Digital Time and Date

Welcome Note

Saturday, June 29, 2013

முஸ்லிம் பெண்கள் சேலை அணிவதால் தன்னையும் அறியாமல்??

முகம் மற்றும் முன் கைகள் ஆகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே ஆக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த ஆடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.

தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். இந்த ஆடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய ஆடவர் முன்னால் வரக் கூடாது.

இது போன்று ஆடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3971

நிர்வாணமாக இருப்பது தவறா?

நானும் எனது மனைவியும் வீட்டில் தனியாக இருக்கும்போது நிர்வாணமாக இருப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறா? -ஒரு வாசகர்.
 
 A.   நிர்வாணமாக இருத்தல் என்பது இரு வகைகளில் உள்ளது. நிர்வாணம் அவசியம் என்பதற்காக நிர்வாணமாக இருப்பது ஒரு வகை. அவசியமில்லாமல் நிர்வாணமாக இருப்பது இன்னொரு வகை. அவசியமான நிர்வாணத்துக்கு உள்ள அனுமதியை அவசியமில்லாத போது பயன்படுத்தக் கூடாது.
மலஜலம் கழிக்கும் போது நிர்வாணம் அனுமதிக்கப்படுவதால் எல்லா நேரத்திலும் நிர்வாணமாக இருக்கக் கூடாது.
 
கணவன் மனைவி மட்டுமே இருந்தாலும் எப்போது ஒருவருக்கொருவர் தேவையோ அந்த நேரங்களில் நிர்வாணமாக இருக்க அனுமதி உண்டு. அவ்வாறு இல்லாமல் எல்லா நேரங்களிலும் நிர்வாணமாக இருக்கக் கூடாது.
"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? யாரிடம் மறைக்க வேண்டியதில்லை?'' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்'' என்று சொன்னார்கள்.
"
ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது?'' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்'' என்றார்கள்.
"
ஒருவர் தனியாக இருக்கும் போது?'' என்று நான் கேட்டதற்கு, "அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன்'' என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 2693)
 
கணவன் மனைவிக்கிடையே தேவைகள் நிறைவேறிய பின்னர் அல்லாஹ் பார்க்கிறான் என்ற வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஆதம் ஹவ்வா ஆகிய இருவர் மட்டுமே படைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தடைசெய்யப்பட்ட மரத்தில் இருந்து புசித்தார்கள். இதனால் அவர்களுக்கு பாலுணர்வு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் இலைகளால் மறைத்துக் கொள்ளலானார்கள்.
 
அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து "இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?'' எனக் கேட்டான். (திருக்குர்ஆன் 7:22)
 
அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே அவர் வழிதவறினார். (திருக்குர்ஆன் 20:121)
 
நாம் கணவன் மனைவி மட்டும் தானே இருக்கிறோம் என்று அவர்கள் நினைக்கவில்லை. கணவன் மனைவி மட்டும் தானே இருக்கிறீர்கள். உங்களுக்குள் என்ன வெட்கம் என்று அல்லாஹ்வும் அறிவுரை சொல்லவில்லை.
 
மனிதனுக்கு அல்லாஹ் இயல்பாகவே அமைத்துத் தந்துள்ள வெட்க உணர்வை பேணிக் கொள்ள வேண்டும்.
 
எப்போது பார்த்தாலும் நிர்வாணமாகவே இருந்து பழகுவோர் படிப்படியாக மானத்தையும் வெட்கத்தையும் இழக்கும் நிலை ஏற்படும்.
 
எனவே தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்காகவோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து ரசிக்கும் ஆசை காரணமாகவோ இருவர் மட்டும் இருக்கும் போது நிர்வாணமாக இருக்கலாம். மற்ற சந்தர்ப்பங்களில் கணவன் மனைவி மட்டும் இருந்தாலும் அல்லது தனிமையில் இருந்தாலும் வெட்கத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.

மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்!

மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்!

1 ) ஊருக்கு பஸ்-ல போகும்போது கரெக்டா நாம இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தின இடத்துல பஸ்ஸ கேண்டின்ல போடுவாங்களே. அப்ப டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து

2 ) அதே மாதிரி பஸ்ல லாங் traval போகும்போது அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்ன்னு நினச்சா "உணவகம் நில்லா பேருந்து" அப்டின்னு கேண்டின்லையே நிக்காம போகும் போதும் டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.

3 ) அவசரமா ஆட்டோ பிடிச்சு போகும்போதுதான் ஆட்டோகாரன் பெட்ரோல் போடுறதுக்கு வண்டியை நிறுத்துவான். அப்ப ஆட்டோ டிரைவர்க்கு விடணும் ஒரு குத்து.

4 ) தியேட்டர்ல படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது லேட்டா வந்துட்டு படம் எவ்ளோ நேரம் ஓடிருக்கு, ஹீரோ வந்துட்டாரா, பாட்டு முடிஞ்சிடுச்சான்னு டார்ச்சர் கொடுக்குரவனுக்கு விடணும் ஒரு குத்து.

.5 ) பஸ்ல போகும்போது நம்ம மேல சாய்ஞ்சிகிட்டு எச்சி வடிக்கிரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

6 ) Post Office, Bank, Reservation Counter - க்கேல்லாம் வரும்போது பேனா எடுத்துட்டு வராம நம்மகிட்ட வந்து பேனா கடன் கேக்கும்போது விடணும் ஒரு குத்து.

7 ) நாம வெட்டியா உக்கார்ந்திருக்கும்போது யாரும் போன் பண்ண மாட்டாங்க. அப்பத்தான் பாத்ரூம்குள்ள போவோம். அப்பத்தான் யாராவது போன் பண்ணுவாங்க. நாம வந்து அவங்களுக்கு கால் பண்ணனும். அப்படி நம்ம போன் பில்லை கூட்டுரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

8 ) நம்மள பத்து மணிக்கு வரசொல்லிட்டு ஆடி அசைஞ்சு பதினோரு மணிக்கு வருவாங்களே (நாம லேட்டா வந்தா ஒரு மணி நேரம் திட்டுவாங்க) அவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

9 ) நம்மளை பார்த்து பிட் அடிச்சு பரிச்சை எழுதுறவன் நம்மளை விட மார்க் கூட எடுத்தா பேப்பர் திருத்தின வாத்தியாருக்கு விடணும் ஒரு குத்து.

10 ) பதிவு எழுத ஒண்ணுமே கிடைக்கலைன்னு இந்த மாதிரி "குத்து" பதிவு எழுதி தொல்லை கொடுக்குறவங்களுக்கு விடணும் ஒரு குத்து

நன்றி ;முகநூல் நண்பர்
இனியவன் 

திருமண மான புதுசில் பெண்கள் ...

திருமான புதுசில் பெண்கள்
*****************
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள்
அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்

3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம்.
இனிமேல் செய்ய மாட்டேன்.

4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து

===================
1.நான்வேலையாஇருக்கேன்.அலறாதீங்க.பக்கத்தல்
வந்து சொல்லிட்டு போனா என்ன?

2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால்போதும் புரியுதா??

3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை.
ஊறுகாய் போதும்ல?

4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான்இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?

9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்
கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து

=================
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க.இல்லாட்டி போங்க.

4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான்
பார்த்துக்கிறேன்.

5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான்மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்டபோது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என்
பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

நன்றி முகநூல்

"எங்கிருந்தோ வந்தது புதன்"

சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளாகவே புதன் அறியப்படுகிறது.
ஆனால் அந்தக் கோள்தான் எப்போதுமே சூரியனுக்கு அருகில் இருந்தததாகக் கூறமுடியாது என்று அறிவியலாளர்கள் இப்போது கருத ஆரம்பித்துள்ளார்கள்.



சூரியனும் அதன் அருகில் இருக்கும் புதன் கோளும்

புதனின் தோற்றம் குறித்து இப்போது ஆய்வாளர்கள் மீள்சிந்தனையைத் தொடங்கியுள்ளார்கள்.

அந்தக் கோளில் உள்ள சில வேதியல் பொருட்கள் அதீதமான வெப்பத்தில் உருவாகியிருக்க முடியாது என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள்.

அமெரிக்க தேசிய விண்வெளி அமைப்பான நாசா புதன் கோளை ஆய்வு செய்ய ஏவிய மெஸஞ்சர் என்ற விண்கலம் எடுத்து அனுப்பியப் படங்களை வைத்தே இப்படியான கருத்துக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.



புதன் கோளின் மேற்பரப்பு குறித்து புதிய புகைப்படங்கள் வந்துள்ளன

புதன் கோள் நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே உருவாகி இருக்கலாம் என்றும், பின்னர் அது மிதந்து வந்து இப்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

பூமியிலிருந்து புதனைப் பார்க்கும்போது மங்கிப் போன பழுப்பு நிற உருண்டையாக தெரியும். ஆனால் அந்தத் தோற்றத்துக்கு மாறாக அதன் மேற்பரப்பு புகைப்படங்களில் வேறு மாதிரியாகக் காணப்படுகிறது என தற்போது கிடைத்துள்ள புகைப்படங்களை பார்த்த பின்னர் நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

புதிய புகைப்படங்களில் புதனின் பரப்பிலுள்ள எரிமலை பள்ளத்தாக்குகள் ஆரஞ்சு வண்ணத்திலும், சில பகுதிகள் ஆழ்- நீல வண்ணத்திலும் இருப்பது தெரிகிறது.



புதிய கண்டுபிடிப்புகள், புதிய கேள்விகள்

புதிர் கிரகம் ?

ஒளி ஊடுறுவ முடியாத மர்மமான தாதுப் பொருளையே அந்த ஆழ்-நீல வண்ணம் காட்டுகிறது என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தின் இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் டேவிட் ப்ளீவெட் கூறுகிறார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போதே, புதன் வேறு எங்கோ உருவாகி மெல்ல மெல்ல வான் மண்டலத்தில் மிதந்து நகர்ந்து தற்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பீடாக உள்ளது.

அந்தக் கோளில் இருக்காது என்று கருதப்பட்ட விஷயங்கள் அங்கு உள்ளன என்றும் அது மேலும் தமது கருத்தை வலுப்படுத்துவதாகவும் அமெரிக்க அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

'ஆழ் நீல வண்ணம் குறித்து வியப்புகள்'

புதனின் நிழல் படிந்த பெரும் பள்ளங்களில் உறைபனி இருப்பதையும், அதன் துருவப் பகுதியிலும் அதே போன்று காணப்படுவதாகும் கூறும் விஞ்ஞானிகள், சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளில் இப்படி உறைபனி இருக்கும் என்று யார் தான் எண்ணியிருப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேபோல விரைவில் ஆவியாகக் கூடிய கந்தகம் மற்றும் பொட்டாஷியம் போன்றத் தனிமங்களும் மிக அதிக அளவில் காணப்படுவதாகவும் புகைப்படங்கள் மூலம் தெரிய வருவதாகவும் கூறும் விஞ்ஞானிகள் இவையெல்லாம் பெரும் புதிராக உள்ளன எனவும் கூறுகிறார்கள்.

சீனா விண்வெளில் தனியாக் கட்டிவரும் ஆய்வுகூடம் - 5வது முறையாக விண்வெளிப் பயணம்

சீன விண்வெளி வீரர்கள் 5வது முறையாக விண்வெளிப் பயணத்தை கடந்த 11ம் திகதி செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர். இதுவரையில் 5 முறை விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி, வெற்றிகரமாக அவர்களை பூமியில் தரையிறக்கிச் சாதனை செய்துள்ளது சீனா.

இந்நிலையில், சீனாவின் கான்சு மாகாணம் ஜியுகான் ஏவுதளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை ஷென்சூ-10 (Shenzhou-10) விண்வெளி ஓடத்துடன் இணைக்கப்பட்ட லோங் மார்ச் - 2எஃப் (Long March 2F) உந்துகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.

சர்வதேச வெண்வெளி ஆய்வு கூடத்தைப்போல் சீனா தனக்கென தனியானதொரு வெண்வெளி ஆய்வு கூடத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு டியான்காங்-1 என பெயரிட்டுள்ளது. அதில் சீன விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்த ஆய்வு கூடத்திற்கு இதுவரை நான்கு தடவைகள் விண்வெளி வீரர்களை அனுப்பிவைத்துள்ளது. தற்போது 5வது தடவையாக ஒரு பெண் உட்பட 3 வீரர்களை சீனா அனுப்பியுள்ளது.



விண்வெளி வீரர் நியி ஹெய்ஷெங் தலைமையிலான இக்குழுவில் ஜாங் யிஸாகுவாங், வாங் யாபிங் (35 வயதான பெண்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் வாங் யாபிங் விண்வெளியில் இரண்டாவது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். இதேவேளை, கடந்த ஆண்டு சீனாவின் முதல் பெண்ணாக லியு யாங் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். சீனா முதல் முறையாக பெண் வீராங்கனையை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின்போது, வாங் யாபிங்கும் இடம்பெற்றிருந்தார். ஆனால், நூலிழையில் இந்த வாய்ப்பு, லியு யாங்குக்கு சென்றுவிட்டது. இந்நிலையில், தவறவிட்ட வாய்ப்பை வாங் தற்போது பெற்றுள்ளார்.

விண்வெளிக்குச் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் அங்கிருந்த விண்வெளிக் கூடத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனை சீனாவின் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆயிரகணக்கான கிலோ மீற்றர் வேகத்தில் வெவ்வேறு பாதையில் பயணிக்கும் இரண்டு விண்கலங்களை அருகருகே கொண்டு வந்து ஒன்றிலிருந்த ஆட்களை மற்றொன்றுக்கு மாற்றுவது கடினமான பணியாகும். இந்தச் சவாலான பணியில் இப்போது சீனா வெற்றி பெற்றுள்ளது.
 

3 வீரர்களும் இதுவரை இல்லாத வகையில் 15 நாட்கள் விண்வெளியில் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். முன்னதாக, கடந்த ஆண்டு ஏவப்பட்ட விண்கலம் மூலம் சீன விண்வெளி வீரர்கள் 13 நாட்கள் விண்வெளியில் இருந்ததே அதிகபட்சமான நாட்களாக இருந்தனர். தற்போது அதனைவிட இரண்டு நாட்கள் அதிகமாக தங்கியிருக்கப்போகின்றனர்.

சீனா தற்போது விண்வெளியில் சோதனை அடிப்படையில் டியான்காங்-1 என்ற ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இப்போது செலுத்தப்பட்டுள்ள ஷென்சூ விண்வெளி ஓடம், இந்த ஆய்வு மையத்துடன் இணைக்கப்படும். பின்னர், ஆய்வு மையத்தில் தங்கி 15 நாட்கள் ஆய்வு செய்ய விண்வெளி வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

விண்வெளியில் பெரிய அளவிலான ஆய்வு மையத்தை அமைக்கும் பணியை 2020ற்குள் நிறைவு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் ஆய்வு மையம் அமைப்பது தொடர்பான திட்டத்தின் தலைவர் ஜாங் யுஸியா கூறுகையில், ‘மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள வீரர்கள், விண்வெளியில் தங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை அங்கிருந்தபடியே சீனாவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். இதன் மூலம் விண்வெளியில் பாடம் எடுத்து முதல் ஆசிரியை என்ற பெருமை சீனப் பெண்ணான வாங் யாபிங் இற்கு கிடைக்கவுள்ளது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அழைத்து வரப்பட்டவுள்ளனர் என்று, சீன விண்வெளித்துறை செய்தித் தொடர்பாளர் ஊ பிங் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘விண்வெளியில் இருந்தபடி நீர்மத்தின் பரப்பு இழுவிசை, நியூட்டன் விதிகள், விண்வெளியில் எடையிழப்பு, இழுவிசை உள்ளிட்டவை குறித்து வாங் பாடம் எடுக்க உள்ளார். இது மாணவர்கள் எளிதில் புரிந்துக் கொள்ள வழிவகுக்கும்’ என்றார். முன்னதாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு அதிபர் ஜீ ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘நீங்கள் சீன மக்களை பெருமையடைய செய்துள்ளீர்கள். விண்வெளித் துறையில் சாதனை புரிய வேண்டும் என்ற நாட்டின் கனவையும் உங்களுடன் சுமந்து செல்கிறீர்கள். உங்களின் பயணத்தை முடித்துக் கொண்டு வெற்றிகரமாகத் திரும்பி வர வாழ்த்துகள்’ என்றார்.

ரஷ்யா, அமெரிக்காவை தொடர்ந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. இப்போது, விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவும் முயற்சியிலும் அந்நாடு ஈடுபட்டுள்ளது. அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை கூட்டாக அமைத்து வருகின்றன. ஆனாலும், அதிலும், தங்களுக்கு சில பகுதிகளை, அமெரிக்காவும், ரஷ்யாவும் பிரித்துக் கொண்டுள்ளன. இந்நிலையில், கொம்யூனிச நாடான சீனாவும், தன் பஙகுக்கு விண்வெளியில் ஆய்வுக்கூடத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஈகரை தமிழ் களஞ்சியம்

செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு



செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

1500 கி.மீ., நீளமும், 7 கி.மீ., அகலமும் கொண்ட அந்த ஆறு செல்கிறது. ஜரோப்பிய வின்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ள இந்த நதி சில குறிப்பிட்ட இடங்களில் 1000 அடி ஆழம் கொண்டதாக இருக்கிறது. தற்போது வற்றிய நிலையில் காணப்படும் இந்த நதி, சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாய்ந்திருக்கக்கூடும் என கருதப்படுகின்றது.

"ரூயேல் வாலிஸ்" என இந்த வற்றிய நதிக்கு பெயரிட்ட ஜரோப்பிய வின்வெளி ஆய்வு மையம், இந்த நதிக்கு நிறைய கிளை நதிகள் இருந்ததையும் உறுதி செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஆறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்து, அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு சூடுபிடித்துள்ளது.

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும்
.
காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும்.

உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர்.

இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும்.

சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

நன்றி தகவல்

ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்

போதைக்கு அடிமையாகாதே;
புதை குழியில் வீழ்ந்திடுவாய்!

மாதுக்கு அடிமையாகாதே;
மதிகெட்டு அலைந்திடுவாய்!

சூதுக்கு அடிமையாகாதே;
சுற்றத்தை இழந்திடுவாய்!

பணத்திற்கு அடிமையாகாதே;
குணத்தை இழந்திடுவாய்!

புகழ்ச்சிக்கு அடிமையாகாதே;
மகிழ்ச்சியை இழந்திடுவாய்!

தூண்டுதலுக்கு அடிமையாகாதே;
தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்!

புலன்களுக்கு அடிமையாகாதே;
பலன்களை இழந்திடுவாய்!

கோபத்திற்கு அடிமையாகாதே;
ஆபத்தில் வீழ்ந்திடுவாய்!

உணர்ச்சிக்கு அடிமையாகாதே;
உன்னையே நீ இழந்திடுவாய்!

அன்பிற்கு அடங்கு, அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய்!!!

(ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)

முகநூல்- இனியவன்

சாப்பாடு குறைந்தால் ஆயுள் நீளும்

நீண்டநாள் வாழ எல்லோருக்குமே ஆசைதான். அது நனவாக, ஒவ்வொருவரும் தாம் சாப்பிடுவதில் 40 சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

முதுமை அடைவதுதான் நம்மை விரைவாக மரணத்தை நோக்கிக் கொண்டு செல்கிறது. முதுமை அடைவதைத் தடுக்கும் ஒரு சிகிச்சை முறையை ஒரு விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

இதுதொடர்பாக பழ ஈக்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதன்மூலம், மனிதர்களின் இளமை நீடித்திருப்பதற்கான மந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை. இதற்காக பழ ஈக்களை ஏன் விஞ்ஞானிகள் ஆராய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். மனிதர்களைப் போன்ற 60 சதவீத மரபணுக்களை பழ ஈக்கள் கொண்டிருக்கின்றன. அவை முதுமை அடைவதும் ஆச்சரியகரமாக ஏறக்குறைய மனிதர்களைப் போலவே உள்ளது.

லண்டனில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆரோக்கியமான முதிர்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள், மனிதர்களின் மரபியல், வாழ்க்கை முறை சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

குறிப்பாக, உணவுமுறையைக் கவனிக்கிறார்கள். அதன் மூலம், வயதாவதைத் தடுப்பதற்கான சிகிச்சை முறைக்குத் திட்டமிடுகிறார்கள்.

இதுதொடர்பான தங்களின் கண்டுபிடிப்பை இந்த விஞ்ஞானிகள், சமீபத்தில் நடந்த ராயல் அறிவியல் கழகத்தின் கோடை அறிவியல் கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். அதன் வாயிலாக, இங்கிலாந்தின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு முடிவுகள் பொது மக்களின் பார்வைக்குக் கிடைத்தன.

ஆய்வுக் குழுவில் முக்கியமான விஞ்ஞானிகளுள் ஒருவரான மேத்யூ பைபர் கூறுகையில், “வயதாவதுடன் தொடர்புடை ஜீனை நாம் கண்டுபிடித்தால், வயதாவதையும் தாமதப்படுத்த முடியும் என்று நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம் என்கிறார்.

பழ ஈக்களிலும், எலிகளிலும் ஆரோக்கியமான ஆயுளை நீட்டிக்க வேறுபட்ட உணவு முறைகளையும், மருந்து சிகிச்சையையும் விஞ்ஞானிகள் பயன்படுத்திப் பார்த்தனர். அப்போது கிடைத்த முடிவுகள், மேற்கண்ட சிகிச்சைகள், மனிதர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனால் இந்த ஆய்வுகள் தொடங்கி, பத்தாண்டுகளே ஆகியிருக்கின்றன. “தற்போது இவையெல்லாம் கருத்தியல் அடிப்படையில்தான் இருக்கின்றன. மனிதர்கள் மத்தியில் இவை எப்போது பயன்படுத்தப்படும் என்று தற்போது கூற முடியாது என்கிறார் பைபர்.

ஒட்டகத்தின் கழுத்து ஏன் கோணலாக உள்ளது - பீர்பால்

ஒருமுறை பீர்பாலின் சாதுரியமான உரையாடலைக் கேட்டு அவ ருக்கு ஒரு கிராமத்தைப் பரிசளிப்பதாக வாக்களித்தார் அக்பர்.

சில நாட்கள் கழித்து அக்பர் தான் கூறியதை மறந்துவிட்டார். பீர்பால் பலமுறை நினைவுபடுத்தியும் அக்பர் அதை நிறைவேற்றவில்லை.

கொடுத்த வாக்கை நிறைவேற்றாத அக்பருக்கு தக்க படிப்பினை புகட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார் பீர்பால்.

ஒருநாள் பேசிக் கொண்டே இருக்கும்போது அக்பர், “பீர்பால்... ஒட்டகத்தின் கழுத்து கோணலாகவும் அவலட்சணமாகவும் இருக்கிறதே, ஏன்?” என்று கேட்டார்.

இதுதான் தருணம் என்று எண்ணிய பீர்பால், “அரசே... அவை முற்பிறவியில் யாருக்காவது இலவசமாக கிராமங்களை பரிசளிப்பதாகக் கூறிவிட்டு தம் வாக்குறுதியை மறந்திருக்கும்” என்றார்.

தாம் கொடுத்த வாக்கை காப்பாற்றாததால்தான் தம்மை இப்படி பீர்பால் குத்திக் காட்டுகிறார் என்று புரிந்துகொண்ட அக்பர், உடனே அவர் பெயருக்கு ஒரு கிராமத்தை எழுதிக் கொடுத்தார்.

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

ரமளான் மாதத்தின் சிறப்புகள்


அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்

“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898)
முஸ்லிம் (1956)
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899)
முஸ்லிம் (1957)
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.
இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!
 
“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.
 
மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.
இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.
 
“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.
 
இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)
இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.


கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்


மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்

ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.
யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.
“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

சுவர்க்கத்தில் தனி வாசல்

நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.
“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்

“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)
“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)
இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது

இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)

எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!


குட் பாய்

நீண்ட நேரம் ஐபோன் விளையாட்டால், பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்தது!

சீனாவில் தொடர்ந்து 4 மணிநேரம் அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடிய பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீஜிங்கில் இளம்பெண் ஒருவர் படுக்கையில் படுத்தவாறு தனது அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடி உள்ளார்.

அவர் தொடர்ந்து 4 மணிநேரம் விளையாடி உள்ளார். இதன் பின்னர் 4 மணிநேரத்தின் பின்னர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது செயற்கை மார்பகம் வெடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை மார்பகங்களின் தரம் குறைவானதாக இருந்ததாலும், அவர் பல மணிநேரம் குப்புறப்படுத்திருந்ததாலுமே மார்பகங்கள் வெடித்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி mrtamil

மூக்குத்தி அணிவது ஏன்..?!



மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்க ு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடதுகாலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனைஎல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதேமாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.

நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன.இதனைச் செயல்படுத்துவதற ்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படிஇந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாகசெயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்யவைக்கிறோம். அதனால்வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வுபோல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ளமூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ளவெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்

நன்றி -முகநூல்

Friday, June 28, 2013

வாங்க சிரிக்கலாம்

ஒரு பொண்ணு தல குணிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்டா மச்சான்?
தெரியலையே
அவ செல்லுல எஸ்.எம்.எஸ். ப்ரீன்னு அர்த்தம்

==============================================
மாப்பிள்ளைக்கு பெரிய பேக்கிரவுண்ட் இருக்குன்னு தரகர் சொன்னதை நம்பி ஏமாந்துட்டேனே!
ஏன்... என்ன ஆச்சு?
மாப்பிள்ளைக்கு பின்னந்தலைல இருக்கற பெரிய வழுக்கையைத்தான் அப்படி சொன்னாறாம்.
அப்போ பிளேகிரவுன்ட்னு சொல்லுங்க.

==============================================
ஏன் சார் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க . . .
அவ‌ன் கே‌ட்ட கே‌ள்‌வி‌க்கு...
அப்படி என்னதான் கேட்டான்?
தமிழுக்கு தெலுங்குல என்ன‌ப்பா‌ன்னு கேக்கறான் கொழுப்பெடுத்தவன்.

==============================================
ஜக்கு: முதல் முதல்ல மின்சாரம் கண்டுபிடிச்சப்ப என்ன நடந்ததுன்னு தெரியுமா?
மக்கு: தெ‌ரியலையே?
ஜக்கு: க‌ண்டி‌ப்பா க‌ண்டு‌பிடி‌ச்சவரு‌க்கு பயங்கரமா ஷாக் அடிச்சிருக்கு‌ம்

==============================================
விலைவா‌சி எ‌ல்லா‌ம் ஏ‌றி‌ப் போ‌ச்சு.. இ‌னிமே நாம ‌நிறைய ‌மி‌ச்ச‌ம் ‌பிடி‌க்கலா‌ம்
எ‌‌ன்ன‌ங்க சொ‌ல்‌றீ‌ங்க?
விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சுல்ல இ‌னிமே எதையு‌ம் வா‌ங்க முடியாது. அ‌ப்போ எல்லாமே சேமிப்பு தானே.

==============================================
மகன் - பல ரோஜாக்களை பறிக்கும் போது ஒரு முள்ளு குத்தத்தான் செய்யும்.
அப்பா - இப்போ எதுக்குடா இந்த தத்துவம்?
மகன் - 5 பேப்பர் எழுதினா ஒரு அரியர் விழுத்தான் செய்யும்கிறத உங்களுக்கு உணர்த்தத்தான்

==============================================
எ‌‌ப்போது‌ம் அழுது‌க்‌கி‌ட்டே இரு‌ப்பாளே உ‌ன் பொ‌ண்ணு.. இ‌ப்போ எ‌ன்ன ப‌ண்றா?
அவ பெ‌ரிய ‌ஸ்டா‌ர் ஆ‌யி‌ட்டா
எ‌ன்ன சொ‌ல்ற.. அ‌ந்த அழுமூ‌ஞ்‌சியா?
ஆமா‌ ஒரு மெகா தொடர்ல அவதா‌ன் கதாநாய‌கியே.

==============================================

எ‌ன் பையனு‌க்கு ச‌ந்‌திரயா‌ன்னு பே‌ர் வ‌ச்சது த‌ப்பா‌ப் போ‌ச்சு.
ஏ‌ன் ந‌ல்ல பேருதானே.
நீ வேற எ‌தி‌ர் ‌வீ‌ட்டு ‌நிலாவை சு‌த்‌தி சு‌த்‌தி வ‌ந்து‌க்‌கி‌ட்டிரு‌க்கா‌ன்.

==============================================
நே‌த்து உ‌ங்க ‌வீ‌ட்டுல உ‌‌ன்ன உ‌ன் மனை‌வி தூ‌க்‌கி‌ப் போ‌ட்டு ‌மி‌தி‌ச்சா போல..
அட ‌நீ வேற.. எனக்கு உடம்பு வலிச்சுதுன்னா என் மனைவிதான் மிதிச்சு விடுவா...
அட... மிதி வாங்குவதைக்கூட இவ்வளவு நாகரிகமா சொல்லலாமா!

நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி!

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 4000 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்திய சிலை ஒன்றுதானாக நகர்ந்து வருவதால் பீதி ஏற்பட்டுள்ளது. எப்படி இந்த சிலை நகர்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இதனால் இந்த சிலை வைக்கப்பட்டுள்ள மான்செஸ்டர் அருங்காட்சியக நிர்வாகிகள் குழப்பமடைந்துள்ளனர். இதுவரை அநத் சிலை 180 டிகிரி அளவுக்கு நகர்ந்து நிற்கிறது. சுழன்றபடி அது நகர்வதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.



அந்த சிலை வெறும் 10 இன்ச் உயரம்தான் கொண்டது. கி.மு. 1800ம் ஆண்டு சிலை இது.

80 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலையை எகிப்து மம்மி ஒன்றிடமிருந்து கண்டுபிடித்து எடுத்தனர். பின்னர் இது மான்செஸ்டர் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த சிலையானது கடந்த சில வாரங்களில் மெதுவாக சுழன்றபடி நகர்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதலில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திடீரென சிலை இருந்த நிலையிலிருந்த வேறு பக்கம் திரும்பியபடி இருப்பதைப் பார்த்துஅருங்காட்சியக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் சிலை நகர்ந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு.

இந்த சிலையில் உள்ள நபரின் பெயர் நெப் சீனு என்பதாகும். இந்த சிலை இரவில் நகருவதில்லை. பகலில்தான் சுழன்று நகர்கிறது. இதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாரோ மன்னர்கள் விடுத்த சாபம்தான் இந்த சிலையின் மர்மத்திற்கு காரணம் என்று ஒரு குரூப் கதையைக் கிளப்பி விட்டுள்ளது.

இதுகுறித்து அருங்காட்சியகத்தின் கியூரேட்டர்களில் ஒருவரான காம்பல் பிரைஸும் நம்புகிறார். அவர் கூறுகையில், இருக்கலாம், சாபமாகக் கூட இருக்கலாம் என்றார் பிரைஸ்.

பிரைஸ் மேலும் கூறுகையில், என்னிடம் மட்டுமே சிலை வைக்கப்பட்டுள்ள பெட்டகத்தின் சாவி உள்ளது. இந்த நிலையில் சிலை எப்படி நகருகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. யாரும் சிலையைத் தொடவே முடியாது. எனவே இதில் இறை மர்மமும் இருக்கலாம் என நம்புகிறேன் என்றார்.

யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?

தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர்
கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர் ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.



சான்றுகள்
கிடைக்கக் கூடிய பொருத்தமான சான்றுகளின் அடிப்படையில்தான் எந்தவொரு சமூகம் அல்லது அரசாட்சியின் வரலாற்றையும் எழுத முடியும். சோழர்களைப் பற்றி அறிய ஏராளமான கல்வெட்டு, தொல்பொருள், மற்றும் இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும், மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும் முற்கால சோழர்கள் பற்றி சிறந்த சான்றுகளாக உள்ளன.

கல்வெட்டுகள்
சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள் ஆகும். சோழ அரசர்களின் வாழ்க்கை, ஆட்சிமுறை மற்றும் சோழர்கால அரசியல், பொருளாதார, சமய, சமூக பண்பாட்டு நிலைகளைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் கல்வெட்டுகள் பதிக்ககப்பட்டுள்ளன. தஞ்சை பெதிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஜ்வரர் ஆலயத்தில் கல் வெட்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல முக்கிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ அரசர்களின் ஆட்சிமுறைகளைப் பற்றி தகவல்களை கல்வெட்டுகள் வழங்குகின்றன.

மூன்றாம் இராஜேந்திரனின் ஆட்சி முறையைப் பற்றி திருவந்திபுரம் கல்வெட்டுகள் கூறுகின்றன. குடவோலை முறை, கிராம நிர்வாகம், வரி வசூல் முறை, நில வருவாய் முறை ஆகியவை குறித்து உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. சில கல்வெட்டுகளில் மெய்கீர்த்திகள் எனப்படும் மன்னர்களின் வெற்றி வரலாறுகளும் காணப்படுகின்றன.

அன்பில் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டுகள், கரந்தை செப்பேடுகள் மற்றும் திருவாலங்காடு செப்பேடுகள் ஆகியன சோழர்களைப் பற்றிய பயனுள்ள பல தகவல்களை அளிக்கின்றன. சைவ மதம் அங்கு சிறப்புடன் இருந்தது குறித்து தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழர்களின் சமகால அரசர்களான சேரர், பாண்டியன், இராஷ்டிர கூடர், கங்கா ஆகியோர் வெளியிட்ட கல்வெட்டுகளும் சோழர்களின் சிறப்புகள் பற்றிக் கூறுகின்றன.

நினைவுச் சின்னங்கள்:

சோழர்கால வரலாற்றை அறிந்துகொள்ள நினைவுச் சின்னங்கள் மிக முக்கிய சான்றுகளாய் பயன்படுகின்றன. நினைவுச் சின்னங்கள் ஆலயங்களின் பகுதிகளாக உள்ளன. தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தாராபுரத்திலுள்ள ஐராவதீஸ்வரர் ஆலயம், திருபுனவத்திலுள்ள கம்பகரேஸ்வரர் ஆலயம் சோழர்காலத்தின் முக்கிய நினைவுச் சின்னங்கள் ஆகும்.

நாணயங்கள்:
சோழ அரசர்கள் பொன், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் பொற்காசுகள் மிக்க குறைவாகவும், வெள்ளி செப்புக்காசுகள் அதிகமாகவும் கிடைக்கின்றன. சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட சோழ நாணயங்களில் சோழர்களின் சின்னமாகிய புலி சினனமும், சோழ அரசர்களின் பெயர்களும் காணப்பபடுகின்றன. இராஜராஜ சோழன் இலங்கையின் நாணயத்தைப் போன்ற நாணயங்களை நமது ராஜ்ஜியத்தில் வெளியிட்டார். சோழ அரசர்களின் காலங்களை வரிசைப்படுத்தவும், சோழர்கால சமுதாய பொருளாதார நிலைமைகளை அறிந்துகொள்ளவும் இந்நாணயங்கள் பெரிதும் பயன்படுகின்றன.

இலக்கியம்:
சங்கால சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் பற்றி, அறிந்துகொள்ள இலக்கியங்கள் சிறந்த சான்றுகளாக உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணம் சைவ பக்தர்களைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தார். ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஒட்டக்சுத்தரின் மூன்று உலாக்கள், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் சோழர்கள் பற்றி பயனுள்ள பல தகவல்களைத் தருகின்றன. வீர சோழியம், வநசோழ சரிதம், ஸதல புராணம், சோழ வம்ச சரிதம் ஆகிய இலக்கியங்கள் முற்கால சோழ அரசர்கள் பற்றி அறிய உதவும் சறந்த இலக்கியச் சான்றுகளாக உள்ளன.

அயல்நாட்டு சான்றுகள்:
சோழ அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையயே இருந்த உறவுகள் பற்றி இலங்கை இலக்கியமான மகாவம்சம் கூறுகின்றது. மேலும் இந்நூல் இலங்கையில் சோழர் ஆட்சி குறித்தும் கூறுகின்றது. ஐரோப்பிய பயணி மார்க்கோ போலோ, அயல்நாட்டு எழுத்தாளர் மெகஸ்தனிஸ் ஆகியோர் சோழர்களைப் பற்றி பல சுவையான தகவல்களைக் கூறுகின்றனர். அல்பெரூணி எனும் முகமதிய வரலாற்றாசிரியரும் சோழர்கள் பற்றி எழுதியுள்ளார்.

பிற்கால சோழ அரச குலம்:
பிற்கால சோழ அரச மரபை உருவாக்கியவர் விஜயாலயன் என்ற அரசர் ஆவார். இவர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி கி.மு. 850 ல் அதை சோழ நாட்டின் தலைநகராக்கினார். பல்வல மன்னர் அபராஜிதனை தோற்கடித்து அவரது இராஜ்ஜியத்துடன் இணைத்துக்கொண்டார். சிவ பக்தரான இவர் பல இடங்களில் சிவன் கோவில்களைக் கட்டினார்.

முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953:

உத்திரமேரூர் கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் பற்றி நிறைய தகவல்களைத் தருகின்றன. இவர் ஆதித்யனின் மகனாவார். இவர் டிதன் இந்தியாவின் பல பகுதிகளை வென்று தனது நாட்டுடன் இணைந்து தமது பேரரசின் எல்லையை வடக்கே நெல்லூர் வரை விரிவுபடுத்தினார். பாண்டிய மன்னரைத் தோற்கடித்து வெற்றிகரமாக மதுரையைக் கைப்பற்றினார். இந்த வெற்றியை போற்றும் விதமாக இவருக்கு ‘மதுரை கொண்டான்’ என்ற பட்டடம் வழங்கப்ப்டடது. அத்துடன் மேலும் இலங்கை மற்றும் பாண்டிய அரசர்களின் கூட்டு ராணுவத்தைத் தோற்கடித்ததால் இவர் ‘மதுரையும் ஈழமும் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றார்.

இவர் ஒரு சிவபக்தர். இவர் சிதம்பத்தில் உள்ள நடராஜர் ஆலயத்திற்கு பொன்னால் கூரை வேய்ந்தார். எனவே இவர் ‘பொன்வேய்ந்தசோழன்” என்று அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலத்தில் கிராம நிர்வாகம் சிறப்புற்று காணப்பட்டது. பராந்தகனுக்குப் பிறகு கண்டராதித்தியன். அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தரசோழன் மற்றும் உத்தமசோழன் ஆகியோர் அரசாண்டனர்.

முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014
இரண்டாம் பராந்தனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். திருவலாங்காடு செப்பேடுகள் இராஜராஜன் பற்றி கூறுகின்றன. இவர் சோழர் குலத்தின் மிக வலிமை மிக்க மன்னராவார். முதலாம் இராஸராஸ சோழனின் சிறப்புகள் சோழ நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கின்றன. இவர் காலத்தில் பல கல்வெட்டுகள் வெளியிடப்பட்டன. இராஜராஜனிடம் வலிமை மிக்க ராணுவம் இருந்தது. இவர் சேரரின் ராணுவத்தை திருவனந்தபுரத்தில் தோற்கடித்தார். இவர் கொல்லத்தை சார்ந்த பாஸ்கர ரவி எ்னற மன்னனையும் தோற்கடித்து, ‘காந்தளூர் சாலை கலமருதளிய’ என்ற பட்டம் பெற்றார். இவர் அமரபுஜங்கன என்ற பாண்டிய மன்னனை வென்றார். இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தாவை வென்று அனு ராதபுரத்தையும் இலங்கையின் வட பகுதியையும் இவர் கைப்பற்றினார். இவர் புலனருவா நகரத்தைப் புதிய தலைநகராக்கி அங்கு பல கோவில்களைக் கட்டினார். இவர் சேர, பாண்டிய, இலங்கை ஆகிய மூன்று மன்னர்களை வென்று

மும்முடி சோழன்” என்ற பட்டம் பெற்றார். இவர் மைசூர் பகுதியில் உள்ள கங்கபடி, தடிகை பாடி, நொளம்ப்பாடி ஆகியவற்றை வென்றார். இவர் விளிங்ஞம் என்ற பகுதியை வென்று ‘திக் விஜயம்’ நடத்தினார். மாலத் தீவுகள், கலிங்கம் ஆகியவற்றையும் வென்றார். இவருக்கு ‘அருண்மொழி’, ‘இராஜகேசரி’ போன்ற பட்டங்கள் உண்டு. இராஜராஜ சோழனுக்கு அவரது மகன் பட்டத்து இளவரசான ராஜேந்திரன் ஆட்சி மற்றும் போர்ப்பணிகளில் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

இராஜராஜ சோழன் ஒரு சிறந்த நிர்வாகி, தமது ஆட்சி காலத்தில் இவர் நில அளவை முறையை அறிமுகப்படுத்தினார். இவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் உள்ளாட்சி நிர்வாக முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். இவர் தஞ்சையில் உள்ள பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார். இவர் புத்த மதத்தையும் சைவ சமயத்தையும் ஆதரித்தார். நாகப்பட்டினத்தில் புத்தஆலயம் கட்டட அனுமதி அளித்ததோடு ஆனைமங்கலம் எனும் கிராமத்தையும் புத்த மடாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1002 – கி.பி.1044:
முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு அவரது மகன் முதலாம் இராஜேந்திரன் அரியணை ஏறினார். முதலாம் இராஜேந்திரனைப் பற்றி திருவாலங்காடு செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள் ஆகியன பல தகவல்களைக் கூறுகின்றன. இவர் ஒரு சிறந்த நிர்வாகியும், போர் வீரரும் ஆவார். இவரின் தந்தையாருடைய இராணுவ தீரச்செயல்களிலும் சிறந்த நிர்வாகத்திலும் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இவர் பதிவ ஏற்றவுடன் இலங்கை முழுவதையும் கைப்பற்றி இலங்கையில் சோழர் ஆட்சியை நிலை நிறுத்தினார். இவர் தனக்கு உதவ தன் மகன் இராஜாதி ராஜனை பட்டத்து இளவரசர் ஆக்கினார்.

தனது ஆட்சியின் போது இவர் பல சிவ ஆலயங்களையும் விஷ்ணு ஆலயங்களையும் கட்டினார். இவர் வங்காள அரசன் முதலாம் மகிபாலனைத் தோற்கடித்து கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீர் கொண்டு வந்தார். இந்நீர், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகே உள்ள சோழ கங்கம் என்ற நீர்பாசன ஏரியில் சேர்க்கப்பட்டடது. இந்த வெற்றியைப் போற்றும் விதமான இராஜேந்திர சோழனுக்கு ‘கங்கை கொண்டான்” என்ற சிறப்புப்பட்டம் சூட்டப்பட்டது.

இவர் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழப்புரத்திற்கு மாற்றினார். இவர் இலங்கையை கைப்பற்றினார். பின்னர் சேர பாண்டிய அரசர்களை வெற்றிக்கொண்டார். சாளுக்கிய குல அரசன் இரண்டாம் ஜெயசிம்மனோடு இவர் போரி்ட்டார். கலிங்கத்து அரசனையும் இவர் வெற்றிகொண்டார். இவர் ஒரு வேதக்கல்லூரியை நிறுவினார். முதலாம் இராஜேந்திரன், வீரராஜேந்திரன், அதிராஜேந்திரன் ஆகிய அரசர்கள் சில வருடங்கள் சோழ நாட்டை ஆட்சி செய்தனர்.

முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:

சோழர் வரலாற்றில் குலோத்துங்கசோழன் மிகப்பெரிய திருப்புனையை ஏற்படுத்தினார். குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்கள் குலோத்துங்கனின் நிர்வாகம், இராணுவ வெற்றிகள் பற்றி விளக்குகின்றன. இவர் சேர பாண்டிய மன்னர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். மேற்கு சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தியனுடன் இவர் போரிட்டார். குலோத்துங்கன் காலத்தில் சோழப்பேரரசு மிகவும் பரந்து காணப்பட்டது. வினயாதித்யாவிடம் இருந்து வெங்கியின் ஆட்சியைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்க சோழனை சீனா போன்ற தூர கிழக்கு நாடுகள் நன்கு அறிந்திருந்தன. இவர் சீன அரசவைக்கு தூதுவரை அனுப்பினார். இவர் இலங்கையின் வட பகுதியில் தன் ஆதிக்கத்தை இழந்தார். ஆனால் தென் பகுதியில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். இவர் கலிங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சோழப்பேரரசின் பொருளாதார நிலையை முன்னேற்றமடைய செய்தார். பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி முறையான நில அளவை முறையினை இவர் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார்.

மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி உட்பட பல விதமான வரிகளை நீக்கி, வரி சுமையில் இருந்து மக்களை மீட்டடதால் இவருக்கு ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற சிறப்புப்பட்டம் வழங்கப்பட்டது. இவர் பல நிர்வாக சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். சோழப் பேரரசு இவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. இவரது ஆட்சியில் உள்நாட்டு அமைதியும் சிறந்த நிர்வாகமும் சோழமக்களுக்கு கிடைத்தன.

சோழ அரசர்களில் மிகவும் சிறந்த அரசராக முதலாம் குலோத்துங்கன் கருதப்படுகிறார். அவருக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.

நன்றி
ஈகரை தமிழ் களஞ்சியம் 

சோமநாதர் கோயில் படையெடுப்புமதரீதியான படையெடுப்பு அல்ல.



சோமநாதர் கோயில் படையெடுப்பு அல்லது கொள்ளை மதரீதியான படையெடுப்பு அல்ல. அதேபோல முகமது கஜினி இந்தியாவில் இசுலாத்தைப் பரப்பவோ, இங்கு இசுலாமிய ஆட்சியை உருவாக்கவோ இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை. முகமதுவைப் பொருத்தவரை காஜானாவத் பேரரசை பாக்தாத் காலிலிப்புக்கு போட்டியாக உருவாக்க நினைத்தார். இதனால் அவரது வரலாற்றை எழுதியவர்களும், அவரது அரசவைக் கவிஞர்களும் தங்கள் மாமன்னரின் வீரபராக்கிரமங்களை அதீதமாக மிகைப்படுத்தி எழுதினார்கள். இதற்கு அவர்களது ராஜவிசுவாசமே காரணம். முகமது இந்தியா வரும் முன்னரே இந்தியாவில் இசுலாமியர்கள் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் அராபியர்கள். இந்தியர்களுடன் வணிகம் மேற்கொள்வதற்காக அவர்கள் இங்கு குடியேறினர். ஆனால், முகமதுவின் வருகை வியாபாரம் இல்லை. தனது பேரரசுக்கு செல்வம் சேர்க்க கொள்ளைகளை நிகழ்த்தினார். அப்போது மிகவும் செல்வச்செழிப்புள்ள கோயில் நிர்வாகமாக சோமநாதர் ஆலயம் இருந்தது.

இந்தியா முழுவதுமிருந்து யாத்திரீகர்கள் வந்த வண்ணமாயிருந்தனர். அவர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர். அரசும் யாத்திரீகர்களிடம் தனியாக வரி வசூல் செய்தது. தவிர அப்பகுதியைச் சேர்ந்த இந்து, சமண, அராபிய வணிகர்களும் வாரி வழங்கினர். இதனால் உள்ளூர்வாசிகளுக்கும், அரசுக்குமே கூட மோதல் இருந்தது. சோமநாத்துக்கு வரும் யாத்திரீகர்களிடம் கொள்ளையடிப்பதை உள்ளூர் மக்கள் வழக்கமாகவும், வாழ்க்கையாகவும் கொண்டிருந்தனர். சில உள்ளுர் அரசர்கள் கூட இக்கொள்ளையில் ஈடுபட்டனர். எனவே, இந்தளவுக்கு செல்வமிக்க சோமநாதர் ஆலயத்தை தரைமட்டமாக்கி, சொத்துகள் மொத்தத்தையும் முகமது சுருட்டிச் சென்றார். ஆனால், இந்தத் தொகையை அதீதமாக மிகைப்படுத்திக் கூறியுள்ளனர். பொதுவாக, படையெடுக்கும் மன்னர்கள் வெற்றியை ருசிக்கும்போது அவர்களது அடுத்த நடவடிக்கை கொள்ளைதான். முகமது மட்டுமல்ல, வட இந்தியாவின் அரசர்களும் தங்கள் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த படையெடுத்துள்ளதை வரலாறு நெடுகக் காணமுடிகிறது. அவர்கள் இந்து கோயில்களாக இருந்தாலும் விட்டு வைக்கவில்லை. பட்டவர்த்தனமாகக் கொள்ளையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில்கூட சோழர்கள் கடல் கடந்து படை யெடுத்தனர். ஆனால், அவர்களும் கொள்ளையடித்த செல்வங்களுடன்தான் வெற்றிப்பெருமிதத்துடன் திரும்பினர். அத்தகைய பெருமிதம்தான் முகமதுவுக்கு இருந்தது. கோயிலை இழிவுபடுத்தியது தொடர்பாக, அவர் கோயிலை தரைமட்டமாக்கினார். விமானத்தை சுக்கு நூறாக உடைத்தார் என்பதெல்லாம் உண்மையாக இருக்கலாம். அது படையெடுப்பின் ஒரு அங்கம். ஆனால், விக்கிரக அவமதிப்பைப் பொறுத்தவரையில், சோமநாத் என்ற பெயரில் உள்ள "மநாத்' என்பதை "மனத்' என்று கஜினி முகமது புரிந்து கொண்டிருக்கலாம் என்றும், "மநாத்' என்பது குரானில் குறிப்பிடப்படும் "மனத்' என்ற தேவதை என்று அடையாளம் கண்டு, குரானில் வரும் ஒரு தேவதைக்கு உருவ வழிபாடு செய்வதாக எண்ணி அதற்கு அவமரியாதை செய்திருக்கலாம் என்றும் பரூக்கி என்பவர் மேற்கோள் காட்டுகிறார்.

இஸ்லாத்துக்கு முந்தைய காலத்தில் "மனத்' தேவதையை வழிபடாமல் மெக்கா பயணம் முழுமையடையாது என்ற நம்பிக்கை இருந்துள்ளது. முகமது நபி உருவ வழிபாட்டுக்கு எதிரானவர். எனவே, அவர் அதை அழித்து விட்டார் என்றும், முகமது அலிலி காலத்தில் அந்தச் சிலை அழிக்கப் பட்டது என்றும் கூறப்படுகிறது. அராபிய தொல்குடி இனத்தவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றியபோதே தமது பரம்பரை விக்கிரக வழிபாட்டையும் தொடர்ந்தனர். இன்றும் ஓரளவு விக்கிரக வழிபாட்டை ஏற்கிறவர்கள் இருக்கிறார்கள். உருவ வழி பாட்டை எதிர்ப்பவரான கஜினி முகமது அந்த இசுலாமிய உட்பிரிவுகளை அழிப்பதில் குறியாக இருந்தார்; எனவே, மதத்தைத் தூய்மைப்படுத்தும் முயற்சியாக மிச்சசொச்சங்களைத் துடைத்தெறிவதில் முகமது கஜினி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் நீட்சியாகவே சோமநாத் விக்கிரக விவகாரத்தைப் பார்க்க முடியும். மற்றபடி, சோமநாத் கோயில் கதவை எடுத்துவந்து தமது கோட்டை வாசலிலில் பொருத்தினார் என்பது போன்ற கூற்றுகள் ஆதாரமற்ற மிகைப்படுத்தல்கள். மேலும், சோமநாதர் கோயில் மீண்டும், மீண்டும் கட்டப்பட்டதாகவும், அதை இஸ்லாமிய மன்னர்கள் மீண்டும், மீண்டும் தரைமட்டமாக்கியதாகவும் கட்டமைக்கப் படுவதும் தவறு. அராபிய வரலாற்றாசிரியர்கள் மிகைப் படுத்திக் கூறிய இக்கூற்றை ஆதாரமாகக் கொண்டு காலனியவாதிகள் பரப்பி வந்தனர். இந்துத்வா சக்திகள் அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், அதற்கான ஆதாரங்கள் சமஸ்கிருத, சமண ஆவணங்களில் இல்லை. இதை, ஒரு தொகுப்பு வாசிப்பின் மூலமே தெளிவுபடுத்த முடியும்.

ஆழி ஆழி

Thursday, June 27, 2013

சொல்லித்தெரிவதில்லை எனும் "கலை" சிலருக்கு சொல்லித்தான் புரிய வைக்கணும்

சொல்லித்தெரிவதில்லை ''அந்த'' கலை என்று கூறப்பட்டாலும் ஓரளவு அறிவு பூர்வமாக தாம்பத்ய உறவைப்பற்றி ஆணும் பெண்ணு அறிந்திருக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் பல இளைஞர்கள் போலி மருத்துவர்கள், தாயத்து வியாபாரிகள், அரை வேக்காட்டு செக்ஸ் நிபுணர்கள் போன்றவர்களின் வார்த்தை ஜாலங்களில் பயங்கி பொருளை இழப்பதோடு, பல தவறான கருத்துக்களுக்கு ஆளாகி, குழந்தை பெறும் வாய்ப்பையும் இழக்கிறார்கள்.

படிக்காதவர்கள் என்பதனாலோ, பாமர மக்கள் என்பதனாலோ இவர்களுக்குத் தான் இது தெரியவில்லை என நினைத்தால் அது மிகவும் தவறு. படித்த, மிகவும் நாகரிகம் உள்ள தம்பதியர்கள் கூட இனச் சேர்க்கை பற்றியோ, உடல் உறவு பற்றியோ, குழந்தைப் பிறப்பைப் பற்றியோ சரியாக, முறையாக அறியாமல் இருப்பது ஆச்சரியத்திற்குறியது.

குழந்தை பெற வேண்டும் எ
ன்ற ஆவலில் வரும் பெரும்பாலான தம்பதியர் டாக்டரிடம் எழுப்பும் ஐயப்பாடு, "நாங்கள் சரியான முறையில் தான் உடலுறவு கொள்கிறோமா!" என்பது தான்.

குழந்தை பிறப்பதில் பெரும்பாலும் தடை ஏற்படக் காரணமாக இருப்பது, செக்ஸ் குறைபாடுகள் தான். அவற்றை நோய் என்று கூறுவதை விட தடுமாற்றம் என எடுத்துக் கொள்வதே பொருத்தமானதக்க இருக்கும்.


ஒரு நாள் மதிய உணவு வேளை குடும்பத்தோடு உணவருந்திக் கொண்டு இருக்கும்போது கதவு தட்டப்பட்டது. என் உதவியாளர் கதவைத் திறந்தவுடன் அவரைத் தள்ளிக்கொண்டு "டாக்டர் எங்கே?" என்று கேட்டுக்கொண்டு மடமடவென ஒருவர் உள்ளே நுழைந்து, டைனிங்க் டேபிளை அடைந்து விட்டார். அவர் இடுப்பில் ஓர் அழுக்கு லுங்கியும், தோளில் ஓர் அழுக்கு துண்டும், கழுத்தில் பாசி மணி மாலையும்... பார்த்தவுடனேயே நாடோடி இனத்தைச் சேர்ந்தவர் என்பது புரிந்தது. என்னைப் பார்த்தவுடன் உணவு பிசைந்திருந்த என் கைகளை எடுத்து கண்களில் ஒத்திக்கொண்டார்.குடும்பத்தில் அனைவரும் வாயடைத்துப் போனோம். நான் சற்று சமாளித்துக் கையளம்பிக்கொண்டு அந்த மனிதரை எனது கட்ஸல்டிங் அறைக்கு அழைத்து வந்தேன். அந்த மனிதர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராகக் காணப்பட்டார். அவரை சற்று அமைதியடையச் சொல்லி "யார்? என்ன விபரம்?" எனக் கேட்டேன்.

"ஐயா! என்னை ஞாபகம் இல்லைங்களா? போன வருஷம் என் மகளையும் மருமகனையும் குழந்தை இல்லைன்னு கூட்டி வந்தாங்களே! இப்ப ரெண்டு நாளைக்கு முன்னே எனக்கு பேரன் பொறந்துட்டான். ஐயா கிட்ட சமாசாரம் சொல்லலான்னு அங்கிருந்து உடனே வந்திட்டேன்" என்றார். அவர் கூறிய ஊர் ஏறத்தாழ 200 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தது.


"அவ்வளவு தூரத்தில் இருந்து இதைச் சொல்லவா வந்தீர்கள்?" என ஆச்சரியத்தோடு கேட்டேன்."ஆமா ஐயா, உங்களுக்குத்தானே மொதல்ல நன்றி சொல்லணும்" எனக் கூறி, "ஏதோ ஏழை, என்னால் மத்தவங்க மாதிரி உங்களுக்கு பணம் காசு கொடுக்க முடியாது. இதை எடுத்துக்குங்க" என ஒரு பாட்டில் தேன் கொடுத்தார். பின்னர் வேறு ஒரு பாட்டில் தேனை எடுத்து எனது உதவியாளர்களுக்குக் கொடுத்தார். நான் எத்தனையோ வற்புறுத்தியும் வழிச் செலவுக்கோ அல்லது தேனுக்கோ பணம் வாங்க மறுத்து விட்டு சென்று விட்டார்.

நான் எனது தொழிலில் சம்பாதித்த எத்தனையோ ஆயிரக்கணக்கான பணத்தை விட அந்த ஒரு தேன் பாட்டில் எனக்கு மிகவும் மதிப்பு வாய்ந்ததாகட், மகிழ்ச்சி தருவதாகத் தோன்றியது.

அந்த பாட்டிலையே பார்த்துக்கொண்டிருந்த எனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. ஒரு வருடத்திற்கு முன் இந்த மனிதர் தேன் விற்க வந்ததையும், நான் ஒரு டாக்டர் என அறிந்து, தன் மகளுக்கு ஏழெட்டு வருடங்களாக குழந்தை இல்லை என்று கூறியத்தையும், பின்னர் ஏறத்தாழ 30 - 40 உறவினர்களோடு மகளையும், மருமகனையும் எனது மருத்துவமனைக்கு அழைத்து வந்ததையும், நான் பரிசோதித்ததையும் அசைபோட்டது. மெதுவாக அவர்கள் வந்த நாளை, நினைவு படுத்தி அவர்களது கேஸ் சீட்டை எடுத்துப் பார்த்தேன். அவர்களது பிரச்சனையும் நான் கொடுத்த சிகிச்சையும் நினைவுக்கு வந்தது,

திருமணம் ஆகி ஏழெட்டு ஆண்டுகள் ஆகியும் - கணவனுக்கு 28 வயதும், மனைவிக்கு ஏறத்தாழ 25 வயது ஆகியும், இருவருக்கும் உடல் உறவை பற்றியும் குழந்தை பெறுவது எப்படி என்பது பற்றியும் அறியாமல் இருந்ததும், அதற்கு நான் வழங்கிய ஆலோசனைகளும்....

படிக்காதவர்கள் என்பதனாலோ, நாடோடி இனத்தைச் சேர்ந்த பாமர மக்கள் என்பதனாலோ இவர்களுக்குத் தான் இது தெரியவில்லை என நினைத்தால் அது மிகவும் தவறு.

படித்த, மிகவும் நாகரிகம் உள்ள தம்பதியர்கள் கூட இனச் சேர்க்கை பற்றியோ, உடல் உறவு பற்றியோ, குழந்தைப் பிறப்பைப் பற்றியோ சரியாக, முறையாக அறியாமல் இருப்பது ஆச்சரியத்திற்குறியது.சொல்லித்தெரிவதில்லை ''அந்த'' கலை என்று கூறப்பட்டாலும் ஓரளவு அறிவு பூர்வமாக தாம்பத்ய உறவைப்பற்றி ஆணும் பெண்ணு அறிந்திருக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் பல இளைஞர்கள் போலி மருத்துவர்கள், தாயத்து வியாபாரிகள், அரை வேக்காட்டு செக்ஸ் நிபுணர்கள் போன்றவர்களின் வார்த்தை ஜாலங்களில் பயங்கி பொருளை இழப்பதோடு, பல தவறான கருத்துக்களுக்கு ஆளாகி, குழந்தை பெறும் வாய்ப்பையும் இழக்கிறார்கள்.

குழந்தை பெற வேண்டும் என்ற ஆவலில் வரும் பெரும்பாலான தம்பதியர் டாக்டரிடம் எழுப்பும் ஐயப்பாடு, "நாங்கள் சரியான முறையில் தான் உடலுறவு கொள்கிறோமா!" என்பது தான்.

குழந்தை பிறப்பதில் பெரும்பாலும் தடை ஏற்படக் காரணமாக இருப்பது, செக்ஸ் குறைபாடுகள் தான். அவற்றை நோய் என்று கூறுவதை விட தடுமாற்றம் என எடுத்துக் கொள்வதே பொருத்தமானதக்க இருக்கும்.

இந்த குறைபாட்டை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

அவை:

o  தடை செய்யப்பட்ட காம உணர்வு
o  அதிகப்படியான பரவசம்

வேறு விதமாகப் பிரிப்பதானால்

o  ஆர்வக் குறைபாடு
o  வெளிப்பாட்டில் உள்ள குறைகள்
o  இன்ப உச்சம் எட்டுவதில் உள்ள குறைகள்
o  உடலுறவில் ஏற்படும் வலி - வேதனைஎன்று பிரிக்கலாம். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


  ஆர்வக் குறைபாடுகள்  
காம உணர்விற்கு காரணம் உடலில் சுரக்கப்படும் ஆண்டிரோஜன் எனப்படும் ஹார்மோன்கள் தான். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்த ஹார்மோன்களின் சுரப்பில் கூறைபாடு இருக்குமானால் செக்ஸ் ஆர்வமும் குறைவாகவே இருக்கும்.
இதைத் தவிர,
o  வயது ஏறஏற ஏற்படும் மாற்றங்கள்
o  களைப்பு
o  உடல் நலக் குறைவு
o  சில மருந்து வகைகள்
o  மனநலக் குறைவு
போன்றவை காரணமாக இருக்கும்.


  காம வெறுப்பு  
செக்ஸ் - செயல்களைத் தவிர்த்தல், பின் வாங்குதல், எதிர்மறை எண்ணங்கள் போன்றவை இதில் அடங்கும்.
பரபரப்பு, மூச்சு வாங்குதல், வெறுப்பு போன்றவை இந்தக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் என்றால்,
o  உடல் குறைபாடுகள், நோய்கள்.
o  சரியான் வடிகால் இல்லாத உணர்வு.
o  உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத வாழ்க்கைத் துணை.
o  துன்புறுத்தும் கணவன் அல்லது மனைவி.
o  ஆர்வமில்லாத வாழ்க்கைத் துணை.
o  திருமணப் பிரச்சனைகள்.
o  அடக்கி வைக்கப்பட்ட கோபம்.
o  பழைய செக்ஸ் சம்பதப்பட்ட மனக்காயங்கள்.
போன்றவை காரணங்களாக இருக்கின்றன.

  வெளிப்பாட்டில் உள்ள குறைபாடுகள்  

இந்தப் பிரிவில் ஆணுக்கோ பெண்ணுக்கோ அடைப்படையக இருக்க வேண்டிய அளவு செக்ஸ் ஆர்வம் இருக்கும். ஆனால், அதனை கணவனிடமோ மனைவியிடமோ வெளிப்படுத்துவதில் தயக்கம், கூச்சம், பயம் போன்றவை இருக்கும். இந்தப் பிரிவில் உள்ளவர்கள் தங்கள் உணர்வுகளை அடக்கி அடக்கி வைத்து வாழ்பவர்கள்.

சமூகத்தில், பெண்களுக்கு அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற குணங்கள் அவசியம் என வற்புறுத்தப்பட்டு வருவதும், அதன் காரணமாக ஒரு பெண் தன் உணர்வுகளை சொந்தக் கணவனிடம் வெளிப்படுத்தினாலும், "அவள் தவறான நடத்தை உள்ள பெண் என்று கருதப்பட்டு விடுவாளோ" என்ற பயமுமே, இப்படி உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமைக்கு முக்கிய காரணம்.

  உச்சம் எட்டுவதில் உள்ள பிரச்சனைகள்  ஆண்மைக் குறைபாடு : 
ஓர் ஆணுக்கு காம உணர்வு ஏற்பட்டவுடன் அவனது உடல் தசைகள் முறுக்கேறுவதோடு அவனது ஆண்குறி விரைத்து, கெட்டியாக இருப்பதில் குறைபாடு இருக்கும்னால் அதையே ஆண்மைக் குறைவு என்று குறிப்பிடுகிறோம். பொதுவாக ஏறத்தாழ 60 வயதிற்கு மேல் புராஸ்டேரில் பிரச்சனைகளோ மற்ற நோய்களோ தாகும் வரை ஆண்களுக்கு இப்பிரச்சனை ஏற்படுவது இல்லை.
அப்படி ஏற்படுமானால், அது அடிப்படையாகவே உள்ள பிரச்சனையா? (அதாவது  எப்பொழுதுமே இப்படி விரைத்து, நீண்டு, கெட்ட்படவில்லயா?) அல்லது மன பிரச்சனைய? என்றெல்லாம் ஆராயப்பட வேண்டும்.


  இன்ப உச்சம் எட்டுவதில் உள்ள குறைபாடுகள் :  
மனித உடலில் தலை முதல் கால்வரை ஓரிரு நொடிகள் ஏற்படும் இன்பமயமான துடிப்பு அல்லது உணர்வு, உடலுறவின் உச்சக்கட்டம் இந்த இன்ப உச்சமே. இதற்கு உடலும் மனமும் சரியாக இருக்க வேண்டும். அப்படி ஒன்றோ அல்லது இரண்டுமோ சரியில்லாத நிலையில் இந்த சுகம் அனுபவிக்க முடிவதில்லை.
இந்த இன்ப உணர்வு கிடைக்கவில்லை என்று கவலைப்படும் பெர்ம்பாலானோருக்கும், செக்ஸ் பற்றிய அறிவு இல்லததே காரணமாக இருக்கிறது. கூச்சம், கவலை, பரபரப்பு, துக்கம், குழப்பம் போன்றவை முதல் குறைபாடுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றால், இவற்றோடு ஆண்குறி விரைப்பதில் உள்ள குறைபாடுகளும் மன அழுத்தம், வயது, மனவேகம் இவையும் அடுத்த குறைபாட்டீற்கு காரணமாகிறது.


  உடலுறவில் வலி - வேதனை  
பலவித நோய்கள் - உதாரணமாக புண்கள், கட்டிகள் மற்றும் வேறு சில காரணங்களாலும் உடலுறவ்ல் வலியும் வேதனையும் ஏற்படுகின்றன. இப்படி ஏற்படும் வலி பல சமயங்களில் உடலுறவையே வெறுக்க வைக்கிறது. சில தம்பதியருக்கு உடலுறவு இல்லாமல் இருப்பதே சுகம் என நினைக்க வைக்கிறது.
உடலுறவைப் பற்றிய தவறான கருத்துகளும், இது ஒரு பாபகரமான கெட்ட விஷயம் என்ற குற்ற மனப்பான்மையும் கூட இப்படி வலியும் வெறுப்பும் ஏற்படக் காரணமாகிறது.


  குறைபாடுகளைக் களையும் வழி  
இந்த செக்ஸ் குறைபாடுகளைக் களைவது மிகவும் சிக்கலான ஒன்று. முதலில் இந்தக் குறைபாடுகளை கண்டுபிடிப்பதே மிகவும் கஷ்டம். காரணம், இது ஒவ்வொரு தனி மனிதனுடைய அல்லது தம்பதியருடைய அந்தரங்கம் பற்றியது. அது மட்டுமல்லாமல் இது உடல் - மனம் - உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். மேலும், சமூகம், மதம் போன்ற பல்வேறு அம்சங்களும் சேர்ந்து ஏற்கனவே சிக்கலான விஷயத்தை மேலும் சிக்கலாக்குகிறது.

அதனால் இதனைச் சரிசெய்ய உடல் சிகிச்சை, உடற்பயிற்சி, மனப் பயிற்சி, மன சிகிச்சை என்ற தேவையை அனுசரித்து சிகிச்சை பெறலாம். இதற்கு மலட்டுத் தன்மை நீக்கும் நிலையங்களும், உடல்நோய் மனநோய் வல்லுநர்களும், மனவியல் நிபுணர்களும் உதவுவார்கள்.ஏற்கனவே கூறியதுபோல தம்பதியர் தங்கள் கொள்ளும் உறவு சரியான முறையில் உள்ளது தானா? என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறார்கள். வேறு சிலர் எது சரியான முறை எது தவறான முறை எனக் கேட்கிறார்கள். இதுதான் சரியான முறை என்றோ இப்படித்தான் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கூறுவதோ சரியானதாக இருக்காது. அதே சமயம் கணவனும் மனைவியும் உடலுறவு கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை கீழே தருகிறோம்.


கணவனும் மனைவியும்  உடலுறவு கொள்ளும்போது  கவனத்தில் கொள்ள வேண்டிய  சில விஷயங்கள் 

o  ஐம்புலன்களும், மனமும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
o  அடுத்த மாத விலக்கிற்கு ஏறக்குறைய 14 ஆம் நாள் முதல் எவ்வளவு முறை   முடியுமோ அவ்வளவு முறை உடல் உறவு  கொள்ள வேண்டும்.
o  உடல் உறவிற்கு முன் இருவரும் குளித்துச் சுத்தமாக இருக்க வேண்டும்.
o  அருவருப்போ வெறுப்போ இன்றி உடல் உறவு கொள்ள வேண்டும்.
o  ஒருவர் மனதை, உணர்வை மற்றவர் புரிந்து செயல்பட வேண்டும்.
o  ஒருவர் உபயோகிக்கும் வாசனைத் திரவியங்களான பவுடர், சென்ட் போன்றவை மற்றவருக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும்.
o  உணர்வுகளைத் தூண்டும் விஷயங்களை பெல்லப் பேசுவதும் கேட்பதும் மிகுந்த பயனுள்ள செயல்களாகும்.

இந்த முறைகளைக் கடைப்பிடிப்பது உடல் உறவில் இன்பத்தை அடைய மட்டுமல்லாமல், குழந்தையை அடையவும் இயற்கையான ஓர் எளிய வழியாகும்.

நன்றி
குட் பாய்

தமிழர்கள் கவனத்திற்கு

தடுக்கி விழுந்தால் மட்டும் அ… ஆ…
சிரிக்கும் போது மட்டும் இ… ஈ…
சூடு பட்டால் மட்டும் உ… ஊ…
அதட்டும் போது மட்டும் எ… ஏ…
சந்தோசத்தின் போது மட்டும் ஐ…
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ… ஓ…
வக்கனையின் போது மட்டும் ஔ…
விக்களின் போது மட்டும் ஃ…
என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழி என்று

நன்றி ………..ஒரு தமிழன் படைப்பு

நீங்கள் பாக்கியசாலியா?

பெண் குழந்தை பிறப்பதை விரும்பாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். பெண் குழந்தை என்றாலே அது ஒரு பாரம், குடும்ப தலைவருக்கு பொருளாதார சுமை என்று எண்ணுகிற மக்கள், அத்தகைய சிந்தனை இஸ்லாத்திற்கு வெளியில் நின்று கொண்டு தான் நமது உள்ளத்தில் ஏற்பட வேண்டுமே தவிர, ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு இத்தகைய எண்ணமே நம் மனதில் எழக்கூடாது என்பதை உணர வேண்டும்.

இந்த உலகில் ஐம்பது வருடமோ அறுபது வருடமோ வாழ்ந்து விட்டு மரணிக்கும் நாம், இயன்ற வரை மறுமை வெற்றிக்காக பல காரியங்களை செய்கிறோம். தொழுகிறோம் நோன்பு நோற்கிறோம், ஏழைகளுக்கு உணவளிக்கிறோம் சகாத் வழங்குகிறோம், இன்னும் ஏராளமான நல்லறங்களை செய்கிறோம்.

இதை செய்வதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது ஒன்றே ஓன்று தான். அது மறுமையில் அல்லாஹ் நம்மை அன்பு பார்வை பார்க்க வேண்டும். அல்லாஹ் நம்மை நல்லவன் என்று அங்கீகரிக்க வேண்டும்.
இந்த எண்ணத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்தக்கூடிய நாம், அல்லாஹ்வும் அவன் தூதரும் எதையெல்லாம் செய்யுமாறு சொல்லியுள்ளார்களோ, அதை இயன்றவரை செய்யக்கூடியவர்களாகவும் எதை விட்டெல்லாம் தவிர்ந்து கொள்ள சொல்கிறார்களோ அதை எல்லாம் விட்டு தூரமாகி கொள்பவர்களாகவுமே தான் நாம் வாழ வேண்டும்.

இந்த உலகில் ஒரு சில நல்லமல்களை செய்து விட்டு மரணித்து விடும் நாம், நமது மரணத்திற்கு பிறகும் நமக்கு நன்மையை ஈட்டு தரக்கூடிய ஒன்றை இந்த உலகில் விட்டு செல்கிறோம் என்றால் அது நமது குழந்தைகள்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே நின்று விடுகின்றன. 1. நிலையான தர்மம். 2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி. 3. அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள். (முஸ்லிம் 3358)

எந்த குழந்தையாக இருந்தாலும், அவர்களை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால், நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், சொர்க்கத்தில் ஒரு அடியானின் தகுதியை உயர்த்துவான். யா அல்லாஹ், இது எனக்கு எப்படி கிடைத்தது? என்று அவன் கேட்கும் போது, உனக்காக உன் குழந்தை பாவ மன்னிப்பு கேட்டது அதனால் தான், என்று அல்லாஹ் விடையளிப்பான். (அஹ்மத் 10202)

அத்தகைய பாக்கியம் நமக்கு கிடைப்பதற்கு நாம் எந்த வகையிலாவது உழைக்க வேண்டுமா பாடுபட வேண்டுமா?? எதுவும் இல்லை, நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தாலே போதும்.

குழந்தைகள் நமக்கு கிடைத்த பாக்கியமாக நாம் கருத வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கும் போது, பெண் குழந்தைகளை நாம் வெறுப்பது என்பது, நபியை விட்டு நாம் விலகி செல்கிறோம் என்பதையே காட்டும்.


இவ்வாறு தாங்கள் பெற்ற பெண் குழந்தைகளை கண்டு வெறுப்பு அடைகிற பெற்றோர்களை அல்லாஹ் கடுமையாக சாடுகிறான்.

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (அல்குர்ஆன் 6:140)

என்று கண்டிக்கிற அல்லாஹ், இன்னொரு வசனத்தில்
அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்கு கூறப்பட்ட கேட்ட செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து வாழ்கிறான்.இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா அல்லது மண்ணில் புதைத்து விடுவதா? (என்று எண்ணுகிறான்). கவனத்தில் கொள்ளுங்கள் அவன் தீர்பளிப்பது மிகவும் கேட்டது. (அல்குர்ஆன் 16:58) என்று கூறுகிறான்.

பெண் குழந்தைகளை வெறுப்பதோ அதனால் கவலைப்படுவதோ, அதை இழிவானதாக கருதுவதோ, அதை கொலை செய்து விடவதோ அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவமான காரியமாக இருக்கிறது.
இதை கண்டிப்புடன் சொன்ன அல்லாஹ், பெண் குழந்தை பிறந்த செய்தியை பற்றி சொல்கிற போது அது ஒரு நற்செய்தி என்கிறான் !!

பெண் குழந்தைகளை வெறுப்பவர்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் நமக்கு பாரமாக இருக்கும் என்றால், அல்லாஹ் அதை நற்செய்தி என்று சொல்வானா?? அப்படியானால் நிச்சயம் அதில் ஏதோ ஒரு நற்செய்தி இருக்கத்தான் செய்யும்.

ஹதீஸ்களில் இதற்கு விடை கிடைக்கிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் (முஸ்லிம் 5127)
முதல் ஹதீஸில், நல்ல சாலிஹான குழந்தைகள் நமக்காக பிரார்த்தனை செய்வதன் மூலம் சொர்க்கத்தில் நம் அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என்று சொன்ன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இந்த ஹதீஸில், பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே நாம் சொர்கத்திற்கு செல்வதற்கு காரணமாகி விடுகிறது என்பதை விளக்குகிறார்கள் என்றால், நாம் எந்த அளவிற்கு பெண் குழந்தைகளை அன்புடனும் பாசத்துடனும் வளர்க்க வேண்டும் என்பதை புரிய வேண்டும்.

இந்த பெண் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்று கொள்கிறார்களோ, அவர்கள் நரகம் சென்று விடாமல் தடுக்கும் தடையாக இந்த குழந்தை இருக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி 5995)


அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்த கூடிய ஒரு முஸ்லிம், என்றைக்கும் தனது குழந்தைகளை, அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அன்புடனும் பாசத்துடனும் வளர்த்து, அதன் மூலம் சொர்க்கம் செல்லவே ஆசைப்பட வேண்டும்.

பொருளாதார சுமை அதிகரிக்கும் என்று எண்ணி கூட நமது பெண் குழந்தைகளை கொன்று விடகூடாது. வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் என்று அல்லாஹ் அல்குர்ஆன் 17:31 வசனத்தில் எச்சரிக்கிறான்.

இந்த எச்சரிக்கையோடு சேர்த்து நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்கிற வாக்குறுதியையும் தருகிறான்.

நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்று அவன் வாக்குறுதி தந்து விட்ட பிறகு, அதை பொருட்படுத்தாமல் நாம் செயல்படுவது அல்லாஹ்வின் வாக்குறுதியை கூட நாம் மதிக்காதது போல ஆகும் என்பதையும் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். பெண் குழந்தைகளை நமக்கு கிடைத்த பாக்கியமாக கருதி வளர்ப்போம், மறுமையில் வெற்றி பெறுவோம்.

nidur.info

தவமாய் தவமிருந்து...

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்ற காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

நல்ல கணவர் அமைய வேண்டுமென்று அவளும், நல்ல மனைவி அமைய வேண்டுமென்று அவனும் பல ஆண்டுகளாக கண்ட கனவு ஒருநாள் பலித்து, பின் இருவரும் அழகிய குழந்தையை பெற்றெடுத்தனர். குழந்தையின் ஒவ்வொரு பருவத்திலும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்தனர், உகந்த கல்வி, உடை, நேரம் தவறாமல் உணவு என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தனர்.

மழலையாய் இருந்த பொழுது 'அப்ப்ப்பா...இது என்ன ப்ப்பா...' என்று  கேட்கும் ஒவ்வொரு நூறுதடவையும் முதல் முறை சொல்வது போலவே குழந்தைக்கு பதில் அளிக்கும் தந்தை, பருவ வயதில், சற்று தலை வலிப்பது போல இருக்கிறது என்று சொல்ல, உடனேயே கஷாயம் வைத்துக் கொடுக்கும் தாய், எவ்வளவு சண்டைப் போட்டாலும் கண்ணீர் விட்டுக்கொண்டே கட்டித்தழுவும் தங்கை, இப்படி பருவ வயது வந்து சேரும் வரை பாசத்தின் பிணைப்பிலேயே வளர்ந்து வந்த நாம்,  நமது ஒவ்வொரு பிறந்தநாளிலும் நினைக்க வேண்டியது, நமது பிறந்த நாளை மட்டும் அல்ல, நமது பெற்றோர் வயதில் முதிர்ந்துக்கொண்டே வருகிறார்கள் என்பதனையும் தான்.

மழலையாய், குழந்தையாய் இருந்தபோது எவ்வளவு பொறுமையுடன் தந்தை பதில் அளித்தாரோ, அதற்க்கு மேல் பொறுமையுடம் அவர்களின் நிகழ் காலத்திலும், ஒரு சிறு தலை வலிக்கு துடித்த தாயின் நிகழ் காலத்தில் அவருடைய உடல் நலத்தையும் பேணுவது மிக மிக்கியமான ஒன்றாகும்.

நமக்கு எது நடந்தாலும் பாசம் காட்ட நமது பெற்றோர் இருக்கிறார், ஆனால் நம் பெற்றோருக்கு எந்தக்கவலையானாலும் அதை பகிர்ந்துக்கொள்ள அவர்களுடைய பெற்றோர் இல்லை, நாம் தான் அந்த இடத்தில் இருக்கிறோம். இந்த சிறு விஷயம் நம்மில் பலர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரு தாய், தந்தை எதிர்பார்ப்பு இதுதான்.

சிறிது நேரம் தொலைக்காட்சி, கைபேசி/தொலைபேசி அனைத்தையும் ஒதுக்கிவிட்டு ஆறுதலோடு மனம் விட்டு பேசினால், அதனால் அவர்களடையும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்கள் ஊருக்கு செல்லும் சில நாட்கள், நண்பர்களோடும், பொழுதுபோக்கிலுமே கழிந்து பின் வீட்டாருடன் பேச நேரமில்லாமல் திரும்பக் கிளம்ப வேண்டிய சூழல் எப்பொழுதும் நடக்கிற ஒன்றாகிவிட்டது!

ஒவ்வொரு நாளும் நம்மை தவமாய் தாமிருந்து' பெற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய கடமைகளுள் இதுவும் ஒன்றாகும் என்பதை மறந்துவிடக் கூடாது!

நன்றி
அமர்க்களம்-கருத்துக்களம் - ஓசூர் பார்கவ்

மெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி!

நம்ம தமிழ்நாட்டு சமையல் கட்டுல வெங்காயம் இல்லாம ஒரு வேலையும் நடக்காது. அந்த அளவுக்கு நம்ம உணவுல வெங்காயம் ஐக்கியமாகிப் போன ஒன்னு வெங்காயத்துக்கு இருக்கிற மருத்துவ குணமே தனிதான். வெங்காய சாம்பார், வெங்காய வடகம், வெங்காயச் சட்னி, வெங்காயப் பச்சடி என வெங்காய உணவுகள் பட்டியல் ரொம்ப நீளமானது.

சில வினாடிகள் நேரத்தில் தயார் செய்யப்படும் வெங்காயப் பச்சடிக்கு உள்ள சிறப்பே சிறப்புதான்.

வெங்காயத்தைக் குறுக குறுக அறிஞ்சு, அதில் மோர் விட்டுக் கலந்து கொஞ்சம் உப்பு, மிளகு சீரகம் போட்டு தாளிச்சிட்டா வெங்காயப் பச்சடி தயார். பகல் உணவில் இதை ஒரு அங்கமா எடுத்துக்கிட்டு சாப்பிடலாம்.

பொதுவாக வெங்காயம் நச்சுக்கிருமிக் கொல்லியாக உடம்பை மெலிதாக்க குரலை இனிமையாக்கி, விஷக்கடி, குழிப்புண்களைக் கட்டுப்படுத்த பித்தம் தணிய, மூளை சுறுசுறுப்பாக, கால் கை வலிப்பு நோய் நீங்க, கொழுப்புச் சத்தை கரைக்க, வயிற்றுக் கட்டிகளை நீக்க எனப் பல வகையிலும் பயன்படும். இதன் மகத்துவத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அண்மையில் கிங்ஜார்ஜீ மருத்துவ ஆய்வுக் கழகத்தில் ஆராய்ச்சி செய்தபோது பக்கவாதம் எனப்படும் மூளை, இரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு பச்சை வெங்காயம் முழு பலன் தர்றதாக் கண்டுபிடிச்சு சொல்லியிருக்காங்க.

அதுமட்டுமல்ல, புகை, பிடிப்பதால் ஏற்படும் நிகோடின் என்னும் நஞ்சினை முறித்து நுரையீரலுக்கும் இதயத்திற்கும் வலிமையை தருது. இன்னொரு உண்மை ரோமானிய நாட்டில் இடைமெலிந்திருக்க பெண்கள் வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்களாம். நீரோ மன்னன் குரல் இனிமைக்காக வெங்காயத்தைத் தினமும் சாப்பிட்டானாம்.

பொதுவாக வெங்காயத்தை எல்லோரும் பயன்படுத்தலாம். தீவிர இரத்த சோகை இருப்பவர்கள் மட்டும் அதிகளவு சாப்பிடுவதை தவிர்க்கணும். 40 வயதுக்கு மேலே ஆனவர்கள். கண்டிப்பா வாரம் இரண்டு முறையாவது வெங்காயத்தை உணவுல சேர்த்துக்கணும்.

Wednesday, June 26, 2013

உலகின் நீளமான நதிகள் 10

<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/2fxi65bWS14?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>

வாகனம் ஓட்டும்பொழுது கவனத்தில் கொள்ளவேண்டியவை

வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.


நீண்ட தூரப் பயணங்களுக்கு முன்னர் வாகனத்தின் பிரேக், டயர்கள் போன்ற வற்றை சரி பார்த்துக்கொள்ள வேண்டு ம்.

பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போதும், வாகனங்களை முந்தும் போ தும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

டயர்களில் சரியான அளவே காற்று இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வாகனத்தில் கூடுதல் பாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண் டும்.

காரில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட்டுகளை அணிய வேண் டும்.

இரவு நேரப் பயணத்தின்போது பெரும்பா லான விபத்துகளுக்குக் காரணமாக இருப்பது கண்களைக் கூசவைக்கும் ஹெட் லைட் டுகள். அதனால் பரிந்துரை க்கப்பட்ட அளவே வெளிச்சம் தரும் ஹெட்லைட்டுகளைப் பயன்படுத்துவது அவசியம். எதிரே வாகனங்கள் வரும் போது ஹெட்லைட் வெளிச்சத்தை டிம்-டிப் செய்ய வேண்டும்.

வாகனத்தைச் சரியான முறையில் பராமரித்தாலே பாதி விபத்துக ளைத் தவிர்க்க முடியும்.


மிதமான வேகத்தில் பயணிப்பது விபத்தைப் பெருமளவு தவிர்க்கும்.

குடிபோதையில் வாகனத்தை ஓட்டவே கூடாது.

அசதியாக வோ , சோர்வாகவோ இரு ந்தால் வாகனத்தைச் சாலை யோரமாக நிறுத்தி ஓய்வெடுத்த பிற கே வண்டியை எடுக்க வேண்டும்.


மன உளைச்சல், அதீதமான கோபம் ஆகியவற்றோடு வாகனத்தை ஓட்டக் கூடாது.

ATM பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை

எளிமையான வங்கிச் சேவைக்காக இன்று பல வசதிகள் வந்துவிட்டன. அதில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது ஏடிஎம் என்ற தானியங்கி பண வழங்கி வசதியாகும்.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவரிடம் ஏடிஎம் கார்டு இல்லையென்றால் அவரை வேற்று கிரக வாசியைப் பார்ப்பது போல மேலும் கீழுமாக பார்க்கும் காலமிது.

உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எங்கும், எந்த நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற இந்த ஏடிஎம் வசதி பிக்பாக்கெட், வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களிலிருந்து ஓரளவிற்கு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், அதே நேரத்தில் இவ்வசதி சமீப நாட்களில் பல மோசடிச் சம்பவங்களால் நாளிதழ் செய்திகளில் தொடர்ந்து இடம் பிடிப்பதாக மாறிவருவது கவலையளிக்கக் கூடிய விஷயமாகும்.

ஏடிஎம்-மில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி ஏமாற்றினார், போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளை என்பதோடல்லாமல் ஏடிஎம் எந்திரத்தை கடத்திச் சென்றனர் என்ற செய்தி கூட பத்திரிகைகளில் வந்ததை நீங்கள் படித்திருக்கக்கூடும்.

கண்காணிப்புக் கேமராக்கள், பாதுகாவலர்கள் இருந்தாலும் இத்தகைய திருட்டுக்கள் நடைபெறுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதற்கு வங்கி மட்டுமே காரணமல்ல, நம்முடைய கவனக் குறைவும்தான். ஏடிஎம் அட்டைகளை வைத்திருப்போர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில நடத்தை விதிமுறைகளை காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவும், ரிசர்வ் வங்கியும் பட்டியலிட்டுள்ளன. அவற்றைப் படித்து அதன்படி நடந்து கொண்டால் நம்முடைய இழப்பை தவிர்க்க முடியும்.

ஏடிஎம் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை:

உங்கள் ஏடிஎம் கார்டை பிறரிடம் கொடுத்துப் பணம் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

பின் எண்ணை காகிதத்திலோ, ஏடிஎம் அட்டையிலோ, பாஸ் புத்தகத்திலோ, பர்சிலோ அல்லது வேறு எங்குமோ எழுதி வைக்காதீர்கள். மறந்து விடுவோம் என்றெண்ணினால் உங்கள் வீட்டில் உள்ள நோட்டிலோ, காகிதத்திலோ எழுதிப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.

ஏடிஎம் கார்டை டெபிட் கார்டாக உபயோகித்து கடைகளில் பொருள் வாங்கும்போது கார்டை உங்கள் கண் முன்னரே எந்திரத்தில் செலுத்த அனுமதியுங்கள்.

கடவுச் சொல்லை நீங்களே நேரடியாக எந்திரத்தில் பதிவு செய்யுங்கள்.

எக்காரணம் கொண்டும் ஏடிஎம் அட்டையை விற்பனையாளர் எடுத்துச் செல்வதற்கோ, கடவுச் சொல்லை கேட்டாலோ கொடுக்காதீர்.

மேலும், நம்பகமான கடைகளிலேயே இவ்வட்டையைப் பயன்படுத்தவும். பொருட்காட்சி மற்றும் விழாக்கால உடனடிக் கடைகளிலோ, அறிமுகமில்லாத கடைகளிலோ பயன்படுத்தாதீர்.

ஏடிஎம் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுங்கள். அதே போல உங்கள் பிறந்த ஆண்டு, வாகன எண், தொலைபேசி எண் என்பது போல உங்களுடன் தொடர்புடைய எந்த எண்ணையும் பயன்படுத்தி பின் எண்ணை உருவாக்காதீர். உங்களுக்கு நினைவில் நிற்கக்கூடிய வேறொரு எண்ணையே பயன்படுத்தவும்.

வெளி நபர்களிடம் பின் எண்ணை சொல்லவேண்டி நேர்ந்தால் உடனடியாக அதனை மாற்றிவிடவும்.

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது அது குறித்த விபரத்தை குறுஞ்செய்தியாக கைபேசிக்கு அனுப்பும் சேவை பெரும்பாலான வங்கிகளில் உள்ளது. இவ்வசதியை நீங்கள் பயன்படுத்தாவிடில் உடனே பதிவு செய்து செயல்பாட்டில் வைக்கவும்.

ஏடிஎம் கார்டு தொலைந்து போனால் உடனே உங்கள் வங்கிக்கு தகவல் தெரிவிக்கவும்.
அதனால் உங்கள் அட்டையை பிறர் பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சிப்பதைத் தடுக்கலாம்.

எனவே வங்கி உதவி எண்ணை எப்போதும் நினைவில் வைக்கவும் அல்லது பத்திரமாக எழுதி வைத்துக்கொள்ளவும். உதவி எண் ஏடிஎம் அட்டை, வங்கி பாஸ் புக் மற்றும் ஏடிஎம் மையங்களில் அச்சிடப்பட்டிருக்கும்.

பயோ மெட்ரிக் என்ற கைரேகை அல்லது கண் ரேகையைக் கொண்டு ஏடிஎம்-மில் பணம் எடுக்க அனுமதிக்கும் வசதியை ஏற்படுத்துவது பரிசீலனையில் உள்ளது. இத்தகைய பாதுகாப்பு வசதி வருவது நல்லது என்றாலும், சில சமயங்களில் நாம் சென்று பணம் எடுக்க முடியாத சூழலில் நம் குடும்ப உறுப்பினரை அனுப்பி பணம் எடுத்துவரச் சொல்வோம். அத்தகைய வாய்ப்பு பயோமெட்ரிக் முறையால் இழக்க நேரிடுவதை தவிர்க்க முடியாது.

நன்றி nathikarai.in

வங்கி வாடிக்கையாளர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு கட்டணங்கள்

பல வாடிக்கையாளர்கள், வங்கிகளின் பொதுக் கட்டணங்களான ஆண்டு பராமரிப்புத் தொகை, மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் தவிர, அவ்வங்கிகள், அவ்வப்போது விதிக்கும் பல வகையான இடை நிகழ்வுக் கட்டணங்களைப் பற்றி பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.


வங்கிகள், பல வகையான சேவைகளுக்கு விதிக்கும் கட்டணங்களை, வங்கி போர்ட்டல் மற்றும் கணக்கு ஆரம்பிப்பதற்காக நிரப்பப்படும் படிவம் ஆகியவற்றில் காணலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படியே, வங்கிகள் தங்கள் கட்டணங்களை நிர்ணயித்து, வெளியிடுகின்றன. சில சமயங்களில், அனைத்து வங்கிகளும், கிட்டத்தட்ட ஒரே அளவு கட்டணம் விதிப்பது போல் தோன்றுவதால் வாடிக்கையாளர்கள் இதனை அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. ஆனால், பொதுவாக பெரிய அளவில் வெளியில் தெரிய வராத இக்கட்டணங்களை, ஒப்பிட்டுப் பார்த்து, அலசி ஆராய்ந்தால், இவற்றிடையே காணப்படும் வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு கட்டணங்கள் பின் வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.

1. வங்கிக் கணக்கில் உள்ள குறைந்த பட்ச இருப்புத்தொகை (எம்ஏபி) தொடர்பான கட்டணங்கள்:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தவிர, மற்ற வங்கிகள் பல, வாடிக்கையாளரை, குறைந்த பட்ச இருப்புத்தொகையாக, சுமார் 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வைத்திருக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கின்றன. இக்குறிப்பிட்ட குறைந்த பட்ச இருப்புத்தொகை இல்லையெனில், வாடிக்கையாளர் அபராதமாக ஒரு குறிப்பிட்ட நான்-மெயின்டனன்ஸ் தொகையை செலுத்த வேண்டும். இந்த அபராதத் தொகை, ஹெடிஎஃப்சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளில் தலா ரூபாய் 250 - ஆகவும், ரூபாய் 350 - ஆகவும், உள்ளது.

2. வங்கிக் கணக்கை மூடுவதற்கான கட்டணங்கள்:

வாடிக்கையாளர், தன் வங்கிக் கணக்கை குறிப்பிட்ட ஆபரேஷன் காலத்திற்கு முன்னரே மூட விரும்பினால், அவர் 150 முதல் 300 ரூபாய் வரை, அதற்காக கட்டணம் செலுத்த வேண்டும். ஐசிஐசிஐ வங்கியில், வங்கிக் கணக்கை, ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் மூடினால், 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

3. வங்கிக் கணக்கை மாற்றுவது தொடர்பான கட்டணங்கள்:


வங்கிக் கணக்கை ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு மாற்ற ஆகும் கட்டணம், ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை ஆகும். எஸ்பிஐ, தபால் செலவுகளையும் சேர்த்து 102 ரூபாயை, கட்டணமாக வசூலிக்கிறது. எனினும், சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட ஆபரேஷன் காலத்திற்குப் பின், கட்டணம் ஏதும் வாங்காமல் வங்கிக் கணக்கை கிளை விட்டு கிளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கின்றன.

4. பாஸ்புக் தொடர்பான கட்டணங்கள்:


பொதுவாக வங்கிகள் பாஸ்புக் வழங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. ஆனால், வேறு நகரத்திலோ அல்லது ஒரே நகரிலுள்ள வேறொரு கிளையிலோ, பாஸ்புக்கை புதுப்பிக்கும் பட்சத்தில், அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, இது போன்ற ஆபரேஷன்களுக்கு, எஸ்பிஐ-ல் 10 ரூபாய் கட்டணம் வாங்கப்படுகிறது.

5. செக்புக் தொடர்பான கட்டணங்கள்:

தற்போது, பெரும்பாலான வங்கிகள் சிடிஎஸ் -க்கு உடன்பட்டே காசோலைகள் (செக் புக்குகள்) வழங்குகின்றன. தற்சமயம், சிடிஎஸ் -சுடன், எவ்வித உடன்பாடுமில்லாத பழைய செக் புக்குகளை மாற்றிக் கொடுப்பதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. எனினும், காசோலை வழங்கும் சமயம், அவ்வங்கியின் விதியைப் பொறுத்து, ஒவ்வொரு காசோலைக்கும் 2 ரூபாய் வீதம் கட்டணம் விதிக்கப்படுகிறது.


அவ்வாறு வழங்கப்படும் செக், பற்றாக்குறையான இருப்பு நிதியினால் மறுதலிக்கப்படும் பட்சத்தில், சுமார் 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஹெடிஎஃப்சி வங்கி, ஒரு காலாண்டில் முதன் முறையாக ஒரு காசோலை மறுதலிக்கப்பட்டால், 350 ரூபாயும், அதே காலாண்டில் மறுதலிக்கப்படும் ஒவ்வொரு காசோலைக்கும் சுமார் 750 ரூபாய் வீதமும் அபராதமாக விதிக்கிறது.

6. டெபிட் கார்டுகள் தொடர்பான கட்டணங்கள்:


வங்கிகள், தங்கள் டெபிட் கார்டு சேவைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டுக் கட்டணமாக விதிக்கின்றன. இத்தொகை, ரூபாய் 50-லிருந்து 200 ரூபாய் வரை வேறுபடலாம். குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல், பிற வங்கிகளின் ஏடிம்-களில் பணத்தை எடுத்தால், அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஐடிபிஐ வங்கி, நிதி ட்ரான்ஸாக்ஷன் அல்லாத பிற சேவைகளான இருப்பு நிதி விசாரணை ஆகியவற்றுக்கு 8 ரூபாய் வசூலிக்கிறது. ஒரு மாதத்தில் ஐந்து தடவைக்கு மேல் பிறவங்கிகளில் செய்யப்படும் நிதி ட்ரான்ஸாக்ஷன்களுக்கு, இவ்வங்கி 20 ரூபாய் வசூலிக்கிறது.

7. இன்டெர்நெட் பாங்க்கிங் தொடர்பான கட்டணங்கள்:

எல்க்ட்ரானிக் பில் பேமெண்டுகள், நிதி பரிமாற்றம், ஆகியவற்றுக்கு கட்டணங்கள் உள்ளன. உதாரணமாக இரயில்வே இ-டிக்கெட் பேமண்டுகளின் போது, ஒரு பதிவுக்கு, ரூபாய் 10 முதல் 20 வரை வசூலிக்கப்படுகிறது.

8. வங்கிக் கிளைகளில் செய்யப்படும் நிதி ட்ரன்ஸாக்ஷன்:


ஹெடிஎஃப்சி, ஐசிஐசிஐ, யெஸ் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஏடிஎம்-கள், இன்டெர்நெட் பாங்க்கிங், கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கும்படி வற்புறுத்துவதன் மூலம் தங்கள் கிளைகளின் நிர்வாகச் செலவுகளை குறைக்க எத்தனிக்கின்றனர். அதனால், ஒரு குறிப்பிட்ட அளவு மற்றும் குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல் கிளைகளில் செய்யப்படும் ட்ரான்ஸாக்ஷன்களுக்கு, வங்கிகள், கட்டணங்கள் விதிக்கின்றன. கட்டணமில்லாத ட்ரான்ஸாக்ஷன் வரையறைக்குப் பின் செய்யப்படும் ஒவ்வொறு ட்ரான்ஸாக்ஷனுக்கும், ஹெடிஎஃப்சி வங்கி 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.


கிட்டத்தட்ட, அனைத்து வங்கிகளும் இவ்வகைக் கட்டணங்களை தங்கள் வெப்சைட்டுகளில் பட்டியலிட்டுள்ளனர். அதனால் யார் வேண்டுமானாலும் இவ்வெப்சைட்டுகளுக்குச் சென்று எளிதாக இக்கட்டணங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இவை தவிர, அவ்வப்போது, மேலும் சில கட்டணங்கள், சில குறிப்பிட்ட சேவைகளுக்காக விதிக்கப்படுகின்றன.


முடிவாக சில வாடிக்கையாளர்கள், இது போன்ற திடீர் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால், தங்கள் வங்கிகள் மேல் கோபம் கொள்கின்றனர். இது போன்ற திடீர் மற்றும் எதிர்பாராத திகைப்புகளைத் தவிர்க்க வேண்டுமெனில், வாடிக்கையாளர்கள், ஒரு வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றி நன்கு அலசி ஆராய்ந்த பின்னரே அவர்களுக்கான வங்கியை தேர்வு செய்ய வேண்டும். வங்கிகளை, அவற்றின் சேவைகளின் தரம், கூடுதல் நிதி சேவைகள் கிடைக்கும் வாய்ப்பு, கட்டுபடி ஆகக் கூடிய அளவிலான சேவை விலைகள் ஆகிய பலவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். ஆர்பிஐ-யின் அறிவுறுத்தலின் படி, வங்கிகள் இயங்கும் முறை, அனைவரும் எளிதாக அறிந்து கொள்ளும் வண்ணம், வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அதனால், வங்கிகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்கு புரிந்துகொண்டு, தேவையற்ற கட்டணங்களைக் குறைப்பது என்பது, வாடிக்கையாளர்களின் கைகளிலேயே உள்ளது.

நன்றி யூஜின்

நோய் விசாரிக்கச் செல்லும் பொழுது –சில ஆலோசனைகள்

• நோய் விசாரிக்கச் செல்வதற்கு இஸ்லாம் அதிக அவதானத்தையும் ஊக்கத்தையும் வழங்குகின்றது. நபி(ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரை காலையில் உடல் நலம் விசாரித்தால், அன்று மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் துஆச் செய்வார்கள். அவரை மாலையில் உடல் நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள்.
அறிவிப்பாளர் : அலி(ரலி) ஆதாரம் : திர்மிதி

• நோய் விசாரிக்கச் செல்லும் போது உண்மையாகவே அந்த நோயாளி நலம் பெற வேண்டும் என்ற தூய்மையான உள்ளத்தைக் கொண்டு செல்லுங்கள்.

• நீங்கள் நலம் விசாரிப்பவர், நோயாளிகளாக இருக்கலாம் அல்லது நோயிலிருந்து அண்மையில் குணமடைந்தவராக இருக்கலாம். 5 இலிருந்து 15 நிமிடங்களுக்குள் அங்கிருந்து வெளியேறி விடுங்கள்.அதிக நேரம் தாமதிப்பது அவருக்கு அல்லது குடும்பத்தினருக்கு அசெளகரியமாக இருக்கலாம்,புரிந்து நடந்து கொள்ளுங்கள். நோயாளி வேண்டிக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு அதிக நெருங்கியவராக இருக்கும் போதில் நீங்கள் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வதில் தப்பில்லை.


• நோயாளிகளிடம் அல்லது அவர்களது குடும்பத்தினரிடம் இதே போன்று நோய்களுக்கு ஆளானவர்களைப் பற்றியோ அல்லது அண்மையில் மரணித்தவர்களைப் பற்றியோ பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.நம்மில் பலர் செய்யும் பெருந்தவறு இது.

• நோயாளியின் நிலமையை கேட்டு அறிந்து கொண்டு செல்லுங்கள்.அவரோடு பேசிக் கொண்டிருப்பது ஏற்றதா,என்ன வகையான சாப்பாட்டு வகைகளை அவருக்கு எடுத்துச் செல்லலாம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


• நோயாளியோடு அளவளாவும் போது அவருக்கு விருப்பமான விடயங்களைப் பேசுங்கள்.அவரது தன்னம்பிக்கையை, ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் கதைப்பது நோயிலிருந்து விடுபடுவதற்கான ஊக்குவிப்பை வழங்கும்.

• நீங்கள் மருத்துவராக மாறி நோயாளியைக் குழப்ப வேண்டாம்.சிலர் ஹோமியோபதி மருந்து எடுங்கள்,நாட்டு மருந்து எடுத்தால் நோய் பறந்தே போய் விடும், இந்த மருத்துவ நிபுணரை விட அந்த நிபுணர் கைராசிக்காரர் என்றெல்லாம் தலைக்கு வருவதையெல்லாம் சொல்லி நோயாளியையும் வீட்டவர்களையும் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்.இன்னும் சிலர் கத்தரிக்காய் ஆகாது இல்லா விட்டால் நன்றாக மரவள்ளி சாப்பிட்டால் புற்று நோய் குணமாகி விடும் என்றெல்லாம் கேட்டவை,வாசித்தவை எல்லாவற்றையும் எடுத்து விடுவார்கள்.நோயுற்றவர்களின் வீட்டாருக்கும் அறிவு உண்டு அவர்கள் தேவையானவற்றைச் செய்திருப்பார்கள்.உணருங்கள்.


• நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்லும் நீங்கள் அவரது நோய் அறிகுறிகளை உங்களுக்கிருக்கும் சில அறிகுறிகளுடன் ஒப்பிட்டு பார்த்து நீங்கள் நோயாளியாக மாறி விட வேண்டாம்.

• நோய் விசாரிக்கும் போது முஸ்லிம்/முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற பாகுபாடு காட்ட வேண்டாம்.முஹம்மத் (ஸல்) அவர்கள் அந்நிய மதத்தவர்களை நலம் விசாரிக்கச் சென்ற வரலாறுகள் ஏராளம்.


• நோயாளியை ஆறுதல் படுத்துவதாக நினைத்துக் கொண்டு வேதனைப் படுத்த வேண்டாம்.குறிப்பாக அவர்களது பொறுப்புக்களை ஞாபகமூட்டுவது அவர்களது இயலாமையை அதிகரிக்கும்.

• நோயாளி வீட்டுத்தகவல்களை காவிக்கொண்டு மற்றவர்களிடம் பரப்பித்திரியாதீர்கள்.சிலவேளை நோயாளி தன் நோய் பற்றி மற்றவர்கள் அறிவதை விரும்பாமல் இருக்கலாம்.

• நோயாளி நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்பதோடு விரைவாகக் குணம் பெற வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்.

வரலாற்றில் இன்று

ஜூன் 26

363: ரோம சக்கவர்த்தி ஜூலியன் கொல்லப்பட்டார்.
1870: அமெரிக்காவில் நத்தார் தினம் சமஷ்டி விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
 
1917:  முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக பிரான்ஸ், பிரிட்டனுடன் இணைந்து போரிடுவதற்காக முதலாவது அமெரிக்க படை பிரான்ஸை வந்தடைந்தது.
 
1945: ஐ.நா. சாசனம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கையெழுத்திடப்பட்டது.
 
1948: மேற்கு பேர்லினுக்கான தரைவிநியோகப் பாதையை சோவியத் யூனியன் துண்டித்ததால் விமானம் மூலமான விநியோகங்களை மேற்கு நாடுகள் ஆரம்பித்தன.
 
1960: பிரான்ஸிடமிருந்து மடகஸ்கார் சுதந்திரம்பெற்றது.
 
1995: கட்டார் அமீரான, கலீபா பின் ஹமட் அல் தானியை அவரின் மகன் ஹமட் பின் கலீபா அல் தானி இரத்தமில்லா புரட்சிமூலம் நீக்கிவிட்டு தான் அமீரானார்.