவன் முஸ்லிமாக இருப்பதற்கான தகுதியை இழந்துவிடுகின்றான். இது ஈமானைச் சார்ந்தது.
அடுத்து ஒரு பெண் கருவுற்றால் அவளுக்கு ஏற்ப்படும் மாற்றங்கள் என்ன? அவளுக்கு ஏற்ப்படும் கஷ்டங்கள் என்ன? அவள் பேணவேண்டிய ஒழுங்குகள் என்ன என்பது என்பது பற்றி மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றதைப் பார்ப்போம்.
கர்ப்பம் அறிகுறிகள்

கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…

1. மாதவிலக்கு நிற்பது
கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக் காமலேயே மாத விலக்கு நின்றிருக்கும்.

இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணி யாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மன நிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும். நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன், அனோ ரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்ற வற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாத விலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.

2. களைப்பு

பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.

3. மசக்கை

இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற் கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப் பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.
சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப் பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத் திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்தநாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

அதுசரி… இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?

கருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார் மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.

இதற்கு காரணம் என்ன?

இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக் குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்பகாலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.

4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறி குறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.

5. மார்பகப் பகுதி மாற்றங்கள்

முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.

கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப் புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்

சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.


7. வயிறு பெரிதாகுதல்

கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல் 20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரை நீடிக்கும்.

கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.
இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறி களாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.

Monday, November 26, 2012

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை


உலகின் மிக முக்கிய நறுமணப்பொருளான இலவங்கப்பட்டை மூவாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மருந்து தாவரம் ஆகும். யூதர்களின் நூலான டோராவில் இது பற்றி குறிப்பு உள்ளது. எகிப்து மற்றும் இந்தியாவில் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பே லவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் எகிப்தில் கி.மு. 500 – ம் ஆண்டு முதல் மருந்தாக உபயோகிப்பட்டு வருகின்றன. இவற்றின் பட்டை மற்றும் இலைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.


செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:- இத்தாவரத்தில் சின்ன மால்டிஹைடு, யூஜினால், டேனின்கள், கௌமாரின்கள் மற்றும் தாவரப்பசைப் பொருட்கள் காணப்படுகின்றன. லவங்கப்பட்டையில் நார்ச்சத்தும் மெக்னீசியம், இரும்பு, மற்றும் கால்சியம் சத்தும் காணப்படுகிறது.


கிருமிகளுக்கு எதிரானது

பண்டைய இந்தியா மற்றும் ஐரோப்பாவில் குளிராக இருக்கும் நிலைகளில், வெப்பம் தரும் மருந்தாகப் பயன்பட்டது. ஜலதோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இஞ்சியுடன் சேர்ந்து மருந்துப் பொருளாக கொடுக்கப்பட்டது.


இத்தாவரத்தில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய் உடலுக்கு வெப்ப உணர்வை தரும். ஜீரணத்தினை ஊக்குவிக்கும். வலி குறைக்கும். வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் மற்றும் நோய் விளைவிக்கும் கிருமிகளுக்கு எதிரானது.


ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் 

இது இரத்த ஓட்டத்தை தூண்ட வல்லது. குறிப்பாக கை விரல்களுக்கும். கால் கட்டை விரல்களுக்கும், இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். ஜீரணக்கோளாறுகள் மற்றும் மயக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கினை போக்க உதவும். அசைவ சமையலில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.


சளி போன்ற வைரஸ் நோய்களுக்கு எதிராகவும் செயல்படும். தசைவலிகளை போக்க வல்லது. உடலின் வலு இன்மையினையும், நோயில் இருந்து குணப்பட்டு வரும் நிலையினையும் தெளிவாக்க உதவுகிறது.


சர்க்கரை நோயை குணப்படுத்தும்

தினமும் அரை டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி உட்கொண்டால் கெட்ட கொழுப்புகள் கரைவதாக மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்து.

லுக்கேமியா மற்றும் லிம்ப்போமா புற்றுநோய் செல்களை இது கட்டுப்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பூஞ்சைக் காளான் பாதிப்பினால் ஏற்படும் நோய்களுக்கு இது அருமருந்தாக விளங்குகிறது.


மூட்டுவலிக்கு மருந்து 

தினமும் காலை உணவுக்கு முன்னதாக அரை டீஸ்பூன் லவங்கப்பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து உட்கொண்டால் ஒரு வாரத்தில் மூட்டுவலி பிரச்சினை தீரும். ஒரு மாதத்தில் வலி முற்றிலும் தீர்ந்து சகஜமாக நடமாடலாம்.


இது கருப்பையினை தூண்டி மாதவிடாய் குருதிப் போக்கினை ஊக்குவிக்கும். இந்தியாவில் குழந்தை பிறந்த பிறகு, கருத்தடையாக உட்கொள்ளப்படுகிறது.




நன்றி: www.tamildoctor.com



உலகின் மிக முக்கிய நறுமணப்பொருளான இலவங்கப்பட்டை மூவாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மருந்து தாவரம் ஆகும்.
யூதர்களின் நூலான டோராவில் இது பற்றி குறிப்பு உள்ளது. எகிப்து மற்றும் இந்தியாவில் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பே லவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் எகிப்தில் கி.மு. 500 – ம் ஆண்டு முதல் மருந்தாக உபயோகிப்பட்டு வருகின்றன. இவற்றின் பட்டை மற்றும் இலைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.


செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:- இத்தாவரத்தில் சின்ன மால்டிஹைடு, யூஜினால், டேனின்கள், கௌமாரின்கள் மற்றும் தாவரப்பசைப் பொருட்கள் காணப்படுகின்றன. லவங்கப்பட்டையில் நார்ச்சத்தும் மெக்னீசியம், இரும்பு, மற்றும் கால்சியம் சத்தும் காணப்படுகிறது.


கிருமிகளுக்கு எதிரானது

பண்டைய இந்தியா மற்றும் ஐரோப்பாவில் குளிராக இருக்கும் நிலைகளில், வெப்பம் தரும் மருந்தாகப் பயன்பட்டது. ஜலதோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இஞ்சியுடன் சேர்ந்து மருந்துப் பொருளாக கொடுக்கப்பட்டது.


இத்தாவரத்தில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய் உடலுக்கு வெப்ப உணர்வை தரும். ஜீரணத்தினை ஊக்குவிக்கும். வலி குறைக்கும். வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் மற்றும் நோய் விளைவிக்கும் கிருமிகளுக்கு எதிரானது.


ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

இது இரத்த ஓட்டத்தை தூண்ட வல்லது. குறிப்பாக கை விரல்களுக்கும். கால் கட்டை விரல்களுக்கும், இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். ஜீரணக்கோளாறுகள் மற்றும் மயக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கினை போக்க உதவும். அசைவ சமையலில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.


சளி போன்ற வைரஸ் நோய்களுக்கு எதிராகவும் செயல்படும். தசைவலிகளை போக்க வல்லது. உடலின் வலு இன்மையினையும், நோயில் இருந்து குணப்பட்டு வரும் நிலையினையும் தெளிவாக்க உதவுகிறது.


சர்க்கரை நோயை குணப்படுத்தும்

தினமும் அரை டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி உட்கொண்டால் கெட்ட கொழுப்புகள் கரைவதாக மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்து.

லுக்கேமியா மற்றும் லிம்ப்போமா புற்றுநோய் செல்களை இது கட்டுப்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பூஞ்சைக் காளான் பாதிப்பினால் ஏற்படும் நோய்களுக்கு இது அருமருந்தாக விளங்குகிறது.


மூட்டுவலிக்கு மருந்து

தினமும் காலை உணவுக்கு முன்னதாக அரை டீஸ்பூன் லவங்கப்பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து உட்கொண்டால் ஒரு வாரத்தில் மூட்டுவலி பிரச்சினை தீரும். ஒரு மாதத்தில் வலி முற்றிலும் தீர்ந்து சகஜமாக நடமாடலாம்.


இது கருப்பையினை தூண்டி மாதவிடாய் குருதிப் போக்கினை ஊக்குவிக்கும். இந்தியாவில் குழந்தை பிறந்த பிறகு, கருத்தடையாக உட்கொள்ளப்படுகிறது.




நன்றி: www.tamildoctor.com

“சேது சமுத்திரத் திட்டம், தமிழரின் வரலாற்று உரிமை”

“சேது சமுத்திரத் திட்டம், தமிழரின் வரலாற்று உரிமை”
 
தகவலுக்கு நன்றி 
கமல் கண்ணன் ,ஆர். எம். பால்ராஜ் 
 
அனைவராலும் சேது சமுத்திரத் திட்டம் என்று அழைக்கப்படுகிற‌ சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழரின் ஒரு நீண்ட கால கனவுத் திட்டமாகும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிகம் பெருகுவதற்கும், கரையோர மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதற்கும், தமிழகக் கரையோர பயணிகள் கப்பல் போக்குவரத்து சிறப்பான வளர்ச்சி பெறுவதற்கும், சுற்றுலாத் தொழில் வளர்ந்து அரசுக்கு நல்ல வருவாய் கிட்டுவதற்கும்கூட இந்தத் திட்டம் மிகவும் தேவையான ஒன்று. இந்தத் திட்டத்தினால் விளையக் கூடிய நன்மைகள் பலவாகும்.
 
இத்திட்டத்தின் பயனைப் பற்றி இந்திய அரசாங்கத்தின் கப்பல் மற்றும் கடல் வழிப் போக்குவரத்து அமைச்சகத்தினுடைய‌ 1981-82ஆம் ஆண்டு மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வ‌றிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
 
1.      இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் தொடர்ச்சியான கடல் வழிப் போக்குவரத்திற்கு தற்போது வழியில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால் இந்து மகா சமுத்திரமும் வங்கக் கடலும் இணைய வாய்ப்புள்ளது. பாறைகளால் அமைந்த ஆடம்ஸ் பாலத்தை வெட்டி இணைத்தால் கடல் வழிப் போக்குவரத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
2.      சேது கால்வாய்த் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் ஒருங்கிணைந்தவைகளாகும். சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தினால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியும் முழு அளவு அதிகரிக்கும். தூத்துக் குடியிலிருந்து பின்வரும் துறைமுகங்களுக்குப் பயணம் செய்யும் நேரமும் குறையும்.
i) தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்ல 434 மைல் (695 கி.மீ.) தூரம் குறையும்.
ii) தூத்துக்குடியிலிருந்து விசாகப்பட்டினம் 376 மைல் (602 கி.மீ.) தூரம் குறையும்.
iii) தூத்துக்குடியிலிருந்து கல்கத்தா 340 மைல் (544 கி.மீ.) தூரம் குறையும்.
3.      இக்கால்வாயினால் பயணம் செய்யும் தூரம் குறைவதால் கப்பலின் எரி பொருள் மிச்சப்படும். இதனால் இந்தியாவின் அன்னியச் செலாவணி செலவில் சுமார் 130 கோடி ரூபாய் (அன்றைய மதிப்பில்) ஒவ்வொரு ஆண்டும் மிச்சப்படும்.
4.      இந்தியாவிற்கு அன்னியச் செலாவணி கணிசமான அளவு உயரும். இந்தக் கால்வாயின் மூலம் தமிழகத்தின் குளச்சல், முட்டம், தூத்துக்குடி, ராமேசுவரம்,நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம், கல்கத்தா வரையுள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும்.
5.      இக்கால்வாய் வெட்டப்பட்டால் தூத்துக்குடித் துறைமுகத்தின் வளர்ச்சி ஏற்பட்டு அதன்மூலம் பொருளாதார ரீதியாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்,காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய பிற்படுத்தப்பட்ட பகுதிகள் முழுதும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும்.
6.      இந்தக் கால்வாய் வெட்டப்பட்டால், இந்தியாவின் தென் பகுதியில் அன்னியச் சக்திகள் ஊடுருவாமல் அது ஓர் அரணாக விளங்கும்.
7.      இக்கால்வாயின் மூலம் தென்னிந்தியாவில் மீன் பிடித் தொழில் வளர்ச்சி பெறும். மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு வளையமாகத் திகழும்.
8.      நிலம் வழியாகச் செல்லும் நிலக்கரி, சிமெண்ட், உப்பு, உரங்கள், கடல் உணவு வகைகள், பருப்பு வகைகள், பருத்தி போன்ற பொருள்களைக் கிழக்குக் கடற்கரை மார்க்கமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இக்கால்வாய் மிகவும் உதவியாக இருக்கும்.
9.      சேதுக் கால்வாய் மூலமாக கப்பல்கள் சென்றால், புயல் அபாயத்திலிருந்து அவை பாதுகாக்கப்படும்.
10.  இக்கால்வாய் ஒரு சுற்றுலா மையமாக அமைந்து உலகின் பல பகுதிகளில் இருந்து பயணிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது.
11.  ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்கள் இக்கால்வாயினால் பெருகி, இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
12.  இக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் ஏற்படும் செலவை சுமார் பத்து அல்லது பனிரெண்டு ஆண்டுகளில் ஈடுசெய்து விடலாம்.
13.  இத்திட்டம் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாதகமானதாகும். இந்தியாவின் நலன் கருதி உடனடியாக இத்திட்டம் நிறை வேற்றப்பட வேண்டும்
 
இத்தனை நலன்களுக்கும் வழியாக அமையக்கூடிய சேது சமுத்திரக் கால்வாய்  தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உந்து விசையாக அமைவது மட்டுமல்லாமல், தூத்துக்குடியிலிருந்து சென்னை வரையிலான நீண்ட கடற்கரை நெடுகிலும் அமைந்துள்ள பல சிறிய துறைமுகங்கள் முன்னேற்றமடையவும் பேருதவியாக அமையும்.
 
19ஆம் நூற்றாண்டிலிருந்தே கற்றறிந்த நல்லோர், பொறியியல் வல்லுன‌ர்கள், தமிழ்ப் பெரியோர், தமிழர் நலன் பேணும் அறிஞர் பெருமக்கள், தொழிலதிபர்கள், மற்றையோர் என்று அனைவரின் எண்ணத்திலும் சேது சமுத்திரக் கால்வாய் தமிழ் நாட்டிற்குத் தேவையான ஒரு பொருளாதார ஆதாரமாக விளங்கி வந்தது.
 
விடுதலைக்குப் பின், தூத்துக்குடி துறைமுகமும் சேது சமுத்திரக் கால்வாயும் இரட்டைத் திட்டங்களாக கருதப்பட்டன. முதலாம் இரண்டாம் ஐந்தாண்டு திட்டங்களின் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்தை நவீனப் படுத்தி பெரிய கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாக விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, சேது சமுத்திரத் திட்டத்தைச் சேர்த்தே திட்டத்தை தயாரித்தனர்.
 
“பண்டைய வரலாற்றின் பதிவேடான கடற்பகுதி”
 
தமிழரின் நீண்ட வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க ஒரு கடல் பகுதி என்றால், அது ராமேசுவரத்திலிருந்து குமரி முனை வரையிலுமுள்ள கடலோரப் பகுதிதான். தமிழரின் முதல் அரச பரம்பரையான பாண்டியர்கள் கோலோச்சியது இங்கு அமைந்துள்ள கொற்கை நகரிலிருந்துதான் (இப்போது இந்த ஊர் காயல்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது). பண்டைத் தமிழரின் முக்கிய துறைமுகமான தொண்டியின் அமைவிடம் ராமேசுவரத்திற்கு சற்று வடபுறம் ஆகும்.
 
தமிழ் மன்னர்களின், குறிப்பாக பாண்டியர்களின், வெளிநாட்டு வர்த்தகம் இந்தக் கடலோரத்தில் அமைந்த துறைமுகங்கள் வழியாகதான் நடைபெற்றது. தென் பாண்டிய நாட்டின் தமிழ் வணிகர்களிடமிருந்து யவனர்களும், அரேபியரும் அரும் பொருட்களை வாங்கி அவற்றை மேற்காசிய நாடுகளுக்கும், கிரேக்கத்திற்கும், ரோம நாட்டிற்கும் கொண்டு சென்றது புறநானூற்றுப் பாடல்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள வரலாறு ஆகும். பாண்டிய‌ மன்னர்களின் படைகளுக்குத் தேவையான குதிரைகள் அரேபிய நாட்டிலிருந்து கப்பல்கள் மூலம் இங்குள்ள துறைமுகங்களில் வந்து இறங்கின.
 
முத்து வணிகம் காரணமாக இப்பகுதிக்கு வெளிநாட்டுக் கப்பல்களின் வரத்து அதிகம் இருந்ததால், கப்பல் துறைகளும் இங்கு அதிகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கக் கூடும். தமிழரின் முக்கிய வணிகப் பொருட்களில் ஒன்றான முத்து இப்போதும்கூட இந்த முத்தெடுக்கும் கடலில்தான் அதிகமாக விளைகிறது.
 
“இரு பெரும் நகரங்களின் தோற்றம்”
 
ஏழாம் நூற்றாண்டில் மேற்காசியாவில் இஸ்லாமிய‌ மதம் தோன்றி, அரேபியர் பெரும் போர்களின் மூலம் அங்குள்ள நாடுகளையெல்லாம் தம் ஆட்சிக்குள் கொண்டு வந்த சமயத்திலும், அதைத் தொடர்ந்து வந்த கால கட்டத்திலும் பாரசீக வளைகுடாவிலும், செங்கடலிலும் அமைந்திருந்த துறைமுக நகரங்களில் வெளிநாட்டு வர்த்தகம் தடைபட்டது மட்டுமல்லாமல் அதிக வரி விதிப்பு காரணமாக ஏற‌க்குறைய வர்த்தகம்  நின்றே போய்விட்டது எனலாம். மேற்காசிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு இருந்த ஒரே தரைவழி மார்க்கத்தில் அமைந்திருந்த‌ கான்ஸ்டாண்டினோபில் நகரமும் 1453இல் துருக்கியரால் கைப்பற்றப்பட்ட பின் இந்தியா உட்பட ஆசிய நாடுகள் ஒன்றுடனும் ஐரோப்பியர் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிட்ட து.
                  
இந்த நிலையில் ஐரோப்பியர் இந்தியாவுக்கு வர வேறு கடல் வழிகளைப் பல ஆண்டுகளாக முனைப்புடன் தேடியதும், இறுதியாக ஆப்பிரிக்காவின் தென் முனையைச் சுற்றிக்கொண்டு வந்து தமிழகத்தின் மேற்குக் கடற்கரையில் கரையிறங்கியதும் நடைபெற்றன (வாஸ்கோ-ட-காமா, 1498).
 
மேலைக் கடலோரத்தில் வந்திறங்கிய ஐரோப்பியர் தமிழகத்து வர்த்தகருடன் தமது வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
 
தமிழகத்தின்  பகுதிகளில் அவர்கள் வந்து தம் வியாபார மையங்களை அமைத்ததைத் தொடர்ந்து, ஆங்கிலேயர் 17ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொண்டை மண்டலத்தின் கடலோரத்தில் சில சிறிய மீன்பிடி கிராமங்கள் அமைந்திருந்த ஒரு பகுதியில் தமது வர்த்தக மையம் ஒன்றை அமைத்தனர். அந்த இடத்தின் பாதுகாப்புக்காக‌ அமைக்கப்பட்ட தற்காலிக முள் வேலி விரைவிலேயே சிறிய சுற்றுச் சுவராக மாறி புனித ஜார்ஜ் கோட்டை என்ற பெயருடன் ஒரு கோட்டையாக வடிவெடுத்தது. முள் வேலி காம்பவுண்டாக இருக்கும்போது அதனைக் காவல் காக்கும் வேலையில் அமர்த்தப்பட்ட, அக்கம் பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த‌,  ஒரு கை விரல்களுக்குள் எண்ணிவிடக் கூடிய சிறிய எண்ணிக்கையிலான காவலாளிகளைக் கொண்ட அமைப்பின் தொடர் வளர்ச்சிதான் இன்றைய இந்தியாவின் நவீன ராணுவம் ஆகும்.
 
பெரும் வர்த்தக மையமாக வளர்ந்துவிட்ட ஜார்ஜ் கோட்டையின் அருகில் வளர்ந்து விரிந்த நவீன நகரமான சென்னைப் பட்டினம் அதனருகில் வளர்ச்சி பெற்ற புதிய துறைமுகத்தின் உதவியுடன் பன்னாட்டு வர்த்தகக் கப்பல்கள் வருகின்ற பெருந்துறைமுகமாக எழுச்சி பெற்றது.
 
அதே சமயத்தில், வங்காளத்தை ஆளும் நவாப்பின் பதவிக்கு போட்டி ஏற்பட்டபோது அதில் ஒரு தரப்பினர் அங்கேயிருந்த ஆங்கிலேயரின் உதவியைக் கோரினர். தம்மிடம் போதுமான படைகள் இல்லாததால், அங்கிருந்த ஆங்கிலேயர் சென்னையிலிருந்து உதவி அனுப்பும்படி கேட்டபோது, இங்கிருந்து ஒரு படை ராப்ர்ட் கிளைவ் என்ற தளபதியின் தலைமையில் அனுப்பப்பட்டது.
 
ராபர்ட் கிளைவ் அங்கு சென்று, மீர் ஜாபருக்கு ஆதரவாக‌ யுத்தம் செய்து (பிளாசி போர் - 1757) சிராஜ்-உத்-தௌலாவைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார். வங்காளத்தில் அமைதி திரும்பியது. அத்துடன், தமக்குச் செய்த உதவிக்குப் பரிசாக மீர் ஜாபர் ஆங்கிலேயருக்கு வங்காளத்தில் 24 பர்கானாக்கள் என்ற பகுதியின் ஆட்சியுரிமையைக் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக வங்காளத்தில் பெரும் செல்வாக்கு பெற்ற ஆங்கிலேயர் தமது வணிகத்தை அங்கு விரிவுபடுத்தினர். அவர்களால் அங்கு அமைக்கப்பட்டிருந்த‌ வில்லியம் கோட்டையைச் சுற்றிலும் வளர்ந்த கல்கத்தா என்ற நகரம் பெரிய வணிக மையமாக வளர்ந்தது.
 
பழங்கதை பேசியது போதும், இப்போது சேது சமுத்திரத்திற்குத் திரும்பி வாருங்கள் என்கிறீர்களா? வரலாற்றில்தான் உண்மைகள் புதையுண்டு கிடக்கின்றன, தமிழனின் பெருமைகள் அங்குதான் உறங்குகின்றன. சென்னை, கல்கத்தா என்ற இந்த இரு வணிகப் பெருநகரங்களின் வளர்ச்சிக்கும் சேதுவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
 
“தூரக் குறைப்பு - நவீன கால வர்த்தகத்தின் ஒரு அடிப்படைத் தேவை”
 
வணிகத்தில், ஒரு பொருள் கிடைக்கும் இடத்திலிருந்து அது விற்கப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது முக்கிய பங்கை வகிக்கிறது. பயண தூரத்துடன் அதற்கான பணச் செலவும் அதிகரிப்பதால் தூரத்தைப் பொறுத்து பொருளின் விலை அதிகரிக்கிறது.
 
கால மாறுதல்களினால் தமிழகத்தின் கிழக்குக் கரையில் சென்னை என்ற பெரிய நகரமும், அதற்கு வடக்கில் வெகு தொலைவில் வங்கத்தில் கல்கத்தா என்ற இன்னொரு பெரிய நகரமும் தோன்றி வர்த்தக மையங்களாக வளர்ந்தன என்பதை மேலே கூறினேன். மேலை நாடுகளுடனான வர்த்தகத்தை இந்த இரு துறைமுக நகரங்களும் அதிக அளவில் கையாண்டன. ஆனால், மேலை நாடுகளிலிருந்து வருகின்ற பெரிய வணிகக் கப்பல்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கிலுள்ள அரபிக் கடலைத் தாண்டியதும் கீழைக் கடலில் அமைந்துள்ள இவ்விரு துறைமுகங்களுக்கும் செல்வதற்காக கன்னியாகுமரியைத் தாண்டி வடக்கு நோக்கித் திரும்பிவிட முடியாது.
 
ஏனென்றால், தென் தமிழகத்தின் முத்துக் கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா, பாக் நீர்ச்சந்தி ஆகிய இரு கடற்பகுதிகளும் ஆழம் குறைந்தவை ஆகும். 18ஆம் நூற்றாண்டில் உலக வர்த்தகத்தில் பெரும் பங்காற்றத் துவங்கிய‌ பெரிய நீராவிக் கப்பல்கள் இந்தக் கடல் வழியில் செல்ல இயலாது. இதனால், தமிழகத்தின் முத்துக் கடலோர துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் மீண்டுமாக தெற்கு நோக்கித் திரும்பி ப‌ல நூறு கல் தொலைவு பயணம் செய்து, தீவு நாடான‌ இலங்கையை ஒரு சுற்றுச் சுற்றிய பின்தான் மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பி சென்னையையோ, அதற்கு வடக்கில் அமைந்துள்ள வேறு இந்தியத் துறைமுகங்களையோ சென்றடைய முடியும். இவ்வாறு தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் தூரம் உண்மையான தூரத்தைவிட‌ இரு மடங்குக்கும் அதிகமாக ஆயிற்று. இதே போல் சென்னை, கல்கத்தா போன்ற வங்கக் கடலோர துறைமுகங்களிலிருந்து மேலை நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களும் இலங்கையைச் சுற்றிய பின்தான் மேற்கு நோக்கித் திரும்பும் நிலை.
 
இப்படி கப்பல்களின் பயண தூரம் தேவையற்ற விதத்தில் அதிகமாக இருந்ததும், அதினால் உண்டான கால தாமதமும் எரிபொருள் விரயமும் தவிர்க்க‌ இயலாதவை என்றுதான் பலராலும் எண்ணப்பட்டன‌.           
 
“சிக்கல்-சிந்தனை-தீர்வு”
 
பயண தூரத்தையும் அதற்கான காலத்தையும் அதிகரித்ததுமல்லாமல் கப்பல்களை இயக்கும் செலவையும் அதிகரிக்கச் செய்த இந்த நிலைமையை கவனித்த சில சிந்தனையாளர்கள் இதை மாற்ற வழி இல்லையா என்று சிந்தித்தார்கள். அவர்களுடைய சிந்தனையின் விளைவாகக் கிடைத்த தீர்வுதான் சேது சமுத்திரத்தை பெரிய கப்பல்களின் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றும் திட்டம்.
 
சேது கடல் பகுதியில் கப்பல் செல்லக் கூடிய வழித்தடத்தில் வரும் ஆழம் குறைவான பகுதிகளை ஆழப்படுத்துவதுதான் இந்தத் திட்டம். கடலுக்கு அடியில் மண்ணை அகற்றி ஒரு நீண்ட கால்வாய் போன்று அமைக்க வேண்டும். போதிய ஆழம் உள்ள இடங்களுக்கு இடையில் இருக்கும் மணல் திட்டுக்களை அகற்றி ஆழப்படுத்துவதன் மூலம் இதைச் செய்ய முடியும்.
 
பாக் நீரிணைப்புக்கும் மன்னார் வளைகுடாவுக்கும்  இடையிலான கடற்பகுதியை ஆழப்படுத்துவதினால் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்படும் நல் விளைவுகளைக் குறித்து முதன் முதல் சிந்தித்தவர் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேய அதிகாரியான‌ ஏ.டி.டெய்லர் ஆவார். இவர் 1860இல் ஒரு திட்டத்தைத் தயாரித்து அளித்தார்.
 
1860 துவங்கி 1922 வரையில் பல ஆங்கிலேயப் பொறியாள‌ர்களும் ஆட்சியாளர்களும் -- சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் உட்பட -- இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்தி வந்தனர்.
 
“இரு பெரும் முன் மாதிரிகள்”
                           
இந்தக் காலகட்டத்தில் உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களுக்கு வழி வகுத்த இரு "கடல் வழி தூரக் குறைப்புத் திட்டங்கள்" வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன. இதன் மூலம் உலகின் மிக சுறுசுறுப்பான இரண்டு கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு தூரக் குறைப்பை அடைந்தன. இவை, தமக்கிடையில் குறுகலான நிலப் பகுதியை உடையவையாக இருந்த இரு கடல்களை கால்வாய் வெட்டி இணப்பதின் மூலம் செயலாக்கப்பட்ட திட்டங்கள் ஆகும்.
 
முதலாவது, 1859இல் துவங்கி பத்தாண்டுகளில் வெட்டி முடிக்கப்பட்ட சூயஸ் கால்வாய் ஆகும். இது செங்கடலையும் மத்திய தரைக் கடலையும் இணைத்தது. இக்கால்வாய் ஐரோப்பாவிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் பயண தூரத்தை பல ஆயிரம் கிலோ மீட்டர் குறையச் செய்தது.
 
அடுத்தது, 1881இல் துவங்கி 33 ஆண்டுகளுக்குப் பின் முடிவடைந்த பனாமா கால்வாய். அட்லாண்டிக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் இணைத்த இந்தக் கால்வாய், அமெரிக்கா கண்டத்தின் மேற்குக் கரைக்கும் கிழக்குக் கரைக்கும் இடையிலான கடல் பயணத்தை பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் குறைத்தது.
 
வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இந்த கடல்வழிக் கால்வாய்கள், இங்கே இந்தியாவிலிருந்த பொறியாளர்களுக்கு ஊக்கம் தருபவையாக அமைந்தன. சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அவர்களின் சிந்தனையைத் தூண்டின.
 
“இந்திய விடுதலைக்குப் பின்”
 
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர், தமிழகத்தில் காமராஜர் முதல் அமைச்சராக இருந்தபோது 1955இல் பிரதமர் ஜவகர்லால் நேருவால் இராமசாமி முதலியார் தலைமையில் நியமிக்கப்பட்ட "சேது சமுத்திரத் திட்டக் குழு" திட்ட வடிவினையும் மதிப்பீட்டையும் தயாரித்து அரசுக்குச் சமர்ப்பித்தது. ஆனால், திட்ட வேலைகள் துவங்கப்படாமல் நின்று போயின.
 
பிரதமர் இந்திரா காந்தியால் லெட்சுமி நாராயணன் தலைமையில் அமைக்கப்பட்ட‌ குழு 1983இல் மீண்டும் ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்தது. இப்போதும் திட்டப்பணிகள் துவங்கப்படவில்லை.
 
“தடைகள்: பொருட்செலவும், ஆகும் காலமும்”
 
ஒவ்வொரு கால கட்டத்திலும் பொறியியல் வல்லுனர்கள் திட்டத்தைச் செயல்படுத்த விரும்பினர். ஆர்வமும் செயல்படும் ஆற்றலும் மிக்க சிலரால் இந்தத் திட்டம் கையில் எடுக்கப்பட்டாலும் அதின் பிரம்மாண்டம் பலரையும் மலைக்க வைத்தது என்பதும் உண்மை. திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல சிக்கல்களும் இருந்தன. அவற்றில் முக்கியமானது பண ஒதுக்கீடு.
 
“செயல்படுத்தும் ஆர்வம்”
 
இந்தியா விடுதலை பெற்றபின் தமிழகத்தை ஆண்ட தலைவர்கள் எல்லோருமே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் அவசியத்தையும், அதினால் உண்டாகக் கூடிய பொருளாதார நன்மைகளையும் மனதில் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த விரும்பினார்கள்.
 
1955இல் காமராஜர் சென்னை மாகாண முதல் அமைச்சராக இருந்தபோது அவர் நேருவை கேட்டுக் கொண்டதின் பேரில் சேது சமுத்திரத் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
1958இல் காமராஜர் முதல்வராக இருந்தபோது தூத்துக்குடி துறைமுக டெவலப்மெண்ட் கவுன்சில் பிரதமர் நேருவைச் சந்தித்து, தூத்துக்குடி துறைமுகத்தையும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தையும் செயல்படுத்தக் கோரி கோரிக்கை மனு கொடுத்தது.
 
1967இல் அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது அவர் தலைமையில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதை வலியுறுத்தி எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது.
 
1981இல் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, சேது சமுத்திரத் திட்டம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட எச்.ஆர். லட்சுமி நாராயணன் தலைமையிலான குழுவைச் சந்தித்து அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். அந்தக் குழு மதுரைக்கும், நெல்லைக்கும் சென்றபோது தி.மு.க. சார்பிலும் அந்தக் குழுவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
 
1985-1990ஆம் ஆண்டுக்கான ஏழாவது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில், அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்று கூறியிருக்கிறார்.
 
2001இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக‌ தனது சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் ஆதம் பாலம் பகுதியில் கடலை ஆழப்படுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்வோம் என்று விளக்கமாகக் குறிப்பிட்ட‌து. 2004இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போதும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று கூறியது.
 
தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய பெரிய‌ கட்சிகள் மட்டுமல்ல, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியதின் அவசியத்தைக் குறித்து அவ்வப்போது கோரிக்கை விடுத்து வந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
“காலம் மாறியது, கனவு கை கூடியது,  திட்டம் செயல் வடிவம் பெற்றது”
 
மக்களாட்சி என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி நடைபெறுவதாகும். இந்தியா போன்ற பல இன மொழி மக்கள் வாழும் ஒரு கூட்டமைப்பில், ஒரு மாநிலத்தின் நன்மைக்கான திட்டத்தை அம்மாநில அரசும் மக்களும் மட்டும் ஆதரிப்பது அத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலையும் நிதி ஒதுக்கீட்டையும் பெறுவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. டெல்லியில் இருக்கும் மத்திய சட்டசபையில் (நாடாளுமன்றத்தில்) ஒரு மாநில அரசின் திட்டத்திற்கு போதிய ஆதரவைப் பெறுவது கடினமான ஒன்று.
 
மத்தியில் சொந்தப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் மாநிலங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்ப்பது அபூர்வம். இதனாலேயே பல திட்டங்கள் கால தாமதத்திற்கு உள்ளாவது வழக்கம். சேது சமுத்திரத் திட்டமும் இப்படிதான் அலட்சியம் செய்யப்பட்டுக் கிடந்தது.
 
ஆனால் காலம் மாறியது. 1996 துவங்கி, மத்தியில் பல கட்சிகள் சேர்ந்து கூட்டாக ஆட்சி அமைக்கும் அரசியல் சூழல் இந்தியாவில் ஏற்பட்டது. இந்தச் சூழலில் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவு, மத்தியில் ஆட்சி செய்பவர்களுக்கு இன்றியமையாததாக மாறியது.
 
1998இல் அதிமுகவின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாயி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்தது.
 
1999 இல், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியலமைப்புக் கொள்கையை உடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த‌ திரு. வாஜ்பாயி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு தமிழரின் நீண்ட கால கனவுத் திட்டமான சேது சமுத்திர‌க் கால்வாய்த் திட்டத்திற்கான பூர்வாங்கப் பணிகள் துவங்கப்பட ஆவன செய்தது.
 
1999இலிருந்து 2004 வரையில் பிஜேபி தலைமையில் நடந்த மத்திய அரசில் பங்கு வகித்த திமுக, 2001இல் தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்பேற்றது. ஆனாலும் திமுக அரசின் முயற்சியால் செயல் வடிவம் பெறத் துவங்கிய திட்டம் மீண்டும் சில ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
 
2004-ம் ஆண்டு மத்தியில் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் அமைந்த மத்திய‌ அரசிலும் திமுக பங்கு பெற்றது. கப்பல் போக்குவரத்துத்  துறை அமைச்சராக தமிழரான டி.ஆர். பாலு பொறுப்பேற்றார். திமுக தலைவரான கலைஞர் கருணாநிதியின் ஆலோசனையின்படி டி.ஆர். பாலு மத்திய அரசிடம் பேசி சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த பாராளுமன்றத்தில் அதைச் சமர்ப்பிக்கவும், ஒப்புதல் பெறவும் வழி வகுத்தார்.
 
திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும், தேவையான பல துறை ஒப்புதல்களும் பெறப்பட்டு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணிகள் ஜூலை 2005இல் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டன. அப்போது திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
 
திட்டப் பணிகள் விரைவுடன் செயல்படுத்தப்பட்டன.
 
“காழ்ப்பு அரசியல்-மூட நம்பிக்கை-திட்டப் பணிகள் நிறுத்தம்”திராவிட இயக்கப் பாரம்பரியத்தைத் தனதாகக் கொண்ட திராவிட முன்னேற்ற கழகமானது மத்தியில் ஆண்ட பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகிய இரு எதிரெதிர் துருவங்களின் ஆதரவையும் தக்க முறையில் பெற்று பணிகள் விரைவாக நடைபெற்று வந்த நிலையில், 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவின்படி மீண்டும் திமுக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது. மத்திய அரசிலும் திமுக அமைச்சர்கள் இருந்தனர்.
 
சுமார் 75 விழுக்காடு கால்வாய் அமைக்கும் வேலை முடிவடைந்து, துரப்பணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்ற‌ நிலையில் பணிகளை தடுத்து நிறுத்த சிலர் வஞ்சக ஆலோசனையில் ஈடுபட்டனர். ஐந்தாண்டு திமுக ஆட்சியின்போது சேது சமுத்திரத் திட்டப் பணிகள் முடிவடைந்து கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டுவிடும் என்றிருந்த நிலையில், அப்படி ஆகக் கூடாது என்ற தமிழர் விரோத நய வஞ்சக எண்ணங்கள் துளிர்க்கத் துவங்கின.
 
அதன் தொடர்ச்சியாக, தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் சுவாமி என்ற பகுதி நேர‌ அரசியல்வாதி சேது சமுத்திரத் திட்டத்தின்படி தோண்டப்படும் கால்வாய் ராமேசுவரத்திற்குக் கிழக்கில் கடலுக்கு அடியில்(?) அமைந்துள்ள ராமர் பாலத்தை சேதப்படுத்தும், இது இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தும் செயல், ஆகவே கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று 2009இல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
 
ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அமைப்புக்களின் ஆதரவுடன் தொடுக்கப்பட்ட‌ இந்த வழக்கின் காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கால்வாய்ப் பணிகள் நிறுத்தப்பட்டன. வழக்கை திமுக தலைமையிலான மாநில அரசும், மத்திய அரசும் எதிர்கொண்டன.
மத உணர்வுகளைத் தூண்டி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேறாமல் தடுக்கும் சதிக்கு சில கட்சிகள் அரசியல் லாபம் பெறும் நோக்கத்துடன் துணை போயின. இந்துத்துவா என்று அழைக்கப்படும் இந்து மதவாத சக்திகளின் தோழரான சுப்பிரமணியன் சுவாமியின் வழக்குக்கு அவர் முன்பு அங்கம் வகித்த பாரதீய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்தது.
 
சேது சமுத்திரத் திட்டத்திற்கு முதன்முதல் 1998இல் மத்திய அரசின் ஒப்புதல் வழங்கியது தமது கட்சியின் மிக முக்கிய தலைவரும், தம் கட்சி சார்பாக இந்தியாவின் பிரதமராக இருந்த ஒரே தலைவருமான‌ திரு. வாஜ்பாயி அவர்கள்தான் என்பதை பிஜேபி கட்சி அரசியல் வசதிக்காக மறந்ததுபோல் நடித்தது.
 இந்நிலையில் மீண்டும் 2010ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. திமுக தோல்வியுற்று, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றது.
 
தமிழர்மேலும், தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு ஆகியவை மேலும் தீராப் பகை கொண்ட ஆரிய இனவாத சக்திகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமக்குள் கூடிக்கொள்ளுவதும், தமிழ் இன அழிப்பில் இணைந்து செயல்படுவதும் வரலாற்றில் காணக் கிடக்கும் உண்மைகள். தமக்குள் பல வேறுபாடுகளையும், வழக்குகளையும் உடைய சுப்பிரமணியன் சுவாமியும் ஜெயலலிதாவும் இந்த அடிப்படையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்தனர்.
 
ராமர் பாலம் என்ற புதிய பூதத்தைக் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமிக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்தார். ராமர் பாலம் பாதிக்கப்படக் கூடாது என்றார். எந்த சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முன்பு தன் தேர்தல் அறிக்கைகளில் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தாரோ, அதே திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று இப்போது அவரே அறிவித்தார்.உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்கை எதிர்கொள்ளும் மாநில அரசுக்கு முதல்வராக ஆகிவிட்ட ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்தவரின் கூற்றுக்கு ஆதரவளித்தார். வழக்கு விசாரணையின்போது "சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை" என்று ஜெயலலிதாவின் அதிமுக அரசு 2012 அக்டோபர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வழக்கு மாநில நலனுக்கு எதிராக வலுப் பெற்றது.
 
ஜெயலலிதாவின் அதிமுக அரசு அத்துடன் நிற்கவில்லை. ராமர் பாலத்தை புராதன நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை எழுப்பியுள்ளது. இப்படியாக‌ மனிதனால் செய்யப்பட்ட கட்டுமானங்களோ, இடிபாடுகளோ எதுவும் இல்லாத ஒரு இடத்தை அங்கு கடலுக்கு அடியில் பாலம் இருந்தது என்று பொய்யாகக் கூறி சேது சமுத்திரத் திட்டத்திற்கு இப்போது தடைக்கல் போடப்பட்டுள்ளது. ஒரு காலத்திலும், ஒருவரும் பார்த்திராத ஒரு இடத்தை, எந்த விதமான மத கைங்கரியங்களும் நடைபெறாத ஒரு இடத்தை புனித ஸ்தலமாக அறிவிக்க வேண்டும் என்ற புதுமையான கோரிக்கை தமிழகத்தின் முதல் அமைச்சரால் எழுப்பப்பட்ட வினோதம் இங்கு நடந்துள்ளது.
 
இந்த வழக்கு முடிவடையும் வரையில் சேது சமுத்திரத் திட்டத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. திட்டத்திற்கு எதிரான, விஞ்ஞான ஆதாரமில்லாத ஆட்சேபணைகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து திட்டப் பணிகள் தொடர வழி வகுக்கும் என்று நம்பி தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர்.
 
“சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்”
                                  
சேது என்று பாரதியார் தம் பாடலில் குறிப்பிடுவது சேது சமுத்திரம் என்று அழைக்கப்பட்ட கடல் பரப்பைதான். இந்தக் கடலை மண் போட்டு மேடாக்கி, யாரும் எளிதில் கடந்து செல்லக் கூடிய தரைப் பகுதியாக மாற்ற வேண்டும் என்பது பாரதியாரின் ஆவல். இலங்கையுடன் நமக்கு இருந்த வர்த்தக, கலாசார உறவுகளுக்கு இந்த இடைப்பட்ட கடல் இடையூறாக இருக்கிறது என்று பாரதியின் கவிதையுள்ளம் எண்ணியது.
தெய்வ பக்தி நிறைந்த பாரதியார், சேது சமுத்திரப் பகுதியில் ராமர் பாலம் என்று ஒன்று இருக்கிறது என்று கூறவில்லை. அவர் கடலையே மூடி மக்கள் சென்று வரும் தெருவாக ஆக்கிவிட வேண்டும் என்கிறார்.
 
இல்லாத ஒரு பாலத்தை இருப்பதாகக் கூறி இப்போது திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த திரு. வாஜ்பாயி அவர்கள் இந்துத்துவா கொள்கையையுடைய‌ பிஜேபி தலைவர்தான். அவருக்குத் தெரியாத ராமாயணமா பிஜேபியின் பிற தலைவர்களுக்குத் தெரிந்துவிட்டது? திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பணியில் அருண் ஜேட்லி போன்ற பிஜேபி அமைச்சர்களும் பங்காற்றியுள்ளனர். அப்போதெல்லாம் இல்லாத ராமர் பாலம் 2009இல் சுப்பிரமணியன் சுவாமி சொன்னவுடன் புதிதாக வந்துவிடுமா என்பதை பிஜேபி கட்சியினரும், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
 
அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர். தமக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முயன்று வந்தவர். இன்று அவருடைய கட்சியின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். உடைய அந்த விருப்பம் நிறைவேற இடமளித்து ஒத்துழைக்க‌ வேண்டும்.
 தமிழக மக்களின் நலனை மனதில் கொண்டு, கட்சி வேறுபாடுகளை மறந்து தமிழக அரசியல்வாதிகள் செயல்படுவது ஒன்றுதான் நம் மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும். தமிழக மக்கள் செலுத்தும் வரிகளில் பெரும் பங்கை தன் கணக்கில் பெற்றுக்கொள்ளும் இந்திய மத்திய அரசிடமிருந்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான நிதியைப் பெற்றுத் தருவதும், அத்தகைய திட்டங்களைத் தடையின்றி நிறைவேற்றுவதும் இங்குள்ள தலைவர்களின் கடமையாகும் என்ப‌தை உணர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் நடந்�
“சேது சமுத்திரத் திட்டம், தமிழரின் வரலாற்று உரிமை”



அனைவராலும் சேது சமுத்திரத் திட்டம் என்று அழைக்கப்படுகிற‌ சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழரின் ஒரு நீண்ட கால கனவுத் திட்டமாகும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிகம் பெருகுவதற்கும், கரையோர மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதற்கும், தமிழகக் கரையோர பயணிகள் கப்பல் போக்குவரத்து சிறப்பான வளர்ச்சி பெறுவதற்கும், சுற்றுலாத் தொழில் வளர்ந்து அரசுக்கு நல்ல வருவாய் கிட்டுவதற்கும்கூட இந்தத் திட்டம் மிகவும் தேவையான ஒன்று. இந்தத் திட்டத்தினால் விளையக் கூடிய நன்மைகள் பலவாகும்.

இத்திட்டத்தின் பயனைப் பற்றி இந்திய அரசாங்கத்தின் கப்பல் மற்றும் கடல் வழிப் போக்குவரத்து அமைச்சகத்தினுடைய‌ 1981-82ஆம் ஆண்டு மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வ‌றிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

1. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் தொடர்ச்சியான கடல் வழிப் போக்குவரத்திற்கு தற்போது வழியில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால் இந்து மகா சமுத்திரமும் வங்கக் கடலும் இணைய வாய்ப்புள்ளது. பாறைகளால் அமைந்த ஆடம்ஸ் பாலத்தை வெட்டி இணைத்தால் கடல் வழிப் போக்குவரத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
2. சேது கால்வாய்த் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் ஒருங்கிணைந்தவைகளாகும். சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தினால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியும் முழு அளவு அதிகரிக்கும். தூத்துக் குடியிலிருந்து பின்வரும் துறைமுகங்களுக்குப் பயணம் செய்யும் நேரமும் குறையும்.
i) தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்ல 434 மைல் (695 கி.மீ.) தூரம் குறையும்.
ii) தூத்துக்குடியிலிருந்து விசாகப்பட்டினம் 376 மைல் (602 கி.மீ.) தூரம் குறையும்.
iii) தூத்துக்குடியிலிருந்து கல்கத்தா 340 மைல் (544 கி.மீ.) தூரம் குறையும்.
3. இக்கால்வாயினால் பயணம் செய்யும் தூரம் குறைவதால் கப்பலின் எரி பொருள் மிச்சப்படும். இதனால் இந்தியாவின் அன்னியச் செலாவணி செலவில் சுமார் 130 கோடி ரூபாய் (அன்றைய மதிப்பில்) ஒவ்வொரு ஆண்டும் மிச்சப்படும்.
4. இந்தியாவிற்கு அன்னியச் செலாவணி கணிசமான அளவு உயரும். இந்தக் கால்வாயின் மூலம் தமிழகத்தின் குளச்சல், முட்டம், தூத்துக்குடி, ராமேசுவரம்,நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம், கல்கத்தா வரையுள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும்.
5. இக்கால்வாய் வெட்டப்பட்டால் தூத்துக்குடித் துறைமுகத்தின் வளர்ச்சி ஏற்பட்டு அதன்மூலம் பொருளாதார ரீதியாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்,காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய பிற்படுத்தப்பட்ட பகுதிகள் முழுதும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும்.
6. இந்தக் கால்வாய் வெட்டப்பட்டால், இந்தியாவின் தென் பகுதியில் அன்னியச் சக்திகள் ஊடுருவாமல் அது ஓர் அரணாக விளங்கும்.
7. இக்கால்வாயின் மூலம் தென்னிந்தியாவில் மீன் பிடித் தொழில் வளர்ச்சி பெறும். மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு வளையமாகத் திகழும்.
8. நிலம் வழியாகச் செல்லும் நிலக்கரி, சிமெண்ட், உப்பு, உரங்கள், கடல் உணவு வகைகள், பருப்பு வகைகள், பருத்தி போன்ற பொருள்களைக் கிழக்குக் கடற்கரை மார்க்கமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இக்கால்வாய் மிகவும் உதவியாக இருக்கும்.
9. சேதுக் கால்வாய் மூலமாக கப்பல்கள் சென்றால், புயல் அபாயத்திலிருந்து அவை பாதுகாக்கப்படும்.
10. இக்கால்வாய் ஒரு சுற்றுலா மையமாக அமைந்து உலகின் பல பகுதிகளில் இருந்து பயணிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது.
11. ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்கள் இக்கால்வாயினால் பெருகி, இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
12. இக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் ஏற்படும் செலவை சுமார் பத்து அல்லது பனிரெண்டு ஆண்டுகளில் ஈடுசெய்து விடலாம்.
13. இத்திட்டம் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாதகமானதாகும். இந்தியாவின் நலன் கருதி உடனடியாக இத்திட்டம் நிறை வேற்றப்பட வேண்டும்

இத்தனை நலன்களுக்கும் வழியாக அமையக்கூடிய சேது சமுத்திரக் கால்வாய் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உந்து விசையாக அமைவது மட்டுமல்லாமல், தூத்துக்குடியிலிருந்து சென்னை வரையிலான நீண்ட கடற்கரை நெடுகிலும் அமைந்துள்ள பல சிறிய துறைமுகங்கள் முன்னேற்றமடையவும் பேருதவியாக அமையும்.

19ஆம் நூற்றாண்டிலிருந்தே கற்றறிந்த நல்லோர், பொறியியல் வல்லுன‌ர்கள், தமிழ்ப் பெரியோர், தமிழர் நலன் பேணும் அறிஞர் பெருமக்கள், தொழிலதிபர்கள், மற்றையோர் என்று அனைவரின் எண்ணத்திலும் சேது சமுத்திரக் கால்வாய் தமிழ் நாட்டிற்குத் தேவையான ஒரு பொருளாதார ஆதாரமாக விளங்கி வந்தது.

விடுதலைக்குப் பின், தூத்துக்குடி துறைமுகமும் சேது சமுத்திரக் கால்வாயும் இரட்டைத் திட்டங்களாக கருதப்பட்டன. முதலாம் இரண்டாம் ஐந்தாண்டு திட்டங்களின் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்தை நவீனப் படுத்தி பெரிய கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாக விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, சேது சமுத்திரத் திட்டத்தைச் சேர்த்தே திட்டத்தை தயாரித்தனர்.

“பண்டைய வரலாற்றின் பதிவேடான கடற்பகுதி”

தமிழரின் நீண்ட வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க ஒரு கடல் பகுதி என்றால், அது ராமேசுவரத்திலிருந்து குமரி முனை வரையிலுமுள்ள கடலோரப் பகுதிதான். தமிழரின் முதல் அரச பரம்பரையான பாண்டியர்கள் கோலோச்சியது இங்கு அமைந்துள்ள கொற்கை நகரிலிருந்துதான் (இப்போது இந்த ஊர் காயல்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது). பண்டைத் தமிழரின் முக்கிய துறைமுகமான தொண்டியின் அமைவிடம் ராமேசுவரத்திற்கு சற்று வடபுறம் ஆகும்.

தமிழ் மன்னர்களின், குறிப்பாக பாண்டியர்களின், வெளிநாட்டு வர்த்தகம் இந்தக் கடலோரத்தில் அமைந்த துறைமுகங்கள் வழியாகதான் நடைபெற்றது. தென் பாண்டிய நாட்டின் தமிழ் வணிகர்களிடமிருந்து யவனர்களும், அரேபியரும் அரும் பொருட்களை வாங்கி அவற்றை மேற்காசிய நாடுகளுக்கும், கிரேக்கத்திற்கும், ரோம நாட்டிற்கும் கொண்டு சென்றது புறநானூற்றுப் பாடல்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள வரலாறு ஆகும். பாண்டிய‌ மன்னர்களின் படைகளுக்குத் தேவையான குதிரைகள் அரேபிய நாட்டிலிருந்து கப்பல்கள் மூலம் இங்குள்ள துறைமுகங்களில் வந்து இறங்கின.

முத்து வணிகம் காரணமாக இப்பகுதிக்கு வெளிநாட்டுக் கப்பல்களின் வரத்து அதிகம் இருந்ததால், கப்பல் துறைகளும் இங்கு அதிகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கக் கூடும். தமிழரின் முக்கிய வணிகப் பொருட்களில் ஒன்றான முத்து இப்போதும்கூட இந்த முத்தெடுக்கும் கடலில்தான் அதிகமாக விளைகிறது.

“இரு பெரும் நகரங்களின் தோற்றம்”

ஏழாம் நூற்றாண்டில் மேற்காசியாவில் இஸ்லாமிய‌ மதம் தோன்றி, அரேபியர் பெரும் போர்களின் மூலம் அங்குள்ள நாடுகளையெல்லாம் தம் ஆட்சிக்குள் கொண்டு வந்த சமயத்திலும், அதைத் தொடர்ந்து வந்த கால கட்டத்திலும் பாரசீக வளைகுடாவிலும், செங்கடலிலும் அமைந்திருந்த துறைமுக நகரங்களில் வெளிநாட்டு வர்த்தகம் தடைபட்டது மட்டுமல்லாமல் அதிக வரி விதிப்பு காரணமாக ஏற‌க்குறைய வர்த்தகம் நின்றே போய்விட்டது எனலாம். மேற்காசிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு இருந்த ஒரே தரைவழி மார்க்கத்தில் அமைந்திருந்த‌ கான்ஸ்டாண்டினோபில் நகரமும் 1453இல் துருக்கியரால் கைப்பற்றப்பட்ட பின் இந்தியா உட்பட ஆசிய நாடுகள் ஒன்றுடனும் ஐரோப்பியர் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிட்ட து.

இந்த நிலையில் ஐரோப்பியர் இந்தியாவுக்கு வர வேறு கடல் வழிகளைப் பல ஆண்டுகளாக முனைப்புடன் தேடியதும், இறுதியாக ஆப்பிரிக்காவின் தென் முனையைச் சுற்றிக்கொண்டு வந்து தமிழகத்தின் மேற்குக் கடற்கரையில் கரையிறங்கியதும் நடைபெற்றன (வாஸ்கோ-ட-காமா, 1498).

மேலைக் கடலோரத்தில் வந்திறங்கிய ஐரோப்பியர் தமிழகத்து வர்த்தகருடன் தமது வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

தமிழகத்தின் பகுதிகளில் அவர்கள் வந்து தம் வியாபார மையங்களை அமைத்ததைத் தொடர்ந்து, ஆங்கிலேயர் 17ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொண்டை மண்டலத்தின் கடலோரத்தில் சில சிறிய மீன்பிடி கிராமங்கள் அமைந்திருந்த ஒரு பகுதியில் தமது வர்த்தக மையம் ஒன்றை அமைத்தனர். அந்த இடத்தின் பாதுகாப்புக்காக‌ அமைக்கப்பட்ட தற்காலிக முள் வேலி விரைவிலேயே சிறிய சுற்றுச் சுவராக மாறி புனித ஜார்ஜ் கோட்டை என்ற பெயருடன் ஒரு கோட்டையாக வடிவெடுத்தது. முள் வேலி காம்பவுண்டாக இருக்கும்போது அதனைக் காவல் காக்கும் வேலையில் அமர்த்தப்பட்ட, அக்கம் பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த‌, ஒரு கை விரல்களுக்குள் எண்ணிவிடக் கூடிய சிறிய எண்ணிக்கையிலான காவலாளிகளைக் கொண்ட அமைப்பின் தொடர் வளர்ச்சிதான் இன்றைய இந்தியாவின் நவீன ராணுவம் ஆகும்.

பெரும் வர்த்தக மையமாக வளர்ந்துவிட்ட ஜார்ஜ் கோட்டையின் அருகில் வளர்ந்து விரிந்த நவீன நகரமான சென்னைப் பட்டினம் அதனருகில் வளர்ச்சி பெற்ற புதிய துறைமுகத்தின் உதவியுடன் பன்னாட்டு வர்த்தகக் கப்பல்கள் வருகின்ற பெருந்துறைமுகமாக எழுச்சி பெற்றது.

அதே சமயத்தில், வங்காளத்தை ஆளும் நவாப்பின் பதவிக்கு போட்டி ஏற்பட்டபோது அதில் ஒரு தரப்பினர் அங்கேயிருந்த ஆங்கிலேயரின் உதவியைக் கோரினர். தம்மிடம் போதுமான படைகள் இல்லாததால், அங்கிருந்த ஆங்கிலேயர் சென்னையிலிருந்து உதவி அனுப்பும்படி கேட்டபோது, இங்கிருந்து ஒரு படை ராப்ர்ட் கிளைவ் என்ற தளபதியின் தலைமையில் அனுப்பப்பட்டது.

ராபர்ட் கிளைவ் அங்கு சென்று, மீர் ஜாபருக்கு ஆதரவாக‌ யுத்தம் செய்து (பிளாசி போர் - 1757) சிராஜ்-உத்-தௌலாவைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார். வங்காளத்தில் அமைதி திரும்பியது. அத்துடன், தமக்குச் செய்த உதவிக்குப் பரிசாக மீர் ஜாபர் ஆங்கிலேயருக்கு வங்காளத்தில் 24 பர்கானாக்கள் என்ற பகுதியின் ஆட்சியுரிமையைக் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக வங்காளத்தில் பெரும் செல்வாக்கு பெற்ற ஆங்கிலேயர் தமது வணிகத்தை அங்கு விரிவுபடுத்தினர். அவர்களால் அங்கு அமைக்கப்பட்டிருந்த‌ வில்லியம் கோட்டையைச் சுற்றிலும் வளர்ந்த கல்கத்தா என்ற நகரம் பெரிய வணிக மையமாக வளர்ந்தது.

பழங்கதை பேசியது போதும், இப்போது சேது சமுத்திரத்திற்குத் திரும்பி வாருங்கள் என்கிறீர்களா? வரலாற்றில்தான் உண்மைகள் புதையுண்டு கிடக்கின்றன, தமிழனின் பெருமைகள் அங்குதான் உறங்குகின்றன. சென்னை, கல்கத்தா என்ற இந்த இரு வணிகப் பெருநகரங்களின் வளர்ச்சிக்கும் சேதுவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

“தூரக் குறைப்பு - நவீன கால வர்த்தகத்தின் ஒரு அடிப்படைத் தேவை”

வணிகத்தில், ஒரு பொருள் கிடைக்கும் இடத்திலிருந்து அது விற்கப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது முக்கிய பங்கை வகிக்கிறது. பயண தூரத்துடன் அதற்கான பணச் செலவும் அதிகரிப்பதால் தூரத்தைப் பொறுத்து பொருளின் விலை அதிகரிக்கிறது.

கால மாறுதல்களினால் தமிழகத்தின் கிழக்குக் கரையில் சென்னை என்ற பெரிய நகரமும், அதற்கு வடக்கில் வெகு தொலைவில் வங்கத்தில் கல்கத்தா என்ற இன்னொரு பெரிய நகரமும் தோன்றி வர்த்தக மையங்களாக வளர்ந்தன என்பதை மேலே கூறினேன். மேலை நாடுகளுடனான வர்த்தகத்தை இந்த இரு துறைமுக நகரங்களும் அதிக அளவில் கையாண்டன. ஆனால், மேலை நாடுகளிலிருந்து வருகின்ற பெரிய வணிகக் கப்பல்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கிலுள்ள அரபிக் கடலைத் தாண்டியதும் கீழைக் கடலில் அமைந்துள்ள இவ்விரு துறைமுகங்களுக்கும் செல்வதற்காக கன்னியாகுமரியைத் தாண்டி வடக்கு நோக்கித் திரும்பிவிட முடியாது.

ஏனென்றால், தென் தமிழகத்தின் முத்துக் கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா, பாக் நீர்ச்சந்தி ஆகிய இரு கடற்பகுதிகளும் ஆழம் குறைந்தவை ஆகும். 18ஆம் நூற்றாண்டில் உலக வர்த்தகத்தில் பெரும் பங்காற்றத் துவங்கிய‌ பெரிய நீராவிக் கப்பல்கள் இந்தக் கடல் வழியில் செல்ல இயலாது. இதனால், தமிழகத்தின் முத்துக் கடலோர துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் மீண்டுமாக தெற்கு நோக்கித் திரும்பி ப‌ல நூறு கல் தொலைவு பயணம் செய்து, தீவு நாடான‌ இலங்கையை ஒரு சுற்றுச் சுற்றிய பின்தான் மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பி சென்னையையோ, அதற்கு வடக்கில் அமைந்துள்ள வேறு இந்தியத் துறைமுகங்களையோ சென்றடைய முடியும். இவ்வாறு தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் தூரம் உண்மையான தூரத்தைவிட‌ இரு மடங்குக்கும் அதிகமாக ஆயிற்று. இதே போல் சென்னை, கல்கத்தா போன்ற வங்கக் கடலோர துறைமுகங்களிலிருந்து மேலை நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களும் இலங்கையைச் சுற்றிய பின்தான் மேற்கு நோக்கித் திரும்பும் நிலை.

இப்படி கப்பல்களின் பயண தூரம் தேவையற்ற விதத்தில் அதிகமாக இருந்ததும், அதினால் உண்டான கால தாமதமும் எரிபொருள் விரயமும் தவிர்க்க‌ இயலாதவை என்றுதான் பலராலும் எண்ணப்பட்டன‌.

“சிக்கல்-சிந்தனை-தீர்வு”

பயண தூரத்தையும் அதற்கான காலத்தையும் அதிகரித்ததுமல்லாமல் கப்பல்களை இயக்கும் செலவையும் அதிகரிக்கச் செய்த இந்த நிலைமையை கவனித்த சில சிந்தனையாளர்கள் இதை மாற்ற வழி இல்லையா என்று சிந்தித்தார்கள். அவர்களுடைய சிந்தனையின் விளைவாகக் கிடைத்த தீர்வுதான் சேது சமுத்திரத்தை பெரிய கப்பல்களின் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றும் திட்டம்.

சேது கடல் பகுதியில் கப்பல் செல்லக் கூடிய வழித்தடத்தில் வரும் ஆழம் குறைவான பகுதிகளை ஆழப்படுத்துவதுதான் இந்தத் திட்டம். கடலுக்கு அடியில் மண்ணை அகற்றி ஒரு நீண்ட கால்வாய் போன்று அமைக்க வேண்டும். போதிய ஆழம் உள்ள இடங்களுக்கு இடையில் இருக்கும் மணல் திட்டுக்களை அகற்றி ஆழப்படுத்துவதன் மூலம் இதைச் செய்ய முடியும்.

பாக் நீரிணைப்புக்கும் மன்னார் வளைகுடாவுக்கும் இடையிலான கடற்பகுதியை ஆழப்படுத்துவதினால் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்படும் நல் விளைவுகளைக் குறித்து முதன் முதல் சிந்தித்தவர் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேய அதிகாரியான‌ ஏ.டி.டெய்லர் ஆவார். இவர் 1860இல் ஒரு திட்டத்தைத் தயாரித்து அளித்தார்.

1860 துவங்கி 1922 வரையில் பல ஆங்கிலேயப் பொறியாள‌ர்களும் ஆட்சியாளர்களும் -- சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் உட்பட -- இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்தி வந்தனர்.

“இரு பெரும் முன் மாதிரிகள்”

இந்தக் காலகட்டத்தில் உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களுக்கு வழி வகுத்த இரு "கடல் வழி தூரக் குறைப்புத் திட்டங்கள்" வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன. இதன் மூலம் உலகின் மிக சுறுசுறுப்பான இரண்டு கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு தூரக் குறைப்பை அடைந்தன. இவை, தமக்கிடையில் குறுகலான நிலப் பகுதியை உடையவையாக இருந்த இரு கடல்களை கால்வாய் வெட்டி இணப்பதின் மூலம் செயலாக்கப்பட்ட திட்டங்கள் ஆகும்.

முதலாவது, 1859இல் துவங்கி பத்தாண்டுகளில் வெட்டி முடிக்கப்பட்ட சூயஸ் கால்வாய் ஆகும். இது செங்கடலையும் மத்திய தரைக் கடலையும் இணைத்தது. இக்கால்வாய் ஐரோப்பாவிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் பயண தூரத்தை பல ஆயிரம் கிலோ மீட்டர் குறையச் செய்தது.

அடுத்தது, 1881இல் துவங்கி 33 ஆண்டுகளுக்குப் பின் முடிவடைந்த பனாமா கால்வாய். அட்லாண்டிக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் இணைத்த இந்தக் கால்வாய், அமெரிக்கா கண்டத்தின் மேற்குக் கரைக்கும் கிழக்குக் கரைக்கும் இடையிலான கடல் பயணத்தை பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் குறைத்தது.

வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இந்த கடல்வழிக் கால்வாய்கள், இங்கே இந்தியாவிலிருந்த பொறியாளர்களுக்கு ஊக்கம் தருபவையாக அமைந்தன. சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அவர்களின் சிந்தனையைத் தூண்டின.

“இந்திய விடுதலைக்குப் பின்”

இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர், தமிழகத்தில் காமராஜர் முதல் அமைச்சராக இருந்தபோது 1955இல் பிரதமர் ஜவகர்லால் நேருவால் இராமசாமி முதலியார் தலைமையில் நியமிக்கப்பட்ட "சேது சமுத்திரத் திட்டக் குழு" திட்ட வடிவினையும் மதிப்பீட்டையும் தயாரித்து அரசுக்குச் சமர்ப்பித்தது. ஆனால், திட்ட வேலைகள் துவங்கப்படாமல் நின்று போயின.

பிரதமர் இந்திரா காந்தியால் லெட்சுமி நாராயணன் தலைமையில் அமைக்கப்பட்ட‌ குழு 1983இல் மீண்டும் ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்தது. இப்போதும் திட்டப்பணிகள் துவங்கப்படவில்லை.

“தடைகள்: பொருட்செலவும், ஆகும் காலமும்”

ஒவ்வொரு கால கட்டத்திலும் பொறியியல் வல்லுனர்கள் திட்டத்தைச் செயல்படுத்த விரும்பினர். ஆர்வமும் செயல்படும் ஆற்றலும் மிக்க சிலரால் இந்தத் திட்டம் கையில் எடுக்கப்பட்டாலும் அதின் பிரம்மாண்டம் பலரையும் மலைக்க வைத்தது என்பதும் உண்மை. திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல சிக்கல்களும் இருந்தன. அவற்றில் முக்கியமானது பண ஒதுக்கீடு.

“செயல்படுத்தும் ஆர்வம்”

இந்தியா விடுதலை பெற்றபின் தமிழகத்தை ஆண்ட தலைவர்கள் எல்லோருமே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் அவசியத்தையும், அதினால் உண்டாகக் கூடிய பொருளாதார நன்மைகளையும் மனதில் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த விரும்பினார்கள்.

1955இல் காமராஜர் சென்னை மாகாண முதல் அமைச்சராக இருந்தபோது அவர் நேருவை கேட்டுக் கொண்டதின் பேரில் சேது சமுத்திரத் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

1958இல் காமராஜர் முதல்வராக இருந்தபோது தூத்துக்குடி துறைமுக டெவலப்மெண்ட் கவுன்சில் பிரதமர் நேருவைச் சந்தித்து, தூத்துக்குடி துறைமுகத்தையும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தையும் செயல்படுத்தக் கோரி கோரிக்கை மனு கொடுத்தது.

1967இல் அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது அவர் தலைமையில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதை வலியுறுத்தி எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது.

1981இல் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, சேது சமுத்திரத் திட்டம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட எச்.ஆர். லட்சுமி நாராயணன் தலைமையிலான குழுவைச் சந்தித்து அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். அந்தக் குழு மதுரைக்கும், நெல்லைக்கும் சென்றபோது தி.மு.க. சார்பிலும் அந்தக் குழுவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

1985-1990ஆம் ஆண்டுக்கான ஏழாவது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில், அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்று கூறியிருக்கிறார்.

2001இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக‌ தனது சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் ஆதம் பாலம் பகுதியில் கடலை ஆழப்படுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்வோம் என்று விளக்கமாகக் குறிப்பிட்ட‌து. 2004இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போதும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று கூறியது.

தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய பெரிய‌ கட்சிகள் மட்டுமல்ல, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியதின் அவசியத்தைக் குறித்து அவ்வப்போது கோரிக்கை விடுத்து வந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

“காலம் மாறியது, கனவு கை கூடியது, திட்டம் செயல் வடிவம் பெற்றது”

மக்களாட்சி என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி நடைபெறுவதாகும். இந்தியா போன்ற பல இன மொழி மக்கள் வாழும் ஒரு கூட்டமைப்பில், ஒரு மாநிலத்தின் நன்மைக்கான திட்டத்தை அம்மாநில அரசும் மக்களும் மட்டும் ஆதரிப்பது அத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலையும் நிதி ஒதுக்கீட்டையும் பெறுவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. டெல்லியில் இருக்கும் மத்திய சட்டசபையில் (நாடாளுமன்றத்தில்) ஒரு மாநில அரசின் திட்டத்திற்கு போதிய ஆதரவைப் பெறுவது கடினமான ஒன்று.

மத்தியில் சொந்தப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் மாநிலங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்ப்பது அபூர்வம். இதனாலேயே பல திட்டங்கள் கால தாமதத்திற்கு உள்ளாவது வழக்கம். சேது சமுத்திரத் திட்டமும் இப்படிதான் அலட்சியம் செய்யப்பட்டுக் கிடந்தது.

ஆனால் காலம் மாறியது. 1996 துவங்கி, மத்தியில் பல கட்சிகள் சேர்ந்து கூட்டாக ஆட்சி அமைக்கும் அரசியல் சூழல் இந்தியாவில் ஏற்பட்டது. இந்தச் சூழலில் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவு, மத்தியில் ஆட்சி செய்பவர்களுக்கு இன்றியமையாததாக மாறியது.

1998இல் அதிமுகவின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாயி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்தது.

1999 இல், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியலமைப்புக் கொள்கையை உடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த‌ திரு. வாஜ்பாயி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு தமிழரின் நீண்ட கால கனவுத் திட்டமான சேது சமுத்திர‌க் கால்வாய்த் திட்டத்திற்கான பூர்வாங்கப் பணிகள் துவங்கப்பட ஆவன செய்தது.

1999இலிருந்து 2004 வரையில் பிஜேபி தலைமையில் நடந்த மத்திய அரசில் பங்கு வகித்த திமுக, 2001இல் தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்பேற்றது. ஆனாலும் திமுக அரசின் முயற்சியால் செயல் வடிவம் பெறத் துவங்கிய திட்டம் மீண்டும் சில ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

2004-ம் ஆண்டு மத்தியில் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் அமைந்த மத்திய‌ அரசிலும் திமுக பங்கு பெற்றது. கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக தமிழரான டி.ஆர். பாலு பொறுப்பேற்றார். திமுக தலைவரான கலைஞர் கருணாநிதியின் ஆலோசனையின்படி டி.ஆர். பாலு மத்திய அரசிடம் பேசி சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த பாராளுமன்றத்தில் அதைச் சமர்ப்பிக்கவும், ஒப்புதல் பெறவும் வழி வகுத்தார்.

திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும், தேவையான பல துறை ஒப்புதல்களும் பெறப்பட்டு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணிகள் ஜூலை 2005இல் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டன. அப்போது திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

திட்டப் பணிகள் விரைவுடன் செயல்படுத்தப்பட்டன.

“காழ்ப்பு அரசியல்-மூட நம்பிக்கை-திட்டப் பணிகள் நிறுத்தம்”திராவிட இயக்கப் பாரம்பரியத்தைத் தனதாகக் கொண்ட திராவிட முன்னேற்ற கழகமானது மத்தியில் ஆண்ட பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகிய இரு எதிரெதிர் துருவங்களின் ஆதரவையும் தக்க முறையில் பெற்று பணிகள் விரைவாக நடைபெற்று வந்த நிலையில், 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவின்படி மீண்டும் திமுக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது. மத்திய அரசிலும் திமுக அமைச்சர்கள் இருந்தனர்.

சுமார் 75 விழுக்காடு கால்வாய் அமைக்கும் வேலை முடிவடைந்து, துரப்பணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்ற‌ நிலையில் பணிகளை தடுத்து நிறுத்த சிலர் வஞ்சக ஆலோசனையில் ஈடுபட்டனர். ஐந்தாண்டு திமுக ஆட்சியின்போது சேது சமுத்திரத் திட்டப் பணிகள் முடிவடைந்து கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டுவிடும் என்றிருந்த நிலையில், அப்படி ஆகக் கூடாது என்ற தமிழர் விரோத நய வஞ்சக எண்ணங்கள் துளிர்க்கத் துவங்கின.

அதன் தொடர்ச்சியாக, தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் சுவாமி என்ற பகுதி நேர‌ அரசியல்வாதி சேது சமுத்திரத் திட்டத்தின்படி தோண்டப்படும் கால்வாய் ராமேசுவரத்திற்குக் கிழக்கில் கடலுக்கு அடியில்(?) அமைந்துள்ள ராமர் பாலத்தை சேதப்படுத்தும், இது இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தும் செயல், ஆகவே கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று 2009இல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அமைப்புக்களின் ஆதரவுடன் தொடுக்கப்பட்ட‌ இந்த வழக்கின் காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கால்வாய்ப் பணிகள் நிறுத்தப்பட்டன. வழக்கை திமுக தலைமையிலான மாநில அரசும், மத்திய அரசும் எதிர்கொண்டன.
மத உணர்வுகளைத் தூண்டி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேறாமல் தடுக்கும் சதிக்கு சில கட்சிகள் அரசியல் லாபம் பெறும் நோக்கத்துடன் துணை போயின. இந்துத்துவா என்று அழைக்கப்படும் இந்து மதவாத சக்திகளின் தோழரான சுப்பிரமணியன் சுவாமியின் வழக்குக்கு அவர் முன்பு அங்கம் வகித்த பாரதீய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்தது.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு முதன்முதல் 1998இல் மத்திய அரசின் ஒப்புதல் வழங்கியது தமது கட்சியின் மிக முக்கிய தலைவரும், தம் கட்சி சார்பாக இந்தியாவின் பிரதமராக இருந்த ஒரே தலைவருமான‌ திரு. வாஜ்பாயி அவர்கள்தான் என்பதை பிஜேபி கட்சி அரசியல் வசதிக்காக மறந்ததுபோல் நடித்தது.
இந்நிலையில் மீண்டும் 2010ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. திமுக தோல்வியுற்று, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றது.

தமிழர்மேலும், தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு ஆகியவை மேலும் தீராப் பகை கொண்ட ஆரிய இனவாத சக்திகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமக்குள் கூடிக்கொள்ளுவதும், தமிழ் இன அழிப்பில் இணைந்து செயல்படுவதும் வரலாற்றில் காணக் கிடக்கும் உண்மைகள். தமக்குள் பல வேறுபாடுகளையும், வழக்குகளையும் உடைய சுப்பிரமணியன் சுவாமியும் ஜெயலலிதாவும் இந்த அடிப்படையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்தனர்.

ராமர் பாலம் என்ற புதிய பூதத்தைக் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமிக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்தார். ராமர் பாலம் பாதிக்கப்படக் கூடாது என்றார். எந்த சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முன்பு தன் தேர்தல் அறிக்கைகளில் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தாரோ, அதே திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று இப்போது அவரே அறிவித்தார்.உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்கை எதிர்கொள்ளும் மாநில அரசுக்கு முதல்வராக ஆகிவிட்ட ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்தவரின் கூற்றுக்கு ஆதரவளித்தார். வழக்கு விசாரணையின்போது "சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை" என்று ஜெயலலிதாவின் அதிமுக அரசு 2012 அக்டோபர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வழக்கு மாநில நலனுக்கு எதிராக வலுப் பெற்றது.

ஜெயலலிதாவின் அதிமுக அரசு அத்துடன் நிற்கவில்லை. ராமர் பாலத்தை புராதன நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை எழுப்பியுள்ளது. இப்படியாக‌ மனிதனால் செய்யப்பட்ட கட்டுமானங்களோ, இடிபாடுகளோ எதுவும் இல்லாத ஒரு இடத்தை அங்கு கடலுக்கு அடியில் பாலம் இருந்தது என்று பொய்யாகக் கூறி சேது சமுத்திரத் திட்டத்திற்கு இப்போது தடைக்கல் போடப்பட்டுள்ளது. ஒரு காலத்திலும், ஒருவரும் பார்த்திராத ஒரு இடத்தை, எந்த விதமான மத கைங்கரியங்களும் நடைபெறாத ஒரு இடத்தை புனித ஸ்தலமாக அறிவிக்க வேண்டும் என்ற புதுமையான கோரிக்கை தமிழகத்தின் முதல் அமைச்சரால் எழுப்பப்பட்ட வினோதம் இங்கு நடந்துள்ளது.

இந்த வழக்கு முடிவடையும் வரையில் சேது சமுத்திரத் திட்டத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. திட்டத்திற்கு எதிரான, விஞ்ஞான ஆதாரமில்லாத ஆட்சேபணைகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து திட்டப் பணிகள் தொடர வழி வகுக்கும் என்று நம்பி தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர்.

“சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்”

சேது என்று பாரதியார் தம் பாடலில் குறிப்பிடுவது சேது சமுத்திரம் என்று அழைக்கப்பட்ட கடல் பரப்பைதான். இந்தக் கடலை மண் போட்டு மேடாக்கி, யாரும் எளிதில் கடந்து செல்லக் கூடிய தரைப் பகுதியாக மாற்ற வேண்டும் என்பது பாரதியாரின் ஆவல். இலங்கையுடன் நமக்கு இருந்த வர்த்தக, கலாசார உறவுகளுக்கு இந்த இடைப்பட்ட கடல் இடையூறாக இருக்கிறது என்று பாரதியின் கவிதையுள்ளம் எண்ணியது.
தெய்வ பக்தி நிறைந்த பாரதியார், சேது சமுத்திரப் பகுதியில் ராமர் பாலம் என்று ஒன்று இருக்கிறது என்று கூறவில்லை. அவர் கடலையே மூடி மக்கள் சென்று வரும் தெருவாக ஆக்கிவிட வேண்டும் என்கிறார்.

இல்லாத ஒரு பாலத்தை இருப்பதாகக் கூறி இப்போது திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த திரு. வாஜ்பாயி அவர்கள் இந்துத்துவா கொள்கையையுடைய‌ பிஜேபி தலைவர்தான். அவருக்குத் தெரியாத ராமாயணமா பிஜேபியின் பிற தலைவர்களுக்குத் தெரிந்துவிட்டது? திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பணியில் அருண் ஜேட்லி போன்ற பிஜேபி அமைச்சர்களும் பங்காற்றியுள்ளனர். அப்போதெல்லாம் இல்லாத ராமர் பாலம் 2009இல் சுப்பிரமணியன் சுவாமி சொன்னவுடன் புதிதாக வந்துவிடுமா என்பதை பிஜேபி கட்சியினரும், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர். தமக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முயன்று வந்தவர். இன்று அவருடைய கட்சியின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். உடைய அந்த விருப்பம் நிறைவேற இடமளித்து ஒத்துழைக்க‌ வேண்டும்.
தமிழக மக்களின் நலனை மனதில் கொண்டு, கட்சி வேறுபாடுகளை மறந்து தமிழக அரசியல்வாதிகள் செயல்படுவது ஒன்றுதான் நம் மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும். தமிழக மக்கள் செலுத்தும் வரிகளில் பெரும் பங்கை தன் கணக்கில் பெற்றுக்கொள்ளும் இந்திய மத்திய அரசிடமிருந்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான நிதியைப் பெற்றுத் தருவதும், அத்தகைய திட்டங்களைத் தடையின்றி நிறைவேற்றுவதும் இங்குள்ள தலைவர்களின் கடமையாகும் என்ப‌தை உணர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் நடந்து கொள்வார்களா ??????
தகவலுக்கு நன்றி
கமல் கண்ணன் ,ஆர். எம். பால்ராஜ்