Digital Time and Date

Welcome Note

Sunday, February 17, 2013

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 15


நிகழ்வுகள்
கிமு 399 - மெய்யியலாளர் சோக்கிரட்டீஸ் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

590 - பாரசீகத்தின்வின் மன்னனாக இரண்டாம் கொஸ்ராவு முடி சூடினான்.

1637 - புனித ரோம் பேரரசின் மன்னனாக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினான்.

1898 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் USS Maine கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.

1906: பிரித்தானிய தொழிற்கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1909: மெக்ஸிகோவிலுள்ள திரையரங்கொன்று தீப்பற்றியதால் சுமார் 250 பேர் பலி.

1920 - யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.

1933: அமெரிக்க ஜனாதிபதி பிராங்;ளின் டி ரூஸ்வெல்ட்டை கொல்வதற்கு துப்பாக்கிதாரியொருவன் முயன்றான். ஆனால் ரூஸ்வெல்டுக்குப் பதிலாக சிகாகோ மேயர் அன்டன் ஜே. சேர்மாக் இச்சம்பவத்தில் காயமடைந்து மார்ச் 6 ஆம் திகதி உயிரிழந்தார்.

1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.

1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.

1950 - சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1961 - பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து அமெரிக்க Figure Skating வீரர்கள் உட்பட 73 பேர் கொல்லப்ப்பட்டனர்.

1970 - டொமினிக்கன் குடியரசு விமானம் ஒன்று சாண்டோ டொமிங்கோவில் கடலில் மூழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.

1982: கனடாவில் எண்ணெய் அகழ்வுத்தளமொன்று கடலில் மூழ்கியதால் 84 ஊழியர்கள் பலி.

1989 - ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.

1994 - ரஷ்யா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.

1996 - சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.

1999 - குர்டிஸ்தான் தீவிரவாதத் தலைவர் அப்துல்லா ஓக்கலன் துருக்கிய இரகசியப் படைகளினால் கென்யாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

2003: ஈராக் யுத்தத்திற்கு எதிராக சுமார் 600 நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. 80 லட்சம் முதல் 3 கோடி பேர்வரை இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றியிருப்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக இது விளங்குகிறது.

2005 - யூடியூப் சேவை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.


பிறப்புகள்

1564 - கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1642)

1845 - எலீஹு ரூட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1937)

1861 - ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (இ. 1947)

1861 - சார்ல்ஸ் கில்லோம், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர், (இ. 1938)

1873 - ஹான்ஸ் இயூலர்-செல்ப்பின், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர், (இ. 1964)

1922 - டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் முன்னாள் சனாதிபதி

1949 - அனுரா பண்டாரநாயக்கா, இலங்கையின் அரசியல்வாதி (இ. 2008)

1956 - டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாளர்.

1984 - மீரா ஜாஸ்மின், மலையாளத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1973 - அழகு சுப்பிரமணியம், ஆங்கில எழுத்தாளர், இலங்கையர். (பி. 1915)

1988 - ரிச்சார்ட் பெயின்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1918)
1999 - ஹென்றி கென்டால், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1926).

No comments:

Post a Comment