Digital Time and Date

Welcome Note

Wednesday, April 4, 2012

அற்புதம் ஆனால் உண்மை

ASSALAMU ALAIKUM WA RAHMATHULLAH.
=========================
  ======================
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்[ரலி]அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி[ஸல்]அவர்கள் ஹுதைபிய்யா[என்ற இடத்தில் நாங்கள் தங்கி இருந்த போது அந்த]நாளில் தனக்கு முன்னாள் தண்ணீர் பாத்திரத்தை வைத்துக்கொண்டு உளூ செய்ய அமர்ந்தார்கள்,மக்கள் நபிக்கு முன் ஒன்று கூடி நின்றனர் நபி[ஸல்]அவர்கள் மக்களை நோக்கி ஏன் இப்படி இங...்கு ஒன்று கூடி நிற்கிறீர்கள்?என்று வினவ,யா ரசூலஅல்லாஹ்!தங்களிடம் உள்ள இந்த தண்ணீரைத்தவிர நாங்கள் குடிப்பதற்கோ உளூ செய்வதற்கோ கொஞ்சம் கூட வேறு தண்ணீர் இல்லை என கூறினர்.

இதனைக்கேட்ட நபியவர்கள் தமது கையை அந்த பாத்திரத்துக்குள் விட்டார்கள் [என்ன ஆச்சரியம்?]அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து ஊற்றிலிருந்து தண்ணீர் வருவதை போல தண்ணீர் பீறிட்டு வெளியானது,

அதன் மூலம் நாங்கள் குளித்தோம் குடித்தோம் எங்கள் வாகனங்களை குளிப்பாட்டினோம் எங்களின் பாத்திரங்களை நிரப்பிக்கொண்டோம்,

இதை அறிவித்த நபித்தோழரிடம் அப்போது எத்தனை பேர் இருந்தீர்கள்?என்று கேட்கப்பட்டது.

நாங்கள் [ஒரு லட்சம்]1,00,000 பேர் இருந்தாலும் அது போதுமாக்கி இருக்கும் ஆனால் நாங்கள் அந்த நேரம்[ஆயிரத்து ஐநூறு] 1500 பேர் இருந்தோம்.என்று ஜாபிர்[ரலி]அவர்கள் கூறினார்கள்.-ஆதாரம்:புகாரி,முஸ்லிம்,பைஹகி,தாரமி,நஸாயி.

ஸுப்ஹானல்லாஹ்,நபியின் பரக்கத்துக்கு நிகர் ஏது?
See More


No comments:

Post a Comment