Digital Time and Date

Welcome Note

Sunday, February 17, 2013

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 17


நிகழ்வுகள்
1753 - சுவீடன் கிரெகோரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளின் பின்னர் மார்ச் 1ற்கு மாறியது.

1788 - லெப்டினண்ட் போல் (Ball) என்பவன் சிட்னியில் இருந்து நோர்போல்க் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.

1854 - பிரித்தானியா ஒரேஞ்சு சுயாதீன நாட்டை விடுதலை பெற்ற நாடாக அங்கீகரித்தது.

1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: எச்.எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் யூஎஸ்எஸ் ஹவுசட்டோனிக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: தென் கரோலினாவின் கொலம்பியா நகரம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் படைகள் வெளியேற்றத்தின் போது தீயிடப்பட்டது.

1867 - சூயஸ் கால்வாய் ஊடாக முதலாவது கப்பல் சென்றது.

1881 - இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் மொத்தத் தொகை 2,759,738, வட மாகாணத்தில் 302, 500, யாழ்ப்பாணத்தில் 40, 057 ஆகக் கணக்கெடுகப்பட்டது.

1890 - பிரித்தானிய நீராவிக்கப்பல் ஒன்று சீனக் கடலில் மூழ்கியதில் 400 பெர் கொல்லப்பட்டனர்.

1924: முதலாவது காலநிலை செய்மதியான வான்கார்ட்-2 ஏவப்பட்டது.

1933 - நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.

1936 - சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.

1947 - வொயிஸ் ஒஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு விஸ்தரித்தது.

1957 - மிசூரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் கொல்லப்பட்டனர்.

1962 - மேற்கு ஜெர்மனியின் ஹம்பூர்க் நகரில் இடம்பெற்ர புயலில் 300 பேருக்கு எல் கொல்லப்பட்டனர்.

1979 - மக்கள் சீனக் குடியரசுக்கும் வியட்நாமுக்கும் இடையில் போர் ஆரம்பமாகியது.


1987: பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கை தமிழ் இளைஞர்கள் 12 பேர் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஆடைகளை களைந்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1990 - இலங்கையின் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

1996 - பென்சில்வேனியாவில் இடம்பெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ கணினியை வென்றார்.

2000 - விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.

2006 - பிலிப்பீன்சில் சென் பேர்னார்ட் நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 1,000 பேருக்கு அதிகமானோர் உயிருடன் புதையுண்டனர்.

2008: சேர்பியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகுவதாக கொசோவோ சுதந்திரப் பிரகடனம் செய்தது.

2011: லிபியாவில் கேணல் கடாபியின் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பம். லிபிய படைகள் மனாமா நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அதிகாலை வேளையில் பாரிய முற்றுகையொன்றை நடத்தியது.

piறப்புகள்

பிறப்புகள்
1888 - ஓட்டோ ஸ்டேர்ன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (இ. 1969)

1927 - யுவான் அல்மெய்டா, கியூப புரட்சியாளர் (இ. 2009)

1984 - சதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்
1956 - எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (பி. 1891)

1970 - ஷ்மூவெல் யோசெப் ஆக்னன், நோபல் பரிசு பெற்ற இசுரேல் எழுத்தாளர், (பி. 1888)

1986 - ஜே. கிருஷ்ணமூர்த்தி, தத்துவவியலாளர் (பி. 1895)

No comments:

Post a Comment