Digital Time and Date

Welcome Note

Saturday, June 30, 2012

MANHATTAN 1609 vs. 2009: Natural Wonder to Urban Jungle

MANHATTAN 1609 vs. 2009: Natural Wonder to Urban Jungle

Before it was an urban jungle, Manhattan was home to the Lenape Indians, who called the island Mannahatta, or "land of many hills."

Built up and--thanks to land reclamation--ou t, downtown Manhattan, circa 2008, towers over the New York City island as it was more than 400 years ago (computer rendering at right), when Europeans first set eyes on it--complete with campfires.

The images were created for the Wildlife Conservation Society's Mannahatta Project, which launched April 20 and includes a book, museum exhibition, and Web site. The yearlong celebration of Manhattan's natural history aims to recreate the island as it appeared 400 years ago, on the day English explorer Henry Hudson arrived in 1609.

ஆப்பிரிக்கா பிக்மிஸ் இனத்தவரின் பற்றிய தகவல் !!!

ஆப்பிரிக்கா பிக்மிஸ் இனத்தவரின் பற்றிய தகவல் !!!

ஆப்பிரிக்காவில் மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த மத்திய காடுகளில் இன்னும் ஒரு பிரிவினர் பழங்குடியினரின் வாழ்க்கை நிலையில் இருந்து மாறமல் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஒரு மீட்டர் உயரம் வரை மட்டுமே இருக்கின்றனர். இவர்கள் தான் பிக்மி இனத்தவர். இவர்கள் சுமார் 100 பேர் கொண்ட குழுவினராக வாழ்கின்றளர். இவர்கள் நிலையாக ஒரே இடத்தில் வாழ்வதில்லை. எங்கெல்லாம் உணவு கிடைக்கிறதோ, அங்கே போய் தங்கள் குடியிருப்பை மாற்றிக் கொள்கின்றனர். தற்போது இவர்களது நாகரிகம் சற்று வளர்ந்துள்ளது. பிக்மி இனத்தவரின் வழக்காமான செயல்கள்ல் ஒன்று தேன் எடுப்பது. மற்றொன்று வேட்டையாடுவது.

பிக்மிஸ் இனத்தவர்கள் 'வைண்ட் பைப்' என்ற ஒருவகையான ஆயுதத்தை வைத்துள்ளனர். இதில் ஒருவகையான பச்சைத் தவளையின் உடலில் இருந்து கொடிய விஷத்தை எடுத்து, அதை சிறிய ஊசி போன்ற மரகுச்சிகளில் தடவுகின்றனர். பின்னர் மூங்கில் குழாயினுள் பொருத்துகின்றனர். பின்னர், மூங்கில் குழாயை வாயில் வைத்து இலக்கை நோக்கி ஊதவும், உடனே விஷம் தடவப்பட்ட மரக்குச்சி விழங்குகளின் உடலில் பாய்கிறது. இப்படி விலங்குகளை கொன்று, வேட்டையாடுகிறார்கள்.

அந்நியப் பெண்களுடன் இணையதளம் மூலம் பெண்களுடன் அரட்டை அடிக்கும் வழக்கம். இஸ்லாத்தின் பார்வையில் இது ஆகுமான விடயமா?


அந்நியப் பெண்களுடன் இணையதளம் மூலம் பெண்களுடன் அரட்டை அடிக்கும் வழக்கம். இஸ்லாத்தின் பார்வையில் இது ஆகுமான விடயமா?

உலகில் ஒருவர் எங்கிருந்தாலும் அவருடன் சுலமாக பேசும் வசதி இணையதளத்தில் உள்ளது. இதைப் பலர் முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்நியப் பெண்களுடன் ஆபாசமாகவும் குழைந்தும் பேசுகின்றனர். பொழுது போக்கிற்காக தேவையற்ற பேச்சுக்களை மணிக்கணக்கில் பேசுபவர்களும் உண்டு. இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

(அல்குர்ஆன் 33:32,33)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (6612)

அந்நியப் பெண்ணுடன் தனிமையில் பேசுவது தவறு என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் தன் மீது சந்தேகம் வராத அளவிற்கு கவனமாக நடந்து கொண்டார்கள்.

ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். - உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது- (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள்.

உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்'' என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், "அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)'' என்று சொன்னார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான் ...அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்... என்று நான் அஞ்சினேன்'' என்று சொன்னார்கள்.

புகாரி (3281)

மேலும் அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பதும் கூடாது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டும் உரையாடல் நடந்தால் அதுவும் தனிமை தான்.

ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 2611)

உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: அஹ்மத் 109)

கீரிப்பிள்ளை இனம் அழிவின் விளிம்பில் !!!


கீரிப்பிள்ளை இனம் அழிவின் விளிம்பில் !!!

வனவிலங்குகள் என்றாலே சிங்கம், புலி, யானை, சிறுத்தை, கரடி, ஓநாய் என்ற ஊனுண்ணிகள்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், சத்தம் போடாமல் வனத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுபவை சிறு ஊன் உண்ணிகள் எனப்படும் பூனை வகைகள், கீரி வகைகள் மற்றும் நீர் நாய், மர நாய் போன்றவைகளாகும். இவையே விவசாயிகளின் தோழர்களாகவும் அழைக்கப்படுகின்றன.

மாமிச பட்சிகளான ஊனுண்ணிகளில் 5 முதல் 8 கிலோ எடை வரையுள்ள விலங்குகளே சிறு ஊன் உண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. நகரமயமாக்கலினாலும், விவசாய நிலங்கள் அழிந்து வருவதாலும் பல வருடங்களுக்கு முன்னர் கிராமங்களில் நமது வீடுகளுக்கு அருகில் சுற்றிக் கொண்டிருந்த இவ்விலங்குகள் தற்போது வனப்பகுதிகளை மட்டுமே நம்பி வாழக்கூடிய நிலையிலுள்ளதால் பெரும்பாலானவை அழிவின் விளிம்பிலுள்ளன
.
மங்கூஸ் எனப்படும் கீரி இனத்தில் காமன் கிரே, ருடி மங்கூஸ், பிரவுன் மங்கூஸ், ஸ்டிரைப்படு நெக் மங்கூஸ் போன்றவை.
கீரிப்பிள்ளை பொதுவான இனங்கள் உள்ளது. 11 அங்குலத்தில் இருந்து 16 அங்குலம் வரை இருக்கும். அவைகளின் ரோமங்களின் நிறம் ஆரஞ்சு, பழுப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்துடன் இருக்கும். அவைகளுக்கு குறுகிய கால்கள் இருக்கும் மற்றும் ஆண்கள் பெண்களை பெரிதாக இருக்கும். அவைகள் இரவில் நிலவொளியில் வேட்டையாடும்.

கீரிகள் புல்வெளிகளிலும், வறண்ட பகுதிகளிலும் பொந்து அமைத்து தனியாகவோ அல்லது ஜோடிகள் வாழ்கிறது. மற்றும் பாறைகளின் இடையே ஒரு குகை போன்ற அமைப்பு அமைத்து வாழ்கிறது.
பூச்சிகள், பாம்புகள், பல்லிகள், பறவைகள், விலங்குகள், நில நீர் வாழ்வன, அழுகிய, முட்டை மற்றும் எப்போதாவது பழத்தில் உள்ள கொட்டையை உணவாக உட்கொள்கிறது.

கீரி ஒரு வருடத்தில் பல முறை குட்டிபோடுகிறது கருகாலம் 60 நாட்கள் மூன்று அல்லது நான்கு குட்டிகள் போடும் குட்டிகளை பெண்கீரியே வளர்க்கும். 3 வாரத்தில் அவைகள் கண்களை திறக்கும் மற்றும் 4 வது வாரத்தில் அவைகள் திட உணவு சாப்பிட தொடங்குகிறது 50 நாட்களில் அவைகளின் வயது எடை மூன்று மடங்காக ஆகும். வயது 9, 10 வாரங்களில் பாலியல் முதிர்ச்சி அடைகிறது. கீரி வகைகள் 40 கிளையினங்கள் உள்ளன.

அழகான இவற்றின் வால் முடியைக் கொண்டு ஓவியம் தீட்டுவதற்கான தூரிகைகளைத் தயாரிப்பதற்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டதால் கீரிப்பிள்ளை இனம் அதற்காகவே அழிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் இறைச்சிக்காகவும் இவை பெருமளவில் வேட்டையாடப்பட்டு விட்டன.

உங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு எது?

உங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு எது?


இந்த பதிவின் நோக்கம், சைவ உணவின் முக்கியத்துவம் குறித்து தான். உலகம் முழுவதிலும் அசைவ உணவுக்கு மாற்றான இயக்கங்கள் எழுந்து வருகின்றன. காரணம்,மனித பரிணாம வளர்ச்சியில் அவனது இயற்கை உணவு என்பது தாவரங்கள் மட்டுமே. இறைச்சி என்பது விலங்கு உலகத்திற்கு படைக்கப்பட்டது. இதில் எது சரி. எது தவறு என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்கட்டும். சைவ உணவு மட்டுமே மனிதனுக்கு பொருந்திய உணவு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

காய்கறிகள் என்ற மரக்கறிகள் எளிதில் செரிக்க கூடியது. மனித உடலின் இயங்கு மண்டலத்திற்கு தேவையான சக்திகள் அனைத்தும் சைவ உணவில் அதிகமாகவே இருக்கின்றன. இவை மட்டுமே மனித உடலின் செரிமான மண்டலத்திற்கு பொருந்தி போக கூடியவையும் கூட. இருந்தாலும் சில நேரங்களில் மாமிச உணவும் பொருந்தி தான் போகிறது. ஆனால் அளவோடு உண்டால் அது மருந்தாக அமைகிறது.

சரி, எந்த இரத்த வகையினருக்கு எந்த மாதிரியான உணவு முறை பொருந்து என்று பார்க்கலாம். அதாவது, இரத்தத்தின் வகை என்பது கார, அமில நிலைப்பாடுகளை பொருத்து அமைகிறது. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஆண் தான் பொருத்தமாக இருக்கும் என்பார்களே..அது ஏன்? இரத்தத்தின் தன்மையை வைத்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

ஆக..இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். இந்த பதிவில் எந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் பொருந்தும் என்று பார்க்கலாம்.

'ஏ' பிரிவு இரத்த வகை

இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய்,நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். 'ஏ' இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் 'லெக்டின்' என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.

'பி' இரத்த வகை

மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கும். சோளம், கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.

'ஏ'பி' பிரிவு இரத்த வகை

இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய்யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.

'ஓ' இரத்த பிரிவு

இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ்,பயறு வகைகளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காணப்படுவதுண்டு. அது போல் முட்டைகோஸ்,காலிபிளவர்,கடல் உயிரினங்கள்,அயோடின் சேர்நத உப்பு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

இந்த விடயங்கள் ஒரு வேதியியல் மற்றும் சித்த மருத்துவம் தெரிந்த நண்பரின் ஆலோசனையில் பதியப்பட்டது. இங்கு குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் உங்களுக்கு ஒத்து வராத ஒன்றாக நீங்கள் அறிந்தால் இங்கு குறிப்பிடப்படும் தகவலும் பொருந்துவதாகும். மற்ற படி இந்த தகவல் பொதுவானது என்பதை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். நன்றி.

கின்னஸ் புத்தகத்திலும் தன் பெயரை பதித்த இரண்டாவது பைசா கோபுரம் அபுதாபியில் உள்ள கெபிடல் கேட் !!!


கின்னஸ் புத்தகத்திலும் தன் பெயரை பதித்த இரண்டாவது பைசா கோபுரம் அபுதாபியில் உள்ள கெபிடல் கேட் !!!

சாய்ந்து வரும் காரணமாக இத்தாலியின் பைசா நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “பைசா சாய் கோபுரம்” இன்றும் புகழ் பெற்றுக் காணப்படுகிறது. இந்தக் கோபுரம் 5.5 பாகை சாய்ந்துள்ளது.

தானாக சாய்ந்ததால் பைசா கோபுரம் புகழ்பெற்ற நிலையில் அதன் சாதனையை முறியடிப்பதற்காக டுபாயில் 18 பாகை சாய்ந்த நிலையில் கோபுரமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள “கெபிடல் கேட்” எனும் இந்த கோபுரம் 160 மீட்டர் உயரமும் 35 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதனை நிர்மாணிக்க 10 ஆயிரம் டொன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. 15 ஆயிரம் கியூபிக் மீட்டர் கொங்கிரீட் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த இரண்டாம் பைசா கோபுரம் கின்னஸ் புத்தகத்திலும் தன் பெயரை பதித்துவிட்டது.

சீனாவின் சோகம் மஞ்சள் ஆறு !! ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்து இருக்கிறார்கள் !!!


சீனாவின் சோகம் மஞ்சள் ஆறு !! ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்து இருக்கிறார்கள் !!!

மஞ்சள் ஆறு (சீன மொழி: 黃河, ஹுவாங் ஹ) சீனாவின் 2-வது நீளமானதும் உலகின் 6-வது நீளமானதும் ஆகும். மேற்கு சீனாவின் சிங்ஹாய் (Qinghai) மாகாணத்திலுள்ள பாயன் ஹர் மலைத்தொடரில் தோன்றி 9மாகாணங்கள் வழியாக 5,464 கிமீ (3,398 மைல்) தொலைவு ஓடி பொகாய் கடலில் கலக்கிறது. மஞ்சள் ஆற்றுப் படுகை கிழமேற்காக 1900 கிமீ (1,180 மைல்) மற்றும் வடக்கு தெற்காக 1100 கிமீ (684 மைல்) வரை பரவியுள்ளது. இதன் படுகையின் மொத்தப்பரப்பு 742,443 சதுரகிமீ (290,520 சதுர மைல்).

மஞ்சள் ஆறு சீன நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கேயே வட சீன நாகரிகம் தோன்றியது. இவ்வாற்றுப்பகுதி பழங்காலத்தில் மற்ற பகுதிகளை விட மிகவும் செழிப்பாக வளம் மிகுந்து இருந்தது. ஆனால் அடிக்கடி இவ்வாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சீனாவின் துயரம்என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது

பழங்கால சீன இலக்கியங்களில் மஞ்சள் ஆறானது ஹெ (He (河)) என்று குறிக்கப்படுகிறது. அதற்கு தற்போதையசீன மொழியில் ஆறு என்று பொருள். (பழங்காலத்தில் ஆறு என்பதை குறிக்க 川 மற்றும் 水 என்ற வடிவத்தை பயன்படுத்தினர்). மஞ்சள் ஆறு என்ற பதம் முதலில் மேற்கு ஹான் வம்சத்தில் (206 BC–AD 9)) உருவான ஹானின் புத்தகம் என்பதில் குறிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் ஆறு சில முறை சேற்று நீரோட்டம் என கவித்துவமாக குறிப்பிடப்படுவதுண்டு. 'மஞ்சள் ஆறு தெளிவாக ஒடும் போது' என்று சீனத்தில் சொலவடை நடக்க இயலாத செயல்கள் குறித்து சொல்லப்படுவதுண்டு.
பெயர் காரணம்

இவ்வாற்று நீர் மஞ்சளாக இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. மஞ்சள் ஆற்றின் மேல் மற்றும் நடு பகுதியானது காற்றடு வண்டல் மேட்டு நிலப்பகுதியை கடந்து வருகிறது. இந்த காற்றடு வண்டலே மஞ்சள் நிறத்திற்கு காரணமாகும்.

மஞ்சள் ஆற்று பண்பாடு

சீன நாகரிகம் மஞ்சள் ஆற்றும் படுகையிலேயே தோன்றியதாக நம்பப்படுகிறது. இது 'தாய் ஆறு' எனவும் 'சீன நாகரிகத்தின் தொட்டில்' எனவும் சீனர்களால் குறிப்பிடப்படுகிறது. நெடிய சீன வரலாற்றில் மஞ்சள் ஆறு சீனாவின் வரம் மற்றும் சாபம் என முரண்பாடாக கருதப்பட்டுள்ளது. எனவே இதற்கு சீனாவின் பெருமை மற்றும் சீனாவின் துயரம் என முரண்பாடான பட்டப்பெயர்கள் உண்டு.

மஞ்சள் ஆறு ஏற்படுத்திய சேதம்

ஆற்றின் நிறம் மஞ்சளாக இருக்க காரணம் இது நன்கு தூளான சுண்ணாம்பு வண்டலை காற்றடு வண்டல் மேட்டு நிலத்தில் இருந்து தன் ஓட்டத்தில் கொணர்வதே ஆகும். நூற்றாண்டுகளாக படியும் வண்டல் மற்றும் கரையினால் ஆற்றில் வெள்ளம் ஏற்படுகிறது. உலகின் மோசமான வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்தியது மஞ்சள் ஆறாகும். 1887 மற்றும் 1931ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர்.

1938ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி இரண்டாம் சீன ஜப்பானிய போரின் போது சியங் கை செக் (Chiang Kai-Shek)தலைமையிலான சீன தேசிய துருப்புகள் ஆற்றின் கரைகளை உடைத்து பெரிய வெள்ளத்தை உருவாக்கினர்.வெள்ளம் உருவாக்கியதின் நோக்கம் ஜப்பானிய துருப்புகளின் முன்னேற்றத்தை தடுப்பதாகும். இந்த வெள்ளத்தில் 54,000 சதர கிமீ பரப்பு மூழ்கியது மேலும் 500,000–900,000 வரையான உயிர்கள் பலியான .ஜப்பானிய தரப்பில் பலியான துருப்புகளின் விபரம் தெரியவில்லை. இந்த வெள்ளம் ஜப்பானி துருப்புகள் ஜின்ஜோகு (Zhengzhou) நகரத்தை கைப்பற்றுவதை தடுத்தாலும் அவர்கள் அப்போதய சீனாவின் தலைநகரான வுஹேனை (Wuhan) கைப்பற்றுவதை தடுக்க முடியவில்லை

தனிச் சிறப்புப் பண்பு

மஞ்சள் ஆறு 1.6 மில்லியன் டன் வண்டலை ஓர் ஆண்டுக்கு காற்றடு வண்டல் மேட்டுநிலத்திலிருந்து கொணர்கிறது.
1972ல் முதலில் உலர்ந்தது பின் அடிக்கடி கீழ்பகுதி ஆறு உலர்ந்தது குறிப்பாக ஜினான் (Jinan) முதல் கடலை அடையும் பகுதி உலர்ந்தது. 1997ம் ஆண்டில் 226 நாட்களுக்கு உலர்ந்து காணப்பட்டது. குறைந்த நீர் வரத்துக்கு காரணம் அதிகமான விவசாய பயன்பாட்டுக்கு நீர் எடுக்கப்படுவதே ஆகும். 1950ம் ஆண்டில் எடுக்கப்பட்டதை விட தற்போது ஐந்து மடங்கு நீர் அதிகமாக எடுக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு கணக்கின் படி இதன் நீரை ஆதாரமாக கொண்டு 140மில்லியன் மக்களும் 74,000 சதுர கிமீ(48,572 சதுர மைல்) நிலமும் பயன்பெறுகின்றன. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழைக்காலத்தில் இதில் நீர் வரத்து அதிகமாக இருக்கும். அக்காலத்தில் ஓர் ஆண்டில் செல்லும் அளவில் 60% அளவு நீர் வரத்து இருக்கும். மார்ச் மற்றும் ஜூன் மாதங்களிலேயே விவசாயத்திற்கு அதிக அளவிலான நீர் தேவைப்படும். வெள்ளக்கட்டுப்பாடு, மின்சார உற்பத்தி மற்றும் தேவையான காலத்தில் நீரை பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக இதன் குறுக்கில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதிகளவில் சேரும் வண்டலின் காரணமாக இவற்றின் ஆயுள் காலம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். முன்மொழியப்பட்ட தெற்கு-வடக்கு நீர் மாற்றல் திட்டப்பணியின் படி யாங்சே ஆற்றின் நீரானது பல திட்டங்கள் மூலம் மஞ்சள் ஆற்றுக்கு திருப்பிவிட திட்டமாகியுள்ளது. மேற்கில் இரண்டு ஆறுகளும் அருகில் உள்ள பகுதி, ஹான் (Han)ஆற்றின் மேல் பகுதி , பெரும் கால்வாய் என மூன்று திட்டங்கள் இதில் உள்ளன.

மஞ்சள் ஆற்றின் மிக அதிகளவிலான வண்டல் குறைவான நீர் வரத்து உள்ள காலங்களில் ஆற்றின் அடியில் படிகிறது. இதன் காரணமாக ஆற்றின் உயரம் அதிகரிக்கிறது. மிக அதிக நீர்வரத்து உள்ள காலங்களில் வெள்ளம் உருவாகி அவை ஆற்றின் கரையை உடைத்து அருகிலுள்ள நிலங்களில் பாய்கிறது. மேலும் வெள்ளம் வடிந்த பின்பும் ஆற்றின் அடி உயர்ந்து இருப்பதால் ஆறானது பழைய பாதைக்கு திரும்பாமல் வேறு பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. தற்காலத்தில் கரையின் பலத்தை மேம்படுத்தி வெள்ளத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.
மஞ்சள் ஆற்றின் கழிமுக பரப்பு 8,000 சதுர கி.மீ(3,090 சதுர மைல்). எனினும் 1996ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இது குறைந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு மண் அரிப்பே முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது.


சிந்தித்து பார்க்க வேண்டிய விசையம் !!!

சிந்தித்து பார்க்க வேண்டிய விசையம் !!!

இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல,
பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது.
இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்? அந்த கலாச்சார சீரழிவை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இங்கே ஒரு சிறப்புப் பார்வை :

1. தம்பதியருக்கு இடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாதபட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள். அதேபோல தாம்பத்திய உறவின்போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.

2. திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கு இடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு இன்னொரு காரணம்.

3. திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் அதிகம் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்த கற்பனைகள் பொய்யாகும்போது - தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, அவர்களில் சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள். இந்த உறவு மாற்றம் அவர்களுக்கு சரியென்றே படுவது இன்னும் வேதனை.

4. வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்கு காரணமாகிறது. இதுதவிர, கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரமும் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அதுபோகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.

5. ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். இந்த கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.

6. தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

கள்ளத்தொடர்பு - தடுக்க என்ன வழி ?

1. மனைவியை செக்ஸ் விஷயத்தில் திருப்திப்படுத்தினாலே போதும். அவள் வேறு எந்த ஆடவனையும் தவறான பார்வைகூட பார்க்க மாட்டாள்.*

2. மனைவியின் எதிர்பார்ப்புகளை ஒவ்வொரு கணவனும் புரிந்துகொள்வது அவசியம். செக்ஸில் மட்டுமின்றி, அவளது எந்தவொரு எதிர்பார்ப்பையும் பெரும்பாலும் நிறைவேற்ற தயாரானவனாக அவளது கணவன் இருக்க வேண்டும்.*

3. கணவன் இந்த விஷயத்தில் திசை மாறிப்போக காரணம், மனைவியின் சரியான கவனிப்பு இன்மையே. அதாவது, திருமணம் ஆன புதிதில் தங்களை விதவிதமாக அலங்கரித்து கணவனை மகிழ்விக்கும் பெண்கள், திருமணத்திற்கு பிறகு அதை மறந்து விடுகிறார்கள். ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால், அந்த குழந்தையை கவனிக்கிறார்களேத் தவிர, கணவனை கண்டுகொள்வது இல்லை. இந்த லிஸ்டில் இருக்கும் பெண்கள் சிலர்தான் என்றாலும், எல்லாப் பெண்களும் இதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.*

4. எதிர்பார்த்த மனைவி அமையாதது, செக்ஸ் விஷயத்தில் தனது எதிர்பார்ப்புகளை அவள் கண்டுகொள்ளாதது, மனைவியை விடவும் அழகான பெண்ணின் திடீர் நட்பு - இவையே ஒரு கணவன் திசைமாறிப் போக முக்கிய காரணம். மனைவிமார்கள், தங்கள் கணவனை நன்றாக கவனித்துக்கொண்டால் அவன் வேறு பெண்ணை நாடிப்போக வாய்ப்பு மிகக் குறைவு.

- இவை எல்லாம் இருந்தாலும், துணை தவிர வேறு ஒருவருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அது மிகப்பெரும் குற்றம் என்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நினைக்க வேண்டும். இல்லையென்றால், "கதவை தாழ்ப்பாள் போட்டாலும், ஒரு பெண் நினைத்தால் கெட்டுப்போய் விடலாம்" என்ற உண்மைக் கூற்று நிச்சயமாகவே உண்மையாகிவிடும்

கொசுவத்தி சுருளால் ஆஸ்துமா, சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் ???

கொசுவத்தி சுருளால் ஆஸ்துமா, சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம்
நாட்டில் அதிகரித்து வரும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கும், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொசுக்களை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருள்களால் சர்க்கரை நோயை ஏற்படுவதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கொசுவர்த்தி சுருள்கள் ஆஸ்துமா, புற்றுநோய், இதய நோய்கள், வாதங்கள் ஆகியவற்றுடன் இன்சுலின் அளவை குறைத்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

கொசுவர்த்தி சுருள் புகையை சுவாசிப்பதற்கும், வானங்களின் புகையை சுவாசிப்பதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை எனவம் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இனி அல்கஹால் தேடி அலைய வேண்டியதில்லை ?அனைத்து குளிர்பான கடைகளிலும் கிடைக்குமாம் !!!


இனி அல்கஹால் தேடி அலைய வேண்டியதில்லை ?அனைத்து குளிர்பான கடைகளிலும் கிடைக்குமாம் !!!

 
உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்றனர்.

ஆனால், இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ் நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோலாவில் சேர்க்கும் நச்சு கலந்த அமிலம் கேன்சரை உண்டு செய்யும், சிறுக சிறுக உள் எலும்புகளை அறித்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இனி கோக கோலா, பெப்சி போன்ற பானங்களை அருந்துவதில்லை என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு மோகத்தில் இதை அருந்துவதை தவிர்த்து உடல் நலம் பேணுவோமா நாம்.

இல்லை நான் அதை வாங்கி குடிப்பேன் என்று சொல்லுபவர்களும் நம்ம நாட்டில் இருக்க தான் செய்கிறார்கள் என்ன பண்ண முடியும் நாம் சொல்ல வேண்டியது நம்மலுடைய கடமை . இன்னும் கேட்டுபோவேன் என்ன பந்தையம் கட்டுகிறாய் என்று கேட்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது

மாற்றுதிறனாளிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியதை செய்யும் மனிதர்..

மாற்றுதிறனாளிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியதை செய்யும் மனிதர்..

அது என்ன காலிபர் ஷூ ?

கால் ஊனமுற்றவர்கள் அதிலும் போலியோவால் பாதிக்க பட்டவர்கள் 'காலிபர் ஷூ' என்று அழைக்கப்படும் செயற்கை காலை அணிந்து இருப்பார்கள். ஆனால் அது சுகம் அல்ல வலி என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம்.

சொல்லமுடியாத நரக வேதனை அது. சுமார் ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், தொடையிலும், முட்டியிலும் முட்டி மோதி உயிரை உறிஞ்சி எடுக்கும் அளவிற்கு வலி கொடுக்குமாம். தவிரவும் சில நேரம் உடைந்து போய், அடுத்த அடி வைக்க முடியாத அளவிற்கு முடங்கிப் போகச் செய்யும். காலை மடக்கி உட்கார இயலாது, இரு சக்கர வாகனம் ஓட்ட இயலாது. அடிக்கடி காலில் ஏற்படும் காயத்தினால், வலி, மருத்துவம் என்று தொடரும் சிரமங்கள் சொல்லி முடியாது...ஏற்கனவே கால் ஊனமுற்ற வலியோடு இந்த வலியையும் சுமந்துகொண்டுதான் பல ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர்.

நவீன செயற்கை கால்

டாக்டர்.அப்துல்கலாம் அவர்களின் கண்டுபிடிப்பு இது என்பது நாம் பெருமைபடகூடிய ஒரு விஷயம்.

இந்த நவீன செயற்கைகால் ஒன்றின் மொத்த எடையே முக்கால் கிலோ தான். ஷாக்ஸ் மாட்டுவதை போன்று மாட்டிக்கொள்ளலாம். வாகனம் ஓட்டலாம், வலி ஏதுமின்றி வழக்கமான எந்த வேலையிலும் ஈடுபடலாம். பழைய காலிபர் ஷூவின் விலை நான்காயிரம் என்றால் இதன் விலை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும். இந்த விலை காரணமாக புதிய செயற்கைகால் இன்னும் பிரபலமாகவில்லை. இதை பற்றி தெரிந்தவர்கள் இதன் அதிக விலையின் காரணமாக வலியுடன் வாழ்க்கையை தொடருகின்றனர்.



ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு துறையோ பட்ஜெட் காரணமாக பழைய ஷூவையே கொடுக்கின்றனர். வலி இன்மைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றை அதிக விலை காரணமாக வாங்க வழி இல்லாமல் தவிப்பது கொடுமை.


இந்த வலியை அன்றாடம் அனுபவித்தவர் சென்னையை சேர்ந்த திரு.மின்னல் பிரியன். அதன் பிறகு இவர் நவீன காலிபர் வாங்கி அணிந்து அதன் அருமையை முழுமையாக உணர்ந்திருக்கிறார். இத்துடன் இவர் இருந்திருந்தால் நம்மை போன்ற ஒரு சராசரி மனிதராக மட்டுமாகவே இருந்திருப்பார். ஆனால் தான் பெற்ற இன்பத்தை, வலி அனுபவிக்கும் பிறரும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இவர் மேற்கொண்ட செயல் தான் மிக ஆச்சர்யம்.


இவர் பெரிய வசதியானவர் இல்லை, ஆனால் தனக்கு தெரிந்தவர்களிடத்தில் பணம் கேட்டு பெற்று இந்த நவீன ஷூவை மாற்றுதிறனாளிகளுக்காக வாங்கி, அதை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதை ஒரு சேவையாக செய்து வருகிறார். இதுவரை இருபது பேருக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். பழைய காலிபர் ஷூவுடன் ரோட்டில் நடக்க முடியாமல் யாராவது சென்றால், அவர்களிடம் வலிய சென்று அவரது காலை அளவெடுத்து புது ஷூவை வாங்கி அணிவித்து மாட்டி அந்த புதிய நடையை பார்த்து சந்தோஷபடுகிறார் இந்த மின்னல் பிரியன்...!
இவரது இந்த சீரிய சேவைக்கு மிக பக்க பலமாக இருப்பது இவரது துணைவியார் திருமதி பவானி அவர்கள்.

Thursday, June 28, 2012

ஆப்பிளை விட சிறந்தது வாழைப்பழம்!

எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம். இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன.

ஆப்பிளை விட சிறந்தது, பல வகை சத்துகளைக் கொண்டது

ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். கார்போஹைட்ரேட் ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது.

பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் இரும்புசத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது.

மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அளவு ஆப்பிளைவிட வாழைப்பழத்தில் இரண்டு மடங்கு கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் செறிவாக உள்ளது. ஒரு சராசரி வாழைப்பழத்தில் 23 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் சர்க்கரை, 2.6 கிராம் நார்சத்து ஒரு கிராம் கொழுப்பு மற்றும் 9 மில்லி கராம் வைட்டமின் சி உள்ளது. அதாவது உடலுக்கு கூட்டமளிக்கும் 90 கலோரிகள் இதில் உள்ளன.

நரம்புக்கு வலு சேர்த்து புத்துணர்ச்சி தரக்கூடியது

சர்க்ககரை பொருட்களான சுக்ரோஸ், பீக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை இதில் உள்ளது.

இத்துடன் எளிதில் ஜீரணத்தன்மை ஏற்படுத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உள்ளது. உலகின் தலைசிறந்த தடகள வீரர்கள் வாழைப்பழம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பயிற்சியின் போது தங்களுக்கு ஏற்படும் சோர்வை வாழைப்பழம் நீக்கும் தன்மை கொண்டது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி நிரம்ப உள்ளது, இது நரம்பு மண்டலத்தில் வலு சேர்க்கிறது.

இதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் வாழைப்பழம் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாது.

நிக்கோடினில் இருந்து பாதுகாக்கிறது

புகைபிடிக்கும் பழக்கம் உடைய சிலர் அப்பழக்கத்தை திடீர் என விட்டு விடுவர். இவ்வாறு விடுவது தான் சிறந்தது.

இப்பழக்கம் காரணமாக நிக்கோடின் என்ற நச்சுபொருள் ஏற்கனவே உடலில் சேர்த்திருக்கும். வாழைப்பழத்தில் உள்ள பி6, பி12 வைட்டமின், பொட்டாசியம் மெக்னீசியம் ஆகிய சத்துப்பொருட்கள் இந்த நிக்கோடினை கொஞ்சம் கொஞ்சமாக உடலில் இருந்து அகற்றி விடும்....

சுவர்க்கத்தை பார்வையிட ஆசையா??? உள்ளே படித்து பாருங்கள்!!!

சுவர்க்கத்தை பார்வையிட ஆசையா??? உள்ளே படித்து பாருங்கள்!!!

 
மறுமையை நம்புவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும், மறுமையை நம்புவதென்பது மரணத்திற்கு பின் மறுமை என்னும் வாழ்வு இருக்கின்றது என்பதாகும், மறுமையில் அல்லாஹ் நல்லடியார்களுக்கு சுவர்க்கத்தையும், இறை நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். சுவர்க்கம் என்றால் என்ன, அதில் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதை கூறி, அதன் பக்கம் மக்களை ஆர்வம் காட்ட வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அச்சுவர்க்த்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பையும் அதற்குரிய அமல்கள் செய்யும் நல்வாய்ப்பினையும் தந்தருள்வானாக.! இப்போது வாருங்கள்,அந்த சுவர்க்கத்தை பார்வையிடுவோம்.

சுவர்க்கத்தின் பெயர்கள்:

1. அல் ஜன்னத்

2. தாருஸ் ஸலாம்

3. தாருல் குல்த்

4. தாருல் முகாமத்

5. ஜன்னதுல் மஃவா

6. ஜன்னாத்து அத்ன்

7. தாருல் ஹயவான்

8. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்

9. ஜன்னாத்துன்னயீம்

10. அல் மகாமுல் அமீன்

11. மக்அது ஸித்க்

12. கதமு ஸித்க்

சுவர்க்க வாசலின் பெயர்கள்

1. பாபு முஹம்மது

2. பாபுத்தவ்பா

3. பாபுஸ்ஸலா

4. பாபுஸ்ஸவ்ம் (அர்ரைய்யான்)

5. பாபுஸ்ஸகாத்

6. பாபுஸ்ஸதகாத்

7. பாபுல் ஹஜ்ஜி வல்உம்ரா

8. பாபுல் ஜிஹாத்

குர்ஆனில் சுவர்க்கம்

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.(அவர்களை நோக்கி) ”சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்). மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர். ”என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்). இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர். நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன, இன்னும், ”நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.) ”நீங்கள் செய்து கொண்டிருந்ததன் (நன்மையான) காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள். ”உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்” (எனக் கூறப்படும்). 15:45 – 73

அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது. கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள். இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்). தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களை சுற்றி கொண்டுவரும். (அது) மிக்க வெண்மையானது. அருந்துவோருக்கு மதுரமானது. அதில் கெடுதியும் இராது. அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள். 37:40-50

பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்). ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீராம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹுருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம். அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள். முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான். (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும். 44:51 – 57

(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள். தெளிந்த பானங்களால் நிரம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்). (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை வலிக்குள்ளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள். இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் (பறவைகளின்) மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்). (அங்கு இவர்களுக்கு) ஹுருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். ‘ஸலாம், ஸலாம்’ என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). இன்னும் வலப்புறத்தார்கள்! – வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்; (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும் இன்னும், நீண்ட நிழலிலும், (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும், ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் – அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்). நிச்சயமாக (ஹுருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி அப்பெண்களைக் கன்னிகளாகவும்; (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும், பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்). 56:15-40

நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) ‘நயீம்’ என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்கிகளைப்) பார்ப்பார்கள். அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அதன் முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும். அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முர்புகள் அருந்துவார்கள். 83:22-28

இன்னும் இது போன்ற பல வசனங்களும் இத்தொடரில் உள்ளது. சுருக்கத்திற்காக இத்துடன் முடிக்கிறேன்.

மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பு

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது அவர்கள் வானில் பதினான்காம் பக்கத்து நிலவை(பரிபூரண சந்திரனை) பார்த்தார்கள். அப்பொழுது கூறினார்கள். நீங்கள் இந்த நிலவைப் பார்ப்பதைப் போல(கியாமத் நாளில்)உங்கள் ரப்பைக் கண் கூடாகக் காண்பீர்கள். அவனைப் பார்ப்பதில் உங்களுக்கு எந்தக் குழப்பமும் இருக்காது. (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைந்ததும், அல்லாஹுதபாரக வதஆலா, அவர்களிடம் வேறு எதனையும் நீங்கள் நாடுகிறீர்களா? அதனை நான் உங்களுக்கு அதிகப் படுத்துகிறேன். என்று கூறுவான். அதற்கவர்கள், எங்கள் இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வெண்மையாக்கி விட்டாய். எங்களை சுவர்க்கத்தில் நுழையச் செய்து விட்டாய். நரகை விட்டும் எங்களைக் காப்பாற்றி விட்டாய். (நீ எங்களுக்கு எல்லா விதமான அருட்கொடைகளையும், இன்பங்களையும், அளித்து விட்டாய்! இனி எங்களுக்கு வேறு என்ன வேண்டும்) என்பார்கள்.

அப்பொழுது அல்லாஹ் தனக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள திரையை அகற்றி விடுவான். (அப்பொழுது அவர்கள் தங்கள் இரட்சகனைப் பார்க்கும் பாக்கியத்தை பெறுவார்கள்) தங்கள் இரட்சகனைப் பார்ப்பதை விட வேறு எந்தப் பொருளும் அவர்களுக்குப் பிரியமானதாகக் கொடுக்கப்படவில்லை. (அவர்களது இரட்சகனைப் பார்ப்பதே எல்லாவற்றையும் விட அவர்களுக்கு மிகப் பிரியமானதாக இருக்கும்) முஸ்லிம்: ஸுஹைபு(ரலி)

அல்லாஹுத்தஆலாவின் திருப்பொருத்தமே எல்லாவற்றையும் விட மேலானது.

நிச்சயமாக அல்லாஹ், சுவர்க்கவாசிகளை நோக்கி, சுவர்க்கவாசிகளே! என்றழைப்பான். அதற்கவர்கள், லப்பைக வஸஃதைக வல்கைரு பியதைக எங்கள் இரட்சகனே!(இதோ)உன் சமுகத்தில்(நாங்கள்) ஆஜராகிவிட்டோம். அனைத்து நன்மைகளும் உன்னுடைய கரங்களிலேயே இருக்கிறது. என்று கூறுவார்கள்.

பின்னர், அல்லாஹுத்தஆலா அவர்களிடம் உங்களுக்குத் திருப்திதானே! என்று கேட்பான். அதற்கவர்கள், எங்களுடைய இரட்சகனே! நாங்கள் எப்படி திருப்தியடையாமல் இருப்போம்! நிச்சயமாக நீ உன் படைப்புகளில் எவருக்கும் கொடுக்காத அருட்கொடைகளையும் நற்பாக்கியங்களையும் எங்களுக்குக் கொடுத்து விட்டாய் என்று கூறுவர்.

அப்பொழுது, அல்லாஹுத்தஆலா அதை விட மிக மேலான ஒன்றை நான் உங்களுக்குத் தரட்டுமா? என்று கேட்பான். அதற்கவர்கள், அதைவிட மேலான பொருள் என்ன? என்று (ஆச்சரியத்துடன்) கேட்பார்கள். அதற்கு அல்லாஹுத்தஆலா, நான் உங்களின் மீது ரிள்வான் எனும் என்னுடைய திருப்பொருத்தத்தை இறக்கிவைக்கிறேன் (அதுவே எல்லாவற்றையும் விட மிக மேலானது) அதற்குப் பிறகு ஒரு பொழுதும் நான் உங்களிடம் கோபிக்கமாட்டேன் என்று கூறுவான். புகாரி, முஸ்லிம்: அபூ ஸயீதில் குத்ரீ(ரலி)

சுவர்க்க கதவுகளின் எண்ணிக்கைகள்

சுவர்க்கத்திற்கு எட்டுக் வாசல்கள் உள்ளன, அவைகளில் ஒரு கதவிற்கு ‘அர் ரைய்யான்’ என்று சொல்லப்படும். அதன் வழியாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

சுவர்க்கக் கதவின் விசாலம்.

சுவர்க்கத்திலுள்ள கதவுகளின் இரு ஓரங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி மக்காவிற்கும் ஹிஜ்ர் என்ற இடத்திற்கு மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும். அல்லது ஹிஜ்ர் என்ற இடத்திற்கும் மக்காவிற்கும் மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் ஒரு அறிவிப்பில்: மக்காவிற்கும் ஹிஜ்ர் என்ற இடத்திற்கு மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும். அல்லது மக்காவிற்கும் பஸராவிற்கும் மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தின் இரு வாசல்களுக்கு மத்தியிலுள்ள தூரம்

சுவர்க்கத்திலுள்ள இரு வாசல்களுக்கு மத்தியில் உள்ள தூரம் எழுபது ஆண்டுகள் ஒரு குதிரை வீரர் பிரயாணம் செய்யும் தூரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுவர்க்கத்தின் படித்தரங்கள்

1. சுவர்க்கத்தில் நூறு அந்தஸ்த்துக்கள் உள்ளன, அவைகளின் இரு அந்தஸ்துக்கு மத்தியில் வானத்திற்கும் பூமிக்கும் மத்தியிலுள்ள இடைவெளி இருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

2. அடிவானத்திலுள்ள நட்சத்திரத்தை நீங்கள் பார்ப்பது போல் சுவர்க்கவாசிகள் மற்ற (அந்தஸ்து சுவர்க்கவாசிகளை) அறைகளில் (இருந்து கொண்டு) ஒருவருக்கொருவர் பார்ப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்

சுவர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ள மனிதன்

நபி மூஸா(அலை) அவர்கள் தம், இரட்சகனிடம் சுவர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ள மனிதனின் நிலை எவ்வாறு? என வினவினார்கள். அதற்கு, அல்லாஹுத்தஆலா, சுவர்க்கவாசிகள் சுவனத்தில் நுழைந்து முடிந்த பின் அம்மனிதன் வருவான். அவனையும் சுவர்க்கத்தில் நுழைந்து கொள்ளுமாறு கூறப்படும். அவனோ! என் இரட்சகனே! சுவனவாசிகள் அனைவரும், தங்கள் இடங்களில் போய் இறங்கி, அவரவர்களின் இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள். (சுவர்க்கம் முழுதும் நிரம்பி விட்டது) நான் எங்குப் போய் தங்குவேன்? எனக் கேட்பான். அதற்கு அல்லாஹுத்தஆலா, அடியானே! உலகின் அரசர்களில் ஒரு அரசனின் ஆட்சியைப் போன்ற அளவு உமக்கு சுவர்க்கத்தில் இடம் கிடைப்பதை ஏற்று நீ திருப்திப்பட்டுக் கொள்கிறாயா? என்று கேட்பான். அதற்கவன், என் இரட்சகனே! நான் பொருந்திக் கொள்கிறேன் என்று கூறுவான். அப்பொழுது அல்லாஹ், அந்த அரசனின் ஆட்சியைப் போன்றும், மேலும் அது போன்றும், அது போன்றும், அது போன்றும், அது போன்றும் உள்ள(நான்கு)ஆட்சிகளின் விஸ்தீரண அளவும் கிடைக்கும், என்று கூறுவான்(மொத்தம் ஐந்து ஆட்சிகளின் விஸ்தீரண அளவு கிடைக்கும்) ஐந்தாவது முறையில் அவ்வடியான், என் இரட்சகனே! நான் பொருந்திக் கொள்கிறேன் என்று கூறுவான். அப்பொழுது அல்லாஹ் உமக்கு இதுவும், இன்னும் பத்து ஆட்சிகளுடைய விஸ்தீரண அளவும் கிடைக்கும். உம் மனம் விரும்பும் ஒவ்வொரு பொருளும், உம் கண்கள் விரும்பும் ஒவ்வொரு இதமான காட்சிகளும், உமக்கு இங்கு உண்டு என்று கூறுவான். அப்பொழுது, அவ்வடியான் என் இரட்சகனே! நான் அவற்றைப் பொருந்திக் கொண்டேன் என்று கூறுவான். பின்னர், நபி மூஸா(அலை) அவர்கள் சுவர்க்கவாசிகளில் மிக மேலான அந்தஸ்துடையவர்களின் நிலை என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், நான் நாடி என் கரத்தாலேயே, அவர்களின் கண்ணியத்தை நட்டு வைத்துள்ளேன். (நிலைநாட்டியுள்ளேன்) அதில் நான் முத்திரையும் இட்டுள்ளேன். (நான் அதனைப் பாதுகாத்து வைத்துள்ளேன்.) மாபெரும் அந்தஸ்துகள் எத்தகையவை என்றால், எந்தக் கண்களும் அவைகளைக் கண்டதில்லை. எந்தக் காதுகளும் அவைகளைக் கேட்டதில்லை. எந்த உள்ளங்களிலும் அவை போன்ற சிந்தனை எழுந்ததில்லை என்று கூறினான். (முஸ்லிம்)

நரகிலிருந்து எல்லோரையும் விடக் கடைசியாக வெறியேறி – சுவர்க்கத்தில் எல்லோரையும் விடக் கடைசியாக நுழையும் மனிதனைப் பற்றி நான் அறிவேன். அவன் கை, கால்களால் தவழ்ந்தவனாக நரகிலிருந்து வெளியே வருவான். அப்பொழுது அல்லாஹ் அவனிடம், நீ போய் சுவர்க்கத்தில் நுழைவாயாக! என்று கூறுவான். அதன்படி அவன் சுவர்க்கத்திற்குச் செல்வான். அங்கு அது முழுவதும் நிரம்பி விட்டது போன்று அவனுக்குத் தோன்றும். உடனே அவன் வெளியில் திரும்பி வந்து, என் இரட்சகனே! சுவர்க்கம் நிரம்பி விட்டது. அதற்கு அல்லாஹு, (என் அடியானே!) நீ சென்று சுவனத்தில் நுழைவாயாக! என அவனுக்குக் கூறுவான். அதன்படி அவன் சுவர்க்கத்திற்கு (மீண்டும்) செல்வான். (முதன்முறை தோன்றியது போன்று) இம்முறையும், சுவர்க்கம் நிரம்பி விட்டதைப் போன்று அவனுக்கு தோன்றும். அதனைப் பார்த்து விட்டு, அவன் திரும்பி வந்து, என் இரட்சகனே! சுவனம் நிரம்பி விட்டது என்று கூறுவான். அதற்கு வலுப்பமும் கண்ணியமும் உள்ள அல்லாஹ், (அடியானே!) நீ சென்று சுவனில் புகுவாயாக! நிச்சயமாக உமக்கு உலகைப் போன்றும், அதற்கு மேலும், அது போன்று பத்து மடங்கு அளவும் சுவர்க்கத்தில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லது உலகைப் போன்று பத்து மடங்கு அளவு உமக்குச் சுவர்க்கத்தில் இடமளிக்கப் பட்டுள்ளது என்று கூறுவான். அதற்கவன், யா அல்லாஹ்! நீ என் எஜமானனாக இருக்கும் நிலையில், நீ என்னைக் கேலி செய்கிறாயா? அல்லது என்னைப் பார்த்துச் சிரிக்கிறாயா? எனக் கேட்பான். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி) கூறுகிறார்கள்: இதனைக் கூறும் பொழுது, அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்கள் கடைவாய்ப் பற்கள் வெளிப்படும்படி சிரித்ததை நான் பார்த்தேன். பின்னர் கூறினார்கள். இம்மனிதன் தான் சுவனவாசிகளில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ள, கடைசி மனிதனாவான், எனப் பகர்ந்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவனத்தின் ஒரு சிறு பகுதியின் மதிப்பு

சுவனத்தில் ஒரு வில்லின் அளவு இடம் சூரியன் எவற்றின் மீது உதயமாகி, மறைகிறதோ அதனை விட(உலகம், மற்றும் அதன் மீதுள்ள அனைத்துப் படைப்புகளையும் விட) மேலானதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்

ஒளி சிந்தும் சுவன அறைகள்

நிச்சயமாக சுவனவாசிகள், சுவனத்தின் அறைகளை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று (ஒளி சிந்துபவர்களாக) பார்ப்பார்கள்.(அவ்வறைகளில் தங்கியிருக்கும் சுவன வாசிகளும் ஒளிவீசுபவர்களாக இருப்பர்) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்களுடன் ஒரு அவையில் ஆஜராகி இருந்தேன். அதில் அவர்கள் சுவர்க்கத்தைப் பற்றி விளக்கமாக கூறினார்கள். அவர்களுடைய பேச்சின் கடைசியில் கூறினார்கள். சுவனத்தில், கண்கள் பார்த்திராத அளவு, காதுகள் கேட்டிருக்க முடியாத அளவு, எந்த மனிதரின் உள்ளத்தின் சிந்தனைகளிலும் தோன்றிராத அளவு உயர்ந்த எல்லாப் பொருள்களும், உன்னதமான இன்பங்கள் அனைத்தும் உள்ளன. பின்பு நபி(ஸல்) அவர்கள் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்கள். அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன்: 32:16)

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது (அல்குர்ஆன்: 32:17)

என்றும் இளமை, என்றும் மகிழ்ச்சி

சுவனவாசிகள், சுவனத்தில் நுழைந்ததும், ஒரு மலக்கு அனைவரையும் அழைத்து, சுவர்க்கவாசிகளே! நிச்சயமாக நீங்கள் இங்கு எப்பொழுதும் ஜீவித்து இருப்பீர்கள். ஒரு பொழுதும் மரணிக்க மாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு எப்போதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஒரு பொழுதும் நோயாளியாக ஆகமாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு வாலிபமாகவே இருப்பீர்கள். ஒரு பொழுதும் வயோதிக(முதுமை)அடையமாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பீர்கள். ஒரு பொழுதும் கஷ்டப்படமாட்டீர்கள் என்று கூறுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவர்க்கத்தில் உங்களில் மிக தாழ்ந்த அந்தஸ்து உடைய ஒருவரின் நிலையாகிறது, அவருக்கு அல்லாஹுதஆலா, நீ விரும்புவதை ஆசைப்படுவாயாக! எனக் கூறுவான். அவர் ஆசைப்படுவார். பின்னரும் ஆசைப்படுவார். பின்னர், அவரிடம் அல்லாஹுத்தஆலா நீ ஆசைப்பட்டாயா? என்று கேட்பான். அதற்கவர் ஆம் என்று கூறுவார். அப்பொழுது அல்லாஹுத்தஆலா நிச்சயமாக நீ ஆசைப்பட்டது உனக்கு உண்டு. அது போன்று மற்றொரு மடங்கு சேர்த்து உண்டு என்று கூறுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்

சுவர்க்கத்து கன்னியர்கள்

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. 55:56

அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். 55:58

ஹுர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். 55:72

அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. 55:74

நிச்சயமாக (ஹுருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, அப்பெண்களைக் கன்னிகளாகவும் (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). 56:35-38

இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். 37:48,49

நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.ஒரே வயதுள்ள கன்னிகளும்.பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). 78:31,32,33,34

சுவர்க்கத்தின் மண், கற்கள், சிறுகற்கள், கட்டிடம்

1. சுவர்க்கத்தின் ஒரு கல் தங்கமும் இன்னும் மற்றக் கல் வெள்ளியுமாகும், அதனின் சாந்து கஸ்தூரியாகும், அங்கு கிடக்கும் சிறு கற்கள் மருகதமும் பவளமுமாகும், அதன் மண் குங்குமமாகும், அதனுள் நுழைபவர் சந்தோசமடைவார் துற்பாக்கியமுடையவராகமாட்டார். நிரந்தரமாக அங்கிருப்பார் மறணிக்கமாட்டார். அவரின் ஆடைகள் இத்துப்போகாது, அவர் வாலிபத்தை இழக்கமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

2. நான் சுவர்க்கத்தினுள் நுழைவிக்கப்பட்டேன், அங்கே முத்தினாலுள்ள கோபுரம் இருந்தது. அதன் மண் கஸ்தூரியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

சுவர்க்க வாசிகளின் முத்துக் கூடாரம்

சுவர்க்கத்திலே கொடையப்பட்ட (ஒரே) முத்தினாலுள்ள ஒரு கூடாரமுண்டு, அதன் விசாலம் 60 மைலாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் மனைவியர் இருப்பர், ஒருவர் மற்றொருவரை பார்க்க முடியாது. அவர்களிடம் அல்லாஹ்வின் நல்லடியார்கள் (அவர்களின் கணவர்கள்) செல்வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஜசகல்லாஹ் கைர் சகோதரர் அலாவுதீன....

Please Share This Usefull Information :

 
Please Share This Usefull Information :

Be careful with dust!

While he was walking, he suddenly felt an eye irritation. Thinking that it was just a regular dust, he started to rub his eye, in an effort to remove the dust. Then his eyes got really red, few days passed and his eyes were still red and seem a little swollen. The swelling of his eyes got worse, redder ang bigger. Until he decided to go see a doctor for a check up. The doctor immediately wanted an operation. The doctor thought it was a cyst. Actually, it turned about to be a live worm.

Credits to whoever took this photo. So brothers & sisters, be careful with dust !

Wednesday, June 27, 2012

ஜூலை -1 முதல் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்திற்கு '12.36 % கூடுதல் சேவை வரி' - மத்திய அரசு

 
ஜூலை -1 முதல் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்திற்கு '12.36 % கூடுதல் சேவை வரி' - மத்திய அரசு

" சேவை வரி '' - எங்களுக்கு என்ன சேவை செய்துவிட்டார்கள் ? அல்லது செய்து கொண்டிருக்கிறார்கள் ? சேவை வரி வசூல் பண்ண கிளம்பிவிட்டார்கள் ...

வேலை இல்லாமல் தவித்த போது வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்களா ? அல்லது வெளிநாடுகளில் சொல்லொன்னா துயரத்துக்கு ஆளாகி இருக்கும் எங்களுக்கு தூதரகத்தின் மூலம் உதவியோ / சேவை (?)யோ புரிந்தார்களா ? வாயைக்கட்டி , வயிற்டைகட்டி அனுப்பும் பணத்தையும் ஆட்டையை போட ஆரம்பித்துவிட்டார்கள் . அமைச்சர் பொறுப்புகளில் இருந்து கொண்டு இந்தியர்களின் வரியை எல்லாம் ஆட்டையை போட்டவர்களிடம் முதலில் புடுங்குங்கள் , பிறகு எங்களிடம் புடுங்கலாம் அதுவரை ஆணியே புடுங்காம சும்மா இருங்க .

സൌദിയില്‍ മലയാളിയെ വെടിവെച്ചു കൊന്ന സ്വദേശിക്ക് വധ ശിക്ഷ . തല വെട്ടി

 
 
സൌദിയില്‍ മലയാളിയെ വെടിവെച്ചു കൊന്ന സ്വദേശിക്ക് വധ ശിക്ഷ . തല വെട്ടി
ഇന്ത്യയില്‍ മലയാളിയെ വെടിവെച്ചു കൊന്ന ഇറ്റലിക്കാരന് സുഖവാസം . തല വിധി.............

7 amazing skills of Man

7 Amazing Skills of man which will leave you amused. The innovation and intelligence of men which will make Thomas Alva Edison proud.
7) Whats the maximum weight you can pull? How about this?
1.jpg

6) Ever felt tired walking on the road and wished you were on bed instead. Well, wishes can come true...
2.jpg

5) Heard this is going to be patented... method and apparatus for making omlettes using a shovel.
3.jpg

4) Plastic Bottles can be recycled in useful ways... such as this.
4.jpg

3) This is the new robo you will be seeing in the next edition of Star Wars.
5.jpg

2) Natural source of fuel...
6.jpg

1) Not able to find words to describe this...
9.jpg

Tuesday, June 26, 2012

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் அபாயப் பள்ளிகள்

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் அபாயப் பள்ளிகள்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பலின் செயல் பாடுகள், ஊடுருவல்கள் பற்றி வெளிப்படுத்திய கருத்துகளை, தகவல்களை அலட்சியப் படுத்தினால், அதற்காக நாடு மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைத் திணிக் கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த அமைப்புகள் மூலம் இந்தியாவில் 28,861 கல்வி நிலையங்கள் நடத்தப்படுகின்றன. இதில் 32,33,337 மாணவர்கள் பயிலுகிறார்கள். 1,57,741 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்குத் தனியாக பாரதிய சிக்ஷா மண்டல் என்ற அமைப்பும் உண்டு.

இவையன்றி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை எல்லா வற்றிலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன என்றால், பெரிய விளக்கங்கள் தேவைப்படாது.

முழுக்க முழுக்க இந்துத்துவா வெறி என்னும் நஞ்சு ஊட்டப்படுவதோடு, சிறுபான்மை மதங்கள் மீது குரூரமான முறையில் வெறுப்பு விதைகளும் தூவப்படும் அபாயமும் உண்டு.

இவ்வாறு பயிற்சி பெறும் மாணவர்கள் வெளியே வருவார்களேயானால், நாட்டில் அமளி துமளிகளும், வன்முறைகளும், அமைதியற்ற தன்மையும்தானே தலை விரித்தாடும்? இதற்கான பயிற்சிதானே அவர்களுக்குத் தரப்படுகிறது?

ஆசிரியர் தினம் என்று அரசு அறிவித்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக வியாச முனிவர் பிறந்த நாள் என்று ஜூன் 25 ஆம் தேதி கடைப் பிடிக்கப்படுகிறது.

குழந்தைகள் தினம் என்று அரசு அறிவித் துள்ள நேருவின் பிறந்த நாளை இவர்கள் ஒப்புவதில்லை. மாறாக இந்துக் கடவுள் கிருஷ் ணன் பிறந்த நாள் என்று கோகுலாஷ் டமியைத்தான் கொண்டாடச் செய்கிறார்கள்.

பாடத்திட்டங்கள் எப்படி இருக்கும்? எடுத்துக் காட்டாக ஒன்று. உத்தரப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்புப் பாடத்தில் இடம் பெற்றிருப்பதாவது : முலாயம் சிங் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்? பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந் துக்கள் கொல்லப்பட்டனர்? (அவுட் லுக் 10.5.1999)

யூதர்கள் மீது வெறியைக் கிளப்புவதற்காக அடால்ப் ஹிட்லர் இப்படித்தான் பாடத் திட்டங்களை அமைத்துக் கொடுத்தார்.

இந்திய வரலாற்றுக் குழுவை மாற்றி அமைத்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அதில் திணித்தது பி.ஜே.பி. ஆட்சி.

இந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bom Mahib Factories) மாற்றப்பட்டுவிட்டது பா.ஜ.க. ஆட்சியில்என்று ஃப்ரன்ட் லைன் ஏட்டில் கட்டுரையாளர்கள் பார்வதி மேனன், டி.கே.ராஜ லட்சுமி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகள் கண் காணிக்கப்பட வேண்டும்.

ஆய்வுக் குழு ஒன்றை நியமித்து இப்பள்ளிகளின் பாடத் திட்டங்கள், பயிற்சிகள் பற்றி உண்மை கண்டறியப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

நன்றி :தி க -வின் விடுதலை இதழில் இருந்து

குடிகார ‘பார்களை’ விஞ்சும் குடியரசுத் தலைவர் தேர்தல்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பட்டையைக் கிளப்பும் மூன்று பெண்களும் என்ன செய்வார்கள் என்ற பீதிதான் ‘ஆண்கள்’ கோலேச்சும் இந்திய ஜனநாயகத்தில் பலரையும் அலைக்கழிக்க வைக்கிறது.










ஜனாதிபதி-தேர்தல்குடியரசுத் தலைவர் தேர்தலில் பட்டையைக் கிளப்பும் மூன்று பெண்கள் யார்? இந்திய பேரரசி சோனியா, வங்கத்து அரசி மம்தா, தமிழகத்து ராணி ஜெயலலிதா மூவரும் என்ன செய்வார்கள் என்ற பீதிதான் ‘ஆண்கள்’ கோலேச்சும் இந்திய ஜனநாயகத்தில் பலரையும் அலைக்கழிக்க வைக்கிறது. அந்த வகையில் இந்தத் தேர்தல் ஏதோ ஒரு வகையில் ‘பெண்ணுரிமை’க்கு இலக்கணம் படைத்திருக்கும் தேர்தல் எனலாம்.
ஒரு ரப்பர் ஸ்டாம்பை தயாரிப்பதற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்களா என்று நீங்கள் கேட்கலாம். மானாவாரியாக முத்திரை குத்துவதுதான் இந்த ஸ்டாம்பின் வேலை என்றாலும், கூட்டணிதான் இனி மத்தியில் எடுபடும் எனுமளவுக்கு, சமூக நீதி காத்த கட்சிகளாக கருதப்படும் சிற்றரசர்கள் ஆங்காங்கே தங்களது படை பரிபாலனங்களுடன் செட்டிலாகிவிட்ட் நிலையில், நாளைக்கே எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றால் ரப்பர் ஸ்டாம்ப் அப்போது மட்டும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் கருத்தைத்தான் சோ ராமசாமியும் தெரிவித்திருக்கிறார். அதாவது இந்த இக்கட்டிலும் தமது பார்ப்பனிய மேலாண்மையை செலுத்தும் அளவுக்கு குடியரசுத் தலைவரின் குட்டியூண்டு அதிகாரம் அவருக்கு தேவைப்படுகிறது.
காங்கிரசும், பா.ஜ.கவும் கூட தமது எதிர்கால குதிரைப் பேரங்களுக்கு பிரச்சினையில்லாத ஒரு ஸ்டாம்பையே எதிர்பார்க்கிறார்கள்.  சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பில் தற்போது காங்கிரசுக்குத்தான் கொஞ்சம் பெரும்பான்மை இருக்கிறது என்றாலும் அதுவே நிம்மதியை வழங்கிவிடவில்லை. நமக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள் என்று தி.மு.கவை வேண்டுமானால் காங்கிரசு கருதிக் கொள்ளலாம். மற்ற ‘அடிமைகள்’ அப்படி இல்லை.
குடும்ப ஆட்சியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை எனுமளவுக்கு இந்திய அரசியல் வானம் பல குடும்ப நட்சத்திரங்களை அவ்வப்போது குட்டி போட்டது போன்று தள்ளிவிடுகிறது. உ.பி.யில் முலாயாமின் மகன் அகிலேஷ் யாதவ்தான் ஆட்சிக்கு வந்தாரென்றால் வந்த சூட்டோடு ராஜினாமா செய்த பாராளுமன்றத் தொகுதியில் மனைவி டிம்பிள் யாதவை நிறுத்தி ஏகமனதாகவும் வெல்ல வைத்திருக்கிறார். குடியரசுத் தலைவர் மற்றும் இதர காரணங்களுக்காக இந்த தேர்தலில் வேட்பாளர் யாரையும் நிறுத்தவில்லை என்று காங்கிரசு அறிவித்திருந்தது. ஆனாலும் முலயாம் சிங் யாதவ் தனது தோரணையை சற்று கூட்டிவிட்டார்.
அதுவும் அந்த தோரணை மம்தா பானர்ஜியின் பெருந்தோரணையுடன் அணி சேர்ந்து விட்டது. வங்கத்து ராணி மம்தாவோ கல்கத்தாவில் இருந்து கொண்டு சி.பி.எம்மை வீழ்த்திய பெருமை கொண்டு காங்கிரசை கேட்பார் கேள்வி இல்லாமல் வெளுத்து வாங்குகிறார். இந்த சுட்டிக் குழந்தையின் சேட்டைகளை ரசிக்கவும், கண்டிக்கவும் முடியாமல் பேரரசி சோனியா தவிக்கிறார். இவ்வளவிற்கும் மம்தா சீறிய காரணத்தால் ரயில்வே மந்திரியை மாற்றினார்கள், ரயில்வே பட்ஜெட்டை திருத்தினார்கள், மே வங்கத்திற்கு கேட்ட உதவித் தொகையை மீட்டருக்கு மேலே இமயமலை உயரத்தில் போட்டுக் கொடுத்தார்கள்.
ஆனாலும் இந்த அரசிகள், பேரரசி, குறுநில மன்னர்கள் பொறுக்கித் தின்னும் ஜனநாயக அரசியலில் கொட்டை போட்டவர்கள் என்பதால் பெருச்சாளிகள் ஒன்றாக சேர்ந்து முடிவெடுக்க திணறுகின்றன. பலரது சுயநலங்களும் பல்வேறு திட்டங்களோடு பொது நன்மை குறித்து பேசிக் கொண்டால் அங்கே வெட்டு குத்து நடக்குமா, இல்லை வேடிக்கை விளையாட்டு நடக்குமா? இரண்டும் நடக்கின்றன என்பதுதான் இந்த ரப்பர் ஸ்டாம்ப் தேர்தலின் சுவராசியம்.
2014 பாராளுமன்றத் தேர்தலில் ஒரு கிங் மேக்கராக இருந்து கொஞ்சம் அதிர்ஷடமும்  கூடினால் பிரதமர் எனும் அந்த இலட்சியத்தை வீழ்த்தி விடலாம் என்று கணக்கு பண்ணும் ஜெயலலிதா முந்திக் கொண்டு பி.ஏ.சங்மாவை அரங்கிற்கு கொண்டு வந்தார். கூடவே பிஜூ ஜனதா தளத்தின் முதல்வர் நவீன் பட்நாயக்கும் அதற்கு பக்க வாத்தியம் வாசித்தார். ஒடுக்கப்பட்டோர் நலன் என்ற பெயரில் தனது பழங்குடி அடையாளத்தை முன்வைத்தும் சங்மா கச்சேரியை துவக்கினார். சங்மாவால் ஒன்றும் ஆகாது என்றாலும் புது தில்லியில் தனது பேரத்திற்கு ஒரு மதிப்பு வேண்டும் என்பதுதான் ஜெயாவின் கணக்கு. இந்த கணக்கில் தான் வெறும் பூஜ்ஜியத்தின் மதிப்பைத்தான் கொண்டிருக்கிறோம் என்பதும் சங்மாவுக்குத் தெரியும். எனினும் சில பல குருட்டு அதிர்ஷங்கள் கூடி வந்தால் ராஷ்டிரபதி பவனில் குடியேற முடியாதா என்பது அவர் கனவு.
ஆனால் இந்தக் கனவை அவரது கட்சித் தலைவர் சரத்பவாரே குப்பையில் எறிந்து விட்டார். மற்றபடி இந்திய அரசின் துணை இராணுவப் படைகள் மத்திய இந்தியாவில் பழங்குடிகளை வேட்டையாடும் நிலையில் அதே பழங்குடி மக்களின் நலன் என்ற பெயரில் சங்மா நடத்தும் ஆபாசத்தை அடையாள அரசியல் பேசும் முற்போக்காளர்கள் எவரும் கண்டிக்க வில்லை. ஏனெனில் அந்த அணுகுமுறையில் அவர்களுக்கும் சங்மாவுக்கும் வேறுபாடில்லை.
ஜெயாவின் ஆளுமை மூட்டைகளில் பெருமளவை வைத்திருக்கும் மம்தா பானர்ஜியும் மத்திய மந்திரியாக இருந்து மாநில முதலமைச்சராக மாறியவர். இரண்டிலும் தனது பிடி இருக்க வேண்டுமென்றால் போட்டியில் ஒரு ஆளாக பேசப்படவேண்டும் என்பதில் கருத்தாகவே இருக்கிறார். சோனியாவைப் பொறுத்த வரை அடுத்த தேர்தலில் தனது சீமந்த புத்திரன் ராகுலை பிரதமராக்க வேண்டுமென்றால் கூட்டணி கணக்குகளில் பிரச்சினை வந்தாலும் நேர் செய்வதற்கு ஒரு நம்பிக்கையான பெருச்சாளித்தனம் கலந்த ரப்பர் ஸ்டாம்ப் வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அந்த ஸ்டாம்ப் யார் என்பதைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை காங்கிரசு காரியக் கமிட்டி சோனியாவுக்கு அளித்திருக்கிறதாம். இந்த சர்வாதிகரத்திற்குப் பெயர்தான் ஜனநாயகமாம். இதையே தி.மு.கவிலோ, இல்லை அம்மா தி.மு.கவிலோ செய்தால் அதை இளக்காரமாகப் பார்ப்பார்கள்.
அந்த வகையில் சோனியா தேர்வு செய்த நபர் பிரணாப் முகர்ஜி. வெளிநாட்டிலிருப்பதெல்லாம் கருப்பு பணமில்லை என்று கூறுமளவுக்கு இவர் பெரும் பெருச்சாளிதான் சந்தேகமேயில்லை. மேலும் இவர் வங்கத்தவர் என்பதால் மம்தாவின் ஆதரவையும் சுலபத்தில் பெற்று விடலாம் என்று சோனியா நினைத்திருக்கக் கூடும். ஆனால் மேற்கு வங்கத்தில் காங்கிரசு ஆதரவு இல்லாமலேயே மம்தா உள்ளாட்சித் தேர்தலில் வென்றிருப்பதால் கல்கத்தாவைப் பொறுத்த வரை காங்கிரசை முகவரி இல்லாமல் செய்ய விரும்புகிறார். ஆனால் தேசிய அளவில் பலன்களை பெறுவதற்கு மட்டும் காங்கிரசு தேவை என்ற அளவில் கூட்டணியில் தொடருகிறார், தொடர்ந்து தொல்லைகளையும் கொடுக்கிறார். ஆதலால் பிரணாப்பின் வங்காளி இமேஜால் இங்கு பருப்பு வேகவில்லை.
நேற்று சோனியாவைச் சந்தித்த மம்தா பானர்ஜி செய்த  முதல் வேலை முகர்ஜியின் பெயரை நீக்கியதுதான். அந்த அதிர்ச்சியிலிருந்து சோனியா மீளுவதற்குள் மம்தா மூன்று பெயர்களை குடியரசு தலைவர் தேர்தலுக்காக முன்வைத்தார். அப்துல் கலாம், மன்மோகன் சிங், சோமநாத் சாட்டர்ஜி என்ற அந்த மூவர் பெயரில் மன்மோகன் சிங் பெயரைப் பார்த்து அடுத்த அதிர்ச்சி வந்திருக்கும். பிரதமர் என்ற பதவியில் சும்மா இருப்பதைப் போன்று ஒரு பாவனையில் பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளுக்கு பரபரப்பாக அடிமை உத்தியோகம் செய்யும் மன்மோகன் சிங்கின் ‘அமைதி’ மம்தாவுக்கு பிடித்திருக்குமோ?
இல்லை இந்த முறையோடு வீட்டுக்கு போய்விடும் அவருக்கு மற்றுமொரு ஐந்து ஆண்டுகள் பவனில் உலா வரலாம் என்ற ஆசையை காண்பிக்கலாம் என்று நினைத்திருப்பாரோ? ஆனாலும் ஒரு பிரதமர் பதவி வகித்திருப்பவரை உடனே குடியரசுத் தலைவர் என்ற ரப்பர் ஸ்டாம்பில் குந்த வைக்க நினைத்ததின் மூலம் மன்மோகனை வரலாறு மறக்க முடியாத அளவுக்கு கேலி செய்திருக்கிறார் மம்தா.
சி.பி.எம்மை சிரிப்பாய் சிரிக்க வைத்த சோமநாத் சட்டர்ஜியின் பெயர் இயல்பாகவே மம்தாவின் லிஸ்ட்டில் இருப்பதற்கு எல்லா நியாயமும் உண்டு. சி.பி.எம்மை போட்டுத்தாக்குவதற்கு இந்த அடிமை நிறைய பயன்படுவார் என்றும் மம்தா நினைத்திருக்கலாம். ஆனாலும் என்ன, பாராளுமன்ற சபநாயகர் என்று பெருமையோடு கூடவே குடியரசுத் தலைவர் என்ற மகா பெருமையும் பலித்து விடுமோ என்று வழக்கத்திற்கு மாறாக ஐந்து ரசகுல்லாக்களை அவர் முழுங்குவதாக கொல்கத்தா செய்திகள் கூறுகின்றன.
தங்கள் ஆளை வைத்து தங்களையே கேலி செய்யும் இந்த துன்பியல் காட்சியின் மேடையில் அவஸ்தைப்படும் போலிக் கம்யூனிஸ்டுகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் இன்னமும் முடிவெடுக்க வில்லையாம். இவர்கள் முடிவு எவரையும் பாதிக்காது, யாரும் சீண்ட மாட்டார்கள் என்ற யதார்த்தம் தெரிந்திருந்தும் நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம் என்று காட்ட வேண்டிய துர்பாக்கிய நிலை. இதில் வலது கம்யூனிஸ்ட் பரதன், ஒரு தலித் பெண் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று அடையாள அரசியலின் அடுத்த பம்பரை போட்டிருக்கிறார். பெண்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் இதை விட கேலி செய்ய முடியுமா என்ன?
பரமக்குடி தலித்துக்களை சுட்டுக் கொன்ற பாசிச ஜெயாவை சமீபத்தில் இரண்டு வலதுகள் தா.பாண்டியன், நல்லக்கண்ணு இருவரும் சந்தித்தனராம். அதுவம் மானங்கெட்டு புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அவரை ஆதரிப்பது என்று. முத்துராமனின் ஆவி மட்டுமல்ல, உயிரோடு இருக்கும் எவரும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள். இந்த இலட்சணத்தில் இவர்களது தேசியத் தலைமை தலித் பெண் என்ற ஒடுக்கப்பட்டவர்களின் அஸ்திரத்தை எடுத்திருக்கிறது. ஒருவேளை அ.தி.மு.கவில் ஒரு தலித் பெண் முதலமைச்சராக வேண்டும் என்று இவர்கள் கோரினால் என்ன நடக்கும்? கைது செய்யப்பட்ட வலதுகளின் சீதபேதியும், வாந்தி பேதியும் தமிழக சிறைகள் முழுக்க மணக்கும்.
மம்தா குறிப்பிட்ட முதல் நபரான அப்துல் கலாம், ஏற்கனவே பாரதிய ஜனதாவால் கொண்டு வரப்பட்டவர். ராஷ்டிரபதி பவனில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி இந்தியா முழுவதும் குழந்தைகளை துன்பப்படுத்தும் ஒன்றைத் தவிர வேறு எதுவும் இவர் செய்ததில்லை. 2002 குஜராத்தில் இவர் மவுனமாக இருக்கும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுக்கே இவருக்கு பிடிக்கும். ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தத்தையே இந்தியா வல்லரசாகும், ஏழைகள் பணக்காரர்களாகலாம் என்று இவர் நடுத்தரவர்க்கத்தின் மூளையில் செல்வாக்குடன் குடியேறியதை வைத்து இவருக்கும் ஒரு இடத்தை ஊடகங்கள் வைத்திருக்கின்றன. எல்லா அரசவைகளிலும் ஒரு கோமாளிக்கு எப்போதும் இடம் உண்டுதானே? ஆனாலும் இந்தக் கோமாளியின் சிரிப்பை உணர்ந்தவர் அதிகமில்லை என்பது நமது நாட்டின் ரசனைக் குறைவைக் காட்டுகிறது.
ஆனாலும் இவர் காங்கிரசு கும்பலால் விரும்பப்படவில்லை. மற்றவர்கள் ஏற்றுக் கொண்டால் இந்த முசுலீம் பெயரில் இருக்கும் “ஐயரை” மீண்டும் அரியணையில் ஏற்றுவதற்கு பா.ஜ.கவும் விரும்புகிறது. ஆனால் அண்ணலின் சிந்தனையோட்டம் என்ன? கருத்து வேறுபாடுகளின்றி அனைவரும் ஏகமனதாக ஏற்கும் பட்சத்தில் பெரிய மனதுடன் ராஷ்டிரபதி பவனில் ஸ்டாம்ப் குத்தும் வேலையை செய்வேன் என கலாம் கருதுவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனவாம். அப்துல் கலாமுக்கெல்லாம் நெருங்கிய வட்டாரங்கள் இருக்கின்றன என்றால் பவர் ஸ்டாருக்கு 50 இலட்சம் இரசிகர்கள் ஏன் இருக்கக் கூடாது?
ஆனாலும் அப்துல் கலாமின் இந்த ஏகமனது  பிரச்சினை ஒரு கணக்கு பிரச்சினைதான். அதாவது பாரதிய ஜனதாவுக்கு இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடையாது. இடதுசாரிகள், மம்தா, முலாயம், ஜெயா போன்றோரது தயவு இருந்தால் மட்டுமே களத்தில் ஓட முடியும். ஆக பெரும்பான்மை தொகையில் சில எண்கள் குறைகிறது என்பதால்தான் அய்யா கலாம் இப்படி ஒரு நிபந்தனையை போடுகிறார். இந்த நிபந்தனை ஏற்கும் பட்சத்தில் கணக்கும் வந்து விடும், பெயரும் வந்து விடும். என்ன ஒரு தொலை நோக்கு!
ஆனாலும் ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆத்தும் கதையாக தானைத் தலைவர் கருணாநிதியின் இடம் சரிந்து விட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலில் சோனியா அடையாளம் காட்டும் நபரின் காலில் விழுந்து ஆதரிப்போம் என்று வலிந்து பலமுறை சொன்னாலும் கூட இவர்களுக்கு புது தில்லியில் மதிப்பில்லை. மம்தாவும், முலாயமும், ஜெயாவும் புழுதியைக் கிளப்பிக் கொண்டிருக்கும் வேளையில் தி.மு.கவால் ஒரு துணுக்கைக் கூட கிளப்ப முடியவில்லை. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் அமைச்சர் பதவிகளை பெறுவதற்கு வீரம் காண்பித்த மறத் தமிழர்கள் இப்போது மண்ணாங்கட்டி தமிழர்களாக அவதிப்படுகிறார்கள். மறத்தின் மறுபாதிதான் மண்ணோ!
இதற்கு மேல் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பதிவுலகில் அண்ணன் பத்ரிதான் பெருமளவு கவலைப்படுகிறார். ஒரு வேளை எதிர்காலத்தில் பத்ம ஸ்ரீ, பூஷன் முதலான விருதுகளை வாங்குவதற்கு அங்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற தொலை நோக்கு கணக்கைத் தவிர அவர் இதில் அலட்டிக் கொள்வதற்கு வேறு காரணங்களை யோசித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. கலைமாமணியின் தேசிய அடையாளத்திற்கு கூட இந்த நாட்டில் ரசிகர் கூட்டம் இல்லாமலா போய்விடும்?
குடியரசுத் தலைவர் பதவி கிடைத்து விட்டால் மாளிகை வாசம், வெளிநாடுகளில் சுற்றுலா பயணம், மாலை நேர விழாக்கள், கலைஞர்கள் – விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்குவது, குடியரசு நாளன்று கொடியேற்றுதல் என்று ஒரு நேர்த்தியான வாழ்க்கை இங்கிருக்கிறது.  இதற்கெல்லாம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் செலவிடப்படுகிறது என்று பார்த்தால் உலகிலேயே காஸ்டிலியான ரப்பர் ஸ்டாம்ப் இதுதானென்று அடித்துச் சொல்லலாம்.

கறுப்புப் பணம்:அதிர்ச்சியூட்டும் உண்மைகள் !

கறுப்புப் பணம் என்பது கட்டுக்கட்டாக சுவிஸ் வங்கியில் பூட்டி வைக்கப்பட்டிருப்பதைப் போலவும், அதை மீட்டுக் கொண்டு வந்து, ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கட்டைப் பிரித்துக் கொடுத்து வறுமையை ஒழித்து விடலாம் என்பது போல ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது









கறுப்புப்-பணம்-1
கறுப்புப் பணம் என்பது கட்டுக்கட்டாக சுவிஸ் வங்கியில் பூட்டி வைக்கப்பட்டிருப்பதைப் போலவும், அவற்றை அங்கிருந்து மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்து, ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கட்டைப் பிரித்துக் கொடுத்து வறுமையை ஒழித்து விடலாம் என்பது போலவும் ஊடகங்களால் ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது. கறுப்புப் பணம் பற்றி ஓயாமல் பேசப்பட்டு வருகிறது என்ற போதிலும், ஒரே ஒரு ரூபாய் கறுப்புப் பணத்தைக்கூட வெளிநாட்டு வங்கிகள் எதிலிருந்தும் இந்திய அரசு பறிமுதல் செய்ததில்லை.
வெளிநாட்டு வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பது யார்? “தெரியும், ஆனால் சொல்ல முடியாது” என்கிறார் பிரணாப் முகர்ஜி. தெரிந்தாலும் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்ய முடியாது என்பதே உண்மை நிலைமை. அந்தப் பணம் இந்தியாவில் சம்பாதிக்கப்பட்டது என்றும், அதற்கு வரி கட்டவில்லை என்றும் அரசாங்கத்தால் ஒருவேளை நிரூபிக்க முடிந்தால், அதற்கான வரித்தொகையை மட்டும் வசூல் செய்யலாம். அவ்வளவுதான்.
கறுப்புப்பணம் என்பது உலக முதலாளி வர்க்கம் கணக்கில் காட்டாமல் கள்ளத்தனமாக மறைத்து வைத்திருக்கும் மூலதனம். இந்தக் கள்ளத்தனத்தைச் சட்டபூர்வமானதாக ஆக்குவதற்காகவும், கறுப்பை வெள்ளையாகக் காட்டுவதற்காகவும், பல சொர்க்கத்தீவுகளை உலக முதலாளி வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கிறது. இத்தீவுகளின் அரசுகள்,  உலக முதலாளித்துவ வர்க்கம், தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் முடியரசுகள்.
அத்தீவுகளிலிருந்து நம் நாட்டுக்குள்ளும் இங்கிருந்து அங்கும் தாவியபடி இருக்கும் மூலதனம் அங்கிருக்கும்போது கறுப்பாகச் சித்தரிக்கப்படுகிறது. இங்கே வரும்போது வெள்ளையாகத் தோற்றமளிக்கிறது  என்று இக்கட்டுரையின் முதற்பகுதியை முடித்திருந்தோம்.
வரியில்லா சொர்க்கங்களில் ஒன்றான கேமேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட ஹட்ச் டெலிகாம் நிறுவனத்தை வோடாபோன் நிறுவனம் வாங்கியது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, எது கறுப்பு  எது வெள்ளை, எது வரி தவிர்ப்பு  எது வரி ஏய்ப்பு, எது இந்தியா  எது வெளிநாடு என்பன போன்ற  பல ‘தத்துவஞான‘ கேள்விகளுக்கான விடையைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
“ஹட்ச்-எஸ்ஸார் லிமிடெட்” என்ற இந்திய டெலிகாம் நிறுவனத்தின்  67% பங்குகளை சொந்தமாகக் கொண்டிருந்த “ஹட்சின்சன் டெலிகாம் இன்டர்நேசனல்” என்ற பன்னாட்டு நிறுவனம், அவை அனைத்தையும் ரூ.52,300 கோடி ரூபாய்க்கு வோடாபோன் என்ற இன்னொரு பன்னாட்டு நிறுவனத்துக்கு 2007ஆம் ஆண்டில் விற்றது. இந்த விற்பனையின் தொடர்ச்சியாக இந்தியாவில் இயங்கிவந்த ‘ஹட்ச் தொலைபேசி’, வோடாபோன் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஹட்ச் நிறுவனத்தின் எல்லா இந்திய சொத்துகள் மீதான கட்டுப்பாடும் வோடாபோன் நிறுவனத்தின் கைக்கு மாறியது.
ஹட்ச் நிறுவனம் இந்தியாவில் இருக்கின்ற தனது சொத்துகளை வோடாபோன் நிறுவனத்திற்கு விற்று இலாபம் பார்த்திருப்பதால், அந்த விற்பனையின் மீது 11,000 கோடி ரூபாய் மூலதன ஆதாய வரியை (capital gains tax) விதித்தது வருவாய்த்துறை. மேற்கூறிய தொகையைப் பிடித்தம் செய்து தன்னிடம் ஒப்படைக்குமாறு வோடாபோன் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டது. வரியைக் கட்ட மறுத்த வோடபோன் நிறுவனம், இந்த சொத்து விற்பனை இந்தியாவுக்கு வெளியில் நடந்தது என்பதால், இதன் மீது வரி விதிக்க இந்திய வருவாய்த்துறைக்கு அதிகாரம் இல்லையென்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.
‘ஹட்சின்சன்எஸ்ஸார் என்ற இந்திய நிறுவனத்தின் 67% பங்குகளுக்கு உரிமையாளர், கேமேன் தீவுகள் என்ற நாட்டைச் சேர்ந்த சி.ஜி.பி. இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம். அந்த சி.ஜி.பி நிறுவனம், ஹட்சின்சன் டெலிகாம் இன்டர்நேஷனல் (கேமேன்) ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது. அதுவும் கேமேன் தீவுகள் நாட்டைச் சேர்ந்தது. தற்போதைய விற்பனையில் கேமேன் தீவுகள் என்ற நாட்டைச் சேர்ந்த சி.ஜி.பி. நிறுவனத்தின் சொத்துகளான பங்குகள், வோடாபோனுக்கு விற்கப்பட்டிருக்கின்றன. இந்த பங்கு விற்பனைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதன் மீது வரி விதிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு கிடையாது’ என்று வாதிட்டது வோடபோன் நிறுவனம்.
“பங்குகள் எந்த நாட்டின் நிறுவனத்துக்கு சொந்தமாக இருந்தாலும், இந்தப் பங்கு விற்பனையின் நோக்கம், மேற்படி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களைக் கட்டுப்படுத்துவதுதான். இந்த விற்பனை மூலம் கட்டுப்படுத்தப்படும் சொத்துகளும், தொழிலும் இந்தியாவில்தான் இருக்கின்றன என்பதால், இங்கே வரியைக் கட்டத்தான் வேண்டும்” என்று செப். 2010இல் தீர்ப்பளித்தது மும்பை உயர் நீதிமன்றம்.
இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது வோடபோன் நிறுவனம். காங்கிரசின் செய்தித் தொடர்பாளராக இருந்த அபிஷேக் மனு சிங்வி, ஹரிஷ் சால்வே போன்ற கார்ப்பரேட் வழக்குரைஞர்கள், இலண்டனிலிருந்து வந்து இறங்கியிருந்த சர்வதேச சட்ட வல்லுநர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே வோடபோன் நிறுவனத்துக்காக வேலை செய்தனர்.
ஜனவரி 20, 2012 அன்று தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சு,  மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து வோடபோனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. ஹட்ச் நிறுவனத்துக்கும் வோடாபோனுக்கும் இடையிலான இந்தப் பரிவர்த்தனையின் நோக்கமே, இந்தியாவில் இருக்கும் ஹட்ச் டெலிகாமின் சொத்துகளையும் பங்குகளையும் அந்நிறுவனத்தின் மீதான கட்டுப்பாடு முழுவதையும் வோடாபோன் நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிந்த போதிலும்,  இந்தியாவில் உள்ள சொத்துகள் கைமாறுவதற்கும் கேமேன் தீவுகளில் பங்குகள் கைமாறியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றது உச்ச நீதிமன்றம்.
அது மட்டுமல்ல; கேமேன் தீவுகள் போன்ற வரியில்லா சொர்க்கங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தமது ஹோல்டிங் நிறுவனங்களையும், லெட்டர் பேடு நிறுவனங்களையும் டஜன் கணக்கில் உருவாக்குவதன் நோக்கமே வரி ஏய்ப்புதான் என்ற போதிலும், அவ்வாறு லெட்டர் பேடு நிறுவனங்களை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்வதை, வரியைத் தவிர்க்கின்ற சட்டபூர்வ நடவடிக்கைதான் என்றும் கூறியது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
“இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு அந்நிய நேரடி மூலதனம் தவிர்க்கவியலாமல் தேவைப்படுகிறது. இந்தியாவுக்குள் வருகின்ற அந்நிய மூலதனம் என்பது அநேகமாக வரியில்லா சொர்க்கங்களான தீவுகள் வழியாகவும், இந்திய அரசு இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (Double taxation avoidance treaty) போட்டுக் கொண்டிருக்கின்ற நாடுகள் வழியாகவும்தான் வருகிறது. இவை இந்தியாவுக்குள் நுழையும் உலக வர்த்தகத்தின் முக்கியமான வழித்தடங்களாக அங்கீகரிக்கவும் பட்டிருக்கின்றன” என்று கூறியிருப்பதுடன், வோடாபோன் மீதான வரி விதிப்பை, ‘மூலதனத்தின் மீதான மரணதண்டனை’ என்றும் கண்டித்திருக்கிறார், மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ராதாகிருஷ்ணன்.
கறுப்புப்-பணம்ரூ.11,200 கோடி வரிப்பணத்தை அரசிடமிருந்து பறித்து வோடபோன் நிறுவனத்தின் கையில் ஒப்படைத்து விட்டது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இத்தீர்ப்பினை மேற்கோள் காட்டி, தாங்கள் ஏற்கெனவே வருமானவரித்துறைக்குக் கட்டியிருக்கும் சுமார் ரூ.40,000 கோடி வரிப்பணத்தை திருப்பித் தருமாறு கேட்டிருக்கின்றன பல பன்னாட்டு நிறுவனங்கள். இந்த தீர்ப்பு தோற்றுவித்திருக்கும் உடனடி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, மீளாய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
“இந்த தேசம் சூறையாடப்படுகிறது. சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து இதை நாங்களே விசாரிக்கப்போகிறோம்’ என்று கறுப்புப் பணம் தொடர்பான வழக்கில் குமுறி வெடித்தது உச்ச நீதிமன்றம். அரசாங்கமோ “இது எங்க ஏரியா, உள்ளே வராதே!” என்று நீதிமன்றத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்தது  அதெல்லாம் போன வருசம்! அவர்கள் வேறு நீதிபதிகள்!
இப்போது, “வரி தவிர்ப்பு என்பது மூலதனத்தின் அடிப்படை உரிமை என்றும், வரிவிதிப்பு என்பது மூலதனத்தின் மீதான மரணதண்டனை”  என்றும் (Capital Punishment on Capital Investment – Justice Radakrishnan)  வியாக்கியானம் செய்து வோடாபோனுக்கு வரிப்பணத்தைப் பிடுங்கிக் கொடுக்கிறது உச்ச நீதிமன்றம். “இந்தியா வரியில்லா சொர்க்கமல்ல, வருமான வரிச் சட்டத்தை முன்தேதியிட்டு திருத்தப்போகிறோம்” என்கிறது மத்திய அரசு  இது இந்த வருசம்! இவர்கள் வேறு நீதிபதிகள்!
ஆனால் அரசாங்கம் என்னவோ, அதே அரசாங்கம்தான். ஹட்ச், வோடாபோன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமது வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை எப்படி நடத்தி வந்தனர் என்பது பற்றி இதுவரை ஒன்றுமே அறியாமல் இருந்துவிட்டு, இப்போதுதான் கண்டுபிடித்துள்ளதைப் போலப் பேசுகிறது மே 20ஆம் தேதியன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள கறுப்புப் பணம் தொடர்பான ‘வெள்ளை அறிக்கை’.
“மொரிசியஸ், கேமேன் தீவுகள், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் ஆகியவற்றில் இருந்த பல லெட்டர் பேட் கம்பெனிகளைத் (Post Box Companies) தனது கிளை நிறுவனங்களாகக் காட்டி, அவை மூலம் 1992 முதல் 2006 வரை ஹட்சின்சன் குழுமம் இந்தியாவில் முதலீடு செய்தது. பின்னர் கேமேன் தீவுகளில் அந்நிறுவனம் வைத்திருந்த லெட்டர் பேட் கம்பெனி ஒன்றின் மூலமாக தனது இந்தியத் தொழில் முழுவதையும் வோடபோனுக்கு விற்றுவிட்டது” என்று கூறி கார்ப்பரேட் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துவதைப் போல நாடகமாடுகிறது, பிரணாப் முகர்ஜியின் வெள்ளை அறிக்கை. எதற்காக இந்த நாடகம்?
தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக அரசு இழந்திருக்கும் 11,200 கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை என்பதனாலும், வோடாபோன் வழக்கில் அரசு சந்தித்திருக்கும் இமாலயத் தோல்வி, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இந்த அரசு வைத்திருக்கும் கள்ளக் கூட்டை அம்பலப்படுத்திவிடும் என்பதனாலும்தான் இந்த நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பதைப் போல நடிக்கிறது அரசு.
“தங்கள் செயல்பாடுகளைக் கறுப்புப் பணத்துடன் தொடர்புபடுத்தி பேசியிருப்பது தங்கள் நிறுவனத்தையே கேவலப்படுத்துவதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார், வோடாபோன் நிறுவனத்தின் சி.இ.ஓ. விட்டோரியோ கொலாவ். வோடபோன் நிறுவனத்தின் வக்கீலான ஹரிஷ் சால்வே, மன்மோகன் சிங்கை சந்திக்கு இழுத்திருக்கிறார். “தீர்ப்பு உங்களுக்கு எதிராக அமைந்து விட்டால், முன் தேதியிட்டு சட்டத்திருத்தம் ஏதும் கொண்டுவருவீர்களா?” என்று மன்மோகன் சிங்கிடம் கேட்டாராம் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன். “நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அரசு அமல்படுத்தும்” என்று அவருக்கு வாக்கு கொடுத்திருந்தாராம் மன்மோகன் சிங். “கேவலம் 11,200 கோடி ரூபாய்க்காக ஒரு பிரதமர் தான் கொடுத்த வாக்கை மீறலாமா? நம்முடைய தேசத்தைப் பற்றி உலகம் என்ன நினைக்கும்?” என்று துடிக்கிறார் ‘தேசபக்தர்’ சால்வே.
வோடாபோனுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை முடக்கும் விதத்தில் முன்தேதியிட்ட  சட்டமொன்றைக் கொண்டு வர முயன்றால், இந்திய அரசின் மீது வழக்கு தொடுத்து சர்வதேச தீர்ப்பாயத்திற்கு இழுப்போம் என்று கூறியிருக்கிறது வோடபோன் நிறுவனம்.
கறுப்புப் பணத்தையும் கார்ப்பரேட் மோசடியையும் நியாயப்படுத்தும் விதத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டதால், அதனைச் சரி செய்வதற்கு போராடிக் கொண்டிருப்பதைப் போன்றதொரு தோற்றத்தைக் காட்டி வருகிறது அரசு. அவ்வளவே!  வோடாபோன் தீர்ப்பை வழங்கிய மாண்புமிகு நீதிபதிகள், கார்ப்பரேட் கொள்ளையை நியாயப்படுத்திப் பேசுவதில் தங்களையே விஞ்சி விட்டது குறித்து அலுவாலியாவும் சிதம்பரமும் மகிழ்ந்திருப்பார்கள் என்பதே உண்மை.
அவ்வப்போது சில நீதிபதிகள், கார்ப்பரேட் கொள்ளையைக் கட்டுப்படுத்தும் விதத்திலான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்களெனினும், இந்தக் கொள்ளையை நியாயப்படுத்துவதற்கான வாய்ப்பைத்தான் சட்டங்கள் வழங்கியிருக்கின்றன. வரி ஏய்ப்பு உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகள் அனைத்தையும் படிப்படியாகச் சட்டபூர்வமானவையாக்கி வருகின்றது  தாராளமயக் கொள்கை.
கறுப்புப்-பணம்
பிரணாப் முகர்ஜி வெளியிட்டிருக்கும் கறுப்புப் பணம் குறித்த வெள்ளையறிக்கை 2000 முதல் 2011 வரையிலான காலத்தில் இந்தியாவுக்குள் வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 41.80% மொரிசியஸிலிருந்தும், 9.17% சிங்கப்பூரிலிருந்தும் வந்திருக்கின்றன என்ற உண்மையை இப்போதுதான் கண்டுபிடித்ததைப் போல குறிப்பிட்டிருப்பதுடன், இது இந்திய முதலாளிகளின் கறுப்புப் பணம், ஞானஸ்நானம் பெற்று வெள்ளைப் பணமாகவும், அந்நிய மூலதனமாகவும் இந்தியாவுக்குள் நுழைவதற்கான ஒரு கொல்லைப்புற வழியாகவும் மாறிவிட்டதாகக் கூறுகிறது.
மொரிசியஸ், கேமேன் தீவுகள்  உள்ளிட்ட பல வரியில்லா சொர்க்கங்களுடன், இந்திய அரசு இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதே, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்வதற்கும், கறுப்பை வெள்ளையாக்குவதற்குமான வாய்ப்பை இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்காகத்தான்.
மொரிசியஸின் மக்கட்தொகை வெறும் 12 இலட்சம். இந்த சுண்டைக்காய் நாட்டில் இந்தியத் தரகு முதலாளிகள் முதலீடு செய்வதற்கோ, இலாபம் ஈட்டுவதற்கோ எதுவும் இல்லை. மேலும் அந்த நாடு, முதலீட்டு ஆதாய வரி உள்ளிட்ட வரிகள் ஏதும் இல்லாத வரியில்லா சொர்க்கம் என்பதால், அங்கே வரிவிலக்கு கோருவதற்கான தேவையும் இல்லை. ஆக, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு இந்தியாவில் வரிவிலக்கு அளிக்கும் ஒரே நோக்கத்துக்காகத்தான் இந்த ஒப்பந்தமே உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் மொரிசியஸ் தீவின் குடியிருப்போராக சான்றிதழ் பெற்று (Tax Residency Certificate), அதன் பின்னர் அங்கே ஒரு லெட்டர் பேடு கம்பெனியைத் தொடங்கி, அக்கம்பெனியின் பெயரில் இந்தியாவில் முதலீடு செய்து ஆண்டு தோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து வந்தன பன்னாட்டு நிதி நிறுவனங்கள்.
கறுப்புப்-பணம்இந்த அநீதியைக் காணப் பொறுக்காத சில வருமான வரித்துறை அதிகாரிகள், மூலதன ஆதாய வரியையும், வரி செலுத்த தவறியதற்கான அபராதத்தையும் செலுத்துமாறு, 2000வது ஆண்டில் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்குத் தாக்கீது அனுப்பினர். மறுகணமே மும்பை பங்குச் சந்தை கிடுகிடுக்கத் தொடங்கியது. இந்தியாவிலிருந்து வெளியேறப்போவதாக அந்நிய முதலீட்டாளர்கள் அரசை அச்சுறுத்தினர். உடனே, அன்றைய பா.ஜ.க. அரசின் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா, “மொரிஷியஸில் பதிவு செய்த கம்பெனிகள் எவையும் இந்தியாவில் வரி செலுத்தத் தேவையில்லை” என்று நேர்முக வரிகளுக்கான மத்திய வாரியத்தின் (Central Board of Direct Taxes) சார்பில் சுற்றிக்கை அனுப்பி, வரி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தினார்.
இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து ‘ஆசாதி பச்சாவோ ஆந்தோலன்’ என்ற அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்தது. மேற்கூறிய சுற்றறிக்கை, “இந்திய வருமான வரிச்சட்டத்துக்கு எதிரானது என்றும், இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பது என்ற பெயரில் வரி ஏய்ப்பை ஊக்குவிப்பது” என்றும் கூறி, அதனை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்.
உடனே, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பா.ஜ.க. அரசு, “அந்நிய முதலீடுகளை இந்தியாவுக்கு ஈர்க்க வேண்டுமானால் இத்தகைய சலுகைகளைக் கொடுத்தே  ஆகவேண்டும்” என்று வாதிட்டது. மேற்கூறிய இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை வரி ஏய்ப்பாகக் கருத முடியாது என்றும், அது வரியைத் தவிர்க்கின்ற சட்டபூர்வமான நடவடிக்கைதான் என்றும் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
இதுவும் போதாதென்று, மார்ச் 2003 க்குப்பின் வாங்கி விற்கப்படும் பங்குகள், பத்திரங்கள் மீதான மூலதன ஆதாய வரியை ரத்து செய்வதாக 2003-04 பட்ஜெட்டில் அறிவித்தார் யஷ்வந்த் சின்கா. 2004இல் ஆட்சிக்கு வந்தது காங்கிரசு.  பங்குப் பத்திரங்கள் மீதான மூலதன ஆதாய வரியை முற்றிலுமாகவே ரத்து செய்வதாக அறிவித்தார், ப.சிதம்பரம்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சிறிய சிராய்ப்பு ஏற்படும் வகையில் ஒரு சிறிய நீதிமன்றத் தீர்ப்பு வந்தாலும், உடுக்கை இழந்தவன் கை போல, விரைந்து சென்று இடுக்கண் களைந்த காங்கிரசும் பா.ஜ.க.வும்தான் கறுப்புப் பணத்துக்கு எதிராகச் சண்டமாருதம் செய்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் 4,5 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரித்தள்ளுபடிகளை வாரி வழங்கும் இந்த அரசுதான், வரியில்லா சொர்க்கங்களின் வழியாக நடத்தப்படும் மறைமுகமான வரி ஏய்ப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு சட்டமியற்றப் போவதாகவும் கறுப்புப் பணத்தை முடக்கப் போவதாகவும் கூறி வருகின்றது.

Monday, June 25, 2012

போர்க்கள புகைப்படக்கலைஞர் ராபர்ட் கபே


1938ம் ஆண்டு "பிக்சர் போஸ்ட்' என்ற உலகப்புகழ் பெற்ற பத்திரிகை பின் வருமாறு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் "ராபர்ட் கபே' எடுத்த வியட்நாம் போர்க்களகாட்சிகள் நாளை முதல் பிரசுரமாகிறது என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு புகைப்படக்கலைஞருக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்து வெளியான இந்த அறிவிப்பு, யார் அந்த புகைப்படக்கலைஞன் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலை அவரை அறியாதவர்களுக்கு ஏற்படுத்தியது.
யார் அந்த ராபர்ட் கபே; வாழ்வையும், சாவையும் போர்க்களமாக்கிக்கொண்ட புகைப்படக் கலைஞர். உலகை உலுக்கிய போர்ப்புகைப்படங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலில் இருப்பவர். நாற்பது வயதில் மரணத்தை தொட்டவர். அந்த நாற்பதாவது வயதிலும் கேமிராவுடன் போர்களத்தில் நின்றவர். இதனால் உலகம் முழுவதும் உள்ள புகைப்பட ஆர்வலர்களின் மனதை வென்றவர்.

ஹங்கேரியில் பிறந்த இவரது இயற்பெயர் என்ட்ரி ப்ரைடுமேன். பட்டப்படிப்பு முடிப்பதற்கு முன்பே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் சந்தர்ப்பம் இவரை புகைப்படக் கலைஞராக்கியது. எழுத்தில் வார்க்க நினைத்த உணர்வுகளை புகைப்படங்களில் கொண்டுவர முடிவு செய்தார்.புகைப்படக்கலைக்கு தீவிரமானதொரு முகத்தை தருவது போர் புகைப்படங்களே என்பதை உணர்ந்து போர் புகைப்படங்களை எடுக்க துணிந்தார். போர் வீரர்களுக்கு இணையான வீரமும், துணிச்சசலும், சாகசமும் இருந்தால் மட்டுமே போர்க்கள புகைப்பட கலைஞனாக இருப்பது சாத்தியம். இதெல்லாம் கூடுதலாகவே கொண்டிருந்த என்ட்ரி ப்ரைடுமேன், ராபர்ட் கபே என்ற புனைப்பெயருடன் போர்ப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார்.

போர்க்கள புகைப்படங்கள் என்றாலே வீரர்கள் அணிவகுப்பு, பீரங்கிகளின் முன்னேற்றம், குண்டு துளைத்த கட்டிடங்கள், பிணக்குவியல்தான் காட்சி படுத்தப்படும். அந்த மாதிரியான சூழலில் ஸ்பானிஷ் போரின் போது ஸ்பானிஷ் வீரர் ஒருவர் குண்டடிபட்டு சாய்ந்து விழும் படம் ஓன்றை ராபர்ட் கபே எடுத்தார். சாவின் எஞ்சியிருந்த கடைசி நொடியினை பதிவு செய்த அந்த படம் "வு' என்ற பிரெஞ்சு பத்திரிகையில் முதலில் வெளிவந்தது. அப்போது கூட அந்த படம் அதிகம் பேசப்படவில்லை. ஆனால் அதற்கு பிறகு அந்த படத்தை "லைப்' பத்திரிகை உணர்ச்சிகரமான குறிப்புகளுடன் "சரியும் போர்வீரன்' என்று தலைப்பிட்டு பெரிதாக வெளியிட்டதும் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது. உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகள் தத்தம் கண்ணோட்டத்துடன் அந்த படத்தை மறுபிரசுரம் செய்தன.

இதன் பிறகு ராபர்ட் கபேயின் பெயர் உச்சத்திற்கு சென்றது. இவரை ஒப்பந்தம் செய்து போர்க்களத்திற்கு புகைப்படம் எடுக்க அனுப்புவதற்கு புகழ் பெற்ற செய்தி ஸ்தாபனங்கள் போட்டியிட்டன. அவரும் இரண்டாம் உலகப்போர், ஜப்பானியப் போர், அரபு- இஸ்ரேல் உள்ளிட்ட ஐந்து போர்களங்களில் புகைப்படக்கலைஞராக பணியாற்றி ஆயிரக்கணக்கான சாகவரம் பெற்ற படங்களை பதிவு செய்தார். இவர் போர்க்களத்தில் பெற்றதைவிட இழந்தது அதிகம். தான் உயிருக்கு உயிராய் காதலித்த "ஹெரா டேராவையும்' போர்க்களத்திற்கு கூட்டிச் சென்று காதலையும், புகைப்படக்கலையும் ஒரு சேரக் கற்றுக் கொடுத்தார். இரண்டிலுமே பிரமாதமாக பரிணமிக்கும் நேரத்தில் குண்டுக்கு பலியாகி காதலி "டேரா' அநியாயமாக செத்துப்போனார்.

ரொம்பவே மனது பாதிக்கப்பட்டாலும் விரைவில் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட ராபர்ட் கபே தனது நண்பர் துணையுடன் "மேக்னம் போட்டோஸ்' என்ற ப்ரீலென்ஸ் புகைப்பட அமைப்பை ஏற்படுத்தினார். இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள இளைய தலைமுறை புகைப்படக்கலைஞர்களின் வாழ்விற்கு, வளர்ச்சிக்கு அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் நிறுவனம்தான் "மேக்னம் போட்டோஸ்' நிறுவனம்.

ஜார்ஜ் ஆக்ஸல், எர்னஸ்ட் ஹெமிங்வே போன்ற பிரபல எழுத்தாளர்களுடனும், நோபல் பரிசு பெற்ற ஜான் ஸ்டெப்பெக்கருடனும் இணைந்து போர்க்களங்களில் பணியாற்றினார். இவர்களின் எழுத்தும், வர்ணனைகளும் ராபர்ட் கபேயின் படங்களுக்கு மிகவும் உணர்ச்சியூட்டி மிகுந்த உயிரோட்டத்தை உண்டாக்கியது.


பிரபல டைம் பத்திரிகைக்காக இந்தோசீனா போரை படமெடுக்க களமிறங்கியவர், 1954ம் வருடம் மே மாதம் 25 ம்தேதி ராணுவ வீரர்களுக்கு முன்பாக வேகமாக ஒடிச்சென்று படமெடுக்கும் போது கண்ணிவெடியில் சிக்கி தூக்கியெறியப்பட்டார். அலறியடித்து அனைவரும் ஒடிச்சென்று பார்த்த போது அவரது கால்கள் சிதறி சி்னாபின்னமாகியிருந்தது. மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஒடினார்கள். ஆனால் அங்கே அனைவரது கண்முன்னாலும் அவரது உயிர் கொஞ்சம், கொஞ்சமாக பிரிந்தது. கடைசிவரை பிரியாமல் இருந்தது அவரது கையில் இருந்த கேமிரா மட்டுமே.

சிஸ்டம் டிப்ஸ்

* கம்ப்யூட்டரில் ஒரு புரோகிராமை இயக்க முயற்சி செய்கிறீர்கள். அல்லது எதனையேனும் அதில் தேட முயற்சி செய்து கொண்டிருக் கிறீர்கள். அப்போது திடீரென அந்த புரோகிராம் எதுவும் செய்திடாமல் நின்று விடுகிறது. எந்த சலனமும் இல்லாமல் அப்படியே உள்ளது. என்ன செய்யலாம்? இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று பார்ப்போமா?
CTRL + ALT + DEL என்ற மூன்று பட்டன்களை ஒரு சேர அழுத்துங்கள். ஒரு கட்டம் எழுந்து வரும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் வரிசையாகக் காட்டப்பட்டிருக்கும். அந்த பட்டியலில் உங்களைத் திகைக்க வைத்த புரோகிராம் பெயரைத் தேடித் தேர்ந்தெடுங்கள். பின் End Task என்ற கட்டத்தில் கிளிக் செய்திடுங்கள். இனி உங்கள் கம்ப்யூட்டர் முடக்கம் நீங்கி மீண்டும் செயல்படத் தொடங்கும். இப்போது மீண்டும் நீங்கள் விரும்பிய அந்த புரோகிராமை இயக்கி செயல்படுங்கள்.

* உங்களுடைய சி டிரைவில் என்ன என்ன உள்ளன என்று அறிய ஆவலா? விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று சி டிரைவ் மீது கிளிக் செய்து அறிவது ஒரு வழி. டாஸ் கமாண்ட் பிராம்ப்ட் வரவழைத்து அதில் C:\ என டைப் செய்து என்டர் அழுத்தி அறிவது ஒரு வழி. இன்னொரு வழியும் உள்ளது. எக்ஸ்பி தொகுப்பில் விண்டோஸ் கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி அதில் வரும் மெனுவில் Run கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் C என மட்டும் டைப் செய்து என்டர் அழுத்துங்கள். உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டு C டிரைவில் உள்ள போல்டர்கள் மற்றும் பைல்கள் காட்டப்படும். அல்லது \ என்ற பேக்ஸ்லாஷ் அமைத்து என்டர் தட்ட சி டிரைவ் பைல்கள் கிடைக்கும்.

* நெட்வொர்க் (Network) : தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கம்ப்யூட்டர்களையும் சார்ந்த சாதனங்களையும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு வலைப்பின்னல். இது கம்பிகள் வழியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. வயர்லெஸ் நெட்வொர்க்குகளும் சாத்தியமே.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளிட் "பி.சி.'




1975 ஆம் ஆண்டு பில் கேட்ஸ், தன் நண்பர் பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தினைத் தொடங்கினார். அப்போதிருந்த மைக்ரோ கம்ப்யூட்டரில் பயன்படுத்த பேசிக் என்னும் புரோகிராமிங் மொழியை அவர்கள் விற்பனை செய்திட முயற்சித்தனர். தொடர்ந்து சாப்ட்வேர் புரோகிராம்களையே தயாரித்த இந்நிறுவனம், அவற்றின் மூலம் இந்த உலகை மாற்றி அமைத்தன. மனித இனத்தின் சிந்தனைப் போக்கையே அடியோடு புரட்டிப் போட்டன.
இப்போது முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2012 ஆம் ஆண்டில், மைக் ரோசாப்ட், முற்றிலும் புதிய முயற்சியாக, ஹார்ட்வேர் பிரிவில், டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டரைத் தயாரித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஹார்ட்வேர் பிரிவில் மவுஸ், கீ போர்ட், வெப் கேமரா போன்ற சாதனங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளாக அவ்வப்போது வெளியாகி விற்பனையாயின. ஆனால், முழுமையான கம்ப்யூட்டர் இப்போதுதான் வெளியாகியுள்ளது.
Surface என்ற பெயரில் ஜூன் 18 அன்று விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும், இரண்டு மாடல் டேப்ளட் கம்ப்யூட்டர்களை, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர் அறிமுகப்படுத்தினார். இவை இரண்டும் மேக்னீசியத்தில் உருவாக்கிய பாதுகாப்பு கவசத்தில் தரப்படுகிறது. இத்துடன் இணைத்தே அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்ட் இதனை ஒரு லேப்டாப் போல வைத்து இயக்க வசதியைத் தருகிறது. இரு மாடல்கள் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. சர்பேஸ் புரோ, இன்டெல் கோர் ஐ 5- ஐவி பிரிட்ஜ் ப்ராசசருடன், விண்டோஸ் 8 ப்ரோ பதிப்பை இயக்குகிறது. இதனால் விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கும் மெட்ரோ ஸ்டைல் அப்ளிகேஷன்களை இதில் இயக்கலாம். வழக்கம் போல வேர்ட், எக்ஸெல் போன்ற அப்ளிகேஷன்களையும் மெட்ரோ அப்ளிகேஷன்களையும் இதில் இயக்கலாம். போட்டோஷாப் போன்றவற்றையும் இயக்கலாம்.
இன்னொன்றான சர்பேஸ் ஆர்.டி. கம்ப்யூட்டரில், என்வீடியா டெக்ரா 3 சிப் பயன்படுத்தப்படுகிறது. இதில் விண்டோஸ் 8 ஆர்.டி. சிஸ்டம் செயல்படுகிறது. வழக்கமாக டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் ஆபீஸ் அப்ளிகேஷன்களை இதில் இயக்க முடியாது. அதற்குப் பதிலாக குறைந்த அளவிலான ஆபீஸ் தொகுப்புகளை (“Office Home & Student”) இயக்கலாம். முந்தையதைக் காட்டிலும் தடிமன் குறைவாக, குறைவான எடையில், சற்றுக் குறைந்த விலையில் (இன்னும் விலை அறிவிக்கப்படவில்லை) கிடைக்கும்.
இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை முதன்மையாகத் தயாரித்து, அதற்கேற்ற கம்ப்யூட்டர்களை எச்.பி. மற்றும் டெல் போன்ற நிறுவனங்களிடம் விட்டு விட்டிருந்த மைக்ரோசாப்ட், முதன் முதலாக, முழுமையான கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்குகிறது. இதன் மூலம் டேப்ளட் பிசி சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றியை அங்கீகாரம் செய்துள்ள மைக்ரோசாப்ட், இந்த இரண்டு சர்பேஸ் டேப்ளட் பிசிக்கள் மூலம் போட்டியில் இறங்குகிறது. இவை விற்பனைக்கு அக்டோபர் மற்றும் அடுத்த ஜனவரியில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. விண்டோஸ் ஆர்.டி. சர்பேஸ்: 10.6 அங்குல கிளியர் டைப் எச்.டி. டிஸ்பிளே திரை கிடைக்கிறது. இதன் ஆஸ்பெக்ட் ரேஷியோ 16:9 ஆக உள்ளது. இதுதான் தற்போது மானிட்டர் திரையின் எச்.டி. வரை யறைக்கான திரையாகும். 22 டிகிரி கோணத்தில் இதன் திரை முனைகள் உள்ளன. ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் வழக்கமான திரைக்காட்சியை இது தரும். இதன் எடை 676 கிராம். 9.33 மிமீ தடிமன், மைக்ரோ எஸ்.டி., யு.எஸ்.பி., மைக்ரோ எச்.டி.எம்.ஐ. போர்ட்கள், 2 x 2 MIMO antennae 32 அல்லது 64 ஜிபி ஸ்டோரேஜ் டிஸ்க் ஆகியன முக்கிய அம்சங்களாகும். 31.5 தீwatthour பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஆபீஸ் 15 அப்ளிகேஷன்கள், டச் கவர் மற்றும் டைப் கவர் தரப்படுகின்றன. VaporMg Case & Stand இணைக்கப் பட்டுள்ளன. இது தனி நபர் பயன்பாட்டிற்கானது.
2. விண்டோஸ் 8 ப்ரோ சர்பேஸ்: முந்தைய டேப்ளட் பிசியில் தரப்படும் அதே திரை இதிலும் தரப்பட்டுள்ளது. அதன் அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன. இதன் எடை 903 கிராம், 13.5 மிமீ தடிமன், மைக்ரோ எஸ்.டி.எக்ஸ்.சி., யு.எஸ்.பி.3.0., மினி டிஸ்பிளே போர்ட்கள், 2 x 2 MIMO antennae, 64 அல்லது 128 ஜிபி ஸ்டோரேஜ் டிஸ்க் ஆகியன முக்கிய அம்சங்களாகும். 42 watthour பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர், நிறுவனங்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும்.
இந்த இரண்டு கம்ப்யூட்டர்களுடன் Touch Cover, Type Cover, Pen with Palm Block இணைக்கப் பட்டுள்ளன. VaporMg Case & Stand தரப்பட்டுள்ளன.
இவற்றுடன் தரப்படும் டச் கவர் (3mm Touch Cover), மனிதனுக்கும் கம்ப்யூட்டருக்குமான புதிய உறவை அமைக்கிறது. ஒரு புதிய தொழில் நுட்பத்தினை, (pressuresensitive technology,) இது செயல்படுத்துகிறது. இதில் தரப்பட்டுள்ள மேக்னடிக் கனெக்டர் கீ அழுத்தல்கள், சைகைகளாக கம்ப்யூட்டர் திரையை அடைகின்றன. இத்துடன் 5 மிமீ தடிமனில் கிடைக்கும் டைப் கவர் மூலம் வழக்கம் போல கீ போர்ட் டைப்பிங் பழக்கத்தினை மேற்கொள்ளலாம்.
இவற்றின் திரைகள், எப்போதும் எந்த நிலையிலும் ஸ்கிராட்ச் அனுமதிக்காமல், புதிய பொலிவுடனேயே இருக்கும். வழங்கப்படும் கீ போர்ட் இரு மடங்காக விரிந்து திரைக்கான கவசமாகிறது. இதில் டச் கண்ட்ரோல்களும் உள்ளன. முதன் முதலாக மக்னீசியம் கலந்த கவசத்தில் அமைக்கப்பட்ட கம்ப்யூட்டர் இதுதான் என்று பால்மர் தெரிவித்துள்ளார். கீ போர்ட் மட்டுமின்றி ஸ்டைலஸ் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
தொடு மற்றும் அசைவு உணர்வுகள் மூலம் இதனை இயக்கும் வகையில் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை வைத்து இயக்க ஸ்டாண்ட் ஒன்று இணைந்தே கிடைக்கிறது. தரப்படும் கீ போர்டையும் இதனுடன் இணைத்து இயக்கலாம்.
உங்கள் கற்பனையில் உருவாக்க, வடிவமைக்க விரும்பும் அனைத்தையும் இவற்றின் மூலமாகவும் மேற்கொள்ளலாம். இவற்றின் விலை அறிவிக்கப்படவில்லை என்றாலும், நடப்பு சந்தையில் உள்ள டேப்ளட் பிசிக்கள் மற்றும் அல்ட்ரா நோட்புக் கம்ப்யூட்டர்களின் விலையை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு கம்ப்யூட்டர்களும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனத்தை போட்டியில் வீழ்த்துமா என்பது சந்தேகம் என்றாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்று இப்பிரிவில் பணியாற்றுவோர் கூறுகின்றனர். தன்னுடைய கேலக்ஸி டேப் மூலம், சாம்சங், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேடை வெற்றி கொள்ள முயன்று முடியாமல் போனது. ஆனாலும் சர்பேஸ் பிசிக்கள் நிச்சயம் ஒரு நல்ல போட்டியைத் தரும் என எதிர்பார்க்கலாம்.
இதனைப் பின்பற்றி, கூகுள் நிறுவனம், இந்த ஆண்டின் இறுதியில் தன் டேப்ளட் பிசி கம்ப்யூட்டரை வெளியிடும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப்ளட் பிசிக்களுடன் கூகுள் நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்களும் இந்த சந்தையைக் கலக்க இருக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆகாஷ், மொபிலிஸ், சிம்ப்யூட்டர் ஆகிய நிறுவனங்கள் டேப்ளட் பிசிக்களைத் தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளன. ஆனால், நம் மக்கள் இவற்றிற்கு அவ்வளவாக ஆதரவினைத் தரவில்லை. 2011ல், இந்தியாவில் 2 லட்சத்து 50 ஆயிரம் டேப்ளட் பிசிக்கள் விற்பனை செய்யப்பட்டதில், 70% ஐ-பேட் பிசி மற்றும் சாம்சங் டேப்ளட் பிசிக்களாகவே இருந்தன. இனி இவற்றுடன் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போட்டியிடுகையில், இந்திய தயாரிப்புகள் மக்கள் எதிர்பார்க்கும் வசதிகளுடன் சற்று கூடுதலான வசதிகளையும் விற்பனைக்குப் பின்னர் பராமரிப்பினையும் அளித்தால், நிச்சயம் வெற்றி பெறலாம். அரசும் இவர்களை ஆதரிக்கும் வகையில் பல சலுகைகளை அளிக்க வேண்டும்.