Digital Time and Date

Welcome Note

Saturday, July 13, 2013

புற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு

புற்றுநோய்க்கு மருத்துவமே கிடையாது என ஆரம்பத்தில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் நவீன காலத்தில் புற்று நோய்க்கும் மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்பது மகிழ்ச்சியான ஒரு செய்தி.



 புற்று நோய்க்கு மருத்துவம் கண்டறியப்படாத சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ‘அல்குர்ஆனில் எல்லா நோய்க்கும் மருந்து உண்டு’ என வல்ல அல்லாஹ் கூறுவது ஆச்சரியத்தையும், மன நிம்மதியையும் தருகிறது.




 “இன்னும், நாம் முஃமின்களுக்கு அருளாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே அல்குர்ஆனில் இறக்கி வைத்தோம்”.


                                              -அல்குர்ஆன் 17:82




  மரணம் என்ற நோயைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் அல்குர்ஆனிலே மருத்துவ பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன. சந்தர்ப்பங்கள் வரும்போது அவை கண்டுபிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்சமயம் நோன்பின் மூலம் புற்றுநோய்க்கு மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


நோய்க்கு மருத்துவம் பார்க்கும் முறை இரண்டு வகை.


1.மருந்து மாத்திரைகளால் சிகிச்சை அளித்து நோயை கட்டுப்படுத்துவது. 2. மருந்து மாத்திரைகளை கையாளாமல் மனக்கட்டுப்பாட்டின் மூலம் மனதுக்கு சிகிச்சை அளித்து நோயை கட்டுப்படுத்துவது.




  நோய்களிலே மிகக் கொடியதாக புற்றுநோயை குறிப்பிடப்படுகிறது. ஆனால் உண்மையில் புற்றுநோயை விட மிகக் கொடிய நோய் மனநோய் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.




  “அவர்களுடைய இதயங்களிம் ஒரு நோயுள்ளது. அல்லாஹ் அந்த நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கிவிட்டான்.”


                                                -அல்குர்ஆன் (2:10)






  மனது ஆரோக்கியமாக இருந்தால் மனித உறுப்புகள் யாவும் ஆரோக்கியம் பெற்று விடும். மனது பாழ்பட்டு விட்டால் மனித உறுப்புகள் யாவும் பாழாகி விடும். மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் நோய், நொடி இல்லாமல் (அல்லாஹ்வின் நாட்டப்படி) மன நிம்மதியாக வாழலாம். மனதுக்கு கவலையை ஏற்படுத்தினால், அதுவே அனைத்துவிதமான நோய்களுக்கும் மூலகாரணமாக ஆகி விடும்.






  “அறிந்து கொள்ளுங்கள் ! மனித உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீர்பட்டு விட்டால் உடலுறுப்புகள் யாவும் சீராகி விடும். அது பாழாகி விட்டால் உடலுறுப்புகள் யாவும் பாழாகி விடும். அறிந்து கொள்ளுங்கள் ! அது தான் உள்ளம் அறிந்து கொள்ளுங்கள் ! அது தான் உள்ளம்”


                                             -நபி (ஸல்) அவர்கள்






  மனதை சீராகவும், ஆரோக்கியமாகவும், நோய்நொடி இல்லாமல் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்வதற்கு சிறந்த வைத்தியமாக நோன்பு அமைந்திருக்கிறது. மேலும் மனதை கட்டுப்பாடாகவும் வைத்துக் கொள்வதற்கு சிறந்த சிகிச்சையாக நோன்பு அமைந்திருக்கிறது. நோன்பு கடமையாக்கப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.




1. ஆரோக்கியம் பெற;


2. பசிக்கொடுமையை தெரிந்து கொள்ள;


3. மன அமைதி பெற, மனோ இச்சைகளை ஒதுக்கித் தள்ள;


4. ஏழைகள் மீது இரக்கம் காட்ட;


5. ஏழைகளுடன் உறவாடி அவர்களின் சுமைகளை அனுபவித்துக் கொள்ள




  இதுபோன்ற காரணங்களால் நோன்பு கடமையாக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், அடிப்படையான காரணம் மனக்கட்டுப்பாட்டை பெறுவதற்குத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது என இஸ்லாம் கூறுகிறது. மனக் கட்டுப்பாடு எப்படி கிடைக்கும் என்றால் மனது தூய்மையாக இருந்தால் கிடைக்கும்.




  மனது தூய்மையாக இருந்தால்




1. ஆரோக்கியம் கிடைக்கும்;


2. பசிக்கொடுமையை தெரிந்து கொள்ளலாம்;


3. மன அமைதி கிடைத்து விடும்;


4. ஏழைகள் மீது இரக்கம் பிறந்து விடும்;


5. ஏழைகளுடன் உறவாடி அவர்களின் சுமைகளை அனுபவித்துக் கொள்ள முடியும்.




  மனதை பக்குவப்படுத்தவும், தூய்மையாக வைத்துக் கொள்ளவும் நினைப்பவர்களுக்கு நோன்பு வைப்பதில் அவை கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.




  “ஈமான் கொண்டோரே ! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.”


                                             -அல்குர்ஆன் (2:183)




 நோன்பு என்பது மனிதனுக்கு அகத்திலும், புறத்திலும் தூய்மையையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத் தருகிறது. மேலும் நோன்பு உயிர்க் கொல்லியாக இருக்கும் புற்றுநோய்க்கும் சிறந்த அருமருந்தாக உள்ளது.




  அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.




  ”நோன்பு (உண்ணாவிரதம்) மேற்கொள்வது, புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும். அதற்கான சிகிச்சைக்கும் ஊக்கமளிக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. புற்றுநோய்க்கான ‘கீமோதெரபி’ சிகிச்சையுடன் உண்ணாவிரதத்தையும் கடைபிடிக்கும் போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், பரவலையும் அது தாமதப்படுத்துகிறது. சில புற்று நோய்களை முற்றிலுமாக குணப்படுத்துகிறது”.




  தங்களின் இந்தக் கண்டுபிடிப்பு, மேலும் சிறப்பான புற்றுநோய் சிகிச்சை முறையை உருவாக்க பயன்படும் என்றும், இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.




  இது தொடர்பாக எலிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, உண்ணாவிரதத்துக்கு சாதாரண செல்களைப் போலில்லாமல் புற்றுநோய் செல்கள் வித்தியாசமான எதிர்வினை ஆற்றுவது தெரிய வந்தது. அதன் இறுதியில் அவை தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றன. ’இதை புற்றுநோய் செல்களின் தற்கொலை என்று கூறலாம்’. என்று முன்னணி ஆய்வாளரான வால்டர் லோங்கோ கூறுகிறார்.




  ‘நோன்பின் போது ஏற்படும் இந்நிலையை புற்றுநோய்ச் செல்கள் ஈடுகட்ட முயல்கின்றன. ஆனால் அவற்றால் அவ்வாறு செய்ய முடிவதில்லை’ என்றும் அவர் கூறுகிறார்.




  புற்றுநோயாளிகள் புற்றுநோய் சிகிச்சை பெறாமல் நோன்பு இருக்கும் போது புற்றுச் செல்களின் வளர்ச்சி தாமதமாகிறது. அதே வேளையில், ‘கீமோதெரபி’ யுடன் நோன்பையும் மேற்கொள்ளும் போது அது நல்ல பலனைத் தருவது உறுதியாகி இருக்கிறது.




  புற்றுநோயை குணமாக்கும் நோன்பும், கீமோதெரபியும்




  புற்றுநோயை குணப்படுத்த அறிவியல் ரீதியான மருத்துவமுறையாக கருதப்படும் ‘கீமோதெரபி’ என்ற மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்மீக ரீதியான மருத்துவ முறையாகக் கருதப்படும் ‘நோன்பு’ என்ற மருத்துவ சிகிச்சையையும் கடைபிடிக்க வேண்டும்.




  உலகில் வாழும் புற்றுநோயாளிகள் ‘கீமோதெரபி’ என்ற மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டும், புற்றுநோய் முற்றிலும் குணம் அடையாத பட்சத்தில், நோன்பு என்னும் மருத்துவ முறையை கடைபிடித்தால் நிச்சயம் புற்றுநோய் குறையும் என்பதல்ல, முற்றிலும் புற்றுநோய் இல்லாமல் போய்விடும் என்பதற்கு நூறு சதவீத உத்தரவாதத்தை குர்ஆன் வழி மருத்துவமும், நபிவழி மருத்துவமும் உத்தரவாதமும், உறுதிமொழியும் அளிக்கின்றன. எனவே புற்றுநோய் இல்லாமல் நலமுடனும், வளமுடனும் வாழ நோன்பு நோற்போம் ! உடல் நலம் காப்போம் !





நன்றி : குர்ஆனின் குரல்
ஜுலை 2013

இதை படிச்சா வியந்து தான் போவீர்கள்! ! ! !

•வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர்வராது.

• குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்.

• புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

• ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

• சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

• தர்பூசணி, தட்டும் போது “ஹாலோ” சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

• கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

• 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

• சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

• இயர் (ear) போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

• திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடுபடுத்தினால், வெடிக்கும்.

• கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

• எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

• 40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழப்பான்.

• சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

• பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.

• வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

• பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

• நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.

மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

• லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

• 15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

• குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

• வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

• சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

• கண்களை கசக்கும் போது தோன்றும்நட்சத்திரம் மற்றும் கலர்கள்,"பாஸ்பீன்ஸ்" எனப்படும்..


தாய்லாந்தின் நடக்கும் தெரு

தாய்லாந்தில் பட்டாயா நகரில், ஒரு தெருவின் பெயர் "வாக்கிங் ஸ்டீரீட்'. பட்டாயா நகரில் பிரபலமான இந்த தெருவில், மாலை முதல் விடியற்காலை வரை வாகனங்கள் அனுமதி இல்லை.

தெரு முழுவதும் நடந்தே தான் செல்ல வேண்டும். அதனால் தான் "வாக்கிங் ஸ்டீரீட்' என்று பெயர். "வாக்கிங் ஸ்டீரீட்' இரவு வாழ்க்கைக்கு பெயர் பெற்ற தெரு. இந்த தெருவில் தான் பார்கள், பப்கள், டிஸ்கொதேக்கள், மசாஜ் பார்லர்கள், ரஷ்ய நடனங்கள், பாலியல் சார்ந்த மேஜிக்குகள் என அனைத்துமே இருக்கும். தாய்லாந்து உணவு வகைகள், இந்த தெருவில் எப்போதும் கிடைக்கும். தலைநகர் பாங்காக்கிற்கு வருபவர்களை விட, பட்டாயாவுக்கு, சுற்றுலாப் பயணிகள் அதிகம் வர, இந்த "வாக்கிங் ஸ்டீரீட்டே' காரணம்.

உலகில் உள்ள பணக்காரர்கள், தங்கள் பணத்தை தாய்லாந்தில் வந்து தான் கொட்டுகின்றனர். அவர்களின் பணத்தைக் கவரும் தாய்லாந்து, தற்போது உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் முன்னணிக்கு வருகிறது.

amarkalam

Thursday, July 11, 2013

இவைகள் தான் அந்த முக்கியமான 33 செல்வங்க‌ள்

இவைகள் தான் அந்த முக்கியமான 33 செல்வங்க‌ள்




1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதி யுங்கள் 

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும் 

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக் கொடுப் பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது. 

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக் கொள்கிறோம்! 

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல் களை வைத்துக்கொண்டு சரியான முடிவு க்கு வரும் ஒரு கலை. 

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு. 

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்க வில்லை. மற்றவர் இறந்துவிட்டார். 11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள் 

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள் 

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள் 

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம் 

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒரு முறை முடிவெடுங்கள் 

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும் 

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும் 

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண் டும் 

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக் கொள்வோம். 

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான் 

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள் 

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும் 

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர் 

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான் 

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை. 

29. பிறர் நம்மைச் சமாதானப் படுத்த வேண்டும் என்று எதிர் பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப் படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம் 

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந் தேகத்துடனே துவக்க வேண்டும் 

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம். 

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

 

ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது - முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை தேங்காய் எண்ணையே கலப்படம் தானா ? கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?

தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ..

பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் - என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது


மினரல் ஆயில் என்றால் என்ன ?

பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் .. 

கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் .. 

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான் 


தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..

சாம்பிளுக்கு சில படங்கள்.

பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?

தோல் வறண்டு போகும் 
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும் 
முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும் 
அரிப்பு வரும் ..
ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது ..
சாம்பிளுக்க்கு மினரல் ஆயில் எப்படி வறட்சியை உண்டாக்க்கும் 

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள். டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள் 


குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர, கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.



நன்றி முகநூல்

Wednesday, July 10, 2013

ரமலான் மாதத்தில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளும், படிப்பினைகளும்!

ரமலான் மாதத்தில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளும், படிப்பினைகளும்!

எழுதியவர் உரை: சகோதரர் M. அன்வர்தீன்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், ரமலான் மாதத்தில் நடந்த முக்கியமானநிகழ்வுகளில் மூன்று நிகழ்வுகள் முக்கியமானவைகளாக கருதலாம்.
 
முதலாவதாக திரு குர்ஆன்:
உலகம் அழியும் வரை உள்ள மக்களுக்கு வழி காட்டக்கூடிய அருள்மறையாம்,திரு குர்ஆன், புனித ரமலான் மாதத்தில் இறக்கி அருளப்பட்டது. ஆகையால், இந்தமாதத்தை அடைந்தவர்கள்,தக்வா – இறைஅச்சத்தைபெறுவதற்காக நோன்பு நோற்க இறைவன் கட்டளை இட்டுள்ளான்.
 
இரண்டாவதாக, பத்ருப்போர்:
காபிர்களிடத்தில் இஸ்லாத்தைப் பற்றிய அச்ச உணர்வை ஏற்படுத்திய போர். சத்தியம் மற்றும் அசத்தியத்திற்கெதிரான போர்.ஆகையால் தான் அன்றைய தினத்தை யவ்முல் புர்கான், அதாவது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறிவித்த நாள் என்றழைக்கப்படுகிறது.
 
எதிரிகளிடம் அன்றைய காலகட்டத்தில் இருந்த அனைத்து விதமான போர் தளவாடங்கள், போர் தந்திரங்கள், படை பலம் இவை எதுவுமே முஸ்லிம்களிடம் இல்லை. ஆனால் முஸ்லிம்களிடம், எதிரிகளிடத்தில் இல்லாத அதிநவீன ஆயுதமான (sophisticated weapon)தக்வா- இறைஅச்சம்இருந்தது. இறைவன் கண்ண்க்குத் தெரியாத மலக்குகளை அனுப்பி முஸ்லிம்களுக்கு இறுதி வெற்றியை இந்த ரமலான் மாதத்தில் கொடுத்தான்
 
மூன்றாவதாக மக்கா வெற்றி:
அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த உலக மக்களை இஸ்லாத்தின் பக்கமும், முஸ்லிம்கள் பக்கமும் திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்ச்சி. ‘இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது’ என்ற கருத்தை தவிடு பொடியாக்குவது போல், கத்தியின்றி, ரத்தமின்றி மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. போரின் போது கடைபிடிக்கக்கூடிய தர்மத்தை கற்றுக் கொடுத்தார்கள்.
 
இஸ்லாத்தின் பரம எதிரிகளான அபூ ஸூப்யான் அவர்களது மகன்இக்ரிமா போன்றவர்களை மன்னித்தார்கள் நபி (ஸல்) அவர்கள். மக்காவில் இருந்து விரட்டி அடித்தவர்களை, ‘இன்று உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை’ என்று பறை சாற்றினார்கள். ரமலான் மாதத்தில் நடைபெற்ற இந்த வெற்றிதக்வா -இறை அச்சத்தின்காரணமாக இறைவன் அளித்த வெற்றியாகும்.
நாம் இந்த சம்பவங்களில் இருந்துஇறைஅச்சத்தைஅதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை பெற்றுக் கொள்ள முடிகிறது. நோன்பு நோற்பதால் அடையக்கூடிய தக்வா- இறை அச்சத்தை இறைவன் நம் அனைவர்களுக்கும் அதிகப்படுத்த போதுமானவன்.
 
முகநூல் 

ரமழான் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும்

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க கூடியவர்களாக இருந்தார்கள் அவரது மரணத்திற்கு பின் அவரது மனைவிகள் அந்நாட்களில் இஃதிகாஃப் இருப்பதை தொடர்ந்து நிறைவேற்றினர்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல் : அபூதாவுத், முஸ்லிம்

ரமழான் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும்

 

1. நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா ?
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான் அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான் எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள் இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும் அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள் இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 2:187

2. ஊசி போடலாமா ?
உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்றவற்றை போடக்கூடாது.

3. வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா ? தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியுமா?
எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள். நூல் : அஹமத், அபூதாவுத்

4. கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் நோன்பை விடலாமா?
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம்

5. நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால் நோன்பு முறிந்து விடுமா?

நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்யவேண்டும். (அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்)

6. நோன்பு எதை கொண்டு திறப்பது ?

நபி(ஸல்) அவர்கள் பேரித்த பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறப்பார்கள்.

நன்றி சேனை தமிழ் உலா 

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.

நோன்பு காலத்தில் இறைவன் வழங்கிய சலுகைகள்.
1. மாதவிடாய் ஏற்பட்டவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்.
2. நோயாளி : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
3. பிரயாணத்தில் உள்ளவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
4. கர்ப்பிணிப் பெண் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
5. வயது முதிந்தவர்கள் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
6. பால் கொடுக்கும் தாய் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

அல்லாஹ்வும், தூதரும் நோன்பாளிக்கு வழங்கி உள்ள சலுகைக்கான ஆதாரங்களை பார்ப்போம்.
எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை கலாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் கலாச் செய்யுமாறு கட்டளை இடமாட்டார்கள் என்று ஆயிஷா(ரழி) கூறினார்கள். நூல் : புகாரி, முஸ்லிம், அபூதாவுத்

கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்கள் ஒவ்வொரு நோன்புக்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். நோன்பு வைக்க முடியாத முதியவர்களும் ஒவ்வொரு நோன்புக்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அபுதாவுத்

நன்றி சேனை தமிழ் உலா 

இந்த மாதிரி கிரிக்கெட் விளையாட்டை கண்டிப்பாக எங்கும் பார்த்திருக்க மாட்டீர்கள்!!

<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/LcGoZ85nsT0?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>

அமர்க்களம்

4 மணி நேர அடங்காத சிரிப்பிற்கு உத்தரவாதம்!!

<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/Ta5yY-rW-w8?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>

நன்றி அமர்க்களம்

உங்களால சிரிப்ப நிறுத்தவே முடியாது இதப் பார்த்த பிறகு!

<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/upUVLyGBpi0?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>

நன்றி அமர்க்களம்

மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ...

பெங்களூர்: மாரடைப்பால் இறந்த இளம் கன்னட நடிகர் ஹேம்ந்த் இறக்கும் முன்பு இரண்டு வார்த்தைகளை எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார். கன்னட நடிகர் ஹேமந்த்(24). அவர் நடித்த முதல் படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஹேமந்த் நேற்று முன்தினம் காலை பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமையா நாராயண ஹ்ருதாலயா மருத்துவமனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 முதல் 6 மணிநேரம் கழித்து அன்று இரவு 2 மணிக்கு எம்.எஸ். ராமையா நாராயண ஹ்ருதாலயா மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

மாரடைப்பு

ஹேமந்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையும், ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துள்ளதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சையை துவங்கும் முன்பு பல முறை எலக்ட்ரிக் ஷாக் கொடுத்துள்ளனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலையில் உயிர் இழந்தார்.

ஒரு நாளைக்கு 6 பாக்கெட் சிகரெட்

ஹேமந்த் நாள் ஒன்றுக்கு 6 பாக்கெட் சிகரெட் குடித்து வந்துள்ளார். இந்த பழக்கம் தான் அவரது உயிரை வாங்கிவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடைசி வார்த்தை

ஹேமந்த் தனது உயிர் பிரியும் முன்பு பேப்பரும், பேனாவும் கேட்டுள்ளார். அதில் அவர் புகைப்பிடிக்காதீர்கள் என்று எழுதிவிட்டு இறந்துவிட்டார்

ஈகரை தமிழ் களஞ்சியம்

மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய

மின்சாரம் தேவையில்லை
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்
ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு

ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.

நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும்.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. செல்போனில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் செல்போனை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை.

அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக செல்போனை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது.

செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது.
அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார். அதை யாரும் நம்பவில்லை.

அதன்பிறகு செல்போன் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது செல்போனிலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை செல்போனின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் செல்போன் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது.

மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும்.

அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை செல்போனில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும்.

வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்து பேசலாம் என்கிறார் ரவி.

நன்றி அமர்க்களம் 

வாடகை வீடு பெரும் தொல்லை !

வீட்டில் ஆணி அடித்தால் உடன் !
வீட்டுக்காரர் சொல்லால் ஆணி அடிப்பார் !

வீட்டுக்காரர் அருகில் வசித்தால் !
வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம்தான் !

சொந்த வீட்டை விற்று விட்டு !
வாடகை வீடு வந்தால் வலி அதிகம் !

நம் குழந்தை அவர் குழந்தை சண்டையிட்டால் !
நம் குழந்தை அடங்கிப் போக வேண்டும் !

நாய் வளர்க்க நம் மகள் ஆசைப்பட்டால் !
நாயை விட அதிகம் குரைப்பார் வீட்டுக்காரர் !

வருடா வருடம் வாடகை ஏற்றுவார் !
வாய் பேசாமல் தந்தாக வேண்டும் !

வாடகை வீட்டில் குறை இருந்தால் !
வீட்டுக்காரரிடம் பயந்து சொன்னால் !

இஷ்டம் என்றால் இரு !கஷ்டம் என்றால் போ!
இஞ்சி தின்ன குரங்குப் போல கத்துவார் !

பிடிக்காத புதிதாக வந்த வீடு !
பிடிக்கத் துவங்கி மனம் ஒப்பும் !

வீட்டைக் காலி செய்யச சொல்லி !
வீட்டுக்காரர் உத்தரவு போடுவார் !

மறுபடியும் வீடு பார்க்கும் படலம் !
மொத்தமாக முன்தொகை கேட்பார்கள் !

சொந்த வீடு கட்டும் ஆசையில் !
சொந்தமாக மனை வாங்கி ஏமாந்தோம் !

வாடகை வீடு மாறி மாறி குடும்பத்திற்கு !
வலிக்கிறது நெஞ்சம் துக்கமே மிச்சம் !

படிவங்கள் பூர்த்தி செய்யும் போது !
பார்த்தால் நிரந்தர முகவரி கேள்விக்கு நெஞ்சு வலிக்கும் !

இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு !
என்று சொல்லி வைத்தனர் வீடு மாறியே நொந்தோம் !

குறைந்த பட்சம் ஆதார் அட்டை கூட !
கொடுப்பதில்லை வீடு மாறியவர்களுக்கு !

ஒருவனுக்கு பத்து வீடுகள் உண்டு !
பலருக்கு ஒரு வீடு கூட இல்லை !

எட்டு அடுக்கு மாளிகையில் ஒரே ஒரு குடும்பம் !
எட்டிப் பார்க்கும் குழாயில் பல குடும்பம் !

அனைத்து வீடுகளையும் அரசுடமையாக்கி !
ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு மட்டும் தாருங்கள் !


நன்றி கவிஞர் இரா .இரவி  
அமர்க்களம் 

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

 இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

இனிய மாலை நேரம்!

இஸ்லாமிய இதயங்கள்
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
பொன்னேரம்!

புதிய இளைய முதற்பிறை
எழில் வானத்தில்
கோலம் வரையக்
காத்திருக்கும் நேரம்!

சுவனத்தின் தென்றல்
ஒருமாத காலம் பூமியை
வலம்வரும் நேரம்!

கொடுமைகள் - வன்மைகள்
தீமைகள் -பகைமை நரகச் சூடுகள்
மாண்டழியும் நேரம்!

அலையும் மன சாத்தான்கள்
காட்டப்படும் நேரம் !

இந்த பூலோகம் எங்கணும்
இறைப்புகழிலும்
நபிப் புகழிலும்
நிறையும் நேரம்!

ஒளுவின் துளிகளில்
உண்மைகள் உயிர்க்கும் நேரம்!

அருள்மறை மொழிகளில்
உலகம் குளிக்கும் நேரம்!

சலவாத்துக்களில்
சந்தோசம் கொள்ளும் நேரம்!

தராவீ ஹ் தவங்களில்
பள்ளிவாயில்கள்
அலங்கரிக்கப்படும் நேரம்!

வா வா ரமலானே!
வந்து எங்களை நேர்படுத்து
இடையில் கொஞ்சம்
வளைந்து போன
நெஞ்சங்களச் சீர்படுத்து!

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!


முஹமது மொய்தீன்

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்


நம் வாழ்க்கையில் மடினிகளில்  பயன்பாடு  மிகவும் முக்கியமானதாக உள்ளது. மடினியை பயன்படுதுவது இப்போதெல்லாம் சாதாரண மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் மடினி பேட்டரியை சார்ஜ் செய்வது  மிகவும் எளிதாக நினைக்கின்றனர். மடினி பேட்டரிகள் விரைவில் தனது மின்சக்தியை இழப்பது ஏன் தெரியுமா?, அதேபோல்  மடினி முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் எடுப்பது ஏன்  தெரியுமா?. இதுபோன்ற விசயங்களால் நாம் எப்போதும் மடினியை சார்ஜ் செய்யும் போது அதிக கவனத்துடன் செயல்படுவது அவசியம். மேலும் மடினி பேட்டரியின் திறனை எவ்வாறு மேம்பாடு அடைய செய்வது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழும். அதை பற்றி இந்த பதிவில் பார்போம்.


ஈரப்பதம் குறைந்த அல்லது வெப்பமிகு இடங்களில் மடினியை  சார்ஜ் செய்ய கூடாது. காரணம் சார்ஜ் செய்யும் போது உங்கள் சார்ஜரின் அடப்டர் மிக சூடாக காணப்படும். அந்த வேளையில் அதன் சுற்றுபுறமும் சூடாக இருந்தால் அதிக சூட்டால் அடப்டர் தீபற்றிக்கொள்ளும் நிலை உருவாகலாம்.

தொடர்ந்து மடினியை சார்ஜ் செய்வது சரியல்ல. உங்கள் மடினி மூழுமையாக(100%) சார்ஜ் ஆனா பின்பு மேலும் அப்படியே தொடராமல் சார்ஜ் செய்வதை நிறுத்த வேண்டும். இந்த முறை மடினியின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க உதவும். சார்ஜ் மத்தியில் மடினி இருந்து மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம். இப்படி செய்வதால் உங்கள் மடினியின் பேட்டரி செயல்திறன் குறைய வழிவகுக்கிறது அல்லது உங்கள் மடினி பேட்டரி ஆயுள் பாதிக்கும். மேலும் பேட்டரி மின்சக்தி 15 சதவீதம் அடையும்போது மட்டுமே மீண்டும் மடினியை சார்ஜ் செய்ய வேண்டும். 


நீண்ட நாள் பயனுக்கு பின் மடினியின் பட்டரியை கடிப்பாக மாற்ற வேண்டும். இதர்க்காக எந்த ஒரு மடினி நிறுவனங்களும் கூடுதல் பட்டரியை வழங்குவதும் கிடையாது. அவ்வாறு வழங்கினால் நிறுவனத்தின் நம்பக தன்மை பாதிக்கப்படும் என்ற  காரணத்தால் வழங்கப்படுவது இல்லை. பட்டரியை மாற்றுவதற்க்கு ஏன் இந்த தகவல்கள் என்று கூட நீங்கள் எண்ணலாம். கடிப்பாக நெடிய பயன்பாட்டை அடைந்த பட்டரியை மாற்றுவதன் மூலம் நம் மடினி திடீரென உண்டாகும் மின்சக்தி வெட்டினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மடினியை பாதுகாக்கலாம் அல்லவா. மேலும் ஒவ்வொரு பட்டரிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுள் உண்டு, அதற்க்கு மேல் அதை பயன்படுவது பாதுகாபிற்க்கு நல்லதல்ல.


உங்கள் மடினி தூசு உள்ள இடங்களில் வைத்து பயன்படுதுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.  இல்லையெனில் உங்கள் மடினியின் மதர்போர்ட் மற்றும் பட்டரி ஆகியவைகளின் திறன் பாதிக்கப்படும்.


மடினி பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க குறிப்புகள் சுருக்கமாக 


1) ஈரப்பதம் அல்லது வெப்பமிக இடத்தில் மடினியை சார்ஜ் செய்ய கூடாது

2) தொடர்ந்து மடினி பேட்டரியை சார்ஜ் செய்து கொண்டே பயன்படுத்த கூடாது

3) மின்சக்தி 15 சதவீதம் அடையும் போது மட்டுமே மடினியை சார்ஜ் செய்யவேண்டும் 

4) மடினி குளுமையான சூழலில் வைத்து  தான்  பயன்படுத்த வேண்டும்

5) மடினியின் காற்று பேனல்கள் திறந்த இருக்க வேண்டும்

6) காரில் மடினியை வைப்பது பயன்படுதுவதை தவிர்க்க வேண்டும்

7) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் பழைய பேட்டரி மாற்ற வேண்டும்

8) தூசி உள்ள இடங்களில் மடினியை பயன்படுதுவதை தவிர்க்க வேண்டும்

9) எப்போதும் காற்றோட்டம் உள்ளபடி ஏதாவது மின்விசிறிகளை மடினியின் பக்கத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்.


தமிழாக்கம் - ராஜு சரவணன் 

மூலம் : http://infoceanhub.com

Tuesday, July 9, 2013

நாளை... நாளை... நாளை... என்று இன்றை இழக்காதே!

* உயர்ந்த குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து அதை நோக்கி முழுஈடுபாட்டுடன் உழைக்கத் தொடங்குங்கள். கடந்த காலத்தைப் பற்றிய வருத்தச் சுமைகள் உங்களை அழுத்துவதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
 

* எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெறும் உடல் உழைப்பு மட்டும் இருப்பது கூடாது. மூளையும் அதில் ஈடுபடுவது அவசியம்.
 

* வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் நம் முன்வினைப்பயனால் எற்படுகிறது. 
இதையே நாம் விதி என்று குறிப்பிடுகிறோம்.
 

* நம்முடைய நோக்கம் உயர்ந்ததாக, சுயநலமில்லாமல் இருந்து விட்டால், நாம் செய்யும் செயல்களின் விளைவு நம்மைப் பாதிப்பதில்லை.
 

* சிலர் சிறுவயது முதலே பிடிவாதத்துடன் செயல்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்து பழகியவர்களுக்கு அதை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
 

* நிகழ்காலத்தில் நம் முயற்சிகளை வரிசைப்படுத் திக் கொள்ளாமல், நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று தான்தோன்றியாக செயல்பட்டால் வாழ்வில் குழப்பமே மிஞ்சும்.
 

* முயற்சி என்ற பெயரில் அளவுக்கு மீறித் திட்டமிடுவதும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். அதனால், சீரான முறையில் முயற்சித்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.
 

* உயர்ந்த லட்சியத்திற்காக வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டால், நம் உள்ளத்தில் அரியதொரு சக்தி தூண்டப்படுவதை உணரமுடியும்.
 

* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய பண்புகளை வளர்த்துக் கொள்பவனிடம் மனோசக்தி பயனில்லாமல் வீணாகி விடும்.
 

* சுயநலத்துடன் செயல்படும்போது மனிதமுயற்சி தீமைக்கு வழிவகுக்கிறது. அதுவே, பொதுநலத்துடன் அமையும்போது நன்மையை வழங்குகிறது.
 

* எண்ணங்கள் எப்போதும் தூய்மையானதாகவும், பிறருக்கு நன்மை தருவதாகவும், எளிமையானதாகவும் இருக்க வேண்டும்.
 

* நல்ல எண்ணத்தை மனதில் நுழைய அனுமதித்தால் தீய எண்ணம் தானாகவே மறையத் தொடங்கிவிடும்.
 

* மனதில் தோன்றும் நல்ல, தீய எண்ணம் எதுவாக இருந்தாலும் அதற்கு நாம் தான் முழு பொறுப்பாளி.
 

* பணம் மட்டுமே செல்வம் என கருதுகிறோம். நல்ல உடல்நிலை, கலைத்திறமை, அறிவுத்திறம் எல்லாமே செல்வங்களே. அவற்றை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.
 

* உலகம் ஒரு மருத்துவமனை. நோயாளிகளான நம்மை கடவுள் என்னும் தலைமை மருத்துவர் மருந்தும், பத்தியமும் கொடுத்து குணப்படுத்துகிறார்.
 

* உங்கள் சிந்தனையை தனியாக அலையவிடாதீர்கள். உடலும் மனமும் இணைந்து செயலாற்றட்டும். அப்போது எந்தச் செயலிலும் சுறுசுறுப்பு, திருப்தியுடன் ஈடுபட்டு வருவீர்கள்.
 

* பிரார்த்தனை என்பது அமைதியை நாடும் முயற்சி. ஆனால், அதை நாம் சிறுசிறு காரியங்களுக்காக கூடப் பயன்படுத்த நினைப்பது கொஞ்சமும் சரியல்ல.

சொல்கிறார் சின்மயானந்தர்

அமர்க்களம் 

முதுமையிலும் இளமை வேண்டுமா? அப்ப இத படிங்க…

அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிறைய ஆன்டி-ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும். சாதாரணமாகவே உண்ணும் உணவைப் பொறுத்து தான் உடல் நிலை இருக்கும் என்று சொல்வார்கள். எனவே நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைய உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும். அதிலும் குறிப்பாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களில் வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபைன் மற்றும் லூடின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம். அந்த உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாம்பழம்

கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாக கிடைக்கும். இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி.ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

கேல்

கேல் (Kale) கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் காணப்படலாம்.

பசலைக் கீரை

ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான 20, 350 mcg லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

ப்ராக்கோலி

பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது.

முட்டை

முட்டையிலும், லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தது.

குடைமிளகாய்


குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளன.

பால்

பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை, அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன், இளமையோடும் இருக்கும்.

தக்காளி

தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கும் மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம்.

சிட்ரஸ் பழங்கள்


சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும். ஆகவே இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

தர்பூசணி

நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.

நன்றி அமர்க்களம் 

தலையாய பிரச்னையாக மாறிவரும் தைராய்டு: சரிசெய்வதற்கான சில குறிப்புகள்

தற்போதைய நிலையில் தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது.

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.

உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விடயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் லதா.

இது குறித்து அவர் கூறுகையில், தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அதே போல் உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.

தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.

தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும்.

பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம்.

உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும்.

அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

பாதுகாப்பு முறை

* தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

* மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும்.

* இது குறித்து பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.

* உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

* உணவில் கல் உப்பு பயன்படுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது.

* இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

டயட்

* உடலில் அயோடின் அளவு குறைந்தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம்.

* தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும்.

* அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

* தைராய்டு பிரச்னையை பொறுத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

* தைராய்டு அளவு அதிகம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

* கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.


ஜேசுதாஸ் 

Monday, July 8, 2013

மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?

அதிகமாக மது அருந்துகிறீர்களா? குடியை விட ஆசை, ஆனால் முடியாமல் போகிறதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
தற்போது குடி என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. மாணவர்கள், அலுவலக வேலையில் உள்ளவர்கள், தொழிலாளிகள் என்று பலரும் இதை அருந்துகிறார்கள்.

அதனுடைய பின்விளைவுகளை அறியாது, தானும் கெட்டு, தன் குடும்பத்தையும் நடுத்தெருவுக்கே கொண்டு வந்து விடுகிறார்கள்.

குடியால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ உள்ளன. இதற்கு வீதிக்கு வீதி அமைந்திருக்கும் பார்களும் காரணமாகும். குடியை விட்டு விடலாம் என்று மனவுறுதியோடு இருப்பவர்கள் கூட, சரியில்லாத நட்பினால் மீண்டும் மீண்டும் குடியில் தள்ளப்படுகின்றனர்.

தற்போது இந்த குடியால் ஒட்டுமொத்த சமுதாயமே சீரழிந்து கொண்டிருக்கிறது. குடி போதையால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை சர்வ சாதாரணமாகிவிட்டது.

நாடு ஒரு பேரழிவான பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆண்கள் மட்டுமே குடிக்கு அடிமைப்பட்டு கிடந்த நிலை மாறி, பெண்களும் தற்போது இதற்கு அடிமையாகிவிட்டனர்.

குடியால் பல ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதாகவும், இதனால் காலப்போக்கில், உயிர்களின் உற்பத்தி குறைந்து கொண்டே சென்று, ஒரு கட்டத்தில் உயிர்கள் பிறப்பதே நின்றுவிடும் என்று ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது.

இவ்வளவு பேரழிவை தரும் குடியிலிருந்து விடுபட விரும்பினால், உங்களுக்காக இதோ சில குறிப்புகள்..

மனநல ஆலோசகரை அணுகுதல்


குடியால் ஏற்பட்ட உளவியல் மாற்றம் மற்றும் உணர்ச்சிவசப்படும் நிலைகளைப் போக்க ஒரு நல்ல மனநல ஆலோசகரை அணுகுங்கள். அவர்களது ஆலோசனைகளை பின்பற்றவும்.

திகதியை குறித்துக் கொள்ளுதல்

குடியை விட சில முக்கிய திகதியை தேர்ந்தெடுக்கவும். இன்றிலிருந்து குடிக்கமாட்டேன் என்று சபதமிடுங்கள். பெரும் குடிகாரராக இருந்தால் படிப்படியாக குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடவும்.

மது பாட்டில்களை தூக்கி எறிதல்

குடி தொடர்புடைய அனைத்து விதமான கேன்கள், பாட்டில்கள் போன்றவற்றை தூக்கி எறியவும். விருந்தினர்கள் வந்தால் தேவைப்படுமே என்று நினைக்க வேண்டாம். அதற்கு பதில் அவர்களுக்கு தேநீர், காபி அல்லது பழச்சாறுகள் போன்றவற்றைத் தரலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக விடுதல்

டியை ஒரே நாளில் விட்டு விட முடியாது. முதலில் சிறிது சிறிதாக விட முயற்சி செய்யுங்கள். அதிகமான குடி காரணமாக பராலிசிஸ், தலைவலி, வாந்தி வருவதாக கற்பனை செய்யுங்கள். பின் இந்த பயமே குடிக்கும் எண்ணத்தை தடுக்கும்.

உணவு மூலம் தவிர்த்தல்

குடிக்கும் முன் ஏதாவது உணவு அருந்துங்கள். அதனால் குடிப்பதில் உள்ள நாட்டம் குறையும். அப்படியே மீறிக் குடித்தாலும் கொஞ்சமாகத் தான் குடிக்க முடியும்.

வைட்டமின் பி மாத்திரைகள்

குடிக்கும் போது வைட்டமின் பி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் திறனை பாதிக்கும் மதுவின் தொடர் விளைவுகளை இந்த தையாமின் மாத்திரைகள் தடுக்கும். வைட்டமின் பி எனப்படும் தையாமின் குறைபாடு, கடுமையான மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மனநிலையை உணர்தல்

உண்மையிலேயே குடிப்பதை நிறுத்த விரும்பினால், உங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளவும். கடந்த கால மோசமான நிலைமைகளை அறிந்து கொள்ளவும். தங்கள் பிரச்சனைகளை பரந்த மனதுடன் ஒப்புக் கொள்ளும் நடைமுறையை தொடங்கும் போது, குடியிலிருந்து மீண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

குடியை தூண்டும் நண்பர்களை தவிர்த்தல்
குடிக்கத் தூண்டும் மனிதர்களுடன் தொடர்பை உடனடியாக நிறுத்தவும். பாருக்கு போவதை நிறுத்த வேண்டும். மேலும் குடும்பத்தினரிடம் மற்றும் நண்பர்களிடம், குடிப்பதை நிறுத்த விரும்புவதாகக் கூறி, அவர்களது தார்மீக உதவியைப் பெறவும்.

தண்ணீர் குடித்தல்


சுத்தமான தூய தண்ணீரின் அற்புதத்தை உணருங்கள். குறைந்தது 5 குவளை தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்திக் கொள்ளவும்.

உணவில்லாமல் பல வாரங்கள் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் இரண்டு நாட்கள் கூட இருக்க முடியாது. நிறைய தண்ணீர் குடித்தால், மது அருந்தும் ஆசை குறையும்.


ஈகரை தமிழ் களஞ்சியம் 

Sunday, July 7, 2013

இரகசிய குறியீடு ( Bar codes) நாம் எப்படி உருவாக்குவது?







 
நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கின்றோம்.

பெரும்பாலானவர்களிற்கு அந்தக் கோடுகள் எதற்க்காக அச்சிடப்பட்டுள்ளது என்றும் அந்த ரகசியக்குறியீட்டினுள் அப்படி என்னதான் இருக்கிறது என்றும் தெரிவதில்லை. இந்த ரகசியக்குறியீடுகள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் முழுமையாக ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கம்.

விற்பனைப் பொதிகளில் அச்சிடப்படும் இந்த ரகசியக்குறியீடுகள் ஆங்கிலத்தில் Barcodes என அழைக்கப்படும். Barcode என்பது குறிப்பிட்ட பொருட்களின் மீது அதுபற்றிய சில தகவல்களைக் காண்பிக்கும் ஒரு குறியீடாகும்.இவ் Barcodes இனுள்ளே அது அச்சிடப்பட்டுள்ள உரிய பொருளிற்கான விலை, உற்பத்தி தேதி , காலாவதி தேதி , அப்பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் இணையமுகவரி போன்ற தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.இவற்றை நம் வெறும் கண்ணினால் பார்த்து அறிய முடியாது.இவற்றை Barcode Scanner கள் மூலமாகவே வாசித்து அறிய முடியும்.

இந்த ரகசியக்குறியீட்டினை Barcode Scanner இற்கு முன்பாக பிடித்தால் போதும், இரகசியக்குறியீட்டிற்குள் ஒழிந்திருக்கும் இரகசிய விடயங்கள் அனைத்தையும் அறிந்துவிடலாம்.
ஆனால் தற்போது Barcode Scanner களைப் போலவே கையடக்கத் தொலைபேசிகளும் இந்த இரகசியக்குறியீடுகளை இனங்கண்டுகொள்ள பெரிதும் உதவுகின்றன.

குறித்த இரகசியக் குறியீட்டினை கையடக்கத் தொலைபேசியின் கமராவினால் Scan செய்து அதனுள் மறைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் அறிந்துவிடலாம்.இதற்காகவே பெரும்பாலான கையடக்கத் தொலைபேசிகளில் (Smart Phones) இவ் Barcode களை வாசிப்பதற்க்குரிய மென்பொருள் காணப்படுவது பயனுடையதொரு விடயமாகும்.மேலும் கையடக்கத் தொலைபேசியில் இவ்மென்பொருள் இல்லையென்றால் இணையத்திலிருந்து இலவசமாக Download செய்து நிறுவிக்கொள்ளலாம்.

இரகசியக் குறியீடுகளை வாசிப்பது பற்றி அறிந்து விட்டோம், அடுத்ததாக பார்க்கபோகும் விடயம் அனைவரிற்கும் நிச்சயமாகப் பிடிக்கும்.எமது அடிப்படை விபரங்களை (பெயர், தொலைபேசி இலக்கம், முகவரி, மேலும் பலவற்றை) புகுத்தி எமக்கென்று ஒரு இரகசியக் குறியீட்டினை உருவாக்கிக்கொள்ளலாம்.

Barcodes பல வகைப்படும், அவற்றுள் QR Code என்ற Barcode வகையே பாவனைக்கு இலகுவானதாகும்.
 

எனவே “QR Code Generator” என Google இல் Type செய்து தேடினால் இவ் Barcode இனை இலவசமாக உருவாக்கித்தருகின்ற பல இணையதளங்கள் உங்கள் முன் தோன்றும்.

அவற்றில் ஏதாவதொரு இணையதளத்திற்கு சென்று உங்கள் இரகசியக் குறியீட்டினுள் நீங்கள் உள்ளடக்க விரும்பும் விடயங்களை வழங்கினால் போதும், உடனே உங்களிற்குரிய இரகசியக் குறியீடு தயாராகிவிடும், அதனை நீங்கள் புகைப்படமாக Download செய்து அதனை அச்சிட்டு (Print எடுத்து) பெற்றுக்கொள்ளலாம்.

இவ் இரகசிய குறியீட்டினுள் அதிகபட்சமாக 250 சொற்கள் கொண்ட தகவல்களை உள்ளடக்க முடியும் என்பது பிரமிக்கத்தக்கவொரு விடயமாகும். இந்த Barcode 1948 இல் தான் முதன்முதலாக பயன்பாட்டிற்கு வந்தது. Barcode ஆனது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

வைத்தியசாலையில் நோயாளிகளின் மணிக்கட்டுப் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் Barcode இன் மூலம் குறித்த நோயாளியின் முழுத்தகவல்களையும் மருத்துவமனையில் பணியாற்றுபவர்களினால் இலகுவாக அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

வாடகை கார்கள், விமானப் பயணப்பெட்டி, அணுக்கருக் கழிவு, அஞ்சல் மற்றும் பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்களின் நகர்வைக் கண்காணிப்பதிலும் பயன்படுகிறது.

நன்றி:அமர்க்களம் 

இதெல்லாம் நடந்தால்..

மது தேசத்தில்,
ள்ளக் காதல்கள்,
ற்பழிப்புகள்,
லப்புத் திருமணங்கள்,
திடீர் கொலைகள்,
தீண்டாமை கொடுமைகள்,
திரடித் தீர்ப்புகள்,
ரசியல் சூழ்ச்சிகள்,
ட்சி கவிழ்ப்புகள்.
சினிமா கவர்ச்சிகள்,
விளையாட்டுத் தோல்விகள்,
ன்னும் பல..
து ஒன்றும் புதிதல்ல....
ன்று இதை மீடியாக்கள்
பரபரப்பாக வெளியிட்டு காசு பார்க்கும்...விமர்சனங்கள் செய்யும்,
விவாதங்கள் நடத்தும்...
அது அடுத்த சம்பவம் நடக்கும் வரை..
பின்னர் இவை எல்லாம்..மக்கள் மத்தியில் மறந்து போகும்,,,ஏன் பாதிக்கப் பட்டவரின்  மனதிலிருந்தும் தான் ...
அடுத்த சம்பவம் நடக்கும் முன்னே அதற்கான
சட்ட திருத்தங்கள் செய்திருந்தால்,
சரியான தீர்ப்பை உரிய நேரத்தில் வழங்கி இருந்தால்,
பாதிக்கப்பட்டவருக்கு அவருடைய உரிமையை முறையாக வழங்கி இருந்தால்…
முக்கியமாக ஊடகங்கள் ஊகித்து அதுவாக இருக்குமோ,இதுவாக இருக்குமோ
என்று சின்ன விசய்த்தை கூட ஊதி பெரிதாக்கி,மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை உண்டாக்காமல் இருந்திருந்தால்,
அடுத்த சம்பவம் நடக்க வாய்ப்பே இருக்காது..


நன்றி சேனை தமிழ் உலா 

பிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் !!



1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
 
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

 
4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
 
5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
 
6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
 
7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
 
8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
 
9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
 
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
 
11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
 
12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
 
13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.
 

14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
 
15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
 
16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
 
17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
 
18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
 
19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
 
20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.


நன்றி அமர்க்களம்

ஆங்கிலம் to தமிழ் அகராதி மென்பொருள்: இ கலைவன்

இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய ‘ஆங்கிலம் – தமிழ்’ அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர்.

தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், இந்த 40 வயது இ-கலைவன். கோவை – சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், ‘இ-கலை’ கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஓர் ஆண்டு காலம் முழுமையாக உழைத்து, இவர் யுனிகோடில் உருவாக்கி இருக்கும் அகராதியின் பெயர் – ‘களஞ்சியம் அகராதி’.

ஆன்லைனிலும், தொழில்நுட்ப உலகிலும் தாம் கடந்து வந்த பாதையை விவரித்த சேகர், ‘‘நான் பிறந்த ஊர் போத்தம்பாளையம் என்னும் குக்கிராமம். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத எங்கள் நெசவு குடும்பம் திருப்பூருக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அறிவை கற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏதுவாக இல்லை. இந்நிலையில் வானொலியிலும், பத்திரிகைகளிலும் வரும் அறிவியல் சம்பந்தமான் கட்டுரைகளை கேட்டும், படித்தும் ஆராய்ந்தும் திறமையை வளர்த்துக்கொண்டேன்.

எங்கள் கிராமத்து பள்ளியில் நாங்கள் ஆசிரியர்கள் வந்தால் “காலை வணக்கம் ஐயா” என்றும், அட்டென்டன்ஸ் எடுக்கும்போது “உள்ளேன் ஐயா” என்றும் 10 வருடங்கள் பழகிய நாக்கு, நகரத்துக்கு வந்து “Good morning Sir”, “Present Sir”-ருக்கு பழக பல மாதங்கள் ஆகிவிடும். அந்தப் பள்ளி மாணவர்களிடம் கேட்டால் அவமானமாகிவிடும் என்பதால் அவர்களிடமும் கேட்கமாட்டோம். Dictionary என்பது படிக்கும் காலம் வரை ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். காரணம் அப்பொழுதெல்லாம் வாத்தியார் எழுதி கொடுக்கும் நோட்டு புத்தகங்கள்தான் வீட்டில் வாங்கி தருவார்கள். அதில் Dictionary இருக்காது.

கிராமத்தில் உள்ளவர்களுக்கு எப்படி தொடங்கவேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று விளக்கமளிக்கூடியவர்கள் குறைவாக உள்ள காரணத்தால், மாணவர்கள் புரியாமல் படிப்பதனால் கால விரயத்துடன் படித்தது பயனற்றதாக ஆகிவிடுகிறது. அதைப் போக்க அனைத்தும் அடங்கிய எளிமையான ஒரே ஒரு நூல் தமிழில் இருந்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

ஆங்கிலத்தில் கணினி, மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப அறிவுள்ள புத்தகங்கள் ஏராளம். அவற்றில் வரும் வார்த்தைகளை புரிந்துகொள்வது மாற்று மொழிக்காரர்களுக்கு அதிலும் தமிழ் மொழி கொண்டவர்களுக்கு எப்போதுமே சவால்தான். இன்னும் நிறைய பேருக்கு உச்சரிப்பில் “Message”- “மெஜேஜ்” ஆகிவிடும், “Fan” – “ஸ்பேன்” ஆகிவிடும்.

இன்றைய கணினி பயன்பாட்டில் இணையத்தில் இருந்து ஏராளமாக நமக்கு வேண்டிய புத்தகங்களை PDF, EBUP போன்ற கோப்புகளில் இலவசமாக Download செய்து கொண்டு படிக்கலாம். ஆனால், இங்கும் பிரச்னை வார்த்தைகளுக்கான பொருள்தான். இணையம் இருந்தால் இணையத்தில் தேடிக்கொள்ளலாம். அதில் நமது கவனமும், நேரமும் வீணாகும். இன்டர்நெட்டில் எலி பிடிக்கபோய் குரங்கை பிடித்து வருவோம்.

பத்தாவது வரை தமிழில் படித்தேன். அதுவரை தமிழில் கற்றதால் ஆங்கிலம், அறிவியல் கணினி சம்பந்தபட்ட வார்த்தைகள் மிகப் புதிதாகக இருந்தன. அதற்கு விளக்கம் தேடி நூலகம் சென்று படிப்பேன். இருந்தபோதும் ஒரு முழுமையாக என் தேடல்களுக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. இதை அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டுமென்ற என்னுடைய கனவு கணினியில் சாத்தியம் என்பது புரிந்தது. இது சம்பந்தமான தேடல்களில் கணினி மொழிகளை பலவற்றையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் பிறந்தது.

நான் கணினியில் புரோகிராமிங் கற்றுக்கொள்ள PDF கோப்புகளில் உள்ள ஆங்கில புத்தகங்களை படிக்கும்போது ஏற்பட்ட இடர்கள் ஏராளம். “For loop”, “If condition”-க்கு எல்லாம் பொருள்தேடியவன் நான். இதைப்போன்ற இடர்பாடுகள் தமிழில் படிப்பவர்களுக்கு இருக்கக்கூடாது என்று அவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு மென்பொருளை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் உதித்தது. English-English ஏராளமான அகராதிகள் உண்டு. ஆனால், தமிழில் ஒரு சிலவே உண்டு. அவையும் கால மாற்றத்திற்கு ஏற்ப ஒருங்கு குறிக்கு (Unicode) மாற்றமடையவில்லை, அது தவிர, புதிய Windows 7, Windows 8 போன்ற நவீன இயங்கு தளங்களில் இயங்காது. தமிழில் Unicode அகராதிகள் ஆன்லைனில் உண்டு. ஆனால் Desktop-ல் இயங்கும் அகராதி இல்லை. இதன் விளைவாக உருவானதுதான் ‘களஞ்சியம் அகராதி’.

என்னுடைய கணினி அனுபவ அறிவைப் பார்த்து ஒரு சில மென்பொருள் கம்பெனிகள் அழைத்தபோதும், எனக்கு ஆங்கில அறிவு போதிய அளவு இல்லாமையால் அந்த வாய்ப்புகள் தவறிவிட்டன. என்னைப் போல சிரமப்படும் மாணவர்களுக்கு என்னால் இயன்ற வரையில் HTML, CSS, Javascript, Java, C, C# , SQL, Animation, Electronics மற்றும் Embedded Project போன்றவற்றை தமிழில் மாணவர்களுக்கு கற்றுத்தருகிறேன்.

கல்வியில் உயர்ந்த சமுதாயமே உலகின் உயர்ந்த சமுதாயம். அந்த உயர்ந்த நோக்கோடு தான் தமிழக அரசு அனைத்து மாணாக்கர்க்கும் மடிக்கணினி தந்துள்ளது. அதனால் மாணவர்களின் அறிவு மிகவும் மேம்பாடு அடையும். அதற்கு கூடுதல் உந்து சக்தியாக இருக்க கல்வி பயன்பாட்டிற்கான இந்த களஞ்சியம் அகராதி இலவசமாக இணையத்தில் Download செய்துகொள்ளலாம்.

இன்றைய இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் படிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் படிப்பை கெடுப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் இந்த சமுதாயத்திற்கும், உலகிற்கும் செய்ய நிறைய கடமைகள் இருக்கின்றன என்பதை கருத்தில் கொண்டால் வெற்றியடைவது என்பது நிச்சயம். இந்த உலகில் வெறும் 2% மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீதி 98% Dark Mater-ராக இன்னும் கண்டுபிடிக்கபடாமல் உள்ளன. அதில் வருங்காலத்தில் தமிழகத்தின் கண்டுபிடிப்பின் பங்கு அதிகமாக இருக்கட்டும்.

எனக்கு பிடித்த பொன்மொழி உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். “என்னை தலை குனிந்து படி, உன்னை தலை நிமிரச் செய்வேன்- என்று சொன்னது புத்தகம்.”

இந்த உலகம் என்பது நமக்கு சொந்தமல்ல. இதை நம் எதிர்கால சந்ததியிடம் இருந்து கடன் வாங்கியுள்ளோம். அதை பத்திரமாக, நாம் அனுபவிக்கும் இத்தனை வசதிகளுடனும் அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அதுதான் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் இப்போதுள்ள தலையாய கடமை. எனவேதான் எனது ஆஃப்லைன் அகராதியை இலவசமாகவே வழங்குகிறேன்” என்றார் சேகர்.

களஞ்சியம் அகராதியின் சிறப்புகள்:

* ஒருங்குகுறி (Unicode) கொண்டு உருவாக்கப்பட்டது.

* 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிப்பட்ட வார்த்தைகளுக்கான பொருள் கொண்டது.

* 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள் தரும் இணைப்பு வார்த்தைகள்.

* ஆங்கிலம் – தமிழ், ஆங்கிலம் – ஆங்கிலம், தமிழ் – தமிழ் மற்றும் பல்கலைகழகக் பேரகராதி ஆகிய அனைத்து அகராதிகளையும் உள்ளடக்கியது.

* 3000-க்கும் அதிகமான படங்கள்.

* உலக நாடுகளின் கண்டம், வரைபடம், கொடி கொண்டது.

* தமிழில் (Built-in Tamil Typing) தட்டச்சு செய்து வார்த்தைகளுக்கு பொருள் தேடும் வசதி.

* தமிழிலும், ஆங்கிலத்திலும் படித்துச் சொல்லும் (LH-Michelle & LH-Michael).

* கணினியில் எங்கிருந்தும் ஒரு வார்த்தையை தேர்வு செய்துகொண்டு Shortcut key (Ctrl + ~) அழுத்தினால் வார்த்தைக்கான பொருள் கிடைக்கும்.

* தானியக்க இருமொழித் தேடுதல் (Automatic encoding)

* புதிய வார்த்தை, பொருள் மற்றும் படங்களை பயனாளரே இணைத்து கொள்ளும் வசதி.

* Free Software (இலவச மென்பொருள்)

* தமிழில் முதல் மேஜைபயன்பாட்டு (Windows Desktop) ஒருங்குகுறி (Unicode)  அகராதி.

* Destop-ல் விரும்பிய வார்த்தைகளை விரும்பிய வண்ணங்களில், எழுத்துருக்களில் அமைத்துக் கொள்ளலாம்.

* Windows XP, Windows 7, Windows 8  சார்ந்த இயங்கு தளங்களில் இயங்கும்.

Download பண்ண

நன்றி அமர்க்களம்