Digital Time and Date

Welcome Note

Saturday, December 29, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர் 29



சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

1170 – இங்கிலாந்து, கண்டர்பரி ஆயர் தோமஸ் பெக்கெட் அவரது தேவாலயத்தில் வைத்து இரண்டாம் ஹென்றி மன்னனின் நான்கு ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

1690 – இத்தாலியின் அன்கானோர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானிய போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.

1813 - 1812 போர்: பிரித்தானியப் படைகள் நியூயோர்க்கில் பஃபலோ என்ற நகரை தீக்கிரையாக்கினர்.

1835 - மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

1845 - டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.

1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு YMCA பொஸ்டனில் அமைக்கப்பட்டது.

1876 – ஐக்கிய அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் தொடருந்து பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்தனர்.


1890 - தென் டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.

1891 - தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.

1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார்.

1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1930 - அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.

1937 - ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.

1940 – இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாசி ஜெர்மனியர் தீக்குண்டுகள் வீசியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

1972 – புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் கொல்லப்பட்டனர்.

1975 – நியூயோர்க் நகர விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.

1987 - 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.

1989 - ஹொங்கொங் வியட்நாமிய அகதிகளை பலவந்தமாக வெளியேற்றியதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.

1993 - உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டது.

1996 - குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.

1997 - ஹொங்கொங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.

1998 - கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.

2001 – பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று

டிசம்பர் 28





1065 - லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம் (Westminster Abbey) திறந்துவைக்கப்பட்டது
1612 - கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.

1832: ஜோன் சி கல்ஹோன், அமெரிக்க உப ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய முதல் மனிதரானார்.

1836 - தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன.

1836 - மெக்சிகோவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.

1846 - அயோவா ஐக்கிய அமெரிக்காவின் 29வது மாநிலமாக இணைந்தது.
1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவுக்கு உரிமை கோரியது.

1869 - சிங்கப்பூரில் Chewing gum தடை செய்யப்பட்டிருக்கிறது. வில்லியம் எஃப் சிம்பிள் ( William F Semple ) என்பவர் அதற்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1879: ஸ்கொட்லாந்தில் ரயில் பாலமொன்று உடைந்து 75 பேர் பலி.

1885 - இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.

1891 - யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டன.

1895 - பிரான்சின் லூமியேர சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.

1908: இத்தாலியின் சிசிலி தீவின் மெசின்னா நகரில் 7.2 ரிக்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதால் 75 ஆயிரம் பேர் பலி.

1918: சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கொன்ஸ்டன்ஸ் மார்கிவிக் பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் எம்.பியானார்.


1929 - நியூசிலாந்தின் காலனித்துவ காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட சமோவாவின் 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.

1930 - மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.

1958 - கியூபாவின் 1937 : இந்திய டாடா குழும தலைவர் ரத்தன் டாடா பிறந்த தினம்

1940 : இந்திய அரசியல் தலைவர் ஏ.கே.அந்தோணி பிறந்த தினம்
சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.

1981 - அமெரிக்காவின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எலிசபெத் கார் வேர்ஜீனியாவில் பிறந்தது.

1983 - யுனெஸ்கோ எனும் அமைப்பிலிருந்து விலகியது அமெரிக்கா.

2005 - இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜான்ஜுக் என்பவர் உக்ரேனுக்கு நாடுகடத்த ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2006 - எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுத் துருப்புக்களும் சோமாலியா தலைநகர் மொகடிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இஸ்லாமிய போராட்ட அமைப்பின் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.

2007 - நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

2010: அல்ஜீரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பம்.

Thursday, December 27, 2012

வரலாற்றில் இன்று

 டிசம்பர் 27

உலக வங்கி நிறுவப்பட்ட நாள்

1537 - ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது.

1703 - இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கு ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.

1831 - சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.

1845 - பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.

1864 - இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.

1918 - ஜேர்மனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.

1922 - ஜப்பானின் ஹோஷோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்டது.

1923 - ஜப்பானிய மாணவன் ஒருவன் இளவரசர் ஹிரோஹிட்டோவைக் கொல்ல முயற்சித்தான்
1934 - பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.

1945 - 28 நாடுகள் ஒன்று கூடி World Bank எனப்படும் உலக வங்கியை நிறுவின. இன்டர்நேசனல் மானிட்டரி பண்ட் என்றழைக்கப்படும் அனைத்துலக பண நிதியமும் அமைக்கப்பட்டது

1949 - இந்தோனீசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.

1956 - தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1968 - சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

1978 - ஸ்பெயின் 40வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.

1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.

1985: பலஸ்தீன கெரில்லாக்கலால் ரோம், வியன்னா நகரங்களின் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

1993 - World Trade Organization எனப்படும் உலக வர்த்தக நிறுவனம் நிறுவப்பட்டது
1996 - தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.

 2002: ரஷ்யாவின் செச்னிய பிராந்தியத்தில் இரு வாகன குண்டுத்தாக்குதல்களில் 72 பேர் பலி.


2007: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார்

Wednesday, December 26, 2012

ORATHANADUKARTHIK: சொர்க்கத்தை இவ்வுலகில் அனுபவிக்கும் ஒரே நபர் சுல்தானின் வாழ்கை வரலாறு பாகம் -2

ORATHANADUKARTHIK: சொர்க்கத்தை இவ்வுலகில் அனுபவிக்கும் ஒரே நபர் சுல்தானின் வாழ்கை வரலாறு பாகம் -2

உலகின் முதல் நாகரீகம் - 2

1949இல் அமெரிக்காவை முதன் முதலில் கண்டுபிடித்தது கொலம்பஸ் என்று வரலாறு குறிப்பிடுகிறது. அதே வரலாறு தான் கொலம்பஸ் முதன் முதலாக அமெரிக்காவில் தரையிரங்கிய போது ஒரு மனித இனத்தைக் கண்டதாகவும் அவர்களை இந்தியர்கள் என்று எண்ணி கொலம்பஸ் அவர்களை இந்தியர்கள் என்றழைத்து பின் நாளில் அவர்கள் சிவப்பு இந்தியர்கள் என்றும் அமெரிக்க இந்தியர்கள் என்றும் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. 
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்றால் அங்கிருந்த மனிதர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? கொலம்பஸ்க்கு முன் அழகும் ஆபத்தும் நிறைந்த அட்லாண்டிக் கடல் பகுதியை கப்பல்கள் கடந்தனவா? வட மற்றும் தென் அமெரிக்க பகுதிகளின் முந்தய கால வரலாற்றை தொடர்ச்சியாக பல ஆராய்ச்சிகள் மூலம் ஆய்வு செய்ததில், வல்லுனர்கள் தெரிவிக்கும் உன்மைகள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது. இதன் மூலம் உலகம் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் இழைத்த அநீதி வெளிப்படுகிறது. முனைவர் பேரன் ரோபர்ட் ஃப்ரெய்ஹெர் வான் ஹைன் கெல்டெர்ன் (Dr Baron Robert Freiherr von Heine Geldern) மற்றும் கோர்டொன் எக்ஹோம் (Gordon F. Ekholm) என்ற உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்னவென்றால்: “இந்தியாவில் இருந்து சீனாவிற்கு ஃபா – ஹைனை (கி.பி. 399 – 414) ஏற்றிச் சென்ற மிகப் பெரிய அளவுடைய கப்பல்களுக்கு மெக்ஸிகோவையும், பெருவையும் அடைந்திருப்பது சாத்தியமில்லாமல் இருந்திருக்காது. 
 ஐரோப்ப நாடுகளில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல்களை விட நினைத்துப் பார்ப்பதற்கு கூட முடியாத பன் மடங்கு பெரிய வலுவான கப்பல்களை கொலம்பஸ் பிறப்பதற்க்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் உபயோகித்தனர்.” ஸ்பெய்ன் வரலாற்று ஆய்வாளர் திரு. ஃப்ரே ஷாஹௌன் (1515 கி.மு) அவர்களது காலத்தில் இருந்து இன்று வரை அமெரிக்காவின் வரலாற்றையும், சிகப்பு இந்தியர்கள் என்றழைக்கப்படும் அமெரிக்க பழங்குடி மக்களின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதில் ஆய்வாளர்கள் பெரும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். அதில் பலர் இந்தியாவின் ஒரு பகுதியில் இருந்த மக்கள் தான் கடல் மார்கமாக அமெரிக்கவை வந்தடைந்து அங்கு ஒரு பெரும் நாகரீகத்தை உருவாக்கினர் என்னும் முடிவுக்கு வந்துள்ளனர். “மெக்ஸிகோவின் வரலாறு” (“A Compact History of Mexico”) என்ற புத்தகத்தை எழுதிய திரு. இக்னகியோ பெர்னல் என்னும் எழுத்தாளர் ஆசியாவில் இருந்து சுமார் முப்பத்தைந்தாயிரம் (35,000) ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் அமெரிக்கவிற்குள் நுழைந்தனர் என்கிறார். ஆனால் 
திரு ஆர்கியோ நுன்ஸ் என்னும் பிரிட்டனிய அனு விஞ்ஞானி ஆசியாவில் இருந்து 11000 ஆண்டுகளுக்கு முன்னர் திராவிடர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தனர் என்று குறிப்பிடுகிறார். சில்வைன் லெவி (Sylvain Levi) எனும் பிரெஞ்சு கீழ்த்திசைவாணர் (Orientalist) கிழக்கு நாகரீகம், மதம், இலக்கியங்கள் மற்றும் வரலாற்றைப் பற்றி ஆய்வுகளை எழுதிய்ருக்கிறார். “இந்தியாவும் உலகமும்” என்ற பிரஞ்சு மொழி புத்தகத்தில் அவர் ” பெர்ஸியா முதல் சீனக் கடல்பகுதி வரையில், பனிபடர்ந்த சைபீரியா முதல் ஜாவா மற்றும் போர்னியோ தீவுகள் வரை, ஒசீயானியா முதல் சாகாற்றா வரை, இந்தியா அவளுடைய நம்பிக்கை, வரலாறு, கொள்கை மற்றும் நாகரீகத்தைப் பரவச்செய்திருக்கிறாள். 
பல்லாயிறமாண்டு வரலாற்றில் அவள் உலக மனித இனத்தின் நான்கில் ஒரு பகுதியில் அவளுடைய சுவடுகளைப் பதித்திருக்கிறாள். அவளுடைய பழம்பெருமைகளைத் தெரியாமல் இத்தனைக் காலம் வாழ்ந்திருந்தாலும் அவளுக்கு உலக வரலாற்றை சொந்தம் கொண்டாட முழு உரிமையும் உண்டு.” என்று குறிப்பிடுகிறார். பல கடினமான முயற்சிகளின் பின்னனியில் இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய கலாச்சாரம் இந்தியாவையும் தாண்டி பல நாடுகளில் பரவியிருப்பதை கண்டறிந்துள்ளனர். 
தெங்கிழக்கு ஆசிய நாடுகள் தவிர இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் அமெரிக்காவும் இதில் அடங்கும். இதற்கான பல ஆதாரமும் இப்போது கிடைத்திருக்கிறது. பண்டைய கால பஸிபிக் கடல் பயணத்தை உறுதிப் படுத்தும் ஒரு முக்கிய ஆதாரமாய் விளங்குவது பண்டைய கால காகித தயாரிப்பு தொழில்நுட்பம். சீனா, தெங்கிழக்கு ஆசியா, இந்தோனேசியா மற்றும் மீசோ அமெரிக்கா பகுதிகளில் இத்தொழில்நுட்பம் ஒரே மாதிரியாக அமைந்திருந்தது. மைக்கேல் கோ (Michael Coe) அவருடைய புத்தகத்தில் காகித தயாரிப்பு தொழில் நுட்பம் கிழக்கு இந்தோனேசியாவில் இருந்து மீசோ அமெரிக்காவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்றிருக்கிறது என்று தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுவது இந்த தொழில் நுட்பம் சென்றிருக்கும் பட்சத்தில் இவ்விரு தேசங்களுக்கும் இடையில் தகவல் பரிமாற்றமும் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார். 
அன்புடன் சின்னவன் 

உலகின் முதல் நாகரீகம் பகுதி 1

உலகின் மிகப் பழமையான நாகரீகம் எதுவென கேட்டால் உடனே பலறும் முன் நிறுத்திச் சொல்லுவது கிரேக்க, எகிப்த்திய அல்லது பாபிலோன் நாகரீகத்தைத் தான். ஆனால் இதை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் முதல் நாகரீகமாய்த் தோன்றி பிற நாகரீகங்கள் உருவாக காரணமாய் இருந்தது இந்திய நாகரீகம் என்று நம்பப்படுகிறது. இது எந்த வகையில் உன்மையானது என்பதை மெய்ப்படுத்தவே இந்த தொடர் தொகுப்பு உருவாகியுள்ளது.

உலகின் முதல் நாகரீகம்

உலகின் மிகப் பழமையான நாகரீகம் எதுவென கேட்டால் உடனே பலறும் முன் நிறுத்திச் சொல்லுவது கிரேக்க, எகிப்த்திய அல்லது பாபிலோன் நாகரீகத்தைத் தான். ஆனால் இதை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் முதல் நாகரீகமாய்த் தோன்றி பிற நாகரீகங்கள் உருவாக காரணமாய் இருந்தது இந்திய நாகரீகம் என்று நம்பப்படுகிறது. இது எந்த வகையில் உன்மையானது என்பதை மெய்ப்படுத்தவே இந்த தொடர் தொகுப்பு உருவாகியுள்ளது.

வரலாற்று அறிஞர்கள் பார்வையில் இந்திய நாகரீகத்தின் தொன்மை வெறும் 6500 – 4500 ஆண்டுகளுக்கு முந்தையதாகப் பட்டாலும், சமீபத்திய ஆய்வுகள் இதன் தொன்மையை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாகரீம் குறித்த ஆய்வை மேற்கொள்பவர்களை இண்டாலஜிஸ்ட் (Indologist) என்று அழைப்பதுண்டு. இவ்வாறான ஆய்வாளர்கள் சமீப காலத்தில் பன் மடங்கு உயர்ந்துள்ளனர். துரதிர்ஷ்ட வசமாக இம்மாதிரியான ஆய்வாளர்கள் இந்தியாவில் சொற்ப்பமாகவே உள்ளனர்.

உலகின் முதல் மனித நாகரீகம் உறுவான இடம், மனிதன் எங்கிருந்து எவ்வாறு எந்தெந்த காலகட்டத்தில் எங்கெங்கு இடம் பெயர்ந்தான் என்று பல கோணங்களில், மொழி, கலை, கலாச்சாரம், அரசியல், மதம், நம்பிக்கை, வழிபாடு, விளையாட்டு என பல அம்சங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் இந்தியாவை தொடர்பு படுத்தி முடிவடைகின்றன.

இவ்வாறான ஆராய்ச்களில் தமது வாழ் நாளின் பெரும் பகுதியை தனது மனைவியுடன் இணைந்து ஈடுபடுத்திக் கொண்டவர் வில் டுராண்ட் (Will Durant). இவர் ஒரு அமெரிக்க வரலாற்று ஆராய்ச்சியாளர். மனிதனின் வரலாற்றைத் தேடி உலகின் பல தொன்மையான நகரங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தனது 20 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பை “கலாச்சாரங்களின் வரலாறு” (The Story of Civilization) என்று தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார். மொழி, கலை, வழிபாடு, கலாச்சாரம், அரசியல், விளையாட்டு என அனைத்து கோணங்களிலும் ஆய்வுகளை நடத்தி உலக கலாச்சார வரலாற்றுப் பிண்ணனியில் ஆச்சரியமூட்டும் மாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். 10 பாகங்கள் கொண்ட இந்த பிரம்மாண்ட புத்தகத்தின் முதல் பகுதி “Our Oriental Heritage” என்ற தலைப்பில் உருவானது. அதில் அவர் உலகின் மிகத் தொண்மையான நாகரீகமாய் இந்தியாவைக் குறிப்பிடுகிறார். இதற்கான பல எடுத்துக்காட்டுகளையும் முன் வைக்கிறார். மேலும் கி.மு 9ஆம் நூற்றாண்டிலேயே இந்தியர்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கான கடல் வழியை அறிந்திருந்தார்கள். அதன் மூலமாக மெசப்பட்டோமிய, எகிப்த்து, அரேபியா போன்ற நாடுகளில் தங்களுடைய நாகரீகத்தை அப்போதே நிறுவினார்கள் என்றும் சான்றுகளோடு நிரூபனம் செய்கிறார்.
உலகின் பல்வேறு நாகரீகம் சிதைந்து கொண்டிருந்த வேலையில் இந்திய நாகரீகம் மட்டும் செழித்து வளம் பெற்றிருந்தது. 20ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கு கிடைத்த பொற்காலம் என்றே கூறலாம். இந்தியாவில் புனையப்பட்ட கட்டுக்கதைகளாக கருதப்பட்ட பல வரலாறுகளும், நடைமுறைகளும் வரலாற்று மற்றும் அறிவியல் அங்கீகாரம் பெறத் தொடங்கின. “The Story of India” என்ற தலைப்பில் வெளிவந்த இந்திய வரலாற்றைப் பற்றிய ஆய்வுப் படத்தில் மைக்கல் வூட்ஸ் (Michael Woods) என்னும் அறிஞர் தென்னிந்தியாவை “வாழும் நாகரீகம்” என்று இன்றளவும் இந்திய நாகரீகம் பேனிக் காக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார்.
முனைவர் அருணால்டு ஜோஸப் டொய்ன்பீ (Dr. Arnold Joseph Toynbee) இந்தியாவைப் பற்றி குறிப்பிடும் போது “மேலை நாட்டின் அடிப்படையில் தொடங்கும் கலாச்சாரம் இந்திய வழியில் தான் முடிவடைய வேண்டும். இல்லையேல் இந்த மனித இனம் ஒரு மாபெரும் அழிவைச் சந்திக்க நேரிடும். இந்த மிக இக்கட்டான கால சூழ் நிலையில், இந்திய கலாச்சார முறையைப் பின்பற்றுவது தான் ஒரே வழி. இதில் மட்டுமே மனித இனம் ஒற்றுமையையும் உயர்ந்த சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள முடியும்”என்கிறார்.
1952 இல் அவர் குறிப்பிட்ட ஒரு செய்தி என்ன்வென்றால்“இன்னும் 50 ஆண்டுகளில் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்க கலாச்சாரத்தின் மோகத்திலும், ஆதிக்க கரங்களிலும் அடிமையாகி விடும். ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் பின் நாளில் மதம் அறிவியலின் இடத்தைப் பிடிக்கையில் இந்தியா தன்னை ஆட்சி செய்தவர்களை எல்லாம் ஆட்சி செய்யும்.” என்று இந்திய கலாச்சாரத்தின் பெருமையை பறைசாற்றுகிறார்.

இந்தியாவின் வரலாறு இதுவென மனிதன் குறிப்பிடும் காலத்திற்க்கு பல்லாயிரமாண்டு மந்தைய வரலாற்றையும் தொன்மையையும் கொண்டது இந்தியா. உலகிற்கு இந்தியா கொடுத்த இரண்டு மாபெரும் மொழிகள், தமிழும் சமஸ்கிருதமும். மேற்கத்திய மொழிகள் அனைத்தும் இந்த இரண்டு ஆதி மொழிகளில் இருந்து உருவானது தான் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் வெளியாகும் போர்ஃப்ஸ் பத்திரிக்கை 2000 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு செய்தி : “சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிகளை விட தொன்மையானது மற்றும் வளமானது. இது கணிணியில் பயன்படுத்த பிற மொழிகளைக் காட்டிலும் மிகச் சிறந்தது.” இதே போல் பிரிட்டனில் வெளியாகும் தி மிரர் நாளிதல் வெளியிட்ட செய்தி ” உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் தமிழ் மொழியில் இருந்து தான் தோன்றின.” என்று குறிப்பிடுகிறது.
இது போல இந்திய கலாச்சார சுவடுகளும் நடைமுறைகளும் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகின் பல மூலைகளிலும் நிலைப்பெற்றுள்ளன. ஆரியர்களின் (இங்கே ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுவது இந்தியர்களைத் தான். மேலும் இது குறிப்பாக தென்னிந்தியர்களையே குறிக்கும்) சுவடுகள் தெங்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் பரவியிருக்கின்றன. இவர்கள் கடல் பிரயானத்திலும் கலாச்சாரத்திலும் அதீத வளர்ச்சிப் பெற்றிருந்தனர். பல ஆய்வுகளின் அடிப்படையில் இவர்கள் ஜாவா, பாலி, சுமத்ரா, போர்னியோ, பிலிப்பைன்ஸ், வியட்னாம், அன்னான், பர்மா மற்றும் தாய்லாந்து ஆகிய தேசங்களில் 14ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து வந்து தெரிய வருகிறது. இன்றும் கூட தாய்லாந்து அரச்சர்கள் ராமாயண புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வமான ராமரின் பெயரை தங்களது புனைப்பெயர்களாக சூட்டி வருகின்றனர். ராமாயண புராணம் பாங்காகின் தொன்மையான அரண்மனை சுவருகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் பண்டைய காலத்தில் “சாம்பா” என்றழைக்கப்பட்டது. இந்த நாட்டில் இந்திய கலாச்சாரம் மிக வேகமாக பரப்பப்பட்டது. முதலாம் நூற்றாண்டில் ஒடிசாவைச் சேர்ந்த களிங்க மன்னனால் தான் “ஜாவா” எனும் நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஜாவாவைத் தான் ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள “யவ – தீபா” என்னும் சொல் குறிப்பதாக கருதப்படுகிறது. இந்தோனேஷிய தேசிய சின்னத்தில் கருடன் என்னும் பறவையின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த கருடன் இந்திய புராணங்களில் விஷ்ணுவின் வாகனமாக குறிப்பிடப்பட்டுள்ளது.கம்போஜா என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பெற்ற தற்போதைய கம்போடியாவில் உலகிலேயே மிகப் பெரிய விஷ்ணு கோவில் உள்ளது. அங்கோர் வாட் என்ற அந்த கோவிலைக் கட்டியது இரண்டாம் சூரியவர்மன் என்னும் இந்திய மன்னன். உலக புராதானச் சின்னங்களில் ஒன்றாக ஐ.நா வால் அறிவிக்கப்பட்ட இக் கோவில் கம்போடிய நாட்டு தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ளது. இக்கோவிலைக் கட்டி முடிக்க 37 ஆண்டுகள் என்றும் அங்கோர் என்பது தலை நகரம் என்பதைக் குறிக்கும் சமஸ்கிருத வார்த்தை என்றும் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

1949இல் கோர்டன் எக்ஹோல்ம் (Gorden Ekholm) மற்றும் சமன் லால் (Chaman Lal) ஆகிய இரண்டு அற்ஞர்கள் இந்திய கலாச்சாரத்தை மாயன், அஸ்டெக், இன்கா மற்றும் வட அமெரிக்க கலாச்சாரத்தோடு ஒப்பிட்டு பல ஆய்வுகளைத் தொடங்கினர். அவர்களின் ஆய்வில் இந்த அனைத்து நாகரீகத்தினருடைய கால கணக்கீடு, வழிபாட்டுக் கடவுள்கள் மற்றும் வாழ்வியல் முறைகள் இந்திய நாகரீகத்தோடு தொடர்புடையதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய கலாச்சாரம் அமெரிக்காவில் பரவியிருந்தமைக்கு பல சான்றுகள் கிடைத்தது (தாமரை மலர்களில் கடவுள், பாம்பு வடிவில் கடவுள், பாதி மீன் உறுவில் கடவுள் என பல ஓவியங்களும், சிற்பங்களும் இதில் அடங்கும்). மேலும் தென்னிந்தியாவில் பச்சிஸி (தாயம்) எனும் விளையாட்டு மெக்ஸிகோவில் பட்டோலி என்ற பெயரிலும் பர்சேசி என்ற பெயரிலும் பண்டைய காலத்திலேயே இருந்தது.

இந்தியர்களும் அமெரிக்கர்களும் ஒரே மாதிரியான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வந்தனர். இரண்டு கலாச்சாரத்திலுமே காலக் கணக்கீடு நாங்கு யுகங்களாக பிறிக்கப்பட்டிருந்தன. இரு முறைகளிலுமே 12 நட்சத்திரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அமெரிக்கரின் ஆட்சி முறை மற்றும் கோவில்களில் தேவ தாசிகள் இருத்தல் என பல்வேறு ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகள் அமெரிக்க கலாச்சாரத்தைத் தோற்றுவித்தவர்கள் இந்தியர்கள் என்னும் உன்மையை பறைசாற்றுகிறது.

மெக்ஸிகன் ஆர்க்கியாலஜி என்னும் புத்தகத்தை எழுதிய ராமோன் மெனா என்னும் அறிஞர், நஹுஅல், சாபொடெகா மற்றும் மாயன் கலாச்சார மொழிகள் இந்தியாவில் இருந்து உருவானது என்று தம்முடைய மொழி ஆய்வின் முடிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய கலாச்சாரம் தோற்றுவித்த பல கலாச்சாரங்களை அடுத்து வரும் பகுதிகளில் காணலாம்…..

வரலாற்றில் இன்று

டிசம்பர் 26



பிரிட்டனில் டிசம்பர் 26 ஆம் நாள் Boxing தினமாகக் கொண்டாடப்படுகிறது. பிரிட்டனில் இன்று பொது விடுமுறை.

1793 - கைஸ்பேர்க் என்னும் இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களைத் தோற்கடித்தனர்.

1825 - முதலாம் நிக்கலாஸ் மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய இராணுவத்தினர் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது.

1860: கழகங்களுக்கிடையிலான முதலாவது கால்பந்தாட்டப்போட்டி, இங்கிலாந்தின் ஷீபீல்ட் மைதானத்தில் ஹல்லாம், ஷீபீல்ட் கழகங்களுக்கிடையில் நடைபெற்றது.

1870 - ஆல்ப்ஸ் மலைத்தொடரூடான 12.8-கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.

1898 - ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.

1925 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1933 - பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது.

1937: மத்திய ஐரோப்பாவில் வீசிய புயலினால் 137 பேர் பலி.

1944 - ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை உருவாக்கினார்.

1973 - சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது.

1974 - சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1976 - நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைக்கப்பட்டது.

1979 - சோவியத் விசேட படையினர் ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.

1982 - கணினி யுகத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையிலும், அது மனுக்குலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை முன்னுரைக்கும் வகையிலும் கணினியை Man of the Year என கௌரவித்து பிரசுரித்தது டைம்.

1986 - உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டியது (www.ibiblio.org).

1991 - சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

1998 - அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது.

2003: ஈரானின் பாம் நகரில் பூகம்பத்தினால் சுமார் 10 ஆயிரம் பேர் பலி.

2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 300,000 பேருக்கு மேல் இறந்தனர்.

2006: நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய் குழாயொன்று வெடித்ததால் 260 பேர் பலி.

2006 - சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.

2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள்

2012-ம் ஆண்டு மக்களிடையே அதிகம் பேசப்பட்டவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது யாகூ இணையதளம்.

இதில் அதிகம் இடம் பிடித்தவர்கள் வழக்கம்போல அரசியல்வாதிகள்தான்.

அரவிந்த் கெஜ்ரிவால்
: இந்திய வருவாய்த் துறையில் பணியாற்றிய இவர் சமூக ஆர்வலாக தன்னை மாற்றிக் கொண்டார். பல்வேறு ஊழல்களில் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னால் அண்ணா ஹசாரேவின் வலது கையாக விளங்கினார். சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் இந்தியாவின் முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் அனைத்து ஊடகங்களிலும் இவர் மிகவும் பிரபலமானார். இறுதியில் "ஆம்ஆத்மி' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

நரேந்திர மோடி:
குஜராத்தில் ஒரு சாதாரண அரசியல் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கி சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக உருமாறியவர். இவரை சிலர் தேசிய பாதுகாப்பு அரண் என்றும் சிலர் மேம்பாட்டிற்கான தலைவர் என்றும் நம்புகிறார்கள். மேலும் சிலர் இவரை வருங்கால பிரதமர் என்றும் சிலர் இந்துக்களின் பாதுகாவலர் என்று வர்ணிக்கின்றனர். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரதமர் வேட்பாளராக மோடி நிர்ணயிக்கப்படுவார் என்று பேசப்படுகிறது. எது எப்படியோ 2012-ம் ஆண்டு அரசியலை ஒரு கலக்கு கலக்கியவர் மோடி என்று பட்டியலிடப்பட்டுள்ளார்.

அகிலேஷ் யாதவ்: உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியின் வெற்றி வாய்ப்பைத் தட்டி பறித்தார் இன்னொரு இளைஞரான அகிலேஷ் யாதவ். சட்டமன்றத் தேர்தலில் 403 இடங்களில் 224 இடங்களைப் பிடித்தார். உ.பி. தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து தனித்து ஆட்சி அமைத்தார். நடை பயணம், சைக்கிள் ஆகிய இரண்டையும் ஆயுதமாகக் கொண்டு எளிய மக்களை பிரசாரத்தின்போது சந்தித்தார். அடிமட்ட மக்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் முலாயம் சிங்கின் மகன் என்பது கூடுதல் பலம்.

மலாலா யூசஃப்ஸôய்: பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் சமூக ஆர்வலர்தான் மலாலா யூசஃப்ஸôய். 15 வயதான இந்தச் சிறுமி பெண் கல்விக்காவும், பெண் உரிமைக்காகவும் பாடுபட்டு வருகிறார். இவர் படிக்கும் பள்ளியில் பெண் குழந்தைகள் படிக்க வரக்கூடாது என்று தாலிபான்கள் தடைவிதித்தனர். எனவே ஓர் இணையதள பிளாக்கைத் தொடங்கி அதில் தாலிபான்கள் பிடியில் வாழ்க்கை எப்படியிருந்தது என்று எழுதினார். இவரின் வாழ்க்கையை அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் என்ற நிறுவனம் ஆவணப்படமாக எடுத்தது. தொடர்ந்து பெண் கல்விக்காக தொலைக்காட்சி, செய்தித்தாள்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டே இருந்தார். தாலிபான்களும் தொடர்ந்து இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டேயிருந்தனர். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இவர் சுடப்பட்டார். ஆபத்தான நிலையில் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். எனினும் தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்.

ராபர்ட் வதேரா: டி.எல்.எஃப் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ராபர்ட் வதேராவின் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எழுப்பினார் கெஜ்ரிவால். கடந்த ஆண்டு டி.எல்.எஃப் நிறுவனத்திற்கு தனது இடத்தை ரூ.58 கோடிக்கு விற்றதாகவும், அதற்கான பணத்தை அடுத்த நான்காண்டுகளில் கொடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் மூலம் ரூ.42.61 கோடி லாபத்தைச் சம்பாதித்தார் ராபர்ட் வதேரா என்கிறார் கெஜ்ரிவால். இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குள் வதேராவின் ரியல் எஸ்டேட் வர்த்தகம் பல்மடங்கு உயர்ந்து அதன் சொத்து மதிப்பு ரூ.200 கோடியாக உயர்ந்துள்ளதும், இதில் முறைகேடுகள் நடைபெற்றது எனவும், டி.எல்.எஃப். நிறுவனம் அதன் வர்த்தகத்தில் ஏன் ராபர்ட் வதேராவை இணைத்துக்கொண்டது என்பது கேள்வியாக உள்ளது. சோனியா காந்தியின் மருமகன் என்பதாலா அல்லது டி.எல்.எஃப். நிறுவன உரிமையாளர் வதேராரவின் நண்பர் என்பதாலா?

மன்மோகன் சிங்: இந்த ஆண்டு 80 வயதைத் தொட்ட மன்மோகன் சிங்கை, இங்கிலாந்தைச் சேர்ந்த தினசரி நாளிதழ் ஒன்று "இந்தியாவின் ரட்சகரா அல்லது சோனியா காந்தியின் கைப்பாவையா?' என்றும், "டைம்' பத்திரிகை "செயல்படாத பிரதமர்' என்றும் விமர்சித்தது. இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் மன்மோகன்சிங் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள், கேலிச்சித்திரங்கள் இடம்பெற்றன. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தவாதி என்று பெயர் பெற்றவர் என்றாலும், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர் என்றும் பெயரெடுத்தார்.


பராக் ஒபாமா: அமெரிக்க வரலாற்றிலேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் சரிபாதி வெற்றி வாய்ப்பைப் பெற்றிருந்தது இந்தமுறை தான். ஆனால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னியை எளிதாக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகையை கைப்பற்றினார் ஒபாமா. அமெரிக்க வாக்காளர்கள் ஒபாமாவின் ஆட்சியின் தோல்விகளை புறக்கணித்து, அவருக்கு மற்றொரு வாய்ப்பை அளித்தனர். வெற்றி பெற்ற பின் உரையாற்றிய ஒபாமா, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

யுவராஜ் சிங்: ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து புகழ் பெற்றவர் யுவராஜ் சிங். உலகக் கோப்பையை பெற்றுத் தந்த இவர் அரிய ரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டதும் இவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வெளியேறிவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு ஆதரவாக பிரார்த்தனைகளும், சமூக வலைதளங்களில் ஆதரவும் பெருகிக்கொண்டேயிருந்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்ற யுவராஜ், அங்கிருந்தபபடியே சமூக வலைதளத்தில் தன் புகைப்படத்தையும், தன் உடல்நலத்தையும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொண்டேயிருந்தார். யாரும் எதிர்பாராத வண்ணம் குணமடைந்து போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார். புற்றுநோய் தன்னுள் புதிய உத்வேகத்தையும், குறிக்கோளையும் உருவாக்கியுள்ளது என்கிறார் யுவராஜ் சிங்.

தினமணி

அவசியமான சில கணினி டிப்ஸ்(Computer Tips)

நாம் அன்றாடம் கணினியில் செய்யும் செயலுக்கான  டிப்ஸ். இது கணினிக்கு புதியவர் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என  நினைக்கின்றேன்.

01 FOLDER  TO  FOLDER  காப்பி,பேஸ்ட் செய்ய எளிய வழி
நாம் அடிக்கடி பைல்களை (File) ஒரு folder-ல் இருந்து  மற்றொரு folder -க்கு மாற்றும் செய்வோம் அல்லது ஒரு புரோகிராமிலிருந்து  (Program)  மற்றொரு புரோகிராமுக்கு மாற்றம் செய்வோம் இது இயல்பு .அவ்வாறு செய்ய பொதுவாக நாம்  Alt +Tab   கீகளை பயன்படுத்தி ஒரு folder -இல்  இருந்து மற்றொரு folder -க்கு Copy & Paste செய்து மாற்றம் செய்வோம் இது நமக்கு அலுப்பை தரலாம்.இதற்கு மாற்று வழி ஒன்றுள்ளது.முதலில் நீங்கள் அதற்கு ஏற்றவாறு  உங்களுடைய விண்டோவினை மாற்றிக்கொள்ளவேண்டும்.

நீங்கள் எந்த விண்டோக்களில் மாற்றம் செய்ய வேண்டுமோ அவற்றை தவிர மற்றவற்றை மினிமைஸ் செய்துகொள்ளவேண்டும்.
 
பின்பு டூல்பாரில் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும்மெனுவில் " Tile  Windows Vertically  " அல்லது  " Tile  Windows Horizontally  " இவற்றில் ஒன்றினை தேர்வு செய்தாள். தேர்ந்தெடுத்த விண்டோக்கள் இரண்டும்  ஒன்றுடன் ஒன்று ஒட்டியவாறு நமக்கு கிடைக்கும்.இதன் பின்பு Copy & Paste  செய்ய ஏதுவாக எளிமையாக இருக்கும்,


02.ஒரு போல்டரை போல் அணைத்து  போல்டரையும்  மாற்ற

விண்டோஸ் இயக்க டைரக்டரியில்  ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைகின்றோம்.அதனை போலவே அணைத்து போல்டரையும் மாற்ற விரும்பலாம் அதனை எவ்வாறு செய்வது என்பதினை நாம் இங்கு காணலாம்.சில ஆப்பரேட்டிங் சிஸ்டம்,பைல்களை மற்றும் போல்டர்களைக் காட்டுவதற்கு என்று டிபால்ட்டாக (default) சிலவற்றை அமைத்துள்ளது.அவை Thumbnails,Tiles,List,Icons  & Display with Details என சில உள்ளன.இவை எந்த போல்டரை மாற்றுகிறோமோ அது மட்டும் தான் மாறும்,மற்றவை மாறாது.

நமக்கு அணைத்து போல்டர்களும் ஒரே மாதிரியாக மாற வேண்டுமெனில்  சில மாற்றங்களை செய்ய வேண்டும்.அது எவ்வாறு என பார்ப்போம்.

முதலில் ஏதேனும் ஒரு டிரைவில்   போல்டர்  அதிகம்  உள்ள  பகுதியினை  திறக்கவும். அதில் காலி இடத்தில மௌசினை வைத்து ரைட் கிளிக் செய்து View என்பதில் கிளிக் செய்திடவும்.அதில் உங்களுக்கு பிடித்த வியூவினைத்  தேர்ந்தெடுக்கவும். பின்பு தேர்ந்தெடுத்த போல்டரில்  கீழ்   வருமாறு  செல்லவும்.


Tools -> Folder Option டயலாக் பாக்ஸ் திறக்கவும்.

படம் 2

இந்த  Folder Option டயலாக் பாக்ஸில் View டேப்பினை தேர்ந்தெடுக்கவும். இந்த டயலாக் பாக்சின் மேலுள்ள உள்ள Apply to all folders (படத்தில் சிகப்பு கட்டத்தில் காட்டி உள்ளதை) என்பதை தேர்ந்தெடுக்கவும்  இந்த் மாற்றத்தினை உறுதி செய்ய "Set all the folders on your computer to match the current folders view settings (except for toolbars and foder task)? Change will occur the next time you open them"  என்ற மெசேஜை  காட்டும் .OK-வினை கிளிக் செய்து வெளியேறவும். 
இப்போது நீங்கள் எந்த வியுவினை தேர்வு செய்தீர்களோ,அந்த View-இல் அனைத்து  போல்டர்களும் மாறியிருக்கும். இதன் பின்பும் நீங்கள் குறிப்பிட்ட போல்டரை உங்கள் விருபதிற்கு ஏற்றவாறு மாற்றிகொள்ளலாம்.


03. பைல்கள் (files) மற்றும் போல்டர்களை (Folders) மறைத்துவைக்க

நமக்கு தேவையான முக்கிய தகவல்களை யாரும் பார்க்காதப்  படியும்
அழிக்காத படியும் எந்த ஒரு மென்பொருளின் துணையுமின்றி மறைத்து வைக்க. கீழ்வருமாறு செய்து மறைத்து வைக்கலாம்.மறைத்து  வைக்கவேண்டிய போல்டர் அல்லது பைல்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு மௌஸில் ரைட் கிளிக் செய்து அதில் வரும் Hidden  என்பதிற்கு முன்னுள்ள கட்டத்தில் டிக் செய்து பின்பு Apply & Ok செய்து வெளியேறவேண்டும்.
படம் 1,2-இல் உள்ளவாறு செய்யவும்.
படம் 1
படம் 2
இவ்வாறு செய்த பின்பு அந்த போல்டரில் உள்ள Tools மெனு சென்று அதில்  Folder Option  சென்று அதில் View மெனுவினை செலக்ட் செய்தால் அதில் "Hidden  Files & Folders " என்ற போல்டரில் "Do not show Hidden Files & Folders" என்பதிற்கு முன்னாள் உள்ள கட்டத்தை 'டிக்' செய்துகொண்டு  Apply  Ok தந்து வெளியேற வேண்டும் .(Tools ->Folder Option -> View ->Hidden Files & Folders)
படம் 3
இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த File  & Folder  மறைந்திருக்கும்.மீண்டும் இவை வேண்டுமெனில் மறைக்கப்பட்ட இடத்திற்கு சென்று மேலே சொன்ன கட்டத்தில் உள்ள 'டிக்' மர்க்கினை நீக்கி விட்டு, "Show Hidden Files & Folders" என்ற இடத்தில் உள்ள வட்டத்தில் 'டிக்'' மர்க்கினை  செய்யவேண்டும்   மீண்டும் மறைந்தவை தெரியும்.
பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான ஓட்டினை பதிவு செய்யவும்.
நன்றியுடன்
அறிவு கடல் 

கணினிக்கான சில எளிய வழி செயல்கள்

கணினிக்கான சில எளிய வழி செயல்கள்

01 சரியாகத் திரையைப் படிக்கமுடியவில்லையா?
     தட்டச்சு பலகையில் இடது பக்கம் உள்ள ஷிப்ட் + இடது  ஆல+
     பிரிண்ட் ஸ்க்ரீன் [Left Shift+Left Alt+PrtScreen] ஒருசேர அழுத்துங்கள் கீழ்  
     உள்ளது போல் ஒரு  பெட்டி வரும்.அதில் OK பட்டனை அழுத்தினால்
     திரையின் Contrast மாறும்.


    அதில் நமக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம் .இது கண்   
    பார்வைக்  குறைவாக உள்ளவர்களுக்கு உதவும்.


02.கணினியை 5 வினாடிகளில் ஷட் டவுண் செய்ய 

இது WIN XP பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்.கணினியை பயன்படுத்திவிட்டு விரைவாக அணைக்க வேண்டும் எனில் டெஸ்க்டாப்பில் உள்ள காலி இடத்தில மவுஸ் கொண்டு ரைட் கிளிக் செய்திடவும்.அதில் வரும் மெனுவில் New/Shortcut என்பதை கிளிக் செய்யவும்.அதில் ஷட்டவுண்(shutdown) என டைப் செய்து பின்பு ஒரு ஸ்பேஸ் விட்டு கீழ்வருவதை போல் டைப் செய்யவேண்டும்
c:\windows\system32\shutdown.exest05 



படத்தில் உள்ளது போல் செய்து Next பட்டனை அழுத்திய உடன் ,கணினி 05 வினாடிகலில் மூடப்படும் என  ஒரு செய்தி வரும்.இதனை நேரம் கூடுதலாகவும் வைத்து மாற்றிக்கொள்ளலாம்.

இதன் பின் NEXT என்பதை கிளிக் செய்து பின்னர் வரும் கட்டத்தில் உங்களுக்கு புரியும் வகையில் ஒரு பெயரைக் கொடுக்கவும்..அதன் பின்பு FINISH என்பதை கிளிக் செய்து வெளியேறவும் .

நீங்கள் செய்ததெல்லாம் Shutdown.exe என்ற பைலை உங்களுக்கு ஏற்றப்படி இயக்க வழிசெய்ததுதான்.இந்த பைல் %systemroot%\system32  என்ற இடத்தில இருக்கிறது.


03.இன்டர்நெட்டில் லிங்குகள் புதிய டேப்பில் திறக்க


இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools Menu சென்று Internet option என்னும் பிரிவினை தேர்ந்தெடுக்கவும்.கிடைக்கும் விண்டோவில் Advance Tab செல்லவும்.இதில் உள்ள பிரவுசிங் செக்க்ஷனில் Reuse windoe for launching shorcuts என்று தரப்பட்ட இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால் Tools Option  செல்லவும்.அதன் பின் "Advanced"  என்ற பட்டனைக் கிளிக் செய்க.. கிடைக்கும் விண்டோவில் Tabbed Browsing என்ற ஒரு பிரிவு காணாப்படும்.அதில் நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அதற்கேற்றர் போல் தேர்ந்தெடுத்து  OK கொடுத்து வெளியேறவும்.

இனி லிங்க் கிளிக் செய்தால் புதிய விண்டோவில் மட்டுமே கிடைக்கும் .


04.அவுட்லுக் எக்ஸ்பிரஸில் காணாமல் போன பட்டனை மீண்டும்  கொண்டுவருவது எப்படி?

சில நேரங்களில் நாம் அவசரமாக செயல்படும் போது தவறுதலாக சிலவற்றை அழித்துவிடுவோம்.அவ்வாறாக CreateMail, Reply, Forward, Send/Received, Delete போன்ற பட்டன்களை மறைந்து போக செய்து விடுவோம்.

அதனை மீண்டும் அங்கு கொண்டு வர அந்த பட்டன்கள் வழக்கமாக எங்கு அமருமோ அந்த இடத்தில் காலியாக கிரேயாக உள்ள இடத்தில ரைட் கிளிக் செய்திடுங்கள் கிடைக்கும் மெனுவில் Customize என்பதை தேர்ந்தெடுங்கள்.Current Toolbars என்று காட்டப்படும் பெட்டியில் Reset என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.செய்த பின்பு பார்த்தால் அனைத்தும் மீண்டும் அதே இருப்பதை காணலாம்.

05.DLL File அழிந்துவிட்டால் எங்கு கிடைக்கும்
பல நேரங்களில் Software புரோகிராம்கள் இயங்காமல் நின்று விடும்.அப்போது காரணம் என்னவென்று பார்த்தல் குறிப்பிட்ட டி.எல்.எல் பைல் இல்லை (Could not find ***dll") என செய்திவரும் அல்லது கெட்டுவிட்டது என்று செய்தி வரும்.

சரி அந்த 'dll 'file க்கு எங்கே செல்வது.அந்த சாப்ட்வேர் தொகுப்பின் ஒரிஜினல் CD-ஐ எடுத்து தேடினால் குறிப்பிட்ட பைல் எளிதில் கிடைக்காது.இதற்கு இணையம் ஒரு வழியினை தருகிறது.

www.dllfiles.com என்ற தளத்திற்கு செல்லுங்கள்.அதில் உள்ள தேடும் கட்டத்தில் search box-ல் உங்களுக்கு தேவையான டி.எல்.எல் பைலின் பெயரினை டைப் செய்யவும்.அந்த பைல் சம்பந்தமானவை  என்ற
செய்தி வரும் .


பின் அதில் உள்ள டவுண் லோட் பிரிவிற்கு சென்று நமக்கு தேவையான
 பைலினை தரவிறக்கி  கொள்ளலாம் .  இது போன்ற டி.எல் .எல் பைல்கள்  எல்லாம்  அனைத்து Software தொகுப்புகளும் பயன்படுத்தும் வகையில் பொதுவானதாக உள்ளதால் இவை இந்த தளத்தில் கிடைக்கின்றது. இந்த தளம் இது போன்ற பைல்கள்  கிடைத்திட  மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


நன்றியுடன்

அறிவு கடல்

மருந்துகளின் சரியான விலையினை அறிய

நமது ஒவ்வொருவரின் வீட்டிலும் குடும்பத்தினை நடத்துவதற்கான போதுமான அளவு நிதிநிலை இல்லாத நிலையிலும், மருத்துவ செலவிற்கென தனியாக நிதியினை ஒதிக்கிவைப்போம். அனைத்து வகை மக்களிடமும் மருத்துவத்திற்கான செலவுகள் மட்டும் மிகவும் அவசியமான செலவினமாக  உள்ளது. இதனை நிச்சயம் ஒதுக்கிவிடமுடியாத ஒன்றாக இருக்கும். அதிலும் மருத்துவர் தரும் மருந்துகளின் விலை நமது இரத்த அழுத்தத்தை உயர்த்திவிடும்.

நமது மருத்துவர்கள் நமக்கு பரிந்துரைக்கும் மருந்துகளின் குறியீட்டு பெயர்களை (BRAND NAME) மட்டும்தான் குறிப்பிடுகிறார். ஆனால் அதன் இனப்பெயரினை (GENERIC) என்னும்  வேதிபெயரினை கொண்டு குறிப்பிடுவதில்லை. அதன் காரணமாக நமக்கு வழங்கப்படும் மருந்துகளின் மாற்று பிராண்ட் உள்ளதா இல்லையா என்பதினை அறிய முடிவதில்லை மற்றும் அதன் விலையினை ஒப்பிட்டு பார்க்கவும் முடிவதில்லை. ஒரே வகையான மருந்துகள் ஒரே விகிதாச்சார கலவை மற்றும் அதே நோய்க்காக தரப்பட்டிருக்கும். ஆனால் இதனை நாம் அறியமுடிவத்தில்லை. இதனால் நமது பணம் விரயத்தை தவிர்க்கவும்  முடியவில்லை. 
இதனை அறிவதற்கென ஒரு தளம் உள்ளது இதனை எனது முகநூல் நண்பர் மூலம் அறிந்துக்கொண்டேன். இவை அனைவருக்கும் பயன்படும் என இங்கு பதிவிடுகிறேன். இதன் மூலம் மருந்துகளை ஒப்பிட்டு பார்த்து வாங்கி பணத்தினை மிச்சப்படுத்தலாம்.
இத்தளத்தின் முகவரி : http://www.medguideindia.com
மேலே உள்ள படத்தில் உள்ளது போல் ஒரு திரை தோன்றும். அதில் கீழ்வருமாறு செயல்களை மேற்கொள்ளவும்.

 Click on ' Drugs ' 


01.Click on 'Brand'

பின்பு  2-என வட்டமிட்டு கட்டியுள்ள பகுதியில் நமது மருந்தின் பெயரினை தரவேண்டும். பின்பு search என தரும் போது நாம் குறிப்பிட்ட மருந்தின் விவரம் திரையில் தோன்றும். 
பின்பு 3-ல் குறிப்பிட்ட பெட்டியில் உள்ள Active Ingredients/Matched Brands என்பதினை அழுத்தினால் நாம் குறிப்பிட்ட மருந்தின் Generic Name தெரியவரும்.
அதில் Constituents என்பதின் கீழே உள்ளதுதான் மருந்தின் Generic Name ஆகும்.
Click on 'Generic' 
தோன்றும் திரையில் Generic Name என்ற பகுதியில் நாம் மேலே தெரிந்து கொண்ட  Generic Name-னை தந்து Search என்பதினை கிளிக் செய்து தோன்றும் திரையில் உள்ள Matched Brands with Single Generic அல்லது Matched Brands with Combination of Generic(s) என்பதின் கீழே உள்ளதை அழுத்தும் போது நாம் குறிப்பிட்ட மருந்தின் ஒத்த வேறு மருந்துகளும் அதன் விலையும் காட்டப்படும்.  

இதன் மூலம் ஒத்த பார்மூலா உள்ள  பலதரப்பட்ட நிறுவன மருந்துகளை ஒப்பிட்டு பெறலாம். மேலும் இதில் அந்த நிறுவன மருந்துகளின் முழுவிவரங்களையும் இந்த தளத்தின் மூலம் அறியலாம். ஒருமுறை சென்று பாருங்கள் மற்ற விவரங்களை முழுதும் அறிந்துகொள்ளலாம். 
எப்பொழுதும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் மூலமே எடுத்துகொள்வது மிகவும் சிறந்தது.

நன்றியுடன் 
அறிவு கடல்

ஜிமெயில் ஷார்ட்கட் கீகள் (GMAIL SHORTCUT KEYS)

நமது அன்றாடம் பயன்படுத்தும் ஜிமெயில் கணக்கில் ஷார்ட்கட் கீகளை கொண்டு பயன்படுத்த வேண்டுமாயின்  முதலில் அதன்  Setting-இல் சில மாற்றம் செய்து       கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்  (KEYBOARD SHORTCUTS) என்பதை 'ON' செய்யவேண்டும்.அது எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

முதலில் உங்களது கணக்கினை திறந்துக்கொண்டு பின்பு கீழே படத்தில் உள்ளது போன்று   1 -  Gear Icon -ஐ click செய்து திறக்கும் பெட்டியில்                                                        2    SETTING -இல் நுழையவேண்டும்.
படம் 1

இவ்வாறு  திறந்த பின்பு அதில் வரும் option -களில் படம் 2 உள்ளது போல் Keyboard Shortcut  On என்ற வட்டத்தினுள் டிக் செய்யவேண்டும்.

படம் 2

இப்பொழுது Keyboard Shortcut  On -கி இருக்கும். இப்பொழுது நாம் shortcut -னை keyboard மூலம் பயன்படுத்தலாம்.
கீழே குறிபிட்டுள்ள கீகளை பயன்படுத்தி மௌசின் துணையின்றி நாம் தட்டச்சு பலகையிலே ஜி மெயிலினை இயக்கலாம்.
<><><><><><><><><><><><>
Shortcut KeyDefinitionAction
    c ComposeAllows you to compose a new message. <Shift> + c allows you to compose a message in a new window.
    /  SearchPuts your cursor in the search box.
    k Move to newer conversationOpens or moves your cursor to a more recent conversation. You can hit <Enter> to expand a conversation.
    j Move to older conversationOpens or moves your cursor to the next oldest conversation. You can hit <Enter> to expand a conversation.
    n Next messageMoves your cursor to the next message. You can hit <Enter> to expand or collapse a message. (Only applicable in 'Conversation View.')
    p Previous messageMoves your cursor to the previous message. You can hit <Enter> to expand or collapse a message. (Only applicable in 'Conversation View.')
   o or       <Enter> OpenOpens your conversation. Also expands or collapses a message if you are in 'Conversation View.'
    u Return to conversation listRefreshes your page and returns you to the inbox, or list of conversations.
    e ArchiveArchive your conversation from any view.
    m MuteArchives the conversation, and all future messages skip the Inbox unless sent or cc'd directly to you. Learn more.
    x Select conversationAutomatically checks and selects a conversation so that you can archive, apply a label, or choose an action from the drop-down menu to apply to that conversation.
    s Star a message or conversationAdds or removes a star to a message or conversation. Stars allow you to give a message or conversation a special status.
    + Mark as importantHelps Gmail learn what's important to you by marking misclassified messages. (Specific to Priority Inbox)
    - Mark as unimportantHelps Gmail learn what's not important to you by marking misclassified messages. (Specific to Priority Inbox)
    ! Report spamMarks a message as spam and removes it from your conversation list.
    r ReplyReplies to the message sender. <Shift> + r allows you to reply to a message in a new window. (Only applicable in 'Conversation View.')
    a Reply allReplies to all message recipients. <Shift> +a allows you to reply to all message recipients in a new window. (Only applicable in 'Conversation View.')
    f ForwardForwards a message. <Shift> + f allows you to forward a message in a new window. (Only applicable in 'Conversation View.')
  <Esc> Escape from input fieldRemoves the cursor from your current input field.
<Ctrl> + s Save draftSaves the current text as a draft when composing a message. Hold the <Ctrl> key while pressing s and make sure your cursor is in one of the text fields -- either the composition pane, or any of the To, CC, BCC, or Subject fields -- when using this shortcut.
    #  DeleteMoves the conversation to Trash.
    l  LabelOpens the Labels menu to label a conversation.
    v  Move toMoves the conversation from the inbox to a different label, Spam or Trash.
<Shift> +   i Mark as readMarks your message as 'read' and skip to the next message.
<Shift> +   u Mark as unreadMarks your message as 'unread' so you can go back to it later.
    [ Archive and previousRemoves the current view's label from your conversation and moves to the previous one.
    ] Archive and nextRemoves the current view's label from your conversation and moves to the next one.
    z UndoUndoes your previous action, if possible (works for actions with an 'undo' link).
<Shift>      +   n Update current conversationUpdates your current conversation when there are new messages.
    q Move cursor to chat searchMoves your cursor directly to the chat search box.
     y Remove from Current View*Automatically removes the message or conversation from your current view.

From 'Inbox,' 'y' means Archive
From 'Starred,' 'y' means Unstar
From 'Trash,' 'y' means Move to inbox
From any label, 'y' means Remove the label

* 'y' has no effect if you're in 'Spam,' 'Sent,' or 'All Mail.'
      . Show more actionsDisplays the 'More Actions' drop-down menu.
<Ctrl> + <Down arrow> Opens options in Chat<Ctrl> + <Down arrow> moves from edit field in your chat window to select the 'Video and more' menu
Next, press <Tab> to select the emoticon menu
Press <Enter> to open the selected menu

     ? Show keyboard shortcuts helpDisplays the keyboard shortcuts help menu within any page you're on. (Note: Typing ? will display the help menu even if you don't have keyboard shortcuts enabled)



     k Move up a contactMoves your cursor up in your contact list
     j Move down a contactMoves your cursor down in your contact list
o or <Enter> OpenOpens the contact with the cursor next to it.
     u Return to contact list viewRefreshes your page and returns you to the contact list.
     eRemove from Current GroupRemoves selected contacts from the group currently being displayed.
     x Select contactChecks and selects a contact so that you can change group membership or choose an action from the drop-down menu to apply to the contact.
  <Esc> Escape from input fieldRemoves the cursor from the current input
      # DeleteDeletes a contact permanently
      l Group membershipOpens the groups button to group contacts
      z UndoReverses your previous action, if possible (works for actions with an 'undo' link)

Combo-keys - Use the following combinations of keys to navigate through Gmail.

Shortcut KeyDefinitionAction
<Tab> then <Enter> Send messageAfter composing your message, use this combination to send it automatically. (Supported in Internet Explorer and Firefox, on Windows.)
y then o Archive and nextArchives your conversation and moves to the next one.
g then a Go to 'All Mail'Takes you to 'All Mail,' the storage site for all mail you've ever sent or received (and have not deleted).
g then s Go to 'Starred'Takes you to all conversations you have starred.
g then c Go to 'Contacts'Takes you to your Contacts list.
g then d Go to 'Drafts'Takes you to all drafts you have saved.
g then l Go to 'Label'Takes you to the search box with the "label:" operator filled in for you.
g then i Go to 'Inbox'Returns you to the inbox.
g then t Go to 'Sent Mail'Takes you to all mail you've sent.
* then a Select allSelects all mail.
* then n Select noneDeselects all mail.
* then r Select readSelects all mail you've read.
* then u Select unreadSelects all unread mail.
* then s Select starredSelects all starred mail.
* then t Select unstarredSelects all unstarred mail.

எனவே மேற்கூறிய ஷார்ட்கட் கீகளை பயன்படுத்தி ஜி மெய்லை விரைவாக 
பயன்படுத்திக்  கொள்ளலாம்.  
இப்பதிவு இதனை பற்றி தெரியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.


என்றும் நன்றியுடன்
அறிவு கடல்