Digital Time and Date

Welcome Note

Friday, February 24, 2012

அழகுபடுத்தப்பட்ட, வரையப்பட்ட, கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்ட அல்லது படங்கள் கொண்ட கவனத்தைத் திசை திருப்பக் கூடிய தொழுகை விரிப்புகளில் தொழக் கூடாது









அழகுபடுத்தப்பட்ட, வரையப்பட்ட, கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்ட அல்லது படங்கள் கொண்ட கவனத்தைத் திசை திருப்பக் கூடிய தொழுகை விரிப்புகளில் தொழக் கூடாது

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தொழுகைக்காக நின்ற பொழுது கோடுகள் போட்ட சட்டையை அணிந்திருந்தார்கள், அதன் வேலைப்பாடுகளைப் பார்த்தார்கள். தொழுகையை நிறைவு செய்த பின் அவர்கள் கூறினார்கள், ''இதனை அபூ ஜஹ்ம் இப்னு ஹுதைபா அவர்களிடத்தில் கொடுத்து விடுங்கள், எனக்கு கட்டங்கள் அல்லது அழகுபடுத்தப்படாத ஆடையான அன்பஜானி யைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள், ஏனென்றால் நான் தொழும் பொழுது அது எனது கவனத்தைத் திசை திருப்பி விட்டது''. இன்னுமொரு அறிவிப்பின்படி, ''(இதில் வரையப்பட்டிருக்கும்) கோடுகள் எனது கவனத்தைத் திசை திருப்பி விட்டன'', என்றார்கள். இன்னுமொரு அறிவிப்பின்படி, ''(என்னிடம்) கோடுகள் போட்ட சட்டை இருந்தது, தொழுகையில் அதனை நான் அணியும் பொழுது அது எனது கவனத்தைத் திசை திருப்பி விடுகின்றது.'' என்று கூறியிருக்கின்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், 556, பகுதி 3-391).

படங்கள் வரையப்பட்டிருக்கும் துணிகளிலும் தொழாமல் இருப்பது சிறந்தது, இன்னும் உருவப்படங்கள் வரையப்பட்டிருக்கும் விரிப்புகளை, இன்னும் அதனைப் போன்று இன்று விற்பனைக்குக் கிடைக்கும் விரிப்புகளைத் தொழுகைக்குப் பயன்படுத்தும் பொழுது மிகக் கவனமாக இருக்க வேண்டும், அவ்வாறான விரிப்புகளில் தொழவே கூடாது.

No comments:

Post a Comment