Digital Time and Date

Welcome Note

Friday, June 8, 2012

இந்து மதத்தில் சிலை வணக்கம் இல்லை

இந்து மதத்தில் சிலை வணக்கம் இல்லை என்பதை இந்து பண்டிதர்களும் இந்து அறிஞர்களும்
ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மனிதன் வணங்கத் துவங்கும் ஆரம்ப காலகட்டங்களில்
அவனது மனதை ஒருமைப்படுத்த சிலை அவசியமாகிறது. மனித மனம் ஒருமைப்படும் பக்குவம்
வந்த பிறகு அந்த சிலை அவசியமில்லை. சரியா?

பதில்:டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்களிடம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலினை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன். படியுங்கள். பரப்புங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிய போதுமானவன் (முகநூல் வழியாக முஹம்மது மீராசாகிப்)

மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் இருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்:

மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் உள்ளவர்கள் இஸ்லாமியர்களே! மனிதன் கடவுளை
வணங்கத் துவங்கும் ஆரம்ப காலகட்டங்களில் அவனது மனதை ஒருமைப்படுத்த சிலை
அவசியமாகிறது. மனித மனம் ஒருமைப்படும் நிலை வந்த பிறகு அந்த சிலை அவசியமில்லை என்பது
சரியானது எனில், மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் உள்ளவர்கள்
இஸ்லாமியர்கள்தான். ஏனெனில் இஸ்லாமியர்களாகிய நாங்கள் அல்லாஹ்வை வணங்கும்போது,
மனதை ஒருமைப் படுத்த எங்களுக்கு சிலை எதுவும் தேவையில்லை என்பதை நான் உங்களுக்கு
இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இடி இடிப்பது ஏன்? என்று குழந்தைகள் கேட்கிறது..!

ஒரு முறை இஸ்லாமிய ஆய்வு மையத்தில், நான் ஒரு இந்து சாமியாருடன் பேசிக்
கொண்டிருந்தேன். 'இடி இடிப்பது ஏன்?'இ என்று குழந்தைகள் கேட்டால், - 'சொர்க்கத்தில்
பாட்டியம்மா மாவு இடிக்கிறார்கள்,' என்று நாங்கள் சொல்வோம் என்றார். ஏனெனில் இடி போன்ற
விஷயங்களை அறிந்து கொள்வதற்கு ஏற்ற வயது அவர்களுக்கு இல்லை என்ற காரணத்தையும்
சொன்னார். அதுபோலவே - கடவுளை வணங்கத் துவங்கும் ஆரம்ப கட்டத்தில் அவனது மனதை
ஒருமைப்படுத்த சிலை அவசியமாகிறது என்றும் சொன்னார்.

இஸ்லாமிய மார்க்கம் பொய் சொல்வதை விரும்புவதில்லை. அது பொய் என்று வெளிப்படையாகத்
தெரிந்தாலும் - பொய் சொல்வதை இஸ்லாமிய மார்க்கம் விரும்புவதில்லை. அதுபோல ஒரு தவறான
செய்தியை நான் எனது குழந்தைக்கு ஒருபோதும் சொல்லமாட்டேன். ஏனெனில் குழந்தைகள்
பள்ளிக் கூடத்திற்குச் சென்று - மின்னல் அடிக்கும்போது உருவாகும் அதீத வெப்பக் காற்றின்
அதிர்வுதான் இடியின் சப்தம் என்று அறிவார்கள் எனில், ஆசிரியர் பொய் சொல்வதாக எண்ணிக்
கொள்ளும். பின்னர் ஆசிரியர் சொன்னதுதான் உண்மை என்று அறிந்த பிறகு, தனது தந்தையை
ஒரு பொய்யராக கருதும். குழந்தைகள் தங்கள் அறிவுக்கு எட்டாத சில விஷயங்களை புரிந்து
கொள்ளமாட்டர்கள் என்று கருதுவீர்களேயானால், குழந்தைகளுக்குத் தவறான தகவல்களைத்
தருவதை விட்டுவிட்டு, குழந்தைகள் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில், எளிதான முறையில்
பதிலளிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு, உங்களது குழந்தை கேட்ட கேள்விக்கு பதில்
தெரியவில்லை எனில், உங்களுக்குத் தெரியாது என்று பதிலளிக்க கூடிய தைரியத்தை
வரவழைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இன்றைய காலத்து குழந்தைகள் நீங்கள் சொல்லும்
பதிலில் திருப்தி அடைந்து விடுவதில்லை. தெரியவில்லை என்கிற பதிலை எனது மகனிடம்
சொன்னால், 'அப்பா..! நீங்க ஏன் தெரிஞ்சிக்கக் கூடாது?.,' என்று அவன் அப்போதே திருப்பி
கேட்டு விடுகிறான். மேற்படி கேள்வி உங்களை உடனடியாக அறிந்து கொள்ள வைப்பதுடன்,
நீங்கள் அறிந்ததை உங்கள் குழந்தைக்கும் அறிய வைக்கக் கூடிய வாய்ப்பையும் உருவாக்குகிறது.

3. ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குத்தான் மனதை ஒருமைப்படுத்த சிலை தேவைப்படுகிறது -
(இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்பது முதலாம் வகுப்பிலும் அதேதான்.
இறுதி வகுப்பிலும் அதே நிலைதான்.)

ஆரம்ப நிலையில் கடவுளை வணங்க ஆரம்பிப்பவர்களுக்குத்தான் சிலை என்ற ஒன்று
தேவைப்படுகிறதேத் தவிர, அதற்கு பிந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு கடவுளை வணங்க சிலை
எல்லாம் தேவையில்லை - என்று சில பண்டிதர்கள் என்னை நம்ப வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.
இவ்வேளையில் நாம் ஒரு முக்கியமான உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். எந்த
விஷயமாக இருந்தாலும், அதன் அடிப்படையில் உறுதியாக இருந்தால்தான் - பின்வரும் காலங்களில்,
குறிப்பிட்ட அந்த விஷயத்தில் சிறந்தவராக விளங்க முடியும். இரண்டையும், இரண்டையும்
கூட்டினால் நான்கு என்பதை ஆரம்ப பாடசாலையில் கற்றுக் கொள்ளும் மாணவன், பள்ளி இறுதி
வகுப்பு சென்றாலும், அல்லது கணிதவியலில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றாலும், இரண்டையும்,
இரண்டையும் கூட்டினால் நான்கு என்கிற அடிப்படை கணிதவியலில் எந்தவித மாற்றமும்
இல்லாதவனாகத்தான் இருப்பான். இரண்டையும், இரண்டையும் கூட்டினால் ஐந்து என்றோ அல்லது
ஆறு என்றோ மாறுவதற்குரிய வாய்ப்பே இல்லை. பின்னர் அல்ஜிப்ரா, திரிகோணமெட்ரி,
லோகோரிதம் - என்று கணிதவியலின் பல பிரிவுகளை கற்றுக் கொண்டாலும், இரண்டையும்,
இரண்டையும் கூட்டினால் நான்கு என்கிற அடிப்படை கணிதவியலில் எந்தவித மாற்றமும்
இல்லாதவனாகத்தான் இருப்பான். ஆக ஆரம்பபாடசாலையிலேயே ஆசிரியரிடமிருந்து தவறாக கற்றுக்
கொள்ளும் மாணவன், எதிர்காலத்தில் எப்படி சிறந்த விற்பன்னராக விளங்க முடியும்?.
இந்து வேதங்களின் அடிப்படை கொள்கைகள் கடவுளின் தன்மையை பற்றிச் சொல்லும்பொழுது,
கடவுளுக்கு எந்தவித உருவமுமில்லை என்று சொல்கிறது. எனினும் - இது பற்றிய உண்மையை
அறிந்துள்ள இந்து அறிஞர்கள் - மக்களால் பின்பற்றப்படும் தவறான இந்த வழக்கத்தை ஏன் தடுக்க
முனைவதில்லை?.

நீங்கள் ஆரம்பபாடசாலையில் படிக்கும் உங்களது பிள்ளைக்கு இரண்டையும், இரண்டையும்
கூட்டினால் நான்கு என்று சொல்லித் தருவீர்களா?. அல்லது இரண்டையும், இரண்டையும்
கூட்டினால் ஐந்து என்றோ அல்லது ஆறு என்றோ சொல்லித் தந்துவிட்டு, பின்னர் உங்கள் பிள்ளை
பள்ளி இறுதி வகுப்பு முடித்த பிறகு இரண்டையும், இரண்டையும் கூட்டினால் ஐந்தோ அல்லது ஆறோ
அல்ல. இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்குதான் என்கிற உண்மையைச் சொல்லித்
தருவீர்களா?. இது போன்று யாரும் செய்யவே மாட்டோம். மாறாக உங்களது பிள்ளை தவறான
பதிலளித்தால் அதனைத் திருத்தி, சரியான பதிலைச் சொல்லித் தருவோம். அவ்வாறான தவறுகளை
திருத்தவில்லை என்றால், நீங்கள் உங்களது பிள்ளையின் எதிர்காலத்தை வீணடிக்கிறீர்கள்
என்றுதான் அர்த்தம்.

No comments:

Post a Comment