Digital Time and Date

Welcome Note

Wednesday, February 20, 2013

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 18


நிகழ்வுகள்

1229 - புனித ரோம் பேரரசின் மன்னன் இரண்டாம் பிரெடெரிக் எகிப்திய மன்னன் அல்-கமீல் உடன் 10 ஆண்டு போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டான்.

1478 - இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்ட்டிற்கு எதிராக சதி முயற்சியில் இறங்கியதற்காக அவனது சகோதரன் ஜோர்ஜ் (கிளாரன்ஸ் இளவரசன்) தூக்கிலிடப்பட்டான்.

1797 - ட்ரினிடாட் பிரித்தானியர்களிடம் வீழ்ந்தது.

1832 - இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் (meteor) தோன்றியது.

1861 - அலபாமாவில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கு தலைவரானார்.

1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் ஷேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.

1911 - முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது.

1925;: அடோல்வ் ஹிட்லர் மேயின் காம்ப் (எனது போராட்டம்) எனும் தனது நூலை வெளியிட்டார்.
1929 - முதற்தடவையாக ஒஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.

1930 - கிளைட் டொம்பா ஜனவரியில் எடுத்த புகைப்படங்களை ஆராய்கையில் புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.

1932 - சீனக் குடியரசிடம் இருந்து மன்சூகுவோவின் விடுதலையை ஜப்பான் மன்னர் அறிவித்தார்.

1955: முதலாவது டிஸ்னிலான்ட் களியாட்ட பூங்கா கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது.
1957 - கென்யாவின் போராளித் தலைவர் டெடான் கிமாத்தி பிரித்தானிய குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார்.

1959 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1965 - காம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

1976: நாடியா கொமன்ஸி, கோடைக்கால ஒலிம்பிக்; ஜிம்னாஸ்டிக் போட்டியில் 10 புள்ளிகளைப் பெற்ற முதல் வீராங்கனையானார்.
1979 - தெற்கு அல்ஜீரியாவில் சகாரா பாலைவனத்தில் முதற் தடவையாக பனி மழை
பெய்தது.

1991 - லண்டனில் தொடருந்து நிலையங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன.

1994: ஆர்ஜென்டீனாவிலுள்ள யூத சங்கமொன்றின் கட்டிடத்தில் நடந்த கொண்டுவெடிப்பில் 85 பேர் பலியாகினர்.
1996: முல்லைத்தீவு இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

2001: இந்தோனேஷியாவின் சாம்பிட் பகுதியில் பாரிய இனவன்முறைகள் மூண்டன.
2003 - தென் கொரியாவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2004 - ஈரானில் இராசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் 295 பேர் கொல்லப்பட்டனர்.

2007 - தில்லியில் இருந்து பாகிஸ்தான் சென்றுகொண்டு இருந்த 'சம்ஜவுதா' விரைவு தொடருந்தில் குண்டுகள் வெடித்து தீ பிடித்ததில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1745 - வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1827)

1836 - ஸ்ரீ ராமகிருஷ்ணர், இந்தியாவின் ஆன்மீகவாதி (இ. 1886)

1860 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1946)

1926 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (இ. 2009)

1931 - டொனி மொறிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்.

இறப்புகள்
1546 - மாட்டின் லூதர், ஜெர்மனிய சமய சீர்திருத்தவாதி (பி. 1483)

1564 - மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி, இத்தாலிய ஓவியர் (பி. 1475)

1967 - றொபேட் ஓப்பன்ஹெய்மர், அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1904)

சிறப்பு நாள்

காம்பியா - விடுதலை நாள் (1965)

No comments:

Post a Comment