Digital Time and Date

Welcome Note

Thursday, June 7, 2012

அது உமர்(ரலி) அவர்களின் கிளபாத் நேரம்!!!

 
அப்துல்லாஹ் பின் ஹுதைபா (ரலி) அவர்களின் ஈமான்... இது வெறும் கதை அல்ல தியாகம்!!! நம்மில் எத்துனை பேருக்கு தெரியும்??? நம்மவர்களுக்கு மிகுந்த படிபினைக்குரிய வரலாறு....

அது உமர்(ரலி) அவர்களின் கிளபாத் நேரம்!!!
முஸ்லிம்கள் ரோமப் பேரரசுக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பின் பொது சில முஸ்லிம்கள் கைதிகளாக ரோம் நாட்டிற்கு எடுத்து செல்லப் பட்டனர்... அங்கு அரசபையில் அனைவரையும் கொண்டு நிறுத்த பட்டனர்!!!

வந்திருப்பவர்களில் சிலர் சஹாபிகள் என்று அறிந்த ரோமானிய அரசர் சஹாபி(ரலி) அவர்களின் துடிப்பும் தைரியமும் இஸ்லாத்திற்காக மேற்கொள்ளும் முனைப்பையும் அறிந்தவர்... அவர் தனது சிப்பாயிடம் ஒரு சஹாபியை அழைத்து வர ஆணை இட்டார்...
சென்ற அந்த சிப்பாய் ஒரு சஹாபியை அழைத்து வந்தார்... அவர் தான் அப்துல்லாஹ் பின் ஹுதைபா (ரலி).

அவர் வந்தவுடன் அவ்வரசர் மிகுந்த யோசனைகுள்ளனார் எப்படியாவது இவரை நம்மவர்களில் ஒருவனாக்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் சொன்னார்: " நான் எனது மகளை உனக்கு மணமுடித்து வைக்க வைக்கிறேன்; எனது ஆட்சியில் பாதியை உனக்கு தருகிறேன் நீ ஒரு கிறிஸ்தவனாக மாற வேண்டும் என்றார்"

உடனே அந்த சஹாபி: முடியாது என்று மறுத்தார்!!! நான் என் ஈமானை இழக்க மாட்டேன் என்று உரக்க சொன்னார்.

அங்கே அமர்ந்திருந்தோர் முன்னிலையில் இதை சற்றும் எதிர்பாராத அரசருக்கு அவமரியாதை ஆகிவிட்டது.
அரசருக்கு கோபம் தலைக்கு ஏறியது... அவர் உடனே தனது சிப்பாய்களுக்கு ஆணை பிறபித்தார்.. "ஒரு பெரிய குவளையில்(சட்டியில்) எண்ணெய் நிரப்பி தீயினால் ஏறிய விடுங்கள் அவரை உயிரோடு எரிப்பதற்கு எதுவரை அவர் நான் கூறியதை அவர் ஏற்காத வரை" என்றார்...
உடனே அரசர் ஒரு முஸ்லிமை கொண்டு வந்து அந்த குவளைக்குள் அவனை போடுமாறு கூறினார்.. அந்த முஸ்லிமின் உடல் கண்ணிமைக்கும் நேரத்தில் எலும்புகள் அனைத்தும் வெளியே தெரிந்து நெருப்பில் பொசுங்கிவிட்டன!!! இதை பார்த்து விட்டு அவ்வரசர் இப்பொழுது என்ன சொல்கிறாய் என வினவினார்..??

அதற்கும் அந்த சஹாபி ஈமான் இழக்காமல் சாதித்தார்.....!!!

உடனே அவ்வரசர்: "அவனை அதில் தூக்கி எறியுங்கள் என ஆணை பிறபித்தார்"

குவளையின் பக்கம் நெருங்கிய அப்துல்லாஹ் பின் ஹுதைபா (ரலி) அழ ஆரம்பித்தார்.. உடனே அரசர் அவனை இங்கு கொண்டு வாருங்கள் அவன் அழுகிறான்; அவன் நம்மவர்களாக மாறுகிறான் என்றார்!! அந்த சஹாபி வந்ததும் என்ன நான் சொன்னதை ஏற்றுகொள்கிராய மரணபயம் உன்னை மாற்றிவிட்டதா??

அதற்கு அந்த சஹாபி: நான் மரணத்திற்கு அஞ்சியோ; அல்லது எறியும் எண்ணெயை கண்டு அழுகிறேன் என்று எண்ணாதே!! நான் அழுத காரணம் என்னவென்றால் :" என்னிடம் ஒரே ஒரு உயிர் தான் இருக்கிறது, அதுவும் இப்போது போகிவிடும்" நான் என்ன எண்ணி அழுதேன் என்றால் "அல்லாஹ் எனக்கு ஒரே ஒரு உயிரை மட்டும் தான் தந்திருக்கிறான் அவன் மட்டும் எனக்கு நூறு உயிர்களை தந்திருந்தாலும் அவைகளை ஒன்றின் பின் ஒன்றாக அல்லாஹ்வின் பாதையில் எறிந்திருப்பேன்"
நான் அல்லாஹ்விற்காக நூறு முறை ஷஹீத் ஆக ஆசை படுகிறேன் ஆனால் என்னால் ஒரே ஒரு முறை மட்டும் தான் ஷஹீத் ஆக முடியும் என்று எண்ணியே அழுதேன் என்றார்..

அரசர் இதை பார்த்து திகைத்தார் ஆச்சரியபட்டார் உடனே அவர் கூறினார்: "நீ எனது தலையில் முத்தம் இட்டால் நான் உன்னையும் கைதிகளாக வந்த உங்கள் அனைவரையும் விடுவிக்கிறேன் என்றார்"!!!
உடனே அந்த சஹாபி(ரலி) இதில் இஸ்லாத்திற்கு முரணாக எதுவும் இல்லை என்று முத்தம் இட்டு வெளியேறினார்!!! பின்பு அந்த முஸ்லிம் படை மதீனாவிற்கு திரும்பியது...!!!


இவர்கள்தான் சஹாபாக்கள்!!!


படிப்பினை:
1. நாம் நம் வாழ்கையில் கிடைக்கின்ற அற்ப சுகத்திற்காக; அழிந்து போகக் கூடிய செல்வத்திற்காக நாம் நம்முடைய ஈமானை அனு தினமும் இழந்துக் கொண்டிருக்கிறோம்!!! இந்த சஹாபி இந்த உலகத்தின் ஆச பாசத்திற்கு விலை போகவில்லை.. ஈமான் எனும் கையிற்றை பற்றி பிடித்தவர்கள்!!

2 . அவர்கள் அல்லாஹுவின் மீது முறையான தவக்கல் (பாத்காவல்) வைத்திருந்தார்கள்.. அதன் விளைவாக அல்லாஹ் அவர்களை பாதுகாக்கவும் செய்தான்!!

3 . அவர்கள் அல்லாஹுவின் பாதையில் ஷஹாதத்தை விரும்பினார்கள், அல்லாஹுவிர்காகவும் இஸ்லாத்திற்காகவும் அவர்களது வழ்கையியே அற்பணித்தார்கள்!!

இவர்களின் இந்த தியாகத்தை நாம் எண்ணி பார்த்து அவர்களை போன்று நாமும் ஈமானில் உறுதி கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதும் ஆவோம்!! இன்ஷால்லாஹ்

No comments:

Post a Comment