Digital Time and Date

Welcome Note

Sunday, February 17, 2013

வரலாற்றில் இன்று.

பெப்ரவரி 16


நிகழ்வுகள்

1568 - நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1646 - இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.

1796 - ஆங்கிலேயர் கொழும்பை டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.

1838 - தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடாத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.

1899: அயர்லாந்தின் முதாவது கால்பந்தாட்டக் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது

1918 - லித்துவேனியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1934 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1937 - வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார்.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படைகள் பிலிப்பீன்சின் கொரெகிடோர் தீவில் தரையிறங்கினர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: முதல் தடவையாக அமெரிக்கப் போர் விமானம் டோக்கியோவைத் தாக்கியது.

1945 - அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.

1947 - 80 ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.

1959 - ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.

1961 - எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது.

1962: மேற்கு ஜேர்மனியில் வெள்ளத்தினால் 315 பேர் பலியானதுடன் 60,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1968: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் 9-1-1 எனும் அவசர தொலைபேசி சேவை அமுலுக்கு வந்தது.
1983 - ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 71 பேர் கொல்லப்பட்டனர்.

1985 - ஹெஸ்புல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1986 - சோவியத் கப்பல் மிகைல் லெர்மொண்டொவ் நியூசிலாந்தில் மூழ்கியது.

1988 - சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

1993 உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி இஸ்Nஆலாம் கரிமோவை கொலை செய்வதற்காக அரசாங்கத் தலைமையகங்கள் அமைந்துள்ள பகுதியில் குண்டுவெடிப்பும் துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தப்பட்டது.
2005 - கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.

2007: 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

பிறப்புகள்

1934 - தெளிவத்தை ஜோசப், ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர்.

இறப்புகள்

1656 - தத்துவ போதக சுவாமிகள் (றொபேட் டீ நொபிலி), ரோமைச் சேர்ந்த கத்தோலிக்கக் குரு, தமிழ்நாட்டில் சமயப்பணி ஆற்றியவர் (பி. 1577)

1885 - வீ. இராமலிங்கம், ஈழத்துப் புலவர்.

1907 - ஜியோசு கார்டூச்சி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1835)

1932 - பெர்டினண்ட் புயிசோன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1841)

1944 - தாதாசாஹெப் பால்கே, இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடி (பி. 1870)

1954 - டி. கே. சிதம்பரநாதன், இரசிகமணி

1988 - விஜய குமாரதுங்க, சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1945)

சிறப்பு நாள்

லித்துவேனியா - விடுதலை நாள் (1918)

No comments:

Post a Comment