Digital Time and Date

Welcome Note

Saturday, August 11, 2012

ஒன்று கூடிய எதிரிகள்...!!! அதிர்ந்த அமெரிக்கா...!!!


(இந்த இரு வீரர்களும் ஒன்று சேர்ந்தது, வரக்கூடிய இளைய சமுதாயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை வெளியில் காடுவதர்க்கும், அவர்களிடம் இருக்கும் வீட்ட பவரை துடைத்தெறியவும், மேலும் அமெரிக்காவிற்கு மாமா வேலை பார்க்கும் எத்துணையோ இஸ்லாமிய நாடுகளுக்கு ஓர் பாடத்தை கற்பிக்கத்தான் இந்த இரு சிங்கங்களின் சந்திப்பு என்று கூட சொல்லலாம

்.)


எதிரிகள் பிரிந்து இருந்தால் பரவாயில்லை.. ஒன்று கூடினால் என்ன நடக்கும்? பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்...
ஆம், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் முன்னாள் கியூபா அதிபரான பிடல் காஸ்ட்ரோவும், அமெரிக்கர்களின் புதிய எதிரி என வர்ணிக்கப்படும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நியாதுக்கும் இடையிலான சந்திப்பே அது.
அமெரிக்காவின் இரண்டு பெரிய பகைவர்களின் சந்திப்பு அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு சிங்கங்களின் சந்திப்பும் இந்த வாரம் கரிபியன் நாட்டில் தான் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஈரானில் அணு ஆயுத திட்டங்களை முன்னெடுத்து வரும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நியாத் கியூப முன்னாள் அதிபரான பிடல் காஸ்ரோ உடனான சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
இரண்டு மணி நேரங்கள் இடம்பெற்ற சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஈரான் மற்றும் கியூபா உடனான நட்புறவு ஆரம்பத்திலிருந்து சிறப்பாக உள்ளன.
உண்மையில் நாங்கள் ஒரே நோக்கத்துக்காக தொடர்ந்தும் போராடுவோம். நாங்கள் ஏராளமான விஷயங்கள் பற்றி கலந்துரையாடினோம். சந்திப்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எப்போதும் அதே நட்புணர்வுடன் இருப்போம்.
கியூபாவின் தற்போதைய அதிபரான பிடல் கஸ்ரோவின் சகோதரரான ராகுல் காஸ்ரோவையும் ஈரான் அதிபர் சந்தித்து கலந்துரையாடினார்.
இவர்களின் சந்திப்பு அமெரிக்காவை கவலை கொள்ள வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்ஞான ஆய்வு !!!

அல்லாஹ்வின் தூதர் மூஸா கடலை இரண்டாக பிளந்தார் என்று அல் குர்ஆன் மற்றும் பைபிள் குறிபிடுகின்றது இந்த நிகழ்வை விஞ்ஞான பூர்வமாக அளவீடுகளை கொண்டு ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு நிறுவனமான National Center for Atmospheric Research -NCAR மற்றும் அமெரிக்க பல்கலை கழகமான the University of Colorado ஆகியன இந்த சம்பவம் விஞ்ஞான பூர்வமா சாத்தியமானது என்று தெரிவி
த்துள்ளது இவற்றை கம்ப்யூட்டர் கிராபிக் மூலம் விளக்கியுள்ளனர் இதில் இவர்கள் 12 மணித்தியாலங்கள் 63 மைல்கள் வேகத்தில் வீசும் காற்று இரண்டு மீட்டர் ஆழமுள்ள தண்ணீரை புறம் தள்ளகூடியது என்றும் நான்கு மணித்தியாலங்களுக்கு பாதையையும் ஏற்படுத்தும் என்பதை காட்டுகின்றனர் இந்த ஆய்வுக்கு மாற்று கருத்துகள் இன்னும் வெளிவரவில்லை



மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்; இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

இந்த நேரத்தில் தானா? சற்று முன்வரை திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய். இன்னும் குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்” அல் குர்ஆன் 10: 90,91,92.

smoking (cigarettes, pipes, etc.) Haram? |═══✦ ✦════| Can we Smoke before or after Fasting ? |════✦


* Smoking is a killer: causes lung-cancer, lung-tuberculosis and heart diseases.
WAT QURAAN N HADITH SAYS ABT IT:

1.Allah says: And do not kill yourselves. (Quran 4/29)

2.He also says: And do not throw yourselves into destruction. (Quran 2/195)

These verses are sufficient to make smoking Haram.

3.* Smoking is a wasting of wealth. Allah says: ...But spend not wastefully (your wealth) in the manner of a spendthrift, Verily, spendthrifts are brothers of the devils, and the Devil (Satan) is ever ungrateful to his Lord. (Quran 17/26-27)

4.* The smoker is unjust to himself as well as his family by burning away his money and his chest!
* The smoker not only causes harm to himself, he/she also inflicts harms upon others around him/her.

The Prophet (p.b.u.h.) said: "There should be neither harming nor reciprocating harm." (Saheeh Al-Jami 7517)

* The smokers cause the spread of evil; they smoke openly and thus encourage others to do the same.
* The smoker smells bad! His car, home, clothes etc. carry the bad smell too.

CAN WE SMOKE IN RAMADHAN??
* The smokers dislike fasting and praying because they become impatient. They want to go for the next "round". The smoker becomes like an edict.

* Smokers will start his fasting with haram and end it will haram. How come his fasting will be accepted by Allah?
══════════════════════════
═══════════════
from the above, it is clear that smoking is evil and thus it is Haram (unlawful).

Seek Allah's help and don’t be enslaved to something that burns you and your money

யஃஜுஜ், மஃஜுஜ் என்றால் யார்?



உலகம் அழியக்கூடிய காலம் நெருங்கும் போது வெளிப்படக்கூடிய ஒரு கூட்டத்தினர் தான் யஃஜூஜ் மஃஜூஜ் ஆவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தினர் இனி மேல் தான் பிறந்து வருவார்கள் என்பதி
ல்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது. யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரயிலான வசனங்கள் கூறுகின்றன.
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.

(அல்குர்ஆன் 21:96)

யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்களுக்கு வழி திறக்கப்படும் என்பதை இந்த வசனமும் அறிவிக்கின்றது. இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் விளக்கியுள்ளனர்.

அப்போது அல்லாஹ் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியில் தண்ணீரைக் குடிப்பார்கள். பின்னால் வருபவர்களுக்குத் தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் இக்கூட்டத்தினால் முற்றுகையிடப்படுவார்கள். அன்று ஒரு மாட்டின் தலை இன்றைய நூறு தங்கக் காசுகளுக்குச் சமமாகத் தோன்றும் அளவுக்கு முற்றுகை நீடிக்கும். ஈஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். ஒரேயடியாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் தூர் மலையிலிருந்து கீழே இறங்குவார்கள். ஒரு ஜான் இடம் கூட மிச்சமில்லாமல் அவர்களின் உடல் பூமி முழுவதும் சிதறி நாற்றமெடுக்கும். அப்போது ஈஸா நபியவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள்.

அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பறவைகளை அனுப்புவான். அவை உடல்களைத் தூக்கிச் சென்று வீசி எறியும். பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். கூடாரமோ, மண் வீடுகளோ எதையும் விட்டு வைக்காமல் அவற்றின் மேல் மழை பொழியும். பூமியைக் கண்ணாடி போல் சுத்தமாக்கும்.

"பூமியே உனது பழங்களை முளைக்கச் செய்! உனது அபிவிருத்தியைத் திரும்பக் கொடு''என்று (இறைவனால்) பூமிக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு பெரும் கூட்டம் சாப்பிடும். அதன் தோல்களில் ஒரு கூட்டம் நிழல் பெறுவார்கள். பாலில் பரகத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் கறக்கப்படும் பால் ஒரு கோத்திரத்துக்குப் போதுமானதாக ஆகும். ஒரு ஆட்டில் கறக்கப்படும் பால் ஒரு குடும்பத்துக்குப் போதுமானதாக அமையும். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்புவான். அனைத்து முஸ்லிம்களின் உயிர்களையும் அது கைப்பற்றும். மிகவும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்கள் வாழும் போது தான் உலகம் அழியும் என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.

(நூல் : முஸ்லிம் 5228)

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறு வார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5228

அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.

நவீன கருவிகளையும், ஆகாய விமானங்களையும், தொலை நோக்கிக் கருவிகளையும் கண்டுபிடித்துள்ள காலகட்டத்தில் அப்படி ஒரு கூட்டம் அடைக்கப்பட்டிருந்தால் உலகத்திற்குத் தெரியாமல் இருக்குமா? செம்பு உருக்கி ஊற்றப்பட்டால் அதன் பளபளப்பை வைத்து இனம் காணலாமே என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். அந்தக் கேள்வி தவறானதாகும்.

மனிதனிடம் இத்தகைய நவீன சாதனங்கள் இருந்தாலும் அவை முழு அளவுக்கு இன்னமும் பயன்படுத்தப்படவில்லை. மிக உயரத்திலிருந்து கொண்டு பூமியைப் படம் பிடித்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறார்களே தவிர பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏன் ஒவ்வொரு ஏக்கரையும் கூட மனிதன் இந்தக் கருவிகள் மூலம் இதுவரை ஆராயவில்லை. பூமியிலேயே இருக்கும் சில பகுதிகளை இப்போதும் கூட கண்டுபிடித்ததாகச் செய்திகள் வருவதிலிருந்து இதை உணரலாம்.

இந்த மண்ணுலகில் மனிதனின் கால் படாத நிலப்பரப்புகள் ஏராளம் உள்ளன. ஆகாயத்தில் வட்டமடித்து சக்தி வாய்ந்த தொலைநோக்கிக் கருவிகள் மூலம் ஒவ்வொரு ஏக்கராக ஆராய முற்பட்டாலும் மரங்கள், காடுகள் போன்ற தடைகள் இல்லாவிட்டால் தான் பூமியில் உள்ளவர்களைப் பார்க்க முடியும். தடைகள் இருந்தால் அந்தக் காடுகளைத் தான் பார்க்க முடியும்.

காடுகளும், குகைகளும், தொலைநோக்கிக் கருவிகள் மூலம் பார்ப்பதைத் தடுத்து விடுகின்றன.

மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ, அல்லது குகைகளிலோ யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்தச் சாதனங்கள் மூலமும் அவர்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியாது.

செம்பு எனும் உலோகம் விரைவில் பாசி படிந்து பச்சை நிறத்துக்கு மாறி விடுவதால் அதன் பளபளப்பை வைத்தும் கண்டுபிடிக்க முடியாது. தொலைவிலிருந்து பார்க்கும் போதும், அருகிலிருந்து பார்க்கும் போதும் கூட மலைகளில் புல் வளர்ந்திருப்பது போன்ற தோற்றமே தென்படும்.
எனவே எவரது கண்களுக்கும் புலப்படாமல் இந்தக் கூட்டத்தினர் இந்தப் பூமியின் ஒரு பகுதியில் வாழ்ந்து வருவது சந்தேகப்பட வேண்டியதன்று.
இனி வருங்காலத்தில் மனிதன் முயன்று நெருங்கலாம். யுக முடிவு நேரம் அவர்கள் வெளியே வர வேண்டிய காலமாக யுகமுடிவு நாளின் நெருக்கமாகத் தான் இருக்க முடியும்.

இந்தக் கூட்டத்தினர் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சில விபரங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும், (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அஹ்மத் 21299
இந்தக் கூட்டத்தினர் தனியான இனத்தவர் அன்று. ஆதம் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றியவர்களே என்பதைப் பின்வரும் நபிமொழி அறிவிக்கின்றது.

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப் பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: தப்ரானி
ஒவ்வொருவரும் ஆயிரம் சந்ததிகளைப் பெற்றெடுப்பார்கள் என்பதிலிருந்து அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கும் என்று கருத முடிகின்றது.

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கும் என்பதை நபிகள் நாயகத்தின் பொன்மொழியிலிருந்து அறிய முடிகின்றது.

உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 3348

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் அழிக்கப்பட்ட பின் முஸ்லிம்கள் ஹஜ்ஜும் உம்ராவும் செய்வார்கள். ஹஜ் செய்வோர் யாரும் இல்லை என்ற நிலையில் தான் யுக முடிவு நாள் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 1593

டி.ஜி.எஸ் தினகரன் : கள்ளப் பிரசங்கிகள் அற்புதசுகம் கொள்ளை ! | வினவு !

டி.ஜி.எஸ் தினகரன் : கள்ளப் பிரசங்கிகள் அற்புதசுகம் கொள்ளை ! | வினவு !

Thursday, August 9, 2012

சத்குரு ஜக்கி வாசுதேவ் : கஞ்சா முதல் கொலை வரை ! டெரர் ஆன்மீகம் !! | வினவு !

சத்குரு ஜக்கி வாசுதேவ் : கஞ்சா முதல் கொலை வரை ! டெரர் ஆன்மீகம் !! | வினவு !

21 மணிநேர நோன்பை கடைபிடிக்கும் டென்மார்க், ரஷ்யா முஸ்லிம்கள் ..!

டென்மார்க்கில் முஸ்லிம்கள் இவ்வாண்டு 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். உலகிலேயே அதிக மணிநேரம் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் ஆவர்.

அதேவேளையில் அர்ஜெண்டினாவில் வாழும் முஸ்லிம்கள் 9 மணிநேரமே நோன்பை நோற்கின்றார்கள். லத்தீன் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு என்பதால் இவர்களுக்கு உலகிலேயே குறைந்த அளவே
நோன்பு நோற்றால் போதும். ஏனெனில் இங்கு பகல் குறைந்த நேரம் ஆகும்.

அதேவேளையில் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் சூழல் ஆச்சரியமானது. அங்கு 24 மணிநேரம் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயே நடக்கிறது. அங்கு 20 மணிநேரம் நோன்பு நோற்கவேண்டும் என அறிஞர்கள் ஃபத்வா வழங்கியுள்ளனர். சில காலங்களில் இரவு அதிகமாக வரும். அக்காலங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அம்மக்கள் கூறுகின்றனர்

Reference By : http://www.muslimwin.com/

"இஸ்லாத்தை ஏற்ற 17 "ஒலிம்பிக்" வீரர்கள்!



லண்டனில் நடை பெற்று வரும் "ஒலிம்பிக்" போட்டிகளில் உலகெங்கிலுமிருந்து பங்கெடுக்க வந்திருக்கும் வீரர் - வீராங்கனைகளின் மத்தியில்


"அப்துர்ரஹ்மான் கிரீன்" அவர்களின் தலைமையில் லண்டனில் செயல்படும் "Islamic Education and Research Academy" (IERA) சார்பில் "வாழ்வியல் நெறிமுறைகள்" குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அதில், இஸ்லாம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகளையும், குரானின் அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் உள்ளடக்கிய "விளையாட்டு மட்டும் தான் வாழ்க்கையா?" என்ற தலைப்பிட்ட கையேடுகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் குரானின் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் விநியோகிக்கப்பட்டது. ஒலிம்பிக் விருந்தினர் வளாகத்திலேயே, ஆய்வரங்கம் - கருத்தரங்கம் என அறிவு சார்ந்த நிகழ்சிகளும், இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கான கேள்வி-பதில் நிகழ்சிகளும் நடந்தேறியது. அழைப்பு பணியின் நிறைவு நாளான 04 /08/12 அன்று, 17 வீரர்-வீராங்கனைகள் கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றனர்.

kadayanallur.org

இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!

அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்....
இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!

1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:

நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59) நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3)

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. (54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு (விசாரணை நாள்) நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ அதைப் புறக்கணித்து பராமுகமாக இருக்கிறார்கள்.(21:1)

எனினும் அது நெருக்கமாக இருக்கிறதென்பது மனித அறிவால் அறிந்து கொள்ளக்கூடிய விஷயமல்ல. அதை அவர்கள் அறிந்து கொள்ளவும் முடியாது. எனினும் அல்லாஹ்வின் விசாலமான அறிவையும் உலகத்தில் கடந்துவிட்ட கால அளவையும் கவனிக்கும்போது மறுமைநாள் சமீபமானது என அறியலாம். மறுமை பற்றிய அறிவு அல்லாஹ் தனக்கே சொந்தமாக்கிக் கொண்ட மறைவான விஷயங்களிலுள்ளதாகும். அவன் இவ்விஷயத்தைத் தனது படைப்புகளில் எவருக்கும் அறிவித்துக் கொடுக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

மக்கள் உம்மிடம் மறுமை நாள் பற்றிக் கேட்கிறார்கள். நிச்சயமாக அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறதென நீர் கூறுவீராக! அதை நீர் அறிவீரா? அது சமீபமாக வந்துவிடலாம். (33:63)

நபி(ஸல்) அவர்கள் இறுதி நாள் நெருங்கிவிட்டது என்பதை அறிவிக்கக்கூடிய அடையாளங்களைக் கூறியுள்ளார்கள். அவை: தஜ்ஜால் வருவது இது மக்களுக்கு மிகப் பெரும் குழப்பமாக அமையும். மக்களில் அதிகமானோர் ஏமாந்து போகுமளவிற்கு சில அற்புதங்களைச் செய்து காட்டுவதற்கு அல்லாஹ் அவனுக்கு சக்தி வழங்குவான். அதாவது வானத்திற்கு உத்தரவு போடுவான். அது மழை பொழியும். புற்பூண்டுகளை முளைவிக்கும்படி பூமிக்கு ஆணையிடுவான். அது அவற்றை முளைவிக்கும். இறந்தவனை உயிர்ப்பிப்பான். இன்னும் இதுபோன்ற அற்புதங்களைச் செய்வான்.

அவனைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவன் ஒற்றைக் கண்ணன். சுவர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சுவர்க்கம் என்று கூறுவானோ அது நரகமாகும். அவன் எதை நரகமென்று கூறுவானோ அது சுவர்க்கமாகும். அவன் பூமியில் நாற்பது நாட்கள் இருப்பான். அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும் ஒரு நாள் ஒரு மாதம்;; போன்றும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதரண நாட்கள் போன்றுமிருக்கும். பூமியில் மக்கா மதீனா வைத்தவிர அவன் நுழையாத இடங்களே இருக்காது.

மேலும் அதன் அடையாளங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது சுபுஹுத் தொழுகை நேரத்தில் டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளை மனாராவிலிருந்து ஈஸா(அலை) அவர்கள் இறங்கி வருவார்கள். அவர்கள் சுபுஹுத் தொழுகையை மக்களுடன் தொழுவார்கள். அதன் பின் தஜ்ஜாலை தேடிச் சென்று கொன்று விடுவார்கள். சூரியன் மேற்கில் உதிப்பதும் இறுதி நாளின் அடையாளமாகும். அதை மக்கள் காணும்போது நடுங்கி ஈமான் கொள்வார்கள். எனினும் அவர்களின் ஈமான் அவர்களுக்குப் பலனளிக்காது. இறுதி நாளுக்கு மேலும் பல அத்தாட்சிகளுள்ளன.
2- இறுதி நாள் பாவிகளின் மீதே ஏற்படும். அதாவது இறுதி நாள் ஏற்படும் முன் முஃமின்களின் உயிர்களைக் கைப்பற்றக்கூடிய தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்பிவைப்பான். அதன் பின்னர் அல்லாஹ் எல்லா படைப்பினங்களையும் மரணிக்கச் செய்து இவ்வுலகத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்று நாடினால் சூர் ஊதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட மலக்கிடம் அதில் ஊதும்படி ஏவுவான்.(சூர் என்பது ஒரு பெரும் கொம்பாகும்) மக்கள் அந்த சப்தத்தைக் கேட்டவுடன் மயங்கிவிடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்:
சூர் ஊதப்படும். அப்போது அல்லாஹ் நாடியவர்களைத் தவிர வானம் பூமியிலுள்ள அனைவரும் மயங்கிவிடுவார்கள்.(39:68) இது வெள்ளிக்கிழமை ஏற்படும். அதன் பின்னர் அனைவரும் மரணித்துவிடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இருக்க மாட்டார்கள்.
3- மனிதனின் உடலனைத்தும் அழிந்துவிடும். மனிதனின் முதுகந்தண்டின் கடைசியிலுள்ள ஒரு சிறு எலும்பைத் தவிர வேறு எல்லாவற்றையும் பூமி தின்றுவிடும். எனினும் நபிமார்களின் உடல்களைப் பூமி தின்னாது. அல்லாஹ் வானிலிருந்து ஒரு தண்ணீரை இறக்கிவைப்பான். (அழிக்கப்பட்ட) உடல்கள் வளர்ந்துவிடும். அல்லாஹ் மக்களை உயிரூட்டி எழுப்ப நாடினால் சூர் ஊதும் பொறுப்பிற்குரிய மலக்கு இஸ்ராஃபீல் அவர்களை உயிர்ப்பிப்பான். அவர் இரண்டாம் முறை சூர் ஊதுவார். அல்லாஹ் எல்லாப் படைப்புகளையும் உயிர்ப்பிப்பான். மக்கள் தம் மண்ணறைகளிலிருந்து அல்லாஹ் அவர்களை ஆரம்பமாக படைத்தது போன்று செருப்பு அணியாதவர்களாக நிர்வாணிகளாக விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக வெளிவருவார்கள். அல்லாஹ் சொல்கிறான்:
சூர் ஊதப்படும் அந்நேரம் அவர்கள் மண்ணறையிலிருந்து அவர்களின் இறைவனிடம் விரைந்து வருவார்கள். (36:51)

அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) கற்களின் பால் விரைந்து செல்பவர்களைப்போல் அந்நாளில் கபுருகளிலிருந்து வெளியேறுவார்கள். அவர்களின் பார்வை கீழ்நோக்கி இருக்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அந்நாள் தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்த நாளாகும். (70:43-44)

82-1 வானம் பிளந்து விடும்போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும். (82:1-5)

இதன் பின் மக்கள் மஹ்ஷர் மைதானத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். அது பரந்த விசாலமான பூமியாகும். காஃபிர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவார்கள். எப்படி அவர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவர்கள்? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்களைப் பாதங்களால் நடக்க வைத்தவன் அவர்களை முகம் குப்புறவும் நடக்க வைக்க சக்தி உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் நல்லுரையை; புறக்கணித்து நடந்தவன் மறுமையில் குருடனாக எழுப்பப்படுவான். அந்நாளில் சூரியன் மக்களை நெருங்கியிருக்கும். அப்போது மனிதர்கள் அவரவர்களின் செயல்கள் அளவிற்கு வேர்வையிலிருப்பார்கள். சிலருக்கு கணுக்கால் வரை வேர்வை இருக்கும். சிலருக்கு இடுப்பளவு இருக்கும். இன்னும் சிலர் முழுக்க வேர்வையில் மூழ்கிவிடுவார்கள்.

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அவனின் நிழலின் கீழ் சிலர் நிழல் கொடுக்கப்படுவார்கள். அங்கு இருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான். நீதமாக நடந்து கொண்ட ஆட்சியாளன் அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன் தனது உள்ளத்தைப் பள்ளியுடன்; தொடர்பு படுத்திக் கொண்டிருந்த மனிதன் அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு அதற்காகவே இணைந்து அதற்காகவே பிரிந்த இரு மனிதர்கள் அந்தஸ்தும் அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் எனக் கூறிய மனிதன் வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் தர்மம் செய்யும் மனிதன் தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன். இது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்கள் நல்லவையாகயிருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும் உண்டு. கேள்வி கணக்கும் கூலியும் தண்டனையும் ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உண்டு.

அந்நாளில் மக்கள் கடினமான தாகத்திலிருப்பார்கள். அன்றைய ஒரு நாள்(நம் கணக்குப் படி) ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். எனினும் முஃமினுக்கு ஒரு தொழுகையை நிறைவேற்றும் அளவுக்கு அந்நேரம் கழிந்துவிடும். முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களின் தண்ணீர்த் தடாகத்திற்கு வந்து தண்ணீர் அருந்துவார்கள். தண்ணீர்த் தடாகமென்பது நமது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்த மிகப்பெரும் மரியாதையாகும். மறுமை நாளில் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் இதில் நீர் அருந்துவார்கள். அதன் தண்ணீர் பாலை விட மிக வெண்மையானதாகவும் தேனைவிட மிகச் சுவையானத கவும்; கற்பூர மணத்தை விட மிக நறுமண முள்ளதாகவுமிருக்கும். அதன் பாத்திரங்கள் வானின் நட்சத்திரங்கள் அளவு இருக்கும். அதில் ஒரு முறை நீர் அருந்தியவன் அதன் பின் ஒருபோதும் தாகிக்கவே மாட்டான்.

மஹ்ஷர் மைதானத்தில் மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதையும் கேள்வி கணக்குக் கேட்கப்படுவதையும் எதிர்பார்த்தவர்களாக அங்கு நீண்ட நேரமிருப்பார்கள். கடினமான வெப்பத்தில் நிற்பதும் எதிர்பார்ப்பதும் நீண்டு விடுகிறபோது மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதற்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்பவர்களைத் தேடுவார்கள். அப்போது ஆதம்(அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்கள் தம் இயலாமையைக் கூறிவிடுவார்கள். பிறகு முறையே நூஹ்(அலை) இப்றாஹீம் (அலை) மூஸா(அலை) ஈஸா(அலை) என ஒவ்வொரு நபியிடமும் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தமது இயலாமையைக் கூறிவிடுவார்கள். இறுதியாக முஹம்மது(ஸல்) அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்கள் அதற்கு தாமே தகுதியானவர் எனக் கூறி அர்ஷிற்குக் கீழ் சுஜுது செய்வார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உதிக்கச் செய்கின்ற எல்லாப் புகழ் வார்த்தைகளையும் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்வார்கள். அப்போது முஹம்மதே! உமது தலையை உயர்த்தும் நீர் கேளும் கொடுக்கப்படுவீர். பரிந்துரை செய்யும் உமது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கூறப்படும். அப்போது அல்லாஹ் தீர்ப்புச் செய்யப்படுவதற்கும் கணக்குக் கேட்கப்படுவதற்கும் அனுமதிவழங்குவான். முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தினர்தாம் முதன் முதலில் கேள்வி கணக்கு கேட்கப்படுவார்கள்.

அடியான் செய்த செயல்களில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகை பற்றியாகும். அது சரியாக இருந்து எற்றுக்கொள்ளப்பட்டு விட்டால் ஏனைய செயல்கள் கவனிக்கப்படும்;. அது மறுக்கப்பட்டு விட்டால் ஏனைய செயல்களும் மறுக்கப்பட்டு விடும். இதுபோன்றே ஒரு அடியான் ஐந்து காரியங்கள் பற்றி விசாரிக்கப்படுவான். அதாவது அவன் தனது வாழ்நாளை எவ்வாறு கழித்தான் தன் வாலிபத்தை எப்படி பயன்படுத்தினான் தன் பொருளை எப்படி சம்பாதித்து எவ்வழியில் செலவழித்தான் தான் கற்றதில் எந்த அளவுக்கு செயல்படுத்தினான் என்றெல்லாம் விசாரிக்கப்படுவான்.

மேலும் அடியார்களிடையே தீர்ப்புச் செய்யப்படும் முதல் காரியம் இரத்தங்கள் (கொலை, காயம்)பற்றிய தீர்ப்பாகும். அந்நாளில் நன்மை தீமைகளைக் கொண்டே நியாயம் வழங்கப்படும். ஒரு மனிதனின் நன்மை எடுக்கப்பட்டு அது அவனால் பாதிக்கப்பட்டவனிடம்; கொடுக்கப்படும். நன்மைகள் தீர்ந்து விட்டால் பாதிக்கப்பட்டவனின்; தீமையை எடுத்து இவனிடம் போடப்படும். அங்கு ஸிராத் என்னும்; பாலம் அமைக்கப்படும். அது முடியை விட மெல்லிய தாகவும் வாளைவிட கூர்மையானதாகவுமிருக்கும். அது நரகத்தின் மீது அமைக்கடிருக்கும். மக்கள் அதில் அவரவர் செயல்களைப் பொருத்து கடந்து செல்வார்கள். சிலர் கண் சிமிட்டும் நேரத்திற்குள் கடந்து விடுவார்கள். சிலர் காற்று வேகத்தில் செல்வார்கள்;. வேறு சிலர் மிக விரைவாகச் செல்லும் குதிரை போன்றும் செல்வார்கள்;. இன்னும் தவழ்ந்து தவழ்ந்து செல்பவர்களுமிருப்பார்கள். அப்பாலத்தின் மீது கோர்த்திழுக்கக் கூடிய கொழுத்துச் சங்கிலிகளுமிருக்கும். அது மனிதர்களைப் பிடித்து நரகில் தள்ளிவிடும்.

காஃபிர்களும் அல்லாஹ் நாடிய பாவிகளான முஃமின்களும் நரகில் விழுந்து விடுவார்கள். காஃபிர்கள் நிரந்தரமாக நரகிலேயே இருப்பார்கள். பாவியான முஃமின்கள் அல்லாஹ் நாடிய அளவிற்கு வேதனை செய்யப்பட்டு பின் சுவர்க்கம் செல்வார்கள் நரகம் சென்று விட்ட சிலருக்கு பரிந்துரை செய்வதற்காக நபிமார்கள் ரசூல்மார்கள் நல்லடியார்களில் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பரிந்துரை செய்ய அனுமதி வழங்குவான். இவர்களால் பரிந்துரை செய்யப்படுபவர்களை அல்லாஹ் நரகிலிருந்து வெளியேற்றுவான்.

இப்பாலத்தை கடந்து சென்ற சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அமைக்கப்பட்டிருக்கும்; ஒரு பாலத்தில் நிற்பார்கள். அங்கு அவர்களில் சிலருக்கு சிலரிடமிருந்து கணக்குத் தீர்க்கப்படும். யார் தனது சகோதரனுக்கு அநியாயம் செய்திருக்கிறாரோ அவருக்கு நியாயம் வழங்கப்படாதவரை அல்லது பாதிக்கப்பட்டவர் அவனை திருப்தி கொள்ளாத வரை சுவர்க்கம் செல்ல முடியாது. சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விட்டால் மரணம் ஒரு ஆட்டின் வடிவில் கொண்டு வரப்பட்டு சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அறுக்கப்படும். சுவர்க்கவாசிகளும் நரகவாசிகளும் அதைப் பார்ப்பார்கள். பிறகு சுவர்க்கவாசிகளே! உங்களுக்கு மரணமே கிடையாது இதிலேயே நீங்கள் நிரந்தரமாக இருங்கள் என கூறப்படும்.

நரகமும் அதன் வேதனையும்

அல்லாஹ் கூறுகிறான்: நரகத்தைப் பயந்து கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அது காஃபிர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. (2:24)

நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்கள்: நீங்கள் எரிக்கும் நெருப்பு நரகின் நெருப்பில் எழுபது மடங்குகளில் ஒன்றாகும். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! (பாவிகளைத் தண்டிப்பதற்கு) இதுவே போதுமெனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இதில் அறுபத்தொன்பது மடங்குகள் அதிகமாக்கப்படும். அவையனைத்தும் இது போன்ற வெப்பமுள்ளதாக இருக்கும். எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நரகம் ஏழு அடுக்குகளைக் கொண்டதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கும் மற்றதைவிட மிகக் கடுமையான வேதனை உள்ளதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கிலும் அதற்குத் தகுதியானவர்கள் தத்தமது செயல்களைப் பொறுத்து இருப்பார்கள். நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டிலிருப்பார்கள். அதுதான் மிகக் கடுமையான வேதனைக்குரியதாகும். காஃபிர்களுக்கு நரகத்தில் வேதனை இடைவிடாத நிரந்தர வேதனையாகும். அவர்கள் நரகில் கரிந்துவிடும் போதெல்லாம் வேதனையை அதிகப்படுத்துவதற்காக திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படுவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: அவர்களின் தோல்கள் கரிந்திடும் போதெல்லாம் அவர்கள் வேதனை அனுபவிப்பதற்காக வேறு தோல்களை நாம் ஏற்படுத்துவோம்.(4:56) எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது. அவர்கள் மரணம் அடையும் வகையில் அவர்களுடைய கதை முடிக்கப்படவும் மாட்டாது. நரகத்திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இவ்வாறே நாம் எல்லா காஃபிர்களுக்கும் கூலி வழங்குவோம்.(35:36)

அதில் அவர்கள் விலங்கிடப்படுவார்கள். அவர்களின் கழுத்துக்களிலும் விலங்கிடப்படும் அல்லாஹ் சொல்கிறான்: இன்னும் அந்நாளில் குற்றவாளிகளைச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.(14:49-50)

நரகவாசிகளின் உணவு ஸக்கூம் என்ற கள்ளி மரமாகும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக ஸக்கூம்(கள்ளி) மரம் பாவிகளின் உணவாகும். அது உருக்கப்பட்ட செம்பு போன்றிருக்கும். அது வெந்நீர் கொதிப்பதைப் போன்று வயிற்றில் கொதிக்கும்.(44:41-46)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸக்கூம் மரத்திலிருந்து ஒரு சொட்டு உலகில் விழுந்து விட்டால் உலகிலுள்ளவரின் வாழ்க்கை வீணாகிவிடும். அப்படியானால் அதுவே உணவாக கொடுக்கப்படுபவர்களின் நிலை எப்படி இருக்கும்? (திர்மிதி) நரக வேதனையின் கடுமையையும் சுவர்க்க பாக்கியத்தின் பெருமையையும் பின் வரும் ஹதீஸ் விளக்கிக் காட்டுகிறது: மறுமையில் உலகில் மிகுந்த வசதி வாய்ப்புடன் வாழ்ந்த காஃபிர்களில் ஒருவன் கொண்டு வரப்படுவான். அவனை நரக நெருப்பில் ஒரு முறை முக்கப்படும். பின்னர் அவனிடம் உனக்கு(உலகில்) ஏதேனும் வசதி இருந்ததா? எனக் கேட்கப்படும். அப்போது அவன் எந்தப் பாக்கியமும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான். ஒரு முறை நரகத்தில் முக்கியதால் உலக பாக்கியங்கள் அனைத்தையும் அவன் மறந்து விடுகிறான். இவ்வாறே உலகில் மிகப்பெரும் கஷ்டத்தில் வாழ்ந்த ஒரு முஃமின் கொண்டு வரப்பட்டு ஒரு முறை சுவர்க்கத்தில் புகுத்தப்படுவான். பின்னர் (உலகத்தில்) ஏதேனும் உனக்கு கஷ்டமிருந்ததா? எனக் கேட்கப்படுவான். அதற்கவன் எந்தக் கஷ்டமும் வருமையும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான். சுவர்க்கத்தில் ஒரு முறை புகுத்தப்பட்டதால் உலகில் அவன் அனுபவித்த கஷ்டம் வறுமை தூப்பாக்கியம் அனைத்தையும் அவன் மறந்துவிடுவான். (முஸ்லிம்)

சுவர்க்கம்

சுவர்க்கம் இறைவனின் நல்லடியார்களுக்குரிய கண்ணியமான நிரந்தரமான வீடாகும். அதிலுள்ள பாக்கியங்கள் எந்தக் கண்ணும் கண்டிராத எந்தக் காதும் கேட்டிராத எந்த மனித உள்ளத்திலும் உதித்திராதவையாகும். அது மனிதன் படித்ததற்கும் கேள்விப்பட்டதற்கும் அப்பாற்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் செய்த(நற்)செயல்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை எந்த ஒரு ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.(32:17)

சுவர்க்கத்தின் அந்தஸ்த்துகள் முஃமின்களின் செயல்களைப் பொருத்து ஏற்றத் தாழ்வு உடையதாகும். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் அந்தஸ்த்துகளை அல்லாஹ் உயர்த்துகிறான்.(58:11)

சுவர்க்கத்தில் அவர்கள் விரும்பியவற்றை உண்ணவும் பருகவும் செய்வார்கள். அவற்றில் நிறம் மாறிவிடாத தண்ணீர் ஆறுகளும் ருசி மாறாத பாலாறுகளும் தெளிவான தேனாறுகளும் சுவையான மதுபான ஆறுகளும் உள்ளன. அவர்களின் மது உலக மது போன்றதல்ல. அல்லாஹ் கூறுகிறான்: தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும் (அது) மிக்க வெண்மையானது அருந்துபவருக்கு மதுரமானது. அதில் கெடுதியுமிராது. அதனால் அவர்கள் புத்தி தடுமாறவும் மாட்டார்கள்.(37:45-47)

சுவர்க்கத்தில் ஹுருல் ஈன் பெண்கள் மணமுடித்து வைக்கப்படுவார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”சுவர்க்கத்துப் பெண்களில் ஒரு பெண் உலகத்தாரிடம் வந்துவிட்டால் வானம் பூமிமிக்கிடையே உள்ளவற்றை ஒளிமயமாக்கிவிடுவாள். அவற்றில் நறுமணத்தை நிரப்பிவிடுவாள்”.(புகாரி)

சுவர்க்கவாசிகளின் மிகப்பெரும் பாக்கியம் அவர்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதாகும். சுவர்க்கவாசிகள் மல ஜலம் கழிக்கவோ மூக்குச் சிந்தவோ உமிழவோ மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கமாகவும் வியர்வை கஸ்தூரியாகவுமிருக்கும். அவர்களின் இவ்வருட்பாக்கியம் நின்றுவிடவோ குறைந்திடவோ செய்யாத நிரந்தர பாக்கியமாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சுவர்க்கம் நுழைகிறாரோ அவர் பாக்கியம் பெற்று விட்டார். சிரமப்படவோ சோர்வடையவோ மாட்டார். சுவர்க்கவாசிகளின் குறைந்த பங்கு உலகமனைத்தும் பத்துமுறை வழங்கப்படுவதை விடவும் சிறந்ததாகும். நரகிலிருந்து வெளியேறி கடைசியில் சுவர்க்கம் நுழைபவன் தான் இக்குறைந்த பங்கை உடையவன்.

கண்ணியம் மிக்க இரவு...ஆம் இறையருள் பூரணமாக இறங்கும் இரவுக்கு தயாரா?

இந்த லைலத்துல் கத்ர் இரவு எப்போது,அதைப் பற்றிய தவறான
எண்ணங்களை களைவது எப்படி என்பதை குர்ஆன்
- ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்வோம்.

லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த
ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் பெற்றுள்ளதாக
திருக்குர்ஆன் கூறுகிறது.

"நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில்
இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன்
இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும்
வரை இருக்கும். (திருக்குர்ஆன் 97 : 1-5)"

திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவு ஆயிரம் மாதங்களை விட
சிறந்தது என்று இங்கே அல்லாஹ் கூறுகிறான். மேலே நாம் குறிப்பிட்ட
வசனத்தில் ரமளான் மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது எனவும்
இறைவன் கூறுகிறான். அந்த ஓர் இரவு நிச்சயம் ரமளான் மாதத்தில் தான்
அமைந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

அந்த இரவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் வரும் ஒற்றையான
இரவுகளில் அமைந்திருக்கும் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள்
அறிவுறுத்தியுள்ளார்கள். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும்,
சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட
இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த
இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள்
ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச்
சிறப்பு வைகறை உதயமாகும் வரையிலும் இருக்கும்
என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.

லைலத்துர் கத்ர் என்பது 27 வது இரவு மட்டுமே என்கின்ற
தவறான கருத்து இந்தியத் துணைக்கண்டத்திலும் இன்னும் சில
நாடுகளிலும் பரவலாக நிலவுகிறது. 
 
இதனைப் பற்றிய ஹதீஸ்:


எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர்
அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்:
உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்:
புகாரி, முஸ்லிம்.

லைலத்துல் கத்ர் இரவு ரமலான் மாதத்தின் 27ஆம் இரவில்தான் என
இஸ்லாத்தில் பெரும்பான்மையான மக்கள் விளங்கி வைத்துள்ளனர்.

அவர்கள் அவ்வாறு விளங்கிக் கொண்டதற்கு காரணத்தையும்
கூறுகின்றனர். லைலத்துல் கத்ர் இரவு பற்றி அல்லாஹ் இறக்கிய
மேற்படி அத்தியாயத்தில் லைலத்துல்கத்ர் என்ற வார்த்தை மூன்று முறை வருகிறது.

மேற்படி மூன்றை ஒன்பதைக் கொண்டு பெருக்கினால் இருபத்திஏழு.
எனவே இருபத்தி ஏழாம் இரவில்தான் லைலத்துல் கத்ர் என்று, குர்ஆனிலும்,
ஹதீஸிலும் இல்லாத ஒரு 'அரிய?..!' விளக்கத்தைத் தருகின்றனர்.

மேற்படி விளக்கத்தைத் தருவதோடு மட்டுமில்லாமல்
இஸ்லாமிய மார்க்கத்தை ஓர் சடங்கு மார்க்கமாக கருதிய பலர்,
ரமளான் மாதத்தின் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் (அதாவது வெள்ளி, திங்கள், மற்றும் 27ஆம் இரவு ஆகிய நாட்களில்) பள்ளிகளில் நிரம்பி வழிவர்.

குறிப்பாக இருபத்தி ஏழாம் இரவில் மாத்திரம் அதுவரை கண்டிராத கூட்டம்
பள்ளியில் அலைமோதும். அன்றைய இரவில் பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டும்,
பண்டங்கள், பழங்கள் குவியவும் காரணமாக அமையும். அந்த
நிலை சரியானதுதானா என்பதை இந்த கட்டுரையில் ஆய்வு செய்வோம்.

'தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம்
அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம். நிச்சயமாக
(அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில்
முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.' (அத்தியாயம் 44 ஸுரத்துத் துகான் - 2முதல் 4வரையிலான வசனங்கள்) என
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்.

Monday, August 6, 2012

ரமழானில் முஸ்லிம்கள் கண்ட சவால்கள்


சர்வ உலகையும் படைத்து பரிபாலிப்பவனும், “ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.” (2:183) என்கிற செய்தியையும் தெரியப் படுத்தியவனுமான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
மேலும் அவனது இறுதி தூதர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் (ஸல்) மீது அவனது அருளும் சாந்தியும் என்றென்றும் உண்டாவதாக.

ஈமான் கொண்டவர்களே, வல்ல அல்லாஹ் தனது படைப்பை சோதனைக்கு உற்படுத்தி, மனித சமூகமானது முடிவற்ற, எல்லையற்ற இன்பத்தை அடைந்து கொள்வதற்குமான புனித மாதமாக ரமழான் இருக்கின்றது. நோன்பு இருத்தலானது முழுமையான தூயமையடைதலையும், அல்லாஹ்வின் இருப்பை நினைவுப்படுத்தும் மனப்பாங்கையும் வளர்ப்பதனை எதிர்பார்க்கின்றது. ஷைத்தானுடைய சதிவலைகளில் இருந்தும்,இவ்வுலகின் கஷ்டங்களில் இருந்தும் பாதுகாப்பு பெறுவதற்கு, அல்லாஹ்வின் இருப்பு பற்றிய நினைவுபடுத்தலானது (தக்வா) இன்றிமையாததாக இருக்கின்றது. அல்லாஹ் எம்மை நோக்கி பின்வருமாறு கூறுகின்றான்:

“மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது – தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.” (65:2)

முஸ்லிம்களில் அநேகர் இன்று நோன்பைப் பற்றியும், நோன்பாளியின் செய்கைகள் பற்றியும் தெளிவற்று இருக்கின்றனர். அவர்கள் யாவரும் அறை குறை ஓய்வுநிலையில், பகல் வேளையில் அநேக நேரத்தை கட்டிலில் கழிப்பவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ்வை பயப்படும் போது தொழுகைக்காக எழுந்து நின்றாலும், உடனே தூக்கத்துக்குச் செல்கின்றனர். இந்த அசாதாரண தூக்கமானது அவர்களை சோம்பேறிகளாக அல்லது அநேக சந்தர்ப்பங்களில் களைப்படைந்தவர்களாக மாற்றம் பெறச்செய்கின்றது.

உண்மையிலே ரமழான் ஆனது, அதிகப்படியான உண்ணல், பருகல் செயற்பாடுகளினால் ஏற்படும் பாரங்களில் இருந்து கொஞ்சம் தளர்ந்து ஒதுங்கிய ஒரு நம்பிக்கையாளனிடம், அல்லாஹ்வுக்காக போராடி, சிரமப்படும் மனோநிலையில் ஒரு அதிகரிப்பை எதிர்பார்க்கும் மாதமாகும். ஹிஜ்ரத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 9 ரமழான்களை நபி (ஸல்) அவர்கள் கண்டுள்ளார்கள். அவை ஒவ்வொன்றும் வரலாற்றை தீர்மானித்த நிகழ்வுகளால் நிரம்பி இருந்ததோடு நில்லாமல், தியாக சிந்தை, அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து கட்டுப்படல் போன்ற பலவேறு ஒளிமயமிக்க உதாரணங்களை எமக்கு காட்டி நிற்கின்றன.

ஹிஜரத் முடிந்த முதலாவது வருடத்தில் நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) அவர்களை முப்பது குதிரை வீரர்களுடன் சைப் அல் பஹ்ர் எனும் பகுதயில், குரைஷி வீரர்கள் 300 பேர் வழமைக்கு மாற்றமான முறையில் கூடாரமிட்டிருப்பதை விசாரித்தறிவதற்காக அனுப்புனினார்கள். முஸ்லிம்கள் அணி, இறைமறுப்பாளர்களுடன் போரிடுவதற்காக தயாராக இருந்த தருணத்தில் மஜ்தி இப்னு உமர் அல் ஜுஹனி என்பவர் தலையிட்டு இருபக்கத்திலும் சமரசப் பேச்சுவார்ர்த்தை நடாத்தி போரைத் தவிர்க்கச் செய்தார். மக்காவிலுள்ள நயவஞ்சகர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் தமக்கென்று ஒரு மஸ்ஜிதை கட்டினர் (மஸ்ஜித் அல் திரார்). நபியவர்கள் அம்மஸ்ஜிதை உடைக்குமாறு கோரியது ரமழானில்.


ஹிஜ்ரி 3, ரமழான் 17 இல், வல்ல அல்லாஹ் சத்தியத்தை அசத்தியத்திலிருந்து வேறுபிரித்துக் காட்டிய பதர் யுத்தம் நடைபெற்றது. மக்காவில் தாம் விட்டு வந்த பொருட்களை சுமந்த, மக்காவிலிருந்து புறப்பட்டுள்ள ஒரு வியாபார கோஷ்டியினை வழிமறிப்பதற்காக நபியவர்களும் , தமது தோழர்களில் 313 பேரும் புறப்பட்டனர். அபூசுப்யான் அவர்களால் தலைமைதாங்கப்பட்ட அந்த வியாபார சரக்குகளின் பெறுமதி சுமார் 60,000 தினார்கள் என்று சொல்லப்படுகின்றது. வியாபார கோஷ்டியினை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. செல்வாக்கு மிக்க குரைஷி படைகள் போதிய யுத்த ஏற்பாடுகளுடன் , இஸ்லாத்தை அடியோடு தீர்த்து கட்டும் நோக்கில் குழுமியிருந்தனர். மூன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் அவர்களது படைகளின் பலம் அதிகரித்து காணப்பட்ட போதிலும், தமது தரப்பு பலமற்று, தயாரற்று காணப்பட்ட நிலையில், நபியையும், தாம் கொண்டிருக்கும் மார்க்கத்தையும் பாதுகாப்பதற்காக தமது உயிரை கொடுத்து வீர மரணம் எய்து தம் இறைவனை சந்திப்பதற்காக முழு மூச்சுடன் தயாராகினர் முஸ்லிம்கள். அல்லாஹ், குறித்த இந்த ரமழான் தினத்தில் வரலாற்றில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத மகத்தான வெற்றியை கொடுத்தான்.


ஹிஜ்ரி 6 இல் ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்களின் தலைமையில் வாதி அல் குரா எனும் பகுதிக்கு அரசியாக இருந்த பாத்திமா பின்த் ராபியாஹ் எனும் பெண்ணை எதிர்ப்பதற்காக அனுப்பப்பட்டார்கள். இதற்கு முன்னர் ஜைத்(ரழி) அவர்களின் தலைமையில் சென்ற ஒரு வியாபார கூட்டத்தை பாத்திமா தாக்கி அதிலுள்ள செல்வங்களை கொள்ளையடித்து இருந்தாள். அராபியாவிலேயே மிகவும் பாதுகாப்புக்கு மத்தியில் இருந்த பெண்ணாக அவள் கருதப்பட்டாள். தமது நெருங்கிய உறவினர்களினது வாள்கள் ஐம்பதினை தமது வீட்டில் கொழுவி இருந்ததாக கூறப்படுகின்றது. இஸ்லாத்தின் பகிரங்க எதிரியாக பாத்திமா காணப்பட்டாள். ரமழான் மாதம் ஒன்றில் இந்த முஸ்லிம்களுடனான யுத்தத்தின் போது அவள் கொல்லப்பட்டாள்.

ஹிஜ்ரி 8 அளவில் ஹுதைபிய்யா உடன்படிக்கை மீறப்பட்டிருந்தது. முஸ்லிம் படைகளும் வடக்கில் பைசாந்தியர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த காலமது. இந்நிலையில் மக்காவை கைப்பற்றி அராபிய தீபகற்பத்தில் இறை மறுப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய தேவையை முஹம்மத் (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். அல்லாஹ், தனது ஆலயப் பிரதேசத்துக்குள் அமைதி,பாதுகாப்பு மற்றும் புனிதம் பேணப்பட வேண்டும் என்று பிரஸ்தாபித்திருந்தான். நிர்வாணத்தன்மை மற்றும் இன்னோரன்ன அசிங்கங்களிலிருந்தும் அப்புறப்படுத்தி கஃபாவை தூய்மையாக்க வேண்டிய காலம் வந்தது. மதீனா நகரம் முன்பொருபோதும் காணாத ஆயுதப்படையுடன் நபியவர்கள் மக்காவை நோக்கி புறப்பட்டார்கள். மக்காவை நெருங்க நெருங்க படைகளில் புத்துணர்ச்சியும் புதுத்தெம்பும் உதித்தன. அல்லாஹ்வின் உதவி கொண்டு ,நம்பிக்கையாளர்களின் மனதில் இருந்த உறுதியினால், மக்கா நகரம் ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் ரமழான் 20 அன்று கைப்பற்றப்பட்டது. இந்நாள் இஸ்லாமிய நாட்களில் மிகவும் முக்கிய நாளாக கருதப்படுகின்றது. காரணம், இதற்கு பிறகே இஸ்லாம் அராபிய தீபகற்பத்தில் தனக்கென்ற இடத்தை உறுதியாக பதித்துக் கொண்டது. அதே மாதம், அதே ஆண்டில் மக்காவில் உள்ள சிலைகளை சிதைத்த பிறகு, இணைவைப்பு மையங்களுக்கு படைப்பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அல்-லாத், மனாத், ஸுவா போன்ற அராபியாவின் பெரும் சிலைகள் தகர்க்கப்பட்டன.

இவ்வாறு தான் நபியவர்களது காலத்தில் ரமழான் இருந்தது. உள்ளத்தை தூய்மை படுத்தி, நன்மையை ஏவி, தீமையை தடுத்து, தமது வாழ்வுக்கும், செல்வத்துக்கும் எதிராக கடுமையாக உழைக்கும் ஒரு காலமாக இருந்தது. நபியவர்களது மரணத்தின் பின்னால் இந்த பாரம்பரியத்தை முஸ்லிம்கள் சுமந்தனர். அல்லாஹ் உண்மையான நம்பிக்கையாளர்களை கொண்டு பிற்பட்ட காலத்தில் வரலாற்றை மாற்றி அமைத்தான். ரமழான், சோதனைகள் நிறைந்ததாகவும், முக்கிய நிகழ்வுகளை கொண்டதாகவும் பிற்பட்ட காலத்தில் தொடர்ந்தது.

ஹிஜ்ரிக்கு பின் தொண்ணூற்று இரண்டு வருடங்களுக்கு பின்னர் இஸ்லாம், வட ஆபிரிக்கா,ஈரான், ஆப்கானிஸ்தான், எமன் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளுக்கு வியாபித்திருந்தது. விசிகொத்களின் கொடுங்கோல் அரசனான ரோடேறிக் என்பவனின் ஆட்சிக்கு கீழ் ஸ்பெயின் இருந்தது. ரோடேறிக் தனது அறுபது இலட்சம் சேர்ப் படைகளை கொண்டு யூதர்களை கொடுமை படுத்தியபோது, யூதர்கள் வட ஆபிரிக்கவிலுள்ள முஸ்லிம்களின் உதவியை நாடினர். இதற்கு பதில் அளிக்கும் முகமாக, உமையாக்களின் வட ஆபிரிக்காவின் கவர்னராக இருந்த மூஸா இப்னு ஹுசைர் தமது துணிச்சல் மிக்க தளபதியான தாரிக் பின் zஸியாத் அவர்களின் தலைமையில் 12,000 பாபாரிய, மற்றும் அராபிய துருப்புக்களை அனுப்பி வைத்தார். அவ்வாண்டின் ரமழான் மாதத்தில் முஸ்லிம் படைகள், ரோடேறிக் தலைமையில் வந்திருந்த 90,0௦௦ கிறிஸ்தவ படைகளை எதிர்கொண்டனர். வெள்ளை கழுதைகளால் சுமக்கப்பட்ட, பெறுமதி மிக்க மாணிக்கங்களால் பொறிக்கக்கப்பட்ட, வெண்மையான வெள்ளி நிற அரியணையில் ரோடேறிக் வீற்றிருந்தான். அவனுடைய படகுகளை எரித்த தாரிக், முஸ்லிம்களை நோக்கி, சுவர்க்கம் எமக்கு முன்னால் இருப்பதாகவும், கடலும், தோல்வியும் காலடியில் இருப்பதாகவும் உரத்த குரலில் அறைகூவல் விடுத்தார். இந்த அறைகூவல் கொடுத்த உஷாரில் முஸ்லிம்கள் ரோடேறிக்கின் படைகள் மீது பாய்ந்தனர். அல்லாஹ் இறை மறுப்பாளர்களின் அணிக்கு எதிராக மகத்தான வெற்றியை அளித்தான். இந்த யுத்தத்தால் ரோடேறிக்கும், அவனது படைகளும் முற்றாக ஒழிந்தது மாத்திரமன்றி ஸ்பெயின்,சிசிலி மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றை முற்றாக விடுவிப்பதில் மூஸாவும், தாரிக்கும் வெற்றி பெற்றனர். இதுவே பிற்காலத்தில் 700 ஆண்டுகள் வரை முஸ்லிம்கள் ஆட்சி செய்ய வழி வகுத்த அல்-அந்தலுஸ்ஸின் பொற்காலத்தின் ஆரம்பத்தை குறிக்கின்றது.

ஹிஜ்ரி 682 இல் சலாஹுத்தீன் அல் அய்யூபி அவர்கள் கொடுங்கோல் கிறிஸ்தவர்களுடன் (Crusaders) பல ஆண்டுகள் போரிட்ட பின், இறுதியாக சிரியாவை விட்டும், பாலஸ்தீனை விட்டும் அவர்கள் ஆக்கிரமித்து இருந்த நிலங்களில் இருந்தும் விரட்டியடித்ததும் அல் அக்ஸா மஸ்ஜிதை முஸ்லிம்களின் ஆளுமைக்குள் கொண்டு வந்ததும் ரமழான் மாதத்திலேயே.

ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் மொங்கோலிய படைகள் ஆசியா முழுவதும் தமது அராஜக அட்டகாசத்தை புரிந்து கொண்டிருந்தனர். செல்லும் வழியில் காண்பதை எல்லாம் அழித்து தரைமட்டமாக்கினர். “மனிதர்களின் பாவங்களுக்கு தண்டனை வழங்குவதற்காக இறைவனால் அனுப்பட்ட சவுக்கு” என்பதாக ஜெங்கிஸ் கான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான். ஹிஜ்ரி 617 இல் சம்ர்கந்த்,ராய் மற்றும் ஹம்தான் மாநிலங்கள் வாள்களுக்கு இரையாகின. 700,000 இற்கும் அதிகமான மக்கள் கொலை அல்லது கைது செய்யப்பட்டனர். ஹிஜ்ரி 656 இல் ஜெங்கிஸ் கானுடைய பேரனான ஹுலாகு, இந்த அட்டூழியத்தை தொடர்ந்தான். முஸ்லிம் உலகின் முன்னணி நகரமான பக்தாத் கூட விட்டு வைக்கப்படவில்லை. இப்பெரும் வெறியாட்டத்தில் கிட்டத்தட்ட 1,800,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக பன்றி இறைச்சியையும், மதுபானத்தையும் அருந்துவதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டனர். எஞ்சி இருந்த முஸ்லிம்கள், அளவுக்கதிகமாக மதுபானம் அருந்தப்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். மஸ்ஜித்கள் தோறும் மதுபானம் தெளிக்கப்பட்டது; தொழுகைக்கான அதான் கூட மறுக்கப்பட்டது. இவ்வாறான பொறுக்க முடியாத அட்டூழியங்கள் முஸ்லிம் உலகில் பீடித்திருந்த நிலையிலும், ஐரோப்பாவும் அதற்கு சரணடைய இருந்த நிலையிலும், அல்லாஹ் எகிப்தின் மாம்லூக்களில் இருந்து சைபுத்தீன் குத்ஸ்z எனும் மா வீரரை திரண்தெழச் செய்தான். இவர் முஸ்லிம் படைகளை அணி திரட்டிக் கொண்டு ஐன் ஜாலூத் எனும் இடத்தில் ஹிஜ்ரி 658, ரமழான் 26 அன்று மொங்கோலிய படைகளை சந்தித்தார். மிகுந்த அழுத்தத்துக்கு மத்தியிலும், முஸ்லிம்கள், அல்லாஹ்வின் உதவியைக் கொண்டும், தந்திரோபாய உத்திகளின் மூலமும், அச்சமற்ற துணிச்சலுடனும் மொங்கோலிய படைகளை சிதறடித்து, இந்த அக்கிரம அலைகளின் போக்கை அணைத்தனர். முழு நாகரிக உலகமும் இந்த இஸ்லாமிய மகன்களின் துணிச்சலையும், வெற்றியையும் கண்டு வியந்து, பாராட்டி, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ரமழானுடைய இந்த ஆன்மிக சக்தி தான், எமது மூதாதையர்கள் எந்தளவு கஷ்டமான சவால்களையும் இலகுவாக எதிர் கொள்ள வழிவகுத்தது. பகல் பொழுதை குதிரைகளிலும், இரவு நேரங்களில் அல்லாஹ்வின் அன்பையும் பாவ மன்னிப்பையும் எதிர்பார்த்து வணக்கங்களில் ஈடுபடுவதுமாக, தொடர்ச்சியான செயற்பாடுகளை கொண்ட காலமாக இருந்தது.

இன்று முஸ்லிம் சமூகம் வறட்சி,இராணுவ ஆக்கிரமிப்பு, பரவலான துஷ்பிரயோகம், மற்றும் சடவாத சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றது. நிச்சயமாக நாம், எம் அன்புக்குரிய நபி (ஸல்) அவர்கள், அவர்கள் வழி நின்ற அபாரமான சஹாபாக்கள், தாரிக் பின் zஸியாத், குத்ஸ்,ஸலாஹுத்தீன் மற்றும் எண்ணற்ற இஸ்லாமிய வீரர்களின் பாதையில் நடக்கக்கூடிய நம்பிக்கையாளர்களை வேண்டி நிற்கின்றோம்; நிச்சயமாக நாம், இறை மறுப்பாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு கிலி கொள்ளாத, அதே வேளை நம்பிக்கை கொள்ளும் மக்களுடன் பணிவாகவும், அன்பாகவும் நடக்கக்கூடிய நமபிக்கையாளர்களை வேண்டி நிற்கின்றோம்; வெறுமனே தாகித்தோ, பசித்தோ இருக்கும் நோன்பை விட, முழுமையான நோன்பு நோற்கக்கூடிய அத்தகைய முஸ்லிம்கள் தேவைப்படுகின்றனர்.

இஸ்லாத்தை இந்த பூமியின் எல்லா மூலைகளுக்கும் எடுத்துச்செல்லக்கூடிய, இந்த காலப்பகுதிக்கு பொருந்திச் செல்லக்கூடிய ஒரு முஸ்லிம் பரம்பரையை எழச்செய்வானாக…! மேலும் அவர்களுக்கு திடமான அத்திபாரத்தை வழங்குவதற்கான பலத்தையும், வெற்றியையும் எமக்கு நல்கச் செய்வானாக…! ரமழானிலும், அதற்கு பின்னரும் எமது இஸ்லாத்தை எடுத்துச்செல்லக்கூடிய கூட்டத்தினரில் எம்மைச் சேர்ப்பானாக…! மேலும் தாம் செய்யாத ஒரு செயலை பிறருக்கு ஏவும் கூட்டத்தில் எம்மை சேர்க்காதிருப்பானாக…!

நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஸலாம் கூறிக்கொண்டு இருக்கின்றனர். நம்பிக்கையாளர்களே..! நீங்களும் அன்னாருக்கு என்றென்றும் உங்களது ஸலாத்தை தெரிவிப்பீர்களாக…!

– Dr. Abdullah Hakim Quick (http://www.islamicity.com/Articles/articles.asp?ref=IC0211-1786)

தமிழில்: முஹம்மது மfபாஸ்

நன்றி - www.puttalamonline.com

பெண்ணே பொறாமை வேண்டாம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு....
பெண்ணே பொறாமை வேண்டாம்!

 
பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.

பெண்களின் பொறாமைக் குணம் ஆச்சர்யமானது. பொறாமை நெருக்கமானவர்களுக்கு மத்தியில் தான் ஏற்படும். அமெரிக்காவில் இருக்கும் ஒருவன் மீது இலங்கையில் இருப்பவன் பொறாமை கொள்ள மாட்டான். அடுத்து ஒரே துறையில் இருக்கும் இருவருக்கிடையே தான் பொறாமை ஏற்படும். ஆனால் பெண்களின் பொறாமை ஆச்சர்யமானது.

தனது சகோதரிக்கு அழகிய கணவன் கிடைத்திருக்கிறான் என்று பொறாமை கொள்ளும் பெண்கள் இருக்கின்றனர். சில பெண்கள் தமது குடும்ப வாழ்வில் பல சிரமங்களை சந்தித்திருப்பர். கணவனால் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டிருப்பர். இவர்கள் தங்களது மருமகள்களைப் பார்க்கின்றனர். தமது மகன்கள் அவர்களை அடிப்பதில்லை, தமது மருமகள் தாம் அனுபவித்த கஷடங்களை அனுபவிக்காமல் மகிழ்வாக வாழ்வதைப் பார்க்கும் போது சில மாமிகளுக்குப் பொறாமை ஏற்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் பெரும் இன்பத்தை நிறுத்த ஏதேனும் செய்ய முடிந்தால் செய்வார்கள். அப்படி இல்லையென்றால் புறம் பேசி, கோள் சொல்லி அல்லது அவதூறு கூறி அவளது கௌரவத்தைக் குறைக்க முயல்வார்கள். இந்தப் பொறாமைக் குணத்தால் மன அமைதி கெடுகின்றது. அல்லாஹ்வின் அதிருப்திக்கும், மக்களின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடுகின்றது. இது தேவைதானா?

‘நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்’ என அல்லாஹ்வின் தூதர் ஏவியுள்ளதை எடுத்து நடக்கக் கூடாதா

‘அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியதற்காக இம் மனிதர்கள் மீது அவர்கள் பொறாமை கொள்கின்றனரா?’ (4:54)

அல்லாஹ் உங்களில் ஒருத்திக்கு அழகான கணவனை அல்லது குழந்தைகளை வழங்கியதற்காகப் பொறாமை கொள்கிறீர்களா? அல்லாஹ் ஒருத்திக்கு பணத்தையும் பேரையும் புகழையும் வழங்கியிருப்பதற்காக உங்களுக்குப் பொறாமை ஏற்படுகின்றதா? அப்படியாயின் நீங்கள் அல்லாஹ்வை அல்லவா குறை காண்கின்றீர்கள்?

நீங்கள் பொறாமைக்காரியாக இருந்தால் உங்கள் நிம்மதியையும் மன அமைதியையும் நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் யார் மீது பொறாமை கொள்கிறீர்களோ அவர்கள் சந்தோசப்படும் போதெல்லாம் உங்களுக்குக் கவலையை ஏற்படும். இது தேவை தானா?

உங்களோடு கூட இருப்பவர்கள் வாழ்வில் சந்தோசங்களை அனுபவிக்கும் போது அவர்கள் மீது பொறாமை கொள்வதை விட்டு விட்டு அவர்களை வாழ்த்தக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைக்காதது உங்கள் தோழிக்கோ உறவுக்காரப் பெண்ணுக்கோ கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் உள்ளத்தில் ஷைத்தான் புகுந்து விளையாட இடமளிக்காதீர்கள். பொறாமைக் குணம் எட்டிப் பார்க்கும் போதே அல்லாஹ் தான் நாடியதை நாடியவர்களுக்கு வழங்குவான். இதைப்பற்றி நான் எதற்கு அலட்டிக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

‘இவர்களுக்குப் பின் வருவோர், ‘எங்கள் இரட்சகனே! எங்களையும், நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இன்னும், நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்பு டையவனுமாவாய்’ எனக் கூறுவார்கள்.’ (59:10)

இவ்வாறு துஆச் செய்து மனதில் குரோத எண்ணம் தலைகாட்டுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ளுங்கள்.

உங்களுடன் கூட இருப்பவர்கள் சிறப்பை அடையும் போது மகிழ்வடையக் கற்றுக் கொள்ளுங்கள். பொறாமை கொண்டு அவர்களின் அந்தஸ்தையும், மகிமையையும் குறைக்கும் வண்ணம் பேசித் தொலைக்காதீர்கள். கூட இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது முகத்தை சுருட்டிக் கொண்டு சோகத்தில் வாடாதீர்கள். மலரும் பூக்களைக் கண்டு மனம் சோர்வடையலாமா? பூக்களின் நறுமணத்தை சுவாசிக்காமல் மூக்கை மூடிக் கொள்ளலாமா? எனவே, பொறாமை கொள்ளாதீர்கள். பொறாமை மூலமாக அல்லாஹ்வின் அன்பையும் மக்களது நேசத்தையும் இழந்து மன அமைதியையும், நிம்மதியையும் இழந்து கோள் சொல்லி, புறம் பேசி, அவதூறு கூறி, பாவத்தைத் தேடாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் பிறர் மீது பொறாமை கொள்ளக் கூடாது. பிறர் உங்கள் மீது பொறாமை கொள்ளும் விதத்தில் நடந்து கொள்ளவும் கூடாது. இதிலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் வளங்களையும், உயர்வையும் அடையும் போது கர்வம் கொள்ளாதீர்கள். நீங்கள் அடையும் வளங்களால் உங்களைச் சூழ இருப்பவர்களும் நலம் பெறும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். அதே வேளை பிறரின் பொறாமையால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்க பின்வரும் விடயங்களில் அதிக அக்கறை செலுத்துங்கள்.

01. பொறாமைக்காரனின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்

‘இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக!’ (113:5)

என்று பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்குக் கற்றுத் தந்துள்ளதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.

02. அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் வாழுங்கள்

‘எவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கிறாரோ அவருக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்து வான்’ (65:2) என்ற குர்ஆன் வசனத்தை மனதில் கொள்ளுங்கள்.

03. அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து தவக்குலுடன் வாழுங்கள்

‘எவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கின்றாரோ, அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுபவன். ‘ (65:3)

என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

04. பொறாமைக்காரர்கள் என்ன செய்வார்களோ என்று வீணே எண்ணி, எண்ணி கவலை கொள்ளாதீர்கள். அவள் சூனியம் செய்வாளோ, வசியம் செய்வாளோ, எதையாவது மந்திரித்துத் தந்து விடுவாளோ, என் மீது உள்ள பொறாமையில் எனது மாப்பிள்ளையை வளைத்தப் பொட்டு விடுவாளோ, எனக்கும் என் கணவருக்கும், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தி விடுவாளோ என சும்மா போட்டு மனதை அலட்டிக் கொண்டிருக்காதீர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக செயற்படுங்கள்.

05. உங்கள் எதிரியால் ஏதேனும் கஷ்டங்கள் ஏற்பட்டால் பொறுத்தக் கொள்ளுங்கள்

‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’ (2:153)

என்ற குர்ஆன் வசனத்தை நினைத்துப் பாருங்கள். பொறுமை மூலம் அல்லாஹ்வின் உதவியைப் பெறலாம். எனவே, பொறுமையாக இருந்து அல்லாஹ்வின் உதவி மூலம் உங்களது எதிரியை வீழ்த்த முயலுங்கள்.


வலையுகம்: காஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் முன்மாதிரியும்.

வலையுகம்: காஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் முன்மாதிரியும்.: 1953ஜூலை 26 அன்று மோன் காடாபாரக் தாக்குதல் வழக்கில் 76 நாள்கள் தனிமைச் சிறையில் இருந்துவிட்டு பிறகு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது...

Wudu (Ablution)

Assalaamu Alaikkum Warahmatulahi Wabarkatuh........!!!
Bhismillah........!!!


Wudu (Ablution)


****Niyat*****

Wudu or ablutions or washing of hands, face, feet and wetting of head is a major prerequisite obligatory on every Muslim as a preparation of his or her SALAH. A Salah without wudu becomes invalid, unless preceded by a Tayammum. Wudu is also a necessity before touching Al Quraan, before proceeding for Tawwaf of Holy Kaaba, before a funeral prayer and some prefer to do wudu before going to bed too.

The explicit order to perform Wudu is from ALLAH (swt): Surat Al Maidah- Ayat 6.....



Oh you who believe! When you stand (intend) to offer the Salah (the prayer), then wash your face and hands (forearms) upto the elbows, rub (by passing wet hands over) your heads, and (wash) your feet up to the ankles. If you are in a state of Janaba purify yourselves (bathe your whole body).....

Our Holy Prophet used to perform wudu before every prayer, and sometimes he offered all the five prayers with one wudu. So it is encouraged to perform wudu before every prayer but not obligatory.

One should openly declare his or her intention (Niyyat) of performing Wudu before the start, mentioning the name of ALLAH.

Hadith: Abu Dawud 1:75 mentions Prophet said: "There is no wudu for he who does not mentions ALLAH's name over it"


Before we perform Salah we must first prepare ourselves. This preparation includes making sure that we are clean from any physical impurities and performing Wudu.

Wudu (ablution) is required for performing Salah. We cannot offer our Salah without first making Wudu. Here are the steps to take:

1. First, make the Niyyah (intention) in your heart that this act of Wudu is for the purpose of preparing for Salah, and say: "Bismillah" (in the name of Allah).



2. Wash both hands up to the wrists (starting with the right hand) three times, making sure that water has reached between the fingers.

3. Take water with your right hand, put it into your mouth and rinse thoroughly three times.

4. Take water with your right hand, splash it into your nose and blow it out three times. (Use the left hand if necessary to help blow it out).

5. Wash your whole face three times repeatedly. (The whole face includes: the right ear to the left ear, and the forehead to the bottom of the chin).

6. Wash the right arm thoroughly from wrist to elbow three times, and make sure that no part of the arm has been left unwashed. Repeat with the left arm.

7. Move the palms of the wet hands lightly over the head, starting from the top of the forehead to the back of the head, and passing both hands over the back of the head to the neck, and then bringing them back to the forehead.

8. With the same water, rub the grooves and holes of both ears with the wet index fingers, while also passing the wet thumbs behind the ears from the bottom upward.

9. Finally, wash both feet to the ankles three times, starting with the right foot. Make sure that water has reached between the toes and covered the rest of the foot.

At the end of the above steps recite: "Ashhadu alla ilaha illallahu, wa ash-hadu anna muhammadan abduhu wa rasuluhu.”



"أشهد أن لا إ له إلا الله وحده لا شريك له،

و أشهد أن محمدا عبده و رسوله"

This means:

“I bear witness that there is no deity worthy of worship except Allah alone, and I bear witness that Muhammad is His servant and His messenger.”