Digital Time and Date

Welcome Note

Friday, February 8, 2013

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 2


நிகழ்வுகள்

1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.


1542: கிறிஸ்டாவோ கொட காமா (வாஸ் கொட காமாவின் மகன்) தலைமையிலான போர்த்துகேயர்கள் எத்தியோப்பியாவில் முஸ்லிம்கள் வசமிருந்து மலைக்கோட்டையொன்றை கைப்பற்றினர்.

1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

1812 - கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது.

1822 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.

1848 - மெக்சிக்கோவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

1848 - கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.

1878 - துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.

1880 - முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன.

1897 - பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது.

1899 - ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

1901 - விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.

1908 - 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு.

1920 - எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1933 - ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார்.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி ஜேர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.

1946 - ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.

1966: காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக பாகிஸ்தான் 6 அம்ச திட்டத்தை முன்வைத்தது.
1967: அமெரிக்க கூடைப்பந்தாட்டச் சங்கம் உருவாக்கப்பட்டது.

1971 - உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் இடி அமீன் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்தார்.

1972 - டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

1982 - சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1989 - ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின.

1989 - செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.


1990: தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி சட்டபூர்வமாக செயற்படுவதற்கு ஜனாதிபதி எவ்.டபிள்யூ. கிளார்க் அனுமதித்தார்.

1998 - பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.


2004: சுவிட்ஸர்லாந்து ரோஜர் பெடரர் ஆண்கள்; ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பெற்றார். அவர் தொடர்ச்சியாக 237 வாரங்கள் இந்நிலையில் இருந்தார்.

2007: அமெரிக்காவில் புளோரிடா மாநிலததில் டோர்னடோ புயலினால் 42 பேர் பலி.

2007: இந்தோனேஷியாவில் வெள்ளத்தினால் 54 பேர் பலி.

பிறப்புகள்

1522] - லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணித ஆய்வாளர் (இ. 1565)

1871 - பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931)

1882 - ஜேம்ஸ் ஜோய்ஸ், ஐரிய எழுத்தாளர் (இ. 1941)

1924 - வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (இ. 1989)

1977 - ஷக்கீரா, கொலம்பியப் பாடகி

1985 - உபுல் தரங்க, இலங்கை துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

1907 - திமீத்ரி மென்டெலீவ், ரஷ்ய வேதியியலாளர் (பி. 1834)

1970 - பேட்ரண்ட் ரசல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1872)

1980 - வில்லியம் ஸ்டெயின், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)

1987 - அலிஸ்ரர் மக்லீன், ஆங்கில எழுத்தாளர் (பி. 1922)

சிறப்பு நாள்

உலக சதுப்பு நில நாள்

No comments:

Post a Comment