Digital Time and Date

Welcome Note

Tuesday, May 8, 2012

பெண் மனிதனுக்கு அல்லாஹு கொடுத்த வர பிரசாதம்


பெண் பாரம்சுமப்பது பெண்ணின் இயல்புக்கு எதிரானது ........பெண் ஆண்களை கொண்டு சுமக்க பட வேண்டியவர்களே .......
...
ஒரு ஜான் வயிற்ருக்காக இந்த பெண்மை படும் பாடு............இப்படி பாரம் சுமக்கும் சுமைதாங்கியாக அல்லாஹுபெண்ணை படைக்கவில்லை, பாது காக்கவேண்டிய விலைமதிக்கமுடியாத பொக்கிஷமாகவே அல்லாஹு பெண்ணை படைத்திருக்கின்றான்,
ஆம் பெண் படைப்புகளில் நிகரில்லா அற்புதம் அவள் நம்மை ஈன்றுஎடுக்கும் தாய் நமக்காக தன்னையே தியாகம் செய்யும் தாரம்....................
பெண் மனிதனுக்கு அல்லாஹு கொடுத்த வர பிரசாதம் பெண் நம்முடைய அமைதி, அதனால் தான் இஸ்லாம் பெண்ணின் (தாயின்பாதத்துக்கு கீழே சொர்க்கம் )பாதத்துக்கு கீழே ஆண்களுக்கு சுவனம் என்று உயர்வாக சொன்னது.

அதுமட்டுமா ஒருபெண்ணின் அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்ய அதற்காக பாடுபட குடும்ப சுமையை தாங்க ஆண்களுக்கு இஸ்லாம் கட்டளை இட்டது அனாவஷ்யமாக பெண்ணின் கண் கலங்குவதை கூட இஸ்லாம் ஏற்காது பெண்களுடைய பொருளாதாரத்தை அவர்களுடைய கணவர்கள் அவர்களின் பூரண அனுமதியோடுமட்டுமல்லாமல் வாங்கி உபயோகிக்கக்கூடாது என்று தடைசெய்தது.
பெண் வாழ்வாதாரம் தேடி வேலைக்கு போக வேண்டிய அவசியமில்லை இப்படி பெண்ணின் அனைத்து தேவைகளையும் ஆண்களின்மீது சுமையாக சுமக்கசொன்னது, குடும்பத்தின் எந்த சுமையையும் பெண்களை சுமக்க அல்லாஹு கட்டளை இடவில்லை

பெண் அல்லாஹுவின் அழகான படைப்பு.

அவர்கள் துன்பப்படுத்த படுவார்களேயானால் அது தனது அழகான மென்மையான தன்மைக்கு மாற்றமாகி ஆணின் அனைத்து துறை களையும் பாதிப்புக்குள்ளாக்கி அமைதியை இழக்க செய்யும்.
பெண் என்றபடைப்புக்கு அல்லாஹு மென்மை தன்மைகள் கொண்டு படைத்துள்ளான் அதில் ஆண்களை போன்ற சுற்றித்திரிந்து உழைத்து குடும்பத்தை போற்றும் தன்மை இல்லை என்பது தெளிவான சத்தியம்.

பெண்கள் இப்படி வாழ்க்கை தேவைகளுக்காகவும் மற்றும் வீதிகளில் சுற்றிதிரிவதை இஸ்லாம் முறையானது அல்ல என்று கூறியது. இப்படி மிகப்பெரும் உயர்ந்த உயர்வான மரகத முத்துக்களையாராவது வீதியில் விட்டெறிவாரோஎன்ன?

பெண்மையின் உயர்வை அறியாதவன் தான்பெண்களை அவமதித்து அவர்களை வீதியில் துக்கி எறிவான்.சுற்றி அலயவிடுவான் அவர்கள் தலையில் குடும்ப பாரத்தை வைப்பான் அவர்களை கொடுமை படுத்துவான் அவர்களை அவமதிப்பான் அவர்களின் உரிமைகளை தடுத்துவைப்பான்.

பெண் அல்லாஹுவின் படைப்புகளில் வைத்து அற்புதங்களில் அற்புதம் மஹா அற்புதம்.....................

No comments:

Post a Comment