Digital Time and Date

Welcome Note

Saturday, July 6, 2013

முஸ்லீம்களே கடமையான குளிப்பு" பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

முஸ்லீம்களே கடமையான குளிப்பு" பற்றி தெரிந்து கொள்ளுங்கள்


தொழுகைக்கு உளூ எந்த அளவிற்கு அவசியமோ அந்த அளவிற்கு குளிப்பு கடமையானவர் குளிப்பது அவசியம். உடலுறவின் மூலமோ அல்லது உறக்கத்திலோ அல்லதுவிழிப்பிலோ ஆணுக்கோ பெண்ணுக்கோ விந்து வெளிப்பட்டால் குளித்தேயாக வேண்டும். குளிக்காமல் தொழக்கூடாது.
 
ஸ்கலிதம் ஏற்பட்டால்
“இச்சை நீர் வெளிப்பட்டால் உளூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்க்ள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், தாரமீ
“ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?” என்று உம்மு கலைம் (ரலி), நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது “ஆம்” என்று பதிலளித்தார்கள்” அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
 
மாதவிடாய் ஏற்படுதல்
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்கள் தொழவோ, நோன்பு நோற்கவோ, உடலுறவு கொள்ளவோ கூடாது. மாதவிடாய் நின்ற பிறகு குளித்து தூய்மையானதும் தொழலாம் நோன்பு நோற்கலாம்.
 
“மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுதுகொள்!” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
 
மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பித் தொழ வேண்டியதில்லை
“எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது தொழுகை, நோன்பு ஆகியவைகளை விட்டு விடுமாறும், மாதவிடாய் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்குமாறும் விடுபட்ட தொழுகைகளைத் தொழ வேண்டியதில்லை என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
 
பிரசவ இரத்தம் வெளிப்படுதல்
பிரசவ இரத்தப் போக்கு சம்பந்தமாக நேரடியாக ஆதாரங்கள் இல்லாவிட்டாலும்கூட மாதவிடாய் இரத்தப் போக்குக்கு என்ன சட்டமோ அதே சட்டம் தான் இதற்கும் பொருந்தும்.
 
தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்டால்
பெண்களில் சிலர் மாதவிடாயின் போது மட்டுமின்றி எப்போதும் இரத்தப் போக்கு உள்ளவர்களாக இருப்பர். இது ஒரு வகை நோய். இதன் காரணமாகதொழுகையையும் இதர வணக்கங்களையும் விட்டுவிடக் கூடாது!. அவர்களின் வழமையான மாதவிடாய் நாட்கள் முடிந்து குளித்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியால் கட்டிக்கொண்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச்செய்து தொழ வேண்டும்.
 
ஃபாத்திமா பிந்த் அபீஹுபைஷ் (ரலி) என்ற பெண்மனி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து “நான் இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன், தூய்மையாவதே இல்லை. எனவே தொழுகையை நான் விட்டு விடலாமா?” எனக் கேட்டார். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் “உனது மாதவிடாய் நாட்களில் மட்டும் தொழுகையை விட்டுவிட்டு, குளித்து தொழுவாயாக! இரத்தம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை!” என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ

Friday, July 5, 2013

நாயகம் (ஸல்) அவர்களின் முதல் ஜும்ஆ

நாயகம் (ஸல்) அவர்களின் முதல் ஜும்ஆ

படிங்க தோழர்களே

நாயகம் (ஸ்ல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவுக்கு வெளியே குபா என்னுமிடத்தில் தங்கினார்கள். மக்காவில் விட்டு வந்த ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களை எதிர்பார்த்தேதான் அவ்வாறு நாயகம் (ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள்.
பதினாகு நாட்களுக்கு பின்னர் ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் சுகமே வந்து சேர்ந்தார்கள். இதற்கிடையேநாயகம் (ஸல்) அவர்கள் குபாவில் ஒரு பள்ளிவாசலை நிர்மாணிக்க அஸ்திவாரமிட்டு பதினான்குநாட்களுக்குள் சரித்திரப்பிரசித்தமான அப்பள்ளிவாசலை கட்டி முடித்தார்கள். தாங்களும் மற்ற கூலி ஆட்களுடன் சேர்ந்து கொண்டு அயராது உழைத்து அக் கட்டிடத்தை எழுப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.
நாயகம் (ஸல்) அவர்கள் முதன்முதலாக நிர்மாணித்த பள்ளிவாசல் இதுவேயாகும். இதைப்பற்றி இறைவன் குர்ஆனில் பக்தியின் மீது அஸ்திவாரமிடப்பட்ட முதல் பள்ளிவாசல் என்று சிறப்பித்து கூறியுள்ளான்.குபாவில் பதினான்கு நாட்கள் தங்கியிருந்த பின்னர் நாயகம் (ஸ்ல்) அவர்கள் ஜும் ஆ தொழுகையை இங்கேயே நிறைவேற்றினார்கள். தொழுகைக்கு முன்னர் நாயகம் (ஸ்ல்) அவர்கள் முஸ்லீம்களுக்கு வணக்கத்தின் முக்கியத்துவம் பற்றியும்பக்தி, நேர்மை ஆகியவற்றின்அவசியம் பற்றியும் அழகியதோர் உபதேசம் செய்தார்கள்.இதற்குத்தான் ஜும்ஆ வின் குத்பா என்று கூறப்படும். நாயகம் (ஸ்ல்) அவர்கள் முதல் ஜும்ஆத் தொழுகையும் முதல் குத்பாவும் இதுவேயாகும்.
3)ஜும்ஆ வின் சிறப்பு பற்றி நாயகம் (ஸ்ல்) அவர்கள் கூறியது என்ன் ?
சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஜும் ஆ நாளாகும். அத்தினத்திலேயே ஆதம் நபி (அலை) படைக்கப்பட்டு அதிலேயே அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டார்கள். அத்தினத்திலேயே சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றவும் பட்டார்கள்.இறுதி நாளும் ஜும்மா தினத்திலேயே நிகழும் என்று நாயகம் (ஸ்ல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அனைவரையும் பிரமிக்க வைக்கும் Light Show.....

<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/YQF2t4sJuRo?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>


நன்றி அமர்க்களம் தளம்

ATM மிஷென் பற்றி தெரிந்ததும் தெரியாததும்

ATM மிஷென் பற்றி தெரிந்ததும் தெரியாததும்
ATM (Automatic Teller Machine)
 

ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றிய தகவல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானது.
 

கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போதெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக்கொண்டே யாரும் பயணிப்பதில்லை. காரணம் ஏடி. எம் அட்டைகள்.
 

வங்கியில் கணக்கை ஆரம்பித்த அனைவருக்குமே ஒரு அட்டை கிடைக்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தேவையோ அப்போது எடுத்துக் கொள்ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவிட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியை குறைத்திருக்கின்றன.
 

நாம் பணம் தேவைப்படும் போது ஏ.டி. எம் முன்னால் சென்று நிற்கிறோம், நமது அட்டையை உள்ளே நுழைக்கிறோம். சங்கேத எண்ணை அமுக்குகிறோம். நம்முடைய கட்டளைக்கு ஏற்ப பணம் கிடைக்கிறது. திருப்திப்பட்டு விடுகிறோம்.
 

Automatic Teller Machine என்பதன் சுருக்கம் தான் ATM. நம்முடைய அட்டையில் 16 எண்கள் கொண்ட ஒரு எண் இருக்கும். இது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண எண். ஆனால் இதன் ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு.
 

முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். அதற்கடுத்த ஒன்பது எண்களும் சேவை வழங்கு நிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்த எல்லைக்குள் இருக்கும். கடைசி எண் ஒரு ரகசிய எண். அதுதான் உங்கள் அட்டை பயன்படுத்தக் கூடியதா இல்லையா என்பதைச் சொல்லும்.
 

மாஸ்டர்கார்ட் எண்கள் ஐந்து எனும் எண்ணில் ஆரம்பிக்கும், விசா எண்கள் நான்கு எனும் எண்ணில் ஆரம்பிக்கும் என்பது ஒரு சிறு சுவாரஸ்யத் தகவல்.
அட்டைகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று கிரடிட் கார்ட் எனப்படும் கடனட்டைகள். இன்னொன்று டெபிட் கார்ட் அல்லது செக் கார்ட். கடனட்டையில் நாம் செலவழிக்கும் பணத்தை மாதம் ஒருமுறை செலுத்தினால் போதும். செக் கார்ட் மூலம் செலவழிக்கும் பணம் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து உடனே கழிக்கப்பட்டு விடும்.
 

ஏடிஎம் முன்னால் சென்று அட்டையை உள்ளே செலுத்தி நம்முடைய சங்கேத 
எண்ணைக் குறிப்பிட்டபின் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைக் குறிப்பிட்டு பொத்தானை அமுக்குகிறோம். நம்முடைய அட்டையின் பின்னால் இருக்கும் மேக்னட்டிக் ஸ்ட்ரைப் நம்முடைய அட்டையின் எண்ணை மென் குறியீடாக்கி உள்ளே அனுப்பும். அதற்குப் பயன்படும் இடம் தான் கார்ட் ரீடர் எனப்படும் நாம் அட்டையை உள்ளே நுழைக்கும் இடம். அப்போது கட்டளை ஏடிஎம் முனையிலிருந்து சுவிட்ச் என அழைக்கப்படும் கணினி மென்பொருளுக்குள் நுழைகிறது. இங்கே இரண்டு விதமான சோதனை வளையங்கள் இருக்கின்றன. முதலில் நாம் பயன்படுத்தும் அட்டை சரியானது தானா ? அதற்கு நாம் கொடுத்த சங்கேத எண் சரியானது தானா என்பதைச் சரிபார்க்கும் சோதனை.
 

இந்தச் சோதனை தோல்வியடைந்தால் நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று பொருள். ஒருவேளை சங்கேத எண்ணைத் தவறாகச் சொல்லியிருக்கலாம்.
 

இரண்டாவது சோதனை நம்முடைய வங்கிக்கணக்கில் நாம் கேட்கும் பணம் இருக்கிறதா ? நான் பணம் எடுப்பதில் இன்றைய தினத்தின் உச்ச வரம்பை எட்டியிருக்கிறோமா ? என்பது குறித்த சோதனைகள். முதல் சோதனை முடிந்தபின், இரண்டாவது சோதனைக்குள் நுழைந்து இரண்டும் சரியாய் இருந்தால் பணம் கொடுக்கலாம் எனும் பதில் தானியங்கி முனைக்கு வரும். இந்த இரண்டு சோதனைகளையும் கடக்க பல இலட்சம் தகவல்கள் அடங்கியிருக்கும் மென் கோப்புகளில் தேடுதல் நடக்கும்.
இந்த தேடுதல் முடிந்து தானியங்கி முனைக்கு வரும் தாமதம் சில வினாடிகளே. இந்த வினாடிகள் அதிகரிக்கும் போது தான் நாம் சலித்துக் கொள்கிறோம்.
 

ணத்தை எண்ணித் தரும் பணம் பட்டுவாடா இயந்திரமும் நுட்பமான சென்சார்களால் ஆனது. இது தவறு இழைப்பதில்லை. இரண்டு நோட்டுகள் ஒட்டி வரும் எனும் ஆசை நப்பாசையாய் போய்விடும் என்பது திண்ணம்.

தொலைபேசி எண்ணை வைத்து ஓன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.

தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்முடைய தொலைபேசி எண்ணை வைத்து ஓன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.


தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்முடைய தொலைபேசி எண்ணை வைத்து ஓன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.



மொபைல் டிரேஸ் அல்லது போன் டிரேஸ் என்று சைபர்கிரைமில் உள்ளவர்கள் கண்டுபிடிக்க உபயோகப்படுத்தும் அதே தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும் ஓரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும்.
அதுமட்டுமின்றி மேப்பும் சேர்த்தே கொடுக்கின்றனர். இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற பட்டனை அழுத்தவும்.
இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின் விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும். அதே போன் நம்பரின் மேப்பை பார்ப்பதற்கு map+ என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப்பயும் பார்க்கலாம்.

இணையதள முகவரி செல்ல

http://www.tp2location.com/

மொபைல் டிரேஸ் அல்லது போன் டிரேஸ் என்று சைபர்கிரைமில் உள்ளவர்கள் கண்டுபிடிக்க உபயோகப்படுத்தும் அதே தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும் ஓரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும்.
அதுமட்டுமின்றி மேப்பும் சேர்த்தே கொடுக்கின்றனர். இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற பட்டனை அழுத்தவும்.
இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின் விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும். அதே போன் நம்பரின் மேப்பை பார்ப்பதற்கு map+ என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப்பயும் பார்க்கலாம்.

இணையதள முகவரி செல்ல

http://www.tp2location.com/

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

இப்புடி சொல்லி சமூகப் பிளவுக்கும், நிற வெறிக்கும் , சாதி பாகுபாடுகளுக்கும் அன்றே முடிவு தந்து விட்டு சென்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிச்சென்ற இந்த வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு..!!

நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை.

இஸ்லாத்தை பொறுத்தவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர்ன்னு யாருமில்லங்க யாரு இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்றாரோ அவரே இறைவனிடத்தில் உயர்ந்தவர். பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது. .. !! இஸ்லாத்தை பத்தி நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு கொஞ்சம் டவுட்டு வரும் இல்லையா? முஸ்லிமல்லாத பலர் இஸ்லாத்தின் இந்த சமத்துவம் குறித்து சொன்னவற்றில் சிலவற்றை கீழே சேர்த்து இருக்கிறேன் பாருங்கள்.. :)

பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.
-டாக்டர் அம்பேத்கார்.

இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையை போன்று வேறேந்த மதமும் – அவற்றின் மத கருத்தோட்டம் எதுவாயினும் சரியே கடைபிடிக்கவில்லை.
டாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் -[EasternTimes, 22 டிசம்பர், 1944.]

எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.
கவிக்குயில்" sarojini-naidu

இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.
- அறிஞர் அண்ணா

இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது.
அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.
– ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.

உங்கள் சகோதரி
ஷர்மிளா ஹமீத்

ஜாகிர் நாயக் அவர்களிடம் கல்லூரி மாணவி ஒரு கேள்வி எழுப்பினார்

ஜாகிர் நாயக் அவர்களிடம்
கல்லூரி மாணவி ஒரு கேள்வி எழுப்பினார்
அந்த கேள்வியையும் , அதற்க்கு அளித்த பதிளையும்
இங்கே தமிழாக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது

கேள்வி :-ஜாகிர் நாயக் அவர்களிடம்
கல்லூரி மாணவி ஒரு கேள்வி எழுப்பினார்
நானும் என்னுடன் படிக்கும் மாணவர் ஒருவரும்
உயிருக்கு உயிரா நேசிக்கின்றோம்(காதல்)
ஆனால் எங்கள் திருமணம் நடக்க தாமதமாகிகொண்டே
செல்கின்றது . காரணம் நான் இந்து , அவர் முஸ்லீம்
அவர் வீட்டில் என்னை முஸ்லீமாக மாற வற்புறுத்துகின்றனர்
என் வீட்டில் அவரை இந்துவாக மாற வற்புறுத்துகின்றனர்
நன்றாக புரிந்து கொண்ட நாங்கள் இருவரும் ஏன்
அவர் அவராகவும் ! நான் நானாகவும் திருமணம் செய்து
வாழ முடியாது ?

பதில் :- அம்பாஸிடர் காருக்கு நான்கும் அம்பாஸிடர் சக்கரம்
போட்டால் வண்டி சமமாக நெடிய பயணம் செல்லலாம் !
ஒரு சக்கரம் அம்பாஸிடர் சக்கரமும்
ஒரு சக்கரம் ட்ராக்டர் சக்கரமும் போட்டால்
வண்டி சமமாக செல்லாது .
ஒரு பக்கம் உயரமாகவும் , ஒரு பக்கம் சாய்வாகம்
வாகனம் சென்றால் நெடிய பயணம் செல்ல முடியுமா ?
திருமண வாழ்க்கை என்பது இரண்டு பேரும்
புரிந்து நல்ல வாழ்க்கை வாழந்து நெடிய பணம்
செல்ல வேண்டும் .

கேள்வி :-அப்படி என்றால் நான் முஸ்லீமாக
வேண்டுமா ?

பதில் :- நீங்கள் படித்தவர்கள் குர் ஆன் , ஹதிஸையும் ,
இந்து தர்மத்தையும் இரண்டையும் படியுங்கள்
இந்த உலக வாழ்வையும் , மறுமை வாழ்வையும்
வெற்றி அடையகூடிய மார்கம் எது என நீங்களே
தேர்வு செய்து நல்ல வாழ்க்கை வாழுங்கள் .

Monday, July 1, 2013

கொலைகளின் வகைகள்

இறைவன் மனிதனை படைப்பது ஒரே மாதிரி என்றாலும், இறப்பதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றிர்க்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று இங்கே காண்போம்.

தற்கொலை ----------------------- Suicide
தந்தையைக் கொல்வது ----------- Patricide
தாயைக் கொல்வது ----------------Matricide
மனைவியைக் கொல்வது ----------Uxoricide
கணவனைக் கொல்வது ------------ Mariticide
சகோதரனைக் கொல்வது -----------Fratricide
சகோதரியைக் கொல்வது ---------- Sororicide
அரசனைக் கொல்வது -------------- Regicide
அரசியல்வாதியைக் கொல்வது ----- Assassinate
இனப்படுகொலை ------------------- Genocide
தொல்லைதரும் மனிதனைக் கொல்வது- Pesticide
பூச்சியினங்களைக் கொல்வது ----- Insecticide
குழந்தைகளைக் கொல்வது -------- Infanticide
கடவுளைக் கொல்வது -------------- Deicide
பரம்பரையைக் கொல்வது ---------- Prolicide
உணவுச் செடிகளைக் கொல்வது --- Herbicide
நண்பனைக் கொல்வது -------------Amicicide
பேராயரைக் கொல்வது -------------Episcopicide
பெண்ணைக் கொல்வது ------------ Femicide
மகன்/ மகளைக் கொல்வது -------- Filicide

இருப்பினும் இறைவன் கொடுத்த உயிரை அவனே எடுப்பது தான் தர்மம்.

நன்றி அமர்க்களம் 

Ex & Former - என்பதன் வேறுபாடு

பொதுவாக Ex மற்றும் Former எனும் ஆங்கில சொற்கள் 'முன்னால்' எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இவை இரண்டிற்கும் சிறு பொருள் வேறுபாடு உள்ளது.

Ex என்பது கடைசியில் உள்ள நபரை மட்டுமே குறிக்கிறது (Most final).

Former என்பது கடைசி நபரை தவிர அனைத்தையும் குறிக்கும்.

உதாரணம்:

வாஜ்பாய் மட்டமே ex prime minister ஆவார்.

வாஜ்பாயை தவிர நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், லால் பகதூர் சாஸ்திரி ஆகிய அனைவருமே Former prime minister ஆவார்.

எனவே Ex என்பது ஒருவரை மட்டுமே குறிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

நன்றி அமர்க்களம் 

மாநிலங்களின் மாநில விலங்குகள்

இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்பது அனைவரும் அறிந்ததே. அதனைப் பற்றி என்னுடைய முந்தையப் பதிவில் விரிவாகக் கண்டோம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் மாநில விலங்கு எவை என்பதைப் பற்றி இப்போது காண்போம்.

1. அருணாச்சலப் பிரதேசம்---------- மிதுன்
2. அஸ்ஸாம்------------------------ ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்.
3. ஆந்திரப் பிரதேசம்---------------- பிளாக் பக்
4. உத்திரகாண்ட்--------------------- கஸ்தூரி மான்
5. உத்திரப் பிரதேசம்----------------- ஸ்வாம்ப் மான்
6. ஒரிசா----------------------------- யானை
7. கர்நாடகம்------------------------- யானை
8. குஜராத்--------------------------- சிங்கம்
9. கேரளம்--------------------------- யானை
10. கோவா-------------------------- காட்டெருமை
11. சட்டீஸ்கர்----------------------- காட்டெருமை
12. சிக்கிம்-------------------------- சிவப்பு பாண்டா
13. தமிழ்நாடு----------------------- நீலகிரி வரையாடு
14. திரிபுரா-------------------------- பைரல்ஸ் குரங்கு
15. நாகலாந்து---------------------- மிதுன்
16. பஞ்சாப்------------------------- பிளாக் பக்
17. பீகார்--------------------------- காட்டெருமை
18. மகாராஷ்டிரம்------------------- மலை அணில்
19. மணிப்பூர்----------------------- சாங்காய்
20. மத்தியப் பிரதேசம்-------------- ஸ்வாம்ப் மான்
21. மிசோரம்----------------------- ஹூலோக் கிப்பன்
22. மேகாலயா--------------------- சிறுத்தை
23. மேற்கு வங்காளம்-------------- மீன் பிடிக்கும் பூனை
24. ராஜஸ்தான்-------------------- சிங்காரா
25. ஜம்மு & காஷ்மீர்--------------- ஹாங்ஹூல் மான்
26. ஜார்க்கண்ட்--------------------- யானை
27. ஹரியானா--------------------- பிளாக் பக்
28. ஹிமாச்சலப் பிரதேசம்--------- இமாலயப் புலி.

ஆத்திரத்தில் துடுப்பெடுத்தான் அவசர‌த்தில் படகு விட்டான்

ஆத்திரத்தில் துடுப்பெடுத்தான்
அவசர‌த்தில் படகு விட்டான்

சத்தியத்தை மறந்து விட்டான்
ஆன்றோரும் சான்றோரும் அனைத்து கவிஞர்களும்
வாழ்வை நதி,கடல் என்றும்
பயண‌த்தை படகு,கப்பல் என்றும்
உருவகப்படுத்துவது ஒரு அழகு
பலருக்கு இது அவசரமாக,ஆத்திரமாக மாறிவிடுவதுதான் ஆபத்து
பதட்டமாக,படபடப்பாக,கோபமாக வேகமாக வாகனத்தை ஓட்டினால் விபத்து
வாழ்வை நடத்தினால் அதைவிட ஆபத்துதானே.
ஆனால் நடைமுறையில் நமது பயணங்கள் பல அவசரமாக நடக்கின்றன‌
நமது முடிவுகள் எல்லாம் ஆத்திரத்தில் விளைகின்றன‌
அமைதியின்மையும் பொறுமையின்மையும் நமது உடன் பிறந்த சகோதரர்கள்
ஒப்பிடுதலும் பொறாமையும் ஒட்டி பிறந்த மச்சங்கள்
அடுத்த‌வரை பார்த்து ஒப்பிடுதல்தான் முதல் சைத்தானின் ஆக்ரமிப்பு
முதலாளித்துவ சமூகத்தில் நூறு கோடியாளரின் வாழ்க்கை தரமும்
நூறூ கோடி அடுக்குகளாக அமைந்து விடுகின்றன.
அடி மட்டத்தில் ஒருவனது சராசரி வருமானம் அய்ம்பது ரூபாயாககூட‌
உள்ளது சிலருக்கு அந்த கோடு கூட அடைய முடியாத அவல நிலை
இன்னொரு பக்கம் முதலாவது இடத்தில் உள்ள செல்வரின் ஒரு நொடிவருமானம் கூட பல ஆயிரம் கோடி என்று கணக்கு சொல்லப்படுகிறது
சொல்லாமல் இருப்பது தெரியாத நமக்கு தெரியாது
விரலுக்கு தகுந்த வீக்கம் என்பார்
சிலர் விரல் மோதிரத்தால் வீங்க‌
பலர் விரல் வியாதியால் வீங்கி கிடக்கிறது
அவரவர் வரவுக்கு தக்க வாழ்க்கை த‌ரம் மாறுபடுகிறது
சிலர் பாலுக்கு சீனியில்லையென அழ‌
பலர் கூலுக்கு உப்பில்லையென ஏங்க
இந்த ஒப்பிடுதல் பல கோடி உள்ளங்களில் உறங்கி கிடக்கிறது
இத‌ன் விளைவாக வரும் சோகமும்
தாழ்வு மனப்பான்மையும்
பொறாமையாக உருவம் கொள்கிறது.
இந்த உணார்வுகள் ஆத்திரத்தை தூண்டுகின்றன‌
அவசரத்தை தாண்டுகின்றன‌
அமைதின்மையும் பொறுமையின்மையும் வன்முறையாகின்றன‌
வன்மையில்லை ஒரு வறுமையில்லையானால் என்பார் கவிஞர்
இந்த எதிர்மறை உணர்வுகள் யாவும் ஆற்றாமையைத் தூண்ட
அறிவு தயங்குகிறது.
வாழ்வுக்கு தடையூறு வரும் போது அவசரமாக ஆத்திரமாக‌
படகெடுத்து துடுப்பு போட்டால் சத்யம் எனும் நூல் கயிறு
என்னவாகும்.
சத்யத்தை மறந்து விட்டால் சட்டம் இல்லை,
ஒழுங்கு இல்லை நியாயம்,நீதி தலைமறைவாகும்,
வாய்மை.நேர்மை எல்லாம் வண்டிகளுக்குதான் மையாகும்
ஒழுக்கம்,கட்டுபாடு,எல்லாம் உடைந்து போன பொருளாகி போகும்
அதனால்தான் வாழ்வின் பயணம் நிதானமாக நிதர்சனமாக நடக்க வேண்டுமென்றார்.

 DrBALA SUBRA MANIAN

'டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?''

''டெங்குவைத் தவிர்க்கக் கொசு ஒழிப்பு ஒன்றே வழி. டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி’ கொசு நன்னீரில் முட்டை இடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு சுகாதாரமாகச் சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டும்.

வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, ஸ்பிரே போன்றவையும் பயன் கொடுக்கும்.

வீட்டுச் சுவர்கள் மீது 'டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிப்பது பலன் கொடுக்கும். ஜன நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில், 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் 'கிரிசாலை’ப் புகையை செலுத்துவதும் கொசுக்களை விரட்ட உதவும்.

இவை எல்லாவற்றுடன், சுற்றுப்புறச் சுத்தம் முக்கியம்!''

டெங்கு காய்ச்சல் தடுக்க...

வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால் சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றுவதற்குக் காத்திருக்காமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள்.

கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம். கொசு எதிர்ப்புக் களிம்பைப் பூசிக்கொள்ளுங்கள்.

குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடியுங்கள்.

காய்ச்சல் வந்தால் உடனே செய்ய வேண்டியது...
டெங்கு அறிகுறி தெரிந்தால், சிறிதும் தாமதம் இன்றி உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். உடலின் நீர் இழப்பைத் தடுக்க இளநீர், கஞ்சி, உப்பு-சர்க்கரைக் கரைசல் போன்ற நீராகாரமாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எப்படிப் பரவாது...

ஒருவரை ஒருவர் தொடுவதால் டெங்கு பரவாது. தும்மல், இருமல் மூலமும் இது பரவாது.

நன்றி ;படித்தேன் பகிர்ந்தேன்

Sunday, June 30, 2013

கள்ளத்தொடர்பு - தடுக்க என்ன வழி?

இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது.

இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்? அந்த கலாச்சார சீரழிவை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இங்கே ஒரு சிறப்புப் பார்வை :

1. தம்பதியருக்கு இடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாதபட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள். அதேபோல தாம்பத்திய உறவின்போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.

2. திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கு இடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு இன்னொரு காரணம்.

3. திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் அதிகம் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்த கற்பனைகள் பொய்யாகும்போது - தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, அவர்களில் சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள். இந்த உறவு மாற்றம் அவர்களுக்கு சரியென்றே படுவது இன்னும் வேதனை.

4. வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்கு காரணமாகிறது. இதுதவிர, கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரமும் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அதுபோகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.

5. ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். இந்த கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.

6. தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.


 கள்ளத்தொடர்பு - தடுக்க என்ன வழி? 


1. மனைவியை செக்ஸ் விஷயத்தில் திருப்திப்படுத்தினாலே போதும். அவள் வேறு எந்த ஆடவனையும் தவறான பார்வைகூட பார்க்க மாட்டாள்.*

2. மனைவியின் எதிர்பார்ப்புகளை ஒவ்வொரு கணவனும் புரிந்துகொள்வது அவசியம். செக்ஸில் மட்டுமின்றி, அவளது எந்தவொரு எதிர்பார்ப்பையும் பெரும்பாலும் நிறைவேற்ற தயாரானவனாக அவளது கணவன் இருக்க வேண்டும்.*

3. கணவன் இந்த விஷயத்தில் திசை மாறிப்போக காரணம், மனைவியின் சரியான கவனிப்பு இன்மையே. அதாவது, திருமணம் ஆன புதிதில் தங்களை விதவிதமாக அலங்கரித்து கணவனை மகிழ்விக்கும் பெண்கள், திருமணத்திற்கு பிறகு அதை மறந்து விடுகிறார்கள். ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால், அந்த குழந்தையை கவனிக்கிறார்களேத் தவிர, கணவனை கண்டுகொள்வது இல்லை. இந்த லிஸ்டில் இருக்கும் பெண்கள் சிலர்தான் என்றாலும், எல்லாப் பெண்களும் இதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.*

4. எதிர்பார்த்த மனைவி அமையாதது, செக்ஸ் விஷயத்தில் தனது எதிர்பார்ப்புகளை அவள் கண்டுகொள்ளாதது, மனைவியை விடவும் அழகான பெண்ணின் திடீர் நட்பு - இவையே ஒரு கணவன் திசைமாறிப் போக முக்கிய காரணம். மனைவிமார்கள், தங்கள் கணவனை நன்றாக கவனித்துக்கொண்டால் அவன் வேறு பெண்ணை நாடிப்போக வாய்ப்பு மிகக் குறைவு.

- இவை எல்லாம் இருந்தாலும், துணை தவிர வேறு ஒருவருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அது மிகப்பெரும் குற்றம் என்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நினைக்க வேண்டும். இல்லையென்றால், "கதவை தாழ்ப்பாள் போட்டாலும், ஒரு பெண் நினைத்தால் கெட்டுப்போய் விடலாம்" என்ற உண்மைக் கூற்று நிச்சயமாகவே உண்மையாகிவிடும்.

NIDUR.INFO

பொய் பேசுபவனின் மறுமை நிலை!

சமுரா இப்னு ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்;

''இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம்.

அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள்.

ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரு(வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் –

பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள்இ செல்லுங்கள்' என்றனர்.

அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள்.
நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம், 'இவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'செல்லுங்கள், செல்லுங்கள்' என்று என்னிடம் கூறினர்.

அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவந் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்திஇ கற்களைக் குவித்துவைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார்.

(அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், 'இவ்விருவரும் யார்?' என்று கேட்டேன். அவர்கள்இ என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்' என்று கூறினார்கள்.

நாங்கள் அப்படியே நடந்து ஓர் அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகிற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், 'இவர் யார்?' என்று கேட்டேன். அவர்கள் என்னிடம்இ 'செல்லுங்கள்  செல்லுங்கள்' என்று கூறினர்.

அப்படியே நடங்கள் அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில்
வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்தால் அவரின் தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், 'இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?' என்று கேட்டேன்.

அவர்கள் என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்' எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம். அதைவிட பெரிய அழகான பூங்காவை நான் ஒருபோதும் கண்டதில்லை. (அதில் ஒரு பெரிய மரமும் இருந்தது.) அவ்விருவரும் என்னிடம், 'அதில் ஏறுங்கள்' என்றனர். அப்படியே அதில் நாங்கள் ஏறி தங்கம் மற்றும் வெள்ளி செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு நகரத்திற்கு வந்தோம். அந்த நகரத்தின் தலை வாயிலை அடைந்து (அதைத்) திறக்குமாறு கூறினோம். உடனே எங்களுக்காக அது திறக்கப்பட்டது.

நாங்கள் அதில் நுழைந்தோம். அங்கு நீ காணகிறவற்றிலேயே மிகவும் அழகான பாதித் தோற்றமும் நீ காணுகிறவற்றிலேயே மிகவும் அருவருப்பான (மறு)பாதித் தோற்றமும் கொண்ட சில மனிதர்கள் எங்களை எதிர்கொண்டனர். அவர்களைப் பார்த்து (என்னுடன் வந்த) அவ்விருவரும், செல்லுங்கள்; (சென்று) அந்த நதியில் குதியுங்கள்' என்றனர். அங்கு குறுக்கே ஒரு நதி பாய்ந்து கொண்டிருந்தது. அதன் நீர் தூய வெண்ணிறத்தில் காணப்பட்டது. எனவே அவர்கள் சென்று அதில் விழுந்து (குளித்துவிட்டு) தங்களிடமிருந்து அந்த அசூசை நீங்கி விட்டிருந்த நிலையில் மிகவும் பொலிவான வடிவத்திற்கு மாறியவர்களாக எங்களிடம் திரும்பிவந்தனர்.

அவ்விருவரும் என்னிடம் 'இது (-இந்த நகரம்) தான் 'அத்ன்' எனும் (நிலையான) சொர்க்கமாகும். இதுவே உங்கள் ஓய்விடமாகும்' என்றார். நான் பார்வையை உயர்த்தி மேலே பார்த்தபோது அங்கு வெண் மேகத்தைப் போன்ற மாளிகையொன்றைக் கண்டேன். அவ்விருவரும் என்னிடம், 'இது உங்கள் இருப்பிடம்' என்றனர். நான் அவர்களிடம், 'உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுபிட்சம் வழங்கட்டும்! என்னை விடுங்கள். நான் இதில் நுழைந்து கொள்கிறேன்' என்றேன். அவ்விருவரும், 'இப்போது முடியாது நீங்கள் (மறுமையில்) அதில் நுழையத்தான் போகிறீர்கள்' என்றனர்

நான் அவ்விருவரிடமும் 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

கல்லால் தலை நசுக்கப்பட்டுக் கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக் கொண்டு விட்டுப் பிறகு அதை (மறந்து)விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மாலிக் ஆவார்.

அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர்.

இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சி
லர் 'இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)' என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் '(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்' என்று பதிலளித்தார்கள்.
(தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விருவரும் கூறுகையில்இ) ஒரு பாதி அழகாகவும் மறுபாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள் நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்துவிட்டவர்களாவர்; (பின்னர்) அவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் (என்று கூறினர்). (புகாரி 7047)

இந்த நீண்ட ஹதீஸில் முதலாவதாக பொய் சொல்லுபவருக்கு ஏற்படும் தண்டனை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மையில் பொய் பேசி அதை உலகம் முழுவதும் பரவச் செய்தவருக்கு அல்லாஹ் மறுமையில் ஏற்படுத்தியுள்ள தண்டனை கொக்கியால் முகவாயைப் பிடரி வரையும் அதேபோல் மூக்குத் துவாரம் கண்; ஆகியவற்றைப் பிடரி வரையும் கிழித்தல். சிலர் சிந்திக்கக்கூடும் பொய் சொல்பவருக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று. பொய் சொல்வதென்பது சாதாரண ஒரு விஷயம் கிடையாது.

பாவங்கள் அத்தனைக்கும் ஆணிவேராக இந்த பொய் இருக்கின்றது. அல்லாஹ் பொய் கூறுபவர்களைப் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடுகையில்இ

அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது.
அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்தால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்-குர்ஆன் 2:10)

இந்த அல்குர்ஆன் வசனத்தில் பொய் சொல்பவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கின்றது எனக் குறிப்பிடுகின்றான். விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் படி தொடர்ந்து பொய் பேசுபவர்கள் குழப்ப நிலையில் உள்ளவர்கள் அதாவது உடல் நலமில்லாதவர்கள்  என்ற உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர். எனவேஇ 1400 வருடங்களிற்கு முன் அல்லாஹ்வால் அருளப்பட்ட குர்ஆன் இந்த இடத்திலும் மெய்ப்பிக்கப்படுகின்றது.

சிலருக்கு பொய் கூறுவதென்பது என்பது குழாயிலிருந்து நீர் வருவதுபோல் அவ்வளவு சுலபமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் ரெடிமேடாக பொயயைத் தயாராக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு தாங்கள் பொய்யினால் காரியத்தை சாதித்து விட்டோம் என்ற பெருமிதம் வேறு. ஆனால் இவர்களின் ஒரு பொய்யால் மனித சமூகத்தில் ஏற்படும் பல தீங்குகளைப் பற்றி இவர்களுக்கு எந்தவித அக்கறையும் கிடையாது.

அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்

(ஒருமுறை) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்று கூறினோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள்.
இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் 'அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்றேன். (நூல்: புகாரி 5976, 5977)


மேலுள்ள ஹதீஸிலிருந்து பொய் பேசுவது பெரிய பாவத்தில் அடங்குவதாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இன்று அநேகமான முஸ்லிம் வியாபாரிகளிடம் பொய் கலந்த வியாபாரமே காணப்படுகின்றது. தரங்குறைந்த பொருட்களை பொய் கூறி விற்று வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றனர். பொய் கூறி பொருட்களை விற்ற காரணத்தினால் வாடிக்கையாளர்களை ஏமாற்றிய பாவமும் இதனுடன் வந்து சேர்கின்றது. இன்னொரு வகை வியாபாரிகள் பணக் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் பொய் கூறி பணத்தை நேரத்திற்கு கொடுக்காமல் ஏமாற்றி சமுதாயத்தில் கடனாளியாகவும் ஏமாற்றுப்பேர்வழியாகவும் நாணயமில்லாதவனாகவும் காணப்படுகின்றனர்.

சில பெண்கள் மற்ற பெண்களிடம் கதைக்கும்போது தம்மிடம் இல்லாதவற்றையும் இருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு பொய் கூறுகின்றனர். இதனுடன் பெருமை என்ற நோயும் இவர்களை ஆட்கொள்கின்றது. இதனால் மற்றவர்களின் மனதையும் புண்படுத்துகின்றனர். வீணாக சமுதாயத்தில் கேளிக்குரியவர்களாகின்றனர். இன்று அநேகமான பெண்களிடம் தம் குடும்பத்தவர்களைப் பற்றி பொய்களையெல்லாம் சேர்த்து வர்ணித்து அவர்களின் பிள்ளைகளைப்போல் வேறு யாரும் சிறந்தவர்கள் இல்லை என பெருமையடிக்கும் பழக்கம் ஒரு பொழுதுபோக்காக உள்ளது..

அற்பமானவை தவிர பெரும்பாவங்களையும் வெட்கக்கேடானவற்றையும் யார் தவிர்த்துக் கொள்கிறாரோ உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன். உங்களை பூமியிலிருந்து படைத்தபோதும்இ உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்தபோதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான். (அல்-குர்ஆன் 53:32)

திருமணம் பேசும் விஷயங்களில் சொல்லும் பொய்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஆயிரம் பொய்கள் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்று எவனோ சொன்ன பொய்யிற்கு அடிபணிந்து அநேகமான தம்பதிகளின் வாழ்க்கை விவாகரத்தில் முடியுமளவிற்கு இவர்களின் பொய் விவகாரம் தலைவிரித்தாடுகின்றது.

ஒருவன் பொய் சொல்லுவதற்குத் தயங்காத நிலையில்இ ஏனைய அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் மறைக்க முற்படுவான். எனவே, அனைத்து பாவங்களிற்கும் அடித்தளமாக பொய் அமைகின்றது.
எனவேதான் பொய் ஒரு சமுதாய மக்களிடையே கேடுகளையே விளைவிப்பதால் அல்லாஹ் அதற்குரிய தண்டனையையும் அவ்வாறு அமைத்துள்ளான்.

எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுவதை அநேகமானோர் சர்வசாதாரணமாகக் கருதுகின்றனர். எந்தவித அச்சமுமின்றி அல்லாஹ்வையே தமது பொய்யிற்கு சாட்சியாக்குகின்றனர்.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். "இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்" என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது. (அல்-குர்ஆன் 11:18)

மேலும் சிலர் இன்று இஸ்லாம் மார்க்கத்தில் குர்ஆன், சுன்னாவிற்கு அப்பாற்பட்ட நிலையில் தமது கைவரிசையைக் காட்டி வருகின்றனர். மார்க்கத்தில் இல்லாதவற்றை புதிதாகப் புகுத்தி இது அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்டது என்று பொய்யுரைத்து அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட இந்த தூய்மையான மார்க்கத்தில் கலங்கம் விளைவிக்கின்றனர்.

'இது அனுமதிக்கப்பட்டது, இது விலக்கப்பட்டது' என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:116)

உண்மையாகவே பொய் உரைப்பவனுக்கு ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்கள் சொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் யாருக்கு எந்த இடத்தில் என்ன சொன்னோம் என்ற அனைத்தும் மறந்து போய் வாழ்க்கையில் சிக்கலான நிலை ஏற்படும். இதனால் மனஅழுத்த நோயால் பாதிக்கப்படும் அபாய நிலை தோன்றும். இவர்களது இவ்வுலக வாழ்க்கையிலும் அல்லாஹ்வின் அருள் இருக்காது, மறுமையிலும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்த நேரான வழியில் வாழ துணை புரிவானாக!
 
-ஃபாத்திமா ஷஹானா கொழும்பு
source: http://rasminmisc.com

கனவு வந்தால் நல்ல தூக்கம் என அர்த்தம்!

"தூக்க சுழற்சி முறையின் அடிப்படையில் தான், நள்ளிரவு, அதிகாலை வேளைகளில் கனவுகள் வருகின்றன. பகலில் நினைப்பவை, இரவு உறக்கத்தில் வரும், சமகாலத்து நிகழ்வுகளாக, கனவை பார்ப்பது தான் சரி."

அனுபவ ரீதியான நிகழ்வுகளின் அடிப்படையில், கனவுகளைப் பற்றிய பல்வேறு கற்பித்தல்கள், வழிவழியாக, நம் சமூகத்தில் உலவி வருகிறது. கனவுகள் குறித்து, பல்வேறு நம்பிக்கைகள் நிலவி வரும் நம் சமூகத்தில், அதைப் பற்றிய புரிதல்கள் அவசியமாகின்றன. கனவுகளுக்கான காரணங்கள், அவற்றின் பலன்கள் குறித்து விளக்குகிறார், மனநல மருத்துவர் ஆனந்த் பிரதாப்.
*
1. கனவுகள் வருவதற்கு என்ன காரணம்?*
பகலில், ஒருவரின் மனம் எதைப் பற்றி அதிகம் நினைக்கிறதோ, அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பு, சிதறல்கள், இரவில் அவர்களுக்கு கனவாக வருகிறது. உதாரணமாக, தெய்வ பக்தி அதிகம் உள்ளவர்களுக்கு, சாமிகளின் உருவங்கள், கோவில், கோபுரங்கள் அதிகம் கனவில் வரும். ஆறு மணி நேர தூக்கத்தில், தூக்க சுழற்சி முறைப்படி, ஒருவருக்கு, நான்கு முறை வரை கனவு வரலாம்.

*2. வயதிற்கும், கனவிற்கும் தொடர்பு உண்டா?*
நிச்சயமாக தொடர்பு உண்டு. 3 முதல் 14 வயது வரையிலான பிள்ளைகளுக்கு, "கார்ட்டூன்’ படங்கள் மற்றும் திரைப்படங்களில் வரும் கதாநாயகன், வில்லன் போன்ற கதாபாத்திரங்கள், அதிகம் கனவில் வரும். பயந்த சுபாவம் உள்ள குழந்தைகளுக்கு, அவர்களின் உறவினர்கள் சொல்லக் கேட்ட, பேய் கதைகளின் பாதிப்புகள் கனவில் வெளிப்படும்.
விடலைப் பருவத்தினரில் பெரும்பாலானோருக்கு, அவர்களுக்கு பிடித்தமான, எதிர் பாலினர் கனவில் வருவர். அதுவும் அவர்களுக்கு பிடித்தமான கதாநாயகர், கதாநாயகி, விளையாட்டு வீரர் போன்றோரின் சாயலில், கனவில் வந்து அசத்துவர். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம், வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவை பற்றி அதிகம் எண்ணும் நடுத்தர வயதினருக்கு, இவை தொடர்பான, நேர்மறை அல்லது எதிர்மறையான கனவுகள் வரும். குடும்ப பிரச்னை, பணக் கஷ்டம், வேலையின்மை போன்றவற்றுக்கு ஆட்படுவோருக்கு, வன்முறை சம்பவங்கள் அதிகளவில் கனவில் வரும்.
எதிர்காலம் மற்றும் மரணத்தை பற்றிய பயத்தால், முதியோர், அவர்களின் குடும்பத்தில் அகால மரணம் அடைந்தோர், எமதூதர்கள், இறந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் என, சாவு தொடர்பான கனவுகளுக்கு அதிகம் ஆளாகின்றனர்.

*3. அதிகாலை கனவுகள் பலிக்குமா?*
தூக்க சுழற்சி முறையின் அடிப்படையில் தான், நள்ளிரவு, அதிகாலை வேளைகளில், கனவுகள் வருகின்றன. பகலில் நினைப்பவை, இரவு உறக்கத்தில் வரும், சமகாலத்து நிகழ்வுகளாக, கனவை பார்ப்பது தான் சரி.
மாறாக, கனவில் திருமணம் நடப்பது போல், யாரேனும் கனவு கண்டால், அவர்கள் வீட்டில் கெட்டது நடக்கும்; பிணம், ரத்தக்காயத்தை கனவில் கண்டால், நல்லது நடக்கும்; கனவில் கோவில் கோபுரத்தை பார்க்கக்கூடாது; பாம்பை அடித்து, அதை கொல்லாமல் விட்டாலோ, பாம்பு துரத்தினாலோ, துன்பம் வரும்; கெட்ட கனவுகளை வெளியில் சொன்னால், அவை பலிக்கும் என்பன போன்ற, ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்படாத, வழிவழியாக கூறப்பட்டு வரும் கற்பித்தல்கள் அனைத்தும், மூடநம்பிக்கையே.

*4. "கலர்’ கனவு எல்லாருக்கும் வருமா?*
வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு, மற்றவர்களைவிட, மூளைச் செல்களின் அதிர்வு அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு மட்டும், கலர் கனவு சாத்தியம். மற்றவர்களுக்கு, தங்கள் கனவில் வரும் நிறங்களை விவரிக்க முடியாது. இதேபோல், தூக்க மாத்திரை உட்கொள்வோர், மனச்சோர்வு, மனதளர்ச்சிக்கு மாத்திரை சாப்பிடுவோர், ஆகியோருக்கு, கொடிய ஆயுதங்களுடன் போரிடுவது போன்ற கனவுகள் வரும்.

*5. கனவுகளுக்கு ஆட்படாத நபர்கள் உண்டா?*
தொடர்ந்து, ஆறு மணி நேரம் தூங்காதவர்கள், இரவில் தூக்க தடைக்கு ஆளாகும் நீரிழிவு நோயாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டோர் போன்றோருக்கு கனவுகள் வராது. இவர்களை தவிர, சராசரி மனிதர்கள் எல்லாருக்கும் நிச்சயம் கனவு வரும்; வர வேண்டும். மாறாக, யாராவது தமக்கு கனவே வராது என, சொன்னால், அவர்கள், பொய் சொல்ல வேண்டும் அல்லது தூக்கமின்மை பிரச்னைக்கு ஆளாகி இருக்க வேண்டும்.
ஆழ்ந்த உறக்கத்திற்கு அடையாளமான கனவு, ஒருவருக்கு வருவது நல்லது. அதற்காக, ஒருவருக்கு தினமும் கனவு வர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இயல்பாகவோ, பணிநிமித்தம் காரணமாகவோ, சிந்தனை ஓட்டம் அதிகம் உள்ளோருக்கு, அதிகம் கனவு வரும்.

*டாக்டர் ஆனந்த் பிரதாப், மனநல மருத்துவர்,
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை*

ஊழலோ ஊழல் !

அரசியலில் ஊழல் !
அரிசியிலும் ஊழல் !
ஆற்றுமணலில் ஊழல் !
செம்மண்ணிலும் ஊழல் !
ஆயுதத்தில் ஊழல் !
ராணுவத்திலும் ஊழல் !
 

நிதித்துறையில் ஊழல் !
நீதித்துறையிலும் ஊழல் !
நிலத்தில் ஊழல் !
நிர்மானத்திலும் ஊழல்
 

தொலைபேசியில் ஊழல் !
தொலைக்காட்சியிலும் ஊழல்!
கல்லில் ஊழல்!
பாறையிலும் ஊழல்!
 

நிலக்கரியில் ஊழல்!
நிலத்தடி நீரிலும் ஊழல்
விளையாட்டில் ஊழல்
கிரிக்கெட்டிலும் ஊழல்
 

மருத்துவத்தில் ஊழல்!
மருத்துவக் கல்லூரியிலும் ஊழல்!
காவல் துறையில் ஊழல்
உளவுத்துறையிலும் ஊழல்
 

சுகாதாரத்தில் ஊழல்
சுடுகாட்டிலும் ஊழல்
உதவித் தொகையில் ஊழல்
உன்னத ஆசிரியர்களும் ஊழல்
 

மாற்றுத் திறனாளிகள் உதவியில் ஊழல்
மாற்று அரசியலிலும் ஊழல்
ஊழலோ ஊழல்
எங்கும் எதிலும் ஊழல்
 

வாழ்க ஜனநாயகம்!
வளர்க பண நாயகம்!
உலகின் பெரிய ஜனநாயக நாடு!
உலகின் பெரிய ஊழலோ ஊழல்!




நன்றி
கவிஞர் இரா .இரவி

தனியாக செல்லும் பெண்களுக்கு

தனியாக செல்லும் பெண்களுக்கு 10:

பெண்கள் தனியாகப் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. அவர்களின் தைரியத்தைப் பாராட்டும் அதே நேரம், வெளியூருக்குத் தனியாகச் செல்லும்போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதற்கான 10 விஷயங்கள் இங்கே:

1 உங்களின் சுற்றுச்சூழல், உங்களை சுற்றியுள்ள நபர்கள் குறித்துக் கவனமாயிருங்கள். அதற்காக எப்போதும் பீதியிலேயே இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் மற்றவர்களில் ஒருவர் உங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார் என்றாலோ, திரும்பத் திரும்ப ஒரு முகம் ஆங்காங்கே தோன்றுகிறது என்றாலோ எச்சரிக்கையாகிவிடுங்கள்.

2 முன்பின் தெரியாத இடங்களில் ஒரு பெண் தனது உள்ளுணர்வை நம்புவது நல்லது. குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் மொழி கூட உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒருவர் நட்புமுகம் காட்டுவது நன்மை செய்யவா அல்லது வேறு மாதிரியா என்று உள்ளுக்குள் ஒரு மணி அடிக்கும். `அலர்ட்’ ஆகிவிடுங்கள்.

3 புதிய இடங்களுக்கு செல்கையில் ஒரு வழிகாட்டிக் கையேடு நல்ல துணைவனாக இருக்கும். அந்தப் பகுதியின் தெருக்கள், கலாசாரம் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். தங்குவதற்கு சிறந்த இடம், எங்கே என்ன வாங்கலாம் என்பது போன்ற தகவல்களையும் `கைடு புக்’ தரும்.

4 மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியிலே பயணப்படுங்கள். இது ரொம்ப காலமாக சொல்லப்படுவதுதான். ஆனால் அதிகம் புறக்கணிப்படுவதும் இதுதான். பொதுவாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்கள் பாதுகாப்பானவை. அப்போது மக்களோடு மக்களாகக் கலந்துவிடலாம். ஏதாவது உடனடி உதவி தேவை என்றாலும் கிடைக்கும்.

5 சூட்கேஸ் மற்றும் பைகளில் உங்கள் முகவரியை எழுதுகிறீர்கள் என்றால், அது `பளிச்’சென்று தெரியும்படி இருக்க வேண்டாம். அத்துடன், சொந்த வீட்டு முகவரிக்குப் பதிலாக நீங்கள் பணிபுரியும் அலுவலக முகவரியை எழுதிவையுங்கள். புதிய இடத்தில் நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாம். முக்கியமான பொருட்களை ஓட்டல் பாதுகாப்பறையிலேயே விட்டுச் செல்லுங்கள்.

6 நீங்கள் ஒரு இடத்துக்கு முதல்முறையாகப் போகிறீர்கள் என்றால், நன்றாக அலசி ஆராய்ந்தபிறகு ஓட்டலை தேர்வு செய்வது நல்லது. முன்பதிவு செய்துவிடுங்கள். புதிய இடத்தில் போய் தடுமாறுவதை அது தடுக்கும். அங்கே போய் தங்கியபிறகு, பக்கத்திலேயே அதைவிட நல்ல ஓட்டல் இருக்கிறது என்றால் பின்பு மாறிக்கொள்ளலாம். பெரிய நிறுவனங்கள் மட்டும் உள்ள ஏரியாவில் ஓட்டலை தேர்வு செய்யாதீர்கள். அவை இரவில் வெறிச்சோடிப் போய்விடும். பரபரப்பான நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்துள்ள தங்கும் விடுதி நல்லது.

7 நீங்கள் செல்லும் இடத்தின் கலாசாரத்துக்குப் பொருந்துமாறு உடையணிவது முக்கியம். நீங்கள் விரும்பிய விதத்தில் உடையணிய உங்களுக்கு உரிமை இருக்கிறதுதான். ஆனால் உள்ளூருடன் ஒத்துப்போகும் வகையில் உடையணிவது, அங்குள்ள மக்களுடன் இயல்பாகப் பழக உங்களுக்கு உதவும். தேவையற்ற கவனம் உங்கள் மீது படிவதையும் தடுக்கும்.

8 சுற்றிப் பார்க்க வெளியே புறப்பட்டுச் செல்லும்முன்பு, குறிப்பிட்ட இடத்தின் வரைபடத்தைப் பார்த்து இடங்களை மனதில் பதித்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணி என்று தெரியாமல் இருக்க, கையடக்க வழிகாட்டி ஏட்டைப் பயன்படுத்துங்கள். உள்ளூரில் எந்தெந்தப் பகுதிகள் அபாயமானவை, தவிர்க்க வேண்டியவை என்று நீங்கள் தங்கியிருக்கும் ஓட்டலின் பெண் ஊழியர் ஒருவரிடம் `நைசாக’ கேட்டால் கூறிவிடுவார்.

9 இரவில் வெளியே செல்கிறீர்கள் என்றால் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். இரவில் அபாயம் அதிகம். வழிதவறிவிட்டாலும் தங்கும் இடத்துக்குத் திரும்புவது கஷ்டமாகிவிடும்.

10 பெண்கள் தனியாக செல்வது `த்ரில்லிங்’காக இருக்கும்தான். ஆனால் சற்றுத் தொலைதூரமான இடங்களுக்கு செல்கையில் ஒரு துணை இருந்தால் நல்லது. ஏதாவது எதிர்பாராத சூழலில் மாட்டிக்கொண்டால் கூட இரண்டு பேர் என்றால் சமாளிக்கலாமே!

பெண்மை

விக்கல் என்றால் என்ன? சுவாரசியமான தகவல்கள்

விக்கல், யாரோ தம்மை நினைப்பதால் வருகிறது என்று முதலில் நம்
முன்னோர்கள் கூறியதை, இன்றும் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் விக்கலானது, நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றானது மூச்சுப் பாதையின் மிகக் குறுகிய இடைவெளியில் செல்வதால் ஒருவித விநோத ஒலி உண்டாகும். அந்த ஒலி தான் விக்கல். இந்த விக்கல் வருவது இயல்பு.

ஒரு சிலருக்கு விக்கலானது அடிக்கடி வரும். இதற்கு முறையான மருத்துவ
ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால் சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக் காய்ச்சல், நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்றவற்றின்
அறிகுறியாகவும் விக்கல் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக காரம் உள்ள உணவுகள் சாப்பிடும்போது விக்கல் வரும். அளவுக்கு மீறி
அல்லது அவசர அவசரமாக உணவு உட்கொண்டாலும் விக்கல் வரும். மேலும் தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிக்காத போதும் விக்கல் வருவதுண்டு.

விக்கல் தொடர்ந்து வரும் போது கண் வறண்டு போதல் மற்றும் மயக்கம்
ஏற்படலாம். இப்படி பிரச்சனை உள்ளவர்கள் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளாக சாப்பிட வேண்டும். காய்கறி, பழங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். தினமும் 4 முதல் 8 லிட்டர் தண்ணீர் வரை அருந்தவும். வைட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுகள், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், எண்ணெயில்
பொரித்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்கவும். வறட்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சூடான உணவுகள் தவிர்த்து எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவும்

facebook

இறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத 15 வயது சிறுமியின் உடல்!

இறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத 15 வயது சிறுமியின் உடல்!




அர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந்த மம்மிக்களை மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். 1999ம் ஆண்டு லுல்லைலிகோ மலையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உறைந்த நிலையில் இருந்த அந்த உடல்களில் பாகக்கள் எதுவும் கெட்டுப் போகவில்லையாம்,. இரத்தம் கூட உறையாத அளவிற்கு பதமாக பாதுகாப்பாக இருந்திருக்கின்றன அந்த உடல்கள். தோல் கூட புத்துணர்ச்சியுடன் இருப்பது தான் ஆச்சர்யம்.

இறந்து ஐநூறு வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக்களை கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஏதோ, நோய்வாய்ப்பட்ட சாதாரணப் பெண்ணை டாக்டர்கள் பரிசோதிப்பது போல தோன்றும் இந்தப் போட்டோவில் இருப்பவர் தான் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பனியில் உறைந்து இறந்து போன 15 வயது சிறுமி.

நாகா கதைகளில் வருமே, அது போல மதத்தின் பெயரால், பனியில் புதைக்கப்பட்ட இச்சிறுமிக்கு ‘ லா டென்சிலா’, அதாவது திருமணமாகாத இளம் பெண் என பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

1999ல் அர்ஜெண்டினாவில் உள்ள லுல்லைலிகோ எனும் இடத்தில் சுமார் 6739 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டாள் டென்சிலா.

இன்கா இனத்தைச் சேர்ந்த இப்பெண் கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டு, கடவுளுடன் வாழ ஆசைப்பட்டு, மதத்தின் பெயரால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

டென்சிலாவின் உடல் உறுப்புகள் எதுவும் அழுகாமல், உடையாமல் அப்படியே இருக்கின்றன என ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். டென்சிலாவின் உடல் உறுப்புகளை ஆராய்ந்து பார்த்த போது, அது சில வாரங்களுக்கு முன்னர் இறந்த உடலைப் போன்று இருந்ததாம்.

அவளது முடியை வைத்து, அவள் என்ன மாதிரியான உணவுப் பழக்க வழக்கக்களைக் கொண்டவள் என ஆராய்ந்ததில், இன்கா மக்கள் தங்கள் குழந்தைகளை நன்கு கொழுக்க வைத்து கடவுளுக்கு அர்ப்பணித்தது தெரிய வந்துள்ளதாம்.

கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே, விலங்கு கொழுப்புகள் மற்றும் தானியங்களைக் கொடுத்து அக்குழந்தைகளை நன்கு செழிப்பாக்குவார்களாம் அவர்கள் குடும்பத்தார்.

டென்சிலாவின் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்த போது, அவள் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏதோ காய்கறி போன்ற உணவை உட்கொண்டிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டென்சிலாவின் உடல் இருந்த நிலையை வைத்து பார்க்கும் போது, அவள் இறப்பதற்கு முன்னதாக ஏதேனும் மருந்து உட்கொண்டிருக்கலாம், அதன் மூலம் அவளது மரணம் நிகழ்ந்திருக்கலாம் என யூகிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இன்காக்கள் இவ்வாறு அர்ப்பணிக்கப் பட்டவர்களை மலையின் உச்சிக்கு சுமந்து செல்வார்களாம். அந்த மலைப்பயணம் மிகவும் அபாயகரமானதாகவும், சிரமமானதாகவும் அமைந்திருக்குமாம். அவ்வாறு செல்லும் போது வழியிலே நேர்ந்து விடப்பட்டவர்களுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டி விடாமல் தடுக்க, அவர்களுக்கு கோகோ இலைகளைக் கொடுத்து, அவர்களின் சுவாசத்தை சீராக்குவார்களாம்.

இலக்கை அடைந்தவுடன் குடிக்க ஒரு மருந்து திரவம் தரப்படுமாம். அதன் மூலம் வலி, பயம் மற்றும் எதிர்க்கும் மனோபாவம் இல்லாமல் போய்விடுமாம். பின்னர் அவர்களை உடன் சென்றவர்களே மூச்சுத் திணறச் செய்தோ, தலையில் ஓங்கி அடித்தோ அல்லது பனியில் உறைய விட்டோ பலி கொடுப்பார்களாம்.

நிறைய இன்கா குழந்தைகள் இதுபோல் திருவிழாவின் போதோ அல்லது சாதாரண நாட்களிலோ பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. குறிப்பாக பஞ்சத்தின் போதோ அல்லது இன்காக்களின் சபா அதாவது இன்காக்களின் அரசனின் மரணத்தின் போதோ அதிகமாக் இது நடந்திருக்கலாம். இந்த உயிர் பலிகளுக்கு அவர்கள் வைத்தப் பெயர் ‘கபகோசா’.

இவற்றை ‘மம்மிகள்’ என்று அழைக்காமல் ‘தூங்கும் குழந்தைகள்’ என்று வர்ணிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.



நன்றி http://thamilinimai.phpbb3now.net

நல்ல நட்பின் ஒன்பது அம்சங்கள்

நல்ல நண்பர்களைக் கொண்டவர்களின் வாழ்க்கை நலமாக அமையும். முன்பின் தெரியாதவர்கள் பலருடன் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ள வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்ல நடபை இனம் காணுதல் முக்கியமானதாக இருக்கிறது. நல்ல நட்பின் அடையாளங்கள்:

1. சொன்னதைச் செய்தல்: நட்பிற்கு அடிப்படையாக அமைவது நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள முக்கியமாகத் தேவைப்படுவது சொன்னதைச் செய்தலாகும்.

2. அருகிருந்தால் மகிழ்ச்சி: நல்ல நண்பன் அருகில் இருந்தால் நல்ல உணர்வு எமக்குக் கிடைக்கும்.

3. கவனித்துக் கேட்டல்: நல்ல நண்பர்கள் நாம் கதைக்கும் போது கவனித்துக் கேட்பார்கள்.

4. உயர்வு கண்டு மகிழ்வார்கள்: நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் நாம் பெறும் வெற்றிகள் உயர்வுகள் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.

5. மாற்றிக் கொள்ளுதல்: நல்ல நண்பர்கள் ஒருவருக்காக ஒருவர் தம்மை மாற்றிக் கொள்வார்கள்.

6. இரகசியம் பேணுதல்: நல்ல நண்பர்களிடம் எமது குறைகள் நிறைகளைப் பகிர்ந்து கொள்ளுவோம். வெளியில் சொல்ல முடியாதவற்றையும் நல்ல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம். இதற்கு இரகசியம் பேணுதல் நல்ல நட்பிற்கு அவசியம்.

7. ஒத்துப் போகும் ரசனைகள்: நல்ல நண்பர்களின் ரசனைகள் ஒத்துப் போகக்கூடியவையாக இருக்கும்.

8 வழிநடத்துதல்: நல்ல நண்பர்கள் ஒருவரை ஒருவர் தவறான வழியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.

9. ஊக்கப்படுத்துதல்: நல்ல நண்பர்கள் ஒருவரை ஒருவர் வாழ்வில் முன்னேற ஊக்கப்படுத்துவார்கள்.

நன்றி ;ஜனனி

பரசிட்டமோல் பற்றித் தெரியுமா?

http://2.bp.blogspot.com/-RnI2SwcQroY/Tr_btGGoZEI/AAAAAAAAAXo/p62flMD__FM/s320/tablet-thuruvam.jpg 
 
 (paracetamol) எனப்படும் மாத்திரை எங்கும் எப்போதும் எவராலும் வாங்கிக் கொள்ளக் கூடிய மாத்திரை. மிகவும் குறைந்த பின்விளைவோடு காய்ச்சலைக் குறைக்கும் மற்றும் வலியினைக் குறைக்கும் வல்லமை இந்த மாத்திரைக்கு இருக்கிறது.

உண்மையில் இந்த மாத்திரை மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம் கூட.இந்த மாத்திரையை தன் வாழ் நாளில் ஒருமுறையேனும் உட்கொள்ளாத நபர்கள் எவருமே இருக்க சந்தர்ப்பம் இல்லை. இதற்குக் காரணமே இந்த மாத்திரையால் ஏற்படுகிற பின்விளைவுகள் குறைவு என்பதே.இந்த பரசிட்டமோல் சில நாடுகளில் acetaminophen என்று அழைக்கப்படும். paracetamol அல்லது acetaminophen என்பது இந்த மாத்திரையின் விஞ்ஞானப் பெயராகும். வெவ்வேறு நிறுவனங்களால் இந்த மாத்திரை தயாரிக்கப் படும் போது அந்தத் தயாரிப்புக்கு அந்த கம்பனி ஒரு குறிப்பிட்ட பெயரை வைத்துக் கொள்ளும்.

குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொண்டால் பரசிடமோல் என்றால் விளங்கிக் கொள்பவர்கள் குறைவானவர்களே. ஆனால் பனடோல்(panadol) என்றால் என்னவென்று தெரியாத எவரும் இலங்கையில் இருக்க முடியாது. உண்மையில் பனடோல் என்பது அந்த இந்த பரசிட்டமோல் என்ற மாத்திரையே அதை தயாரிக்கும் ஒரு குறிப்பிட்ட கம்பனி அதன் அந்தத் தயாரிப்புக்கு வைத்துக் கொண்ட brand name பனடோல் என்பதாகும். அதேபோல இன்னுமொரு கம்பனி வைத்துக் கொண்ட பேர் பரசிட்டோல் என்பதாகும்.

அதாவது பரசிட்டோல் அல்லது பனடோல் என்பது வேறு வேறல்ல. ,இரண்டுமே கொண்டிருப்பது பரசிட்டமோல் என்ற பதார்த்தத்தை, ஆனால் வேறு வேறு கம்பனிகளால் தயாரிக்கப் படும் போது அவை வேறு பெயரை வைத்துக் கொள்கின்றன. அவற்றின் விலைகளும் வேறுபடுகின்றன .இதே பல்வேறு கம்பனிகளால் தயாரிக்கப்படும் போது இந்த பரசிட்டமோல் நாட்டுக்கு நாடு வேறுபட்ட பெயர்களோடு மக்களுக்கு அறிமுகமாக இருக்கலாம்.

எந்த ஒரு வைத்தியரின் குறிப்பும் பொது சிறுவர்களுக்கு என்பதால் , இந்த மாத்திரை அடிக்கடி தற்கொலை முயற்சிகளுக்கு இலகுவாக் பயன் படுத்தப் படுகிறது.பரிந்துரைக்கப் பட்ட அளவுகளிலே பாவிக்கப் பட்டால் இந்த மாத்திரையால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள் சொற்பமே.இருந்தாலும் அளவுக்கு அதிகமாக பாவிக்கப் படும் போது இதுவும் விஷமாகலாம்.குறிப்பாக தற்கொலை செய்ய எண்ணி இந்த மாத்திரைய அளவுக்கு அதிகமாக ஒருவர் எடுத்துக் கொண்டால் முதல் நாளில் அவருக்கு எதுவும் நடைபெறாது ஆனால் தொடர்ந்து வரும் நாட்களில் அவரின் ஈரல் பழுதடைந்து முற்று முழுதாக செயலிழக்கலாம் .எனவே ஒருவர் தற்கொலை முயற்சியாக இந்த மாத்திரையை அதிகம் எடுத்துக் கொண்டால் அவரை உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று ஈரல் பாதிப்படையாமல் தடுக்க மருந்துகள் கொடுக்கப் பட வேண்டும்.

அதே போல நோய்கள் ஏற்படும் போதும் இது அளவுக்கதிகமாக எடுக்கப் படுமானால் அதுவும் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக சிறு பிள்ளைகளுக்கு அவர்களின் நிறைகளுக்கு ஏற்பவே இந்த மாத்திரை கொடுக்கப் பட வேண்டும். பெரியவர்கள் உட் கொள்ளும் அளவில் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டால் அவர்களுக்கும் ஈரல் பாதிப்பு ஏற்படலாம்.

ஆகவே ஒவ்வொருவரும் தாங்கள் எத்தனை மாத்திரை பாவிக்க வேண்டும், தங்கள் பிள்ளைகள் எத்தனை பாவிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பது முக்கியமாகும்.மாத்திரைகளின் அளவுகள் வயதை வைத்தல்ல உடலின் நிறையை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது.எவ்வாறு பரசிட்டமோலின் அளவு தீர்மானிக்கப் படுகின்றது?ஒரு கிலோ உடல் நிறைக்கு தேவையான பரசிட்டமோலின் அளவு 15mgஅதாவது உங்கள் உடல் நிறை 65kg என்றால் உங்களுக்குத் தேவையான பரசிட்டமோலின் அளவு 975mg அதாவது உங்கள் நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்.

பரசிட்டமோல் மாத்திரைகள் 500mg என்ற அளவிலேயே கிடைக்கும் ஆகவே நீங்கள் அண்ணளவாக இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.உங்கள் நிறை 45kg என்றால் உங்களுக்குத் தேவையான அளவு 675mg. நீங்கள் ஒன்றரை மாத்திரைகளை(750mg) .அல்லது ஒரு மாத்திரையை உட்கொண்டால் போதுமானது .(மிகவும் சரியான(accurate) அளவிலே எடுக்க வேண்டியதில்லை )உங்கள் நிறை 35kg என்றால் தேவையான அளவு 425mgஅதாவது அளவாக ஒரு மாத்திரை(500mg0 எடுத்துக் கொண்டால் போதுமானது.ஒரு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவாகும். இந்த அளவை ஒரு நாளைக்கு நான்கு முறை நீங்கள் எடுக்கலாம்.

நான் மேலே சொன்னதெல்லாம் மாத்திரைகளை பற்றி ஆனால் சிறுவர்களுக்கோ பரசிட்டமோல் பாணி மருந்தாகவே கொடுக்கப் படுகிறது.முந்திய இடுகைகளில் குறிப்பிட்டதுபோல பரசிட்டமொளின் அளவு உடல் நிறையை வைத்தே தீர்மானிக்கப் படுகின்றது. அதாவது உங்கள் குழந்தையின் நிறை 10kg என்றால் உங்கள் குழந்தைக்குத் தேவையான அளவு 150mg என்பதாகும்.(உடல் நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)இந்த நிறையை கொண்ட பாணி மருந்தை எப்படிக் கணிப்பது?5ml பாணி மருந்தில் இருக்கும் பரசிட்டமோளின் அளவு125mg ஆகும். அதாவது 10kg உள்ள குழந்தைக்கு 5ml பாணி மருந்து ஒரு வேளைக்கு கொடுக்கப்பட்டால் போதுமாகும்.

இந்த அளவு ஒரு நாளைக்கு நான்கு முறை கொடுக்கப்படலாம்.அதேபோல் உங்கள் குழந்தையின் நிறை 17kg என்றால் தேவையான பரசிட்டமோளின் அளவு 255mg ஆகும்( நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)இந்த 255mg என்ற அளவை கொடுப்பதற்கு தேவையான பாணியின் அளவு 10ml( அதாவது 10ml பாணியில் 250mg பரசிட்டமோல் இருக்கும்.மிகவும் சரியாக 255mg தான் கொடுக்க வேண்டுமில்லை ).

இவ்வாறு கணிப்பது கடினம் என்று நினைக்கும் பெற்றோர்கள், இலகுவாக உங்கள் வைத்தியரிடம் சென்று உங்கள் குழந்தைக்கு தேவையான பாணி மருந்தின் அளவை அறிந்து வைத்துக் கொள்வது முக்கியமாகும். ஏனென்றால் அளவுக்கு அதிகமாக கொடுக்கப் படும் பரசிட்டமோலே உங்கள் பிள்ளையின் உயிரைப் பறித்து விடும்.
 
thanks:http://www.thuruvam.com/2011/11/paracitamol.html

ஆங்கிலத்திலும் இரண்டறக் கலந்துள்ள தமிழ் ! தமிழ் சொற்கள் அறிவோம்!

 

சுமார் 60% விழுக்காடு ஆங்கில வார்த்தைகளை நாம் சொல்லாய்வு கொண்டு ஆராய்ந்தால் தெரியவரும் . அத்தகைய சொல்லாய்வு ( Etymology ) செய்த சொற்களை சிலவற்றை காண்போம் . படத்தில் கொடுக்கபட்டிருக்கும் தமிழ் சொற்களோடு ஸ்(S) என்ற வார்த்தை பயன்டுத்தி மருவி வந்த ஆங்கில சொற்களை கவனிக்கவும் .

பெரும்பாலான ஆங்கில சொற்கள் தமிழுடன் நேர் தொடர்பு கொண்டவையாக இருக்கிறது , மீதம் உள்ள ஆங்கில சொற்கள் லட்டின் மொழியில் இருந்து மருவி இருக்கும் பட்சத்தில் , லட்டின் சொற்களை சொல்லாய்வு கொண்டால் ,அவை மருவி இருக்கும் இடமும் தமிழே .

குறிப்பாக மற்றொன்டையும் நாம் நினைவில் கொள்ளல் வேண்டும் அதாவது இன்று தமிழ்நாட்டில் தமிழர்கள் பேசும் இன்றைய தமிழில் 60% விழுக்காடு தமிழ் சொற்களை பயன்படுத்தாமல் அழித்து இருக்கிறோம் என்பதும் எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.எத்தனை விவாத மேடைகளாக இருக்கட்டும் , எத்தனை பட்டிமன்றகளாக இருக்கட்டும் , பொது தளமாக இருக்கட்டும் , எப்படி கொண்டு ஆராய்ந்தாலும் சரி , தமிழ் வளர்ந்திருக்கிறதா ? ,அழிந்து இருக்கிறதா ? அல்லது அழிந்து விட்டதா ? என்ற கேள்வி எழும் நிலையில் மெய்யான முடிவுகள் அழிந்து கொண்டு இருக்கிறது என்பதை தாண்டி சென்று அழிந்து விட்டது என்ற பொருள் பெரும் பெறுவதற்கான முன் நிலையில் இருக்கிறது என்று சொல்லலாம் .

சிலர் ..இல்லை இல்லை அதெல்லாம் அழியாது என்று வாதாடுவார்கள் ..அது எப்படி ? என் மகன் , மகள் ,பேரன் ,பேத்தி டாடி மம்மி என்று பேசினால் தமிழ் அழியும், அவை அழியாது என்று கூச்சலிடுவார்கள்.சரி அப்படி இருக்கையில் இன்று மெரும்பாலான தமிழ் மக்களுக்கு கீழே கொடுக்கபட்டுள்ள வார்த்தைகள் அறிந்ததுண்டா என்று சோதித்தால் இன்று தமிழ் நாட்டில் வாழும் 8 கோடி தமிழர்களில் , இன்றைய நாள் {30-06-2013}கணக்கு கொண்டு பார்த்தால் குறைந்த பட்சம் 50 லட்சம் தமிழர்களுக்கு சொந்த தாய் மொழி தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள், அறிந்து இருகிறார்கள் என்று சொன்னால் அது மிகவும் மிகையே . முடிவுகள் 100% விழுக்காட்டில் 10% விழுக்காடு கூட தேராது ..சரி வாங்க அத்தகைய வார்த்தைகளை தெரிந்து கொள்வோம் , பயன் படுத்துவோம் , பலரை பயன்படுத்தவும் செய்வோம் .

பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்


1 டிரேடரஸ் : வணிக மையம்

2 கார்ப்பரேஷன் : நிறுவனம்

3 ஏஜென்சி : முகவாண்மை

4 சென்டர் : மையம், நிலையம்

5 எம்போரியம் : விற்பனையகம்

6 ஸ்டோரஸ் : பண்டகசாலை

7 ஷாப் : கடை, அங்காடி

8 அண்கோ : குழுமம்

9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி

10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி

11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்

12 டிராவலஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்

13 எலக்டிரிகலஸ் : மின்பொருள் பண்டகசாலை

14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்

15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை

16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்

17 டிம்பரஸ் : மரக்கடை

18 பிரிண்டரஸ் : அச்சகம்

19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்

20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்

21 லித்தோஸ் : வண்ண அச்சகம்

22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்

23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்

24 காபி பார் : குளம்பிக் கடை

25 ஹோட்டல் : உணவகம்

26 டெய்லரஸ் ; தையலகம்

27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்

28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்

29 சினிமா தியேட்டர் : திரையகம்

30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்

31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்

32 சிட் பண்ட் : நிதியகம்

33 பேங்க் : வைப்பகம்

34 லாண்டரி : வெளுப்பகம்

35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்

36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்

37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி

38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி

39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்

40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்

41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்

42 ஆட்டோ : தானி

43 ஆட்டோமொபைலஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்

44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்

45 பேக்கரி : அடுமனை

46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்

47 பசார் : கடைத்தெரு, அங்காடி

48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்

49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை

50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி

51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி

52 பாய்லர் : கொதிகலன்

53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்

54 கேபிள் : கம்பிவடம், வடம்

55 கேபஸ் : வாடகை வண்டி

56 கபே : அருந்தகம், உணவகம்

57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்

58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை

59 சிமெண்ட் : பைஞ்சுதை

60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்

61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி

62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி

63 கிளினிக் : மருத்துவ விடுதி

64 காபி ஹவுஸ் : குளம்பியகம்

65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,

66 கம்பெனி : குழுமம், நிறுவனம்

67 காம்ப்ளகஸ் : வளாகம்

68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்

69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி

70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்

71 கூரியர் : துதஞ்சல்

72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்

73 சைக்கிள் : மிதிவண்டி

74 டிப்போ : கிடங்கு, பணிமனை

75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்

76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்

77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்

78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்

79 எம்போரியம் : விற்பனையகம்

80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்

81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்

82 பேக்டரி : தொழிலகம்

83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்

84 பாஸ்ட் புட் : விரை உணா

85 பேகஸ் : தொலை எழுதி

86 பைனானஸ் : நிதியகம்

87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி

88 கார்மென்டஸ் : உடைவகை

89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்

90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை

91 ஜூவல்லரி : நகை மாளிகை

92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்

93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி

94 மார்க்கெட் : சந்தை அங்காடி

95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்

96 பேஜர் : விளிப்பான், அகவி

97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு

98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்

99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு

100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்

101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்

102 பார்மசி : மருந்தகம்

103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்

104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிலி தொழிலகம்

105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்

106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை

107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்

108 பவர்லும் : விசைத்தறி

109 பவர் பிரஸ் : மின் அச்சகம்

110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்

111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்

112 ரப்பர் : தொய்வை

113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்

114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்

115 ஷோரூம் : காட்சிக்கூடம்

116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை

117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்

118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்

119 சப்ளையரஸ் : வங்குநர்,

120 ஸ்டேஷனரி : தோல் பதனீட்டகம்

121 டிரேட் : வணிகம்

122 டிரேடரஸ் : வணிகர்

123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்

124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்

125 டீ ஸ்டால் : தேனீரகம்

126 வீடியோ : வாரொளியம், காணொளி

127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு

128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்

129 எக்ஸ்ரே : ஊடுகதிர்...



நன்றி: thamilinimai