Digital Time and Date

Welcome Note

Monday, December 3, 2012

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம்



நியூசிலாந்து நாட்டில் உள்ள பிளைமவுத் வெஸ்டர்ன் தொழில் நுட்ப பயிற்சி கல்லூரியில் சமையல் கலை ஆசிரியராக பணியாற்றுபவர், டெனிஸ் டுத்தே.

நீரிழிவு நோயாளியான இவர், தன் பெற்றோரின் 50-வது திருமண நாளையொட்டி மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில் மூக்குமுட்ட குடித்துவிட்டு, படுக்கையறைக்கு சென்றபோது டெனிஸ் டுத்தேவால் எதையுமே பார்க்க முடியவில்லை.

'அட, இதற்குள் இருட்டி விட்டதா?' என்று தடவித்தடவி சுவற்றில் இருந்த விளக்கு சுவிட்சை போட்ட போதும், விளக்கு எரிவதை அவரால் பார்க்க முடியவில்லை.

‘சரி, கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தால், போதை தெளிந்த பின் எல்லாம் சரியாகிவிடும்’ என்று நினைத்து தூங்கிவிட்டு, மறுநாள் காலை எழுந்த பிறகும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை லேட்டாக உணர்ந்துக் கொண்ட அவர், குடும்பத்தாரிடம் தனக்கு கண் பார்வை பறிபோய் விட்ட துயரத்தை கூறினார்.

இதையடுத்து, தரனாகி பேஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். நீரிழிவு நோய்க்காக அவர் சாப்பிட்டு வரும் மாத்திரைகள், அவர் குடித்த ‘வோட்கா’வுடன் எதிர்வினை புரிந்ததால் கண்பார்வை பறிபோனதாக டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.

மெத்னால் என்ற மூலப் பொருளினால் ஏற்பட்ட இந்த எதிர்வினையை, எத்னால் என்ற மூலப்பொருளின் மூலம் சரி செய்துவிட முடியும் என நம்பிய டாக்டர்கள், டெனிஸ் டுத்தேயின் வயிற்றில் ஆபரேஷன் மூலம் எத்னாலை செலுத்த முடிவு செய்தனர்.

ஆனால், இந்த ஆபரேஷனுக்கு தேவையான அளவு எத்னால் அந்த ஆஸ்பத்திரியில் இருப்பில் இல்லை. இதனால், ஆஸ்பத்திரிக்கு அருகில் இருந்த ஒரு மதுக்கடையில் இருந்து ஒரு பாட்டில் ‘விஸ்கி’ யை வாங்கி வந்த டாக்டர்கள், ஒரு டியூபின் மூலம் அவரது வயிற்றுக்குள் அதை முழுவதுமாக ஊற்றினார்கள்.

இந்த சிகிச்சை முடிந்த பின் 5 நாட்கள் வரை சுயநினைவின்றி இருந்த டெனிஸ் டுத்தே, 6-ம்நாள் கண்விழித்த போது, பார்வையில் கோளாறு ஏதுமில்லாமல் எல்லாவற்றையும் அவரால் ‘தெளிவாக’ பார்க்க முடிந்தது.

No comments:

Post a Comment