Digital Time and Date

Welcome Note

Saturday, July 14, 2012

திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்பதற்கான ஆதாரம் என்ன?


 
அஸ்ஸலாமு அழைக்கும் ...... திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்பதற்கான ஆதாரம் என்ன?.........என்பது மற்ற மதத்தினர் முஸ்லிம் நண்பர்களை பார்த்து கேக்கும் கேள்வி ஆகும் அவர்களுக்கான பதில் இதோ.........................முஹம்மது நபியவர்கள் கற்காலத்தில் வாழ்ந்தவறல்ல . வரலாறுகள் எழுதபடுகிற காலத்தில் வாழ்ந்தவர் . முஹம்மது நபியவர்கள் வாழ்ந்த காலம், அவர்களது பிரச்சாரம், சாதனை யாவும் வரலாற்றில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன . முஸ்லிமல்லாதவர்களும் இவ்வரலாற்றை பதிவு செய்துஉள்ளனர்................அந்த வரலாற்றின்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 571 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவர்களின் நாற்பதாம் வயதில் (ஆங்கில வருடக் கணக்குப்படி 39 ஆம் வயதில்) தம்மை இறைத்தூதர் எனக் கூறினார்கள். அப்போது முதல் தமக்கு குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறினார்கள். எனேவ நபிகள் நாயகத்தின் காலம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட திலிருந்து குர்ஆணுடைய காலத்தையும் அறிந்துகொள்ளலாம் ................நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் 20 ஆண்டுகளுக்குள் இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகள் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கியின் இஸ்தான்பூல் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும் இன்றைக்கும் காட்சிக்குக் கிடைகின்றன . திருக்குர்ஆணை சில வருடங்களுக்கு முன்னால் யாரோ எழுதி நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்படுத்தி விட்டார்கள் என்று கூற முடியாது. 1400 வருடங்களுக்கு முந்தைய பிரதிகள் பாதுகாக்கப்பட்டிருப்பைத விட வேறு என்ன சான்று வேண்டும் ?

No comments:

Post a Comment