Digital Time and Date

Welcome Note

Sunday, July 1, 2012

அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்று உன்னிடம் யாராவது கேட்டால்.

அல்லாஹ்வை நம்புதல்:-

அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்று உன்னிடம் யாராவது கேட்டால். நீ வானத்திலுள்ள அர்ஷில் எவ்வாறு அமர்வது அவனுக்கு தகுதியானதோ அந்த விதத்தில் அமர்ந்திருக்கிறான் என்று கூற வேண்டும்

அல்லாஹ் அர்ஷில் அமைந்திருப்பான் என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்கள் சற்றாக உள்ளன. பின் வரும்
வசனங்களிலிருந்தும் ஹதீஸி ஆருந்தும் அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் உள்ளான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்

"வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களை புதையச் செய்வதில் பயமற்று இருக்கீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்'', (அல்குர்ஆன்:67:16)

''அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். "
(அல்குர்ஆன்:20:5)

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஒரு அடிமை பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கிறான்?
என்று கேட்டார்கள்

அப்பெண் அல்லாஹ் வானத்திலிருக்கிறான் என்றி கூறினாள்.

நான் யார்? எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள்.
நபி (ஸல்) அவர்கள் தனது எஜமானிடம் இவள் முஃமினான பெண்மனியாவாள்.
இவளை உரிமை விட்டுவிடு எனக் கூறினார்கள்.
(அறிவிப்பவர்; மூஆவியா பின் ஹகம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் (836)

அல்லாஹ் தூணிலும் இருக்கிறன் துரும்பிலும் என்று கூறுவது கூடாது. இவ்வாறு கூறுவது இஸ்ப்த்திற்கு மாற்றமான கொள்கையாகும். அல்லாஹ்தான் அர்ஷில்
இருப்பதாகக் கூறிய பிறகு அதற்கு மாற்றமாக நம்பிக்கை கொள்வது கூடாது

அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா?

நாம் அல்லாஹ் அர்ஷில் எவ்வாறு அமர்வது அவனுக்கு தகுதியானதோ அவ்விதத்தில் அமர்ந்திருக்கிறான் எனக்கண்டோம். ஆனால் பின்வரும் வசங்களில் அல்லாஹ் பொருமையாளர்களுடனும்
(2 53) இறையச்சமுடையவர்களுடனும் (2:194)
இறைநம்பிக்கையாளர்களுடனும் (8:19) நன்மையான காரியங்கள் செய்பவர்களுடனும் (16:127),
மேலும் 5, 12, 57, 4, ஆகிய வசனங்களில் அனைத்து மக்களுடனும் அல்லாஹ் இருப்பதாகக் கூறுகிறான்.

அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்பதின் கருத்து
நம்மை கண்கானித்துக் கொண்டிருக்கிறான். நம்முடைய
ஒவ்வொரு செயலையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
என்பதாகும் இதனை பின்வரும் வசனத்தின் மூலம் நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் ஹாரூன் அலைஹிவஸ்ஸலாம் அவர்களையும் ஃபிர்அவ்னிடம்
செற்று சத்தியத்தை கூறுமாறு அனுப்பும் போது

'' அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்'' என்றும்
அவன் கூறுகிறான். (அல்குர்ஆன்;20:46)

அதாவது இறைவன் நாம் செய்பவைகளைப் பார்ப்பதின் மூலமும் நாம் சொல்பவற்றை கேற்பதின் மூலமூம்
நம்முடன் இருக்கிறான்.

அர்ஷ்

அர்ஷ் என்பது அவனுடைய மிக பிரம்மாண்டமான
ஆசனமாகும்.

'' ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான் அர்ஷுக்கும்
அதிபதி யார்?" எனக் கேட்பீராக!
(அல்குர்ஆன்:23;86)

'' அவனது ஆசனம் வானங்களையும் பூமியையும் உள்ளடக்கும் '' (அல்குர்ஆன்;22:255)

'' அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது 8 பேர் (வானவர்கள்) சுமப்பார்கள். ''
(அல்குர்ஆன்:69:17)

அல்லாஹ்வின் தோற்றம்

இறைவன் உருவமற்றவன் எற்று கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.
அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது, அவனுடைய
தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள்.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.''
(அல்குர்ஆன்:75:22:23,)

மறுமையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு
அவர்கள் அவனைப் பற்றி எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லது வேறறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து நானே உங்கள் இறைவன் என்று கூறுவான். ( அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(ரஆ) நூல்: புஹாரீ(7439)

கஃபிர்கள் மறுமையில் இறைவனைப் பார்பதை விட்டும் திறையிடப்படுவார்கள்.

" அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.'' (அல்குர்ஆன்:83:15)

அழகிய திருநாமங்கள்

அல்லாஹ்வுக்கு அழகிய பேர்கள் உள்ளன. அவற்றின்
மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள். அவர்கள்

" அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும்
அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! உமது பிரார்த்தனையைச் சப்தமிட்டு செய்யாதீர்! மெது வாகவும் செய்யாதீர் இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக!
(அல்குர்ஆன்:17:110)

2 comments: