Digital Time and Date

Welcome Note

Tuesday, April 2, 2013

இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.


ஆச்சரியம்... அதிர்ச்சி .... ஆனால் உண்மை. மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய சாதனை இதுவாகத்தான் இருக்கு முடியும். ஸ்டெம் செல்கள் உதவியுடன் இறந்துபோனவருக்கும் இனிமேல் குழந்தை பிறந்திடும் என இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

என்னால் அப்பாவாக முடியவில்லையே என ஆண்கள் யாரும் இனிமேல் கலங்கிட தேவையில்லை, என்கிறது இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு.
விந்தணுவும், முட்டையும் இணைந்து கருவுருவாவது தான் இயற்கையின் நியதி. ஒருவேளை நோயின் காரணமாகவோ, வேறு ஏதாவது இயற்கையான பிரச்சனை காரணமாகவோ சரியான விந்தணுக்கள் இல்லாத ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம். உடலில் உள்ள ஒரு ஸ்டெம் செல்லை எடுத்து பகுப்பாய்வு செய்து அவருக்கு சொந்தமான விந்தணுக்களை உருவாக்கலாம் என்பது தான் தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகளின் இனிமையான முடிவு. இங்கிலாந்தில் நியூகாஸ்டில் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்தி உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியிருப்பவர் போராசிரியர் கிரீம்நார்னியா.

இன்றைய காலகட்டதில் ஆறுதம்பதிகளில் ஒருவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பழைய பழக்கத்தை போல் குழந்தையில்லை என்றால் பழியை பெண்கள் மீது போட்டுவிட்டு தப்பித்திட விஞ்ஞான வளர்ச்சி இடம் கொடுக்கவில்லை.ஒரே ஒரு பரிசோதனை மூலமாக யாருக்கு என்ன பிரச்சனை என தெரிந்துவிடும். உலக வெப்பமயம், டென்சன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள், உடற்பயிற்சி செய்யமலிருப்பது , மன அழுத்தம் என ஏராளமான காரணங்களால் ஆண்மை குறைவுகள் அதிகரித்துவருகிறது. தற்போது ரயில்களில் ரிசர்வேசன் செய்திட நிற்கும் கூட்டத்தை காட்டிலும் மகப்போரு மருத்துவர்களிடம் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.ஆனால் தற்போது வரும் பிர்ச்சனைகளில் பொரும்பாலனவை ஆண்களால் தான் ஏற்படுகிறது.
 

ஜீவன் இல்லா விந்தணு, வீரியம் இல்லாத விந்தணு. இயங்கு சக்தி குறைந்த விந்தணு குறைவான அணுக்கள் கொண்ட விந்தணு என ஏராளமான பிரச்சனைகள் ஆண்களை சுற்றியே காணப்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்குகெல்லாம் தீர்வாக இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் முடிவு இருப்பதாக மருத்துவ உலகம் நம்புகிறது. மருத்துவ உலக வரலாற்றிலேயே முதன்முறையாக எனும் அடைமொழியுடன் ஆண் கருவிலிருந்து ஒரு செல்லைப் பிரித்து அதை சோதனை கூடத்தில் ஸ்பெர்ம் செல்லாக மாற்றி வளரச்செய்துள்ளனர். கருவிலிருந்து மட்டுமே செல்லை என்பது கிடையாது , அதற்கு மாறாக ஆண்களில் கைகளிலிருந்தே ஒரு ஸ்டெம் செல்லை பிரத்தெடுத்து ஸ்பெர்ம்(விந்தணு) உருவாக்கிட முடியும் என்கிறார் போராசிரியர் கிரீம் நார்னியா.

இந்த ஆய்வில் ஸ்டெம்செல் ஒன்றினை திரவநைட்ரஜனில் பதப்படுத்தி அங்கிருந்து சாதாரண வெப்பநிலைக்கு கொண்டுவந்து வைட்டமின்கள் உதவியுடன் ஸ்பெர்ம் ஆக வளர்த்தெடுக்க 4 முதல் 6 வாரங்கள் ஆகின்றன. இந்த விந்ணுவை ஐவிஎப் முறைப்படி நேரடியாக முட்டையில் செலுத்தினால் கரு தயாராகிவிடுகிறது. ஆண்மையில்லை ,விந்தணு இல்லை போன்ற ஆண்களின் குறைபாடுகளுக்கு இனி விடைகொடுக்கலாம். இந்த புதிய ஆராய்ச்சி மட்டும் அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தால், அச்சுஅசலாக பொற்றோரின் குணாதிசியங்களுடன் இயற்கையாய் பிறக்கும் குழந்தைக்குரிய அத்தனை இயல்புகளோடு ஒரு குழந்தையை உருவாக்கிட முடியும்.

இந்த ஆராய்ச்சி ஸ்பெம் தொடர்பான பல ஆராய்ச்சிகளுக்கு கதவுகளை ஒரு சேர திறந்து விட்டுள்ளது உயிரணுக்கள் எப்படி உருவாகிறது,வளர்கின்றன,போன்ற அணைத்தும் நுண்ணிய விஷயங்களும் இனி விரிவாக அறிந்திட முடியும் என்பது மருத்துவ நம்பிக்கை. இது வெற்றி பெற்றால் வயாகரா போல மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டு உயிரணு பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் காலம் விரைவில் வந்திடலாம்.ஆணின் ஸ்டெம் செல்லை வைத்துதான் விஞ்ஞானிகள் விந்தணுவை உருவாக்கியுள்ளனர். ஆனால் பெண்களின் ஸ்டெம் செல்லை வைத்து விந்தணுக்களை உருவாக்கும் முயற்சி தோல்வில் முடிந்துள்ளது.இந்த ஆராய்ச்சியின் உச்சக்கட்ட வியப்பே இனிமேல்தான் உள்ளது. அதாவது இறந்து போன ஒருவருடைய உடலிலிருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்து விந்தணுவாக மாற்றி அவருடைய சந்ததியை செயற்கையாக உருவாக்கிடலாம் என்ற அரிய கண்டுபிடிப்புதான் அது. இதன் மூலம் உறவினர்களின் வேண்டுகோளின்படி இறந்தவர்களின் உடலிலிருந்து 4 மணிநேரத்திற்குள்ளாக கை அல்லது கால்பகுதியிலிருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்களின் உதவிகொண்டு ஸ்டெம் செல்களை பிரத்தெடுத்தெடுக்கப்படுகிறது. பின்னர் அந்த ஸ்டெம் செல்களை ஆய்வுகூடங்களில் திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. இறந்து போன உறவினர்கள் தங்கள் சந்ததியை செயற்கையாக உருவாக்கிட வேண்டும் என்று நினைக்கிற போது அரசின் முறையான அனுமதி பெற்று ஆய்வுக்கூடத்தை அனுகிட வேண்டும்.
 

அப்போது திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இறந்த போனவரின் ஸ்டெம் செல்கள் சாதாரணவெப்பநிலைக்கு கொண்டு வரப்பட்டு வைட்டமின்கள் உதவியுடன் 4 முதல் 6வாரத்திற்குள்ளாக விந்தணுவாக உருமாற்றம் செய்யப்படும். இவ்வாறாக ஆய்வுக்கூடத்தில் தயார்செய்யப்படும் இறந்து போனவரின் விந்தணுவை ஐவிஎப் முறைப்படி உறவினர்களின் முட்டையில் செலுத்தினால் கருரெடி ... 10 மாதத்தில் இறந்து போனவரின் வாரிசு ரெடி... இறந்து பல வருடங்கள் ஆனாலும் கூட இந்த செயற்கை ஸ்டெம் செல் விநத்ணு உருவாக்குதல் சாத்தியம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். செத்தும் சந்ததி கொடுத்தான் என்கிற சொல் வரும் காலங்களில் வழக்கமாகிவிடும் என்று கூறப்படுகிறது. இது சாத்தியமானால் ராணுவத்தில் இறந்து போன, விபத்து மற்றும் கட்டுரையில் முன்பகுதியில் சொல்லப்பட்ட விந்தணு குறைபாடு பிரச்சனைகளும் நல்ல தீர்வாக அமையும்.

- தொகுப்பு
செல்வராஜ்

நன்றி indrayavanam
 

No comments:

Post a Comment