Digital Time and Date

Welcome Note

Sunday, June 30, 2013

பரசிட்டமோல் பற்றித் தெரியுமா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLYBfOb5sSWEbn4ZB_GfaA0dyJ8OOgdlp0jtGi-wzz4mq2tkKxNWVtAZFOlahpmhVDal4oCKJQ8ncKv1Dc5tnThgVoF-lvzlqACDpHlpSOkfxHDl7O11s487dT2Gg4sThl_2cVtWyDsv-w/s320/tablet-thuruvam.jpg 
 
 (paracetamol) எனப்படும் மாத்திரை எங்கும் எப்போதும் எவராலும் வாங்கிக் கொள்ளக் கூடிய மாத்திரை. மிகவும் குறைந்த பின்விளைவோடு காய்ச்சலைக் குறைக்கும் மற்றும் வலியினைக் குறைக்கும் வல்லமை இந்த மாத்திரைக்கு இருக்கிறது.

உண்மையில் இந்த மாத்திரை மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம் கூட.இந்த மாத்திரையை தன் வாழ் நாளில் ஒருமுறையேனும் உட்கொள்ளாத நபர்கள் எவருமே இருக்க சந்தர்ப்பம் இல்லை. இதற்குக் காரணமே இந்த மாத்திரையால் ஏற்படுகிற பின்விளைவுகள் குறைவு என்பதே.இந்த பரசிட்டமோல் சில நாடுகளில் acetaminophen என்று அழைக்கப்படும். paracetamol அல்லது acetaminophen என்பது இந்த மாத்திரையின் விஞ்ஞானப் பெயராகும். வெவ்வேறு நிறுவனங்களால் இந்த மாத்திரை தயாரிக்கப் படும் போது அந்தத் தயாரிப்புக்கு அந்த கம்பனி ஒரு குறிப்பிட்ட பெயரை வைத்துக் கொள்ளும்.

குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொண்டால் பரசிடமோல் என்றால் விளங்கிக் கொள்பவர்கள் குறைவானவர்களே. ஆனால் பனடோல்(panadol) என்றால் என்னவென்று தெரியாத எவரும் இலங்கையில் இருக்க முடியாது. உண்மையில் பனடோல் என்பது அந்த இந்த பரசிட்டமோல் என்ற மாத்திரையே அதை தயாரிக்கும் ஒரு குறிப்பிட்ட கம்பனி அதன் அந்தத் தயாரிப்புக்கு வைத்துக் கொண்ட brand name பனடோல் என்பதாகும். அதேபோல இன்னுமொரு கம்பனி வைத்துக் கொண்ட பேர் பரசிட்டோல் என்பதாகும்.

அதாவது பரசிட்டோல் அல்லது பனடோல் என்பது வேறு வேறல்ல. ,இரண்டுமே கொண்டிருப்பது பரசிட்டமோல் என்ற பதார்த்தத்தை, ஆனால் வேறு வேறு கம்பனிகளால் தயாரிக்கப் படும் போது அவை வேறு பெயரை வைத்துக் கொள்கின்றன. அவற்றின் விலைகளும் வேறுபடுகின்றன .இதே பல்வேறு கம்பனிகளால் தயாரிக்கப்படும் போது இந்த பரசிட்டமோல் நாட்டுக்கு நாடு வேறுபட்ட பெயர்களோடு மக்களுக்கு அறிமுகமாக இருக்கலாம்.

எந்த ஒரு வைத்தியரின் குறிப்பும் பொது சிறுவர்களுக்கு என்பதால் , இந்த மாத்திரை அடிக்கடி தற்கொலை முயற்சிகளுக்கு இலகுவாக் பயன் படுத்தப் படுகிறது.பரிந்துரைக்கப் பட்ட அளவுகளிலே பாவிக்கப் பட்டால் இந்த மாத்திரையால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள் சொற்பமே.இருந்தாலும் அளவுக்கு அதிகமாக பாவிக்கப் படும் போது இதுவும் விஷமாகலாம்.குறிப்பாக தற்கொலை செய்ய எண்ணி இந்த மாத்திரைய அளவுக்கு அதிகமாக ஒருவர் எடுத்துக் கொண்டால் முதல் நாளில் அவருக்கு எதுவும் நடைபெறாது ஆனால் தொடர்ந்து வரும் நாட்களில் அவரின் ஈரல் பழுதடைந்து முற்று முழுதாக செயலிழக்கலாம் .எனவே ஒருவர் தற்கொலை முயற்சியாக இந்த மாத்திரையை அதிகம் எடுத்துக் கொண்டால் அவரை உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று ஈரல் பாதிப்படையாமல் தடுக்க மருந்துகள் கொடுக்கப் பட வேண்டும்.

அதே போல நோய்கள் ஏற்படும் போதும் இது அளவுக்கதிகமாக எடுக்கப் படுமானால் அதுவும் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக சிறு பிள்ளைகளுக்கு அவர்களின் நிறைகளுக்கு ஏற்பவே இந்த மாத்திரை கொடுக்கப் பட வேண்டும். பெரியவர்கள் உட் கொள்ளும் அளவில் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டால் அவர்களுக்கும் ஈரல் பாதிப்பு ஏற்படலாம்.

ஆகவே ஒவ்வொருவரும் தாங்கள் எத்தனை மாத்திரை பாவிக்க வேண்டும், தங்கள் பிள்ளைகள் எத்தனை பாவிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பது முக்கியமாகும்.மாத்திரைகளின் அளவுகள் வயதை வைத்தல்ல உடலின் நிறையை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது.எவ்வாறு பரசிட்டமோலின் அளவு தீர்மானிக்கப் படுகின்றது?ஒரு கிலோ உடல் நிறைக்கு தேவையான பரசிட்டமோலின் அளவு 15mgஅதாவது உங்கள் உடல் நிறை 65kg என்றால் உங்களுக்குத் தேவையான பரசிட்டமோலின் அளவு 975mg அதாவது உங்கள் நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்.

பரசிட்டமோல் மாத்திரைகள் 500mg என்ற அளவிலேயே கிடைக்கும் ஆகவே நீங்கள் அண்ணளவாக இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.உங்கள் நிறை 45kg என்றால் உங்களுக்குத் தேவையான அளவு 675mg. நீங்கள் ஒன்றரை மாத்திரைகளை(750mg) .அல்லது ஒரு மாத்திரையை உட்கொண்டால் போதுமானது .(மிகவும் சரியான(accurate) அளவிலே எடுக்க வேண்டியதில்லை )உங்கள் நிறை 35kg என்றால் தேவையான அளவு 425mgஅதாவது அளவாக ஒரு மாத்திரை(500mg0 எடுத்துக் கொண்டால் போதுமானது.ஒரு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவாகும். இந்த அளவை ஒரு நாளைக்கு நான்கு முறை நீங்கள் எடுக்கலாம்.

நான் மேலே சொன்னதெல்லாம் மாத்திரைகளை பற்றி ஆனால் சிறுவர்களுக்கோ பரசிட்டமோல் பாணி மருந்தாகவே கொடுக்கப் படுகிறது.முந்திய இடுகைகளில் குறிப்பிட்டதுபோல பரசிட்டமொளின் அளவு உடல் நிறையை வைத்தே தீர்மானிக்கப் படுகின்றது. அதாவது உங்கள் குழந்தையின் நிறை 10kg என்றால் உங்கள் குழந்தைக்குத் தேவையான அளவு 150mg என்பதாகும்.(உடல் நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)இந்த நிறையை கொண்ட பாணி மருந்தை எப்படிக் கணிப்பது?5ml பாணி மருந்தில் இருக்கும் பரசிட்டமோளின் அளவு125mg ஆகும். அதாவது 10kg உள்ள குழந்தைக்கு 5ml பாணி மருந்து ஒரு வேளைக்கு கொடுக்கப்பட்டால் போதுமாகும்.

இந்த அளவு ஒரு நாளைக்கு நான்கு முறை கொடுக்கப்படலாம்.அதேபோல் உங்கள் குழந்தையின் நிறை 17kg என்றால் தேவையான பரசிட்டமோளின் அளவு 255mg ஆகும்( நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)இந்த 255mg என்ற அளவை கொடுப்பதற்கு தேவையான பாணியின் அளவு 10ml( அதாவது 10ml பாணியில் 250mg பரசிட்டமோல் இருக்கும்.மிகவும் சரியாக 255mg தான் கொடுக்க வேண்டுமில்லை ).

இவ்வாறு கணிப்பது கடினம் என்று நினைக்கும் பெற்றோர்கள், இலகுவாக உங்கள் வைத்தியரிடம் சென்று உங்கள் குழந்தைக்கு தேவையான பாணி மருந்தின் அளவை அறிந்து வைத்துக் கொள்வது முக்கியமாகும். ஏனென்றால் அளவுக்கு அதிகமாக கொடுக்கப் படும் பரசிட்டமோலே உங்கள் பிள்ளையின் உயிரைப் பறித்து விடும்.
 
thanks:http://www.thuruvam.com/2011/11/paracitamol.html

No comments:

Post a Comment