Digital Time and Date

Welcome Note

Friday, December 21, 2012

வரலாற்றில் இன்று

சர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம்


69 - நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெஸ்பசியான் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு ரோம் நகரை அடைந்தான்.

1192 - சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான்
1606 - வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.

1803 - பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

1844 - இலங்கையில் அடிமைகளை வேலைக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது
1860 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.

1876 - பங்கிம் சந்திர சட்டோபாத்தியா என்பவர் "வந்தே மாதரம்" எனும் இந்தியாவின் சுதந்திர எழுச்சிப் பாடலை எழுதினார்.

1917 - சோவியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது.

1924: லான்ட்ஸ்பேர்க் சிறையிலிருந்து அடோல்வ் ஹிட்லர்
விடுவிக்கப்பட்டார்.


1942 - இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.

1943 - பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது.

1946: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியினால் 1300 பேர் பலி. 38000 வீடுகள் சேதம்.


1951 - அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக ஐடஹோவில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.

1955 - கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

1960 - வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது.

1973: ஸ்பெய்ன் பிரதமர் அட்மிரல் லூயிஸ் பெலான்கோ கார் குண்டுத் தாக்குதலில் பலியானார்.

1987: பிலிப்பைன்ஸில் டெப்ளாஸ் நீரிணையில் எண்ணெய்தாங்கிக் கப்பலொன்றுடன் பயணிகள் கப்பலொன்று மோதியதால் சுமார் 4000 பேர் பலியானதாக மதிப்பிடப்படுகிறது. 1749 பேர் பலியானதாக உத்தியோகபூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன


1988 - போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கைச்சாத்திடப்பட்டது.

1989 - பனாமாவின் அதிபர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.

1995: அமெரிக்காவின் கொலம்பியா மாநிலத்தில் இடம்பெற்ற விமானவிபத்திழல் 160 பேர் பலி.


1998 - Houston ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகளை ஈன்றெடுத்தார்
1999 - போர்த்துக்கல் மக்காவுவை மக்கள் சீனக் குடியரசிடம் கையளித்தது

2007: இரண்டாம் எலிஸபெத் அரசியார் பிரிட்டனில் அதிக வயதில் ஆட்சியிலிருந்தவர் எனும் சாதனைக்குரியவரானார். அவருக்குமுன் விக்டோரியா மகாராணியார் 81 வருடங்கள், 7 மாதங்கள், 29 நாட்கள் உயிர்வாழ்ந்தார்.

No comments:

Post a Comment