Digital Time and Date

Welcome Note

Friday, February 8, 2013

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 3


நிகழ்வுகள்

301 - சீனாவில் சீமா லுன் ஜின் ஆட்சியைக் கைப்பற்றினான்.

1377 - இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.

1690 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம் மசாசூசெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1876 - பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

1783 - ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.

1807 - பிரித்தானியப் படைகள் சர் சாமுவேல் ஓஷ்முட்டி தலைமையில் உருகுவேயின் தலைநகர் மொண்டெவிடியோவைக் கைப்பற்றினர்.

1894 - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

1916 - கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றக் கட்டடம் தீயினால் அழிந்தது.

1917: ஜேர்மனியுடனான ராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

1919 - சோவியத் படையினர் உக்ரேனைப் பிடித்தன.

1930 - வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.

1931 - நியூசிலாந்தில் நேப்பியர் என்ற இடத்தில் இடம்பெற்ற 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 258 பேர் கொல்லப்பட்டனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா மார்ஷல் தீவுகளைக் கைப்பற்றியது.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின.

1966 - சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.

1969 - யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தெரிவானார்.

1984 - சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.

1989 - பராகுவேயில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 1954 இலிருந்து ஆட்சியிலிருந்த சர்வாதிகாரி அல்பிரெடோ ஸ்ட்ரோயெஸ்னர் பதவியிழந்தார்.


1995: விண்வெளி வீராங்கனை எய்லீன் கொலின்ஸ் விண்வெளி ஓடத்தை ஓட்டிச் சென்ற முதலாவது பெண்ணானார்.

2006 - அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.


2007: பாக்தாத் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 135 பேர் பலி, 339 பேர் காயம்.

2010: சுவிட்ஸர்லாந்து சிற்பி அல்பர்ட்டோ கியாகொமட்டி செதுக்கிய சிற்பம் 65 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.


பிறப்புகள்

1898 - அல்வார் ஆல்ட்டோ, கட்டிடக் கலைஞர் (இ. 1976)

1948 - கார்லொஸ் பெலோ, நோபல் பரிசு பெற்ற கிழக்கு திமோர் அரசியல்வாதி

1976 - ஜெ. ராம்கி, எழுத்தாளர்

இறப்புகள்

1855 - டானியல் புவர், அமெரிக்க இலங்கை மிஷனின் மூத்த முதல்வர்

1915 - யோன் சிலம்புவே, ஆபிரிக்க விடுதலைப் போராளி (பி. 1871)

1924 - வூட்ரோ வில்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் (பி. 1856)

1969 - சி. என். அண்ணாதுரை, தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர் (பி. 1909)

2005 - எர்ணஸ்ட் மாயர், உயிரியலாளர் (பி. 1904)

No comments:

Post a Comment