Digital Time and Date

Welcome Note

Thursday, July 25, 2013

கிரெடிட் கார்டு வாங்கியவுடன்...



'கிரெடிட் கார்டு' பெற்றவுடன் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பதை பலரும் அறியாமல் உள்ளனர். அவர்களுக்கு....

நீங்கள் சந்தேகப்படும் எந்த இணையதளத்திலும் உங்கள் கிரெடிட் கார்டு பற்றிய விவரத்தைக் கொடுக்க வேண்டாம். நன்கு தெரிந்த, நம்பிக்கையான இணையதளத்தில் மட்டும் உங்கள் கிரெடிட் கார்டு விவரத்தைக் கேட்டால் கொடுங்கள்.

யாராவது போனில் தொடர்புகொண்டு, உங்கள் கிரெடிட் கார்டு விவரத்தை, குறிப்பாக பின்பக்கம் இருக்கும் மூன்று எண்கள் பற்றிக் கேட்டால் எந்த விவரத்தையும் சொல்லாதீர்கள். வங்கியில் இருந்து யாரும் உங்களிடம் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டு விவரத்தைக் கேட்க மாட்டார்கள்.

அப்படி யார் கேட்டாலும் எந்தத் தகவலையும் கொடுக்காமல் தொடர்பை துண்டித்து விடுங்கள். கடைக்காரரிடம் கிரெடிட் கார்டை கொடுக்கும் போது மெஷினில் கார்டை தேய்ப்பதை நீங்கள் ஒரு கண் பார்த்துக்கொள்வது நல்லது.

உங்கள் கிரெடிட் கார்டை ஒருமுறை மட்டும் தேய்க்கிறாரா, நீங்கள் பார்ப்பது போல் கிரெடிட் கார்டு மெஷினை வைத்தி ருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள். கடைக்காரர் கொடுக்கும் ரசீதில், நீங்கள் வாங்கிய பொருளின் விலை சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொண்ட பிறகு கையெழுத்துப் போட வேண்டும்.

நீங்கள் கையெழுத்துப் போட்ட ரசீது கடைக்காரரிடமும், அதன் நகல் உங்களிடமும் இருக்கும். உங்களிடம் கொடுக்கப்படும் நகலை தூக்கி எறியாமல் பத்திரப்படுத்திக்கொள் ளுங்கள். மாத இறுதியில் உங்களுக்கு அனுப்பப்படும் கணக்கு விவரத்தோடு (statment) நீங்கள் வாங்கிய பொருட்களின் விலைப்பட்டியல் ஒத்துப் போகி றதா என்று பாருங்கள்.

மாதக் கணக்கு விவரத்தில் அதிகமாக பணம் குறிப்பிட்டிருந்தால், வங்கிக்கு அல்லது கார்டு நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் கிரெடிட் கார்டுக்கு காப்பீடு கூட பெறலாம்.

ஒருவேளை நீங்கள் கார்டை தொலைத்துவிட்டால், அது தொலைந்த நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் ஒரு வேளை கிரெடிட் கார்டை பயன்படுத்தி யார் எந்தப் பொருள் வாங்கியிருந்தாலும் 'இன்சூரன்ஸ் கிளெய்ம்' செய்யலாம். ஆனால் அதற்காக கார்டு தொலைந்து விட்டால் சும்மா இருந்துவிடக் கூடாது.

வங்கியின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு உங்கள் கார்டின் 16 இலக்க எண்களைச் சொல்லி யாரும் பயன்படுத்த முடியாதபடி தடுக்க வேண்டும். இவையெல்லாம் கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். கார்டை பயன்படுத்த பயன்படுத்த நீங்களாகவே பல விஷயங்களை அறிவீர்கள். 
 
நன்றி http://www.amarkkalam.net

35 வயதிற்கு மேல் கர்ப்பம் அடைய வழிகள்



இன்றைய காலத்தில் பெண்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அவ்வாறு நல்ல நிலைக்கு வருவதற்குள், பெண்களுக்கு குறைந்தது 35 வயதாகிவிடுகிறது.

இவ்வாறு 35 வயதானப் பின்னர், சிலருக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதோடு, கர்ப்பமான பின்பு சிக்கல்களை சந்தித்து, பின் அது குழந்தை அல்லது தாயின் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவில் இருக்கிறது. ஆகவே எப்போதும் குழந்தை பெற்றுக் கொள்வதை மட்டும் எக்காலத்திலும் தள்ளி வைக்கக்கூடாது.

ஆனால் 35 வயதிற்கு மேல் கர்ப்பமாவது கஷ்டம் என்று கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு சில நடைமுறைகளை பின்பற்றினால் எளிதில் கருத்தரிப்பதோடு, நல்ல ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கலாம்.

அதிலும் சரியான மருத்துவரின் ஆலோசனை மற்றும் உடல் ஆரோக்கிய பராமரிப்புக்களின் மூலம், வயதானாலும் பிரச்சனையின்றி குழந்தை பெற்றெடுக்க முடியும். இப்போது 35 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில முக்கியமான வழிமுறைகளை உள்ளன. இந்த முறைகளை பின்பற்றி வந்தால், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

• எப்போதும் நல்ல ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அதிலும் இறைச்சி, மீன், பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம், கருமுட்டையின் உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் முன், குறைந்தது மூன்று மாதத்திற்கு போலிக் ஆசிட் மாத்திரைகள் அல்லது உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு, இது மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமல்லாமல், இந்த போலிக் ஆசிட் குழந்தையின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக, இந்த போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன், மருத்துவரை அணுக வேண்டும்.

• குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், அதற்கு முதலில் சரியான நேரத்தில் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு ஓவுலேசன் கால்குலேட்டரைப் பயன்படுத்தினால், எப்போது உறவு கொண்டால், கர்ப்பமாகக்கூடும் என்பதை சொல்லும். அந்த காலத்தில் உறவு கொண்டால், எளிதில் கருத்தரிக்கலாம்.

• பொதுவாக 35 வயதிற்கு மேல், மன அழுத்தமானது அதிகம் இருக்கும். ஆகவே குழந்தை பெற ஆசைப்பட்டால், அத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களான யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொண்டு, மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மன அழுத்தம் கூட ஒரு வகையில் கரு உருவாவதற்கு தடையாக இருக்கும்.

• ஆண்களுக்கு வயதானால், விந்தணுவின் உற்பத்தியானது குறைந்துவிடும். எனவே ஆல்கஹால், சிகரெட் போன்றவற்றை நிறுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட கொடுக்க வேண்டும். இதனால் விந்தணுவின் உற்பத்தியானது அதிகரித்து, எளிதில் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.

• 35 வயதிற்கு மேல் கருத்தரிக்க நினைக்கும் முன், முதலில் மருத்துவரைச் சென்று அவர்களிடம் உடல் முழுவதும் பரிசோதனை செய்து கொள்வதோடு, கருத்தரிக்க வாய்ப்புள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு, அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கேட்டறிந்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.

நன்றி அமர்க்களம் 

கேன்சர் விளக்கம்




பேரைச் சொன்னாலே நமக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய், புற்றுநோய் தான். இந்நோயின் வகைகளை வரிசைப்படுத்திச் சொன்னால் வாய் வலிக்கக் கூடிய அளவுக்கு இதன் பட்டியல் நீளமானது. இந்நோயை இரண்டு விதமாகப் பார்க்கலாம்...

1. புற்றுநோய் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்...

2. புற்றுநோய் வந்துவிட்டால் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள்...

உலக அளவில், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன? அதற்கு செய்ய வேண்டியது என்ன? என்னென்ன உணவுப்பொருட்களில் வழக்கமான ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் தவிர, புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. புற்றுநோய் வந்துவிட்டால் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள்:

இந்தியாவில் புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்காக செலவழித்து 6 லட்சம் முதல் 8 லட்சம் பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறைந்த வருமானம் உடைய குடும்பத்தினர் தங்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை சர்க்கரை நோய்க்கு செலவழிக்கின்றனர்.

இத்துடன் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர் அக்குடும்பத்தில் இருந்தால் செலவு எங்கோ போய் நிற்கிறது. அதனால், புற்றுநோய் வருமுன் காப்பதே சிறப்பாகும். இதற்கு ஒரே வழி புற்றுநோய் வரக்கூடிய வழிகளை எல்லாம் அடைப்பதுதான். இது மிக மிகச் சுலபமானதும் சாத்தியமானதும் ஆகும்.

மான்செஸ்டர் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த புரொபசர் ரோசலி டேவிட், இயற்கையான சூழ்நிலையில் கேன்சர் உண்டாக வாய்ப்பில்லை என்கிறார். மாசு, உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் போன்றவற்றுக்கு காரணமான மனிதரால் உண்டாவதே நோய்கள் என்கிறார்.

பன், பிஸ்கட், கேக் வாரத்துக்கு இரண்டு மூன்று முறை சாப்பிடும் பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதுவே, வாரம் மூன்று முறைக்கு மேல் சாப்பிடும் பெண்களுக்குக் கட்டிகள் உருவாகும் வாய்ப்பு இன்னும் அதிகமாம்.

அதிகப்படியான இனிப்பு, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து, என்ட்ரோ மெட்ரியத்தில், செல்களின் அபரிதமான வளர்ச்சியைத் தூண்டி விடுகிறது. வாரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கார்பனேட்டட் பானங்களை அருந்துபவர்களுக்குக் கணையப் புற்றுநோய் வாய்ப்பு அதிகம் என்கின்றனர்.

தினசரி சுமார் 2.5 லிட்டர் தண்ணீர் குடித்தால், சிறுநீர்ப் பையில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத் தவிர்க்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் தினசரி, பாட்டில் குளிர்பானம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள அதிகளவு சர்க்கரை காரணமாக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.

பழச்சாறு எடுத்து சர்க்கரை கலக்காமல் அதன் இயற்கைச் சுவையில் அருந்துவதும், அப்படியே பழமாகச் சாப்பிடுவதும் நல்லது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சென்னை அடையார், கேன்சர் இன்ஸ்டிடியூட் தலைவரும், பிரபல புற்றுநோய் மருத்துவருமான டாக்டர் வி. சாந்தா அவர்கள் சில வருடங்களுக்கு முன் சொன்னது:

``அதிகப்படியான உப்பின் பயன்பாடு புற்றுநோயைத் தோற்றுவிக்கும். அதனால், அதிகப்படியான உப்பின் பயன்பாட்டையும், கருவாடு, உப்பில் காய வைத்த ஊறுகாய்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்'' என்று கூறியுள்ளார்.  புற்றுநோயை எதிர்க்கும் உணவுப்பொருட்கள்:

காளானில், எர்கோதியோனீன் - ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், லென்ட்டினான் ஃபைட்டோ கெமிக்கல், செலீனியம், வைட்டமின் `டி' வைட்டமின் `சி', நார்ச்சத்து உள்ளன. தக்காளி, பரங்கிக்காய், கேரட் போன்றவற்றில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகளை விட, அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் வெள்ளைப்பட்டன் காளானில் உள்ளன.

வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள், இலவங்கப்பட்டை போன்ற இதர ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகளுடன் சமைக்கும்போது காளானின் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் சக்தி அதிகரிக்கிறதாம்.
 
நன்றி சேனை தமிழ் உலா 

Monday, July 22, 2013

நெஞ்சு எரிச்சலா?



நெஞ்சு எரிச்சல்... வயிற்றின் மேல் பகுதியில் இருந்து தொண்டை வரை எரிச்சல்... காரசாரமான சாப்பாடு சாப்பிட்டாலும் எரிச்சல்... காலி வயிறாக இருக்கும் போது எரிச்சல்... சாப்பாடே சங்கடமா போச்சு அசிடிட்டி.... அமிலத்தால் உள்ளுக்குள்ள வெந்திருக்குமோ... இதிலிருந்து விடுபட வழி. இதனை உடனடியாக கவனிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.

அவர் மேலும் கூறியாதவது:-

திருமண விருந்தில் சாப்பாட்டை ஒருபிடி பிடிப்பவர்களுக்கும், விதவிதமான மசாலாப் பொடி, எண்ணெய், இதையெல்லாம் எதிர்கொள்ளும் சக்தி எல்லாருடைய வால்வுகளுக்கும் இருப்பதில்லை. வால்வு என்பது இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் நடுவே இருக்கிற வால்வு.

அமிலம் சுரப்பது இயற்கை. அமிலத்தின் வீரியத்தை சமப்படுத்த ஜீரணிக்க சாப்பாட்டையும் தண்ணீரையும் சாப்பிடுவது அவசியம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் காலி வயிற்றில் அமிலம் மட்டும் பொங்கி உணவுக்குழாயின் உள் உறையில் பட்டால் எரிச்சல்கள் உருவாகும். இது தொடரத் தொடர உணவுக்குழாயின் உள் உறை செல்களில் மாற்றம் ஏற்படுகிறது.

இதை உடனடியாக கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டியது மிக அவசியம். கவனிக்காவிட்டால் புற்று நோய்க்கு இடம் கொடுத்தாற்போல ஆகும். புற்றுநோயின் ஆரம்பத்திற்கு நெஞ்செரிச்சல் அறிகுறியாக இருக்கும். இதய பாதிப்புள்ளவர்களுக்கும் நெஞ்சு எரிச்சல் வரும். இதை ஹார்ட்பர்ன் என்று சொல்வார்கள். எரிச்சல் எதனால் என்று எண்டோஸ்கோபி மூலம் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது மிக மிக அவசியம்.

நெஞ்செரிச்சலுக்கு 6 மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை மாத்திரை மருந்துகளை கொடுத்து அமிலம் சுரக்கும் அளவை குறைத்து மாத்திரைகளாலேயே வால்வை இறுகச் செய்ய முயற்சி செய்வதுதான் உலகளவில் மருத்துவ தீர்வு. ஆனால் சில பேருக்கு அதற்கு பின்பும் சரியாகாது. நெஞ்செரிச்சலோடு வால்வு பலவீனமாக இருப்பதால் குனியும் போது சாப்பிட்ட சாப்பாடும் தண்ணீரும் உமிழ் நீர்மாதிரி வெளியில் வரும். இந்த அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு அமில அளவை, நெஞ்செரிச்சலை மாத்திரை மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாது.

வால்வு பலஹீனமாக இருக்கும். இருந்தாலும் மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முயல்வோம். அப்படி சரியாகிவிட்டால் அதோடு சிகிச்சை முடிந்து விடும். ஆனால் மாத்திரை சாப்பிட்டும் எந்த பலனும் இல்லை என்று ஒரு மாதத்திலேயே வருவார்கள்.

அவர்களுக்கு எல்லாம் லாப்ராஸ் கோபிக், லேன்டோபளைகேஷன், டுபேபண்டோ ப்ளைகேஷன், எண்டோசின்ச் சிமெண்ட் இன்ஜெக்ஷன் என பல முறைகளில் தீர்வு கண்டு விடலாம். நெஞ்செரிச்சலை சரிப்படுத்திக் கொள்ளாமல் அலட்சியபடுத்தினால் பேரட் ஓசோபாகஸ் என உணவுக் குழாயின் உறையின் சிகப்பு பகுதி வழியாக உள்ளே அமிலம் சென்று கட்டிவர புற்று நோய் வர வாய்ப்பிருக்கிறது.

இன்று அடினோ காஸினோமா என்ற புற்று நோய், நெஞ்செரிச்சலினால் வரக்கூடிய புற்று நோய், இந்தியாவில் அதிகமாக வருகிறது. நிறைய பேர் பேரட் ஓசோபாக்ஸ் என்னும் நிலை வரும் போது தள்ளிப் போடலாமென்று நினைக்கின்றனர். இது கூடவே கூடாது.

இந்த நிலை புற்று நோய் வர நிறைய வாய்ப்பை கொடுக்கிறது. உணவுக்குழாயின் உறையில் அமிலம் பட்டு இரைப்பை போல உணவுக்குழாயின் உறை தடித்து விடும். அதில் கட்டிகளும் வரும். இந்த நிலையிலும் லேஸர் மூலம் உணவுக் குழாயின் உறையை சுட்டு விட்டால் பொசுங்கிப் போய் புற்று நோய் வராமல் தடுக்க முடியும். இப்படி நெஞ்செரிச்சலிலிருந்து விடுபட மட்டுமில்லாமல் மேலும் பாதிப்பை உணர்ந்து புற்றுநோய்க்கு ஆளாகாமல் காப்பாற்றிக் கொள்ள மருத்துவ உலகில் உருவாகியுள்ள நவீன சிகிச்சை முறைகள் கை கொடுக்கின்றன.

எந்த பாதிப்பையும் ஆரம்ப நிலையில் முளையிலேயே கிள்ளி எறிவது போல் நீக்குவதும், பாதிப்பிலிருந்து விடுபடுவதும் சுலபம். அதில்லாமல் பிரச்சினையை வளரவிட்டால் தள்ளிப் போய் முற்றவிட்டால் போராடுவது நோயாளி மட்டுமல்ல. காப்பாற்றத் துடிக்கும் மருத்துவரும் அவர் குழுவினரும்தான் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் ராஜ்குமார்.

நன்றி http://www.amarkkalam.net

அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட



உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் “கேஸ்டிரைடிஸ்” என அழைக்கப்படும் இரைப்பையில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம்.

அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவலைப்படும் போதோ அல்லது பொறாமைப்படும் போதோ கூட மூளையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் அல்சர் உண்டாகிறது.

மேலும் அல்சர் உருவாக சில கிருமிகளும் காரணமாக உள்ளன என்கிறது மருத்துவ உலகம். அது ஆன்ட்ரல் கேஸ்டிரைடிஸ். வழக்கமாக வயிற்றில் சுரக்கும் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது வலி குறையும். மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடும் போது மீண்டும் வலி ஏற்படுகிறது. அல்சர் கிருமியை ஒழிப்பதற்கான மாத்திரை தான் அல்சர் பிரச்னையை முழுமையாகத் தீர்க்கும்.

தலைவலி உள்ளிட்ட உடல் வலிக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி கடைகளில் வாங்கி சாப்பிடும் தவறான மருந்துகளின் காரணமாகவும் அல்சர் வர வாய்ப்புள்ளது. அப்படி அல்சர் வந்த பின்னர் அது பல தொந்தரவுகளை உண்டாக்குகிறது. மேல் மற்றும் நடுவயிறு, மார்பெலும்பின் பின்புறம் எரிவது போன்ற வலியினை ஏற்படுத்தும். பசியின் போது வலிக்கும். குமட்டல் போன்ற அறிகுறியையும் ஏற்படுத்தும்.

இதனால் வயிறு உப்பியது போலத் தோன்றி ஏப்பத்தை உருவாக்கும். வயிறு காலியாக இருக்கும் போது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அல்சர் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். இது போன்ற தொல்லைகள் சாப்பிட்ட பின்னர் மறைந்து மறுபடியும் உங்களைத் தொல்லை செய்யும். எப்படித் தடுக்கலாம்?

தினமும் திட்டமிட்டு தடுமாற்றம் இன்றி வேலைகளை செய்து முடிக்கவும். சாப்பாட்டில் காரம் குறைக்கவும். அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் என்பது போல் தள்ளிப் போடவும். அப்படியே சாப்பிட நேர்ந்தாலும் மசாலா பொருட்களைக் குறைத்துக் கொள்ளலாம். வலி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி தொடர்ந்து உபயோகிப்பதைத் தவிர்க்கவும். காபின் கலந்த உணவுகள் மற்றும் பானங்களுக்கு தடா போடவும்.

புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தி விடலாம். வயிற்றை நீண்ட நேரம் காலியாக வைக்காமல் அவ்வப்போது குறைந்த அளவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். முன் எச்சரிக்கையாக இருந்தால் அல்சர் உருவாவதை தடுக்கலாம். அப்படியே வந்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மூலிகைகளைப் போல செயல்பட்டு வயிற்றுப் புண்ணை ஆற்றும் வித்தை கீரைகளுக்கும் உண்டு. மணத்தக்காளி, வெந்தயக் கீரை அல்லது அகத்தி இதில் ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் கீரை சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.

இதே கீரை வகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம். பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.

மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பாட்டி வைத்தியம் அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.

அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.

ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.



நன்றி: http://www.amarkkalam.net

அல்சர் பிரச்சனையை சரிசெய்யும் உணவுகள்!!!

அல்சர் என்பது சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால், இரைப்பையில் செரிமானத்திற்காக சுரக்கப்படும் அமிலமானது அதிகரித்து, இரைப்பை மற்றும் உணவுக்குழலை அரித்து, புண்ணாக்குவதோடு, எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் இந்த அல்சரை எச். பைலோரி என்னும் பாக்டீரியாவும் உண்டு பண்ணும். இத்தகைய அல்சர் வந்தால், கடுமையான வயிற்று வலியுடன், வாந்தி, செரிமானமின்மை, சீரற்ற குடலியக்கம், நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படும்.

இந்த எச். பைலோரி என்னும் பாக்டீரியா செரிமான பாதையை மெல்லியதாக்கி, பலவீனமடைய செய்து, வயிற்றையே பெரிய பாதிப்புக்குள்ளாக்கிவிடும். நிறைய மக்கள் இந்த அல்சர் பிரச்சனையை குணமாக்குவதற்கு ஆன்டி-பயாட்டிக்குகளை எடுத்துக் கொள்வார்கள். இருப்பினும், அல்சரை குணப்படுத்துவதற்கு இயற்றை வைத்தியத்தை விட சிறந்தது எதுவும் கிடையாது. அதிலும் உணவுகள் மூலம் குணப்படுத்த முடியாதது எதுவும் இல்லை.

ஆம், ஒருசில உணவுகளில் அல்சரை குணப்படுத்தும் இயற்கையான ஆன்டி-பயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. ஆகவே அத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், அல்சரை எளிதில் குணப்படுத்த முடியும். இப்போது அல்சரை குணப்படுத்தும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பின்பற்றி வந்தால், அல்சர் பிரச்சனையைப் போக்கலாம்.
 
தேன் 
தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இதனை உணவில் சேர்த்து வந்தால், அல்சரை உண்டு பண்ணும் எச். பைலோரி பாக்டீரியாவை அழித்து, அல்சரை குணமாக்கலாம்.  
 
தயிர் 
தயிரில் உள்ள இயற்கையான பாக்டீரியா, வயிற்றில் அல்சரை உருவாக்கும் கிருமிகளை அழித்து, கடுமையான வலியுடன் கூடிய அல்சரில் இருந்து நிவாரணம் தரும். ஆகவே அல்சர் இருந்தால், தயிரை அதிகம் சாப்பிட்டால், விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம்.
 
 செரில்
செரிலில் வயிற்று அல்சரை குணப்படுத்தக்கூடிய காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக இயங்கி, செரிமானப் பிரச்சனை நீங்கும்.

முட்டைகோஸ்
முட்டைகோஸில் அமினோ அமிலங்கள், எல் குளூட்டமைன் மற்றும் ஜெபர்னேட் போன்ற அல்சரை சரிசெய்யும் பொருட்கள் அதிகம் உள்ளது. இவை அல்சரை குணமாக்குவதோடு, செரிமான மண்டலத்தை சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, இனமேல் அல்சர் வராமல் தடுக்கும். 
 
வாழை
வாழையில் அல்சரை குணமாக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.
 
கைக்குத்தல் அரிசிகைக்குத்தல் அரிசியில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் வளமாக நிறைந்துள்ளது. எனவே அல்சர் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிட்டு வந்தால், அல்சர் குணமாவதோடு, அதில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால், உடலியக்கங்கள் அனைத்தும் சீராக இயங்கும். 
 
சீஸ்
சீஸில் எண்ணற்ற ஆரோக்கியமாக பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுப் பொருளை அதிகம் சாப்பிட்டால், அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து, அல்சர் எளிதில் குணமாகிவிடும்.

பூண்டு
பூண்டுகளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை உணவில் சேர்க்க உடலில் நோயை ஏற்படுத்தும் அனைத்து பாக்டீரியாக்களும் அழிந்துவிடும். குறிப்பாக அல்சர் உள்ளவர்கள், பூண்டுகளை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

சிட்ரஸ் பழங்களை தவிர்க்கவும்
பழங்களில் அசிட்டிக் பொருள் இல்லாத பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், வயிற்று அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நீங்கிவிடும். முக்கியமாக, அசிட்டிக் பழங்களான ஆரஞ்சு, தக்காளி அல்லது அன்னாசி போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.  
 
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்குகள சாப்பிட்டாலும், அல்சரை சரிசெய்ய முடியும். ஆனால் அந்த உருளைக்கிழங்கை ப்ரெஞ்சு ப்ரைஸ் அல்லது எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அவை அல்சரை அதிகரித்து, பெரும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.

http://www.amarkkalam.net

Sunday, July 21, 2013

உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க! ! ! !

உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க! ! ! !

முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம்.

ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது. நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில்இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலாவருவோம்.

அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும்.

நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியது தான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.

http://download.cnet.com/Who-Is-On-My-Wifi/3000-18508_4-75179802.html


நன்றி முக்கிய செய்திகள் .காம் 

தர்மம் செய்வதால் நம்முடைய செல்வம் குறைந்துவிடுமா?:-

நாம் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் மூலம் நம்முடைய செல்வம் குறைந்துவிடுகிறது என சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் வழங்கும் தர்மம் மறுமையில் அல்லாஹ்வால் பல மடங்கு உயர்த்தப்பட்டு மிகப் பெரிய கூலியாக வழங்கப்படும். அல்லாஹ் தன் திருமறையில்,
 

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 2:261)
ஆக, ஒவ்வொரு முறையும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போது 1×7×100=700 மடங்கு நன்மைகளை அல்லாஹ்தஆலா நமக்கு அள்ளித் தருகிறான்.
 

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீத்தம் பழத்தின் மதிப்புக்கு தர்மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை; அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலது கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரை குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைப்போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹூரைரா(ரலி); நூல்: புகாரி
 

மேலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான தர்மங்கள் செய்பவருக்கான உவமானம்:
 

“அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன் 2:265)
 

நம்முடைய செல்வத்தை விசாலப்படுத்த வேண்டுமென்றால், தான தர்மங்கள் செய்ய வேண்டும் என குர்ஆனும் ஹதீஸும் நமக்கு அறிவுறுத்துகின்றன‌. இதை வலுப்படுத்தும் வகையில், அல்லாஹுத்தஆலா நம்முடைய செலவினங்களை தான் கவனித்துக்கொள்வதாக ரசூல்(ஸல்) கூறும் இன்னொரு ஹதீஸ்:
 

ஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்)என்று அல்லாஹ் சொல்வதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); நூல்:புகாரி
ஆக, நாம் ஸதகா செய்யும்போது இறைவனும் நமக்கு பொருளாதாரத்தை வழங்குவான். கொடுக்க கொடுக்க நம் செல்வத்தை நாம் அறியாத புறத்திலிருந்து இறைவன் வளர்த்துதான் கொடுப்பானே தவிர, நமது செல்வம் தான தர்மங்களால் குறைவதில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தான தர்மங்களை வாரிவழங்குதல்:-
 

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்,
“நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை)ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் – ரமலான் முடியும்வரை – நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.” நூல்:புகாரி
 

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே! நன்மைகள் பெருக்கிக் கொடுக்கப்படும் இந்த ரமலானிலும், வருஷத்தின் மற்ற நாட்களிலும் நாம் அல்லாஹ்வின் பாதையில் அதிகமதிகம் செலவு செய்து அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் நன்மைகளை அடைந்துக் கொள்ள முழுமையாக முயற்சி செய்வோமாக!

நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல் பின்னணியில் அரசா? - அதிர்ச்சித் தகவல்!

நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல் பின்னணியில் அரசா? - அதிர்ச்சித் தகவல்!

புது டெல்லி : இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ மற்றும் ஐபி-க்கு இடையே நடைபெறும் மோதலில் புதிய திருப்பமாக நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் மும்பை 26/11 தாக்குதல் ஆகியவற்றை இந்திய அரசே நடத்தியது என்று சிபிஐ அதிகாரி தெரிவித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அரசின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உள்துறை அமைச்சகத்தின் செயலர் மணி, இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தாக்குதலும் இந்திய அரசாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று இஷ்ரத் ஜஹான் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு புலனாய்வு அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டங்களை எதிர்ப்பின்றி கொண்டு வரவே மத்திய அரசு இத்தகைய தாக்குதல்களை நிறைவேற்றியதாக சதீஷ் வர்மா கூறியதாக மணி கூறியுள்ளார். நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற (13.12.2001)ஒரு சில தினங்களிலேயே பொடா சட்டமும் மும்பை தாக்குதல் (26.11.2008) நடைபெற்ற உடன் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டமும் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இஷ்ரத் ஜஹானுடன் கொல்லப்பட்ட மூவரும் லஷ்கர் தீவிரவாதிகள் எனும் ஐபி-யின் அறிக்கை பொய்யானது என்று சதீஷ் சர்மா கருதியதாகவும் மணி கூறினார். இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் தொடர்பாக உள்துறை தயாரித்த அறிக்கையானது சர்ச்சைக்குரிய ஐபி அதிகாரி ராஜேந்தர் குமார் என்பவரால் தயாரிக்கப்பட்டது என்று சர்மா கருதியதாகவும் மணி தன் உயர் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக ஐபி அதிகாரி ராஜேந்தர் குமாருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர முடிவானதும், உள்துறை அமைச்சகத்தின் தலையீட்டால் அம்முயற்சி நிறுத்தப்பட்டது கவனிக்கத்தக்கது. குஜராத் மாநிலத்தைச் சார்ந்த ஐபிஎஸ் கேடர் அதிகாரியான சதீஷ் வர்மா சிபிஐ சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து நீக்கப்பட்டு ஜுனுகாத் காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக தற்போது இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது....!

நன்றி - இந்நேரம்

வெளிநாட்டு படங்களை பார்த்து காப்பிஅடித்து எடுக்கப்பட் டமில்சினிமாக்களின் பட்டியல்:

வெளிநாட்டு படங்களை பார்த்து காப்பிஅடித்து எடுக்கப்பட்
டமில்சினிமாக்களின் பட்டியல்:

21 grams © # சர்வம்
Bangkok Dangerous © # பட்டியல்
Network © # வேகம்
Brewster’s Millions © # அருணாசலம்
Hardcore © # மகாநதி
Planes Trains and Automobiles © #அன்பேசிவம்
What bob can do © # தெனாலி
Very Bad things © # பஞ்சதந்திரம்
Barefoot in the park © #அலைபாயுதே
Hot bubblegum and American Pie ©# பாய்ஸ்
Butch Cassidy & The Sundance Kid ©#திருடாதிருடா
Sense and Sensibility © #கண்டுகொண்டேன்கண்டுகொண்டேன்
Shop around the corner © #காதல்கோட்டை
Big © # நியூ
Sliding Doors © # 12B
Fear © # காதல்கொண்டேன்
Too Much © # காதலாகாதலா
She Devil © # சதிலீலாவதி
Corsican Brothers © #அபூர்வசகோதரர்கள்
Life of David Gale © # விருமாண்டி.

இக்கட்டான நிலையில் நோக்கியா!



ஒரு காலத்தில் எப்படி இருந்த நிறுவனம், இப்போது இப்படி ஆகிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு நொக்கியா தள்ளப்பட்டுள்ளது.எங்கு பார்த்தாலும் செம்சுங், அப்பிள் பற்றியே பேசப்படுகின்றது. இதுமட்டுமன்றி நொக்கியாவின் கோட்டையான வளரும் சந்தைகளிலும் அண்ட்ரோய்ட் வரவேற்பைப் பெறத்தொடங்கியுள்ளது. அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகள் குறைந்த விலைகளிலும் கிடைக்கின்றது அதனுடன் இயக்குவதற்கும் இலகுவாக உள்ளது. இவை நொக்கியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. விண்டோஸ் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகளை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ள போதிலும் அது எந்தளவு தூரத்திற்கு பாவனையாளர்களின் உபயோகத்திற்கு இலகுவாக இருக்கப்போகின்றது என்பது சற்று சந்தேகத்துக்குரியது.


இந்நிலையில் இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டுப் பகுதியின் நிதியியல் அறிக்கைகளை நொக்கியா வெளியிட்டுள்ளது. எதிர்ப்பார்க்கப்பட்டதைப் போல இரண்டாம் காலாண்டுப் பகுதியிலும் நொக்கியாவால் பெரியளவில் சோபிக்க முடியாமல் போயுள்ளது. இரண்டாம் காலாண்டுப் பகுதியில் சுமார் 7.4 மில்லியன் லுமியா போன்களை நொக்கியாவால் விற்பனை செய்ய முடிந்துள்ளதுடன் இது முதலாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது 32 % அதிகரிப்பாகும். லுமியா வரிசை போன்களின் விற்பனை அதிகரித்துள்ள போதும் மொத்த நொக்கியா போன்களின் விற்பனை குறைவடைந்துள்ளதுடன் இதனால் 115 மில்லியன் யூரோக்கள் நட்டமேற்பட்டுள்ளது.

எனினும் லுமியா விண்டோஸ் போன்களின் உதவியுடன் நொக்கியாவின் டிவைஸ் மற்றும் சேர்விஸ் பிரிவானது 2.7 பில்லியன் யூரோக்களை பெற்றுக்கொண்டுள்ளது இது கடந்த வருடத்துடன் இதே காலாண்டுப்பகுதியுடன் ஒப்பிடும் போது 24 % வீழ்ச்சியாகும்.

குறைந்த விலை 'ஆஷா 501' போனானது மொத்த விற்பனையில் நம்பிக்கையளிப்பதாக நொக்கியா தெரிவிக்கின்றது. அதேபோல் நொக்கியாவின் லுமியா 520 அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா போன்ற நாடுகளில் நல்லவரவேற்பைப் பெற்றுள்ளதாக நொக்கியா தெரிவிக்கின்றது.இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் நொக்கியா குழுமத்தின் மொத்த விற்பனையின் மூலம் 11.5 பில்லியன் யூரோக்கள் வருவாயாக வந்துள்ளது எனினும் இதேகாலப்பகுதியை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது 22% வீழ்ச்சியாகும்.

கடந்த வருடம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டமடைந்ததாக நொக்கியா அறிவித்திருந்ததுடன் லுமியா போன்களின் விற்பனை அதிகரித்திருந்தகாவும் தெரிவித்தது. நட்டத்தை சமாளிக்கும் பொருட்டு நொக்கியா நிறுவனத்தில் 440 பேர் தமது தொழிலை இழக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நன்றி அமர்க்களம் தளம் 

வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!

தோல்வியில் துவண்டு விடாதீர்கள், தன்னம்பிக்கை இழந்து விடாதீர்கள், முயற்சியை நிறுத்தி விடாதீர்கள் என்று எல்லாம் பலர் அறிவுரை சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு யாரும் அதிகம் அறிவுரை சொல்வதில்லை. காரணம் வெற்றி பெற்றவர்கள் அறிவு மிக்கவர்கள், நல்ல உழைப்பாளிகள், எல்லாம் தெரிந்தவர்கள் என்ற அபிப்பிராயம் பலர் மனதிலும் இருப்பது தான். அதெல்லாம் மற்றவர்கள் மனதில் இருந்தால் பரவாயில்லை. வெற்றி பெற்றவர்கள் மனதிலேயே அந்த அபிப்பிராயம் உறுதியாகத் தோன்றும் போது அது எதிர்கால ஆபத்திற்கு அஸ்திவாரம் போடுகிறது.

வெற்றி எப்பேர்ப்பட்டவரையும் ஏமாற்ற வல்லது. அது மூன்று குணாதிசயங்களை வெற்றியாளர்களிடம் ஏற்படுத்த வல்லது.

1) கர்வம்

2) அலட்சியம்

3) எந்த அறிவுரையும் கேளாமை


முதலாவதாக, வெற்றி ஒருவரிடம் “என்னை மிஞ்ச ஆளில்லை” என்ற கர்வத்தை ஏற்படுத்தலாம். கர்வத்தைப் போல வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் ஒரு குணாதிசயம் வேறொன்று இருக்க முடியாது. புராணங்களில் அரக்கர்கள் கடவுளிடம் வரம் பெற்று பெரும் சக்தி பெறுவார்கள். பெரும் சக்தி பெற்ற அவர்களது கர்வம் அவர்களை சும்மா இருக்க விடாது. பலரைத் துன்புறுத்த முனைவார்கள், எங்களை எதிர்க்க யாரிருக்கிறார்கள் என்று அறைகூவல் விடுப்பார்கள். முடிவு அவர்கள் அழிவு தான் என்பதை நாம் புராணங்களில் படித்து இருக்கிறோம்.


புராணங்களில் மட்டுமல்லாமல் வரலாறிலும் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களைப் பார்க்க முடியும். ஹிட்லர், முசோலினி, நெப்போலியன் போன்றவர்கள் பெற்ற ஆரம்ப வெற்றிகள் சாதாரணமானதல்ல. அது அவர்கள் மனதில் தாங்கள் யாராலும் வெல்ல முடியாதவர்கள் என்ற கர்வத்தை ஏற்படுத்தியது. கர்வம் ஒரு மனிதனை உள்ளதை உள்ளது போல் பார்க்க விடாது. அறிவுக் கண்ணை அது அழகாக மறைக்க வல்லது. நன்மைகளை செய்ய கர்வம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. தான் செய்வதே சரி என்கிற எண்ணம் ஒருவரை எதையும் சீர்தூக்கிப் பார்க்க வைப்பதில்லை. அதன் விளைவு அவர்களை பெரும் வீழ்ச்சி காண வைக்கிறது.

உலக வரைபடத்தில் உகாண்டா என்ற ஆப்பிரிக்க நாட்டை சிரமத்திற்கு இடையே தான் கண்டு பிடிக்க முடியும். அத்தனை சிறிய நாட்டில் சர்வாதிகாரியாக இருந்த இடி அமீன் சென்ற நூற்றாண்டில் தன்னை கிட்டத்தட்ட கடவுளாகவே நினைத்துக் கொண்டு நடந்து கொண்ட விதத்தை வரலாற்றின் பார்வையாளர்கள் மறந்திருக்க முடியாது.

இன்றைய கால கட்டத்திலும் அரசியலைக் கூர்ந்து பார்ப்பவர்களுக்கு இதற்கு எத்தனையோ சான்றுகளைக் காண முடியும். சில இமாலய வெற்றி பெற்றவர்கள் தங்களை நிரந்தர தலைவர்களாக தாங்களாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு அடுத்த தேர்தலில் காணாமல் போவது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது அல்லவா?

இரண்டாவதாக, வெற்றி அலட்சியத்தையும் உண்டு பண்ணக் கூடியது. அதுவும் தொடர்ந்து சில வெற்றிகள் கிடைத்து விட்டால் தங்களை ஒரு அபூர்வ மனிதராக ஒருவர் நினைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம். இனி எனக்கு தோல்வியே கிடைக்க முடியாது என்று ஒருவன் நினைக்க ஆரம்பிக்கும் போது அவனுடைய முயற்சிகள் தரத்திலும் அளவிலும் குறைய ஆரம்பிக்கின்றன.

சிறு வயதில் நாம் படித்த முயல், ஆமைக் கதை இந்த உண்மையை மிக அழகாகச் சொல்வது நினைவிருக்கலாம். முயலை எக்காலத்திலும் ஆமை வெல்ல முடியாது என்று நாம் நினைத்தாலும் முயல் தூங்கி விடுமானால், ஆமை விடாமல் முயற்சி செய்து வருமானால் ஆமை வெற்றி பெறுவது நடக்கக் கூடியதே. பள்ளி, கல்லூரிகளில் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்கி பிரகாசித்து நிஜ வாழ்க்கையில் கோட்டை விட்ட எத்தனையோ பேரை நான் அறிவேன். அதே போல் படிக்கையில் சாதாரணமான மதிப்பெண்களே பெற்று வந்த எத்தனையோ பேர் தங்கள் திறமைக் குறைவை உணர்ந்து உழைப்பால் அதை ஈடுகட்டி பின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதையும் நான் பார்த்திருக்கிறேன். முன்னவர்களின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தோல்விக்குக் காரணம் வெற்றிகளால் அவர்கள் அடைந்திருந்த அலட்சியமே என்ற பதில் தான் கிடைத்தது.

இதை விடப் பெரிய விஷயங்களில் எல்லாம் வெற்றி பெற்றிருக்கிறேன், இது என் திறமைக்கு முன் எம்மாத்திரம் என்ற எண்ணத்தோடு இறங்கி சிறிய விஷயங்களில் தோற்று மூக்குடைந்த மேதாவிகளை நாம் அனைவரும் பார்த்திருக்க முடியும்.

மூன்றாவதாக, வெற்றி பெற்றவர்களுக்கு யாருடைய அறிவுரையும் தேவை இல்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்க வாய்ப்பு உண்டு. ஒருவன் எத்தனை தான் புத்திசாலியானாலும் அவன் அறிந்திராதவையும் எத்தனையோ இருக்கக் கூடும். அந்த அறிந்திராத விஷயங்கள் அவனுடைய எதிர்கால வெற்றிக்கு முக்கியமானவையாக இருக்கக் கூடும். ஆனால் எல்லாம் எனக்குத் தெரியும், தெரியாமலா இத்தனை வெற்றிகள் கண்டிருக்கிறேன் என்று நினைக்கிற சில வெற்றியாளர்கள் அறிவுரை கூற வருபவர்களை ஏளனமாகப் பார்க்க முற்படுகிறார்கள். அவர்களுக்கு அறிவுரை வேம்பாகக் கசக்கிறது.

எனவே அவர்கள் தங்களைச் சுற்று துதிபாடிகள் இருப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். உள்ளதை உள்ளபடி சொல்பவர்களை அவர்கள் ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள். யாரானாலும் சரி மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறதா என்று கூட சிந்திக்க மறுக்கும் போது, புதியனவற்றை அறிந்து கொள்ளத் தவறும் போது தோற்கவே ஆரம்பிக்கிறார்கள்.

எனவே தோல்வி அடையும் சமயத்தை விட அதிகமாய் வெற்றி அடையும் சமயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். தோல்வி அடையும் போது இருப்பதை விட அதிகமாய் வெற்றி அடைகையில் அடக்கமாய் இருங்கள். கர்வமும், அலட்சியமும், அடுத்தவர்களைத் துச்சமாய் நினைக்கும் தன்மையும் உங்களை அண்ட விடாதீர்கள். அப்படி கவனமாய் இருந்தால் மட்டுமே வெற்றியை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவதும் அப்படி இருக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்.

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன் 
அமர்க்களம் தளம்

இந்திய நிதி அமைப்பில் இருக்கும் வரிகள்!!

வரிகள் என்பது முன்வரையற்ற விகிதங்கள் மற்றும் சீரான இடைவெளியில் அரசாங்கத்துக்கு நாம் கட்டும் பணம். இந்த வரிப்பணம் தான் அரசாங்கத்தின் முக்கியமான வருவாய். இதனை வைத்து வரி கட்டுபவர்களுக்கு அரசாங்கம் பல வகையான சலுகைகளை அளிக்கின்றன. முக்கியமாக இரண்டு வகை வரிகள் உள்ளது; ஒன்று நேர்முக வரி, இன்னொன்று மறைமுக வரி. நேர்முக வரியை சென்ட்ரல் போர்டு ஆப் டைரக்ட் டாக்சஸ் (CBDT) என்ற குழுவும், மறைமுக வரியை சென்ட்ரல் போர்டு ஆப் எக்ஸ்சைஸ் அண்ட் கஸ்டம்ஸ் (CBEC) என்ற குழுவும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.


நேர்முக வரிகள்

நேர்முக வரிகள் என்பது வரி கட்டுபவரின் தனிப்பட்ட கடன் பொறுப்பாகும். இந்த பணம் அவர்களிடம் இருந்து நேரடியாக வசூல் செய்யப்படும். மேலும் யார் மீது வரி விதிக்கப்பட்டிருக்கிறதோ அவர் தான் இந்த வரியை கட்ட வேண்டும். இந்த நேர்முக வரிகளின் பிரிவுகளை பார்க்கலாம்:


வருமான வரி

வருமான வரி என்பது முக்கியமான நேர்முக வரியாகும். இதனை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. இதனை டி.டி.எஸ் (TDS) என்றும் சுருக்கமாக அழைப்பார்கள். குறிப்பிட்ட அளவிற்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டியிருக்கும்.


சொத்து வரி

நம் நிகர சொத்து மதிப்பு 30 லட்சங்களை தாண்டினால், 30 லட்சத்திற்கு மேலான பணத்திற்கு 1% விகிதத்தில் வரி கட்ட வேண்டும். குறிப்பு - வருடத்திற்கு ஒரு கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு கூடுதல் கட்டணமாக 10% விகிதம் வரி வசூலிக்கப்படும் என்று 2013-2014 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.


மூலதனலாப வரி

உங்கள் சொத்து அல்லது பங்குகளை விற்கும் போது கிடைக்கும் மூலதன லாபத்திற்கும், வரி விதிக்கப்படுகிறது. நீண்ட கால மூலதன லாபத்திற்கும் சிறிய கால மூலதன லாபத்திற்கும் வரி விகிதங்கள் மாறுபடும்.


கொடை வரி/வாரிசு உரிமை வரி


50,000 ரூபாய்க்கு மேல் ஒரு தனி நபரிடம் இருந்தோ அல்லது எச்யுஎஃப்-விடம் (HUF)இருந்தோ ஒருவர் அன்பளிப்பு பெற்றிருந்தால் கோடை வரி செலுத்த வேண்டும். அனால் இரத்த சொந்தங்களிடம் இருந்து பெற்ற பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்யாண பரிசுகள் மற்றும் வாரிசுகளுக்கு வந்தடையும் பணத்திற்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வாரிசு உரிமை வரி என்று முன்பு இருந்தாலும் அதை அரசாங்கம் திருப்பி பெற்று விட்டது.



கார்பரேட் வரி 

இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி விகிதத்தை பொருத்து அவர்களின் வருமானத்தின் மீது வரி வதிக்கப்படும். அரசாங்கத்தின் வருவாய்க்கு இதுவும் முக்கிய மூலமாக விளங்குகிறது.

மறைமுக வரிகள்

நேர்முக வரிகளை போல் அல்லாமல், மறைமுக வரிகளின் தாக்கமும் வரி விழுநிலையும் ஒருவரையே சாராமல் பல நபர்கள் மேல் விழும்.

இந்த வரிகள் பல வகையான நபர்களிடம் பெறப்பட்டாலும் இதனை கட்டும் பொறுப்பு இதனை வசூல் செய்பவரிடம் இருக்கிறது. வரி கட்டுபவர்கள் மறைமுக வரியை தங்களின் வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொண்டு அரசாங்கத்திடம் கட்டி விடுகின்றனர்.

உதாரணதிற்கு நாம் எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு வாட் (VAT) கட்டுகிறோம் அல்லவா? அதே போல் ஹோட்டலில் உண்ணும் போது சேவை வரி என்று கட்டுகிறோம் அல்லவா? இந்த பணம் எல்லாம் அரசாங்கத்திடம் சேவை அளிப்பவர்களின் மூலம் போய் சேரும். இவ்வகை மறைமுக வரிகளை பற்றி விலாவரியாக இப்போது பார்க்கலாம்


சேவை வரி

வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் பணத்தில் சில விகிதம் சேவை வரிக்காக வசூலிக்கப்படும். குத்தகைக்கு விடுதல், இணையதளம், போக்குவரத்து போன்றவைகளுக்கு சேவை வரிகள் வசூலிக்கப்படும்.


சுங்க வரி

சுங்க வரி என்ற மறைமுக வரி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும் விதிக்கப்படும் வரியாகும். பல வகையான பொருட்கள் மற்றும் துறைகளை பொருத்து வரி விகிதம் மாறுபடும். குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதி/இறக்குமதியை ஊக்கப்படுத்த இந்த விகிதத்தை ஒவ்வொரு அரசாங்கமும் மாற்றிக் கொண்டே இருக்கும்.

 
எக்ஸ்சைஸ் வரி

எக்ஸ்சைஸ் வரி (Excise Duty)எனப்படும் மறைமுக வரி, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, நம் நாட்டின் பயன்பாட்டிற்கு உபயோகப்படும் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியாகும். சுங்க வரியை போல் இதற்கும் பல விதிமுறைகள் உள்ளன. இதுவும் ஒவ்வொரு அரசாங்கத்தால் மாறிக் கொண்டே தான் இருக்கும்.

 
விற்பனை வரி மற்றும் வாட் (VAT)



இந்திய சந்தையில் பொருட்களை வாங்கவும் விற்கவும் விதிக்கபடும் வரிதான் விற்பனை வரி. ஒரு வாடிக்கையாளராக சந்தையில் இருந்து நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் விற்பனை வரி கட்ட வேண்டும். இப்போது விற்பனை வரியுடன் சேர்ந்து மதிப்புக் கூட்டு வரி எனப்படும் VAT-டும் வசூலிக்கப்படுகிறது. இது நாட்டில் ஒருசீரான முறையை கொண்டு வருவதற்கு விதிக்கப்படும் வரியாகும்.

பங்கு பரிமாற்ற வரி (STT)

 பங்கு பரிமாற்ற வரி என்பது பங்குச்சந்தையின் மூலம் பங்குகளை வாங்குவதாலும் விற்பதாலும் விதிக்கப்படும் வரியாகும். பங்குகள், டிரைவேடிவ்ஸ், மியுச்சுவல் பண்ட் போன்ற நிதி சார்ந்த பல வகையான பொருட்களை பரிமாற்றுவதால் இந்த வரி வசூலிக்கப்படும்.
 
நன்றி அமர்க்களம் தளம்